Jump to content

மாகாண சபை வேண்டுமா.? புதிய அரசமைப்பில் முடிவு.! – அமைச்சர் பிரசன்ன தெரிவிப்பு.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மாகாண சபை வேண்டுமா.? புதிய அரசமைப்பில் முடிவு.! – அமைச்சர் பிரசன்ன தெரிவிப்பு.

unnamed-4-2.jpg

எந்தவொரு பயனும் இல்லாதவையாக மாகாண சபைகள் மாறிவிட்டன. எனவே, மாகாண சபை வேண்டுமா.? வேண்டாமா.? என்பதைத் தீர்மானித்தே புதிய அரசமைப்பு கொண்டுவர வேண்டும். அதேவேளை, மாகாணங்களுக்கு பொலிஸ், காணி அதிகாரங்கள் வேண்டாம் என்பதே எமது தீர்க்கமான நிலைப்பாடு என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2019ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டுக்கான நிதி ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் 2019ஆம் ஆண்டுக்கான மூன்றாவது காலாண்டு செயலாற்றுகை அறிக்கை ஆகியவற்றின் மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

சுயாதீன ஆணைக்குழுக்கள் என உருவாக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் சுயாதீனமாகச் செயற்பட வேண்டும். ஆனால், கடந்த ஆட்சியில் அவ்வாறு சுயாதீன ஆணைக்குழுக்கள் சுயாதீனமாகச் செயற்படவில்லை. முக்கியமாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஹூல் சுயாதீனமாகச் செயற்படவில்லை. தன்னை நியமித்த தரப்பினருக்கு தீவிர விசுவாசத்தைக் காட்டினார்.

முன்னர் எமது ஆட்சிக் காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் புலம்பெயர் அமைப்புகளின் சார்பாகச் செயற்பட்டார் என்ற காரணத்தால் நல்லாட்சியில் அவர் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இணைக்கப்பட்டார். இந்தக் காலப்பகுதியில் அவர் மீது பற்பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில்தான் சுயாதீன ஆணைக்குழு அரசியல் சார்ந்து இருக்க முடியாது என நாம் தொடர்ந்தும் கூறி வந்தோம். எனவேதான் 19 ஆவது திருத்தத்தை நீக்க வேண்டும் என்பதே எமது தேர்தல் பிரசாரமாக இருந்தது, 19ஆவது திருத்தம் நீக்கப்பட்டு 20ஆவது திருத்தம் கொண்டு வரப்படும். இது தற்காலிக செயற்பாடு மட்டுமே. புதிதாக உருவாக்கப்படவுள்ள புதிய அரசமைப்பில் சகல மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும். நாடாளுமன்றம் அதற்கான பொறுப்பை வகிக்கும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

எனவே, நாம் புதிய அரசியல் அமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுப்போம். இதேவேளை, எந்தவொரு பயனும் இல்லாதவையாக மாகாண சபைகள் மாறிவிட்டன . எனவே, மாகாண சபை வேண்டுமா.?  வேண்டாமா.?  என்பதைத் தீர்மானித்தே புதிய அரசமைப்பு கொண்டுவர வேண்டும். அதே வேளை, மாகாணங்களுக்குப் பொலிஸ், காணி அதிகாரங்கள் வேண்டாம் என்பதே எமது தீர்க்கமான நிலைப்பாடு. இந்த நிலையில் புதிய அரசமைப்பு பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வரும் என அவர் கூறினார்.

https://thamilkural.net/newskural/news/73326/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

முன்னர் எமது ஆட்சிக் காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் புலம்பெயர் அமைப்புகளின் சார்பாகச் செயற்பட்டார் என்ற காரணத்தால் நல்லாட்சியில் அவர் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இணைக்கப்பட்டார்.

இந்தாளுக்கு வந்த நேரத்தைப் பாருங்கள். ஹூல் எப்போது புலிகளுக்கும், புலிகளின் புலம்பெயர் அமைப்புகளுக்கும் சார்பாகச் செயற்பட்டார்? முறிந்த பனையெழுதி, சந்திரிக்கா காலத்தில் சந்திரிக்காவின் அரசு சார்பாக "யாழ் பல்கலைக் கழக மனிதவுரிமைகளுக்கான ஆசிரியர்" என்கிற அமைப்பினால் அறிக்கைவிட்டு, புலிகள் மீது வசை பாடியதைத் தவிர இவர் செய்தது ஏதேனும் உண்டா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரஞ்சித் said:

இந்தாளுக்கு வந்த நேரத்தைப் பாருங்கள். ஹூல் எப்போது புலிகளுக்கும், புலிகளின் புலம்பெயர் அமைப்புகளுக்கும் சார்பாகச் செயற்பட்டார்? முறிந்த பனையெழுதி, சந்திரிக்கா காலத்தில் சந்திரிக்காவின் அரசு சார்பாக "யாழ் பல்கலைக் கழக மனிதவுரிமைகளுக்கான ஆசிரியர்" என்கிற அமைப்பினால் அறிக்கைவிட்டு, புலிகள் மீது வசை பாடியதைத் தவிர இவர் செய்தது ஏதேனும் உண்டா? 

முறிந்த பனை எழுதி வெழியிட உதவியதற்காக தற்போது சிலவேளைகளில் வருத்தப்பட்டிருப்பார் போலும்.. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ரஞ்சித் said:

இந்தாளுக்கு வந்த நேரத்தைப் பாருங்கள். ஹூல் எப்போது புலிகளுக்கும், புலிகளின் புலம்பெயர் அமைப்புகளுக்கும் சார்பாகச் செயற்பட்டார்? முறிந்த பனையெழுதி, சந்திரிக்கா காலத்தில் சந்திரிக்காவின் அரசு சார்பாக "யாழ் பல்கலைக் கழக மனிதவுரிமைகளுக்கான ஆசிரியர்" என்கிற அமைப்பினால் அறிக்கைவிட்டு, புலிகள் மீது வசை பாடியதைத் தவிர இவர் செய்தது ஏதேனும் உண்டா? 

ஆட்சிகள் மாறினால் எதுவும் நடக்கும் ....இப்ப அரசின் செல்லபிள்ளைகளாக விளங்கும் பலருக்கு இது நடக்கும் காலம் பதில் சொல்லும்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.