Jump to content

தமிழின் பார்வையில் மூலமொழி ஆய்வு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழின் பார்வையில் மூலமொழி ஆய்வு

இந்தியா தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் மூலமொழி ஆய்வு தொடர்பான தொடர் சொற்பொழிவு எதிர்வரும் 26.09.2020 சனிக்கிழமை நடைபெறவுள்ளது. அன்றைய சொற்பொழிவில்,

அண்டம் எனத் தமிழில் கூறுவதை ஆங்கிலத்தில் Universe என்பர். Universe ஆகிய இம் மேலை இந்தோ ஐரோப்பியச் சொல்லின் வரலாற்றினை விளக்குவதே இச்சொற்பொழிவாகும்.

மேலும் ‘ஒன்று-வட்டம்’ ஆகிய இரண்டு தமிழ்ச் சொற்களின் திரிபே universe சொல். இக்கருத்தை முனைவர் கு.அரசேந்திரன் மூலமொழி ஆய்வில் விளக்குகிறார்.

ஒன்று-ஒன்னு என்ற தமிழ் பத்துப் பதினைந்தாயிரம் ஆண்டின் முன்  மேற்கில் oi-no என ஓர் தொல் இந்தோ ஐரோப்பிய வடிவமாக(Proto Indo European form)  மாறியது. இந்த oi-no பிறகு இலத்தீனில் unus என்று திரிந்து அதே ஒன்றினைக் குறித்தது.

வட்டம் என்ற வளைவைக் குறிக்கும் தமிழ்ச்சொல் wer என தொல் இந்தோ ஐரோப்பிய வடிவமாக மாறி அதே வளைவுப் பொருளில் இலத்தீனில் versus எனத் திரிந்தது. versus ஆகிய இவ் வளைவு verse எனத் திரிந்து ஆங்கிலம் ஆகியது.

ஒன்று ஆகிய unus சொல்லும்  verse ஆகிய வளைவுச் சொல்லும் சேர்ந்தே இறுதியில் universe என்ற  சொல்வடிவம்  ஆகியது. turn in to one என்பதே universe சொல்லின் மூலப் பொருளாகும்.”ஒன்று -unus” ஆகி” வட்டம்-vert-verse எனவாகி இரண்டும் சேர்ந்து universe ஆனதை ஓர் மெய்யியல் உரையாக 26.09.2020 அன்று நடைபெறும் தொல்லாய்வில் விளக்குகின்றார்.

 

நிகழ்வு நடைபெறும் நேரம்:

அவுஸ்திரேலியா நேரம்: இரவு  22:00 மணி (AEST)

மலேசியா / சிங்கப்பூர் நேரம்: மாலை 20:00 மணி (SST)

இந்தியா / இலங்கை நேரம் : மாலை  17:30 மணி (IST)

இங்கிலாந்து நேரம்: பிற்பகல் 13:00 மணி (BST)

அமெரிக்கா நேரம்: காலை 08:00 (EST)

இந்த சொற்பொழிவு நேரலையாக நடைபெறவுள்ளது. இதற்கான இணையவழி தொடர்புகளுக்கு:

நேரலை: facebook.com/NostraticTamil

சொல்லாய்வில் பங்கேற்க மற்றும் கூடுதல் தகவலுக்கு கீழ் உள்ள சமூக ஊடக தளங்களில் இணையலாம்.

FaceBook: facebook.com/NostraticTamil

Twitter: twitter.com/NostraticTamil

Website: nostratictamil.com

YouTube: youtube.com/channel/UC-4MgLJ4K3anle5KJoy-noA

 

http://www.ilakku.org/தமிழின்-பார்வையில்-மூலமொ/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.