Jump to content

திருச்சி: காவிசாயம் ஊற்றி பெரியார் சிலை அவமதிப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திருச்சி: காவிசாயம் ஊற்றி பெரியார் சிலை அவமதிப்பு!

spacer.png

 

திருச்சியில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தை பெரியார் சிலை உடைக்கப்படுவதும், காவி சாயம் ஊற்றி அவமதிக்கப்படுவதும் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்த வண்ணம் உள்ளது. கடந்த ஜூலை மாதம் கோவை, திருக்கோவிலூர், கடந்த 3ஆம் தேதி அரியலூர் மாவட்டம் தேளூரில் அமைந்திருக்கும் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது. பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது குண்டர் சட்டம், தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ச்சினாலும் அது தொடர்கிறது.

திருச்சி மாவட்டம் இனாம் குளத்தூரிலுள்ள சமத்துவபுரத்தில் பெரியார் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு அங்கு சென்ற மர்ம நபர்கள் சிலை மீது காவிச் சாயம் ஊற்றியும், செருப்புகளை வீசியும் அவமரியாதை செய்துள்ளனர். அத்துடன் அங்கு வைக்கப்பட்டிருந்த தடுப்பு அரண்களையும் கீழே சாய்த்து தள்ளியிருக்கிறார்கள். இன்று அதிகாலை அவ்வழியாகச் சென்றவர்கள் இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல் துறைக்கு தகவல் அளித்திருக்கிறார்கள். உடனடியாக அங்கு வந்த காவல் துறையினர், பெரியார் சிலையில் ஊற்றப்பட்ட காவிச் சாயத்தை தண்ணீர் ஊற்றி அழித்தனர். மேலும், சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனக் குரல்கள் வலுத்துள்ளன.

 

துணை முதல்வர் பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், “சமூக நீதிக்காக பாடுபட்ட பகுத்தறிவு பகலவர் தந்தை பெரியாரின் சிலையை திருச்சியில் மர்மநபர்கள் அவமரியாதை செய்திருக்கும் செயலுக்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இக்குற்றச் செயலில் ஈடுபட்ட சமுக விரோதிகள் மீது மாண்புமிகு அம்மாவின் அரசு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கும்” என உறுதியளித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின், “ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்வதால் மேலும் மேலும் மக்களிடம் இருந்து புறக்கணிக்கப்படுவோம் என்பதை இவர்கள் எப்போது புரிந்து கொள்ளப் போகிறார்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.

திருச்சி - இனாம்குளத்தூர் சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிப்பதாகக் கூறிய ஸ்டாலின், “பெரியார் ஒரு இயக்கத்தின் தலைவர் அல்ல. தமிழ் இனத்தின் தலைவர். அவரை அவமதிப்பதாக நினைத்து அச்செயல் செய்பவர்கள் தங்களைத் தாங்களே அவமரியாதை செய்து கொள்கிறார்கள்” என்றும் சாடினார்.

திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி, “திருச்சியில் பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றப்பட்டு அவமரியாதை செய்யப்பட்டுள்ளது. பெரியார் பிறந்தநாள் அன்றுதான் தமிழக பிஜேபி தலைவர் முருகன், “பெரியார் சமூகநீதிக்காக பாடுபட்டவர். அவரை வாழ்த்துவதில் எங்களுக்கு தயக்கம் இல்லை” என்றார். இதுதான் அவர்கள் பெரியாருக்கு காட்டும் மரியாதையா ?நீட் , புதிய கல்விக் கொள்கை, விவசாயிகள் போராட்டம் இவற்றுக்கான உங்கள் பதில் பெரியார்தானா?” என்று கேள்வி எழுப்பினார்.

பெரியார் சிலை அவமதிப்புக்கு பாஜகவைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியும் கண்டனம் தெரிவித்துள்ளார். “இது தவறு. அவசியமற்றது.நம் சித்தாந்தத்திற்கு எதிரானவர்களை கருத்தினால் மட்டுமே வெல்ல முயற்சிக்க வேண்டும். ஈ.வெ.ரா, நம் கொள்கைகளுக்கு எதிரானவர் தான். அநாகரீகமான இது போன்ற செயல்களை செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். காவி புனிதமானது. அதை வைத்து அநாகரீகம் செய்வது முற்றிலும் தவறு.இதை செய்தவர்கள் யாராக இருந்தாலும் கைது உடன் செய்யப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.
 

 

https://minnambalam.com/politics/2020/09/27/33/periyar-statue-insult-saffron-paint-trichy

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.