Jump to content

எம்மின விடுதலைக்காய் பசித்திருந்தவனை நினைந்து, நாமும் அரைநாள் பசித்திருப்போம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எம்மின விடுதலைக்காய் பசித்திருந்தவனை நினைந்து, நாமும் அரைநாள் பசித்திருப்போம்! – சீமான் பேரழைப்பு

உலகெங்கும் வாழும் தாய்த்தமிழ் உறவுகளுக்கு,

வணக்கம்!

ஈழ நிலத்தில் நிகழ்த்தப்பட்ட தமிழர் இனப்படுகொலைக்கு எதிராகவும், பன்னாட்டுச் சமூகத்திடம் தமிழ்த்தேசிய இனத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியையும், தமிழர்கள் பக்கம் நிற்கும் தார்மீக நியாயத்தையும் உணர்த்தும் பொருட்டும் இந்திய வல்லாதிக்கத்தின் ஆழ்ந்த அமைதியைக் கலைக்க 12 நாட்கள் நீர்கூட அருந்தாது பட்டினிப்போராட்டத்தை முன்னெடுத்து உயிர்நீத்த ஈகைப்பேரொளி நம்முயிர் அண்ணன் லெப்டினட் கேணல் திலீபன் அவர்களது 33வது நினைவு நாளை அனுசரித்துப் போற்றுவதற்குச் சிங்களப் பேரினவாத அரசு ஈழ நிலம் முழுமைக்கும் தடை விதித்திருக்கிறது. காற்றோடு கலந்து நமது மூச்சோடு உலவிக் கொண்டிருக்கிற மாவீரர்களின் சுவாச நெருப்பு நமது நெஞ்சத்துக்குள் கனன்று கொண்டிருக்கிற விடுதலைவேள்விக்கு உரமூட்டி வளர்ப்பதை எந்த அதிகாரவர்க்கத்தின் ஒடுக்குமுறையாலும் தடையிட்டு முடக்கிவிட முடியாது.

அடக்குமுறைகள் மூலம் அன்னைத்தமிழினத்தின் பேரெழுச்சியைத் தடுக்க முற்படும் சிங்களப்பேரினவாதத்திற்குப் பாடம் புகட்டவும், உலக அதிகார வர்க்கத்துக்குத் தமிழர்களின் ஓர்மையைப் பறைசாற்றவும் முன்பைவிடப் பன்மடங்குப் பேரெழுச்சியோடு அண்ணன் திலீபன் அவர்களது நினைவேந்தலை உலகெங்கும் வாழும் தமிழர்கள் ஒவ்வொருவரும் தங்கள் இல்லங்களில் முன்னெடுத்துப் போற்ற வேண்டியது ஒவ்வொரு தமிழரின் பெருங்கடமையாகிறது. உலகின் ஒப்பற்றத் தியாகமாய் ஒரு சொட்டு நீராகாரம்கூட அருந்தாமல் வீரமரணம் அடைந்த ஈகைச்சுடர் அண்ணன் திலீபன் அவர்களது உன்னதத்தியாகத்தின் இறுதி நாளாகத் திகழும் செப்டம்பர் 26, சனிக்கிழமை அன்று அவரது திருவுருவப்படம் வைத்து, மலர் தூவி, சுடரேற்றி காலை 06 மணி முதல் மாலை 06 மணிவரை, 12 மணிநேரங்கள் அந்த ஒப்பற்ற மாவீரனின் ஈகத்தைப் போற்றும் வகையில், உலகெங்கும் வாழும் ஒட்டுமொத்தத் தமிழர்களும் உண்ணாநிலையை மேற்கொண்டு அவரது இலட்சியத்தாகத்தை நிறைவேற்றிட உறுதியேற்போம்.

எம்மின விடுதலைக்காய் பசித்திருந்தவனை நினைந்து,
நாமும் அரைநாள் பசித்திருப்போம்!


– செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

 

எம்மின விடுதலைக்காய் பசித்திருந்தவனை நினைந்து, நாமும் அரைநாள் பசித்திருப்போம்! - சீமான் பேரழைப்பு

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாசிபருப்பில் ஒரு இனிப்பான அல்வா .........!  👍
    • நீ வா என்றது உருவம்  நீ போ என்றது நானம் ........!  😍
    • வணக்கம் வாத்தியார்.........! ஆண் : மீனம்மா… அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே பெண் : அம்மம்மா முதல் பாா்வையிலே சொன்ன வாா்த்தை எல்லாம் ஒரு காவியமே ஆண் : சின்னச் சின்ன ஊடல்களும் சின்னச் சின்ன மோதல்களும் மின்னல் போல வந்து வந்து போகும் பெண் : ஊடல் வந்து மோதல் வந்து முட்டிக் கொண்டபோதும் இங்கு காதல் மட்டும் காயமின்றி வாழும்   ஆண் : ஒரு சின்னப் பூத்திாியில் ஒளி சிந்தும் ராத்திாியில் இந்த மெத்தை மேல் இளம் தத்தை போல் புது வித்தை காட்டிடவா பெண் : ஒரு ஜன்னல் அங்கிருக்கு தென்றல் எட்டிப் பாா்ப்பதற்கு அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டுத் தீண்டுவதா ஆண் : மாமன்காரன் தானே மாலை போட்ட நானே மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம் மீனம்மா…மழை உன்னை நனைத்தால் இங்கு எனக்கல்லவா குளிா் காய்ச்சல் வரும் பெண் : அம்மம்மா வெயில் உன்னை அடித்தால் இங்கு எனக்கல்லவா உடல் வோ்த்து விடும் ஆண் : அன்று காதல் பண்ணியது உந்தன் கன்னம் கிள்ளியது அடி இப்போதும் நிறம் மாறாமல் இந்த நெஞ்சில் நிற்கிறது பெண் : அங்கு பட்டுச் சேலைகளும் நகை நட்டு பாத்திரமும் உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே அது கண்ணில் நிற்கிறது ஆண் : ஜாதிமல்லிப் பூவே தங்க வெண்ணிலாவே ஆசை தீரவே பேசலாம் முதல் நாள் இரவு பெண் : அம்மம்மா உன்னை காதலித்து புத்தி பேதலித்து புஷ்பம் பூத்திருக்கு .......! --- மீனம்மா அதிகாலையிலும் ---
    • பணத்துக்கு ஆசைப்பட்டு ரஷ்ய, உக்ரைன் போரில் பங்குபற்றுகிறார்கள் போலுள்ளது.
    • பையா உங்கள்மீது எனக்கும் பிரியனுக்கும் மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு அதனால் உங்களைத் தனியே தவிக்க விட மாட்டோம் .......இப்ப நான் வந்திருக்கிறேன் ......இனி அவர் வருவார் கடைசியில் நிற்கும் போட்டிக்கு........யோசிக்க வேண்டாம்.......!  😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.