Jump to content

திலீபன் நினைவேந்தல் நிகழ்வை அனுமதிக்கக் கோரிய இந்திய திரைப்பட இயக்குநர் கௌதமன் கைது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திலீபன் நினைவேந்தல் நிகழ்வை அனுமதிக்கக் கோரிய இந்திய திரைப்பட இயக்குநர் கௌதமன் கைது

தியாகதீபம் திலீபன் அவர்களின் நினைவு நிகழ்வுகளை நடத்துவதற்கு சிறீலங்கா அரசாங்கம் தற்போது தடை விதித்திருப்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிகழ்வை நடத்தக் கோரி இந்தியாவிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகத்திற்கு மனு அளிக்க சென்ற போது இயக்குநரும், நடிகருமான கௌதமன் அவர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

32 ஆண்டுகளாக நடைபெற்று வந்த தியாகி திலீபன் அவர்களின் நினைவு நிகழ்வை இந்த ஆண்டு நடைபெற அனுமதிக்க வேண்டும் என்று  இயக்குநரும் நடிகருமான கௌதமன் இந்தியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் மனு கையளிக்கச் சென்றார். பாதுகாப்புத் தரப்பினரின் அனுமதியுடன் சென்ற அவர், உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஆனால் கொரோனா பாதுகாப்புக் கருதி தூதரக வாசலில் வந்து மனுவை கையேற்பார்கள் என்று காவல்துறைத் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் மனுவை தூதரக அதிகாரிகள் வாங்க மறுத்து விட்டனர்.

இதனை எதிர்த்து கௌதமன் அவர்கள் அந்த இடத்தில் நின்று உரையாற்றினார். அவர் தனது உரையில், “தமிழ்நாட்டு தமிழர்களின் வரிப்பணத்தில் எங்களின் நிலத்தில் இருக்கும் தூதரகத்திற்கு தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. ஆனால் தமிழர் உரிமையை கேட்க முனைந்த எங்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. உலகத்தில் ஒன்றரைக்கோடி சிங்களவர்கள் தான் உள்ளார்கள். இலங்கை மண்ணை தமிழன் ஆண்டான் என்பது தான் வரலாறு. கோத்தபாயா அரசு இந்துக் கோயில்களை இடித்து புத்த விகாரை கட்டுகிறான். கலாச்சாரங்கள் அழிக்கப்படுகின்றது. இதை இந்திய அரசு வேடிக்கை பார்க்கிறது.

இறுதி யுத்தத்தில் ஒன்றே முக்கால் இலட்சம் பேரை சிங்களவன் கொன்று விட்டான். இதற்கான பண, படைப் பலத்தை இந்திய அரசு வழங்கியது. தற்போது தமிழக அரசு, தமிழக காவல்துறை சிங்கள அரசிற்கு ஆதரவாக இருக்கின்றது. தமிழீழத்தில் சிங்கள அரசு தமிழர்களின் வாழ்வியல் உரிமைகளைப் பறித்தது போல, இந்திய மத்திய அரசும் தமிழ்நாட்டிலுள்ள மக்களின் வாழ்வியல் உரிமைகளைப் பறிக்கிறது. இலங்கை அரசு சீனாவுடன் உறவு வைத்துள்ளது. இந்தியாவை சீனா தாக்கும் போது தான் தமிழீழத்தை தொலைத்தது எவ்வளவு தவறு? விடுதலைப் புலிகளை அழித்தது எவ்வளவு தவறு? பிரபாகரன் இந்தியாவிற்கு எவ்வளவு பாதுகாப்பாக இருந்தார் என்பது இந்தியாவிற்குத் தெரியும்.

8கோடி தமிழன் தமிழ்நாட்டில் உள்ளான். 12கோடி தமிழன் உலகத்தில் உள்ளான். ஒன்றரைக்கோடி சிங்களவன் தான் உலகில் உள்ளான். எங்கள் உறவு முக்கியமா? அல்லது சிங்களவன் உறவு முக்கியமா என்பதை இந்திய அரசு சிந்திக்க வேண்டும்.

உலகம் முழுவதும் உள்ள தமிழீழ தமிழ் மக்கள் திலீபன் நினைவு நிகழ்வை நடத்துங்கள். நாங்களும் தமிழகத்தில் நடத்துவோம்.

ஒரு காலம் வரும். இயற்கை கை நீட்டும். அப்போது தமிழீழத்தை எமது இளைய தலைமுறை பெற்றெடுக்கும். ஜல்லிக்கட்டிற்காக உலகத் தமிழினம் எழுந்து போராடியது. தமிழீழத்தைப் போல தமிழ்நாட்டின் விடுதலையும் பறிக்கப்பட தமிழினம் ஆழிப்பேரலை போல எழும். எம்மை அடக்க நினைப்பவர்களை விரட்டும் காலம் வரும்” என்று கூறினார்.

சிறந்த தமிழ் உணர்வாளராக அறியப்பட்ட இவர், ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பான கோரிக்கைகளுக்கு குரல் கொடுப்பவர். தேசியத் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

 

http://www.ilakku.org/திலீபன்-நினைவேந்தல்-நிகழ/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.