Jump to content

யாழ்பல்கலைகழத்தில் பதற்றம் பொலிஸார் குவிப்பு


Recommended Posts

யாழ்பல்கலைகழத்தில் பதற்றம் பொலிஸார் குவிப்பு

யாழ் பல்கலைகழகத்தில் பல்கலைகழக மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்டமுறுகல் நிலையை தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது,


பல்கலைகழக வாயிலில் கறுப்புடையணிந்த மாணவர்கள்காணப்பட்டவேளை காவல்துறையினர் அவர்களை உள்ளே செல்லுமாறு உத்தரவிட்டதை தொடர்ந்தே முறுகல் நிலை உருவானது.


மேலதிக காவல்துறையினர் அப்பகுதிக்கு அழைக்கப்பட்ட நிலையில் மேலும் குழப்பமான நிலை உருவாகியுள்ளது.
இதனை தொடர்ந்து இராணுவத்தினரும்அப்பகுதிக்கு விரைந்துள்ளதை தொடர்ந்து பதட்டமான சூழல்உருவாகியுள்ளது.


யாழ்பல்கலைகழக மாணவர்கள் இன்று திலீபனுக்கு அஞ்சலி செலுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பில் பெருமளவு குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

http://thinakkural.lk/article/72095

 

யாழ் பல்கலைக்கழகம் முன்பாக பொலிஸ், இராணுவம் குவிப்பு!

uni.jpg?189db0&189db0

யாழ். பல்கலைகழகத்திற்கு முன்பாக திடீரென பொலிஸாரும், இராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைகழக நுழைவாயிலில் கூடியிருந்த மாணவர்களை பல்கலைகழகத்திற்கு உள்ளே செல்லுமாறு, பொலிஸார் அறிவுறுத்தயுள்ளனர். எனினும், மாணவர்கள் அதை மறுத்தபோது, பெருமளவு பொலிஸாரும், இராணுவத்தினரும் குவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று பல்கலைகழகத்தில் மாணவர்கள் அஞ்சலி நிகழ்வை மேற்கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பில் பொலிஸார் பல்கலைகழக நுழைவாயிலில் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் மாணவர்கள் இன்று பகல் பல்கலைகழக நுழைவாயிலில் ஒன்று கூடியிருந்தனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
யாழ் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக...
25.09.2020.

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, விசுகு said:
யாழ் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக...

தமிழ் மாணவர்களுடன் இணைந்து... சிங்கள மாணவர்களும்,
காவல் துறையினருடன், வாதாடுகின்றார்கள் போலுள்ளது.

Link to comment
Share on other sites

56 minutes ago, தமிழ் சிறி said:

தமிழ் மாணவர்களுடன் இணைந்து... சிங்கள மாணவர்களும்,
காவல் துறையினருடன், வாதாடுகின்றார்கள் போலுள்ளது.

அடக்குமுறை இனப்பாகுபாடு காட்டுவதில்லை. அதற்கெதிரான போராட்டமும் இனப்பாகுபாகுபாட்டை கடந்து மேலெழும்போது வெற்றிபெறும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்த மினிசுவின் தூண்டுதலால் இதை இவர்கள் செய்த்திருக்கலாம் என நான் நினைக்கிறேன்...படிச்சமா பட்டம் வாங்கினமா புலம்பெயர்ந்தமா என்று இருக்காமல் ...தேசிய ஒற்றுமைக்கும் தேசியபாதுக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் இவர்கள்( மாணவர்கள்) நடந்து கொண்டமை மிகவும் கவலையளிக்கின்றது....
பு.சி.த .சங்க தலைவர்..

40 வருடங்களுக்கு முன்பு பாடசாலைகள்,பல்கலை கழகங்கள் முன்பு இதே போல நடைபெற்றது நினைவில் வருகின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயகம் என்றால் என்ன? என்று தெரியாதவர்கள் அரசியல் செய்வதும், ஜனநாயகம் பேசுவதும் நாட்டுக்கு கிடைத்த துரதிஷ்டம். பேச்சு சுதந்திரம், கூட்டங்கள் கூடும், அமைக்கும் உரிமை, சுதந்தரமாக நடமாடும் உரிமை போன்றவற்றை பறித்து, உண்மைகளை மறைத்து, அடிமைகளாக மக்களை மேய்த்துக்கொண்டு சுதந்திர நாடாம், ஜனநாயகம் பூத்துக்குலுங்குதாம். யுனிசெவ் பாராட்டி, கௌரவிக்குதாம். இது ஒன்று போதும், அந்த நிறுவனம் எப்படியான கொள்கை உடையது என்று விளங்கிக்  கொள்வதற்கு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய இராணுவத்தினர்

 51 Views

யாழ் பல்கலைக்கழக முன்றலில் ஒன்று கூடிய மாணவர்கள் சிலரை இராணுவத்தினர் துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தியதால் குறித்த இடத்தில் பெரும் பதற்ற நிலை உருவாகியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக தெரிய வருகையில்,

இன்று காலை மாணவர் ஒருவருடைய பிறந்த தினத்தை முன்னிட்டு 5 மாணவர்கள் பல்கலை முன்றலில் ஒன்று கூடியுள்ளனர். அப்போது அங்கு வந்த இரு காவல்துறை உறுப்பினர்கள் இந்த இடத்தில் நிற்க வேண்டாம் என கூறி மாணவர்களுடன் முரண்பட்டுள்ளனர்.

அப்போ அங்கு வந்த இராணுவத்தினர் துப்பாக்கியை மாணவர்களை நோக்கி நீட்டி “நீங்கள் புலிகள் இங்கு எந்த நிகழ்வும் கொண்டாட முடியாது“ என தெரிவித்ததுடன்  அவர்களை அச்சுறுத்தியும் உள்ளனர். இதையடுத்து மாணவர்கள் அங்கு ஒன்றுகூடியதை தொடர்ந்து அப் பகுதியில்  காவல்துறையினர்  மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.

மேலும் பல்கலைக்கழக பகுதியில் இருந்து காவல்துறை மற்றும் இராணுவத்தினர் வெளியேற வேண்டும் என மாணவர்கள் தெரிவித்த நிலையில், மாணவர்களை உள்ளே செல்லுமாறு காவல்துறையினர் மிரட்டும் தொணியில் கூறியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

வழமையாக தியாக தீபம் திலீபனின் நினைவுதினம் பல்கலைக்கழகத்தில் அனுஸ்டிக்கப்பட்டு வந்த நிலையில், இம்முறை நீதிமன்ற தடை உத்தரவை மதித்து நாம் அந்த நினைவு நாளை நினைவு கூரவில்லை என்றும் ஆனால்  எம் மீது அபாண்டமாக குற்றம் சுமத்தி எம்மை விரக்தியடைய வைப்பது கண்டிக்கத்தக்கது எஎனவும்  மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

http://www.ilakku.org/university-of-jaffna-polis-tension/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கற்பகதரு said:

அடக்குமுறை இனப்பாகுபாடு காட்டுவதில்லை. அதற்கெதிரான போராட்டமும் இனப்பாகுபாகுபாட்டை கடந்து மேலெழும்போது வெற்றிபெறும்.

நன்றி... கற்பகதரு. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாத் துறைகளிலும் இராணுவத்தினரை நியமித்தாயிற்று, இப்போ மாணவரை வம்புக்கிழுத்து பல்கலைக்கழகத்திற்குள்ளும்  இராணுவத்தினரை புகுத்தி தமிழரின் கல்வி முன்னிலையை தகர்த்து 
 இளைஞரிடையே விரக்தியை ஏற்படுத்தி முட்டாள் சமூகமாக உருவாக்க திட்டமிட்டு செயற்படுகிறார்கள். நீதிமன்றம் சரியாக இந்த வழக்கை கையாண்டிருந்தால் அடக்கி வாசித்திருப்பார்கள். ஆனால் நீதியை நிலைநாட்ட நம் நீதியரசர்கள் தவறியது மட்டுமல்ல, காட்டுச் சட்டத்திற்கு துணை போயுள்ளார்கள். இன்று இந்த விவகாரம்  நீதிமன்றத்திற்கு போயிருந்தால், மாணவர்களுக்கு எதிராகவே தீர்ப்பளித்திருப்பார் யாழ் நீதிமன்றில் வீற்றிருப்பவர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, satan said:

எல்லாத் துறைகளிலும் இராணுவத்தினரை நியமித்தாயிற்று, இப்போ மாணவரை வம்புக்கிழுத்து பல்கலைக்கழகத்திற்குள்ளும்  இராணுவத்தினரை புகுத்தி தமிழரின் கல்வி முன்னிலையை தகர்த்து 
 இளைஞரிடையே விரக்தியை ஏற்படுத்தி முட்டாள் சமூகமாக உருவாக்க திட்டமிட்டு செயற்படுகிறார்கள். நீதிமன்றம் சரியாக இந்த வழக்கை கையாண்டிருந்தால் அடக்கி வாசித்திருப்பார்கள். ஆனால் நீதியை நிலைநாட்ட நம் நீதியரசர்கள் தவறியது மட்டுமல்ல, காட்டுச் சட்டத்திற்கு துணை போயுள்ளார்கள். இன்று இந்த விவகாரம்  நீதிமன்றத்திற்கு போயிருந்தால், மாணவர்களுக்கு எதிராகவே தீர்ப்பளித்திருப்பார் யாழ் நீதிமன்றில் வீற்றிருப்பவர். 

கோத்தாதான் தலைமை நீதிபதி, கோத்தா  வைத்ததுதான் சட்டம் தீர்ப்பு, இனி இதுதான் இலங்கையின் ஏதிர்காலம்

17 hours ago, கற்பகதரு said:

அடக்குமுறை இனப்பாகுபாடு காட்டுவதில்லை. அதற்கெதிரான போராட்டமும் இனப்பாகுபாகுபாட்டை கடந்து மேலெழும்போது வெற்றிபெறும்.

களனி ஆற்றில் இனியும் இரத்த ஆறு ஓட வேண்டாமே, தமிழருக்கு செய்த அத்தனை அட்டூழியங்களும் தம்மினத்துக்கே செய்த காடையர்கள்தான் இந்த சிங்கள இனம். எந்த எல்லைக்கும் போக க் கூடிய ஒரு கீழான இனம். இவர்களின் பெளத்த பிக்குகளை பார்க்க தெரியவில்லையா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, உடையார் said:

கோத்தாதான் தலைமை நீதிபதி, கோத்தா  வைத்ததுதான் சட்டம் தீர்ப்பு, இனி இதுதான் இலங்கையின் ஏதிர்காலம்

 ஒரு நல்ல தலைவன்; மக்கள் தங்களுடைய வெற்றியை அடைய, அவர்களுக்கு உதவுவார்கள். அதேநேரம் ஒரு சர்வாதிகாரி; தன் குறிக்கோளை தான் அடைய, தன் கொள்கைகளை மக்கள் மேல் சுமத்துவான். தன் சுயநலத்தை மக்கள் கண்டிபிடிக்காமல் இருப்பதற்காக, அவர்களிடையே பிளவுகளையும், சச்சரவுகளையும் ஏற்படுத்தி, அதை கண்டும் காணாமலும் இருப்பான். அவனது தொண்டர்களும் அவ்வாறே இருப்பர்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தி அவர்களின் தற்கொலை முடிவிற்கு அவரது தனிப்பட்ட மற்றும் குடும்ப விவகாரமே காரணம் என்ற ஒரு தகவல் வெளி வந்திருக்கின்றது. இந்த விவகாரம் வெளியில் வரவே கூடாது என்று நினைத்திருந்திக்கின்றார் போல....😌   https://minnambalam.com/political-news/mdmk-ganesh-murthy-last-days-secret-report-to-the-chief-minister/  
    • 'அதிர்ஷ்ட லாபச் சீட்டு' என்ற தலைப்பில் இந்த வாரம் இங்கே களத்தில் ஒரு சுய ஆக்கம் எழுதியிருந்தேன். அமெரிக்காவில் இருக்கும் லொட்டோக்களைப் பற்றியே எழுதியிருந்தாலும், உலகம் முழுவதற்கும் இது பொருந்தும் என்று நினைக்கின்றேன். அதில் இருந்து ஒரு பகுதி: 'இங்கு தினமும் மாலை நேரங்களில் இந்த சீட்டுகளில் விற்கும் கடைகளின் வாசல்களில் அன்றாடம் தொழில் முடித்து வருவோர்கள் பலர் சீட்டுகளை வாங்கி சுரண்டிக் கொண்டிருப்பார்கள். முடிவில் அவர்களின் முகங்களில் ஒரு வேதனை தெரியும். அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையால் வரும் வருமானத்தில் இருந்து அரசாங்கம் பல நற்பணிகளை செய்கின்றது என்போர் இந்த வேதனையை பார்க்கவேண்டும்.'................😌  
    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.