Jump to content

கடற்கரும்புலி கப்டன் புலிமகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கடற்கரும்புலி கப்டன் புலிமகள்

 

 

Black-Sea-Tiger-Captain-Pulimahal.jpg

 

பூக்களுள் எழுந்த புயல் கடற்கரும்புலி கப்டன் புலிமகள்.

அது 1998 நடுப்பகுதி. கிளிநொச்சியின் நகரப்பகுதி இராணுவத்திடமிருந்தது. டிப்போச் சந்தியடி எங்களிடமிருந்தது. தற்போது கிளிநொச்சி மாவட்ட தமிழீழ காவற்பணிமனை அமைந்திருக்கும் இடத்திற்கு அருகேயுள்ள தேவாலயம், கருணா நிலையம் எல்லாம் எமதும் சிறீலங்காப் படையினரதும் காவல் நிலைகளுக்கிடையிலான சூனியப் பகுதிக்குள் அமைந்திருந்தன.

நேர்வீதி. எமது நடமாட்டத்தைப் படையினரும் அவர்களை நாமும் இலகுவாக அவதானித்து, பதுங்கிச் சூடுகளை தாராளமாக மேற்கொள்ள வசதியான நேர்வீதி. இரு பகுதியுமே தம்மைப் பாதுகாத்துக்கொள்ள மறைப்புப் படங்குகளை வீதிக்குக்குறுக்கே கட்டித் தொங்கவிடுவோம். ஒருவரின் படங்கை மற்றவர் எரித்துக்கொண்டுமிருந்தோம். கதிரவன் உதிப்பதும் மறைவதும் போல, படங்கு கட்டுவதும் எரிப்பதும் கூட மாற்றமின்றி நடந்துகொண்டிருந்தது.

தேவாலயத்தருகே எம்மவர்கள் இரவிரவாக ஏறிக் கட்டுகின்ற படங்கு, படையினரின் அடியில் விடிவதற்க்கிடையிலேயே கிழிந்து விழுந்துவிடும். சில நாட்களாக இது தொடர்ந்தது எங்களுக்குப் பெரிய சவாலாகப் போய்விட்டது. படங்கு எரிந்தால், அறுந்து விழுந்தால் நடமாடமுடியாது. காப்பரண்களுக்குள்ளேயே சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் முடங்கவேண்டியதுதான்.

அங்கு நிலைகொண்டிருந்த லெப். கேணல் செல்வியின் கொம்பனிக்கு வேவு பார்ப்பது லெப். தாமராவின் அணி. கப்டன் புலிமகள் அவர்களில் ஒருவர். தாமராவுடன் நெடுஞ்சாலை வேவுக்குப் பெரும்பாலும் இணைந்து போவது புலிமகள்தான்.

‘படங்கை நான் கட்டிறன்’ புறப்பட்டால் புலிமகள்.

வெட்டப்பட்ட உரப்பைகளை இணைத்துத்தைத்து படங்கு தயாரிக்கப்பட்டது. இரவானதும் படங்கை இழுத்துக்கொண்டு தேவாலயத்தடிக்குப் போனார் புலிமகள்.

பகலில் படங்கு எரிந்துபோனதால், இரவு கட்டாயம் நாம் வருவோம் என்று எதிர்பார்த்திருந்த படையினர், இருள் சூழ்ந்ததுமே தேவாலயச் சூழலை நோக்கி எறிகணைகளை விசிறத் தொடங்கினர்.

புலிமகள் படங்கோடு பதுங்கிப் பதுங்கி போனார்.

அதுநேர்வீதி என்பதால், இரவில் ஒருவர் நின்றால்கூட வானவிளிம்பில் நிழலுருவமாகத் தெரியும். பகலைப் போலவே இரவும் ஆபத்தானதுதான். அச்சத்தைத் தரவல்ல, ஆபத்து நிறைந்த அந்த இரவில், கல்வாரிமலை நாயகனின்…… மெளன தவத்தைக் குழப்பியவாறு படிர் படிர் என எறிகணைகள் வெடித்து முழங்க , மரத்தில் ஏறிய புலிமகள் படங்கை இழுத்து வரி வரி என்று வரித்து கட்டிவிட்டு, வீதியின் மறுபுறமுள்ள மரத்திலும் இறுக்கு இறுக்கு என்று இறுக்கிக் கட்டிவிட்டு, காயங்கள் ஏதுவுமின்றி இரவு 9.00 மணிக்கே எமது முண்ணரங்குக்கு திரும்பிவிட்டார்.

காலையில் காற்றிலே படங்கு அசைந்தாடிக்கொண்டிருந்ததை நாங்களும் ஆச்சரியமாகத்தான் பார்த்தோம். நேற்றும் அதற்கும் முதல் நாளும் இவ்வளவு நேரம்வரை படங்கு தாக்கு பிடித்திருக்கவில்லை. அதிகாலையிலேயே அறுந்து விழுந்து எங்களுடைய எல்லா வேலைகளையும் பாழாக்கிவிட்டிருந்தது. இன்று விடிந்த பின்பும் காற்றிலே ஆடிக்கொண்டிருந்தது.

படையினர் அடியை பலமாகத் தொடங்கினர். படங்கிலே ஓட்டைகள் விழுந்தனவேயன்றி, அறுந்து விழவில்லை. அடியோ விடாமல் தொடர்….ந்….தது.

கடைசியில் படங்கு அறுந்து விழுந்தபோது மதியம் 12.00 மணி கடந்துவிட்டிருந்தது. அதற்குள் நாங்கள் எவ்வளவோ வேலைகளைச் செய்து முடித்துவிட்டிருந்தோம்.

ளானாள். பின்னொரு நாளில் கரும்புலியானவள்…. அன்று…… கடலிலே பகைக் கலமதை , பகைவரை வென்ற மகளும் ஆனாள்.

அன்று புலிமகள் வெற்றிமகளானாள். சில காலங்களின் பின் அவள் கடல்மகளானாள். பின்னொரு நாளில் கரும்புலியானவள்…… அன்று…… கடலிலே பகைக் கலமதை, பகைவரை வென்ற மகளும் ஆனாள்.

நினைவுப்பகிர்வு: மலைமகள்.
நன்றி – விடுதலைப்புலிகள் இதழ் (ஆனி, ஆடி 2004).

 

https://thesakkatru.com/black-sea-tiger-captain-pulimahal/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கம்

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.