Jump to content

தியாகி திலீபனின் நினைவேந்தல்: நீதிமன்றத் தீர்ப்பு இன்று – தமிழ்க் கட்சிகளின் அறிவிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தியாகி திலீபனின் நினைவேந்தல்: நீதிமன்றத் தீர்ப்பு இன்று – தமிழ்க்  கட்சிகளின் அறிவிப்பு | Athavan News

தியாகி திலீபனின் நினைவேந்தல்: நீதிமன்றத் தீர்ப்பு இன்று – தமிழ்க் கட்சிகளின் அறிவிப்பு

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வை அனுஷ்டிப்பது தொடர்பாக யாழ்ப்பாணம் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று (வியாழக்கிழமை) பிறப்பிக்கப்படவுள்ளது.

இந்த நிலையில், அந்தத் தீர்ப்பின் பின்னரே, தமிழ்த் தேசியக் கட்சிகளின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படுமென்று கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து இந்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு அறிவிக்கப்படுமென்றும் கட்சிப் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு அரசு தடை விதித்திருக்கும் நிலையில், அந்தத் தடை உத்தரவை நீக்கவேண்டுமென தமிழ்த் தேசியக் கட்சிகள் பலவும் இணைந்து அரசிடம் கோரிக்கை விடுத்து ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கடிதம் ஒன்றையும் அனுப்பிவைத்திருந்தன.

இதேவேளை, தடை உத்தரவு தொடர்பாக யாழ்ப்பாணம் நீதிமன்றில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில், அந்த வழக்குத் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில் நேற்று மாலை நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் ஒன்றுகூடிய தமிழ்த் தேசியக் கட்சிகள் தியாக தீபம் தீலீபன் நினைவேந்தல் தொடர்பாக கலந்துரையாடியிருந்தன. இதன்போதே  நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் இன்று மீண்டும் கூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி மற்றும் தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் என 9 தமிழ்த் தேசிய அணிகள் கலந்து கொண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/திலீபன்-நினைவேந்தல்-நீத/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திலீபன் நினைவேந்தல் விவகாரம்; நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியது.!

Screenshot-2020-09-24-13-27-08-126-org-m

தியாகதீபம் திலீபன் நினைவேந்தலை நடத்துவதற்கான தடை உத்தரவை உறுதிப்படுத்தி யாழ்.நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளதாக தெரியவருகிறது.

நினைவேந்தலை முன்னெடுப்பார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இருபது அரசியல் பிரமுகர்களுக்கு எதிராக பொலிஸார் மேற்கொண்ட வழக்குத் தாக்கலுக்கு அமைய ஏற்கனவே யாழ்.நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் அதனை பரிசீலனை செய்யுமாறு மேற்கொள்ளப்பட்ட மனு மீதான விசாரணையின் அடிப்படையில் குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.

இந்நிலையில் ஏற்கனவே தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைந்து மேற்கொண்டுவருகின்ற சந்திப்பின் தொடராக குறித்த தீர்ப்பின் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு அமைய நினைவேந்தலுக்கான தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை மறு தினம் வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் தமிழ் அரசியல் கட்சிகள் முழுமையான கதவடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுப்பதற்கான கலந்துரையாடல்கள் ஏற்கனவே இடம்பெற்றிருந்த நிலையில் கதவடைப்புக்கான அழைப்பு விடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

http://aruvi.com/article/tam/2020/09/24/17144/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

26ம் திகதி மாபெரும் உண்ணாநிலைப் போராட்டம்.! 28ம் திகதி வடக்கு - கிழக்கு தழுவிய முழு கதவடைப்பு.!

Screenshot-2020-09-24-14-46-08-846-org-m

திலீபன் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் தொடர்ந்தும் தடை விதித்துள்ள நிலையில் எதிர்வரும் 26ஆம் திகதி மாபெரும் உண்ணாநிலைப் போராட்டத்திற்கும் 28ஆம் திகதி வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் முழுமையான கதவடைப்புப் போராட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கட்சிகள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன.

இது குறித்து இளங்கலைஞர் மண்டபத்தில் சற்று முன்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே குறித்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கதவடைப்பு போராட்டத்தில் இஸ்லாமிய மக்கள் பிரதிநிதிகளையும் மலையக மக்கள் பிரதிநிதிகளையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

http://aruvi.com/article/tam/2020/09/24/17147/

டிஸ்கி :

Screenshot-2020-09-24-14-49-20-429-org-m

போராட்ட அறிவிப்புக் குறித்து உடனடி விசாரணையில் இறங்கினார் யாழ். பொலிஸ் அதிகாரி!

Link to comment
Share on other sites

39 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

போராட்ட அறிவிப்புக் குறித்து உடனடி விசாரணையில் இறங்கினார் யாழ். பொலிஸ் அதிகாரி!

பதவி உயர்வுக்காக கொஞ்சம் ஓவராக இவர் வேலைசெய்கிறார் போல 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திலீபன் நினைவேந்தலுக்கான தடை 14 நாட்களுக்குத் தொடரும் யாழ். நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

 

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு யாழ். நீதவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தடை அடுத்த 14 நாட்களுக்குத் தொடரும் என சற்று முன்னர் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சிறீலங்காவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினர் ஒருவருக்கு அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதியளிக்க நீதிமன்றினால் முடியாது  என்று யாழ். நீதவான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

http://www.ilakku.org/திலீபன்-நினைவேந்தலுக்கா/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.