Jump to content

மறைந்தார் பாட்டு தலைவன் எஸ்.பி.பி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டுப் பெருந்தலைவன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலும்.. புகழஞ்சலியும். 

SP Balasubrahmanyam: Legendary Indian singer dies

SP Balasubrahmanyam

Renowned Indian singer SP Balasubrahmanyam, a Guinness world record holder for his more than 40,000 songs over 50 years, has died aged 74.
 
Link to comment
Share on other sites

  • Replies 74
  • Created
  • Last Reply

கண்ணீர் அஞ்சலிகள்!!! :(

உங்களை போன்ற பாடகர் இனி பிறந்து வந்தால் தான் உண்டு. நீங்கள் பாடிய அத்தனை பாடல்களும் முத்துக்கள். நீங்கள் எமக்காக விட்டுசென்ற பாடல்கள் காலத்தால் அழியாமல் என்றும் எம்முடன் இருக்கும். 

உங்களின் ஆத்ம சாந்திக்காக இறைவனை வேண்டுகின்றோம்.

Link to comment
Share on other sites

 

அற்புத கலைஞர் பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு இதய அஞ்சலிகள். அவரின் பாடல்கள்  என்றென்றும் அழியாதவை.  Good bye sir.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

SPB. அவர்களின் இறுதி சடங்கின் முன் ரிஹானாவின் கண்ணீருடன் ஒரு பாடல்

 

😢😓

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.ripbook.com/32602035/notice/111623?ref=ls_d_obituary

இந்தியா நெல்லூரைப் பிறப்பிடமாகவும், தமிழ்நாடு சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட  எஸ். பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் 25-09-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

 

அன்னார், சாவித்திரி அவர்களின் அன்புக் கணவரும், எஸ்.பி.சரண், பல்லவி ஆகியோரின் அன்புத் தந்தையும், எஸ்.பி.சைலஜா, ஜகதேஷ் பாபு ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இசை ஆர்வத்தை இளவயதிலேயே வளர்த்து, தன் தந்தை ஹரிஹதத்தை வாசிக்கும் பொழுது கவனித்து கற்று, இசை கருவிகளை வாசிக்கவும் தேர்ச்சி பெற்றார். அதில் குறிப்பிடத்தக்க கருவிகள் என்றால் ஹார்மோனியம் மற்றும் புல்லாங்குழல் ஆகும். இவர் பொறியாளர் ஆக வேண்டும் என்ற நோக்கத்தோடு ஜே.என்.டி.யு பொறியியல் கல்லூரி, அனன்டபூரில் மாணவனாக சேர்ந்தார்.

 

1964 ஆம் ஆண்டு அமெட்டூர் பாடகர்கள் ஏற்பாடு செய்திருந்த சென்னையை மையமாக கொண்ட தெலுங்கு கலாச்சார நிறுவனம் நடத்திய இசை நிகழ்ச்சியில் எஸ்.பி.பி முதல் பரிசு பெற்றார்.

 

ஆரம்பகாலத்தில் மெல்லிசைக் குழு ஒன்று நடத்தி வந்தார். இதில் பங்கு பெற்றவர்களில் குறிப்பாக இளையராஜா (ஹிட்டார் பிறகு ஹார்மோனியம்), அனிருதா (ஹார்மோனியம்), பாஸ்கர் (percussion) மற்றும் கங்கை அமரன் (ஹிட்டார்) ஆகியோராவர். இவர்களோடு சேர்ந்து எஸ்.பி.பி இசை நிகழ்ச்சிகளையும் நாடககச்சேரிகளில் பாடல்கள் பாடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தார். எஸ் பி கோதண்டபானி மற்றும் கண்டசாலா நடுவராக இருந்து பங்குபெற்ற பாட்டுப்போட்டியில் எஸ்.பி.பி சிறந்த பாடகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அடிக்கடி இசையமைப்பாளர்களை சந்திப்பதும், பாட வாய்ப்பு கேட்பதுமாக இருந்த எஸ் பி பிக்கு முதல் போட்டி பாடல் பி. பி. ஸ்ரீனிவாஸ் பாடிய நிலவே என்னிடம் நெருங்காதே என்ற பாடலாகும்.

 

இவர் நாற்பதாயிரம் பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார். ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்றிருக்கிறார். எஸ்.பி.பி முறையாக கர்நாடக இசையைப் பயின்றது இல்லை என்றாலும் சங்கராபரணம் என்ற படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றார்.

 

இதுவரை தேசிய விருதினை நான்கு மொழிகளுக்குப் பெற்ற ஒரே திரைப்படப் பின்னணிப் பாடகர் இவர் ஒருவரே. பிலிம்பேர் விருதினை ஒரு முறையும் பிலிம்பேர் விருது (தெற்கு) மூன்று முறையும் பெற்றுள்ளார். மேலும் இவர் தமிழக மற்றும் கர்நாடக அரசுகளின் பல மாநில விருதுகளும் ஆந்திர அரசின் நந்தி விருதினை 25 முறையும் பெற்றார். இவர் 1981 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றிருக்கிறார்.

 

எஸ்.பி.பி எந்த பாடகரும் செய்யாத சாதனைகளை இந்திய திரையிசையில் செய்திருக்கிறார். இவர் 1981 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதி கர்நாடகா, பெங்களூரில் உள்ள பதிவரங்கில் காலை 9 மணியில் இருந்து இரவு 9 மணி வரை ஒரே நாளில் 21 பாடல்களை கன்னட மொழி இசையமைப்பாளர் உபேந்திர குமாருக்காக பாடி சாதனை செய்துள்ளார். மேலும் தமிழ் மொழியில் 19 பாடல்களையும்(ஒரே நாளில்), இந்தி மொழியில் 16 பாடல்களையும்(6மணி நேரத்தில்) பாடி சாதனை செய்திருக்கிறார். இவைகளெல்லாம் இவருடைய குறிப்பிடத்தக்க சாதனைகளாகும்.

 

தனது காந்த குரலால் மக்களின் மனங்களை வென்ற எஸ். பி. பாலசுப்பிரமணியம் அவர்களின் மறைவிற்கு RIPBOOK, சினி உலகம் இணையத்தளங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், அவர் நலம் விரும்பிகள் அனைவரின் துயரிலும் பங்கெடுத்துக்கொள்கிறது.

 

 

 

Link to comment
Share on other sites

உலகெங்கும் தமிழை தனது குரல் வளத்தால் வளர்த்தவருக்கு எனது நன்றிகள். 

நீங்கள் மறைந்தாலும் உங்கள் படைப்புக்கள்  தமிழை வளர்க்கும். 

ஆழ்ந்த அனுதாபங்கள்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிகரில்லாத பாட்டுத் தலைவனுக்கு  என்  கண்ணீரஞ்சலிகள் .உங்கள் பாடல்கள் வாழும வரை உங்கள் புகழ் வாழும்.தமிழ் கூறும் நல்லுலகுக்கும் இசையை ரசிப்பவர்களுக்கும்  பேரிழப்பு  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild

கடைசி புகைப்படம்.-💔 

Bild

Link to comment
Share on other sites

எமக்காக பாடிக்கொண்டிருந்த நிலா இனி கொஞ்சம் உறங்கட்டும். நீங்கள்  சென்றாலும் உங்கள் பாடல்கள் என்றும் எம்மோடு வாழும். சென்று வாருங்கள். 

மக்கள் திலகத்திற்காக எஸ்பி பாலாவின் முதற்பாடல். 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

கடைசி புகைப்படம்.-💔 

Bild

வாய் நிறைய... புன் சிரிப்புடன், வாழ்ந்த மனிதனை...
கொரோனா என்னும் கொடிய நோய், இப்படி மரணிக்க வைத்து விட்டதை,
நினைக்க.. வேதனையாக உள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போய் வாருங்கள் எம் புல்லாங்குழலே 
இசையும் தமிழும் உள்ளவரை 
இந்த உலகு உம்மை 
நினைவு கொள்ளும் 🙏
 

Link to comment
Share on other sites

 
இந்திய அரசின் - பத்மஸ்ரீ (2001)
பத்மபூஷண் (2011)
00000000
1979.
'சங்கராபரணம்' தெலுகு படத்தில் பாடிய
'ஓம்கார நாதானு சந்த்தான மௌகானமே'
பாடலுக்காக சிறந்த பின்னணிப் பாடகருக்கான
தேசிய விருது.
1981.
'ஏக் துஜே கேலியே' ஹிந்திப் படத்தில் பாடிய
'தேரே மேரே பீச் மே கைஸா ஹையே பந்தன் '
பாடியதற்காக ரெண்டாவது தேசிய விருது.
1983.
'சாகர சங்கமம்' தெலுகு படத்தில் பாடிய
'வேதம் அணு அணுவுன நாதம்'
பாடலுக்காக மூன்றாவது தேசிய விருது.
1988.
'ருத்ரவீணா' தெலுகு திரைப்படத்துக்காக
'செப்பாலனி உந்தி குந்த்து விப்பாலனி உந்தி'
பாடலுக்காக நான்காவது தேசிய விருது.
1995.
'கானயோகி பஞ்சாட்சர காவை 'கன்னட படப்பாடல் 'உமண்டு குமண்டு கன கர்ஜே பதுரா' வுக்காக
ஐந்தாவது தேசிய விருது.
1996.
'மின்சாரக் கனவு' தமிழ்த் திரைப்படத்தின்
'தங்கத்தாமரை மலரே வா அருகே' வுக்காக
ஆறாவது தேசிய விருது.
00000000
1983.
வாழ்நாள் சாதனைகளுக்கான முதல் தென்னக
பிலிம்பேர் விருது.
1986.
தென்னிந்திய மொழிகளின் பின்னணிப் பாடகருக்கான வியத்தகு சாதனைக்காக பிலிம்பேர் விருது.
1989.
'மைனே பியார் கியா' ஹிந்தித் திரைப்படப் பாடல்
'தில் தீவானா'வுக்காக பிலிம்பேர் விருது.
1995.
'சுபசங்கல்பம்' தெலுகு படத்துக்கான பிலிம்பேர் விருது.
2006.
'ஸ்ரீ ராமதாஸ்' தெலுகு படப்பாடல்
'அடிகடிகோ பத்ரகிரி'க்காக பிலிம்பேர் விருது.
2007.
'மொழி' தமிழ் படத்துக்காக
'கண்ணால் பேசும் பெண்ணே' பாடலுக்கு பிலிம்பேர்.
2010.
'ஆப்த ரக்ஷகா' கன்னடப் படத்துக்காக
'கரனே கர கரனே' பாடலுக்கான பிலிம்பேர் விருது.
00000000
2017.
வாழ்நாள் சாதனையாளருக்கான
'ஸைமா' SIIMAA விருது.
00000000
ஆந்திர அரசின் 'நந்தி' விருதுகள் - 23 முறை.
தமிழக அரசின் திரைப்பட விருதுகள் - 4 முறை.
கன்னட திரைப்பட விருதுகள் - 3 முறை.
00000000
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பெற்ற
மற்ற விருதுகள்....
...................
 
"GaanaVidushi" Title conferred by Ragaswara, at the concert "Celestial Hits" on 10 Feb 2019, at Kings Hall, Stoke-on-Trent, United Kingdom in recognition of Musical Excellence and Immense contribution to the field of Music for over 50 years. ||
Film Fans' Association Award (Madras)—oldest association in the country—received 20 times || "Sangeetha Ganga Award", for his contribution to Kannada Film Industry in 2001 ||"Lata Mangeshkar Award" in 1999 || "Sangeeta Ganga award" in 2001 || Delhi Telugu Academy's Rashtriya Vikas Shiromani Award (Lifetime) in 2002 ||
"Dr. Bezawada Gopala Reddy Award" in 2002 | "Lifetime Achievement Award" conferred during "TVS Victor Aalaapana Music Awards" function for the years 2001 and 2002 || "Swaralaya-Kairali-Yesudas" award in 2002 || "Rani Rao Balasaraswathi Award" in 2003 || "Arya Bhata Prasasthi" in 2003 || "Kalasri Award" in 2004 ||
"Best Playback Singer" from Maa TV, Cinemaa awards in 2004 ||
"Viswa Ganayogi" From Karnataka Chiefminister in 2005 ||
Raja Lakshmi Award from Sri Raja Lakshmi Foundation, Chennai in 2006 || "Best Playback Singer" from Vijay TV, Reliance Mobile Vijay Awards in 2006 || "Tansen Award" Sur Singar Sanjad (Bombay) for best classical rendition of a song from Tere Payal Mere Geeth composed by Naushad || "Best Playback Singer" from Santosham awards for the film Sri Ramadasu in 2006 || "Lifetime Achievement Award", presented by Santhosham awards in 2007 || "Basavashree Award" from Karnataka Government || "A.P. Cinegoers Association Award for Best Singer" for Sri Bhagavatham (serial on ETV) in 2007 || "Sangeetha Saagra" from Kanchi Kamakoti Peetham, Kanchipuram in 2008 || "Karnataka Rajyotsava Prasasthi" from the Government of Karnataka 2008 || "Lifetime Achievement Award" presented by Telugu Association of North America (TANA) in Chicago in 2009 || "P. Susheela trust National Award" 2009 ||
"Kopparapu Kavula Puraskaram"from Kopparapu Kala Peetam, Visakhapatnam 2009 || "Lifetime Achievement Award" by Raagalaya Music Awards Mumbai 2010 || Ghantasala Award in 2010
|| Great son of the soil award from Justice Rajesh Tandon,Chairperson Cyber appellate tribunal New Delhi at All India conference of intellectuals in Hyderabad 2010 || ANR Lifetime achievement award from Akkineni Nageswara Rao in 2010 ||
"Pride Of Indian Cinema" from Yuvakalavauhini, Hyderabad 2010 ||
"Best playback Singer" award from "Gemini Tv Ugadi awards" 2010 || Vamsee Film awards 2010 || "BIG Kannada Entertainment Awards" || "Santosham awards 2010" Best Playback Singer for the film "Mahatma"|| "Lifetime Achievement Award" - 2011 Lux Sandal CineMAA Awards 2011 || "Isai Thendral" - Title conferred to S P Balasubrahmanyam by Botswana Tamil Cultural Association ||
The Hyderabad Times Film Awards 2011 || "Chevalier Sivaji Ganesan Award for Excellence in Indian Cinema" given by STAR Vijay in 2011.|| "Harivarasanam Award 2015" by kerala government ||
Tamizhan Award 2017 by Pudhiya Thalaimurai || 6th Dakshinamurthy Nadapuraskaram,2019,Kerala.
----------------------------------------------------------
படத்தில் -
மனைவி சாவித்ரி,
மகள் பல்லவி,
மகன் சரண்
உடன் -
ஸ்ரீபதி பண்டிதராத்யுல பாலசுப்ரமணியம்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள் ஐயா

2 hours ago, tulpen said:

எமக்காக பாடிக்கொண்டிருந்த நிலா இனி கொஞ்சம் உறங்கட்டும். நீங்கள்  சென்றாலும் உங்கள் பாடல்கள் என்றும் எம்மோடு வாழும். சென்று வாருங்கள். 

மக்கள் திலகத்திற்காக எஸ்பி பாலாவின் முதற்பாடல். 

 


இவர் பாடிய முதல் பாடல் இதுவல்ல துல்பன். நான் நினைகின்றேன் ஒன்றில் நிலவே என்னிடம் நெருங்கதே..அல்லது இயற்கையெனும் இதயக்கன்னி.. இரண்டில் ஒன்றாக இருக்க வேண்டும். 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாலா, 


பிறப்பால் நீ  தெலுங்கன்

உணர்வால் தீந்  தமிழன் 

 

தமிழை உன் போல் அழகு  செய்தோர் எவருமில்லை

உன் உச்சரிப்பில் தமிழ் தாய் உச்சி குளிர்ந்த கணங்களுக்கு கணக்கே இல்லை
 

எம் உரிமை கானங்களை உணர்ந்து பாடியவன் நீ 

எம் யுத்த ரணங்களுக்கு எல்லாம் மருந்தும் ஆனவன் நீ 


யாவரும் கேளிர் என வாழ்ந்து காட்டியவன் நீ 

அதனால்தான் உனக்கு உலகின் அத்தனை மூலையும் ஊராகிப் போனது 


போய்வா தமிழ் திரையிசையின் தலை மகனே
 

தமிழா,
 

உனக்கு இப்போ கிடைக்கிறது அரச மரியாதை 

ஆனால் தமிழ்  இருக்கும் வரை உனக்கு கிடைக்கும் இராஜ மரியாதை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி இல்லை எனும் போதுதான் இசையை நாம் நேசிக்கிறோம் என்பதைக் காட்டிலும் அந்த நேசிப்பிற்குள் எப்படி ஈர்க்கப்பட்டோம் என்பது தெரிகிறது. உங்கள் நிகழ்ச்சிகளை பார்க்கும்போதெல்லாம் மற்றவர்களை காயப்படுத்தாமல் பேசுவது எப்படி என்று கற்க முயற்சித்திருக்கிறேன். மனதில் மிக ஆழமான சோகம் நிறைகிறது.  வார்த்தைகள் தவிக்கின்றன. ஒப்பில்லா மானுடனே. உன் தாலாட்டு கேட்டு உறங்கியவர்கள்  கோடி. எங்களால் மௌனத்தை மட்டுமே தாலாட்டாக தரமுடியும். உறங்குங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nunavilan said:
Screenshot-2020-09-25-14-41-31-363-com-a படத்தில் -
மனைவி சாவித்ரி,
மகள் பல்லவி,
மகன் சரண்
உடன் -
ஸ்ரீபதி பண்டிதராத்யுல பாலசுப்ரமணியம்

. . 👍

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.