Jump to content

இறுதிச் சடங்கில் ஊடகங்களுக்கு என்ன வேலை? கேவலமான பிழைப்பு !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

லண்டன் சந்திப்புகளுக்கு நான் வந்துள்ளேன். கலந்துகொள்ளவில்லை🤣

"ஒளிச்சு நின்று பார்த்தனான்" என்று கதை சொல்ல போறீங்களோ 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

தனி மடல்லை போட்டுவிடுங்கோ பிரிண்ட் பண்ணி  அழகு பாப்பம்...😎

சுவரில மாட்டாதவரை ஓகே🤣

2 minutes ago, ரதி said:

"ஒளிச்சு நின்று பார்த்தனான்" என்று கதை சொல்ல போறீங்களோ 😉

கணா ரெஸ்டூரண்ட் என்ன MI5 தலமையகமா ஒளிச்சு நிண்டு பார்க்க🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

சுவரில மாட்டாதவரை ஓகே🤣

கணா ரெஸ்டூரண்ட் என்ன MI5 தலமையகமா ஒளிச்சு நிண்டு பார்க்க🤣

கிருபன், நான் உங்களுக்கு சொன்னனான் எல்லோ அங்கால  பக்கமிருந்து கண்ணாடி போட்ட ,கொஞ்ச்ம மொட்டையான ஒரு நடுத்தர வயசு ஆள் அடிக்கடி  எட்டிப் பார்க்கிறார் என்று ...இவர் தான் ஆள்🤣 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

கிருபன், நான் உங்களுக்கு சொன்னனான் எல்லோ அங்கால  பக்கமிருந்து கண்ணாடி போட்ட ,கொஞ்ச்ம மொட்டையான ஒரு நடுத்தர வயசு ஆள் அடிக்கடி  எட்டிப் பார்க்கிறார் என்று ...இவர் தான் ஆள்🤣 

🤣 பார்க்க இளமைக்கால செந்தில் போல இருந்திருப்பாரே?

large.8DCC58D8-B43B-40F4-A013-64CF2CC4AB4F.jpeg.95dee15b73418f1efa23771e5453e0aa.jpeg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

கிருபன், நான் உங்களுக்கு சொன்னனான் எல்லோ அங்கால  பக்கமிருந்து கண்ணாடி போட்ட ,கொஞ்ச்ம மொட்டையான ஒரு நடுத்தர வயசு ஆள் அடிக்கடி  எட்டிப் பார்க்கிறார் என்று ...இவர் தான் ஆள்🤣 

தல... என்னையா இது......

இந்த லெவலில 80’s kid எண்டது கன்போம்ட் தான் போலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Nathamuni said:

தல... என்னையா இது......

இந்த லெவலில 80’s kid எண்டது கன்போம்ட் தான் போலை.

 

81 ஏ எல் எண்டா 70s kid ஐயா

மேல நானும் குசா அண்ணையும் நிக்கிற போட்டோ போட்டிருக்கு பாருங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, nilmini said:

82 A/L Holy Family Convent. நடிகை ராதிகா ரெண்டு class எங்களுக்கு மேல. நெடுகளும்  young  ஆக இருக்கமுடியாதுதானே? ஓமோம் 74' களில் இருந்து போனேன். சுவாமி ப்ரேமாத்மானந்தஜி தான் அப்போதைய சுவாமி. கணபதிப்பிள்ளை டீச்சர் , மலர் டீச்சர் , தேவகி டீச்சர் எல்லோரும்தான் எங்களுக்கு படிப்பிப்பது . 
அங்கயும் கலர் பார்த்தீர்களா? நாங்கள் கோயிலில் தான் பார்த்தோம். சிவராத்திரிக்கு மிஷன் போய் பஜனை பாடப்போகிறோம் என்று சொல்லிவிட்டு சும்மா தலையை காட்டிட்டு நேரா கோயிலுக்கு போய்விடுவோம். அதெலாம் ஒரு காலம். 

ராத்திக்காவோடை இப்பவும் பழக்கமிருக்கா நில்மினி?படிப்பிலை எப்பிடி கெட்டிக்காரியோ? 😁
அது சரி எல்லாம் கிடக்கட்டும் அங்கை படிச்ச தாரகாவை தெரியுமோ? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

ராத்திக்காவோடை இப்பவும் பழக்கமிருக்கா நில்மினி?படிப்பிலை எப்பிடி கெட்டிக்காரியோ? 😁
அது சரி எல்லாம் கிடக்கட்டும் அங்கை படிச்ச தாரகாவை தெரியுமோ? 😎

நான் அந்தப்பள்ளிக்கூடத்தில் சேர்ந்து 2 வருடத்தில் ராதிகா  முடித்து போய்விட்டா. அத்துடன் சிங்கள மீடியத்தில் தான் படித்தவை என்று நினைக்கிறன். ஆனால் அங்கேயே படித்த எனது மற்ற நண்பிகளுடன் எங்கேயாவது சந்தித்தால் நன்றாக கதைப்பா. எமது குடும்பம் அப்பாவின் வேலை இடமாறல்  காரணமாக நுவரெலியா, ஹட்டன், மாத்தளை, கண்டி என்று மாறி மாறி இருந்து கடைசியில் கொழும்புக்கு வந்தோம். அங்கேயும் வீட்டுக்கு கிட்ட உள்ள  St. Lawrence school (SLC) பள்ளிக்கூடத்தில்தான் 10ஆம் வகுப்புவரை படித்து (அது ஒரு சிறிய வெள்ளைக்கார ரோமன் கத்தோலிக்க 10 ஆம் வகுப்பு வரை  மட்டுமே உள்ள மும்மொழி பள்ளிக்கூடம்). அதன் பிறகுதான் இந்த பள்ளிக்கூடத்தில் படித்தேன். ஆனால் டியூஷன் வகுப்பில் எல்லா பள்ளிக்கூட மாணவ மாணவிகளும் ஒன்றாக படித்ததால் நிறைய பேரை பழக்கம். இதன் நடுவில் அம்மம்மா தன்னுடன் வந்து இருந்து வேம்படியில் படிக்கும்படி கேட்டு ஒரு வருடம் (5ஆம் ஆண்டு) படித்தேன். அம்மா அப்பாவை விட்டிட்டு இருக்கமுடியாமல் திரும்ப போய்விட்டேன். தாரகாவை தெரியவில்லை அண்ணா. எந்த A/L batch ? நாங்கள் வெள்ளவத்தையில் இருந்தபடியால் HFC இல் படித்த, எனக்கும் பார்க்க வயது கூடிய குறைந்த நிறைய பேருடன்  இப்பவும் தொடர்பு இருக்கு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nilmini said:

நான் அந்தப்பள்ளிக்கூடத்தில் சேர்ந்து 2 வருடத்தில் ராதிகா  முடித்து போய்விட்டா. அத்துடன் சிங்கள மீடியத்தில் தான் படித்தவை என்று நினைக்கிறன். ஆனால் அங்கேயே படித்த எனது மற்ற நண்பிகளுடன் எங்கேயாவது சந்தித்தால் நன்றாக கதைப்பா. எமது குடும்பம் அப்பாவின் வேலை இடமாறல்  காரணமாக நுவரெலியா, ஹட்டன், மாத்தளை, கண்டி என்று மாறி மாறி இருந்து கடைசியில் கொழும்புக்கு வந்தோம். அங்கேயும் வீட்டுக்கு கிட்ட உள்ள  St. Lawrence school (SLC) பள்ளிக்கூடத்தில்தான் 10ஆம் வகுப்புவரை படித்து (அது ஒரு சிறிய வெள்ளைக்கார ரோமன் கத்தோலிக்க 10 ஆம் வகுப்பு வரை  மட்டுமே உள்ள மும்மொழி பள்ளிக்கூடம்). அதன் பிறகுதான் இந்த பள்ளிக்கூடத்தில் படித்தேன். ஆனால் டியூஷன் வகுப்பில் எல்லா பள்ளிக்கூட மாணவ மாணவிகளும் ஒன்றாக படித்ததால் நிறைய பேரை பழக்கம். இதன் நடுவில் அம்மம்மா தன்னுடன் வந்து இருந்து வேம்படியில் படிக்கும்படி கேட்டு ஒரு வருடம் (5ஆம் ஆண்டு) படித்தேன். அம்மா அப்பாவை விட்டிட்டு இருக்கமுடியாமல் திரும்ப போய்விட்டேன். தாரகாவை தெரியவில்லை அண்ணா. எந்த A/L batch ? நாங்கள் வெள்ளவத்தையில் இருந்தபடியால் HFC இல் படித்த, எனக்கும் பார்க்க வயது கூடிய குறைந்த நிறைய பேருடன்  இப்பவும் தொடர்பு இருக்கு. 

நீங்கள் போகாத நாடுமில்லை.போகாத ஊருமில்லை.போகாத பள்ளிக்கூடமுமில்லை.தெரியாத ஆக்களுமில்லை.
சகலகலாவல்லி 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

நீங்கள் போகாத நாடுமில்லை.போகாத ஊருமில்லை.போகாத பள்ளிக்கூடமுமில்லை.தெரியாத ஆக்களுமில்லை.
சகலகலாவல்லி 😁

எல்லாம் ஒவ்வொருவரின் பலன்தான். அப்பாவுக்கு சுற்றுலா அதிகம் விருப்பம் இருந்ததால் இலங்கை முழுவதும் சுத்தி திரிந்தோம். பாடசாலை அதிபர் என்பதால் ரயில், பிளேன் வாரெண்டும் இருந்தது. இலங்கையில் சுற்றி திரிந்தது பத்தாது என்று படிக்க மட்ராஸ், சிதம்பரம் என்று போய் கிடைத்த லீவில் எல்லாம் (அப்போது பரீட்சையில் சித்தியடையாதரவர்களுக்கு  செப்டம்பர் மாதத்தில் மீள் பரீட்சை வைப்பார்கள். அந்த நாட்களில்  விடுதியில் சத்தம் போடாமல் ரெண்டு கிழமை இருக்கமுடியாத காரணத்தால்) நண்பிகள் எல்லோரும் சேர்ந்து எனது மாமாவுடன் அல்லது வேறு யாரவது பெரியவர்களின் துணையுடன் இந்தியா முழுவதும்  சுற்றுலா  போனோம். படிப்பு முடிந்து மாலைதீவில் 5 வருடம் வேலை செய்து, நியூசிலாந்தில் 5 வருடம், கனடாவில் ஒரு வருடம் , பிறகு இந்த ஊரில்தான் வாசம். லீமுர் (Lemur) என்ற ஒருவைகயான மிருகங்களை பற்றி படிப்பதற்காக மடகாஸ்க்கார்  தீவுக்கும் போயிருந்தேன். இளைய மகனுக்கு உங்கள் ஊர் விருப்பம் என்பதால் அங்கும் வந்து நானும் மகனும் ஒரு கார் ரெண்ட் பண்ணி பல இடங்களையும் பார்த்தோம். வயது போன காலத்தில் இலங்கை இந்தியாவை தவிர எங்கும் போக விருப்பம் இல்லை. இப்பவே அநேகமாக எனக்கு விருப்பமான இடங்களை பார்த்தாச்சு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, nilmini said:

எல்லாம் ஒவ்வொருவரின் பலன்தான். அப்பாவுக்கு சுற்றுலா அதிகம் விருப்பம் இருந்ததால் இலங்கை முழுவதும் சுத்தி திரிந்தோம். பாடசாலை அதிபர் என்பதால் ரயில், பிளேன் வாரெண்டும் இருந்தது. இலங்கையில் சுற்றி திரிந்தது பத்தாது என்று படிக்கச மட்ராஸ், சிதம்பரம் என்று போய் கிடைத்த லீவில் எல்லாம் (அப்போது பரீட்சையில் சித்தியடையாதரவர்களுக்கு  செப்டம்பர் மாதத்தில் மீள் பரீட்சை வைப்பார்கள். அந்த நாட்களில்  விடுதியில் சத்தம் போடாமல் ரெண்டு கிழமை இருக்கமுடியாத காரணத்தால்) நண்பிகள் எல்லோரும் சேர்ந்து எனது மாமாவுடன் அல்லது வேறு யாரவது பெரியவர்களின் துணையுடன் இந்தியா முழுவதும்  சுற்றுலா  போனோம். படிப்பு முடிந்து மாலைதீவில் 5 வருடம் வேலை செய்து, நியூசிலாந்தில் 5 வருடம், கனடாவில் ஒரு வருடம் , பிறகு இந்த ஊரில்தான் வாசம். லீமுர் (Lemur) என்ற ஒருவைகயான மிருகங்களை பற்றி படிப்பதற்காக மடகாஸ்க்கார்  தீவுக்கும் போயிருந்தேன். இளைய மகனுக்கு உங்கள் ஊர் விருப்பம் என்பதால் அங்கும் வந்து நானும் மகனும் ஒரு கார் ரெண்ட் பண்ணி பல இடங்களையும் பார்த்தோம். வயது போன காலத்தில் இலங்கை இந்தியாவை தவிர எங்கும் போக விருப்பம் இல்லை. இப்பவே அநேகமாக எனக்கு விருப்பமான இடங்களை பார்த்தாச்சு. 

Few Chiraaku Dobbe Problems & Situations Every Guy With A Hair fall Problem  Goes Through | Wirally

😂🤣😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

Few Chiraaku Dobbe Problems & Situations Every Guy With A Hair fall Problem  Goes Through | Wirally

😂🤣😀

🤣😂

மெக்ஸிகோ சென்று மாயன் அஸ்டெக் குகைகள் என்று அவற்றையும் பார்த்தாச்சு. சிறு சிறு மாயன் கிராமங்களுக்கு சென்று அவர்களின் சமையல் உபசரிப்புகளையும் அவதானித்தபோது இந்தியா இலங்கை கலாச்சாரத்துடன் ஒப்பிடும்படியாக இருந்தது. Madagascar உம்  தான். நிறய ஒற்றுமை இருக்கு . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ரதி said:

கிருபன், நான் உங்களுக்கு சொன்னனான் எல்லோ அங்கால  பக்கமிருந்து கண்ணாடி போட்ட ,கொஞ்ச்ம மொட்டையான ஒரு நடுத்தர வயசு ஆள் அடிக்கடி  எட்டிப் பார்க்கிறார் என்று ...இவர் தான் ஆள்🤣 

அப்படியா! நான் அன்று வந்தவர்களில் எவரையும் கவனிக்கவில்லை, உங்களைத் தவிர😜

Link to comment
Share on other sites

2 hours ago, nilmini said:

 லீமுர் (Lemur) என்ற ஒருவைகயான மிருகங்களை பற்றி படிப்பதற்காக மடகாஸ்க்கார்  தீவுக்கும் போயிருந்தேன்.

நேரம் கிடைக்கும் போது முடிந்தால் இந்த விலங்கைப் பற்றி கொஞ்சம் எழுத முடிந்தால் நல்லம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nilmini said:

எல்லாம் ஒவ்வொருவரின் பலன்தான். அப்பாவுக்கு சுற்றுலா அதிகம் விருப்பம் இருந்ததால் இலங்கை முழுவதும் சுத்தி திரிந்தோம். பாடசாலை அதிபர் என்பதால் ரயில், பிளேன் வாரெண்டும் இருந்தது. இலங்கையில் சுற்றி திரிந்தது பத்தாது என்று படிக்க மட்ராஸ், சிதம்பரம் என்று போய் கிடைத்த லீவில் எல்லாம் (அப்போது பரீட்சையில் சித்தியடையாதரவர்களுக்கு  செப்டம்பர் மாதத்தில் மீள் பரீட்சை வைப்பார்கள். அந்த நாட்களில்  விடுதியில் சத்தம் போடாமல் ரெண்டு கிழமை இருக்கமுடியாத காரணத்தால்) நண்பிகள் எல்லோரும் சேர்ந்து எனது மாமாவுடன் அல்லது வேறு யாரவது பெரியவர்களின் துணையுடன் இந்தியா முழுவதும்  சுற்றுலா  போனோம். படிப்பு முடிந்து மாலைதீவில் 5 வருடம் வேலை செய்து, நியூசிலாந்தில் 5 வருடம், கனடாவில் ஒரு வருடம் , பிறகு இந்த ஊரில்தான் வாசம். லீமுர் (Lemur) என்ற ஒருவைகயான மிருகங்களை பற்றி படிப்பதற்காக மடகாஸ்க்கார்  தீவுக்கும் போயிருந்தேன். இளைய மகனுக்கு உங்கள் ஊர் விருப்பம் என்பதால் அங்கும் வந்து நானும் மகனும் ஒரு கார் ரெண்ட் பண்ணி பல இடங்களையும் பார்த்தோம். வயது போன காலத்தில் இலங்கை இந்தியாவை தவிர எங்கும் போக விருப்பம் இல்லை. இப்பவே அநேகமாக எனக்கு விருப்பமான இடங்களை பார்த்தாச்சு. 

எனக்கும் உலகம் பூரா சுத்தோணும் என்று ஆசை...துட்டு தான் இல்லை அத்தோடு கொடுப்பினையும் இல்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nilmini said:

எல்லாம் ஒவ்வொருவரின் பலன்தான். அப்பாவுக்கு சுற்றுலா அதிகம் விருப்பம் இருந்ததால் இலங்கை முழுவதும் சுத்தி திரிந்தோம். பாடசாலை அதிபர் என்பதால் ரயில், பிளேன் வாரெண்டும் இருந்தது. இலங்கையில் சுற்றி திரிந்தது பத்தாது என்று படிக்க மட்ராஸ், சிதம்பரம் என்று போய் கிடைத்த லீவில் எல்லாம் (அப்போது பரீட்சையில் சித்தியடையாதரவர்களுக்கு  செப்டம்பர் மாதத்தில் மீள் பரீட்சை வைப்பார்கள். அந்த நாட்களில்  விடுதியில் சத்தம் போடாமல் ரெண்டு கிழமை இருக்கமுடியாத காரணத்தால்) நண்பிகள் எல்லோரும் சேர்ந்து எனது மாமாவுடன் அல்லது வேறு யாரவது பெரியவர்களின் துணையுடன் இந்தியா முழுவதும்  சுற்றுலா  போனோம். படிப்பு முடிந்து மாலைதீவில் 5 வருடம் வேலை செய்து, நியூசிலாந்தில் 5 வருடம், கனடாவில் ஒரு வருடம் , பிறகு இந்த ஊரில்தான் வாசம். லீமுர் (Lemur) என்ற ஒருவைகயான மிருகங்களை பற்றி படிப்பதற்காக மடகாஸ்க்கார்  தீவுக்கும் போயிருந்தேன். இளைய மகனுக்கு உங்கள் ஊர் விருப்பம் என்பதால் அங்கும் வந்து நானும் மகனும் ஒரு கார் ரெண்ட் பண்ணி பல இடங்களையும் பார்த்தோம். வயது போன காலத்தில் இலங்கை இந்தியாவை தவிர எங்கும் போக விருப்பம் இல்லை. இப்பவே அநேகமாக எனக்கு விருப்பமான இடங்களை பார்த்தாச்சு. 

மனுசர் கொலிடேயள கான்சல் பண்ணி, இன்சூரண்ஸ் காரருடன் இழுபட்டு கொண்டிருக்கும் காலத்தில் கடுப்பை கிளப்புறா மை லார்ட்🤣

1 hour ago, நிழலி said:

நேரம் கிடைக்கும் போது முடிந்தால் இந்த விலங்கைப் பற்றி கொஞ்சம் எழுத முடிந்தால் நல்லம்

என்ன குழம்போ பிரட்டலோ நல்லா இருக்கும் என்ற விபரம்தானே🤣

 

4 hours ago, nilmini said:

🤣😂

மெக்ஸிகோ சென்று மாயன் அஸ்டெக் குகைகள் என்று அவற்றையும் பார்த்தாச்சு. சிறு சிறு மாயன் கிராமங்களுக்கு சென்று அவர்களின் சமையல் உபசரிப்புகளையும் அவதானித்தபோது இந்தியா இலங்கை கலாச்சாரத்துடன் ஒப்பிடும்படியாக இருந்தது. Madagascar உம்  தான். நிறய ஒற்றுமை இருக்கு . 

இத நோட் பண்றம் - நேரா யூடியூப் போய் ஒரு ஆராய்சி வீடியோ போடுறம்.

மாயன் எனும் மாயோன் - மறத் தமிழரின் மறு பக்கம்🤣

3 hours ago, கிருபன் said:

அப்படியா! நான் அன்று வந்தவர்களில் எவரையும் கவனிக்கவில்லை, உங்களைத் தவிர😜

அக்காச்சி 🤣🤣🤣 நீங்க என்னை கலாய்க நினைக்கப்போய்.....🤣

1 hour ago, ரதி said:

எனக்கும் உலகம் பூரா சுத்தோணும் என்று ஆசை...துட்டு தான் இல்லை அத்தோடு கொடுப்பினையும் இல்லை 

கொடுப்பினையை பற்றி தெரியாது ஆனால் யூகேயில் இருந்து ஐரோப்பாவை குறைந்த செலவில் சுற்றலாம். ஒழுங்காக திட்டமிட்டால். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நிழலி said:

நேரம் கிடைக்கும் போது முடிந்தால் இந்த விலங்கைப் பற்றி கொஞ்சம் எழுத முடிந்தால் நல்லம்

நல்ல ஒரு அனுபவம் நிறைந்த பயணம். லெமூர் மிருகங்களை தேடி 2 கிழமையாக காடு  மேடு எல்லாம் திரிந்தோம். படமெல்லாம் எடுத்து வச்சிருக்கிறேன். பதிவிடுகிறேன் நிழலி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

எனக்கும் உலகம் பூரா சுத்தோணும் என்று ஆசை...துட்டு தான் இல்லை அத்தோடு கொடுப்பினையும் இல்லை 

உங்களிடம் துட்டு இல்லாவிட்டால் என்ன வாறவர் துட்டு வைத்திருப்பாரில்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நில்மினி Honolulu (Havawii) என்னும் இடத்திற்கு சென்று இருக்கின்றீர்களா? இது ஒரு தீவுக்கூட்டாமா? இங்கு அப்படி என்ன விசேட‌ம்?  ஏனையா அமேரிக்க மநிலத்தில் இருந்து வேறுபட்டதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, goshan_che said:

 

அக்காச்சி 🤣🤣🤣 நீங்க என்னை கலாய்க நினைக்கப்போய்.....🤣

கொடுப்பினையை பற்றி தெரியாது ஆனால் யூகேயில் இருந்து ஐரோப்பாவை குறைந்த செலவில் சுற்றலாம். ஒழுங்காக திட்டமிட்டால். 

கலாய்க்க போய் அங்கால என்ன:unsure: சொல்ல தைரியம் இல்லையாகும் 😉... ஒளிந்து நின்று கோழை மாதிரி கண்ணாடிக்குள்ளால எட்டிப் பார்த்த ஆள் தானே நீங்கள்😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரதி said:

கலாய்க்க போய் அங்கால என்ன:unsure: சொல்ல தைரியம் இல்லையாகும் 😉... ஒளிந்து நின்று கோழை மாதிரி கண்ணாடிக்குள்ளால எட்டிப் பார்த்த ஆள் தானே நீங்கள்😂

🤣 ரதி அக்காச்சிக்கு பயப்படாத ஆள் இந்த யாழில இருக்கே?

அஞ்சா நெஞ்சன் கு. சா அண்ணையே தங்கச்சி தங்கச்சி எண்டு பம்முறார்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/9/2020 at 14:08, ரதி said:

எனக்கும் உலகம் பூரா சுத்தோணும் என்று ஆசை...துட்டு தான் இல்லை அத்தோடு கொடுப்பினையும் இல்லை 

துட்டு நிறைய தேவையில்லை ரதி. திட்டமிட்டு சேமித்து 5, 6 பேர் சேர்ந்து போனால் அவ்வளவு சிலவிருக்காது. இந்தியாவில் Van பிடித்து தமிழ்நாடு கேரளா முழுதும் சுத்திப்பார்க்க  இலங்கையை விட மிக குறைந்தளவு காசே தேவைப்படும். உடல் நிலை சரியாக இருந்தால் சரி. இதுக்குதான் நான் இப்பவே எல்லா இடங்களையும் பார்த்து வருகிறேன். இன்னும் 10 வருடங்களில் (இருந்தால்) ஒரு இடமாக பார்த்து சிவனே என்று இருக்க வேண்டியதுதான். அதுதான் எனக்கு விருப்பமும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/9/2020 at 00:10, colomban said:

நில்மினி Honolulu (Havawii) என்னும் இடத்திற்கு சென்று இருக்கின்றீர்களா? இது ஒரு தீவுக்கூட்டாமா? இங்கு அப்படி என்ன விசேட‌ம்?  ஏனையா அமேரிக்க மநிலத்தில் இருந்து வேறுபட்டதா?

வணக்கம் கொழும்பான் இப்பதான் இந்தப்பதிவுகளை பார்க்கிறேன். வேலையால்  வந்து இதைப்பற்றி பதிவிடுகிறேன். 4 வருடங்களுக்கு முன்பு போயிருந்தேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, nilmini said:

துட்டு நிறைய தேவையில்லை ரதி. திட்டமிட்டு சேமித்து 5, 6 பேர் சேர்ந்து போனால் அவ்வளவு சிலவிருக்காது. இந்தியாவில் Van பிடித்து தமிழ்நாடு கேரளா முழுதும் சுத்திப்பார்க்க  இலங்கையை விட மிக குறைந்தளவு காசே தேவைப்படும். உடல் நிலை சரியாக இருந்தால் சரி. இதுக்குதான் நான் இப்பவே எல்லா இடங்களையும் பார்த்து வருகிறேன். இன்னும் 10 வருடங்களில் (இருந்தால்) ஒரு இடமாக பார்த்து சிவனே என்று இருக்க வேண்டியதுதான். அதுதான் எனக்கு விருப்பமும். 

நன்றி ...20, 25 வருடங்களுக்கு முன்பு பெற்றோருடன் சேர்ந்து இந்தியா போயியுளேன் ...அந்த நேரம் கோயில்களை மட்டும் சுத்தி பார்த்தது ...திரும்ப ஒருக்கால் போக விருப்பம் ...பார்ப்போம்  
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/9/2020 at 15:06, nilmini said:

வணக்கம் கொழும்பான் இப்பதான் இந்தப்பதிவுகளை பார்க்கிறேன். வேலையால்  வந்து இதைப்பற்றி பதிவிடுகிறேன். 4 வருடங்களுக்கு முன்பு போயிருந்தேன் 

நேற்று முழுக்க ஹவாயில் எடுத்த படங்களை தேடினேன். கண்டுபிடிக்கமுடியவில்லை. அதை தேட போய் பலவருடங்களாக காணாமல்போன படங்கள் எல்லாம் கிடைத்தது. இந்தப்படங்கள் ஒன்லைனில் இருந்து சேர்த்திருக்கிறேன்.

அம்மாவுக்கு பாக்க  விருப்பமான ஒரு இடமாதலால் கூட்டிக்கொண்டு போனேன். எம்முடன் ஒரு சிங்கள நண்பி மட்டும் வந்திருந்தா. மூவர் மட்டும்தான். Honolulu வில் இறங்கி ஒரு  SUV எடுத்துக்கொண்டு Oahu தீவு முழுவது 5 நாள் சுற்றித்திரிந்தோம். மிகவும் அழகான தீவு. இலங்கை பாதைகள் அகலமாக ஒழுங்காக, சுத்தமாக இருந்தால் அதே மாதிரி இருக்கும்.  Sunrise cruise, dolphin cruise , whalewatching cruise என்று மூன்று போனோம் . அவை மிகவும் ஒரு வித்தியாசாமான அனுபவம். அமெரிக்கர்கள் அனுபவிக்க பிறந்தவர்கள் என்று அந்த சுற்றலா மூலம் மீண்டும் ஒருமுறை கண்டுகொண்டேன்.  கடலில் Dolphin, whale பார்த்தார்களா இல்லையோ  cruise  நெடுகிலும் விதம் விதமான சாப்பாடுகள், பசிபிக் தீவுக்கூட்ட , நியூசிலாந்து Maori  நடனங்களுடன் cruise இல் ஒரே பாட்டும் ஆட்டமும் . நீர் மூழ்கி கப்பலில் கடலுக்கு அடியில் உள்ள பவளப்பாறைகள், மீன்கள் என்று பார்த்தோம். மாலை தீவு அளவு  மீன்கள் இல்லாவிட்டாலும் நல்ல ஒரு அனுபவம். ஹெலிகொப்டரில் பக்கத்துக்கு தீவுக்கு சென்று எரிமலைகளை பார்ப்பம் எண்டு போனபோது இறுதி நேரத்தில் காலநிலை சரியில்லை என்று நிறுத்தி விட்டார்கள். போன போன இடமெல்லாம் மிகவும் ருசியான கடல் உணவு வகைகள். Pearl harbor military base  இல் ஜப்பான் குண்டு போட்ட இடம், போர் கப்பல்கள் மற்றும் பல அமெரிக்க கடற்படை சம்பந்தமான கப்பல்கள், பீரங்கிகள் என்று அருங்காட்சியகம் இருக்கு. பார்ப்பதற்கு பிரமிப்பாக இருந்தது.

ஹவாய் நீங்கள் குறிப்பிட்டது போல ஒரு தீவுக்கூட்டம். அமெரிக்காவின் மற்றைய  மாநிலங்களில் இருந்து மிகவும் வேறுபட்டது. பசிபிக் தீவு கூட மனிதர்களினதும், ஜப்பானிய வழியினரும் போலத்தான் முகவெட்டு. மலைகளும், காடுகளும், ஏரிகளும்  எரிமலைகளையும் கொண்ட மிக மிக இயற்கை வனப்புள்ள இடம். எங்கு பார்த்தாலும் தேங்காய் மரம் ஆனால் தேங்காயை பார்க்க முடியாது. தலையில் விழுந்திரும் என்று வெட்டி அகற்றி விடுவார்கள். ஊரில் உள்ள எல்லா பூக்கள், பழங்கள், மரக்கறி வகைகள் எல்லாம் இருக்கு. 

சூரியகுமார் முத்துக்குமார் என்று திருக்கேதீஸ்வரத்தை சேர்ந்த  ஞானி ஒருவரையும் அவரது பார்மில் சந்தித்தோம். பார்முக்கு வழி கேட்டபோது ஒரு பெரிய தெருவால்  வந்து  "மௌன பார்ம் றோட் " என்று போர்ட் போட்டிருக்கும் தெருவுக்குள்  திரும்பி வர சொன்னார். அது அவர் வைத்த  பெயர்தான். 40 வருடங்களுக்கு மேலாக அங்கு வசிக்கிறார். தாய் மற்றும் சகோதரங்கள் ஹானோலுலுள்வில் வசிக்கிறார்கள். தாய் அடிக்கடி வந்து அவரது ஆசிரமம் மாதிரியான மௌன பார்மில் வந்து இருப்பா . நாங்கள் போனபோது சில வெள்ளைக்கார மாணவர்கள்தான் தோட்டம் மற்றும் சிற்ப வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஒருபோதும் ருசித்திராத வகையில் புழுங்கல் அரிசி சோறு, பருப்பு, முருங்கைக்காய் கறி (ஏலக்காய், கறுவா சேர்த்திருந்தது ) வாழைக்காய் பொரியல் என்று பெரிய விருந்தே தனது கையால் செய்து பரிமாறினார். அவரின் வாழ்க்கையின் பின்னணியில் சோகக்கதை ஒன்றுள்ளது என்று கூறினார். பின்பு ஒன்லைனில் வாசித்து அறிந்துகொண்டோம். அவர்தான் ஹவாய் வந்து தாய் மற்றும் சகோதரர்களையும் கூப்பிட்டாராம். குடும்பத்தினர் தமது வீட்டுக்கு அழைத்தார்கள். போக நேரம் கிடைக்கவில்லை.

எனது தங்கை ஹவாய் போனபோது இன்னுமொரு தீவில் உள்ள இறைவன் கோவிலுக்கு போனார் . அங்கு ஒரு பெரிய ஆசிரமம், ருத்திராட்சை மரக்காடும் உள்ளதாம். நாவல் நிறத்தில் உள்ள உருத்திராட்ச பழங்களில் இருந்துதான் எடுக்கிறாரக்ள்.  தண்டபாணி என்ற பெயருடன் உள்ள இலங்கையை சேர்ந்த யோக சுவாமி அவர்களின் சீடன் ஒரு இளைஞரும் இங்கு வசித்துள்ளார்கள்  என்று கேள்விப்பட்டேன்

https://www.youtube.com/watch?v=1epdktBQbic

spacer.pngspacer.pngspacer.pngspacer.pngspacer.pngspacer.png

spacer.pngspacer.png

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.