Jump to content

உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கவுள்ள தமிழ்க்கட்சிகள் : ஹர்த்தாலுக்கும் அழைப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வடகிழக்கு தழுவிய பூரண கர்தாலுக்கு ஆதரவு

இறந்தவர்களை அவர்களது உறவுகள் நினைவு கூரும் உரிமையை இந்த அரசு தடுத்தமைக்கு எதிராக நாளை திங்கட்கிழமை 28.09.2020 வடக்கு கிழக்கு தழுவிய பூரண செயற்பாட்டு முடக்கத்துக்கு யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் பூரண ஆதரவை தெரிவிக்கின்றது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ளெியிடப்பட்ட அறிக்கையில்,

இராணுவ கெடுபிடிகள் சம காலத்தில் அதிகரித்திருக்கின்ற சூழ்நிலையானது பல்கலைக்கழக மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்கும் அவர்களின் சுதந்திரமான நடவடிக்கைகளுக்கும் ஒரு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதுடன் இதனை அரசாங்கமும் கண்டுகொள்ளாத நிலையில் உள்ளது.

இலங்கையின் அரசியல் யாப்பின் படி குற்றவியல் நடைமுறை கோவையின் பொது தொல்லைகள் ஏற்பாடுகளின் கீழ், நினைவேந்தல் உரிமை, ஒன்றுகூடும் உரிமை, பேச்சுச்சுதந்திரம், மத சுதந்திரம், தனி மனித சுதந்திரம் என்பன யாப்பின் வழி வழங்கப்பட்டாலும் வடக்கு கிழக்கில் இவை மட்டுப்படுத்தப்பட்டவையாக காணப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் இறந்தவர்களை நினைவுகூருவது என்பது உலக அளவிலும் உள்ளக அளவிலும் ஒரு கலாசாரம் சார்ந்த உரிமையாகவும் அரசியல் உரிமையாகவும் வரையறுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இலங்கையில் யுத்தத்திற்கு பின்னரான சர்வதேச பொறிமுறையான நிலைமாறு கால நீதிப் பொறிமுறையும் ஒன்றாகும். நிலைமாறு கால நீதியை முன்னெடுக்கும் இத்தருணத்தில் இறந்தோரை நினைவுகூருவதற்கான தடையை நீதிமன்றம் பிறப்பித்தமையானது சர்வதேச நீதிப்பொறிமுறையும் கேள்விக்குள்ளாகியிருக்கிறது.

அண்மைக்காலமாக பாதுகாப்பு பிரிவினரின் செயற்பாடுகள் அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் இடையிலான நெருக்கத்தை மேலும் சிதைவுற செய்திருக்கிறது. குறிப்பாக பொலிஸ் ஊடாக நீதிமன்றங்களை நாடி அதன் மூலம் இறந்தவர்களை நினைவுகூருவதற்கு தடைவிதித்த இன்றைய அரசாங்கம் இலங்கையினுடைய நீதித்துறை மீதும் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்த காரணமாக மாற்றியிருக்கிறது.
இவ்வாறான செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் மக்கள் மீது திணிக்காமல் இறந்தவர்களை நினைவு கூரும் அரசியல் உரிமையை ஏற்று அங்கிகரிக்க வேண்டும்.

யுத்தம் நிறைவடைந்து 11 வருடங்கள் கடந்த நிலையிலும் இத்தகைய நினைவேந்தலை தடுக்க முயல்வது இவ் அரசாங்கத்தின் பாதுகாப்பற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது.

ஒரு முழுமையான நீதிப்பொறிமுறையின் கீழ் மலர்ந்திருக்கும் இந்த புதிய அரசாங்கம், தமிழ் மக்களையும் இலங்கை பிரஜைகள் என்ற வகையில் சமாதானம், நல்லிணக்கம், சமத்துவம், சுதந்திரம், இறைமை போன்ற அம்சங்களுடன் நீண்ட சமாதான நோக்குடன் பயணிக்கும் எண்ணப்பாங்கில் நீடித்த சமாதானமும் மீள் நல்லிணக்கமும் இலங்கையில் நிலைபெற வழிசெய்ய வேண்டும்.

எனவே தமிழ் மக்களுக்கான நீதியையும் இறந்தவர்களையும் அவர்களது உறவுகள் மற்றும் அவர்களது மனநிலையையும் வெளிப்பாட்டையும் அரசு கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என்ற வகையில் நாளைய தினம் 28.09.2020 வடக்கு கிழக்கு மாகாணங்கள் தழுவிய பூரண செயற்பாட்டு முடக்கப் போராட்டத்துக்கு கல்விச்செயற்பாடுகள் மற்றும் பரீட்சைகள் முதலியவற்றை புறக்கணித்து
யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியமும் பூரண ஆதரவை வழங்குகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

 

http://www.ilakku.org/வடகிழக்கு-தழுவிய-பூரண-கர/

 

அஞ்சலி செலுத்துவது ஒரு போராட்டமாகியுள்ளது, நாளைய ஹர்த்தாலில் அணி திரள சுரேஷ் அழைப்பு

தமிழ் மக்களின் விடுதலைக்காக மரணித்துப் போனவர்களை அஞ்சலிக்கும் நிகழ்வுகளை அரசாங்கம் தடை செய்வதைக் கண்டித்தும் அஞ்சலிப்பது தமிழ் மக்களின் அடிப்படை உரிமை என்பதை வலியுறுத்தியும் நாளை நடைபெறவிருக்கும் ஹர்த்தாலில் அனைத்து தமிழ் முஸ்லிம் மக்களையும் கலந்து கொள்ளுமாறு வேண்டி தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப்பேச்சாளர் சுரேஸ் பிறேமச்சந்திரின் பத்திரிகைகளுக்கு விடுத்துள்ள செய்தியில் தெரிவித்திருக்கின்றார்.

இது குறித்த அவரது அறிக்கை வருமாறு;

“தமிழ் மக்களின் விடுதலைக்காக லட்சக்கணக்கான பொதுமக்களும் பல்லாயிரக்கணக்கான போராளிகளும் தமது இன்னுயிரை தியாகம் செய்துள்ளார்கள். அவர்களுக்கான அஞ்சலி செலுத்துவதும் அவர்களை கௌரவபடுத்துவதும், அவர்களை நினைவு கூருவதும் ஒவ்வொரு தமிழனதும் கடமையாகும். இந்த அஞ்சலி என்பது ஐ.நா சாசனத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டதும் சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு செயற்பாடுமாகும்.

இலங்கையைப் பொறுத்தவரையில் இந்த அஞ்சலி நிகழ்வுகளை கடைப்பிடிப்பது என்பது ஒரு போராட்டமாகவே மாறிவருகின்றது. எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் அந்த அரசாங்கள் அதனை தடை செய்வதும் நீதிமன்றங்களின் ஊடாக தடைகளைப் பெற்றுக் கொள்வதும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இந்த வருடமும் உரிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் இந்த அஞ்சலி நிகழ்வுகளுக்கு எதிராக தடைகளைப் பெற்று வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் அஞ்சலி நிகழ்வுகளில் பங்கு கொள்ளக் கூடாது என்ற ஒரு நிலையை இந்த அரசாங்கம் ஏற்படுத்தியிருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கட்சிகள் இந்த அஞ்சலி நிகழ்வுகளை நடாத்த முற்பட்டபொழுது ஒவ்வொரு இடத்திலும் அதற்கு எதிரான தடைகளை பொலிஸார் நீதிமன்றத்தின் மூலம் பெற்றுக் கொண்டனர். ஆனால், அரசாங்கத்தினுடைய இந்த அடக்கு முறைகளைக் கண்டித்தும் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் நோக்கத்துடனும் நேற்றைய தினம் 26.09.2020 அன்று சாவகச்சேரியில் ஓர் உண்ணாநேன்பை வெற்றிகரமாக நடாத்தி முடித்தோம். இராணுவ பொலிஸ் சுற்றிவளைப்புக்குள் இந்த உண்ணா நோன்பு நடைபெற்றது.

இதன் அடுத்த கட்டமாக தமிழ் மக்களினுடைய விடியலுக்காக போராடி மரணித்துப் போன அனைத்து பொதுமக்கள் போராளிகளுக்கு அஞ்சலி செலுத்தும் எமது உரிமையை நிலைநாட்டும் பொருட்டு வடக்கு – கிழக்கு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு ஹர்த்தாலினூடாக எமது கோரிக்கையை வலியுறுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது. நாம் அனைவரும் இணைந்து இதனை வலியுறுத்தாவிட்டால் இலங்கை அரசாங்கம் வட – கிழக்கை தனது சிங்கள – பௌத்த மேலாதிக்கத்துக்குள் கொண்டுவரும். அதற்கான பல்வேறு பட்ட நடவடிக்கைகளை ஏற்கனவே இந்த அரசாங்கம் எடுத்து வருகின்றது.

இந்த சூழலில்தான் இந்த உண்ணாநேன்பைத் தொடர்ந்து வட – கிழக்கில் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து முழுக்கடையடைப்பு மற்றும் வேலைநிறுத்தத்தைச் செய்து ஒரு முழுமையான ஹர்த்தாலை அனுஸ்டிக்கும்படி வேண்டுகின்றோம்.”

 

http://www.ilakku.org/அஞ்சலி-செலுத்துவது-ஒரு-ப/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்ணாவிரதம் இருப்பவர்கள் இருந்து போகட்டும் ஆனால் உண்ண உணவின்றி வேலைக்கு போகும் ஏழைகளின் வாழ்வே முடங்கும் 
இலங்கை அரசை இன்னும் புரிந்து கொள்ளவில்லை இந்த டமிழ் தேசிய கூட்டமைப்பினர் நாளை அரச அலுவலங்கள் அனைத்திலும் சைன் பண்ணி தங்களை அரச சார்பானவர்கள் என மக்கள் காட்டுவார்கள் அதில் முதலாவது ஆசிரியர் சங்கம் வந்து கைஒப்பம் இடுவார்கள் இட்டதன் பின்னர் பிள்ளைகள் பாடசாலைக்கு சமூகமளிக்க வில்லை என்பார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனமான உணர்வோடு ஒன்றுபடுவோம்- கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு

தமிழ் மக்களின் விடுதலைக்காக மரணித்துப் போனவர்களை அஞ்சலிக்கும் நிகழ்வுகளை அரசாங்கம் தடை செய்வதைக் கண்டித்தும் அஞ்சலிப்பது தமிழ் மக்களின் அடிப்படை உரிமை என்பதை வலியுறுத்தியும் நாளை வடக்கு கிழக்கு மாகாணங்களில் முழு கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த அறிவிப்புக்கு பல கட்சிகள் பொது அமைப்புக்கள் தமது ஆதரவினைத் தெரிவித்து வருகின்றது.

இதைத்தொடர்ந்து,வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் கஜதீபன், வெளியிட்ட அறிக்கையில்,

கடந்த தேர்தல் காலங்களில் நாங்கள் அஞ்சியதைப் போலவே தென்னிலங்கையில் அசுர பலத்தோடும் அடக்குமுறைமிக்க அராஜகத்தனமான சிந்தனைகளோடும் அறுதிப்பெரும்பான்மையோடு அமைந்திருக்கின்ற இந்த ஆட்சியாளர்களால் தமிழ்பேசும் மக்கள், குறிப்பாக வடகிழக்கு தமிழ்மக்கள் அனுபவிக்க ஆரம்பித்திருக்கும் இத்துன்பம் இன்னும் நீண்டு செல்லும் என்பதாகவே சிந்திக்கத் தோன்றுகிறது என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் கஜதீபன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் வெளியிட்ட அறிக்கையில்,“அதனொரு ஆரம்பம்தான் எந்தவிதமான வன்முறையும் அற்ற ஜனநாயக ரீதியான மக்களின் ஒன்றுகூடல்கள் தடுத்து நிறுத்தப்படுகின்ற செயற்பாடுகளாக நாங்கள் பார்க்கிறோம்.

இருப்பினும் இந்த மோசமான ஜனநாயக அடக்குமுறைகளை சுட்டிக்காட்டுவதற்கும் தட்டிக்கேட்பதற்கும் மக்கள் மத்தியில் தமிழ்த்தேசிய உணர்வுகளோடு செயற்பட்டு வருகின்ற சக்திகள் அத்தனையும் ஒன்று சேர்ந்திருப்பது சிறிய ஆறுதலை தந்து நிற்கிறது. இதே ஒற்றுமை உணர்ச்சியோடு இந்த அரசாங்கத்தின் அத்தனை அடக்குமுறைகளையும் எதிர்கொள்ள வேண்டும் என்பதே தமிழ் மக்களுடைய பேரவாவாகவும் இருக்கிறது.

இச் சிந்தனைகளை அமைதியான வழியில் வெளிப்படுத்தும் முகமாகத்தான் எம்மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாகத்தான் நாளைய தினம் கதவடைப்பு போராட்டம் இடம்பெறகிறது என்பதை ஆள்கின்ற அரசாங்கத்திற்கும்இ மற்றும் அனைவருக்கும் வெளிப்படுத்த வேண்டிய ஒரு வரலாற்றுக்கடமை தமிழ் மக்களாகிய எங்கள் அனைவருக்கும் இருக்கிறது.

எமது வரலாற்று கடமையை நிறைவேற்ற விடாமல் செய்வதற்கான நெருக்குவாராங்களை அரச முகவர்களும் அரசாங்கத்தோடு சேர்ந்து இயங்கிவருகின்ற தமிழர் நலனுக்கு விரோதமான சில சிங்களஇ தமிழ் அரச கட்சி முகவர்களும் முயற்சிகளை எடுக்க ஆரம்பித்திருப்பதாக அறிகிறோம்.

ஆனால் தமிழ்மக்களுடைய உணர்ச்சி மிகு எழுச்சிக்கு முன்னால் அவர்களுடைய அந்த செயற்பாடுகள் தோற்கடிக்கப்பட வேண்டும்  என்று குறிப்பிட்டுள்ளார்.

அதே போல், வடமாகாண கூட்டுறவு ஊழியர் பொதுச்சங்கமும் யாழ்மாவட்ட கூட்டுறவு ஊழியர் தொழிற்சங்கமும் பூரண ஆதரவு வழங்கியுள்ளது.

நாளைய தினம் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தழுவிய ரீதியில் இடம்பெறவுள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு (வடமாகாண கூட்டுறவு ஊழியர் பொதுச்சங்கம் பூரண ஆதரவினை வழங்குவதாக அதன் பொருளாளரும் யாழ்மாவட்ட கூட்டுறவு ஊழியர் தொழிற்சங்கத் தலைவருமான வே.செல்வகாந்தன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான சகலவிதமான அடக்குமுறைகளுக்கும் எதிராக அனைத்து தமிழ்த் தேசிய கட்சிகளும் ஒன்றிணைந்து நேற்றைய தினம் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் பல்வேறான அடக்குமுறைகளையும் தாண்டி வெற்றியடைந்ததை தொடர்ந்து நாளைய தினம் தமிழ் கட்சிகள் மாத்திரமல்ல தமிழ் இனமே ஒன்றுசேர்ந்திருக்கிறது என்பதை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக கருதுகிறோம்.

இந்த போராட்டத்தை வலுவழக்கச் செய்வதற்கும் சிறுமைப்படுத்துவதற்கும் தமிழ் இன விரோதிகள் உட்பட சிங்களப் பேரினவாதத்தின் அரச இயந்திரமும் சேர்ந்து முயற்சிக்கும் என்பதை நாங்கள் அறவோம். இருந்தாலும் தன்மானம் மிக்க தமிழர்களாக நாங்கள் ஒன்றுபட்டோம் என்பதை நாளை இந்த உலகம் பார்க்கும். அதற்காக ஒவ்வொரு கூட்டுறவாளனும் எந்த எல்லைவரை சென்றேனும் வெற்றிபெற செய்வதற்காக எங்கள் ஒவ்வொருவரையும் அர்பணிப்பணித்து களங்காணுவோம். எனவே இந்த நிமிடம் முதல் ஒவ்வொரு கூட்டுறவாளனும் மக்களை விழிப்படையச்செய்கின்ற வரலாற்றுக் கடமையை ஆற்றுமாறு அறைகூவல் விடுகின்றேன் என தெரிவித்துள்ளார்.

 

http://www.ilakku.org/இனமான-உணர்வோடு-ஒன்றுபடுவ/

Link to comment
Share on other sites

வடக்கு – கிழக்கில் இன்று பூரண ஹர்த்தால்; நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தி போராட்டம்

 

தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கில் இன்று திங்கட்கிழமை பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழரின் நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தி முன்னெடுக்கப்படும், இன்றைய ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குமாறு தமிழ்த் தேசியக் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, புளொட், ரெலோ, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும், தமிழ் மக்கள் கூட்டணி, ஈ. பி.ஆர். எல். எவ், தமிழ்த் தேசியக் கட்சி, ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ்த் தேசிய பசுமை இயங்கம், ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகியன இணைந்தே இன்றைய ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ளன.

இந்தக் கட்சிகளின் அழைப்புக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், கலைப்பீட மாணவர் ஒன்றியம், வடக்கு, கிழக்கு வணிகர் கழகங்கள், போக்குவரத்துச் சங்கங்கள், மாணவர் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள் என்பன ஆதரவு தெரிவித்துள்ளன

http://thinakkural.lk/article/73337

Link to comment
Share on other sites

உணர்வோடு ஒன்றாய் எழுவோம்! – கஜதீபன்

இனமான உணர்வோடு நாளைய (28) கதவடைப்பு போராட்டத்தில் ஒன்றுபடுமாறு, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் அழைப்பு விடுத்துள்ளார்.

நாளை கதவடைப்பு போராட்டம் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


 
“கடந்த தேர்தல் காலங்களில் நாங்கள் அஞ்சியதைப் போலவே தென்னிலங்கையில் அசுர பலத்தோடும் அடக்குமுறைமிக்க அராஜகத்தனமான சிந்தனைகளோடும் அறுதிப்பெரும்பான்மையோடு அமைந்திருக்கின்ற இந்த ஆட்சியாளர்களால் தமிழ்பேசும் மக்கள் குறிப்பாக வடகிழக்கு தமிழ்மக்கள் அனுபவிக்க ஆரம்பித்திருக்கும் இத்துன்பம் இன்னும் நீண்டு செல்லும் என்பதாகவே சிந்திக்கத் தோன்றுகிறது.


 
அதனொரு ஆரம்பம்தான் எந்தவிதமான வன்முறையும் அற்ற ஜனநாயக ரீதியான மக்களின் ஒன்றுகூடல்கள் தடுத்து நிறுத்தப்படுகின்ற செயற்பாடுகளாக நாங்கள் பார்க்கிறோம்.

இருப்பினும் இந்த மோசமான ஜனநாயக அடக்குமுறைகளை சுட்டிக்காட்டுவதற்கும் தட்டிக்கேட்பதற்கும் மக்கள் மத்தியில் தமிழ்த்தேசிய உணர்வுகளோடு செயற்பட்டு வருகின்ற சக்திகள் அத்தனையும் ஒன்று சேர்ந்திருப்பது சிறிய ஆறுதலை தந்து நிற்கிறது. இதே ஒற்றுமை உணர்ச்சியோடு இந்த அரசாங்கத்தின் அத்தனை அடக்குமுறைகளையும் எதிர்கொள்ள வேண்டும் என்பதே தமிழ் மக்களுடைய பேரவாவாகவும் இருக்கிறது.

இச்சிந்தனைகளை அமைதியான வழியில் வெளிப்படுத்தும் முகமாகத்தான் எம்மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாகத்தான் நாளையதினம் கதவடைப்பு போராட்டம் இடம்பெறகிறது என்பதை ஆள்கின்ற அரசாங்கத்திற்கும், மற்றும் அனைவருக்கும் வெளிப்படுத்த வேண்டிய ஒரு வரலாற்றுக்கடமை தமிழ் மக்களாகிய எங்கள் அனைவருக்கும் இருக்கிறது.

எமது வரலாற்று கடமையை நிறைவேற்ற விடாமல் செய்வதற்கான நெருக்குவாராங்களை அரச முகவர்களும் அரசாங்கத்தோடு சேர்ந்து இயங்கிவருகின்ற தமிழர் நலனுக்கு விரோதமான சில சிங்கள, தமிழ் அரச கட்சி முகவர்களும் முயற்சிகளை எடுக்க ஆரம்பித்திருப்பதாக அறிகிறோம்.

ஆனால் தமிழ்மக்களுடைய உணர்ச்சி மிகு எழுச்சிக்கு முன்னால் அவர்களுடைய அந்த செயற்பாடுகள் தோற்கடிக்கப்பட வேண்டும்” – என குறிப்பிடப்பட்டுள்ளது.

https://newuthayan.com/உணர்வோடு-ஒன்றாய்-எழுவோம்/

Link to comment
Share on other sites

 

வடக்கு, கிழக்கில் முழு கதவடைப்பு போராட்டம்!

 

ஒன்றிணைந்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஏற்பாட்டில் இன்று (திங்கட்கிழமை) வடக்கு, கிழக்கில் முழு கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், 10 தமிழ் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து தற்போதைய அரசினால் மேற்கொள்ளப்படும் தமிழ் மக்கள் மீதான அடாவடித்தனத்திற்கு ஜனநாயக ரீதியில் எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக இன்றைய தினம் வடக்கு, கிழக்கில் முழு கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

குறித்த அழைப்பிற்கு வடக்கில் உள்ள தமிழ் மக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்கி தமது ஆதரவினை அளித்துள்ளார்கள்.

அதற்கமைய யாழ்ப்பாணத்திலும் இன்று முழு கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள்  மூடப்பட்டுள்ளன. பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்லவில்லை என்பதுடன், பாடசாலைகளும்  மூடப்பட்டுள்ளன என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும் பொதுமக்களின் நடமாட்டம் வீதிகளில் குறைவாகவே உள்ளதுடன், அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து சேவைகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேநேரம் கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களிலும் முழு கதவடைப்பு போராட்டத்திற்கு மக்கள் ஆதரவளித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

கிளிநொச்சியிலும் முழு கதவடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக  வர்த்தக நிலையங்கள், சேவை சந்தைகள் பூட்டப்பட்டுள்ளன.

மரக்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மாற்று இடங்களில் விற்பனை இடம்பெற்று வருகின்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

தனியார் போக்குவரத்து சேவைகள் இடம்பெறவில்லை என்பதுடன், அரச திணைக்களங்கள் வழமைபோல் திறந்துள்ளபோதிலும் அதன் செயற்பாடுகள் வழமைபோன்று இடம்பெறவில்லை.

பாடசாலைகளிற்கு மாணவர்கள் வருகை இன்மையால், கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதுடன், நகரில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளமையால் வழமையான செயற்பாடுகள் இடம்பெறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

வவுனியாவில் தமிழ், இஸ்லாமிய வர்த்தகர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர் என எமது பிராந்திய செய்தியார் தெரிவித்தார்.

அரச திணைக்களங்கள் மற்றும் உணவகங்கள் என்பன திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும் வவுனியா வர்த்தகர் சங்க தலைவர் செயலாளரின் வர்த்தக நிலையம் உட்பட சில தமிழர்களின் கடைகள் திறக்கப்பட்டிருந்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் வவுனியா நகர்ப்பகுதியில் குவிக்கப்பட்ட பொலிஸார் வர்த்தக நிலையங்கள் ஒவ்வொன்றிற்கும் சென்று வர்த்தக நிலையங்களை திறக்குமாறு தெரிவித்து வருகின்றனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

வவுனியா மொத்த மரக்கறி விற்பனை நிலையம் வழமைபோல் காலையில் செயற்பட்டதுடன், பேருந்து நிலையத்தில் இருந்து உள்ளூர் மற்றும் தூர இட சேவைகளும் குறைந்த அளவில் இடம்பெற்றிருந்ததாகவம் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை வவுனியாவில் முற்சக்கரவண்டிகள் சில சேவையில் ஈடுபட்டதுடன், பாடசாலைகளுக்கும் குறைந்தளவான மாணவர்கள் வருகைதந்திருந்தனர் என்றும் எமது பிராந்திய செய்தியார் தெரிவித்தார்.

அதேபோல முல்லைத்தீவில் அரச நிறுவனங்கள் தவிர்த்து ஏனைய வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ள போதிலும் மாணவர்களின் வருகை குறைவாகவே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதேநேரம், போக்குவரத்து சேவைகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், வீதிகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, கிழக்கிலும் முழு கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டபோதிலும் மட்டக்களப்பு தவிர்த்து ஏனைய மாவட்டங்களில் வணிக நிலையங்கள், பாடசாலைகள், அரச நிறுவனங்கள் என்பன திறக்கப்பட்டுள்ளன என எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறிருப்பினும் மட்டக்களப்பில் இந்த போராட்டத்திற்கு மக்கள் ஆதரவளித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

அதற்கமைய அங்கு பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ள போதிலும் மாணவர்களின் வருகை குறைவாகவே உள்ளதாகவும் வணிக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

அதேநேரம், போக்குவரத்து சேவைகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், வீதிகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, புளொட், ரெலோ, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ் மக்கள் கூட்டணி, ஈ. பி.ஆர். எல். எவ், தமிழ்த் தேசியக் கட்சி, ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ்த் தேசிய பசுமை இயங்கம், ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகியன இணைந்தே இன்றைய கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன.

இந்தக் கட்சிகளின் அழைப்புக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், கலைப்பீட மாணவர் ஒன்றியம், வடக்கு, கிழக்கு வணிகர் கழகங்கள், போக்குவரத்துச் சங்கங்கள், மாணவர் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள் என்பன ஆதரவு தெரிவித்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/வடக்கில்-முழு-கதவடைப்பு/

  •  
Link to comment
Share on other sites

அரசின் அடாவடியை எதிர்த்து யாழ்ப்பாணம் முடங்கியது!

IMG-20200928-WA0003-960x720.jpg?189db0&189db0

 

தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுத்த அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (28) வடக்கு கிழக்கில் அனுஷ்டிக்க அழைப்பு விடுக்கப்பட்ட ஹர்த்தாலுக்கு யாழ்ப்பாணம் மக்கள் பூரண ஆதரவினை வழங்கியுள்ளார்கள்.

ஹர்த்தாலினால் யாழ்ப்பாண நகரம் முற்றாக முடங்கியதுடன், யாழ்ப்பாண வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்லவில்லை. இதனால் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

பொது மக்கள் வீதிகளில் பயணிக்கவில்லை, அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து சேவைகளும் இன்றைய தினம் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.

குறித்த அழைப்பிற்கு தமிழ் மக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்கி தமது ஆதரவினை அளித்துள்ளார்கள், எனினும் நேற்றைய தினம் இன்றைய ஹர்தாலுக்கு எதிராக அரசுடன் இயங்கும் சிலர் யாழில் போராட்டம் முன்னெடுத்த போதும், தமிழ் மக்கள் ஹர்தாலுக்கு பூரண ஆதரவினை வழங்கியுள்ளனர்.

Link to comment
Share on other sites

தமிழர் தாயகத்தில் விடுக்கப்பட்ட அழைப்பு; முற்றாக முடங்கிய கிளிநொச்சி!

வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் இன்றைய தினம் பூரண கர்த்தாலால் முற்றாக முடங்கியுள்ளது. அந்த வகையில், கிளிநொச்சியில் பூரண கர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி நகர வர்த்தக நிலையங்கள், சந்தைகள் பூட்டப்பட்டுள்ளன. இருப்பினும் மக்களின் அத்தியாவசிய தேவை கருதி மரக்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மாற்று இடங்களில் வைத்து விற்பனை செய்யப்படுகின்றன.

இருப்பினும் தனியார் போக்குவரத்து சேவைகள் இடம்பெறவில்லை என்பதுடன் அரச திணைக்களங்கள் வழமைபோல் திறந்துள்ளபோதிலும் அதன் செயற்பாடுகள் வழமைபோன்று இடம்பெறவில்லை.

பாடசாலைகளிற்கும் குறைந்தளவு மாணவர்களே சென்றிருப்பதாகவும், கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் இடம்பெறவில்லை எனவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளமையால் வழமையான செயற்பாடுகள் இடம்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/151315

Link to comment
Share on other sites

அரசுக்கு எதிராக முல்லையில் முழு அடைப்பு; பொலிஸார் மிரட்டல்!

 

 

IMG_20200928_111302.jpg?189db0&189db0

 

 

 

IMG_20200928_111302.jpg?189db0&189db0

https://newuthayan.com/அரசுக்கு-எதிராக-முல்லையி/

அரசுக்கு எதிரான ஹர்த்தாலுக்கு யாழ் முஸ்லிம் மக்களும் பூரண ஆதரவு!

 

 

IMG-20200928-WA0014-960x720.jpg?189db0&189db0

தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுத்த அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (28) வடக்கு கிழக்கில் அனுஷ்டிக்க அழைப்பு விடுக்கப்பட்ட ஹர்த்தாலுக்கு யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்களும் பூரண ஆதரவினை வழங்கியுள்ளார்கள்.

யாழ்ப்பாணம் – ஐந்து சந்திப்பகுதியில் உள்ள முஸ்லிம் மக்கள் தமது வர்த்தக நிலையங்கள் அனைத்தையும் பூட்டி இன்றைய ஹர்த்தாலுக்கு தமது ஆதரவினை வழங்கியுள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடைய திறந்தா மக்கள் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்பினம்.. அந்த பக்கம் கடைய மூடின சனநாய்கம் தழைதோங்குது என்பினம் .. தெரியுமப்பா உங்கட (அரச தரப்பு ) டகால்டி எல்லாம்..👌

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.