Jump to content

குரோய்டன் பொலிஸ் நிலையத்தில் ஒரு பொலிஸ் அதிகாரி சுட்டுக் கொலை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குரோய்டன் பொலிஸ் நிலையத்தில் ஒரு பொலிஸ் அதிகாரி சுட்டுக் கொலை!

spacer.png

தெற்கு லண்டனில் உள்ள குரோய்டன் பொலிஸ் நிலையத்தில், ஒரு பொலிஸ் அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார்.

விண்ட்மில் லேனில் உள்ள பொலிஸ் மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவரால் அந்த அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

02:15 பி.எஸ்.டி.யில் சம்பவத்திற்குப் பிறகு வந்த துணை மருத்துவர்களால் அந்த அதிகாரி சம்பவ இடத்தில் சிகிச்சை பெற்றார்.

பின்னர் அவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்திலேயே 23வயது இளைஞரை அதிகாரிகள் தடுத்து வைத்தனர். அவரும் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளார்.

இந்த சம்பவத்தின் போது பொலிஸ் துப்பாக்கிகள் எதுவும் வெளியே கொண்டுச் செல்லப்படவில்லை என மெட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 

http://athavannews.com/குரோய்டன்-பொலிஸ்-நிலையத்/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

குரோய்டன் பொலிஸ் நிலையத்தில் ஒரு பொலிஸ் அதிகாரி சுட்டுக் கொலை!

spacer.png

தெற்கு லண்டனில் உள்ள குரோய்டன் பொலிஸ் நிலையத்தில், ஒரு பொலிஸ் அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார்.

விண்ட்மில் லேனில் உள்ள பொலிஸ் மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவரால் அந்த அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

02:15 பி.எஸ்.டி.யில் சம்பவத்திற்குப் பிறகு வந்த துணை மருத்துவர்களால் அந்த அதிகாரி சம்பவ இடத்தில் சிகிச்சை பெற்றார்.

பின்னர் அவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்திலேயே 23வயது இளைஞரை அதிகாரிகள் தடுத்து வைத்தனர். அவரும் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளார்.

இந்த சம்பவத்தின் போது பொலிஸ் துப்பாக்கிகள் எதுவும் வெளியே கொண்டுச் செல்லப்படவில்லை என மெட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 

http://athavannews.com/குரோய்டன்-பொலிஸ்-நிலையத்/

 

இது உங்கட ஏரியாவோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போலீஸ் ஒரு கட்டத்துக்கு மேல் எதுவும் சொல்கிறார்கள் இல்லை எங்கு வைத்து சம்பந்தப்பட்ட நபரை கைது  பண்ணினார்கள் என்ற விபரத்தை கூட தரமறுக்கிறார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, பெருமாள் said:

போலீஸ் ஒரு கட்டத்துக்கு மேல் எதுவும் சொல்கிறார்கள் இல்லை எங்கு வைத்து சம்பந்தப்பட்ட நபரை கைது  பண்ணினார்கள் என்ற விபரத்தை கூட தரமறுக்கிறார்கள் .

இதில் ஏதோ உண்மை மறைந்து உள்ளது . கை  விலங்கு போடப்பட்ட ஒருவர் எப்படி துவக்கை எடுத்து சுட முடியும்?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

இதில் ஏதோ உண்மை மறைந்து உள்ளது . கை  விலங்கு போடப்பட்ட ஒருவர் எப்படி துவக்கை எடுத்து சுட முடியும்?

 

33648090-8775309-image-a-15_1601118684517.jpg

https://www.dailymail.co.uk/news/article-8775309/The-London-tower-block-police-arrested-cop-killer-having-ammunition-MISSED-gun.html

Link to comment
Share on other sites

சுட்டவர் சிறிலங்கன்  நாட்டை சேர்ந்தவர் என்று   டெய்லி மெயில் பேப்பரில் வந்துள்ளது
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுட்டவரின் பெயர் சன்னா டி சொய்சா. மனைவி பெயர் எலிசபெத். 5 பிள்ளைகளின் தந்தை. கடைசி மகனுக்கு 23 வயது.

டி சொய்சா ஓட்டிசம் பாதிப்பு உள்ளவராம்.

நன்றி சன் நியூஸ் பேப்பர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, goshan_che said:

டி சொய்சா ஓட்டிசம் பாதிப்பு உள்ளவராம்.

அப்ப  சிறிய தண்டனையுடன் வெளியில் வருவார்  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

டி சொய்சா ஓட்டிசம் பாதிப்பு உள்ளவராம்.

தமிழனாய் இருந்தால் பயங்கரவாதி....

ஓட்ஸ் ஓட்டிசம் எல்லாம் கிடையாது. 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பெருமாள் said:

அப்ப  சிறிய தண்டனையுடன் வெளியில் வருவார்  

 

இருக்கலாம். இப்போதே சொல்ல முடியாது. நோயின் வீரியத்தை பொறுத்து. Manslaughter என்றால் conditional discharge இல் தண்டை இல்லாமல் கூட வெளிவரலாம். அதேவேளை mild autism என்றால் முழு தண்டனையும் கிடைக்கலாம்.

பொலிசாரின் அண்மைய கொலை (ஜிப்சிகள் காரால் அடித்த்தது) ஒன்று கூட குறைந்த தண்டனையிலேயே முடிந்தது.

மேலதிக தகவல் இன்றி இப்போ சொல்ல முடியாது.

10 minutes ago, குமாரசாமி said:

தமிழனாய் இருந்தால் பயங்கரவாதி....

ஓட்ஸ் ஓட்டிசம் எல்லாம் கிடையாது. 😁

அப்படி இல்லை அண்ணர்.

இங்கே எம்மவர் கொலைகள் எதையும் இதுவரை பயங்கரவாதமாக பார்கவில்லை.

இதை கூட தோலை வைத்து அப்படி சந்தேகித்தாலும் கொண்டவர் முஸ்லிம் இல்லை என்றவுடன் அந்த சந்தேகம் அகன்றுவிட்டது. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

அப்படி இல்லை அண்ணர்.

இங்கே எம்மவர் கொலைகள் எதையும் இதுவரை பயங்கரவாதமாக பார்கவில்லை.

இதை கூட தோலை வைத்து அப்படி சந்தேகித்தாலும் கொண்டவர் முஸ்லிம் இல்லை என்றவுடன் அந்த சந்தேகம் அகன்றுவிட்டது. 

எல்லாம் காவல்துறை மறைக்க வேண்டி வந்ததின்  விளைவு இங்கும் பல கேள்விகள் ஏன் இந்த அதிகாரி சாமத்தில் விசாரிக்க போனார் ?

ராணிக்கும்  நம்பர் 10 க்கு பாதுகாப்பாய்  இருந்தவர் இந்த தன்னியல்லா  காடு குரைடனுக்கு ஏன் மாற்றப்படணும் ?

அறிக்கை குடுத்தவர்கள் இரண்டு பிழை கொரனோ  டெஸ்ட் என்று குழம்பினார்கள் .

இரு சகோதரர்களும்  அயலில் உள்ள வெற்று  காணியில் ஏதோ  பொருட்களை எறிந்ததை  அயலவர்கள் கண்டுள்ளார்கள் அது என்ன ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் ஒரு விடயம் அந்த அதிகாரியை நோக்கி மட்டும் ஐந்து சொட் அதுவும் அவரின் நென்சு பகுதியை நோக்கி கடைசி வெடி தன்னை நோக்கி இதெல்லாமே செட்டப் போல தோணலையா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

எல்லாம் காவல்துறை மறைக்க வேண்டி வந்ததின்  விளைவு இங்கும் பல கேள்விகள் ஏன் இந்த அதிகாரி சாமத்தில் விசாரிக்க போனார் ?

ராணிக்கும்  நம்பர் 10 க்கு பாதுகாப்பாய்  இருந்தவர் இந்த தன்னியல்லா  காடு குரைடனுக்கு ஏன் மாற்றப்படணும் ?

அறிக்கை குடுத்தவர்கள் இரண்டு பிழை கொரனோ  டெஸ்ட் என்று குழம்பினார்கள் .

இரு சகோதரர்களும்  அயலில் உள்ள வெற்று  காணியில் ஏதோ  பொருட்களை எறிந்ததை  அயலவர்கள் கண்டுள்ளார்கள் அது என்ன ?

பெருமாள்,

அவர் விசாரிக்க போகவில்லை. அவர் கஸ்டடி சார்ஜண்ட். ஏனையோர் பிடித்து கொண்டு வருபவர்களை “புக்” பண்ணி உள்ளே வைப்பது. பின் 3 மணிக்கொருக்க்கா அவர்கள் நலத்தை உறுதி செய்வது. ரெட்க்கோர்ட் எழுதுவது. ரிலீஸ் பண்ணுவது.  இவைதான் அவர் வேலை. புக் பண்ணும் புரசீஜர் நடந்த வேளைதான் சூடு விழுந்துள்ளது.

Close protection unit இல் இருப்பவர்கள் ஒரு வயதுக்கு மேல் இப்படி வேறு வேலைக்கு அனுப்பபட்டு விடுவது வழமைதான். பொதுவாக 45-50 வயதுக்கு மேல் frontline வேலை செய்வது குறைவு. 55 வயதில் ஓய்வும் பெறலாம் (ஏனையொருக்கு 68). இவருக்கு 54 வயது என நினைக்கிறேன். இதில் மர்மம் ஒன்றும் இல்லை.

காணிக்குள் எறிந்த பொருள் பற்றி எனக்கு இப்போதான் தெரியும். அநேகமாக குடு பார்சல் ஆக இருக்கலாம்.

கொரோனா குழப்பம்- வழமைதானே.

மனைவி பிரிடிஸ் என்கிறார்கள். ஆனால் என்ன இனம் என்று சொல்லவில்லை.

1 minute ago, பெருமாள் said:

இன்னும் ஒரு விடயம் அந்த அதிகாரியை நோக்கி மட்டும் ஐந்து சொட் அதுவும் அவரின் நென்சு பகுதியை நோக்கி கடைசி வெடி தன்னை நோக்கி இதெல்லாமே செட்டப் போல தோணலையா ?

புக்க்கிங் இற்கு போக முதல். Body check பண்ணி, விலங்கும் அடித்த பின். Body cavity க்குள் இருந்த பிஸ்டலை எப்படி எடுத்து சுட்டார் என்பதுதான் மர்மம்.

உடம்புக்கு உள்ளே இல்லாவிடிலும். தொடை நடுவில் அல்லது அக்குளில் இருந்து பிஸ்டலை எடுப்பதும் கிட்டதட்ட இயலாத காரியம்.

சீ சி டிவி நிச்சயம் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுட்டவரும் கிட்டதட்ட செத்து ஆஸ்பத்திரியில் revive செய்துள்ளார்கள்.

ஒரு கஸ்டடி சாஜனை இப்படி கொல்லும் அவசியம் இருப்பதாக படவில்லை, ஆனால் கொலை நடந்த விதம் புதிராகவே இருக்கிறது.

ரெண்டு மூன்று நாளில் தெளிவாகலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

ஆனால் கொலை நடந்த விதம் புதிராகவே இருக்கிறது.

எல்லாருக்குமே 

சுட்டவரின் முகநூல் கணக்கை சகோதர்கள் பிடிபட்ட உடனே டிஸ் ஏபில்  செய்துள்ளனர் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/9/2020 at 21:04, ரதி said:

இது உங்கட ஏரியாவோ?

குரோய்டனில் மூன்று பகுதிகள் உள்ளன. குரோய்டன் வடக்கு பெருமளவு அடிமட்ட மக்கள் வாழும் பகுதி. நகரம் உள்ள மத்திய பகுதி மத்தியதர வர்க்கத்தினர் வாழும் பகுதி. தெற்கு சறே மாதிரி இலைகள் கூடிய பெருமரங்கள் உள்ள வீதிகளைக் கொண்ட அமைதியான செல்வந்த பகுதி. 

நான் மக்களோடு மக்களாக இருக்கின்றேன்😀. சில வாரங்களுக்கு பக்கத்து வீதியில் ஒரு கறுப்பு இளைஞனை கத்தியால் குத்தி, பொலிஸ், அம்புலன்ஸ், எயார் அம்புலன்ஸ் எல்லாம் வந்தது. நானும் வீதியை மூட முன்னர் எட்டிப் பார்த்தேன். இளைஞன் முதுகில் குத்து. சாகக்கூடிய அளவிற்கு இல்லை என்பதால் இரண்டு மணிநேரத்தில் எல்லாம் வழமைக்கு வந்துவிட்டது.

8 hours ago, goshan_che said:

Body check பண்ணி, விலங்கும் அடித்த பின். Body cavity க்குள் இருந்த பிஸ்டலை எப்படி எடுத்து சுட்டார் என்பதுதான் மர்மம்.

கைவிலங்கோடு இருந்தவர் எப்படி லோட் பண்ணி சுட்டார் என்பது ஆச்சரியம்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

சுட்டவரின் பெயர் சன்னா டி சொய்சா. மனைவி பெயர் எலிசபெத். 5 பிள்ளைகளின் தந்தை. கடைசி மகனுக்கு 23 வயது.

டி சொய்சா ஓட்டிசம் பாதிப்பு உள்ளவராம்.

நன்றி சன் நியூஸ் பேப்பர்

சுட்டவர் 23 வயது பெடியன்...தகப்பன் தான் சிங்களவர் . தாய் வெள்ளையின பெண்.அவர்களது கடைசி மகன் தான் 
கை விலங்கு போடப்படவில்லை அல்லது வடிவாய் போடப்படவில்லை ...பிடித்தவுடனேயே முழுமையாய் செக் பண்ணித் தானே பொலீஸ் ஸ்ரேசனுக்கு கூட்டிப் போவார்கள் ஏன் இவரை வடிவாய் செக் பண்ணவில்லை?
இவர்கள் இருவரையும் சுட்டது மூன்றாவது இன்னொரு நபராக இருக்கலாம்....போதைவஸ்து பெரும் வியாபாரம் ....இவர்கள் எதையோ மறைக்கிறார்கள்.
சீசிடிவி காட் சி வெளியிடுவார்களோ பார்ப்பம் 

https://www.msn.com/en-gb/news/uknews/police-determined-to-find-justice-for-officer-killed-on-duty/ar-BB19snaz?ocid=spartanntp

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

சுட்டவர் 23 வயது பெடியன்...தகப்பன் தான் சிங்களவர் . தாய் வெள்ளையின பெண்.அவர்களது கடைசி மகன் தான் 
கை விலங்கு போடப்படவில்லை அல்லது வடிவாய் போடப்படவில்லை ...பிடித்தவுடனேயே முழுமையாய் செக் பண்ணித் தானே பொலீஸ் ஸ்ரேசனுக்கு கூட்டிப் போவார்கள் ஏன் இவரை வடிவாய் செக் பண்ணவில்லை?
இவர்கள் இருவரையும் சுட்டது மூன்றாவது இன்னொரு நபராக இருக்கலாம்....போதைவஸ்து பெரும் வியாபாரம் ....இவர்கள் எதையோ மறைக்கிறார்கள்.
சீசிடிவி காட் சி வெளியிடுவார்களோ பார்ப்பம் 

https://www.msn.com/en-gb/news/uknews/police-determined-to-find-justice-for-officer-killed-on-duty/ar-BB19snaz?ocid=spartanntp

உண்மைதான் ரதி,

நேற்று இரவு தகப்பந்தான் கொலையாளி என sun, daily mail இரண்டும் எழுதினார்கள். அதை வைத்தே நானும் பெருமாளும் இங்கே கருத்து எழுதினோம்.

இப்போ போய் பார்த்தால் 23 வயது மகன்தான் கொலையாளி என பிளேட்டை மாத்தி போட்டுள்ளார்கள்.

இவர்களுக்கு தமிழ் ஊடகங்கள் பரவாயில்லை போலிருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குறைடன் ஊத்தை இடம். வெஸ்ட் குறைடன் லண்டன் ரேட்டில் அடிக்கடி இப்படியான சம்பவங்கள் நடக்கும்.
தொர்டன் ஹீத் போன்றவை ஆபத்தானது. சட்டன் / வாலிங்டன் / கர்ஷெல்டன் அருமையான இடங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

இவர்களுக்கு தமிழ் ஊடகங்கள் பரவாயில்லை போலிருக்கு.

நடந்த சம்பவத்துக்கு போலீஸ் கிளிப்பிள்ளை சொல்வது போல் ஒரே கதையை திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டு இருந்தனர் உள்ளிருக்கும் தகவல் அளிப்பவர்கள் மூலம் வந்த செய்திகள்  கொலையாளியின் தொடர்பு   ஸ்ரீலங்கன் என்றவுடன் கேட்டு கேள்வி இல்லாமல் தமிழன்தான் என்று ஊகத்தில் கதைக்க வெளிகிட்டினம் ஆஸ்பத்திரியில் செய்தியாளர்கள் தேடிப்பார்க்க தகப்பனின் சிங்கள பெயரே வந்துள்ளது அதனால் வந்த குழப்பம் .

என்னதான் இருந்தாலும் தாய் பிரிட்டிஸ் ஆக இருந்தாலும் சிங்கள பெயர்உடன் சிங்களவர்களாகவே வளர்ந்து உள்ளனர் மூவரும் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, colomban said:

குறைடன் ஊத்தை இடம்.

அண்ணெய்  குரைடனுக்குள்  இருக்கும் Kenley Lane பக்கம் போகல போல் இருக்கு வீட்டின் விலையே ஒண்ணரை  மில்லியன் தாண்டும் எல்லாம் பிரைவேட் வீதி யுடன் அங்கும் நம்ம சனம்  வாழுதுகள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

அண்ணெய்  குரைடனுக்குள்  இருக்கும் Kenley Lane பக்கம் போகல போல் இருக்கு வீட்டின் விலையே ஒண்ணரை  மில்லியன் தாண்டும் எல்லாம் பிரைவேட் வீதி யுடன் அங்கும் நம்ம சனம்  வாழுதுகள் .

கிருபன்ட வீடு உந்த பக்கமோ😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, ரதி said:

கிருபன்ட வீடு உந்த பக்கமோ😆

கிருபன் முதலே சொல்லிவிட்டார் மக்களோடு மக்கள் ஆக ஜீவிக்கிறார் என்று .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.