Jump to content

திலீபனுக்கு அஞ்சலி: சுரேஷ் விக்கியின் தேசிய அக்கறை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Justin said:

இலவசக் கல்வி பற்றி ஏன் கேள்வி வந்தது என்று உங்களுக்கு விளங்கியதா? இல்லையல்லவா? அது தான் பொயின்ற்.

இந்த திரியில் மட்டுமல்ல வேறு திரிகளிலும் இலவச என்பது கிடந்து இழுபடுகுது.அதற்காகவே ரஞ்சித்தின் விளக்கத்திற்கு பாராட்டுத் தெரிவித்தேன்.

Link to comment
Share on other sites

  • Replies 94
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

ரஞ்சித், உணர்ச்சி வசப்பட்டு அவசரப் பதில் பந்தி பந்தியாக எழுதாமல் நான் எதற்கு அந்தக் கேள்வியைக் கேட்டேன் என்று பார்க்க வேண்டும்! 

சக கருத்தாளரை உளரீதியாகத் தாழ்த்தி, அவர் தொடர்ந்தும் எழுதுவதைத் தடுக்க சிலர் பயன்படுத்தும் இருவிடயங்கள்தான் "உணர்ச்சிவசப்பட்டு எழுதுகிறீர்கள்" அல்லது "பந்தி பந்தியாக எழுதுகிறீர்கள்" என்னும் பதங்கள். ஆனால், அதையே தாம் செய்யும்போது அறிவாளிகளாக, மேதைகளாக தம்மைக் காட்டுவதற்குச் செய்வார்கள். ஆகவே இதுபற்றி நான் அலட்டிக்கொள்ளப்போவதில்லை.

3 hours ago, Justin said:

நீங்கள் பட்டியலிட்ட நாடுகளின் சமூக நலன் திட்டங்களும் சோசலிசத்திடமிருந்து கடன் வாங்கப்பட்டவையேயொழிய முதலில் இருந்த மன்னராட்சியாலோ, முதலாளித்துவத்தாலோ மட்டுமே வந்தவையல்ல.

நீங்கள் சொல்லும் சோஷலிசத்தினால் ஏற்படுத்தப்பட்ட நல்ல மாற்றங்கள் அங்கே இன்றும் நடைமுறையில் உள்ளன, ஆனால் சோசலிசம்தான் அங்கு தற்போது இல்லை. அதற்குக் காரணம் என்னவென்பதையும் நீங்களே கூறிவிடுங்கள். 

4 hours ago, Justin said:

இலங்கையில் சோசலிசப் பொருளாதார சமூகக் கொள்கைகளின் எல்லா நலன்களையும் அனுபவித்து விட்டு "சோசலிசம் அழிவே"

நான் அனுபவித்த அதே நலன்களைத்தான் நீங்களும் அனுபவித்திருப்பீர்கள். ஆனால் எனது கேள்வியென்னவென்றால், உலகின் மிகப்பலமான பொருளாதாரத்தையும், சோசலிசத்தின் மிகச்செழிப்பான மக்கள் நலத் திட்டங்களையும் கொண்டிருக்கும் இலங்கை சோசலிச ஜனநாயகக் குடியரசிலிருந்து புலம்பெயர்ந்து, உலகில் மிக வறிய நாடுகளில் ஒன்றாகவும், கல்விக்கும், மருத்துவத்திற்கும் திட்டங்களேயில்லாத அன்றாட வாழ்க்கைக்கே சனத்தொகையில் பெரும்பங்கு அல்லற்படும் முதலாளித்துவ அமெரிக்காவிற்கு நீங்கள் ஏன் சென்றீர்கள் என்பதுதான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப்போரில் தமிழ் மக்கள் மிகவும் உணர்வு பூர்வமான ஒரு நிலையில் இருந்த காலம் தியாகி திலீபனின் உண்ணாவிரதமிருந்த காலகட்டம்தான், மக்கள் தம் கண் முன்னே ஒருவரின் மரணத்தின் சாட்சியாக இருந்து, தம்மால் ஒன்றும் செய்ய இயலாது என்ற நிலையில் அவர்களிடமிருந்து ஏற்பட்ட இயலாமையினால் உருவான கோபம் ஒரு மக்கள் புரட்சியாக வெடித்து விடும் நிலையில் இருந்தது, தியாகப்பயணத்தில் திலீபனுடன் 12 நாட் கள் என்னும் நூலை (நூலின் தலைப்பு தவறாக இருக்கலாம்) மு வே யோ வாஞஞிநாதன் எழுதியநூலை கட்டாயம் ஒருதடவையாவது வாசித்தால் அந்த நேரம் மக்களின் மனநிலை எவ்வாறிருந்தது என்பதை உணரலாம்,தியாகி திலீபனை அன்று பெரியவர்கள் தமது மகனாகப்பார்த்தார்கள், இளையவர்கள் தமது சகோதரனாகப்பார்த்தார்கள், புலியாகவோ அல்லது போராளியாகவோ அல்ல.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மீதான கொலை முயற்சி தியாகி திலீபனின் உண்ணாவிரதத்திற்கு முன்பாக ஒரு முறையும் (மற்றவர்கள் கூறகேட்டது) புலேந்திரன் குமரப்பா உட்பட 12 போராளிகளின் மரணத்தை தொடர்ந்து வடமராட்சிக்கு சென்ற புலிகளின் தலைவரை கொலை செய்ய இரண்ட்டாவது முறையாக முயற்சி செய்யப்பட்டது.
தியாகி திலீபன் மரணம், பன்னிரு போராளிகள் மரணம் தமிழ் மக்களின் போராட்ட தலமைய அழிக்க முற்பட்ட நிலை அனைத்தும் விடுதலைப்புலிகளின் தலைவருக்கு இந்திய இராணுவத்திற்கெதிராக போரிட வேண்டும் என்றும் அதற்கு உடன்பாடில்லாதவர்கள் தாரளமாக விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து விலகி செல்லலாம் என்று கூறப்பட்டதாம் அதில் பல போராளிகள் அமைப்பிலிருந்து விலகி சென்றார்களாம் அதில் பசீர் காகாவும் ஒருவர் (மற்றவர்கள் கூறகேட்டது).

இங்கு பல கருத்தாளர்களின் உணர்வுகள் புரிந்து கொள்ளக்கூடியதாகவுள்ளது அஞ்சலி செலுத்துவர்களின் மேல் சேறு பூசுவதினூடாக மறைமுகமாக தியாகி திலீபனை கொச்சைப்படுத்துவதாகவுள்ளது.
90 களில் (கால கட்டம் சரியாகநினைவில்லை)பிரித்தானியாவினால் மாகாத்மா காந்தி இந்திய சுதந்திரப்போராட்ட காலத்தில் பிரித்தானிய காலனித்துவ அரசிற்கு எழுதிய கடிதங்களை வெளியிடுவதற்கெதிராக அங்கு வாழ்ந்த இந்திய மக்களினால் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது ( பல சர்ச்சைக்குரிய கடிதங்கள்) 

நேரடியாக தியாகி திலீபனின் மேல் சேறு பூசுவதற்கு ஒன்றுமில்லாவிட்டால் என்ன அவருக்கு அஞ்சலி செலுத்துபவர்கள் அயோக்கியர்கள் என்பதினூடாக கட்டுரையாளர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரிகிறது, ஆனால் அதற்காக இவ்வளவு மோசமாக கீழ்த்தரமாக தரம்தாள வேண்டுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

அஞ்சலி செலுத்துபவர்கள் அயோக்கியர்கள் என்பதினூடாக கட்டுரையாளர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரிகிறது

இன்னும் பத்து வருடங்களில் ராஜபக்‌ஷக்களில் நாமல் போன்ற ஒருவர் முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்த வந்தால் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருப்போமா?

பழைய விடயங்களை மறப்போம் என்றால் இனப்படுகொலை கூட விரைவில் மறக்கப்படும். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

உலக அரசியலில் யார் சுத்தம் எண்டு ஒருக்கால்  சொல்லுங்கோ பாப்பம் தங்கச்சி?
 

இதை எப்பவுமே நினைவில் வைத்திருந்தால் நல்லது அண்ணா 

 

12 hours ago, ரஞ்சித் said:

அவர் மனிதவுரிமை மீறல்களில் ஈடுபடவில்லையென்பதை எவரும் நம்பவில்லை. ஆனால், அவர்மீதான குற்றச்சாட்டுக்களை ஆதாரங்களுடம் இங்கே எழுதினால் இக்கட்டுரைபற்றிய தெளிவு கிடைக்கும் என்கிற நோக்கிலேயே எழுதப்பட்டது.

அவ்வாறே முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் மீதான எழுந்தமானமாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டும். தான் எழுதும் அபத்தமான விமர்சனத்திற்கு வலுச் சேர்ப்பதற்காக மட்டுமே போகிறபோக்கில் புலிச் சந்தேக நபர்களுக்கு அதியுட்ச தண்டனைகளை அவர் வாங்கிக்கொடுத்தார் எனும் கட்டுரையாளரின் விசமத்தனத்திற்கான ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டால் படிப்பவர்களுக்கு இக்கட்டுரையின் உண்மைத்தன்மை புரியும் என்பதனாலேயே அது கேட்கப்பட்டது.

மற்றும்படி சுரேஷின் கடந்தகாலம் பற்றிப் பலருக்கும் தெளிவான பார்வையே இருக்கிறது.

ஓ அப்படியா சம்/சும்  பற்றி இப்படி கட்டுரை யாராவது கொண்டு வந்து இணைத்து நான் ஆதாரம் கேட்டால் நீங்கள் தருவீர்களா?
விக்கி அரசியலுக்கு வருகிறார் என்றவுடன் அவர் நீதிபதியாய் இருக்கும் போது  புலிகளுக்கு கொடுத்த தண்டனைகள் பற்றிய பதிவுகள் இதே யாழில் இருக்கு ...உங்களுக்கு நேரம் இருந்தால் தேடிப் பாருங்கள்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

இன்னும் பத்து வருடங்களில் ராஜபக்‌ஷக்களில் நாமல் போன்ற ஒருவர் முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்த வந்தால் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருப்போமா?

பழைய விடயங்களை மறப்போம் என்றால் இனப்படுகொலை கூட விரைவில் மறக்கப்படும். 

மன்னிப்பு கேட்டு தமிழருக்கு சுய ஆட்சி தந்தால் ஏற்போம்,

உலகில் உள்ள அத்தனை நாடுகளின் அரச கரங்களிலும் கறை படிந்திருக்கு,

பூர்வ குடிகளை கொலைசெய்துவிட்டு, நல்லவர்களாக நடமாடும் வேஷதார உலகமிது

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

இதை எப்பவுமே நினைவில் வைத்திருந்தால் நல்லது அண்ணா 

இதை வைச்சு வேறை எங்கையும் மடக்கிற பிளான் போலை கிடக்கு...😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரஞ்சித் said:

சக கருத்தாளரை உளரீதியாகத் தாழ்த்தி, அவர் தொடர்ந்தும் எழுதுவதைத் தடுக்க சிலர் பயன்படுத்தும் இருவிடயங்கள்தான் "உணர்ச்சிவசப்பட்டு எழுதுகிறீர்கள்" அல்லது "பந்தி பந்தியாக எழுதுகிறீர்கள்" என்னும் பதங்கள். ஆனால், அதையே தாம் செய்யும்போது அறிவாளிகளாக, மேதைகளாக தம்மைக் காட்டுவதற்குச் செய்வார்கள். ஆகவே இதுபற்றி நான் அலட்டிக்கொள்ளப்போவதில்லை.

நீங்கள் சொல்லும் சோஷலிசத்தினால் ஏற்படுத்தப்பட்ட நல்ல மாற்றங்கள் அங்கே இன்றும் நடைமுறையில் உள்ளன, ஆனால் சோசலிசம்தான் அங்கு தற்போது இல்லை. அதற்குக் காரணம் என்னவென்பதையும் நீங்களே கூறிவிடுங்கள். 

நான் அனுபவித்த அதே நலன்களைத்தான் நீங்களும் அனுபவித்திருப்பீர்கள். ஆனால் எனது கேள்வியென்னவென்றால், உலகின் மிகப்பலமான பொருளாதாரத்தையும், சோசலிசத்தின் மிகச்செழிப்பான மக்கள் நலத் திட்டங்களையும் கொண்டிருக்கும் இலங்கை சோசலிச ஜனநாயகக் குடியரசிலிருந்து புலம்பெயர்ந்து, உலகில் மிக வறிய நாடுகளில் ஒன்றாகவும், கல்விக்கும், மருத்துவத்திற்கும் திட்டங்களேயில்லாத அன்றாட வாழ்க்கைக்கே சனத்தொகையில் பெரும்பங்கு அல்லற்படும் முதலாளித்துவ அமெரிக்காவிற்கு நீங்கள் ஏன் சென்றீர்கள் என்பதுதான். 

பந்தி பந்தியாக எழுதுவதை நான் ஊக்குவிக்கிறேன், ஆனால் கேட்ட கேள்வியை புரிந்து கொள்ளாமல் எழுதுவது தான் அவசியமற்றது என்கிறேன். இதில் உங்களை தாழ்த்துகிறேன் என்று எங்கே தோற்றம் தெரிகிறதோ நானறியேன்.

என்னுடைய கேள்வியின் அர்த்தம் புரியாததால் தான் அந்த "நீ ஏன் அமெரிக்காவில் இருக்கிறாய்" என்ற கடைசிப் பந்தி! நான் அமெரிக்காவில் இருந்து கொண்டு சோசலிசம் அழிவு என்று பேசினால் அது நல்ல கேள்வி! அப்படியா நான் சொல்கிறேன்? அமெரிக்காவில் படிக்க வந்த நான் என் வேலை பிடித்துக் கொண்டதால் இருக்கிறேன். முதலாளித்துவம் பிடித்துக் கொண்டதால் அல்ல! இதெல்லாம் பேசு பொருளாக வருமளவுக்கு உங்கள் புரிதல் இருக்கிறது! அதிசயம் தான்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

இதை வைச்சு வேறை எங்கையும் மடக்கிற பிளான் போலை கிடக்கு...😁

சந்தர்ப்பம் வரும் வரை காத்துகிட்டு இருப்பேன் 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

என்னுடைய கேள்வியின் அர்த்தம் புரியாததால் தான் அந்த "நீ ஏன் அமெரிக்காவில் இருக்கிறாய்" என்ற கடைசிப் பந்தி! நான் அமெரிக்காவில் இருந்து கொண்டு சோசலிசம் அழிவு என்று பேசினால் அது நல்ல கேள்வி! அப்படியா நான் சொல்கிறேன்? அமெரிக்காவில் படிக்க வந்த நான் என் வேலை பிடித்துக் கொண்டதால் இருக்கிறேன். முதலாளித்துவம் பிடித்துக் கொண்டதால் அல்ல! இதெல்லாம் பேசு பொருளாக வருமளவுக்கு உங்கள் புரிதல் இருக்கிறது! அதிசயம் தான்! 

பொருளாதார நலன்களுக்காகத்தான் இருக்கிறேன் என்பதை ஒத்துக்கொள்ளுங்கள். வேலை பிடித்துவிட்டது அதனால் இங்கிருக்கிறேன் என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர். இதே உங்கள் மனதுக்கு பிடித்த வேலையை சிறிலங்கா பல்கலைக்கழகங்களிலும் செய்யலாம் அது சோஷலிச ஜனநாயக குடியரசு என்று நீங்கள் நம்பினால்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

பந்தி பந்தியாக எழுதுவதை நான் ஊக்குவிக்கிறேன், ஆனால் கேட்ட கேள்வியை புரிந்து கொள்ளாமல் எழுதுவது தான் அவசியமற்றது என்கிறேன். இதில் உங்களை தாழ்த்துகிறேன் என்று எங்கே தோற்றம் தெரிகிறதோ நானறியேன்.

என்னுடைய கேள்வியின் அர்த்தம் புரியாததால் தான் அந்த "நீ ஏன் அமெரிக்காவில் இருக்கிறாய்" என்ற கடைசிப் பந்தி! நான் அமெரிக்காவில் இருந்து கொண்டு சோசலிசம் அழிவு என்று பேசினால் அது நல்ல கேள்வி! அப்படியா நான் சொல்கிறேன்? அமெரிக்காவில் படிக்க வந்த நான் என் வேலை பிடித்துக் கொண்டதால் இருக்கிறேன். முதலாளித்துவம் பிடித்துக் கொண்டதால் அல்ல! இதெல்லாம் பேசு பொருளாக வருமளவுக்கு உங்கள் புரிதல் இருக்கிறது! அதிசயம் தான்! 

நம்பீட்டன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

சந்தர்ப்பம் வரும் வரை காத்துகிட்டு இருப்பேன் 🙂

அது நடக்காது தங்கச்சி நடக்காது.
 இந்த அண்ணன் இங்கே கோசான் மற்றும் ஜஸ்டின், துல்பன் போன்ற ஜாம்பவான்களுடன் போராடியிருக்கின்றான். போர்க்கள அனுபவங்கள் அண்ணனுக்கு எக்கச்சக்கம். பகல் கனவு காணாத தங்கச்சி பகல் கனவு காணாத.... :cool:

Tamil comedians vadivelu Reactions

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரஞ்சித் said:

நம்பீட்டன்

மிக்க நன்றி ரஞ்சித் நம்பினதுக்கு! உங்களைப் போல நாலு பெரியமனுசர் நம்பினாத் தான் எனக்கு சோறு, இல்லயேல் சேறு தான்! 😇

2 hours ago, Eppothum Thamizhan said:

பொருளாதார நலன்களுக்காகத்தான் இருக்கிறேன் என்பதை ஒத்துக்கொள்ளுங்கள். வேலை பிடித்துவிட்டது அதனால் இங்கிருக்கிறேன் என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர். இதே உங்கள் மனதுக்கு பிடித்த வேலையை சிறிலங்கா பல்கலைக்கழகங்களிலும் செய்யலாம் அது சோஷலிச ஜனநாயக குடியரசு என்று நீங்கள் நம்பினால்??

இனி உங்களுக்கு "பாலர் தமிழில்" இருபது பந்தியில எழுதி விளக்க முடியுமா எனக்கு? எதையாவது விரும்பியதை நம்பி விட்டுப் போங்கள்! எனக்கு நேரம் மிச்சமல்லவா?😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Justin said:

இனி உங்களுக்கு "பாலர் தமிழில்" இருபது பந்தியில எழுதி விளக்க முடியுமா எனக்கு? எதையாவது விரும்பியதை நம்பி விட்டுப் போங்கள்! எனக்கு நேரம் மிச்சமல்லவா?😊

சும்மா சப்பைக்கட்டு கட்டாமல் உண்மையை ஒத்துக்கொள்ள பழகுங்கள். இதில மற்றவர்களுக்கு அட்வைஸ் வேற!! 

"வேலை பிடித்துக்கொண்டதால் இங்கிருக்கிறேன்" இந்தத்தமிழ் பாலர் தமிழ்தான்.எல்லோருக்கும் விளங்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/9/2020 at 11:20, கிருபன் said:

ரஞ்சித்,

பதிவுகளை இணைப்பது அவற்றைப் பற்றிக் கருத்தாடலையும் விமர்சனங்களையும் வைக்கத் தூண்டத்தான். இல்லாவிட்டால் கருத்துக்களம் எதற்கு? 

கருத்துக்கள் வைப்பதன் மூலம் கசப்புணர்வு வருவதற்கு உணர்ச்சிவசப்படுவதுதான் காரணம். 

 

இந்த பொன் வாய்தான் சீமானின் திரியை பூட்ட வேண்டும் என்று 
தெய்வவாக்கு உதிர்த்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

இந்த பொன் வாய்தான் சீமானின் திரியை பூட்ட வேண்டும் என்று 
தெய்வவாக்கு உதிர்த்தது.

வெறுப்பரசியல் செய்யும் கட்சிக்கு இலவச விளம்பரம் செய்யும் பிரச்சார திரி யாழில் கருத்தாடலைத் தூண்டுகின்றதா? வெறும் பஜனைதான் அந்தத் திரியில் நடக்கின்றது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை, மருதர்😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

வெறுப்பரசியல் செய்யும் கட்சிக்கு இலவச விளம்பரம் செய்யும் பிரச்சார திரி யாழில் கருத்தாடலைத் தூண்டுகின்றதா? வெறும் பஜனைதான் அந்தத் திரியில் நடக்கின்றது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை, மருதர்😁

சும்மா பின்னிடிங்க போங்க 
எந்த ஆதரமமுமற்ற வெறும் வாந்திகளை சுமந்திருக்கும் 
ஒரு வெறுப்பு கட்டுரையை காவிவந்து வக்காலத்து வாங்கிக்கொண்டு 
இப்படியும் கூசாமல் எழுதலாம் என்று உங்களிடம்தான் கற்றுக்கொள்ள முடியும். 

அதை விடுங்கள் ... நீங்கள் எழுதிதானால்தான் சூரியன் உதிக்கும் என்று 
ஏதாவதொரு நிலை இருந்தால்தான் அதைப்பற்றி நான் அக்கறை கொள்ளவேண்டும் 

இந்த கின்னி மின்னி புத்தகம் வாசித்தீர்களா?
இது பற்றி அறிய விரும்புகிறேன் ஏதும் மேலதிக தகவல் தெரியுமா? 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

வெறுப்பரசியல் செய்யும் கட்சிக்கு இலவச விளம்பரம் செய்யும் பிரச்சார திரி யாழில் கருத்தாடலைத் தூண்டுகின்றதா? வெறும் பஜனைதான் அந்தத் திரியில் நடக்கின்றது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை, மருதர்😁

இலங்கையில் மகிந்த கொம்பனிதான் வெறுப்பரசியல் செய்கிறார்கள். எங்கோ இருப்பவர்கள் எமது தமிழினம் என ஆதங்கப்பட்டால் அது வெறுப்பரசியல்.

இவர் இது வரைக்கும் இலங்கையில் நடக்கும் அட்டூழியங்களுக்கு வாயே திறக்கமாட்டார்.ஆனால்......எண்டவுடனை  எரிய வெளிக்கிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

இலங்கையில் மகிந்த கொம்பனிதான் வெறுப்பரசியல் செய்கிறார்கள். எங்கோ இருப்பவர்கள் எமது தமிழினம் என ஆதங்கப்பட்டால் அது வெறுப்பரசியல்.

இவர் இது வரைக்கும் இலங்கையில் நடக்கும் அட்டூழியங்களுக்கு வாயே திறக்கமாட்டார்.ஆனால்......எண்டவுடனை  எரிய வெளிக்கிடும்.

ஏன் அண்ணே இலங்கை இந்தியா என்று ஏரோப்பிளேன் ஏறுறீர்கள் 
நீங்கள் நிற்கும் 
இந்த கட்டுரை என்ன வடிவம்?

எல்லவற்றையும் மன்னர்கள்தான் முடிவெடுப்பார்கள் 
நாங்கள் ஆமாம் மன்னா போட்டால் சரி 

அவர்கள் அது வெறுப்பு அரசியல் என்றால் 
அது அப்பிடித்தான் ... ஏன் எதுக்கு என்று காரணம் எல்லாம் கேட்க கூடாது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Maruthankerny said:

எந்த ஆதரமமுமற்ற வெறும் வாந்திகளை சுமந்திருக்கும் 
ஒரு வெறுப்பு கட்டுரையை காவிவந்து வக்காலத்து வாங்கிக்கொண்டு 
இப்படியும் கூசாமல் எழுதலாம் என்று உங்களிடம்தான் கற்றுக்கொள்ள முடியும்

ஆதாரங்களை தந்தால் மட்டும் ருசித்துப் புசிப்பீர்களா? 😁பிடிக்காததை வாந்தி என்று சொல்லிக்கொண்டுதானே இருப்பீர்கள்.

சுரேஷ் பிரேமச்சந்திரன் இந்திய ஆக்கிரமிப்புக் காலத்தில் என்ன செய்தார் என்று உங்களுக்கும் தெரியும். அவர் இப்போது தேசியவாதி. ஆனால் அவருக்கு அப்போது தலைவராக இருந்த பத்மநாபா தமிழின துரோகி.  ஆனால் எனக்கு இருவரும் ஒன்றுதான்.

அதே மாதிரி விக்கியர் 2009 க்கு முன்னர் என்ன செய்தார் என்பதும் கற்பனை அல்ல.

 

7 hours ago, Maruthankerny said:

இந்த கின்னி மின்னி புத்தகம் வாசித்தீர்களா?
இது பற்றி அறிய விரும்புகிறேன் ஏதும் மேலதிக தகவல் தெரியுமா? 

இல்லை. நேரம் கிடைக்கும்போது பார்க்கின்றேன்

6 hours ago, குமாரசாமி said:

இவர் இது வரைக்கும் இலங்கையில் நடக்கும் அட்டூழியங்களுக்கு வாயே திறக்கமாட்டார்.ஆனால்......எண்டவுடனை  எரிய வெளிக்கிடும்.

இவர் என்று யாரைச் சொல்லுகின்றீர்கள்? 

சும்மா கருத்து எழுதுகின்றேன் என்று குதர்க்கமாக எழுதுவதன் மூலம் கிச்சுகிச்சு மூட்டுவதை நானும் ரசிப்பதுண்டு.

அது என்னைச் சுட்டினால் பச்சைப்பொய் என்று  உங்களுக்கே தெரியும் 😁

இனியொரு இணையதளத்தை என்றால் அங்கு உள்ள கட்டுரைகளின் தலைப்புக்களை மட்டும் படித்தாலே விளங்கும்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.