Jump to content

ஜேர்மன் வாழ் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் கொரோனா!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மன் வாழ் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முறையான பாதுகாப்பு வசதிகள் மற்றும் பாதுகாப்பு இடைவெளிகள் இல்லாது குடும்ப நிகழ்வுகளில் கலந்துகொண்டதால் அதிகமானோருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஜெர்மன் நாட்டில் உள்ள பீலவில்ட் ( Bielefeld) நகரில் 22.09.20 அன்று நடைபெற்ற குடும்ப நிகழ்வில் கலந்து கொண்ட 40 இற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர். அத்தோடு இந்நிகழ்வில் கலந்துகொண்ட மேலதிகமாக 50 இற்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதேவேளை குமமெர்ஸ்பாஹ் (Gummersbach) நகரிலும் தொடர்ச்சியாக பலர் கொரோனாத்தொற்றுக்கு உள்ளாகியுள்ளது. உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டவர்கள் சமீபத்தில் பல குடும்ப நிகழ்வுகளில் கலந்துள்ள நிலையில், இக்குடும்ப நிகழ்வுகளில் கலந்துகொண்ட அனைவரும் பரிசோதனைக்கு அழைக்கப்படவுள்ளனர் என மேலும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டவர்கள், அல்லது கலந்துகொண்டவர்களுடன் கடந்த வாரத்தில் நேரடியாக பழகியவர்கள் உடனடியாக தங்களை தனிமைப்படுத்துமாறும், பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் ஜேர்மனிய சுகாதாரத்துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நாடுகள் ரீதியாக மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், இப்படியான குடும்ப நிகழ்வுகளின் அத்தியாவசியத்தினை ஆராய்ந்து முழு முற்பாதுகாப்பு நடவடிக்கைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது என புலம்பெயர் தமிழர் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

https://www.tamilwin.com/germany/01/257110?ref=imp-news

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிலமையிலையும் சாமத்திய வீடு செய்திருக்கிறாங்கள்....😡
96 பேருக்கு கொரோனா.....வந்த மிச்ச பேரை தேடித்திரியுறாங்களாம்....அது பரீஸ்....கொலண்ட்....டென்மார்க் எண்டு தொடருதாம்.....இப்ப அந்த சிற்றியையே  இழுத்து மூடுறாங்களாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

இந்த நிலமையிலையும் சாமத்திய வீடு செய்திருக்கிறாங்கள்....😡
96 பேருக்கு கொரோனா.....வந்த மிச்ச பேரை தேடித்திரியுறாங்களாம்....அது பரீஸ்....கொலண்ட்....டென்மார்க் எண்டு தொடருதாம்.....இப்ப அந்த சிற்றியையே  இழுத்து மூடுறாங்களாம்.

தெரிந்து கொண்டு ஏன் கூத்தடித்தவை ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பெருமாள் said:

தெரிந்து கொண்டு ஏன் கூத்தடித்தவை ?

நாங்கள் எத்தினை குண்டுகளை தாண்டி வந்தனாங்கள். கொரோனாவது மண்ணாங்கட்டியாவது....:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

நாங்கள் எத்தினை குண்டுகளை தாண்டி வந்தனாங்கள். கொரோனாவது மண்ணாங்கட்டியாவது....:grin:

வெடி பிடித்தால் ஆறு மாதத்தில்  குணமடையலாம் இந்த கொரோனா  வந்தால் ஆளை அரை பிணமாக்கி விடும் உள்ளிருக்கும் இன்சினகளை பழுதாக்கி  விட்டு விடும் என்னை பொறுத்தவரை இனி ஒரு தமிழன் கொரனோவால்  சாகக்கூடாது என்பதெல்ல கொரோனோவை  தமிழனுக்கு பிடிக்க கூடாது என்பது பிரார்த்தனை நீங்களும் தமிழ் சிறியரும்  கவனம் அண்ணை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பெருமாள் said:

வெடி பிடித்தால் ஆறு மாதத்தில்  குணமடையலாம் இந்த கொரோனா  வந்தால் ஆளை அரை பிணமாக்கி விடும் உள்ளிருக்கும் இன்சினகளை பழுதாக்கி  விட்டு விடும் என்னை பொறுத்தவரை இனி ஒரு தமிழன் கொரனோவால்  சாகக்கூடாது என்பதெல்ல கொரோனோவை  தமிழனுக்கு பிடிக்க கூடாது என்பது பிரார்த்தனை நீங்களும் தமிழ் சிறியரும்  கவனம் அண்ணை .

கவனமாய் இருப்பது என்பதை விட விதி என்பது சரி போல் இருக்கின்றது...
பாடகர் பாலசுப்பிரமணியம் ஒரு பணக்காரர். அவர் அண்மைக்கால நிகழ்ச்சிகளில் முககவசம் கையுறை என்பனவற்றுடனேயே திரிந்தார். எல்லாவற்றையும் விட மற்றவர்களுக்கு புத்திமதியும் பிரார்த்தனையும் செய்தார்.
இறுதியில் நடந்தது என்ன?

தலையில் என்ன எழுதியிருக்கோ அதுதான் நடக்கும் பெருமாள். பாதுகாப்பாக நடு வீட்டுக்குள் இருந்து சுவர் இடிந்து விழுந்தாலும் மரணம்தான்.
எல்லாமே விதிப்படிதான் நடக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

கவனமாய் இருப்பது என்பதை விட விதி என்பது சரி போல் இருக்கின்றது...
பாடகர் பாலசுப்பிரமணியம் ஒரு பணக்காரர். அவர் அண்மைக்கால நிகழ்ச்சிகளில் முககவசம் கையுறை என்பனவற்றுடனேயே திரிந்தார். எல்லாவற்றையும் விட மற்றவர்களுக்கு புத்திமதியும் பிரார்த்தனையும் செய்தார்.
இறுதியில் நடந்தது என்ன?

தலையில் என்ன எழுதியிருக்கோ அதுதான் நடக்கும் பெருமாள். பாதுகாப்பாக நடு வீட்டுக்குள் இருந்து சுவர் இடிந்து விழுந்தாலும் மரணம்தான்.
எல்லாமே விதிப்படிதான் நடக்கும்.

தினமும் ஊரில் நடக்கும் தற்கொலைகளை பார்த்தே நொந்து போறவன் விதி கிதி என்று சொல்லாமல் பாதுகாப்பாய்  இருங்கள் sb யின் வயதா உங்களது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வைத்தியரின் பதிலில் கொஞ்சம் குளப்ப மிரூக்கிறது.திகதிகளி தடுமாற்றம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

வெடி பிடித்தால் ஆறு மாதத்தில்  குணமடையலாம் இந்த கொரோனா  வந்தால் ஆளை அரை பிணமாக்கி விடும் உள்ளிருக்கும் இன்சினகளை பழுதாக்கி  விட்டு விடும் என்னை பொறுத்தவரை இனி ஒரு தமிழன் கொரனோவால்  சாகக்கூடாது என்பதெல்ல கொரோனோவை  தமிழனுக்கு பிடிக்க கூடாது என்பது பிரார்த்தனை நீங்களும் தமிழ் சிறியரும்  கவனம் அண்ணை .

முக்கியமான விளையாட்டுகள், இசை நிகழ்ச்சிகள், வருடாந்திர கொண்டாட்டங்கள் என்று..
எதுவுமே நடத்தாமல்... எல்லோரும் சமூக பொறுப்புடன் இருக்கும் போது,

இப்ப சாமத்தியச் சடங்கை நடத்தியவர்களை... என்னவென்று சொல்வது.
இதனால் பாதிக்கப் படப் போவது, அவர்களின் நெருங்கிய உறவினர்களும், 
நண்பர்களும் என்பதை...   முன்பே சிறிது சிந்தித்திருந்தால்... இதனை தவிர்த்திருக்கலாமே...
அவர்களை நினைக்க... கோவம் தான் வருகின்றது.

நான் கோவிலுக்கோ, கடைகளுக்கோ அனாவசியமாக போகாமல் கட்டுப் பாட்டுடன்தான் உள்ளேன்.
ஆனாலும்... வேலை இடத்தில், தினமும்... கிழக்கு ஐரோப்பியர் உட்பட, 
தினமும் பலரை சந்திக்க வேண்டி இருப்பதால்... கொஞ்சம்  பயத்துடன் தான் இருக்க வேண்டி உள்ளது.
உங்கள் அக்கறைக்கு... நன்றி  பெருமாள். 

Link to comment
Share on other sites

5 hours ago, தமிழ் சிறி said:

நான் கோவிலுக்கோ, கடைகளுக்கோ அனாவசியமாக போகாமல் கட்டுப் பாட்டுடன்தான் உள்ளேன்.

அவருடைய கட்டுப் பாட்டைக் கேட்டுச் சகிக்க முடியாமல் கொரோனாவும் காத தூரத்தில் காதைப் பொத்திக்கொண்டு நிற்கிறதாம். 

நல்லகாலம், ஓசியில் மருந்தடிக்காத மரக்கறி தருகிறேன், வீட்டுக்கு வாருங்கள் என்றேன் மறுத்துவிட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Paanch said:

அவருடைய கட்டுப் பாட்டைக் கேட்டுச் சகிக்க முடியாமல் கொரோனாவும் காத தூரத்தில் காதைப் பொத்திக்கொண்டு நிற்கிறதாம். 

நல்லகாலம், ஓசியில் மருந்தடிக்காத மரக்கறி தருகிறேன், வீட்டுக்கு வாருங்கள் என்றேன் மறுத்துவிட்டார்.

பாஞ்ச் அண்ணை...   இந்த மரக்கறி விசயத்தை மறந்திருப்பார் என்று பார்த்தால்... 😁

ஆள்...மறக்கிற மாதிரி தெரியவில்லை.  😀

Link to comment
Share on other sites

நாம் எவ்எளவு பட்டாலும் மாறப்போவதில்லை. வேறு என்ன சொல்வது இவர்களை ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, யாயினி said:

இந்த வைத்தியரின் பதிலில் கொஞ்சம் குளப்ப மிரூக்கிறது.திகதிகளி தடுமாற்றம்.

SPB முதல் நாளே இறந்து விட்டதாகவும், வைத்தியசாலை.... பணத்தினை வை என்று அடம் பிடித்து, ஆள் சீரியஸ் என்று கதை விட்டு கொண்டிருந்ததாகவும் கதைகள் வருகின்றன.

மகன் சரண், அரசு உதவி கோரி, சமரசம் பேசியே உடல் வழங்கப்படுள்ளதாக தெரிகிறது.

முதலில் மறுத்த சரண், அரசு உதவி கேட்டது உண்மை என்று இன்று சொல்லி உள்ளார்.

தான் பணத்துடன் போனதாகவும், வைத்தியசாலை சேர்மன் வாங்க மறுத்து விட்டதாகவும், பிறகு பார்க்கலாம் என்று சொன்னதாகவும் சொல்லி உள்ளார்.

ஆக.... அரசு அல்லது வேறு பிரபலங்கள் சேர்ந்து, பணம் கொடுத்திருக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

SPB முதல் நாளே இறந்து விட்டதாகவும், வைத்தியசாலை.... பணத்தினை வை என்று அடம் பிடித்து, ஆள் சீரியஸ் என்று கதை விட்டு கொண்டிருந்ததாகவும் கதைகள் வருகின்றன.

மகன் சரண், அரசு உதவி கோரி, சமரசம் பேசியே உடல் வழங்கப்படுள்ளதாக தெரிகிறது.

முதலில் மறுத்த சரண், அரசு உதவி கேட்டது உண்மை என்று இன்று சொல்லி உள்ளார்.

தான் பணத்துடன் போனதாகவும், வைத்தியசாலை சேர்மன் வாங்க மறுத்து விட்டதாகவும், பிறகு பார்க்கலாம் என்று சொன்னதாகவும் சொல்லி உள்ளார்.

ஆக.... அரசு அல்லது வேறு பிரபலங்கள் சேர்ந்து, பணம் கொடுத்திருக்கலாம். 

நாம் ஒரு இறந்த ஆத்மாவை வைத்து விமர்சனம் பகிர்வது தவறு..ஆனாலும் அவரது மகன் உட்பட சிலரை நினைக்கும் போது மிகவும் மன வருத்தமாக இருக்கிறது.இளையராஜா அவர்கள் மோட்ச விளக்கோடு நின்று விட்டார்..மற்றவர்கள் ஒவ்வொரு நாடு நாடாக இருந்து வெறும் அஞ்சலியோடு சரி.இனி பேச என்ன இருக்கிறது.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கும் பாடசாலைகளை திறந்து வைத்து கூத்தடிக்கிறார்கள் பின் முடுகிறார்கள்.அது போக தமிழ்மக்களின் கொண்டாடங்களில் பரவுதல் நடக்கிறதாக அறியக் கூடியதாக இருக்கிறது..நிறைய விடையங்கள் வெளி வருவது மிகவும் குறைவு.நான் கடந்த சில தினங்ளுக்கு முன் மருத்துவமனை ஒன்றுக்கு சென்றேன்..அங்கு இரண்டு நம் இனத்து பெண்கள் தங்களுக்கு தாங்களே ஏதோ பார்சல் பரிமாற்றத்தில் நின்றார்கள் அதுவும் பார்க்கிங்லொற் பக்கத்தில்..ஒரு பெண் மற்றைய பெண்ணுக்கு இதை கை காவலுக்கு வைச்சுக்கோ உறுதி செய்யப்பட்டால் பின் பார்ப்போம் என்று சொல்லியது நான் அவர்களை கடந்து செல்லும் போது காதில் விழுந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

பாஞ்ச் அண்ணை...   இந்த மரக்கறி விசயத்தை மறந்திருப்பார் என்று பார்த்தால்... 😁

ஆள்...மறக்கிற மாதிரி தெரியவில்லை.  😀

கவனம் சிறித்தம்பி! உது பிறகு கறளாய் மாறீடும். எதுக்கும் சும்மா சம்பிரதாயத்துக்காகவாவது இரண்டு தக்காளிக்காயை புடுங்கிக்கொண்டு ஓடியாங்கோ 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, யாயினி said:

இங்கும் பாடசாலைகளை திறந்து வைத்து கூத்தடிக்கிறார்கள் பின் முடுகிறார்கள்.

யாயினி பாடசாலைகளைத் திறந்து வைத்து கூத்தடிக்கிறார்கள் என்று குற்றச்சாட்டை வைக்கமுடியாது. நீண்ட காலத்திற்கு தடுப்பு மருந்து இல்லாத நோயாக இருக்கப் போகிற கோவிட்- 19 இற்கு முகங்கொடுக்க பழக்கப்படுத்தப்படுகிறார்கள் என்றே நினைக்கிறேன். தொடர்ச்சியாக வேறெங்கும் இல்லாத அளவுக்கு மக்கள் பாதுகாப்புக்காக நிறைய பணம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் பொருளாதாரம் கிடுகிடுவென்று கீழ்நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்நோயை எதிர்கொள்ளும் திராணியை உருவாக்கவில்லை என்றால் அடுத்த வருடம் அரச உதவிப்பணமும் நிறுத்தப்படும்போது மக்கம் மிகவும் நெருக்கடியைச் சந்திப்பார்கள். இப்போதே விலைவாசி ஏற்றம் விழிபிதுங்க வைக்கிறது. பல நிறுவனங்கள் வங்குரோத்து நிலைக்கு சென்று விட்டன. அன்றாட வாழ்க்கை முறை முடக்கத்தால் பலர் வருமானம் இழந்த நிலையில் தொழிலகங்களை இழுத்து மூடிவிட்டார்கள். இயல்பு நிலைக்கு அன்றாட வாழ்வு திரும்பாவிட்டாலும் ஓரளவுக்காவது இவற்றை திருப்ப எத்தனிக்கிறார்கள். என் வீட்டுக்கு முன்னால் இருக்கும் குடும்பம் வேலைக்குச் செல்வதில்லை, பாடசாலை போவதில்லை ஆனால் அவர்களுக்கு கோவிட் -19 எப்படி வந்தது என்று அவர்களுக்கு விளக்கமில்லை வீட்டுக்குள் மூடிக்கொண்டு இருந்தாலும் இந்தப்பிரச்சனை தீராது. எதிர்ப்பாற்றலை நாம்தான் வளர்த்துக் கொள்ள வேண்டும்.  இதற்காகத்தான் பாடசாலைகள் திறக்கப்படுகின்றன. பாடசாலைகள் யாரையும் வரும்படி வற்புறுத்தவில்லை. ஒன்லைனில் கற்கக்கூடிய வசதியையும் வழஙகுகிறார்கள். எதிர்ப்பாற்றலை வளர்க்கும் எண்ணம் உள்ளவர்கள் அங்கு செல்கிறார்கள். அவ்வளவே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை பாராட்டலாம் கட்டுப்படுத்தியுள்ளார்கள் ஆனால் வெளிநாட்டிலிருந்து வருபவர்களால்தான் கொஞ்சம் சிக்கல் இருந்தாலும் தனிமைப்படுத்தல் தொடர்கிறது 

ஜேர்மன் தமிழ் ஆட் கள் சொல் பேச்சி கேட் க மாட்டார்கள் போல

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, வல்வை சகாறா said:

யாயினி பாடசாலைகளைத் திறந்து வைத்து கூத்தடிக்கிறார்கள் என்று குற்றச்சாட்டை வைக்கமுடியாது. நீண்ட காலத்திற்கு தடுப்பு மருந்து இல்லாத நோயாக இருக்கப் போகிற கோவிட்- 19 இற்கு முகங்கொடுக்க பழக்கப்படுத்தப்படுகிறார்கள் என்றே நினைக்கிறேன். தொடர்ச்சியாக வேறெங்கும் இல்லாத அளவுக்கு மக்கள் பாதுகாப்புக்காக நிறைய பணம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் பொருளாதாரம் கிடுகிடுவென்று கீழ்நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்நோயை எதிர்கொள்ளும் திராணியை உருவாக்கவில்லை என்றால் அடுத்த வருடம் அரச உதவிப்பணமும் நிறுத்தப்படும்போது மக்கம் மிகவும் நெருக்கடியைச் சந்திப்பார்கள். இப்போதே விலைவாசி ஏற்றம் விழிபிதுங்க வைக்கிறது. பல நிறுவனங்கள் வங்குரோத்து நிலைக்கு சென்று விட்டன. அன்றாட வாழ்க்கை முறை முடக்கத்தால் பலர் வருமானம் இழந்த நிலையில் தொழிலகங்களை இழுத்து மூடிவிட்டார்கள். இயல்பு நிலைக்கு அன்றாட வாழ்வு திரும்பாவிட்டாலும் ஓரளவுக்காவது இவற்றை திருப்ப எத்தனிக்கிறார்கள். என் வீட்டுக்கு முன்னால் இருக்கும் குடும்பம் வேலைக்குச் செல்வதில்லை, பாடசாலை போவதில்லை ஆனால் அவர்களுக்கு கோவிட் -19 எப்படி வந்தது என்று அவர்களுக்கு விளக்கமில்லை வீட்டுக்குள் மூடிக்கொண்டு இருந்தாலும் இந்தப்பிரச்சனை தீராது. எதிர்ப்பாற்றலை நாம்தான் வளர்த்துக் கொள்ள வேண்டும்.  இதற்காகத்தான் பாடசாலைகள் திறக்கப்படுகின்றன. பாடசாலைகள் யாரையும் வரும்படி வற்புறுத்தவில்லை. ஒன்லைனில் கற்கக்கூடிய வசதியையும் வழஙகுகிறார்கள். எதிர்ப்பாற்றலை வளர்க்கும் எண்ணம் உள்ளவர்கள் அங்கு செல்கிறார்கள். அவ்வளவே

இதில் எனக்கு மாற்று கருத்து உண்டு 
உலக சுகாதார சேவை சீனாவுக்கு வெளியில் கொரோனா வர போகிறது என்றவுடன் 
எல்லா நாட்டுக்கும் 10 வீத பொருளாதார நஷ்ட்டத்தை ஏற்றுக்கொண்டு எல்ல்லாவ்ற்றையும் மூடி 
இதை முதலில் சீனாவில் வைத்தே கட்டுப்படுத்த ஆலோசனை கூறியது. 

ஆனால் 10 வீத பொருளாதார வீழ்ச்சிக்கு யாரும் ஒத்துக்கொள்ளவில்லை 
ஆனால்  இன்று அண்ணளவாக 35 வீதம் பொருளாதார வீழ்ச்சியும் பல ஆயிரக்கணக்கான 
மரணத்துக்கும் பல திறமையான மருத்துவர்கள் உட்பட முகம் கொடுத்து இருக்கிறார்கள்.

பள்ளிகளை திறப்பது அனாவசியமற்ற வேலை இப்பபோதைய சூழலில் 
இது பொருளாதாரத்துக்கு எந்த பலனையும் கொடுக்க போவதில்லை .. வளர்ச்சி அடைந்த நாடுகள் 
ஒன்லைன் வடிவத்துக்கு மாறி இருக்கலாம். 

இப்போதும் அரசுகள் சரியான பரிந்துரைகளை கடைபிடிக்கிறார்கள் இல்லை 
மூன்று கிழமைகள் முழுதான பூட்டு பூட்டினால் இதை தடுக்க முடியும் 
மக்களின் பங்களிப்பு மிக மிக அவசியம். 

திறந்து பூட்டி திறந்து பூட்டி சிலுக்கு ஸ்மிதா பாடல்காட்ச்சிபோல் 
மக்களின் உயிரோடு விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள் . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Maruthankerny said:

இதில் எனக்கு மாற்று கருத்து உண்டு 
உலக சுகாதார சேவை சீனாவுக்கு வெளியில் கொரோனா வர போகிறது என்றவுடன் 
எல்லா நாட்டுக்கும் 10 வீத பொருளாதார நஷ்ட்டத்தை ஏற்றுக்கொண்டு எல்ல்லாவ்ற்றையும் மூடி 
இதை முதலில் சீனாவில் வைத்தே கட்டுப்படுத்த ஆலோசனை கூறியது. 

ஆனால் 10 வீத பொருளாதார வீழ்ச்சிக்கு யாரும் ஒத்துக்கொள்ளவில்லை 
ஆனால்  இன்று அண்ணளவாக 35 வீதம் பொருளாதார வீழ்ச்சியும் பல ஆயிரக்கணக்கான 
மரணத்துக்கும் பல திறமையான மருத்துவர்கள் உட்பட முகம் கொடுத்து இருக்கிறார்கள்.

பள்ளிகளை திறப்பது அனாவசியமற்ற வேலை இப்பபோதைய சூழலில் 
இது பொருளாதாரத்துக்கு எந்த பலனையும் கொடுக்க போவதில்லை .. வளர்ச்சி அடைந்த நாடுகள் 
ஒன்லைன் வடிவத்துக்கு மாறி இருக்கலாம். 

இப்போதும் அரசுகள் சரியான பரிந்துரைகளை கடைபிடிக்கிறார்கள் இல்லை 
மூன்று கிழமைகள் முழுதான பூட்டு பூட்டினால் இதை தடுக்க முடியும் 
மக்களின் பங்களிப்பு மிக மிக அவசியம். 

திறந்து பூட்டி திறந்து பூட்டி சிலுக்கு ஸ்மிதா பாடல்காட்ச்சிபோல் 
மக்களின் உயிரோடு விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள் . 

அதிசயம் ஆனால் உண்மை. எனக்கும் மருதருக்கும் கருத்து ஒற்றுமை!!!🤣

சரியான தடுப்பூசி கிடைக்கும் வரை 10-15% பொருளாதாரத்தை பலியிட்டு, நியூசிலாந்து செய்ததை போல செய்திருந்தால் உள்ளூர் பொருளாதாரமாவது தப்பி இருக்கும்.

இப்போ 100% பொருளாதாரமும் ஆட்டம் காணுகிறது.

யூகேயில் யூலை மாதம் தொற்று குறைந்த கையோடு அரசே வெளிநாட்டு ஹொலிடேக்களை ஊக்குவிக்கும் விதத்தில் நடந்தது. 

மக்களும் செம்மறிகள் போல ஒரு வருடம் கொலிடே போகாட்டில் ஏதோ சாமி குற்றம் போல அள்ளுபட்டு ஸ்பெயின், பிரான்ஸ் எண்டு போனது.

போய் வந்த கோஸ்டி கொரோனாவோட வந்து நல்லா பரப்பி விட்டது.

மொக்குச் சனங்கள், அதை வென்ற மொக்கு அரசாங்கம்.

இவங்கள் எப்படி உலகை வென்றார்கள் என்பதுதான் தெரியவில்லை. 🤣

1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

 

ஜேர்மன் தமிழ் ஆட் கள் சொல் பேச்சி கேட் க மாட்டார்கள் போல

 

ஓவர் டு யூ பாஞ்ச், சிறி, கு சா அண்ணைமார் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்தால் அதை போடுவதன் மூலம் உடலில் கொரோனா எதிர்ப்பாற்றலை ஏற்படுத்தி நோய் வராமல் தப்பலாம்.ஆனால் பாடசாலைகள் திறப்பதன் மூலம் எப்படி எதிர்பாற்றலை வளர்க்க முடியும் அப்படி முடியுமாயின் அள்ளுபட்டு ஸ்பெயின் பிரான்ஸ் போவதும் கொரோனா எதிர்ப்பாற்றலை வளர்க்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, goshan_che said:

அதிசயம் ஆனால் உண்மை. எனக்கும் மருதருக்கும் கருத்து ஒற்றுமை!!!🤣

சரியான தடுப்பூசி கிடைக்கும் வரை 10-15% பொருளாதாரத்தை பலியிட்டு, நியூசிலாந்து செய்ததை போல செய்திருந்தால் உள்ளூர் பொருளாதாரமாவது தப்பி இருக்கும்.

இப்போ 100% பொருளாதாரமும் ஆட்டம் காணுகிறது.

யூகேயில் யூலை மாதம் தொற்று குறைந்த கையோடு அரசே வெளிநாட்டு ஹொலிடேக்களை ஊக்குவிக்கும் விதத்தில் நடந்தது. 

மக்களும் செம்மறிகள் போல ஒரு வருடம் கொலிடே போகாட்டில் ஏதோ சாமி குற்றம் போல அள்ளுபட்டு ஸ்பெயின், பிரான்ஸ் எண்டு போனது.

போய் வந்த கோஸ்டி கொரோனாவோட வந்து நல்லா பரப்பி விட்டது.

மொக்குச் சனங்கள், அதை வென்ற மொக்கு அரசாங்கம்.

இவங்கள் எப்படி உலகை வென்றார்கள் என்பதுதான் தெரியவில்லை. 🤣

ஓவர் டு யூ பாஞ்ச், சிறி, கு சா அண்ணைமார் 🤣

என்ன இப்படி  சொல்லிக்கிறீர்கள் 
உங்களின் 80 வீதமான கருத்துக்களில் எனக்கு உடன்பாடு உண்டு 
சீமானின் கருத்துக்களில் கூட ஏனெனில் கண்ணைமூடிக்கொண்டு 
எமக்கு சாதகமாக பேசுகிறார் என்று ஆதரவு கொடுப்பது நல்ல எண்ணத்தில் இருக்கும் 
சீமானையும் மாற்றக்கூடியது 

இதுக்கு நல்ல உதாரணம் தற்போதைய அமெரிக்க லூசு ஜனாதிபதி 
அவரை இந்த அளவுக்கு லுஷன் ஆக்கியத்தில் பெரும்பங்கு அவரை கண்ணை மூடிக்கொண்டு 
ஆதரிக்கும் ஆதரவு கூட்டத்தை சேரும். 

தூற்றுதல் என்பதுதான் மறுக்கும் 20 வீதம் 
சீமான் தெலுங்கர்களுக்கு எதிராளி அல்ல 

என்னாவது செய்யுங்கள் 
என்னையும் குழந்தையையும் தமிழ் - தெலுங்கு என்று தயவு செய்து பிரித்து விடாதீர்கள்.
போங்கடா நீங்களும் உங்கள் தமிழும் என்று விட்டு போய்விடுவேன் 

Kajal Agarwal Hot HD Photos in Saree (1080p) - #135 #kajalagarwal #kajal  #kollywood #tollywood #m… | Kerala saree blouse designs, Kerala saree  blouse, Elegant saree

 

Whose navel is better, Kajal Agarwal or Tammanah Bhatia? - Quora

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

என்ன இப்படி  சொல்லிக்கிறீர்கள் 
உங்களின் 80 வீதமான கருத்துக்களில் எனக்கு உடன்பாடு உண்டு 
சீமானின் கருத்துக்களில் கூட ஏனெனில் கண்ணைமூடிக்கொண்டு 
எமக்கு சாதகமாக பேசுகிறார் என்று ஆதரவு கொடுப்பது நல்ல எண்ணத்தில் இருக்கும் 
சீமானையும் மாற்றக்கூடியது 

இதுக்கு நல்ல உதாரணம் தற்போதைய அமெரிக்க லூசு ஜனாதிபதி 
அவரை இந்த அளவுக்கு லுஷன் ஆக்கியத்தில் பெரும்பங்கு அவரை கண்ணை மூடிக்கொண்டு 
ஆதரிக்கும் ஆதரவு கூட்டத்தை சேரும். 

தூற்றுதல் என்பதுதான் மறுக்கும் 20 வீதம் 
சீமான் தெலுங்கர்களுக்கு எதிராளி அல்ல 

என்னாவது செய்யுங்கள் 
என்னையும் குழந்தையையும் தமிழ் - தெலுங்கு என்று தயவு செய்து பிரித்து விடாதீர்கள்.
போங்கடா நீங்களும் உங்கள் தமிழும் என்று விட்டு போய்விடுவேன் 

Kajal Agarwal Hot HD Photos in Saree (1080p) - #135 #kajalagarwal #kajal  #kollywood #tollywood #m… | Kerala saree blouse designs, Kerala saree  blouse, Elegant saree

 

Whose navel is better, Kajal Agarwal or Tammanah Bhatia? - Quora

 

அனுஸ்காவும் தமிழ் என்று அறிவிச்சா நானும் உங்கள் கட்சிதான்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வல்வை சகாறா said:

யாயினி பாடசாலைகளைத் திறந்து வைத்து கூத்தடிக்கிறார்கள் என்று குற்றச்சாட்டை வைக்கமுடியாது. நீண்ட காலத்திற்கு தடுப்பு மருந்து இல்லாத நோயாக இருக்கப் போகிற கோவிட்- 19 இற்கு முகங்கொடுக்க பழக்கப்படுத்தப்படுகிறார்கள் என்றே நினைக்கிறேன். தொடர்ச்சியாக வேறெங்கும் இல்லாத அளவுக்கு மக்கள் பாதுகாப்புக்காக நிறைய பணம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் பொருளாதாரம் கிடுகிடுவென்று கீழ்நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்நோயை எதிர்கொள்ளும் திராணியை உருவாக்கவில்லை என்றால் அடுத்த வருடம் அரச உதவிப்பணமும் நிறுத்தப்படும்போது மக்கம் மிகவும் நெருக்கடியைச் சந்திப்பார்கள். இப்போதே விலைவாசி ஏற்றம் விழிபிதுங்க வைக்கிறது. பல நிறுவனங்கள் வங்குரோத்து நிலைக்கு சென்று விட்டன. அன்றாட வாழ்க்கை முறை முடக்கத்தால் பலர் வருமானம் இழந்த நிலையில் தொழிலகங்களை இழுத்து மூடிவிட்டார்கள். இயல்பு நிலைக்கு அன்றாட வாழ்வு திரும்பாவிட்டாலும் ஓரளவுக்காவது இவற்றை திருப்ப எத்தனிக்கிறார்கள். என் வீட்டுக்கு முன்னால் இருக்கும் குடும்பம் வேலைக்குச் செல்வதில்லை, பாடசாலை போவதில்லை ஆனால் அவர்களுக்கு கோவிட் -19 எப்படி வந்தது என்று அவர்களுக்கு விளக்கமில்லை வீட்டுக்குள் மூடிக்கொண்டு இருந்தாலும் இந்தப்பிரச்சனை தீராது. எதிர்ப்பாற்றலை நாம்தான் வளர்த்துக் கொள்ள வேண்டும்.  இதற்காகத்தான் பாடசாலைகள் திறக்கப்படுகின்றன. பாடசாலைகள் யாரையும் வரும்படி வற்புறுத்தவில்லை. ஒன்லைனில் கற்கக்கூடிய வசதியையும் வழஙகுகிறார்கள். எதிர்ப்பாற்றலை வளர்க்கும் எண்ணம் உள்ளவர்கள் அங்கு செல்கிறார்கள். அவ்வளவே

இந்த கொரனாவுக்கு எதிர்ப்பாற்றல் வளர்த்தல் என்று நீங்கள் சொல்வது  நோய்க்கான எதிர்ப்புச் சக்தியா?

கொரனாவைரசுக்கு herd immunity எனும் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிப் பாதுகாப்பு அளிப்பதாக ஆய்வுகள் காட்டவில்லை. எட்டுப் பேருக்கு  தொற்று வந்தால், அதில் ஒருவருக்குத் தான் நோயில் இருந்து காக்கும் வலிமை கொண்ட பிறபொருளெதிரிகள் (antibodies)  உருவாகும் என்று சீனாவில் நடந்த ஆய்வில் கண்டறிந்தார்கள். தடுப்பூசி வேறாகச் செயல்படுவதால் அது பாதுகாப்பை வழங்கும்! ஆனால், கொரனா பரவ அனுமதித்தால் எதிர்ப்பாற்றல் பரவும் என்பது மிகவும் தவறான தகவல், மக்கள் இதை நம்பினால் தொற்றுகளும் மரணங்களும் அதிகரிக்கும்! 

அவதானமாக எதையும் செய்வதே இப்போதைக்கு ஒரே வழி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.