Jump to content

எஸ்.பி.பி: காதலிக்க வந்த கலைஞன் – டாக்டர் ஜி. ராமானுஜம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எஸ்.பி.பி: காதலிக்க வந்த கலைஞன் 1 – டாக்டர் ஜி. ராமானுஜம்

 
spacer.png
 

2-1.jpg

 

ஆயிரம் நட்சத்திரங்கள் இருந்தாலும் இரவுக்கு அழகு நிலவுதான். ஆயிரம் பாடகர்கள் இருந்தாலும் எஸ்பிபாலசுப்பிரமணியம் இருந்தால்தான் அந்த கச்சேரி மேடை நிறையும். சரீரத்திலும் சாரீரத்திலும் வஞ்சகமில்லாதவர்.

‘ஹோட்டல் ரம்பா’ என்ற தமிழ்த்திரைப்படத்தில்   ‘அத்தானோடு இப்படி இருந்து எத்தனை நாளாச்சு ?’ என்ற பாடல்தான் அவர் முதலில் தமிழுக்காகப் பாடியது. எம் எஸ் வி இசையமைப்பில். படம் வரவே இல்லை.பாடலும் நம்மிடம் இல்லை.  1969 இல் வெளிவந்த இயற்கை என்னும் இளைய கன்னி (சாந்தி நிலையம்) , ஆயிரம் நிலவே வா (அடிமைப்பெண்) ஆகிய அவரது முதல் இரண்டு பாடல்கள்  அவரை உடனடி நட்சத்திர அந்தஸ்திற்கு உயர்த்தின.

1966 இல் ஸ்ரீ ஸ்ரீ மர்யாத ராமண்ணா என்ற தெலுங்குப் படத்தின் மூலம் தனது இசைப்பயணத்தைத் தொடங்கினார் எஸ்பிபி. தமிழில் அவர் வரவு எழுபதுகளின் தொடக்கமாக அமைகிறது. சிவாஜி, எம் ஜி ஆர் ஆகியோருக்கு வழக்கமாகக் கம்பீரக் குரலில் பாடிவரும் டி எம் எஸ் குரலுக்குப் பதிலாக அப்போது பிரபலமாகி வந்த  ஹிந்திப்பாடல் அலைகளின் தாக்கத்தில் மென்மையாகவும் , சிருங்காரமாகவும், காதல் உணர்வுடன் ரசித்துப் பாடும் பாணியிலான ஒரு பாடகனின் தேவையை எஸ்பிபி பூர்த்தி செய்தார். பி.பி ஸ்ரீனிவாஸ் இது போன்ற மென்மையான பாடல்களைப் பாடிவந்தார். ஆனால் அவரை விட  இளமைக்குறும்பு, உற்சாகம் ஆகிய குணங்கள் அதிகம் அமையப்பெற்று ஒரு புதுப் பாணியை அமைத்துக் கொண்டார் ஸ்ரீபதி பண்டிதராத்யுல பாலசுப்ரமணியம்.  (பிறப்பு  ஜூன் 4 1946.)

நெல்லூரைச் சேர்ந்த அவரது தந்தை சாம்பமூர்த்தி ஹரிகதை வித்வான். தாய் சகுந்தலா அம்மாள் சென்ற வருடம் (2019) காலமானார்.

பாலுவின் தமிழ்ப்படத் திரை வாழ்க்கையை மூன்றாகப் பிரிக்கலாம்.

1.எம் எஸ்வி , கே.வி. மகாதேவன் , விஜயபாஸ்கர், சங்கர் கணேஷ் போன்ற இசையமைப்பாளர்களோடு பணியாற்றிய எழுபதுகள்

2.இசைஞானி இளையராஜா கோலோச்சிய எண்பதுகள்

3.ஏ.ஆர்.ரஹ்மான் , வித்யாசாகர் போன்றோர் தடம்பதித்த தொண்ணூறுகள் தொடங்கி இன்று வரை.

120127521_1482229421974772_4594808092033

 

ஆரம்பத்தில் சொன்னது போல்  கம்பீரமான டி. எம்.எஸ் பாணியிலிருந்து வித்தியாசமான மென்மையாகவும் , மெல்லிய சோகமான பி பி ஸ்ரீனிவாஸ் பாணியிலிருந்து மாறுபாடாக உற்சாக இளமைத் துள்ளலாகவும் தனது பாணியினையும் இருப்பினையும் உறுதி செய்து கொண்டார்.

அதற்கு ஏற்றாற்போல் நடிகர்களின் திரைவாழ்வுகளிலும் மாற்றங்கள் வந்தன. எம் ஜி ஆர் கொஞ்சம் கொஞ்சமாக அரசியலை நோக்கிச் செல்ல சிவாஜி கணேசன் தனது உச்சத்திலிருந்து மெதுவாகக் கீழே இறங்கிக் கொண்டிருந்தார். விஜயகுமார்,.முத்துராமன், ஜெய்கணேஷ், சிவக்குமார் போன்ற நடிகர்கள் மென்மையான கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தனர்.

ஆரம்பத்தில் ”ஆயிரம் நிலவே வா” (அடிமைப்பெண் 1969),  ”அவள் ஒரு நவரச நாடகம்” (உலகம் சுற்றும் வாலிபன் 1973) ’’ பாடும்போது நான் தென்றல் காற்று’’  ( நேற்று இன்று நாளை 1974) என எம்ஜிஆருக்கும் ,பொட்டு வைத்த முகமோ (சுமதி என் சுந்தரி 1971) இரண்டில் ஒன்று ( ராஜா 1972) என சிவாஜிக்கும் அற்புதமான பாடல்களைப் பாடியுள்ளார். அதன்பின் விஜயகுமார், ஜெய்கணேஷ் போன்ற நடிகர்களுக்காக மகத்தான சில பாடல்களைப் பாடியுள்ளார்.

விஜயபாஸ்கர் இசையில் சம்சாரம் என்பது வீணை (மயங்குகிறாள் ஒரு மாது- 1975)  சங்கர் கணேஷ் இசையில் அவள் ஒரு மேனகை  (நட்சத்திரம்- 1980) எனப் பல்வேறு இசையமைப்பாளர்களிடம் பாடியிருக்கிறார் .

திரை இசைத் திலகம் கேவி மகாதேவன் இசையில் வந்த சங்கராபரணம் (1979) அவருக்கு முதல் தேசிய விருதைத் தந்தது. அப்பாடல்கள் செவ்வியல் பாணியிலும் தன்னால் பாட முடியும் என அவர் நிரூபித்ததற்கு சாட்சி.

என்றாலும்…..

எழுபதுகளில் பாலசுப்ரமணியத்தின் முழு திறமையையும் வெளிக்கொண்டு வந்தது எம்எஸ் விஸ்வநாதனின் இசை என்றால் அது மிகையாகாது. விஸ்வநாதன்-ராமமூர்த்தி என்ற பாணியில் இருந்து வெளியே வந்து புதுப் பாணியிலே மெட்டுக்களை மட்டும் அடிப்படையாக வைத்துக்கொண்டு பாடகர்களின் குரல் வளத்தை மிகவும் உறுதியாக  நம்பி ஏற்ற இறக்கங்கள் எனப்படும் சங்கதிகள் கமகங்கள் ஆகியற்றை மிகவும் இனிமையாக அமைத்தது எம் எஸ் வி பாணி. கண்ணதாசன் போன்ற கவிஞர்களின் தத்துவ வரிகளை சிவாஜி கணேசன் போன்ற நடிகர்களின் பாடுவது அல்லது   வாலியின் வரிகளில் எம்ஜிஆரின் ஆளுமையை புகழ்ந்து பாடுவது   ஆகிய இரண்டை முக்கியமான பணியாக வைத்திருந்த டிஎம்எஸ் பாணியை விட்டு வெளியே வந்த எம்எஸ் விஸ்வநாதனின் ஒரு புது பாணிக்கு ஆணிவேராக இருந்தவர் எஸ் பி பாலசுப்பிரமணியம்.

எழுபதுகளில் எம்எஸ் விஸ்வநாதனின் இசை அமைப்பில் உச்சத்தைத் தொட்டார் எஸ் பி பாலசுப்பிரமணியம்.

அதற்கு ஏற்றவாறு கமலஹாசன் என்னும் ஒரு மகா கலைஞனும் பாலச்சந்தர் என்னும் ஒரு திறமையான இயக்குனரும் சேர்ந்துகொள்ள அற்புதமான பல படைப்புகள் வெளிவந்தன அவற்றின் இசை அச்சாணியாக இருந்தவர் பாலு.

SP-Balasubrahmanyam_7_1200-300x200.jpg

 

அவள் ஒரு தொடர்கதை(1974) திரைப்படத்தில் வரும் கடவுள் அமைத்து வைத்த மேடை என்ற பாடல் ஒரு கிளாசிக்.  காதல்  தோல்வியின் பின்னணியில் ஒரு கலைஞன் பாடும்  பாடலாக அமைந்த இந்தப் பாடலில் பின்புலமாக சதன்  என்ற கலைஞன் தனது மிமிக்கிரி திறமையால் விலங்குகள் பறவைகள் ஏரோபிளேன் போன்ற ஒலிகளை அற்புதமாக எழுப்பி இருப்பார்.

அவற்றையெல்லாம் தாண்டி எஸ் பி பாலசுப்ரமணியம் தன்னுடைய பாவம் என்னும் உணர்ச்சிப் பெருக்கால் அந்தப் பாடலை ஒரு வேறு தளத்திற்கு எடுத்துச் சென்றிருப்பார்.

இப்படத்தின் தெலுங்கு வடிவில் இப்பாடலை எஸ் பி பியே மிமிக்ரி குரல்கள் எழுப்பிப் பாடியிருப்பதை யூட்ட்யூப்பில் கேட்கக் கிடைக்கிறது. பார்த்தால் அசந்து விடுவோம்.

அதே எம்எஸ்வி ,கமல் ,பாலசந்தர், எஸ்பிபி கூட்டணி. படம் அவர்கள் (1977). அதிலே அதே காதல் தோல்வி, அதே சுஜாதா, கமல்.  ஆனால் அதைவிட ஒரு மிகச் சிறப்பான ஒரு பாடல் ‘ இரு மனம் கொண்ட திருமண வாழ்வில் இடையினில் நீயேன் மயங்குகிறாய்’ என்ற ஒரு அற்புதமான பாடலை அனுபவித்து ரசனையுடன் பாடியிருப்பார் பாலு.

எம் எஸ் வி இசையில் எஸ் பி பாலசுப்ரமணியம் பாடிய பாடல்களில் சிறப்புகள் இரண்டு.

ஒன்று அவர் தன்னுடைய பாவத்தினை அதாவது உணர்ச்சி பெருக்கால் பாடியது இரண்டாவது அந்த மெட்டுக்களில் சங்கதிகள் எனப்படும் ஏற்ற இறக்கங்களை வளைந்து நெளிந்து குழைந்து பாடிய மழலைப் பட்டாளம் (1980) என்ற திரைப்படத்தில் வரும் கௌரி மனோஹரியை கண்டேன் என்ற பாடலை ஒருமுறை கேட்டுப்பாருங்கள் ஒவ்வொரு கௌரிமனோகரியையும் ஒவ்வொரு மாதிரி பாடியிருப்பார் .’ மலைமீது அடித்தாலும் காற்று .அது கடல் மீது தவறினாலும் காற்று .வயதோடு வந்தாலும் காதல்! அது வயதாகி வந்தாலும் காதல்!’  என்று ஒவ்வொரு இடத்திலும் காற்றும் காதலும் ஒவ்வொரு விதமாக ஏறி இறங்கும் அந்த பாணிதான் எஸ் பி பாலசுப்ரமணியம் மேஜிக்.

 நினைத்தாலே இனிக்கும் (1979) திரைப்படத்தில் வரும்  பாரதி கண்ணம்மா என்ற பாடல் நிழல் நிஜமாகிறது (1978) படத்தின் கம்பன் ஏமாந்தான் என்ற பாடல் மற்றும் இலக்கணம் மாறுமோ என்ற பாடல் ஆகியவை ஆயிரம் முறை கேட்டாலும் அலுக்காது.

  spb1200-2-300x167.jpg

 

பட்டினப்பிரவேசம் திரைப்படத்தில் வான் நிலா நிலா அல்ல என்ற பாடல் தில்லு முல்லு ( 1981) திரைப்படத்தில் ராகங்கள் பதினாறு என்ற பாடல் ‘வறுமையின் நிறம் சிகப்பு  (1980) படத்தில் வரும் ‘சிப்பி இருக்குது முத்தும் இருக்குது’ ‘தீர்த்தக்கரையினிலே’ ‘ நல்லதோர் வீணை செய்தே’ என்ற ஏராளமான பாடல்களை மறக்கமுடியாத பாடல்களாக அமைத்திருக்கின்றன.  47 நாட்கள் (1981) என்ற திரைப்படத்தில் எஸ் பி பாலசுப்ரமணியம் மான் கண்ட சொர்க்கங்கள் என்ற பாடலை பாடியிருப்பார்  அந்தப் பாடலை கேட்பவர்களுக்கு தெரியும் கிளாசிக் என்றால் என்னவென்று. மீக நீண்ட பாடல். அதைத் தன் குரல் ஒன்றாலேயே தூண்போல் நிலை நிறுத்துகிறார் பாலு.

இதே எம்எஸ்வி -கமல்- எஸ்பிபி கூட்டணியில் இன்னொரு மகத்தான பாடல் சிம்லா ஸ்பெஷல் (1982)  திரைப்படத்தில் வரும்’ உனக்கென்ன மேலே நின்றாய் ‘என்ற பாடல்.

ஒரு பாடல் எந்த கட்டத்தில் இருக்கிறது அந்தப் பாடலைப் பாடும் நாயகன் எந்த உணர்வுடன் அந்தப் பாடலைப் பாடுகிறான் என்பதை முழுமையாக உள்வாங்கி அந்த உணர்வை நூற்றுக்கு நூறு சதவிதம் வெளிப்படுத்தும் ஆற்றல் எஸ் பி பாலசுப்ரமணியம் அளவுக்கு யாருக்குமே இருந்ததில்லை அவர் முறையாக இசை படித்ததில்லை என்றாலும் இந்த உணர்வு பூர்வமாக பாடும் பணியினால் அவர் மிகப் பெரும் வெற்றி பெற்றவராக அமைந்தார்.

எஸ்பிபியின் இசைவாழ்வின் அடுத்த கட்டத்தில் அவரது நண்பர் மற்றும் அவரது இசைக்குழுவில் இருந்த இளையராஜா தமிழ்த்திரை உலகிற்கு 1976 இல் அறிமுகமாகிறார்.

– அடுத்த பாகத்தில்…

 

https://uyirmmai.com/music/tribute-to-s-p-balasubrahmanyam/

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

எஸ் பி பி: காதலிக்க வந்த கலைஞன் 2 -டாக்டர். ஜி. ராமானுஜம்

SPB.jpg

ஆலிவர் சாக்ஸ் என்ற ஒரு மிகப் பெரிய புகழ் பெற்ற மூளை இயல் நிபுணர் மியூசிக்கோஃபிலியா (Musicophilia)  என்ற ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார். அதாவது இசைப் பித்து. அந்தப் புத்தகத்தின் முன்னுரையில் அவர் சொல்லியிருக்கிறார்- மனித இனம்  வாழ்வதற்கு இசையால்   உயிரியல் ரீதியாக எந்த உபயோகமும் இல்லை.இசை இல்லாமல் உயிரினங்கள்  பல்லாயிரம் நூற்றாண்டுகள் கூட இருக்கும். இருந்திருக்கின்றன. இன்னும் இருக்கும்- என்கிறார் அவர்.  இசை என்பதையே சுத்தமாக துடைத்து அழித்து விட்டால் கூட  மனித இனம் தொடர்ந்து இருந்து கொண்டுதான் இருக்கும்.  உயிரோடு இருக்கும். அந்த வாழ்க்கை உயிர்ப்புடன் இருக்குமா என்பது தெரியாது. நல்ல ஒரு ரோபோவிடம் ஒலிக்குறிப்புகளைக் கொடுத்தால் அது இசைக்கும் . ஆனால் அதனால் ‘பட்டுக் கன்னம் தொட்டுக் கொள்ள ‘ என்று பாடிக்கொண்டிருக்கும் போதே ஒரு இடையில் ஒரு சிரிப்பு வருமே. அப்படி சிரிக்க முடியுமா? .நம்முடைய  எந்திரத்தனமான
வாழ்க்கைக்கு உயிர்மை கொடுத்த ஒரு கலைஞன் எஸ் பி பாலசுப்பிரமணியம்.

spb7-1598012026-300x169.jpg
 

அவரது இசை வாழ்க்கையிலே இரண்டாம் கட்டம் என்பது அவருடன் இசைக்குழுக்களில் நெருக்கமாக இருந்த இசைஞானி இளையராஜா தமிழ் திரை உலகிற்கு அன்னக்கிளி ( 1976) படம் மூலம் அறிமுகமான  பின்னே தொடங்கியது. முதல் கட்டுரையில்  சொன்னது போன்று எம் எஸ் விஸ்வநாதன் அவர்கள் பாணி பாடகர்களின் குரலுக்கும் பாடல் வரிகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக இருக்கும்.

ஆனால் இளையராஜாவின் பாணி என்பது அதிலிருந்து வேறுபட்டது. இசைக்கருவிகளுக்கும் ஆர்கெஸ்ட்ரா எனப்படும் இசைஅமைப்புக்கும் அதில் பாடகர்களுக்குச் சமமான பங்கு இருக்கும். இசைஞானியைப் பொறுத்தவரை குரலும் ஒரு இசைக்கருவியே. இசைக்கருவிகளும் இசைக்கலைஞனின் குரலே. ஆக குரலிலே மட்டுமே கொண்டுவரக்கூடிய பாவங்களை, உணர்வுகளை எல்லாம் இசைக்கருவிகள் மூலமும் தரமுடியும் என நிரூபித்தவர். மேலும் அவர் ஒரு கறார்வாதி. தான் எழுதியதை மிகச் சரியாகப் பாடகர்கள் பாடினால் போதும் என எண்ணுவார். தனது இசைமேல் அபாரத் தன்னம்பிக்கை உடையவர். ஆனால் இங்கு பாடகர்  பேரெடுப்பது இன்னும் சவாலாக ஆகிறது. அந்தச் சவாலை மிக எளிதாக எதிர்கொண்டார் எஸ்பிபி.

கொஞ்சம் கட்டுப்பாடுகள் கூடுதலாக உள்ள சூழலில் அவர் செய்த சாதனை என்னவென்று பார்த்தால் அற்புதமான இசையமைப்பு உள்ள ஒரு பாடலை யார் பாடினாலும் நன்றாக இருக்கும் என்று இருந்ததைத் தனது குரல் வளத்தாலும் , இனிமையாலும், ஈடுபாட்டுடன் உணர்வுப்பூர்வமாகப் பாடும் முறையாலும் ‘ இந்தப் பாடலை எஸ்பிபி தவிர யார் பாடினாலும் எடுபடாது’ என்று தோன்ற வைத்திருக்கிறார். சிறந்த ஒன்றை ஆகச் சிறந்ததாக ஆக்குவது மிகக் கடினம். அதைத்தான் அவர் செய்திருக்கிறார்.

ராஜபார்வை(1981) திரைப்படத்தில் அமைந்திருக்கும் அந்தி மழை பொழிகிறது என்ற பாட்டை நினைத்துப் பாருங்கள் .இந்த பாடலில் பாடல் வரிகள் தொடங்குவதற்கு முன்பே அந்த பாடல் ஒரு ஹிட் ஆகிவிட்டது.  இசைக் கருவிகள் மற்றும் ஹம்மிங்க் மூலம் ஒரு மிகப் பிரமாதமான தொடக்கத்தை கொடுத்து இருப்பார் இளையராஜா . இந்தப் பாடல் தொடங்கும் பொழுது அந்தி மழை பொழிகிறது என எஸ் பி பாலசுப்ரமணியம் எடுக்கும்போது அந்த இசைக் கருவிகளுக்கு இணையாக அவற்றை மேலும் அழகுபடுத்த செழுமைப்படுத்த தனது குரலால் ஆரம்பிப்பார்.

dc-Cover-ubnl22pjf4qj2b5hdmtn1irr07-2017

 

பயணங்கள் முடிவதில்லை (1982) திரைப்படத்தில் வரும் இளையநிலா பொழிகிறது என்ற பாடலை எடுத்துக் கொள்ளுங்கள். கிதார், புல்லாங்குழல் என இசைக்கருவிகளின் ஒத்திசைவில் ராஜா ஒரு அற்புதமான படைப்பை உருவாக்கி உள்ளார்.  வைரமுத்துவின் சிறப்பான பாடல் வரிகள் வேறு.. இவையிரண்டையும் தாண்டி அப்பாடலைத் தனது குரலால் செழுமைப் படுத்தியிருப்பார் பாலு.

பலரும் பார்த்த ஒரு வீடியோ ஒன்று உண்டு.ஒரு மேடைக் கச்சேரி. இளைய நிலா என பாலு எடுத்தவுடனேயே அரங்கம் அதிர்கிறது. அடுத்து வரும் இசைக்கருவிகளின் இசையைக் கேட்டு மெய்மறக்கிறது அரங்கம். அப்போது தலைசிறந்த புல்லாங்குழல் கலைஞர் அருண்மொழி ஒரு துணுக்கை வாசிக்கும் போது தவறான சுருதி புல்லாங்குழலை எடுத்துவிடுகிறார். அப்படியே நின்று விடுகிறார். எஸ் பி பி சமாளித்து வாயாலேயே ‘ தாரத் தர தர’  என ஹம்மிங் கொடுத்து பாடி முடிக்கிறார். ஆனாலும் என்னவோ குறைந்த உணர்வு. எஸ்பிபி அருண்மொழிக்காக மீண்டும் ஒரு முறை பின்னணி இசையை வாசிக்கச் சொல்ல பிரமாதப் படுத்துகிறார் அருண்மொழி. அரங்கம் அதிர்கிறது.

இந்த நிகழ்வின் மூலம் மூன்று விஷயங்கள் தெரிகின்றன. இளையராஜாவின் இசைத் துணுக்குகள் பாடலோடு கலந்தவை. அவை இல்லாமல் பாடினால் முழுமை இல்லாமல் இருக்கும். இரண்டாவது அவற்றை எஸ் பி பி பாடுவது அழகிற்கு அழகு சேர்ப்பது போல. வேறு யார் பாடினாலும் கொஞ்சம் குறையாகத்தான் உணர்வோம். மூன்றாவதாக எஸ் பி பி என்னும் மகா கலைஞனிடம் இருக்கும் மனித நேயம்.

இளையராஜாவின் இசையில் இசைக்கருவிகளுடன் பின்னிப் பிணைந்து ஒலிக்கத் தொடங்கியது எஸ் பி பி யின் குரல்.  உதயகீதம் (1985) படத்தில் வரும் சங்கீத நேரம் என்ற பாட்டாக இருக்கட்டும், தளபதி (1991) திரைப்படத்தில் வரும் சுந்தரி கண்ணால் ஒரு சேதியாக இருக்கட்டும் மெல்லத் திறந்தது கதவு(1986) இசை எம் எஸ் வி- இளையராஜா) படத்தின் வா வெண்ணிலா வாக இருக்கட்டும்,  இளமை ஊஞ்சலாடுகிறது(1978) திரைப்படத்தின் ஒரே நாள் உனை நான் ஆகட்டும் பாடல்களின் அதியற்புதமான பின்னணி இசையை உன்னதமாக்குவது எஸ்பிபியின் குரலே. சில மேடைக் கச்சேரிகளில் அவர் பாடிய பாடலை வேறு சிலர் பாடும் போது அந்த உயிர்த்தன்மை குறைவதைப் பலமுறை அனுபவித்திருக்கிறோம்.

எஸ்பிபியின் இசைப் பயணத்தின் மூன்றாவது காலகட்டம் தொண்ணூறுகளில் தேவா ஏ.ஆர்.ரஹ்மான், மரகதமணி, வித்யாசாகர் என இளம் இசையமைப்பாளர்களோடு பணியாற்றுவதில் தொடங்குகிறது. சாதி மல்லி பூச்சரமே (அழகன்-1991), மலரே மௌனமா (கர்ணா -1995) நலம் நலமறிய ஆவல் (காதல் கோட்டை -1996) எனப் பல்வேறு இசையமைப்பாளர்களுடன் ஆகச் சிறந்த பாடல்களைத் தந்திருக்கிறார் . குறிப்பாக ஏ.ஆர்.ரஹ்மானின் ஆரம்ப காலப் படங்களில் எஸ் பி பி பாடிய பாடல்கள் அற்புதமானவை. இளையராஜவின் இசைத் துல்லியமும்  எம் எஸ் வி பாணியில் பாடகர்களுக்குக் கூடுதல் சுதந்திரம் அளிக்கும் தன்மையும் கொண்ட பாணியில் அமைந்தவை அவை. காதல் ரோஜாவே (ரோஜா-1992), தொடத் தொட மலர்ந்ததென்ன (இந்திரா-1995) , அழகான ரட்சசியே (முதல்வன்-1999), தங்கத் தாமரை மலரே (மின்சாரக் கனவு-1997), அஞ்சலி அஞ்சலி, என் காதலே என் காதலே ( டூயட்-1994) , பெண்ணல்ல பெண்ணல்ல (உழவன்-1993) என இனிமையும் இளமையும் புதுமையும் நிரம்பி விழியும் பாடல்கள் அவை.

எழுபதுகளில் எம் எஸ் வி யுடனும் எண்பதுகளில் இளையராஜாவின் காலத்திலும் ரஹ்மான் கோலோச்சிய தொண்ணூறுகளிலும் இவர்களோடும் இன்னும் பல இசையமைப்பாளர்களோடும் தொடர்ந்து இயங்கி வந்திருக்கிறார். இன்றைய காலத்தின் அனிருத் வரை.

spb1200-300x167.jpg

 

பாடலுக்கு மூன்று அடிப்படையான விஷயங்கள் ராகம், தாளம் மற்றும் பாவம். இதில் ராகம் என்பது சுருதி மாறாமல் சங்கதிகளை இனிமையாக பாடுவது. இதில் எஸ் பி பி ஒரு மாஸ்டர். முறைப்படி இசை கற்கவில்லை என்றாலும் தன்னுடைய இயல்பான பிறவி ஞானத்தால் பாடல்களை அவை அமைந்திருக்கும் ராகம் மற்றும் சுருதி விலகாமல் பாடக் கூடியவர். ஆரம்பத்தில் இளையராஜாவும் இவரைப் போலவே மேற்கத்திய , கர்னாடக இசை அடிப்படைகளைக் கற்கா விட்டாலும் தான் கேட்கும் இசையை அப்படியே ஆர்மோனியத்தில் வாசிக்கும் ஆற்றல் படைத்திருந்தார். பின்னர் அவர் முறைப்படி இசை கற்றார். அது போன்ற ஒரு ரா டேலண்ட் (Raw talent) ஆக இருந்தவர் எஸ்பிபி தன்னுடைய இசை அறிவின் மூலம் ராகங்களின் அடிப்படையில் அமைந்த பல பாடல்களை ஆகச் சிறப்பாகப் பாடியிருப்பார் . ரீதிக்கௌளையில் தலையைக் குனியும் தாமரையே (ஒரு ஓடை நதியாகிறது-1983) , கல்யாணியில் வந்தாள் மகாலட்சுமியே (உயர்ந்த உள்ளம் -1985), நதியில் ஆடும் பூவனம், மோகனத்தில் பூவில் வண்டு கூடும் ( காதல் ஓவியம்-1982), தர்மவதியில் இளம் சோலை பூத்ததா (உனக்காகவே வாழ்கிறேன்-1986), சிந்துபைரவியில் வளையோசை கலகலகலவென (சத்யா-1988) என ஏராளமான கர்னாடக இசை ராகங்களில் அமைந்த பாடல்களை சிறப்பாகப் பாடியிருப்பார்.

31g48Y5PbL-300x225.jpg

 

அடுத்ததாக பாடலின் ஜீவனாக விளங்கக்கூடியது பாவம். அதுதான் எஸ்பிபியை  கேட்பவர்களிடம் மிகவும் நெருங்க வைக்கிறது. கிண்டல், ஊற்சாகம், காதல், நட்பு, பிரிவு, சோகம் , காமம், விரக்தி என எல்லா உணர்வுகளையும் குரலில அப்படியே கொண்டுவருபவர் அவர். பொன்மானே சங்கீதம் பாடவா எனக் காதலிப்பார் ;  காதல் ரோஜாவே எனப் பிரிவுத்துயரில் ஏங்குவார், அடேய் நண்பா உன்னை வெல்வேன் எனச் சவால் விடுவார்; நான் ஆட்டோக்காரன் என உற்சாகமாகத் துள்ளவும் முடியும். அப்பாடலைக் கேட்பவர்கள் அவர் தங்களுக்காகவே பாடுகிறார் என உணர வைத்தார். அப்பாடல் அவர்களுடைய மனதுக்கு மிகவும் நெருக்கமாகி எஸ்பிபி மானசீகமாகத் தங்கள் தோள் மீது கைபோட்டு, அரவணைத்து, ஆறுதல் கூறுவதாக நினைத்துக் கொள்கிறார்கள். அதுவே அவரது இழப்பினை தங்களது சொந்த சோகமாகக் கருத வைத்தது.

எஸ்பிபி வெறும் திரைப்பாடகர் மட்டும் அல்ல. அவர் ஒரு நிகழ் கலைஞர். பல நூறு மேடைகளிலும் தொலைக்காட்சிகளிலும் நேரடியாக மக்கள் முன் பாடியவர். பலமுறை ஒத்திகை செய்யப்பட்டு திரைப்படத்துக்காகப் பதிவு செய்யும் பாடலை அதே செய் நேர்த்தியுடன் மக்கள்முன் நிகழ்த்திக்காட்டியவர். அப்பாடல்களின் நுட்பங்களை , உணர்வுகளை உணர்த்திச் சிலசமயம் மூலப்பாடலை இன்னமும் மேம்படுத்தியவர். அதுவும் அவரை நமது வரவேற்பறைகளில் நம்மோடு அமர்ந்து இயல்பாகப் பேசிக் கொண்டிருக்கக் கூடிய ஒரு மனிதராக உணரவைத்தது.

அவர் இசையைக் காதலிக்க வந்த கலைஞன். நாமெல்லோரும் அவரைக் காதலிக்க வந்த கலைஞன்.
 

 

https://uyirmmai.com/music/tribute-to-sp-balasubramaniyam/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மறைந்த எஸ்.பி.பி.யின் நினைவாக பாடல்கள் பாடி தீபம் ஏற்றிய பாடகர்கள்

மறைந்த எஸ்.பி.பி.யின் நினைவாக பாடல்கள் பாடி தீபம் ஏற்றிய பாடகர்கள்

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த சில தினங்களுக்கு முன் இறந்து விட்டார். அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்த பின்னணி பாடகர்கள் அவரது நினைவாக மோட்ச தீபம் ஏற்றினர்.

நிகழ்ச்சியில் எஸ்.பி.பாலசுப்பிரமணியின் சகோதரியும், பின்னணி பாடகியுமான எஸ்.பி.சைலஜா, அவரது கணவர் சுபலேகா சுதாகர், பின்னணி பாடகர்கள் மனோ, அனுராதாஸ்ரீராம், நகைச்சுவை நடிகர் மயில்சாமி, கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த், கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் பின்னணி பாடகர்கள், உள்ளூர் இசை கலைஞர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தீபம் ஏற்றும் பாடகர்கள்

தொடர்ந்து பாடகர்கள் எஸ்.பி.சைலஜா, மனோ, அனுராதாஸ்ரீராம் ஆகியோர் பக்தி பாடல்கள் பாடினர். பின்னர் அவர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்

https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/10/10113542/1963461/Singer-special-prayer-for-sp-Balasubramaniam.vpf

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மழைதருமோ மேகம் – டாக்டர் ஜி. ராமானுஜம்

01-2.jpg

எஸ்பிபி : காதலிக்க வந்த கலைஞன் – 3

கடந்த இரண்டு கட்டுரைகளில்,

எம் எஸ் வி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் என மூன்று இசையமைப்பாளர்களின் மூன்று காலகட்டங்களின் பாடல்களைப் பற்றி மட்டுமே  பெரும்பாலும் பார்த்தோம். அவர்களின் இசையமைப்பில், குறிப்பாக முதல் இருவர் இசையில் எஸ் பி பி ஏராளமான பாடல்களைப் பாடியிருக்கிறார். இதே மூன்று காலகட்டத்திலும் அவர்  பிற இசையமைப்பாளர்கள் இசையிலும் பிரமாதமான பல பாடல்களைப் பாடி இருக்கிறார்.

SPB_1200-3-1-300x200.jpg

முதல் காலகட்டத்தை எடுத்துக் கொண்டால் எஸ்பிபி பாடிய முதல் பாடல்களுள் ஒன்றான ‘ஆயிரம் நிலவே வா!’ பாடலே திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன் இசையில் அமைந்த பாடல்தான். அடிமைப் பெண் (1969) திரைப் படத்தில் அமைந்தது. பல பாடகர்களது முதல்பாடலைக் கேட்டால் அவ்வளவு நன்றாக இருக்காது. குரலில் ஒரு குழைவும் முதிர்ச்சியும் இருக்காது. அப்படியே நன்றாக இருந்தாலும் அந்தப்பாடல் அவ்வளவாகக் கேள்விப்பட்டிராத பாடலாக இருக்கும்.

ஆனால்  தமிழில் எஸ் பி பி பாடிய முதல்பாடலே மெக ஹிட்டாக அமைந்தது. அவரது குரல் அந்தப் பாடலிலேயே குழைவு நெளிவுகளுடன் அமைந்திருக்கும். உடன் பாடியது அப்போது உச்சத்தில் இருந்த பி.சுசீலா என்றாலும்’நல்லிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க, நாணமென்ன’ பாவமென்ன என சிருங்கார ரசம் பொங்கக் குழைந்து நெளிந்து பாடியிருப்பார்.

அதே கே.வி. மகாதேவன் இசையில்தான் சங்கராபரணம் (1979) திரைப்படத்துக்காகத் தனது முதல் தேசிய விருதைப் பெற்றார்.  மெல்லிசைப் பாடல்களையே பாடி வந்த எஸ்பிபியைத் துணிச்சலாக கர்னாடக சங்கீதப் பின்புலத்தில் அமைந்த அந்தத் திரைப்படத்தில் பாட வைத்தனர் கே.வி.மகாதேவனும் அவரது உதவியாளர் புகழேந்தியும். தெலுங்கு மொழிப் படம் அதுவும் கர்னாடக இசையை மையமாகக் கொண்டு அமைந்த படப்பாடல்கள் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் ஒலித்தன என்பதை இக்காலத்து மக்களுக்கு நம்பக் கஷ்டமாகத்தான் இருக்கும். இந்த இடத்தில் ஒன்றைச் சொல்லித்தான் ஆகவேண்டும். அந்தத் திரைப்படத்தில் ராகமாலிகையாக அமைந்த ராகம் தானம் பல்லவி, சங்கராபரணம் ராகத்தில் அமைந்த ஓம்கார நாதானு, கல்யாணி ராகத்தில் தொரகுணா இட்டுவண்டி சேவா ஆகிய பாடல்களுடன் புகழ்பெற்ற கர்னாடக சங்கீதக் கீர்த்தனைகளான சாமஜவரகமனா (ஹிந்தோளம்) , ப்ரோச்சேவாரெவருரா (கமாஸ் ராகம்) ஆகிய பாடல்களை அருமையாகப் பாடியிருப்பார். ஆயினும் மெல்லிசைபாணியில் மத்யமாவதி ராகத்தில் அமைந்த சங்கரா என்ற பாடலில்தான் எஸ்பிபியின் குரல் அதிக உயிர்ப்புடன் இருக்கும். இறுக்கமான செவ்வியல் மரபுப் பாடல்களைவிட மெல்லிசையில்தான் தனது முழுத்திறமையையும் உணர்ச்சிகளையும் காட்ட முடிகிறது என உணர்ந்திருப்பார். அதே கே.வி.மகாதேவன் இசையில் தியாகைய்யா (1981) எனத் தியாகய்யரின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றிய படத்திலும் ஏராளமான கர்னாடக இசைப் பாடல்களைப் பாடியிருப்பார். ஆயினும் அதை அவர் முதன்மையாக எடுத்துக் கொள்ளவில்லை. அரிதாகவே அதுபோல் பாடி வந்திருக்கிறார். இசையமைப்பாளர்களும் மெல்லிசைக்கு எஸ்பிபி, செவ்வியல் இசைப்பாடல்களுக்கு ஏசுதாஸ் என்று பிரித்துப் பார்க்கத் தொடங்கினர். அதே கே.வி.மகாதேவன் இசையில் ஏணிப்படிகள்(1979) திரைப்படத்தில் பாடிய பூந்தேனில் கலந்து என்ற பாடல் மிக அருமையான ஒரு பாடல்.

SPB-0188-200x300.jpg
 

எழுபதுகளில் எஸ்பிபியை வைத்து அருமையான பாடல்களைத் தந்த இன்னொரு இசையமைப்பாளர் விஜயபாஸ்கர். கன்னடத்தில் முக்கியமான இசையமைப்பாளராக இருந்தாலும் தமிழிலும் மெல்லிசை பாணியில் எஸ்பிபியை வைத்து நல்ல பாடல்களைத் தந்திருக்கிறார். எங்கம்மா சபதம் (1974)திரைப்படத்தில் வரும் அன்பு மேகமே ஒரு சிறந்தபாடல். வாணி ஜெயராம் உடன் எஸ்பிபி பாடியிருப்பார். தப்புத்தாளங்கள் (1978) திரைப்படத்தில் ஸ்டைலாக ‘என்னடா பொல்லாத வாழ்க்கை!’ என்று பாடியிருப்பார் . விரக்தி கலந்த தத்துவப்பாடலை அலட்சியமாகப் பாடியிருப்பார். ஆடுபுலி ஆட்டம் (1977) திரைப்படத்தில் வானுக்குத் தந்தை எவனோ என்ற பாடலும் ஒரு சிறப்பான பாடல். ஆனால் விஜயபாஸ்கர் இசையமைத்த பாடல்களிலேயே எஸ்பிபியின் மாஸ்டர்பீஸ் திரைப்படம் மயங்குகிறாள் ஒரு மாது (1975) படத்தில் இடம்பெற்ற சம்சாரம் என்பது வீணை என்ற பாடல்தான்.  சந்தோஷம் என்பது ராகம் எனச் சொல்லும் போது மகிழ்ச்சியும் உற்சாகமும் கொப்பளிக்கும் அவரது குரலில். மறக்கமுடியாத பாடல்.

இதே காலகட்டத்தில் மிக முக்கியமான இசையமைப்பாளராக இருந்தவர்கள் சங்கர் கணேஷ். பட்டிக்காட்டு ராஜா (1975) என்ற திரைப்படத்தில் வரும் ‘ உன்னை நான் பார்த்தது வெண்ணிலா’ என்ற பாடல் நல்ல துள்ளலான பாடல்.

தாயில்லாமல் நானில்லை (1978)  திரைப்படத்தில் நடிகனின் காதலி நாடகம் ஏனடி பாடலும் அப்படியே. மனிதன் பாம்பாக மாறும் அல்லது பாம்பு மனிதனாக மாறும் வினோத கதையை வைத்து எடுக்கப் பட்ட படம் நீயா(1978). அந்தப் படத்தில் எஸ்பிபிக்கு நல்ல பாடல்களை அமைத்திருப்பார் சங்கர் கணேஷ். ‘நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா’ இளமைப்கொப்புளிக்கும் ஒரு பாடல். விழிகளில் தாபம் படமெடுத்தாடும் எனப் பாடும்போது நிஜமாகவே குரல் பாம்புபோல் வளைந்து நெளிந்து ஆடும். வாணி ஜெயராமுடன் பாடிய ‘ ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்’ பாட்டு இன்றும் ஜீவனுள்ள பாடல். அரவணைப்பு என்னும் சொல்லே பாம்புகள் பின்னிப் பிணைந்திருப்பதை வைத்து வந்த சொல்தானே. அதுபோல் ஜோடிக்குரல்கள் பின்னிப் பிணைந்திருக்கும் இப்பாடலில். அதே திரைப்படத்தில் அமைந்த  இன்னொரு க்ளாசிக் பாடல் ‘உன்னை எத்தனைமுறை பார்த்தாலும் சலிப்பதில்லை’ என்ற பாடல்.

சங்கர்கணேஷ் இசையில் எண்பதுகளில் ஓ நெஞ்சே நீதான் (டார்லிங் டார்லிங் டார்லிங் 1981)  நான் உன்னை நெனைச்சேன் ( கண்ணில் தெரியும் கதைகள் -1980), அழகிய கொடியே ஆடடி ( தாய் வீடு 1983)  மாசி மாதம்தான் ( ஊர் காவலன்-1987) என நெஞ்சங்களில் நீங்காத பாடல்கள் பலவற்றைப் பாடியிருக்கிறார் எஸ்பிபி. ஆனால் அவரது இசையில் ஆகச் சிறந்த பாடல் என்றால் அது நட்சத்திரம் (1980) திரைப்படத்தில் வரும் அவள் ஒரு மேனகை பாடல்தான். சிவரஞ்சனி  என்னும் தெலுங்குத் திரைப்படத்தில் வேறு ஒரு இசையமைப்பாளர் போட்ட டயூன்தான் என்றாலும் அதைத் தமிழில் அழகாகக் கொண்டுவந்திருப்பார். எஸ்பிபி பாடிய மிகச் சிறந்த பாடல்களில் ஒன்று. சிவரஞ்சனி, பிலஹரி, சரஸ்வதி, கல்யாணி என அமைந்த ராகமாலிகை பாடல் அது.  சிவரஞ்சனி ……என உச்சஸ்தாயியில் எடுப்பார். அடுத்த வருடம் ஏக் து ஜே கேலியே திரைப்படத்தில் ‘தேரே மேரே பீச் மே’ என சிவரஞ்சனி ராகத்தில் ஹிந்தியில் பாடி இரண்டாவது தேசிய விருது வாங்குவதற்கான பயிற்சியாக அப்பாடல் அமைந்தது.

விஜயபாஸ்கர் போன்று கன்னடத்தில் புகழ்பெற்ற இன்னொரு இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ்.  கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாருக்கு ஏராளமான பாடல்களை இசையமைத்தவர். இளையராஜா ஆரம்பத்தில் இவரிடம்தாம் உதவியாளராக இருந்தார். இவரது இசையில் பொண்ணுக்குத் தங்க மனசு (1973) என்னும் திரைப்படத்தில் ‘ தேன் சிந்துதே வானம்’ என்ற அருமையான பாடலை எஸ்பிபி  பாடியிருப்பார்.

SPB1200_9_instagram-300x200.jpg
 

மலையாளத்தில் முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவர் ஷ்யாம் .  ந்யூ  டெல்லி, சி.பி.ஐ டைரிக் குறிப்பு போன்று மலையாளத் திரைப்படங்களின் வீச்சை வெளிப்படுத்திய திரைப்படங்களின் இசையமைப்பாளர். அவர் எஸ்பிபிக்கு மிகப் பிரமாதமான ஒரு பாடலைத் தமிழில் தந்திருக்கிறார்.

மனிதரில் இத்தனை நிறங்களா(1980) என்ற திரைப்படத்தில் அமைந்த மழை தருமோ என் மேகம் என்ற பாடல்தான் அது.. இனிமையும் நெகிழ்வும் ததும்பி வழியும் பாடல் அது.எஸ்பிபியைத் தவிர வேறு யார் குரலிலும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.

இன்னும் எண்பதுகள், தொண்ணூறுகளில் பல இசையமைப்பாளர்களின் மெகா ஹிட் பாடல்களுக்குக் குரல் கொடுத்தவர் எஸ்பிபி..

அது அடுத்த கட்டுரையில்…
 

 

https://uyirmmai.com/news/cinema/a-tribute-to-sp-balasubramaniyam/

Link to comment
Share on other sites

  • 5 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பகுதி - 4 ஐக் காணவில்லை.

 

டி.ராஜேந்தரும் எஸ்.பி.பியும் -டாக்டர். ஜி.ராமானுஜம்

124822953_1011267616016596_4842354014621

எஸ்பிபி- காதலிக்க வந்த கலைஞன் -5

 

spacer.png

கடந்த கட்டுரையில் எண்பதுகள் எழுபதுகளில் பிற இசையமைப்பாளர்கள் இசையில் எஸ்பிபி பாடிய பாடல்களைப் பற்றிப் பார்த்தோம். இடமின்மை காரணமாக ஒரு முக்கியமான பாடலைப் பற்றிப் பார்க்கவில்லை. முதன்முதலில் அந்தப் பாடலை நான் கேட்டது இருபது வருடங்களுக்கு முன்பு இருக்கும். மதுவந்தி என்ற ஒரு ராகம் பற்றி படித்த ஒரு தகவலில் இந்தப் பாடல் மதுவந்தி ராகத்தில் அமைந்த அருமையான பாடல் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஹிந்துஸ்தானி ராகமான இது சிறு மாறுதல்களுடன் கர்னாடக இசையில் தர்மவதி என இந்த அழைக்கப்படுகிறது. அப்போது இணையம், யூட்யூபெல்லாம் ரொம்ப பிரபலம் கிடையாது. பல ஆடியோ சி.டி கடைகளில் ஏறி இறங்கி ஒரு சி.டி கடையில் எஸ்பிபி ஹிட்ஸ் என்ற ஒரு சி.டியில் இப்பாடல் இடம்பெற்றிருந்தது. அதைக் கேட்ட போது ஒரு போதை போல மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டியது. அந்தப் படத்தின் பெயரும் அப்பாடலின் முதல் வரிதான். அது நந்தா என் நிலா (1977) படத்தில் அமைந்த ‘நந்தா நீ என் நிலா’ என்ற பாடல் . பாடலின் இசையமைப்பாளர் தட்சிணாமூர்த்தி. மலையாளத்தின் முக்கிய இசையமைப்பாளர்களுள் ஒருவர். சுவாமி என மரியாதையாக அழைக்கப்படுபவர்.

நந்தா நீ என் நிலா பாடல் கஜல் பாணியில் அமைந்திருக்கும். நீளமான பல்லவி. பாம்பு போல் வளைந்து நெளியும். எனக்குத் தெரிந்து சரணத்தை விடப் பெரிய பல்லவி இருப்பது இப்பாடலில்தான். அக்காலத்தில் அவ்வளவு பிரபலமாக இல்லாமல் வெகுசிலரால் மட்டுமே சிலாகிக்கப் பட்டுவந்த இப்பாடல் இப்போது சமூக ஊடகங்கள், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகள் மூலம் மிகப் புகழ்பெற்றிருக்கிறது. பிற்காலத்தில் இதே ராகத்தில் இளம்சோலை பூத்ததா , மீண்டும் மீண்டும் வா எனப் புகழ்பெற்ற பாடல்களை எஸ்பிபி பாடுவதற்கு அச்சாரமாக இப்பாடல் அமைந்திருந்தது. வேறு பாடகர்களால் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குச் சங்கதிகளும் உணர்ச்சி பாவமும் பின்னிப் பிணைந்திருக்கும். /விழி …மீனாடும் விழி/ மொழி தேனாடும் மொழி/ குழல் பூவாடும் குழல்/எழில் நீயாடும் எழில்/ எனத் தமிழ் வார்த்தைகளும் துள்ளி விளையாடும். பாடலை எழுதியவர் பழனிச்சாமி. எஸ்பிபி மிகத்தெளிவாக அவற்றை உச்சரித்திருப்பார். தமிழ்ப்பாடல்களில் எஸ்பிபியின் மிகச்சிறந்த பாடல்கள் பட்டியலில் கட்டாயம் இடம்பெறும் இப்பாடல்.

spacer.png

1980 இல் புயலாக நுழைந்தார் அந்த இசையமைப்பாளர். இசையமைப்பாளர் மட்டுமல்ல பாடலாசிரியர், இயக்குநர், நடிகரும் கூட. அஷ்டாவதானி எனச் சொன்னால் அக்காலத்தில் பானுமதி நினைவுக்கு வருவார். இவர்காலத்தில் இவர்தான். அவர்தான் டி.ராஜேந்தர். இக்காலத்து மக்களுக்கு டீ.ஆர் என்றால் டண்டண்டணக்கா போன்ற பாடல்கள்தான் நினைவுக்கு வரும்.ஆனால் ஒருகாலத்தில் அபாரமான சில பாடல்களைத் தந்தவர் அவர். அதில் எஸ்பிபியின் பங்கு மிக மிக அதிகம்.

1980இல் வெளிவந்த ஒரு தலை ராகம் திரைப்படம் ஒரு ட்ரெண்ட் செட்டராக இருந்தது. அப்படத்தில் இரண்டு அருமையான பாடல்களை எஸ்பிபி பாடியிருப்பார். காபி ராகத்தில் அமைந்த’ இது குழந்தை பாடும் தாலாட்டு’ என்னும் பாடல் அமர்க்களமாக இருக்கும். தாலாட்டு என்று எஸ்பிபி உச்சரிப்பதைக் கேளுங்கள். என்ன ஒரு இனிமை!! மெல்லிய சோகத்தை , பிரிவின் துயரைத் தன் குரல்களில் தோய்த்து இப்பாடலுக்கு உயிரூட்டி இருப்பார் எஸ்பிபி. சித்தார் ,தபேலா என இரண்டே கருவிகளை வைத்து பின்னணி அமைக்கப் பட்டிருக்கும்.

இதற்கு நேர்மாறாக துள்ளலான ஒரு பாடல் ‘ வாசமில்லா மலரிது’ என்ற பாடல். மேடைக் கச்சேரிகளில் அந்நாட்களில் மைக்குக்கு அடுத்துத் தவறாமல் இடம்பெறக் கூடியது இப்பாடல். படத்திலும் மேடைக் கச்சேரி பாடலாக அந்தக் கால ஸ்டெப் கட்டிங்க் முடியுடன் பெல்பாட்டம் உடையுடன் சங்கர் பாடுவார். வாசமில்லா மலரிது என ஒரு சிரிப்பு சிரிப்பார் எஸ்பிபி. இளமையும் கிண்டலும் கேலியும் கலந்து பாடலை உற்சாகமாகப் பாடியிருப்பார். இது குழந்தை பாடும் தாலாட்டு சிதார், தபேலா என்றால் இதில் கித்தாரும் ட்ரம்ஸும் அதிரும்.

தொடர்ந்து டி.ராஜேந்தருக்கு ஏராளமான நல்ல பாடல்கள் பாடியிருக்கிறார். வசந்தம் பாடி வர (ரயில் பயணங்களில் 1981), தஞ்சாவூரு மேளம் ( தங்கைக்கோர் கீதம் 1983) , இந்திர லோகத்து சுந்தரி ( உயிருள்ளவரை உஷா 1983) போன்ற நல்ல பாடல்கள் இருந்தாலும் அவற்றை விடவும் மிகச் சிறப்பான சில பாடல்களையும் பாடியிருக்கிறார். அவற்றுள் ஒன்று ராகம் தேடும் பல்லவி (1982) திரைப்படத்தில் வரும் ‘மூங்கிலிலே பாட்டிசைக்கும்’ என்னும் பாடல் . நிதானமான மெட்டு..எஸ்பிபியின் குரல் வளத்தையும் ஜாலத்தையும் முதலீடாக வைத்து அமைத்த பாடல் . பாடல் முழுதும் சுகமாக வருடும் ஹா ஹா ஹோ ஹோ என எஸ்பிபியின் தென்றல் குரல்.  ‘நீரலைப் போலவே நீல விழிக் கோலங்கள் நெஞ்சை நீராட்டவே நெருடித் தாலாட்டவே என் கற்பனைக்கு விதை தூவினாள்’ போன்ற வரிகளை குழைந்து நெளிந்து இழைந்து இழைந்து நெய்திருப்பார்.

பூக்களைப் பறிக்காதீர்கள் (1986) என்ற திரைப்படம். டி.ஆர் இசை மட்டும் அமைத்தது. அதில் ஒரு பாடல் ‘ மாலை நம்மை வாட்டுது’ . மெல்லிய விரகதாபம் ததும்பும் குரலில் இப்பாடலைப் பாடியிருப்பார் எஸ்பிபி.

டி.ராஜேந்தர் இசையமைத்த திரைப்படங்களிலேயே எஸ்பிபி பாடிய பாடல்களிலேயே ஆகச்சிறந்த பாடல்களில் இரண்டு மைதிலி  என்னை காதலி (1986)  திரைப்படத்தில் அமைந்தவை.

 முதலாவது பாடல் அதிகாலை நேரத்தில் பாடும் பூபாள ராகத்திற்கு மிகவும் நெருங்கிய சொந்தமான பௌளி என்ற ராகத்தில் அமைந்த பாடல். மிக அரிதாகவே திரை இசையில் பாடப்படும் ராகம். ஏற்கனவே சங்கராபரணம் (1979) திரைப்படத்தில் அதிகாலை சாதகம் செய்யும் பாடலாக ஜானகியுடன் சேர்ந்து இந்த ராகத்தில் ஸ்வரங்களைப் பாடிப் பிரமாதப் படுத்தி இருப்பார் எஸ்பிபி. அந்த  அனுபவத்தில் மிகப் பிரமாதமாக பாடி சிறப்பித்த ஒரு பாடல் ‘ஒரு பொன் மானை நான் காண’  என்ற பாடல். பாடலில் தொடக்கத்தில் வரும் ஆலாபனையில் இந்த ராகத்தை அதிகாலை நேரத்து அழகாக அற்புதமாக பாடி இருப்பார் .’சந்தன கிண்ணத்தில் குங்கும சங்கமம் அரங்கேற அதுதானே உன் கன்னம்// மேகத்தை அழைத்திட வானத்தில் சுயம்வரம் நடத்திடும் வானவில் உன் வண்ணம்// என்பது போன்ற வரிகளை அனுபவித்துப் பாடியிருப்பார்.

spacer.png

 

அதே திரைப்படத்தின் இன்னொரு புகழ்பெற்ற பாடல் நானும் உந்தன் உறவை என்ற பாடல்.  சோகத்தை பிழிந்து தரக்கூடிய சிவரஞ்சனி ராகத்தில் அமைந்த பாடல் இது பொன்மானை நான் காண பாட்டை போலவே ஆலாபனை சுரங்கள் என இந்தப் பாடலிலும் ஒரு மினி இசை கச்சேரியை அடித்திருப்பார் எஸ்பிபி.

 இந்த இடத்தில் ஒன்றைக் குறிப்பிட வேண்டும் பிற இசையமைப்பாளர்களை விட டி ராஜேந்தர் பாடல்களுக்கு  எஸ்பிபி பாடியதைப் பற்றி அதிகமாக கூறியதுபோல் சிலருக்கு தோன்றலாம். அதற்கு ஒரு  காரணம் இருக்கிறது. டி ராஜேந்தர் அமைத்த பாடல்களைப் பற்றி மிகவும் உண்மையாகவும் நேர்மையாகவும் சொல்ல வேண்டுமென்றால் பாடல்களில் நன்கு இசை அமைத்திருந்தாலும்  சில இடங்களில் வரிகளில் மெட்டுக்கள்  இல்லாமல் வெறும் வசனம் வாசிப்பது போல் தோன்றும். பிரமாதமான பாடல் வரிகளாக இருந்தாலும் எஸ்பிபி அவற்றுக்கு உயிர் கொடுக்காமல் இருந்திருந்தால் அவை  முழுமை அடைந்து இருக்காது. இப்பாடல்களைப் பிறர் பாடும்போது வசனத்தை அல்லது ஒரு கவிதையை வாசிப்பது போல்தான் இருக்கும். அவற்றைத் தன் குரல் வளத்தால் பிரமாதமான பாடல்களாக்கியவர் எஸ்பிபி.

 

https://uyirmmai.com/music/spb-songs-in-t-rajendar-music/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.