Jump to content

தமிழர் தாயகத்தின் கரையோரப் பகுதிகளை கைப்பற்றும் சிங்கள அரசின் திட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் தாயகத்தின் கரையோரப் பகுதிகளை கைப்பற்றும் சிங்கள அரசின் திட்டம்

ஈழத்தமிழினம் இன்று சிங்கள பௌத்த இனவாதத்தின் அடக்குமுறைக்குள் இலங்கைத் தீவிலும், புலம்பெயர்ந்து உலகெங்கும் பரந்து வாழும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். அன்று தமிழர் தாயகத்தின் எல்லைப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களை ஆரம்பித்து, அதன் பின்னர் தமிழர் தாயகப் பகுதியினுள் தமிழர் தாயகத்தை துண்டாடும் நோக்கத்திலும், செயற்படுத்தப்பட்டன. அந்த வகையில் இன்று தமிழர் தாயகத்தின் கரையோரப் பகுதிகளையும் சிங்களமயப்படுத்தி தமிழர் தாயக எண்ணக்கருவை அழிக்கும் செயற்திட்டங்கள் திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்பட்டும் வருகின்றன. இச் செயற்திட்டங்கள் நிறைவேறும் போது, தமிழர்களின் வாழ்வு நிலை, வாழ்வு இயக்கங்கள் யாவும் கட்டுப்படுத்தப்பட்டு, தமிழர்கள் பலவீனமாகும் நிலை ஏற்படும்.

இதற்கென தமிழர் தாயகம் முற்றுமுழுவதுமாக இராணுவமயப்படுத்தப்பட்டு ஈழத்தமிழர்கள் மீது பல்வேறு அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது சிங்கள பௌத்த இனவாதம். இதன் மூலம் தமிழர்களை பலவீனப்படுத்தும் சூழ்ச்சிச் செயற்பாடுகளையும் சிங்கள இனவாதம் ஆரம்பித்துள்ளது. அதிலொன்றுதான் தமிழர் தாயகத்தின் கடற்கரையோரப் பகுதிகளை சிங்களமயப்படுத்தும் சிங்களக் குடியேற்றத் திட்டங்களை செயற்படுத்தல் ஆகும்.

தமிழர் தாயகத்தின் கரையோரப் பகுதிகளை கைப்பற்ற நினைக்கும் சிங்கள அரசின் செயற்திட்ட இலக்குப் பகுதிகளாக மன்னார் மாவட்டத்தின் கரையோரப் பகுதியிலிருந்து கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி கரையோரப் பகுதிகளையும் கொண்டதாக திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமராட்சி கிழக்குக் கடற்கரைப் பகுதியிலிருந்து, கிளிநொச்சி மாவட்டத்தின் சுண்டிக்குளம் பகுதி வரையும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தின் செம்மலையிலிருந்து கொக்கிளாய் வரையும் தொடர்ந்து, திருகோணமலை மாவட்டத்தின் தென்னமரவடியிலிருந்து குச்சவெளி வரையான கரையோரப் பகுதிகளும், திருகோணமலை நகரின் கரையோரப் பகுதிகளும் இத்திட்ட வடிவத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இத்திட்டங்கள் யாவும் தமிழர் தாயகத்தின் கரையோரப் பகுதிகளை சிங்களமயப்படுத்தப்படும் ஆரம்ப திட்டங்களாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டங்களின் தொடர்ச்சியாக அடுத்த கட்டமாக தமிழர் தாயகத்தினுள் மேற்கொள்ளப்பட்ட சிங்களக் குடியேற்றத் திட்டங்களை இக் கரையோர சிங்களக் குடியேற்றத் திட்டங்களுடன் இணைத்து செயற்படுத்தப்படும். இதன் தொடர்ச்சியாக மூன்றாம் கட்ட நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன. அதன்படி செயற்படுத்தப்பட்ட அனைத்து கரையோரப் பகுதியை ஆக்கிரமித்த சிங்களக் குடியேற்றத் திட்டங்களை ஒருங்கிணைத்து திட்ட செயற்பாடுகளை மேற்கொள்ளும் சூழ்ச்சிகளும் திட்டமிடப்பட்டுள்ளன. இத்திட்ட செயற்பாடுகளுக்கு வாய்ப்பாக பல்வேறுபட்ட சூழ்நிலைகள் தமிழர் தாயகத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. அவையாவன:

  • தமிழர் தாயகத்தின் கரையோரப் பகுதிகளில் இராணுவ, கடற்படை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
  • மேலும் தமிழர் தாயகம் முழுவதும் இராணுவமயப்படுத்தப்பட்டு, தமழர்களின் போராட்ட எழுச்சிகள் யாவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
  • தமிழர் தாயகத்தினதும், ஈழத்தமிழினத்தினதும் வரலாற்றை திரிக்கும் வகையில் ‘தொல்பொருள் ஆய்வுக் குழுக்களை’ சிங்கள பௌத்த துறவிகளையும், சிங்கள இராணுவ மற்றும் அரச அதிகாரிகளையும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.
  • இதன் மூலம் தமிழர் தாயகத்தில் ஏற்கனவே உருவாக்கப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் பலப்படுத்தப்படுவதோடு, புதிய வரலாறு சிங்களவர்கள் சார்பாக உருவாக்கப்பட்டு புதிய சிங்களக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்படுகின்றது.
  • ‘விகிதாசாரத் தேர்தல் முறைமூலம்’ தமிழர்களின் பாராளுமன்ற பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, தமிழர் தாயகத்திலிருந்து இலங்கைப் பாராளுமன்றத்திற்கு சிங்களவரும், சிங்கள இனவாதக் கட்சிகளின் பிரதிநிதிகளும் செல்லும் நிலை உருவாகியுள்ளது.

இதன் மூலம் சிறீலங்கா பாராளுமன்றத்தில் தமிழர்களின் உரிமைக் குரல்கள் பலவீனப்படுத்தப்பட்டுள்ளது.

இச் செயற்பாடுகளுக்கு சான்றாக பல்வேறு செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதை ஈழத் தமிழினம் அறிந்து கொள்ள வேண்டும். அவற்றில் சிலவற்றை எடுத்துக் காட்ட வேண்டியுள்ளது. அவையாவன:

  • சிறீலங்கா அதிபர் கோத்தபயா ராஜபக்ச அவர்களால் உருவாக்கப்பட்ட ‘தொல்பொருள் ஆய்வுக் குழு’ செயற்பாடுகள் கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
  • அண்மையில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் குறைந்ததும், தமிழர் தாயக மாவட்டத்தில் சிங்கள இராணுவ அதிகாரிகள் தேர்தலில் போட்டியிட்டு, அவர்கள் கணிசமான வாக்குகளை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
  • தமிழர் தாயகத்தின் குடித்தொகைப் பரம்பலில் தமிழர்களின் குடித்தொகை வீதம் குறைந்துள்ளதும், சிங்களவர்களின் குடித்தொகை வீதம் அதிகரித்திருப்பதும் சான்றாக அமைகின்றது.
  • தமிழர் தாயகத்தின் உட்பகுதிகள் உட்பட கரையோரப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் சிங்களமயப்படுத்தல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதும் எடுத்துக் காட்டுகின்றது.

இந்த நிலைமைகள் யாவும் சிங்கள பௌத்த இனவாதம் தமது ஆதிக்கத்திற்கான தனிவழியை தெரிவு செய்து விட்டதை உறுதிப்படுத்துகின்றது. சிங்கள இனவாதம் என்றும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான எந்தத் தீர்வையும் முன்வைக்கப் போவதும் இல்லை. தரப்போவதும் இல்லை என்பதையே எடுத்துக் காட்டுகின்றது.

எனவே ஈழத் தமிழினம் தமது பலவீனங்களை விரட்ட வேண்டும். தமது பலத்தைத் திரட்ட வேண்டும். தமிழர் தாயகத்திலும், சர்வதேசத்திலும் வாழும் தமிழர்கள் தமிழ்த் தேசிய செயற்பாடுகளை ஒருங்கிணைத்து தமது சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பது இன்றியமையாதது ஆகும்.

-அன்பன்-

http://www.ilakku.org/sinhala-govt-plane-to-occupying-coastal-regions-of-tamil-homeland/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.