Jump to content

விக்கியும் அவருக்கான அரசியல் நாகரிகமும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விக்கியும் அவருக்கான அரசியல் நாகரிகமும்

புருஜோத்தமன் தங்கமயில்   / 2020 செப்டெம்பர் 22

நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றில், நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தண்டிக்கப்பட்டுவிடலாம் என்ற பதற்றம் கடந்த சில வாரங்களாக தமிழ் அரசியல் பரப்பில் தொற்றிக் கொண்டிருக்கின்றது. விக்னேஸ்வரனுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடுத்த பா.டெனீஸ்வரனிடம், வழக்கை மீளப்பெறுமாறு, அரசியல்வாதிகள், புத்திஜீவிகள் உள்ளிட்ட தரப்புகளினால் தொடர்ந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்ட நிலையில், அவரும் அதற்கு இணங்கியிருக்கிறார்.

இந்தப் பத்தி எழுதப்படும் வரையில், வழக்கை மீளப்பெறுவது தொடர்பிலான இறுதித் தீர்மானம், நடைமுறையில் வந்திருக்கவில்லை. விக்னேஸ்வரனுக்கும் டெனீஸ்வரனுக்கும் இடையில் வழக்கை நீதிமன்றத்துக்கு வெளியில் தீர்த்துக்கொள்வது தொடர்பிலான இணக்கப்பாடு மற்றும் அதுசார் நிபந்தனைகளில், சிக்கல் நீடிப்பதாகத் தெரிகின்றது. இந்தப் பத்தி வெளியாகும் சமயத்தில், சிக்கல்கள் தீர்க்கப்பட்டு, வழக்கு மீளப்பெறப்பட்டிருக்கலாம் (நேற்று மீளப்பெறப்பட்டது). அப்படியான நிலை ஏற்பட்டிருந்தால், அது வரவேற்கப்பட வேண்டியது.

நிற்க, நீதிமன்ற அவமதிப்பு வழக்கினூடாக விக்னேஸ்வரன் தண்டிக்கப்பட்டுவிடலாம் என்கிற பதற்றத்தின் பின்னணி தொடர்பில் கவனம் செலுத்துவது அவசியமானது. ஏனெனில், அது எவ்வகையான அரசியலையும் அதுசார் அறத்தையும் மக்களிடம் முன்வைக்க விளைகின்றது என்பதைப் புரிந்துகொள்வதற்கு உதவும்.

1.    நீதியரசர் ஒருவர், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொள்வதையும் அவர் நீதிமன்றத்தின் சாட்சிக் கூண்டில் ஏறுவதையும், தமிழ்ச் சூழல் விருப்பவில்லை.

2.    சிலவேளை, விக்னேஸ்வரன் தண்டிக்கப்பட்டு அவரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோய்விடலாம் என்கிற அச்சம்.

உயர்நீதிமன்ற நீதியரசராக இருந்து ஓய்வுபெற்ற விக்னேஸ்வரன், வடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக இருந்த சமயத்தில், அவரது அமைச்சரவையில் அங்கம் வகித்த டெனீஸ்வரன், ப.சத்தியலிங்கம் ஆகியோரை, இயற்கை நீதிக்கு எதிராகப் பதவி நீக்கியிருந்தார். அதுவும், மாகாண அமைச்சர்களுக்கு எதிராக எழுந்த ஊழல் குற்றச்சாட்டுக்களை அடுத்து, முதலமைச்சராலேயே நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் அறிக்கைகளில், டெனீஸ்வரனும் சத்தியலிங்கமும், குற்றங்களை இழைத்திருக்கவில்லை என்று அறிவிக்கப்பட்ட பின்னரும், அவர்களைப் பதவி நீக்கியிருந்தமையே சிக்கலின் ஆரம்பம். அத்தோடு, அவர்களைப் பதவி நீக்கும் போது, அவர்களுக்கு எதிராக முதலமைச்சரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள், இன்னும் மோசமான ஓர் அரசியல் கலாசாரத்தை, தமிழ்ச் சூழலில் தோற்றுவித்தது.

அப்படியான நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் தமக்கான நீதி நியாயத்தைக் கோருவது, எந்தவிதத்திலும் தப்பாகாது. தங்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து நியாயமான முறையில் விடுபட எடுக்கும் நடவடிக்கை, ஒவ்வொருவருக்குமான அடிப்படை உரிமை. அப்படியான நிலையில்தான், நீதிமன்றத்தினூடாக, தனக்கான நீதியை நாடுவது சார்ந்து, டெனீஸ்வரன் முயற்சிகளை முன்னெடுக்கிறார். அதில் அவர் வெற்றியும் பெறுகிறார்.

சட்டத்துக்கு முரணாக டெனீஸ்வரனைப் பதவி நீக்கியது தவறு என்று விக்னேஸ்வரனுக்கு எதிரான தீர்ப்பை மேல் நீதிமன்றம் வழங்கியது. அதனை ஏற்றுக்கொள்ளாது, உயர்நீதிமன்றத்தை விக்னேஸ்வரன் நாடியிருக்கிறார். அதுதான், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை டெனீஸ்வரன் தொடுப்பதற்கும் காரணமானது.
சட்டத்துக்கும் இயற்கை நீதிக்கும் முரணாக, அமைச்சர்களை விக்னேஸ்வரன் பதவி நீக்கியபோது, சமரசத்தின் வழியாகப் பிரச்சினையைத் தீர்க்கவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுத்தரவும் முன்வராத தரப்புகள் எல்லாமும், விக்னேஸ்வரன் நீதிமன்றத்தினூடாகத் தண்டிக்கப்படலாம் என்ற சூழல் உருவானதும், இப்போது அவருக்காக ஓடோடி வருகின்றன.

டெனீஸ்வரன்- விக்னேஸ்வரன் விடயத்தில், பாதிக்கப்பட்டது டெனீஸ்வரன். தனக்கான நீதியைப் பெறுவதற்காக, நீதிமன்ற வழக்குகளுக்காக இலட்சக்கணக்கில் பணத்தைச் செலவளித்திருக்கிறார். விக்னேஸ்வரன் இந்த விடயத்தில் பாதிப்பை ஏற்படுத்தியவராக, நீதிக்கு முரணான நடவடிக்கைகளுக்குச் சொந்தக்காரராக, தன்முனைப்போடு (ஈகோவோடு) மட்டுமே இயங்கிய ஒருவராக இருக்கிறார். அப்படியான ஒருவரைக் காக்கவேண்டிய தேவை பற்றி, அவருக்காக வாதாடும் தரப்புகள் முதலில் தெளிவுபடுத்த வேண்டும்.

ஏனெனில், ஒருவருக்காக பரிந்து பேசிக்கொண்டு, அதற்கு அரசியல் நாகரிகம் என்று வகுப்பெடுக்க முயலும் தரப்புகள், தார்மீக அறத்தின்பால், இயற்கை நீதியின் வழி, டெனீஸ்வரனுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளையும் வெளிப்படையாக அறிவித்து இயங்க வேண்டும். அதுதான், உண்மையான அரசியல் நாகரிகம். ஆனால், இங்கு அரங்கேறும் காட்சியைக் காணும் போது, விக்னேஸ்வரன் என்கிற மேட்டுக்குடித் தன்மையுள்ள ஒருவருக்குக் குடைபிடிக்கும் செயலாகவே தோன்றுகிறது. ஏனெனில், அரசியல் நாகரிகமும் அதுசார் இயக்கமும், என்றைக்குமே ஒரு வழிப்பாதையாக இருக்க வேண்டியதில்லை. அது, இரு வழிப்பாதையாக அல்லது பல வழிப்பாதையாக இருக்க வேண்டும். அதனை, அந்த முயற்சிகளில் இயங்கிக் கொண்டிருக்கும் தரப்புகள் உறுதிப்படுத்த வேண்டும்.

நல்லிணக்கம் பற்றிய உரையாடல்களில், விட்டுக்கொடுப்பு என்பது தமிழ் மக்களினாலேயே செய்யப்பட வேண்டும் என்கிற தொணி, தென் இலங்கையினால் தொடர்ந்தும் முன்வைக்கப்பட்டு வந்திருக்கின்றது. அது எவ்வளவு அயோக்கியத்தனமானதோ, அதேயளவுக்கு அயோக்கியமான செயற்பாட்டையே இன்றைக்கு விக்னேஸ்வரனுக்காக டெனீஸ்வரனிடம் தூது சென்ற தரப்புகளும் அதற்கு அரசியல் நாகரிகம் என்கிற அடையாளம் பூசியவர்களும் செய்து கொண்டிருக்கிறார்கள்.  

இன்னொரு கட்டத்தில், விக்னேஸ்வரனைப் பாதுகாக்க ஓடிக்கொண்டிருக்கும் தரப்புகள், அவரின் நாடாளுமன்ற உரைகள், தென் இலங்கையில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கின்றன என்றும் அதனால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அவருக்கு எதிரான துரும்பாக, தென் இலங்கை கையாண்டுவிடும் என்ற கருத்துருவாக்கத்தைச் செய்து வருகின்றன.

உண்மையில், விக்னேஸ்வரன் நாடாளுமன்ற உறுப்பினராக ஆற்றிய உரைகள், தென் இலங்கையில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றனவா என்றால், ‘ஆம்’ என்பதுதான் பதில். ஆனால் உண்மையில், அந்த உரைகள் தமிழர் நலன்சார் ஏற்பாடுகளில் ஏதாவது முன்னோக்கிய கட்டங்களைத் தோற்றுவிக்குமா?

இலங்கையின் இனமுரண்பாடுகள் என்பவை, பௌத்த சிங்கள மேலாதிக்கச் சிந்தாந்தத்தின் வழியாகத் தோற்றம் பெற்ற ஒன்று. அது, வெளிப்படையாக மேலாதிக்க மனநிலையை வெளிப்படுத்தினாலும், அதன் இன்னொரு பக்கம் என்பது, அச்சவுணர்வினால் தோற்றுவிக்கப்பட்டது. அது, கடந்த கால தென் இந்தியப் படையெடுப்புகளின் வழியாக, தலைமுறைத் தலைமுறையாகக் கடந்தப்பட்டது.

அப்படியான ஓர் அரசியல் சித்தாந்தம், அதுசார் உள்ளுணர்வினால் வளர்ந்துவரும் சனக்கூட்டத்திடம், தமிழ் மொழியின் பாராம்பரியம் பற்றியும் அதுதான் பெருமைகள் பற்றியெல்லாம் பேசுவதென்பது,  உண்மையிலேயே பயனுள்ள ஒன்றா? ஏனெனில், இவ்வாறான பேச்சுகளை, தமிழ்த் தலைவர்கள், எழுபது ஆண்டுகளுக்கு முன்னரேயே பேசி விட்டார்கள். தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கும் விக்னேஸ்வரனுக்கும், கிட்டத்தட்ட ஒரே வயது. அவர் வளர்ந்து வந்த காலம் தோறும் தமிழர் அரசியலைப் பார்த்திருந்தால், இன்று அவர் ஆற்றிய நாடாளுமன்ற உரைகள், எப்போதோ ஆற்றப்பட்ட ஒன்று என்பதை அவரால் புரிந்துகொண்டிருக்க முடியும்.

அவரது உரைகள், உண்மையிலேயே ஆக்கபூர்வமான உரைகள் என்றால், அவை தமிழ்ச் சூழலில் பெரியளவில் கொண்டாடப்பட்டிருக்கும். ஆனால், அவ்வாறான காட்சிகள் பெரிதாக, பதிவாகவில்லை. மாறாக, தென் இலங்கையின் அடிப்படைவாதச் சக்திகளை, இனவாதத் தீயை, கக்கவே வைத்திருக்கின்றன.

இனவாதத் தீயை நாடு பூராகவும் பரவவிட்டு, அதில் குளிர்காய்ந்து கொண்டு, ராஜபக்‌ஷர்கள் ஆட்சிக்கட்டிலில் ஏறியிருக்கின்ற நிலையில், அது தொடர்பில் தமிழ் மக்கள் பேரச்சம் கொண்டிருக்கிறார்கள். அப்படியான நிலையில், அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்று யோசிக்காமல், தமிழின் பெருமையை, தென் இலங்கைக்கு புரியவைத்தால் பிரச்சினை தீர்த்துவிடும் என்கிற உணர்திறனோடு இயங்கும் விக்னேஸ்வரனை எவ்வாறு காண்பது?

தென் இலங்கைக்கும் அதன் சித்தாந்தத்துக்கும், தமிழ் குறித்தும் அதன் பாரம்பரியம் குறித்தும் தெளிவாகவே தெரியும். அதுவும்தான், அவர்களின் பெரும் பயம் என்பதை முதலில் விக்னேஸ்வரன் புரிந்துகொள்ள வேண்டும். பழைய பெருமைகளைப் பேசுவது, ஒவ்வொருவருக்குமான உரிமை. அதில், தவறில்லை. ஆனால், பழைய பெருமை பேசிப் பேசியே அழிந்துவிட்ட ஒரு சனக்கூட்டமாகத் தமிழ் மக்கள் ஏற்கெனவே தங்களைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

அப்படியான நிலையில், அதனை மீளவும் நிரூபிக்க வேண்டியதில்லை. நடைமுறை உலகை எதிர்கொள்ளும் சிந்தனைகளோடு அரசியலை நகர்த்துவதுதான்,  இன்றைய தேவை.

ஆக, விக்னேஸ்வரன் ஆற்றிய பழைய பெருமை உரைகள் எல்லாம், ஏதோ அரசியல் புரட்சிக் கருத்துகள் என்கிற தோரணயைத் தோற்றுவித்து, தென் இலங்கைக்கு எதிரான பெரிய கதாநாயகத் தோற்றத்தை விக்னேஸ்வரனை நோக்கிக் கட்டமைப்பதை, சம்பந்தப்பட்டவர்கள் முதலில் கைவிட வேண்டும். அதனை ஒரு சாக்காக வைத்து, விக்னேஸ்வரனின் கடந்தகாலத் தவறுகளை மறைப்பதையும் தவிர்க்க வேண்டும்.

இயற்கை நீதியின் வழி நோக்கின், டெனீஸ்வரனைப் பதவி நீக்கிய விடயத்தில், விக்னேஸ்வரன் குற்றமிழைத்தவர். பெருந்தன்மையின் வழியாகக் குற்றமிழைத்தவரை மன்னிப்பது மனித மாண்புதான். அந்த மாண்பை டெனீஸ்வரன் வெளிப்படுத்தினால் அவர் மெச்சப்பட வேண்டியவரே.
 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/விக்கியும்-அவருக்கான-அரசியல்-நாகரிகமும்/91-255763

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
    • இப்படியான செய்திகளை நாம்தமிழர் செய்கிறார்கள் மற்றக் கட்சிகள் செய்வதில்லை என்று நினைப்பது போல் தெரிகிறது.இந்தியா இப்படியே ஒரேநாடாக நீண்டகாலத்துக்கு இருக்கும் என்றுநினைக்காதீர்கள்.இந்தியா பல தேசங்கள் இணைந்த ஒரு கூட்டு ஒருநாள் இந்தியா சோவியத் யூனியன் உடைந்தது போல் உடையும் இப்பொழுத இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் மகன் இந்தியாவிலேயே இருக்கின்றன.அப்படி உடையும் நிலையில் தமிழருக்கு உலகில் 2 நாடுகள் இருக்கும்.   சொல்வது ஒன்று செய்வது ஒன்று சீமான் கட்சியை விட மற்றைய கட்சிகளில் தாராளமாக உண்டு.பெண்களுக்கு சம் பிரதிநிதித்துவம் ,அனைத்துச் சாதியினருக்கும் வேட்பாளர் தெரிவில் பிரதிநித்துவம் போன்ற நல்ல விடயங்களை கணக்கில் எடுங்கள் குணம் நாடிக் குறமும்நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்    
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • இந்தியாவுக்கு பிற‌க்கு சுத‌ந்திர‌ம் கிடைச்ச‌ நாடு Slovenia அந்த‌ நாட்டின் முன்னேற்ற‌ம் வாழ்த்தும் ப‌டி இருக்கு..................ப‌ல‌ விளையாட்டில் அவ‌ங்க‌ள் திற‌மைசாலிக‌ள்.................ப‌ல‌ நோய்க‌ளுக்கான‌ ம‌ருந்து க‌ண்டு பிடிப்ப‌தில் Slovenia திற‌மையான‌ நாடு................ ம‌னித‌க் க‌ழிவை ம‌னித‌னே அள்ளுவ‌து உண்மையில் அருவ‌ருக்க‌ த‌க்க‌து இந்த‌ தொழிநுட்ப‌ம் வ‌ள‌ந்த‌ இந்த‌ நூற்றாண்டில் ம‌னித‌க் க‌ழிவை சுத்த‌ம் செய்ய‌ எவ‌ள‌வோ வ‌ச‌திய‌ க‌ண்டு பிடித்து விட்டார்க‌ள்..............2018க‌ளில் தாயிலாந்தில் ம‌னித‌க் க‌ழிவு  வெளியில் வ‌ர‌ அந்த‌ அர‌சாங்க‌ள் ஒரு நாளில் இய‌ந்திர‌த்தை வைத்து எல்லாத்தையும் ச‌ரி செய்து விட்டார்க‌ள்................ஆனால் இந்தியாவில்? ஆம் நினைவு இருக்கு க‌ட‌லில் கொட்டிய‌ எண்ணைய‌ வாளி வைச்சு அள்ளினார்க‌ள் இது தான் மோடியின் டியிட்ட‌ல் இந்தியா கிலின் இந்தியா.....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.