Jump to content

மறைந்தார் பாட்டு தலைவன் எஸ்.பி.பி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மறைந்த எஸ்.பி.பியின் உடல் இன்று செங்குன்றத்திலுள்ள அவரது வீட்டில் நல்லடக்கம்

 

Link to comment
Share on other sites

  • Replies 74
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

spb உடல் தாமரை பாக்கத்தில்.. இலட்ச கணக்கான மக்களின் அழுகை குரல்

 

Link to comment
Share on other sites

எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடலுக்கு பொதுமக்கள், பிரபலங்கள் அஞ்சலி

சென்னையில் உடல்நலக்குறைவால் வெள்ளிக்கிழமை பகல் 1 மணிக்கு காலமான எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் இன்று சனிக்கிழமை (செப்டம்பர் 26) நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

அவரது உடல் சென்னையை அடுத்துள்ள அவரது தாமரைப்பாக்கம் இல்லத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.

இந்நிலையில் பொதுமக்களும், திரையுலக பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

முன்னதாக பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வர வேண்டாம் என கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது கட்டுப்பாடுகளுடன் அஞ்சலி செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக இடைவெளியை கடைபிடித்து, 100 பேருக்கு மிகாமல் அஞ்சலி செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.பி.பியின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படவுள்ளது.

இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய மக்கள் அனைவரின் மனங்களிலும் நீங்கா இடம் பிடித்த எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவருக்கு காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார்.

மருத்துவமனை தெரிவித்தது என்ன?

கொரோனா பாதிப்பு அறிகுறியுடன் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி எம்ஜிஎம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட எஸ்.பி.பி, தொடக்கத்தில் கவலைக்கிடமான நிலையில் இருந்து பிறகு வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு குணம் அடைந்து வந்ததாக கூறப்பட்டது.

YouTube பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

இந்நிலையில் நேற்று அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரது உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் உயிர்காக்கும் கருவிகளின் அதிகபட்ச உதவி அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சிகிச்சைபெற்றுவரும் எம்.ஜி.எம். மருத்துவமனை நேற்று முன் தினம் தெரிவித்தது.

இந்நிலையில் நேற்று பிற்பகல் சுமார் ஒரு மணியளவில் அவர் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

திரையுலகினர், அரசியல் தலைவர்கள் அஞ்சலி

எஸ்.பி.பியின் மறைவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன், நடிகர் ரஜினி காந்த், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பனேர்ஜி, மத்திய பிரதேச முதலமைச்சர் ஷிவ்ராஜ் செளஹான், மேலும் தமிழ், ஹிந்தி, தெலுங்கு திரைத்துறையினர் என பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

]

https://www.bbc.com/tamil/india-54306650

Link to comment
Share on other sites

11 hours ago, colomban said:

கண்ணீர் அஞ்சலிகள் ஐயா

 

கொழும்பான் நீங்கள் கூறியது விடயம் சரியானதே. சுட்டிக் காட்டியதற்கு நன்றி.  முதலாவதாக ஒலிப்பதிவு செய்த பாடல் வெளிவரவில்லை என்றும், அதன் பிறகு ஒலிப்பதிவு செய்த பாடல் ‘இயற்கையெனும்’ என்ற பாடல் என்றும் அதன் பின்னரே ‘ஆயிரம் நிலவே’ என்ற பாடல் பாடியதாகவும்,  எஸ். பி  யே ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்ததை இன்று வாசித்தேன். படம் ஒரே நேரத்தில் வெளிவந்ததாலும் மக்கள் திலகத்தின் பட பாடல் என்பதாலும் ‘ஆயிரம் நிலவே வா’ பிரபல்யமாகிவிட்டது என்று நினைக்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கையுடன் இணைந்த இளைய நிலா: 72 குண்டுகள் முழங்க எஸ்பிபி உடல் நல்லடக்கம்!

spacer.png

 

பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியனின் உடல் காவல்துறையினரின் 72 குண்டுகள் முழங்க தாமரைப்பாக்கத்தில் இன்று (செப்டம்பர் 26) நல்லடக்கம் செய்யப்பட்டது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் பிடித்தமான பாடகர் எஸ்பிபி. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உடல்நலக் குறைவால் நேற்று மதியம் 01.04 மணிக்கு உயிரிழந்தார். காலத்தால் அழிக்க முடியாத 40 ஆயிரம் பாடல்களுக்கு உயிர்கொடுத்தவர் இன்று கண்ணாடி பெட்டிக்குள் உறங்கிக் கொண்டிருப்பதை காண்பதற்கு இதயம் கனக்கத்தான் செய்தது.

spacer.png

எஸ்பிபி மறைந்தாலும் அவர் பாடல்கள் மூலம் நம்முடன் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார் எனக் கூறி ஒட்டுமொத்த திரையுலகமுமே இரங்கல் தெரிவித்தது. திருவள்ளூர் மாவட்டம் தாமரை பாக்கத்தில் உள்ள வீட்டில் அவரது உடல் வைக்கப்பட்ட நிலையில், இயக்குநர் பாரதிராஜா மற்றும் பாடகர் மனோ, இயக்குநர் அமீர் ஆகியோர் நேரில் வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

spacer.png

கண்ணீர் அஞ்சலி செலுத்திய மனோ

பாடகர் மனோ கண்ணாடி பெட்டிக்குள் இருக்கும் எஸ்பிபியின் உடலைப் பார்த்துத் தேம்பி அழும் காட்சி மேலும் சோகத்தை ஏற்படுத்தியது. அதுபோன்று எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடலுக்குத் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் நேரில் அஞ்சலி செலுத்தினார். ஆந்திர அரசின் சார்பில் நீர்வளத் துறை அமைச்சர் அனில்குமார் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பிரபலங்கள் மற்றும் அவரது உறவினர்கள் மட்டுமே இன்று அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர்.

 

இதைத்தொடர்ந்து 10 மணியளவில், எஸ்.பி.பி. உடலுக்குப் புரோகிதர்களின் வேத மந்திரங்களுடன் இறுதிச்சடங்குகள் தொடங்கின. அதன்பின் மகன் எஸ்பிபி சரண் இறுதிச் சடங்கைத் தொடங்கினார். அவரைத் தொடர்ந்து குடும்பத்தினர் அனைவரும் இறுதிச்சடங்கு செய்தனர்.

spacer.png

இறுதிச் சடங்கு நிகழ்வுக்காகத் திருவள்ளூர் எஸ்.பி. அரவிந்தன் தலைமையில் 500 போலீசார் தாமரைப்பாக்கம் பண்ணை வீடு பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மறுபக்கம் அரசு மரியாதை கொடுப்பதற்காகத் தமிழகக் காவல்துறையின் ஆயுதப்படையினர் அணிவகுத்து தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டுக்கு வந்தனர்.

spacer.png

எஸ்பிபி காலை தொட்டு வணங்கிய விஜய்

இதனிடையே வீட்டில் இறுதிச் சடங்குகள் முடிக்கப்பட்டு, அரசு மரியாதையுடன் இறுதி ஊர்வலம் தொடங்கியது. ‘பத்ம பூஷன் எஸ்பிபி ஐயா புகழ் ஓங்குக’ என்ற வாசகத்துடன் எஸ்பிபியின் உடலைத் தூக்கிச் செல்ல, அவரது உடலுக்கு முன்பாக ஆயுதப்படை போலீசார் அணி வகுத்தனர். அடக்கம் செய்யும் இடத்திற்கு நேரில் வந்த நடிகர் விஜய், சரணுக்கு தோள்தட்டிக் கொடுத்து ஆறுதல் தெரிவித்தார். எஸ்பிபியின் காலை தொட்டு வணங்கி மரியாதை செலுத்தினார்.

spacer.png

இந்நிலையில், 24 காவலர்கள், 3 முறை துப்பாக்கி குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை செலுத்தப்பட்டது. அடக்கம் செய்யப்படும் இடத்திலும் மந்திரங்கள் பாடி குடும்ப வழக்கப்படி இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது. இதையடுத்து அவரது உடல் 12.30 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. குடும்பத்தினர், உறவினர்கள், பிரபலங்கள், ரசிகர்களின் கண்ணீர் கடலுக்கு மத்தியில் காற்றில் கலந்தது கானக்குரல். பாட்டுடை தலைவனுக்குப் பிரியா விடை அளிக்கப்பட்டது.

 

 

https://minnambalam.com/public/2020/09/26/26/SBP-body-burial-thamaraipakkam-padum-nila

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எஸ்பிபியின் இறுதிச் சடங்குக்கு வந்த நடிகர் விஜய்

 

அரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம்

அரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம்

 

தமிழக அரசு சார்பில் காவல்துறை மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பதிவு: செப்டம்பர் 26,  2020 12:38 PM மாற்றம்: செப்டம்பர் 26,  2020 12:55 PM
சென்னை,

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் சென்னை செங்குன்றத்தை அடுத்த தாமரைப்பாக்கத்தில் உள்ள அவருடைய பண்ணை இல்ல வளாகத்தில் வைக்கப்பட்டு, அவரது குடும்பத்தினர் சார்பில் அங்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த அவரது ரசிகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.


திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள், பாடகர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலர் நேரில் வந்து எஸ்.பி.பி. உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் எஸ்.பி.பி.யின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில், காவல்துறை மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என்று முதல்வா் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்திருந்தார்.

அதன்படி குடும்பத்தினரின் இறுதிச்சடங்குகள் நிறைவு பெற்ற பிறகு, காவல்துறை சார்பில் அரசு மரியாதை செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்கிடையில் எஸ்.பி.பி.யின் பண்ணை தோட்டத்தில் அவரது உடலை புதைப்பதற்கான முன்னேற்பாடுகள் நேற்று தொடங்கி நடைபெற்று வந்தது. இறுதிச்சடங்கு நிகழ்வின் போது நடிகர் விஜய் நேரில் வந்து எஸ்.பி.பியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

எஸ்.பி.பி.யை இறுதியாக ஒருமுறை காண்பதற்காக வந்திருந்த அவரது ரசிகர்கள், அவரது உடலை, காவல்துறை அணிவகுப்புடன் சுமந்து சென்ற போது, எஸ்.பி.பி.யின் புகழை போற்றும் விதமாக முழக்கங்கள் எழுப்பியபடி சென்றனர். இதன் பின்னர் காவல்துறை சார்பில், 24 போலீசார் 3 முறை குண்டுகளை முழங்க அரசு மரியாதையுடன், அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/09/26123850/SPBalasubramaniyam-body-buried-with-state-honor.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் பாடும் நிலா பாட்டு தலைவன் spbஐயா அவர்களுக்கு என் இசையின் சமர்ப்பணமாக இப் பாடலை எழுதி இசையமைத்து பாடி உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன் அவரின் ஆத்மா சாந்திக்காய் பிரார்த்திப்போம்

 

KJ Music

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

கொரோணாவுக்காகவும்  பாடிட்டு அப்படியே போய்ட்டார்..🙏🙏😢

Link to comment
Share on other sites

எங்கள் மாவீரர்களுக்காக அவர் பாடிய பாடல் வீடியோ ஒன்றை பதிவுடுங்களேன்

Link to comment
Share on other sites

14 minutes ago, நேசன் said:

எங்கள் மாவீரர்களுக்காக அவர் பாடிய பாடல் வீடியோ ஒன்றை பதிவுடுங்களேன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாலசுப்பிரமணியம் அவர்கள் ஒரு சிகரம்.
ஒரு சாதனையாளர்.
திரைத்துறையில் இவரை மாதிரி சாதித்தவர்கள் யாராவது இருக்கின்றார்களா என தேடிப்பார்த்தேன். ஒருவருமே இல்லை. இந்த உலகிலேயே இல்லை. இவரது பக்தி பாடல்களை நான் விரும்பி கேட்டதில்லை. காரணம் இவரின் திரையிசை பாடல்களின்  அதியுச்ச அதிகாரம். பாலா தெய்வமாகி விட்டார். இனிவரும் காலங்கள் அவரின் பக்திப்பாடல்கள் அவரையே தெய்வமாக வணங்க வழிவிடும்.

பாலா அவர்களே! நீங்கள் இறக்கவில்லை. உங்கள் பூதவுடல் மட்டுமே அழிந்தது. இந்த பூமி  வாழும் வரைக்கும் நீங்களும் வாழ்வீர்கள்.

 

Link to comment
Share on other sites

சென்னையில் ஒரு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் தன் உடலில் பல இடங்களில் பலதரப்பட்ட கருவிகள் பொருத்தப்பட்டு உறக்கத்தில் இருந்தார் எஸ்பிபி. திடீரென்று முழிப்புத் தட்டியது. தன்னைப் பற்றியும் தற்போதைய நிலைமையைப் பற்றியும் உடனே தெளிவடைந்தார். அந்த சமயத்தில் அவரெதிரே மிகுந்த பிரகாசமான ஓர் உருவம் தோன்றியது. வந்திருப்பது அந்த இறைவனே என்பதை அறிந்தார். கை கூப்பினார். ஒரு சில நிமிடங்கள் அமைதியாகக் கரைந்தன.

“மகனே என்னிடம் ஏதாவது பேசத் தோன்றவில்லையா உனக்கு?”

இல்லை என்று தலையசைத்தார் எஸ்பிபி. 

“எனக்கு ஏன் இந்த நிலைமை என்று கேட்பாயோ?” 

இல்லை என்று மீண்டும் தலையசைத்தார். “எனக்கு மட்டும் இந்த அளவு குரல்வளம் தந்தாய். கோடிக்கணக்கான ரசிகர்களைத் தந்தாய். பலபேரின் வாழ்க்கையில் மாற்றத்தை உணரவைக்கும் திறமையைத் தந்தாய். இதெல்லாம் எனக்கு மட்டும் ஏன் என்று நான் கேட்டேனா? அதுபோலத்தான் இதையும் நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். ஏதோ என் வினைப்பயன் கழிந்து கொண்டிருப்பதாக நினைத்துக் கொள்கிறேன்”

இறைவன் முகத்தில் புன்னகை. “உன்னை ஏன் எல்லோருக்கும் பிடித்திருக்கிறது தெரியுமா?” 

“என் பாடல்கள். அதனை அவ்வளவு அருமையாக வடிவமைத்துக் கொடுத்த இசையமைப்பாளர்களுக்கும் பாடலாசிரியர்களுக்கும் மிக்க நன்றி” 

“பாடல்கள் மட்டுமா?” 

வேறு என்ன என்பதுபோல் பார்த்தார் எஸ்பிபி.

“நீ உண்மையான மனிதத்துவம் அறிந்த மனிதன். எந்த ஒரு சிறிய ஆத்மாவையும் மதிப்பவன்” 

இரு கைகளையும் கூப்பினார் பாலு. 

“புகழின் உச்சியை அடைந்தாலும் அது உன் தலைக்கேறாது பார்த்துக்கொண்டாய். உன் நெருங்கிய நண்பன் உன்னைக் காயப்படுத்திய போதும், அடுத்த மேடையிலேயே அவனைப் போற்றியவன் நீ. பெரியவர்களை மதிப்பதிலும் இளையவர்களை ஊக்குவிப்பதிலும் உனக்கு நிகரில்லை” 

மீண்டும் இரு கைகளையும் கூப்பினார் பாலு. 

“அதனால்தான் எல்லோரும் தங்களில் உன்னைப் பார்க்கிறார்கள் உன்னில் தங்களைப் பார்க்கிறார்கள்” 

“போதும் பெருமானே. இதுவெல்லாம் நீ கொடுத்ததன்றோ?” 

“அப்படிச் சொல்லிவிட முடியாது, நீ வளர்த்துக் கொண்டது. பலபேர் பாலுவைப்போல் ஆகவேண்டும் என்று கனவு காண்கிறார்கள். எல்லோரும் உன்னைப்போல் பாடி விட முடியுமா என்ன? ஆனால் எல்லோரும் உன் மனித குணங்களைப் பேண முடியும்” 

“அந்த வகையில் என் ரசிகர்கள் மனதில் நான் ஒரு சிறு மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறேன் என்றால் எனக்கு மகிழ்ச்சியே. ஐயனே, இன்று நீங்கள் வந்திருக்கும் நோக்கம்?” 

“உன் முடிவைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை உனக்கு அளிக்கவே இங்கு வந்திருக்கிறேன்” 

“புரியவில்லையே…” 

“இப்பொழுது உன் உடலும் மனமும் எப்படி இருக்கின்றன?” 

“மனம் அதே போல் தான். உடல்தான் சுகமில்லை. இதோ இத்தனை கருவிகள் மூலமாக என் உயிர் ஓடிக்கொண்டிருகிறது. முன்னை விடத் தேறி வருவதாக மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்” 

இறைவன் புன்னகை மாறாமல் கேட்டுக்கொண்டிருந்தார். எஸ்பிபி தொடரட்டும் என்று காத்திருந்தார். 

“ஒரு சந்தேகம் கேட்கலாமா?” 

“கேட்பாயாக” 

“என் தொண்டையில் துளையிட்டு சுவாசக்கருவி பொருத்தி இருக்கிறார்கள். நாளை நான் குணமடைந்த பின் மீண்டும் முன்புபோல் பாட இயலுமா?” 

“சில மாதங்கள் கழித்து நன்றாகப்பேச முடியும். உன் நுரையீரல் மிகவும் பாதிப்படைந்துள்ளது. முன்புபோல் பாட இயலாது என்பதுதான் உண்மை” 

இதைக் கேட்டவுடன் பாலுவின் கண்களில் தாரைதாரையாக்க் கண்ணீர் வழிந்தது. அதை எதிர்பார்த்து இறைவன் அமைதி காத்து இருந்தான். தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட பாலு பின்னர் கேட்டார், “எனக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு ஏற்பாடு செய்கிறார்கள். அது செய்து முடிந்தால் நான் பாட முடியுமா?” 

“அப்பொழுதும் சந்தேகமே. அந்த நுரையீரலைக் காப்பாற்றும் பொருட்டு நிறைய மருந்துகளை உட்கொள்ள வேண்டி வரும். சாதாரணமாக வெளியில் சென்றுவரக் கட்டுப்பாடுகள் இருக்கும்” 

“அப்படியானால் நான் முன்புபோல வானம்பாடியாக வாழ முடியாதா?”

“என்னை மன்னித்துகொள் மகனே” 

மீண்டும் பாலுவின் கண்களில் கண்ணீர். 

“முடிவு உன் கையில். இருக்க விருப்பமா, இறக்க விருப்பமா?”

“என்னால் பாட முடியாது என்றால் உயிர் வாழ்வதில் அர்த்தமில்லை. என்னை இப்பொழுதே அழைத்துக் கொள்” 

இறைவனின் முகத்தில் அதே புன்னகை. “நன்றாக மீண்டுமொருமுறை யோசித்துக் கொள்” 

“இதில் யோசிப்பதற்கு ஒன்றுமில்லை. நான் தயார்” 

மீண்டும் பாலுவின் கண்கள் கண்ணீர் சிந்தின. 

“இப்பொழுது எதை நினைத்து அழுகிறாய் மகனே?” 

“என்னுடைய கோடிக்கணக்கான ரசிகர்கள், நான் இறந்துவிட்டேன் என்று அறிந்தால் அதிர்ச்சியடைவார்கள். அந்த வகையில் நான் அவர்களுக்குத் துன்பம் தருகிறேன். அதை நினைத்தால்….” 

“நீ  திடீரென்று அகால மரணம் அடைந்திருந்தால் பலரும் அதிர்ச்சியில் உயிர் விட்டிருப்பார்கள். அவர்கள் மனதையும் தயார் படுத்தும் பொருட்டுத்தான் கடந்த 40 நாட்களாக நாடகம் நடந்தது. முடிவை யாரும் எளிதாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது உண்மை. ஆனால் ஓரளவு பக்குவப்பட்டு விட்டார்கள். உன் பூத உடல் தான் இல்லாதிருக்கும். இசையாக நீ நெஞ்சில் என்றும் நிறைந்து இருப்பாய். தமிழ் உள்ளவரை உன் புகழ் இருக்கும்”  

கண்ணீர் மல்க மீண்டும் கை கூப்பினார் பாலு. “பல்வேறு இடங்களில், பலதரப்பட்ட மனிதர்களின் முன் நான் பாடியிருக்கிறேன். இப்பொழுது உங்கள் முன் பாடும் வாய்ப்பை வேண்டுகிறேன் இறைவா”

“ஆரம்பிக்கலாம் மகனே உன் இசையை”

கண்கள் மூடி மனம் உருகிப் பாடத் தொடங்கியது அந்தக் குயில். அதை அணைத்தவாறு, அதனை அழைத்துகொண்டு அதன் இசையில் மயங்கியவாறே பயணிக்க ஆரம்பித்தான் இறைவன். சன்னமாக வெகுநேரம் அந்தப் பாட்டு கேட்டுக்கொண்டேயிருந்தது. 

‘இந்தத் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்…………

Copied from FB.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகன்காரனை நினைக்கத்தான் பாவமாய் கிடக்கு. பெடி ஏற்கனவே தண்ணிச்சாமி. தகப்பன் தான் முடிஞ்ச அளவு கட்டுப்படுத்தி மரியாதையாய் வைச்சிருந்தார்.தகப்பன்ரை மரியாதைக்காகவும் பெடியன்ரை சேட்டைகளை கண்டும் காணாமலும் இருந்திச்சினம். இனியும் அது நடக்குமோ தெரியேல்லை.
தகப்பன் சேர்த்து வைச்ச புகழையும் சொத்தையும் அழிக்காமல் இருந்தால் சந்தோசம்.
ஏனெண்டால் உலக பிரபலங்களின்ரை சந்ததி வரலாறுகள் ஒரு மாதிரித்தான் முடிஞ்சிருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 அவன்தான் மனிதன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.