Jump to content

ஜேர்மன் வாழ் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் கொரோனா!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மன் வாழ் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முறையான பாதுகாப்பு வசதிகள் மற்றும் பாதுகாப்பு இடைவெளிகள் இல்லாது குடும்ப நிகழ்வுகளில் கலந்துகொண்டதால் அதிகமானோருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஜெர்மன் நாட்டில் உள்ள பீலவில்ட் ( Bielefeld) நகரில் 22.09.20 அன்று நடைபெற்ற குடும்ப நிகழ்வில் கலந்து கொண்ட 40 இற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர். அத்தோடு இந்நிகழ்வில் கலந்துகொண்ட மேலதிகமாக 50 இற்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதேவேளை குமமெர்ஸ்பாஹ் (Gummersbach) நகரிலும் தொடர்ச்சியாக பலர் கொரோனாத்தொற்றுக்கு உள்ளாகியுள்ளது. உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டவர்கள் சமீபத்தில் பல குடும்ப நிகழ்வுகளில் கலந்துள்ள நிலையில், இக்குடும்ப நிகழ்வுகளில் கலந்துகொண்ட அனைவரும் பரிசோதனைக்கு அழைக்கப்படவுள்ளனர் என மேலும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டவர்கள், அல்லது கலந்துகொண்டவர்களுடன் கடந்த வாரத்தில் நேரடியாக பழகியவர்கள் உடனடியாக தங்களை தனிமைப்படுத்துமாறும், பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் ஜேர்மனிய சுகாதாரத்துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நாடுகள் ரீதியாக மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், இப்படியான குடும்ப நிகழ்வுகளின் அத்தியாவசியத்தினை ஆராய்ந்து முழு முற்பாதுகாப்பு நடவடிக்கைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது என புலம்பெயர் தமிழர் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

https://www.tamilwin.com/germany/01/257110?ref=imp-news

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிலமையிலையும் சாமத்திய வீடு செய்திருக்கிறாங்கள்....😡
96 பேருக்கு கொரோனா.....வந்த மிச்ச பேரை தேடித்திரியுறாங்களாம்....அது பரீஸ்....கொலண்ட்....டென்மார்க் எண்டு தொடருதாம்.....இப்ப அந்த சிற்றியையே  இழுத்து மூடுறாங்களாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

இந்த நிலமையிலையும் சாமத்திய வீடு செய்திருக்கிறாங்கள்....😡
96 பேருக்கு கொரோனா.....வந்த மிச்ச பேரை தேடித்திரியுறாங்களாம்....அது பரீஸ்....கொலண்ட்....டென்மார்க் எண்டு தொடருதாம்.....இப்ப அந்த சிற்றியையே  இழுத்து மூடுறாங்களாம்.

தெரிந்து கொண்டு ஏன் கூத்தடித்தவை ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பெருமாள் said:

தெரிந்து கொண்டு ஏன் கூத்தடித்தவை ?

நாங்கள் எத்தினை குண்டுகளை தாண்டி வந்தனாங்கள். கொரோனாவது மண்ணாங்கட்டியாவது....:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

நாங்கள் எத்தினை குண்டுகளை தாண்டி வந்தனாங்கள். கொரோனாவது மண்ணாங்கட்டியாவது....:grin:

வெடி பிடித்தால் ஆறு மாதத்தில்  குணமடையலாம் இந்த கொரோனா  வந்தால் ஆளை அரை பிணமாக்கி விடும் உள்ளிருக்கும் இன்சினகளை பழுதாக்கி  விட்டு விடும் என்னை பொறுத்தவரை இனி ஒரு தமிழன் கொரனோவால்  சாகக்கூடாது என்பதெல்ல கொரோனோவை  தமிழனுக்கு பிடிக்க கூடாது என்பது பிரார்த்தனை நீங்களும் தமிழ் சிறியரும்  கவனம் அண்ணை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பெருமாள் said:

வெடி பிடித்தால் ஆறு மாதத்தில்  குணமடையலாம் இந்த கொரோனா  வந்தால் ஆளை அரை பிணமாக்கி விடும் உள்ளிருக்கும் இன்சினகளை பழுதாக்கி  விட்டு விடும் என்னை பொறுத்தவரை இனி ஒரு தமிழன் கொரனோவால்  சாகக்கூடாது என்பதெல்ல கொரோனோவை  தமிழனுக்கு பிடிக்க கூடாது என்பது பிரார்த்தனை நீங்களும் தமிழ் சிறியரும்  கவனம் அண்ணை .

கவனமாய் இருப்பது என்பதை விட விதி என்பது சரி போல் இருக்கின்றது...
பாடகர் பாலசுப்பிரமணியம் ஒரு பணக்காரர். அவர் அண்மைக்கால நிகழ்ச்சிகளில் முககவசம் கையுறை என்பனவற்றுடனேயே திரிந்தார். எல்லாவற்றையும் விட மற்றவர்களுக்கு புத்திமதியும் பிரார்த்தனையும் செய்தார்.
இறுதியில் நடந்தது என்ன?

தலையில் என்ன எழுதியிருக்கோ அதுதான் நடக்கும் பெருமாள். பாதுகாப்பாக நடு வீட்டுக்குள் இருந்து சுவர் இடிந்து விழுந்தாலும் மரணம்தான்.
எல்லாமே விதிப்படிதான் நடக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

கவனமாய் இருப்பது என்பதை விட விதி என்பது சரி போல் இருக்கின்றது...
பாடகர் பாலசுப்பிரமணியம் ஒரு பணக்காரர். அவர் அண்மைக்கால நிகழ்ச்சிகளில் முககவசம் கையுறை என்பனவற்றுடனேயே திரிந்தார். எல்லாவற்றையும் விட மற்றவர்களுக்கு புத்திமதியும் பிரார்த்தனையும் செய்தார்.
இறுதியில் நடந்தது என்ன?

தலையில் என்ன எழுதியிருக்கோ அதுதான் நடக்கும் பெருமாள். பாதுகாப்பாக நடு வீட்டுக்குள் இருந்து சுவர் இடிந்து விழுந்தாலும் மரணம்தான்.
எல்லாமே விதிப்படிதான் நடக்கும்.

தினமும் ஊரில் நடக்கும் தற்கொலைகளை பார்த்தே நொந்து போறவன் விதி கிதி என்று சொல்லாமல் பாதுகாப்பாய்  இருங்கள் sb யின் வயதா உங்களது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வைத்தியரின் பதிலில் கொஞ்சம் குளப்ப மிரூக்கிறது.திகதிகளி தடுமாற்றம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

வெடி பிடித்தால் ஆறு மாதத்தில்  குணமடையலாம் இந்த கொரோனா  வந்தால் ஆளை அரை பிணமாக்கி விடும் உள்ளிருக்கும் இன்சினகளை பழுதாக்கி  விட்டு விடும் என்னை பொறுத்தவரை இனி ஒரு தமிழன் கொரனோவால்  சாகக்கூடாது என்பதெல்ல கொரோனோவை  தமிழனுக்கு பிடிக்க கூடாது என்பது பிரார்த்தனை நீங்களும் தமிழ் சிறியரும்  கவனம் அண்ணை .

முக்கியமான விளையாட்டுகள், இசை நிகழ்ச்சிகள், வருடாந்திர கொண்டாட்டங்கள் என்று..
எதுவுமே நடத்தாமல்... எல்லோரும் சமூக பொறுப்புடன் இருக்கும் போது,

இப்ப சாமத்தியச் சடங்கை நடத்தியவர்களை... என்னவென்று சொல்வது.
இதனால் பாதிக்கப் படப் போவது, அவர்களின் நெருங்கிய உறவினர்களும், 
நண்பர்களும் என்பதை...   முன்பே சிறிது சிந்தித்திருந்தால்... இதனை தவிர்த்திருக்கலாமே...
அவர்களை நினைக்க... கோவம் தான் வருகின்றது.

நான் கோவிலுக்கோ, கடைகளுக்கோ அனாவசியமாக போகாமல் கட்டுப் பாட்டுடன்தான் உள்ளேன்.
ஆனாலும்... வேலை இடத்தில், தினமும்... கிழக்கு ஐரோப்பியர் உட்பட, 
தினமும் பலரை சந்திக்க வேண்டி இருப்பதால்... கொஞ்சம்  பயத்துடன் தான் இருக்க வேண்டி உள்ளது.
உங்கள் அக்கறைக்கு... நன்றி  பெருமாள். 

Link to comment
Share on other sites

5 hours ago, தமிழ் சிறி said:

நான் கோவிலுக்கோ, கடைகளுக்கோ அனாவசியமாக போகாமல் கட்டுப் பாட்டுடன்தான் உள்ளேன்.

அவருடைய கட்டுப் பாட்டைக் கேட்டுச் சகிக்க முடியாமல் கொரோனாவும் காத தூரத்தில் காதைப் பொத்திக்கொண்டு நிற்கிறதாம். 

நல்லகாலம், ஓசியில் மருந்தடிக்காத மரக்கறி தருகிறேன், வீட்டுக்கு வாருங்கள் என்றேன் மறுத்துவிட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Paanch said:

அவருடைய கட்டுப் பாட்டைக் கேட்டுச் சகிக்க முடியாமல் கொரோனாவும் காத தூரத்தில் காதைப் பொத்திக்கொண்டு நிற்கிறதாம். 

நல்லகாலம், ஓசியில் மருந்தடிக்காத மரக்கறி தருகிறேன், வீட்டுக்கு வாருங்கள் என்றேன் மறுத்துவிட்டார்.

பாஞ்ச் அண்ணை...   இந்த மரக்கறி விசயத்தை மறந்திருப்பார் என்று பார்த்தால்... 😁

ஆள்...மறக்கிற மாதிரி தெரியவில்லை.  😀

Link to comment
Share on other sites

நாம் எவ்எளவு பட்டாலும் மாறப்போவதில்லை. வேறு என்ன சொல்வது இவர்களை ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, யாயினி said:

இந்த வைத்தியரின் பதிலில் கொஞ்சம் குளப்ப மிரூக்கிறது.திகதிகளி தடுமாற்றம்.

SPB முதல் நாளே இறந்து விட்டதாகவும், வைத்தியசாலை.... பணத்தினை வை என்று அடம் பிடித்து, ஆள் சீரியஸ் என்று கதை விட்டு கொண்டிருந்ததாகவும் கதைகள் வருகின்றன.

மகன் சரண், அரசு உதவி கோரி, சமரசம் பேசியே உடல் வழங்கப்படுள்ளதாக தெரிகிறது.

முதலில் மறுத்த சரண், அரசு உதவி கேட்டது உண்மை என்று இன்று சொல்லி உள்ளார்.

தான் பணத்துடன் போனதாகவும், வைத்தியசாலை சேர்மன் வாங்க மறுத்து விட்டதாகவும், பிறகு பார்க்கலாம் என்று சொன்னதாகவும் சொல்லி உள்ளார்.

ஆக.... அரசு அல்லது வேறு பிரபலங்கள் சேர்ந்து, பணம் கொடுத்திருக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

SPB முதல் நாளே இறந்து விட்டதாகவும், வைத்தியசாலை.... பணத்தினை வை என்று அடம் பிடித்து, ஆள் சீரியஸ் என்று கதை விட்டு கொண்டிருந்ததாகவும் கதைகள் வருகின்றன.

மகன் சரண், அரசு உதவி கோரி, சமரசம் பேசியே உடல் வழங்கப்படுள்ளதாக தெரிகிறது.

முதலில் மறுத்த சரண், அரசு உதவி கேட்டது உண்மை என்று இன்று சொல்லி உள்ளார்.

தான் பணத்துடன் போனதாகவும், வைத்தியசாலை சேர்மன் வாங்க மறுத்து விட்டதாகவும், பிறகு பார்க்கலாம் என்று சொன்னதாகவும் சொல்லி உள்ளார்.

ஆக.... அரசு அல்லது வேறு பிரபலங்கள் சேர்ந்து, பணம் கொடுத்திருக்கலாம். 

நாம் ஒரு இறந்த ஆத்மாவை வைத்து விமர்சனம் பகிர்வது தவறு..ஆனாலும் அவரது மகன் உட்பட சிலரை நினைக்கும் போது மிகவும் மன வருத்தமாக இருக்கிறது.இளையராஜா அவர்கள் மோட்ச விளக்கோடு நின்று விட்டார்..மற்றவர்கள் ஒவ்வொரு நாடு நாடாக இருந்து வெறும் அஞ்சலியோடு சரி.இனி பேச என்ன இருக்கிறது.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கும் பாடசாலைகளை திறந்து வைத்து கூத்தடிக்கிறார்கள் பின் முடுகிறார்கள்.அது போக தமிழ்மக்களின் கொண்டாடங்களில் பரவுதல் நடக்கிறதாக அறியக் கூடியதாக இருக்கிறது..நிறைய விடையங்கள் வெளி வருவது மிகவும் குறைவு.நான் கடந்த சில தினங்ளுக்கு முன் மருத்துவமனை ஒன்றுக்கு சென்றேன்..அங்கு இரண்டு நம் இனத்து பெண்கள் தங்களுக்கு தாங்களே ஏதோ பார்சல் பரிமாற்றத்தில் நின்றார்கள் அதுவும் பார்க்கிங்லொற் பக்கத்தில்..ஒரு பெண் மற்றைய பெண்ணுக்கு இதை கை காவலுக்கு வைச்சுக்கோ உறுதி செய்யப்பட்டால் பின் பார்ப்போம் என்று சொல்லியது நான் அவர்களை கடந்து செல்லும் போது காதில் விழுந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

பாஞ்ச் அண்ணை...   இந்த மரக்கறி விசயத்தை மறந்திருப்பார் என்று பார்த்தால்... 😁

ஆள்...மறக்கிற மாதிரி தெரியவில்லை.  😀

கவனம் சிறித்தம்பி! உது பிறகு கறளாய் மாறீடும். எதுக்கும் சும்மா சம்பிரதாயத்துக்காகவாவது இரண்டு தக்காளிக்காயை புடுங்கிக்கொண்டு ஓடியாங்கோ 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, யாயினி said:

இங்கும் பாடசாலைகளை திறந்து வைத்து கூத்தடிக்கிறார்கள் பின் முடுகிறார்கள்.

யாயினி பாடசாலைகளைத் திறந்து வைத்து கூத்தடிக்கிறார்கள் என்று குற்றச்சாட்டை வைக்கமுடியாது. நீண்ட காலத்திற்கு தடுப்பு மருந்து இல்லாத நோயாக இருக்கப் போகிற கோவிட்- 19 இற்கு முகங்கொடுக்க பழக்கப்படுத்தப்படுகிறார்கள் என்றே நினைக்கிறேன். தொடர்ச்சியாக வேறெங்கும் இல்லாத அளவுக்கு மக்கள் பாதுகாப்புக்காக நிறைய பணம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் பொருளாதாரம் கிடுகிடுவென்று கீழ்நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்நோயை எதிர்கொள்ளும் திராணியை உருவாக்கவில்லை என்றால் அடுத்த வருடம் அரச உதவிப்பணமும் நிறுத்தப்படும்போது மக்கம் மிகவும் நெருக்கடியைச் சந்திப்பார்கள். இப்போதே விலைவாசி ஏற்றம் விழிபிதுங்க வைக்கிறது. பல நிறுவனங்கள் வங்குரோத்து நிலைக்கு சென்று விட்டன. அன்றாட வாழ்க்கை முறை முடக்கத்தால் பலர் வருமானம் இழந்த நிலையில் தொழிலகங்களை இழுத்து மூடிவிட்டார்கள். இயல்பு நிலைக்கு அன்றாட வாழ்வு திரும்பாவிட்டாலும் ஓரளவுக்காவது இவற்றை திருப்ப எத்தனிக்கிறார்கள். என் வீட்டுக்கு முன்னால் இருக்கும் குடும்பம் வேலைக்குச் செல்வதில்லை, பாடசாலை போவதில்லை ஆனால் அவர்களுக்கு கோவிட் -19 எப்படி வந்தது என்று அவர்களுக்கு விளக்கமில்லை வீட்டுக்குள் மூடிக்கொண்டு இருந்தாலும் இந்தப்பிரச்சனை தீராது. எதிர்ப்பாற்றலை நாம்தான் வளர்த்துக் கொள்ள வேண்டும்.  இதற்காகத்தான் பாடசாலைகள் திறக்கப்படுகின்றன. பாடசாலைகள் யாரையும் வரும்படி வற்புறுத்தவில்லை. ஒன்லைனில் கற்கக்கூடிய வசதியையும் வழஙகுகிறார்கள். எதிர்ப்பாற்றலை வளர்க்கும் எண்ணம் உள்ளவர்கள் அங்கு செல்கிறார்கள். அவ்வளவே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை பாராட்டலாம் கட்டுப்படுத்தியுள்ளார்கள் ஆனால் வெளிநாட்டிலிருந்து வருபவர்களால்தான் கொஞ்சம் சிக்கல் இருந்தாலும் தனிமைப்படுத்தல் தொடர்கிறது 

ஜேர்மன் தமிழ் ஆட் கள் சொல் பேச்சி கேட் க மாட்டார்கள் போல

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, வல்வை சகாறா said:

யாயினி பாடசாலைகளைத் திறந்து வைத்து கூத்தடிக்கிறார்கள் என்று குற்றச்சாட்டை வைக்கமுடியாது. நீண்ட காலத்திற்கு தடுப்பு மருந்து இல்லாத நோயாக இருக்கப் போகிற கோவிட்- 19 இற்கு முகங்கொடுக்க பழக்கப்படுத்தப்படுகிறார்கள் என்றே நினைக்கிறேன். தொடர்ச்சியாக வேறெங்கும் இல்லாத அளவுக்கு மக்கள் பாதுகாப்புக்காக நிறைய பணம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் பொருளாதாரம் கிடுகிடுவென்று கீழ்நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்நோயை எதிர்கொள்ளும் திராணியை உருவாக்கவில்லை என்றால் அடுத்த வருடம் அரச உதவிப்பணமும் நிறுத்தப்படும்போது மக்கம் மிகவும் நெருக்கடியைச் சந்திப்பார்கள். இப்போதே விலைவாசி ஏற்றம் விழிபிதுங்க வைக்கிறது. பல நிறுவனங்கள் வங்குரோத்து நிலைக்கு சென்று விட்டன. அன்றாட வாழ்க்கை முறை முடக்கத்தால் பலர் வருமானம் இழந்த நிலையில் தொழிலகங்களை இழுத்து மூடிவிட்டார்கள். இயல்பு நிலைக்கு அன்றாட வாழ்வு திரும்பாவிட்டாலும் ஓரளவுக்காவது இவற்றை திருப்ப எத்தனிக்கிறார்கள். என் வீட்டுக்கு முன்னால் இருக்கும் குடும்பம் வேலைக்குச் செல்வதில்லை, பாடசாலை போவதில்லை ஆனால் அவர்களுக்கு கோவிட் -19 எப்படி வந்தது என்று அவர்களுக்கு விளக்கமில்லை வீட்டுக்குள் மூடிக்கொண்டு இருந்தாலும் இந்தப்பிரச்சனை தீராது. எதிர்ப்பாற்றலை நாம்தான் வளர்த்துக் கொள்ள வேண்டும்.  இதற்காகத்தான் பாடசாலைகள் திறக்கப்படுகின்றன. பாடசாலைகள் யாரையும் வரும்படி வற்புறுத்தவில்லை. ஒன்லைனில் கற்கக்கூடிய வசதியையும் வழஙகுகிறார்கள். எதிர்ப்பாற்றலை வளர்க்கும் எண்ணம் உள்ளவர்கள் அங்கு செல்கிறார்கள். அவ்வளவே

இதில் எனக்கு மாற்று கருத்து உண்டு 
உலக சுகாதார சேவை சீனாவுக்கு வெளியில் கொரோனா வர போகிறது என்றவுடன் 
எல்லா நாட்டுக்கும் 10 வீத பொருளாதார நஷ்ட்டத்தை ஏற்றுக்கொண்டு எல்ல்லாவ்ற்றையும் மூடி 
இதை முதலில் சீனாவில் வைத்தே கட்டுப்படுத்த ஆலோசனை கூறியது. 

ஆனால் 10 வீத பொருளாதார வீழ்ச்சிக்கு யாரும் ஒத்துக்கொள்ளவில்லை 
ஆனால்  இன்று அண்ணளவாக 35 வீதம் பொருளாதார வீழ்ச்சியும் பல ஆயிரக்கணக்கான 
மரணத்துக்கும் பல திறமையான மருத்துவர்கள் உட்பட முகம் கொடுத்து இருக்கிறார்கள்.

பள்ளிகளை திறப்பது அனாவசியமற்ற வேலை இப்பபோதைய சூழலில் 
இது பொருளாதாரத்துக்கு எந்த பலனையும் கொடுக்க போவதில்லை .. வளர்ச்சி அடைந்த நாடுகள் 
ஒன்லைன் வடிவத்துக்கு மாறி இருக்கலாம். 

இப்போதும் அரசுகள் சரியான பரிந்துரைகளை கடைபிடிக்கிறார்கள் இல்லை 
மூன்று கிழமைகள் முழுதான பூட்டு பூட்டினால் இதை தடுக்க முடியும் 
மக்களின் பங்களிப்பு மிக மிக அவசியம். 

திறந்து பூட்டி திறந்து பூட்டி சிலுக்கு ஸ்மிதா பாடல்காட்ச்சிபோல் 
மக்களின் உயிரோடு விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள் . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Maruthankerny said:

இதில் எனக்கு மாற்று கருத்து உண்டு 
உலக சுகாதார சேவை சீனாவுக்கு வெளியில் கொரோனா வர போகிறது என்றவுடன் 
எல்லா நாட்டுக்கும் 10 வீத பொருளாதார நஷ்ட்டத்தை ஏற்றுக்கொண்டு எல்ல்லாவ்ற்றையும் மூடி 
இதை முதலில் சீனாவில் வைத்தே கட்டுப்படுத்த ஆலோசனை கூறியது. 

ஆனால் 10 வீத பொருளாதார வீழ்ச்சிக்கு யாரும் ஒத்துக்கொள்ளவில்லை 
ஆனால்  இன்று அண்ணளவாக 35 வீதம் பொருளாதார வீழ்ச்சியும் பல ஆயிரக்கணக்கான 
மரணத்துக்கும் பல திறமையான மருத்துவர்கள் உட்பட முகம் கொடுத்து இருக்கிறார்கள்.

பள்ளிகளை திறப்பது அனாவசியமற்ற வேலை இப்பபோதைய சூழலில் 
இது பொருளாதாரத்துக்கு எந்த பலனையும் கொடுக்க போவதில்லை .. வளர்ச்சி அடைந்த நாடுகள் 
ஒன்லைன் வடிவத்துக்கு மாறி இருக்கலாம். 

இப்போதும் அரசுகள் சரியான பரிந்துரைகளை கடைபிடிக்கிறார்கள் இல்லை 
மூன்று கிழமைகள் முழுதான பூட்டு பூட்டினால் இதை தடுக்க முடியும் 
மக்களின் பங்களிப்பு மிக மிக அவசியம். 

திறந்து பூட்டி திறந்து பூட்டி சிலுக்கு ஸ்மிதா பாடல்காட்ச்சிபோல் 
மக்களின் உயிரோடு விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள் . 

அதிசயம் ஆனால் உண்மை. எனக்கும் மருதருக்கும் கருத்து ஒற்றுமை!!!🤣

சரியான தடுப்பூசி கிடைக்கும் வரை 10-15% பொருளாதாரத்தை பலியிட்டு, நியூசிலாந்து செய்ததை போல செய்திருந்தால் உள்ளூர் பொருளாதாரமாவது தப்பி இருக்கும்.

இப்போ 100% பொருளாதாரமும் ஆட்டம் காணுகிறது.

யூகேயில் யூலை மாதம் தொற்று குறைந்த கையோடு அரசே வெளிநாட்டு ஹொலிடேக்களை ஊக்குவிக்கும் விதத்தில் நடந்தது. 

மக்களும் செம்மறிகள் போல ஒரு வருடம் கொலிடே போகாட்டில் ஏதோ சாமி குற்றம் போல அள்ளுபட்டு ஸ்பெயின், பிரான்ஸ் எண்டு போனது.

போய் வந்த கோஸ்டி கொரோனாவோட வந்து நல்லா பரப்பி விட்டது.

மொக்குச் சனங்கள், அதை வென்ற மொக்கு அரசாங்கம்.

இவங்கள் எப்படி உலகை வென்றார்கள் என்பதுதான் தெரியவில்லை. 🤣

1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

 

ஜேர்மன் தமிழ் ஆட் கள் சொல் பேச்சி கேட் க மாட்டார்கள் போல

 

ஓவர் டு யூ பாஞ்ச், சிறி, கு சா அண்ணைமார் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்தால் அதை போடுவதன் மூலம் உடலில் கொரோனா எதிர்ப்பாற்றலை ஏற்படுத்தி நோய் வராமல் தப்பலாம்.ஆனால் பாடசாலைகள் திறப்பதன் மூலம் எப்படி எதிர்பாற்றலை வளர்க்க முடியும் அப்படி முடியுமாயின் அள்ளுபட்டு ஸ்பெயின் பிரான்ஸ் போவதும் கொரோனா எதிர்ப்பாற்றலை வளர்க்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, goshan_che said:

அதிசயம் ஆனால் உண்மை. எனக்கும் மருதருக்கும் கருத்து ஒற்றுமை!!!🤣

சரியான தடுப்பூசி கிடைக்கும் வரை 10-15% பொருளாதாரத்தை பலியிட்டு, நியூசிலாந்து செய்ததை போல செய்திருந்தால் உள்ளூர் பொருளாதாரமாவது தப்பி இருக்கும்.

இப்போ 100% பொருளாதாரமும் ஆட்டம் காணுகிறது.

யூகேயில் யூலை மாதம் தொற்று குறைந்த கையோடு அரசே வெளிநாட்டு ஹொலிடேக்களை ஊக்குவிக்கும் விதத்தில் நடந்தது. 

மக்களும் செம்மறிகள் போல ஒரு வருடம் கொலிடே போகாட்டில் ஏதோ சாமி குற்றம் போல அள்ளுபட்டு ஸ்பெயின், பிரான்ஸ் எண்டு போனது.

போய் வந்த கோஸ்டி கொரோனாவோட வந்து நல்லா பரப்பி விட்டது.

மொக்குச் சனங்கள், அதை வென்ற மொக்கு அரசாங்கம்.

இவங்கள் எப்படி உலகை வென்றார்கள் என்பதுதான் தெரியவில்லை. 🤣

ஓவர் டு யூ பாஞ்ச், சிறி, கு சா அண்ணைமார் 🤣

என்ன இப்படி  சொல்லிக்கிறீர்கள் 
உங்களின் 80 வீதமான கருத்துக்களில் எனக்கு உடன்பாடு உண்டு 
சீமானின் கருத்துக்களில் கூட ஏனெனில் கண்ணைமூடிக்கொண்டு 
எமக்கு சாதகமாக பேசுகிறார் என்று ஆதரவு கொடுப்பது நல்ல எண்ணத்தில் இருக்கும் 
சீமானையும் மாற்றக்கூடியது 

இதுக்கு நல்ல உதாரணம் தற்போதைய அமெரிக்க லூசு ஜனாதிபதி 
அவரை இந்த அளவுக்கு லுஷன் ஆக்கியத்தில் பெரும்பங்கு அவரை கண்ணை மூடிக்கொண்டு 
ஆதரிக்கும் ஆதரவு கூட்டத்தை சேரும். 

தூற்றுதல் என்பதுதான் மறுக்கும் 20 வீதம் 
சீமான் தெலுங்கர்களுக்கு எதிராளி அல்ல 

என்னாவது செய்யுங்கள் 
என்னையும் குழந்தையையும் தமிழ் - தெலுங்கு என்று தயவு செய்து பிரித்து விடாதீர்கள்.
போங்கடா நீங்களும் உங்கள் தமிழும் என்று விட்டு போய்விடுவேன் 

Kajal Agarwal Hot HD Photos in Saree (1080p) - #135 #kajalagarwal #kajal  #kollywood #tollywood #m… | Kerala saree blouse designs, Kerala saree  blouse, Elegant saree

 

Whose navel is better, Kajal Agarwal or Tammanah Bhatia? - Quora

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

என்ன இப்படி  சொல்லிக்கிறீர்கள் 
உங்களின் 80 வீதமான கருத்துக்களில் எனக்கு உடன்பாடு உண்டு 
சீமானின் கருத்துக்களில் கூட ஏனெனில் கண்ணைமூடிக்கொண்டு 
எமக்கு சாதகமாக பேசுகிறார் என்று ஆதரவு கொடுப்பது நல்ல எண்ணத்தில் இருக்கும் 
சீமானையும் மாற்றக்கூடியது 

இதுக்கு நல்ல உதாரணம் தற்போதைய அமெரிக்க லூசு ஜனாதிபதி 
அவரை இந்த அளவுக்கு லுஷன் ஆக்கியத்தில் பெரும்பங்கு அவரை கண்ணை மூடிக்கொண்டு 
ஆதரிக்கும் ஆதரவு கூட்டத்தை சேரும். 

தூற்றுதல் என்பதுதான் மறுக்கும் 20 வீதம் 
சீமான் தெலுங்கர்களுக்கு எதிராளி அல்ல 

என்னாவது செய்யுங்கள் 
என்னையும் குழந்தையையும் தமிழ் - தெலுங்கு என்று தயவு செய்து பிரித்து விடாதீர்கள்.
போங்கடா நீங்களும் உங்கள் தமிழும் என்று விட்டு போய்விடுவேன் 

Kajal Agarwal Hot HD Photos in Saree (1080p) - #135 #kajalagarwal #kajal  #kollywood #tollywood #m… | Kerala saree blouse designs, Kerala saree  blouse, Elegant saree

 

Whose navel is better, Kajal Agarwal or Tammanah Bhatia? - Quora

 

அனுஸ்காவும் தமிழ் என்று அறிவிச்சா நானும் உங்கள் கட்சிதான்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வல்வை சகாறா said:

யாயினி பாடசாலைகளைத் திறந்து வைத்து கூத்தடிக்கிறார்கள் என்று குற்றச்சாட்டை வைக்கமுடியாது. நீண்ட காலத்திற்கு தடுப்பு மருந்து இல்லாத நோயாக இருக்கப் போகிற கோவிட்- 19 இற்கு முகங்கொடுக்க பழக்கப்படுத்தப்படுகிறார்கள் என்றே நினைக்கிறேன். தொடர்ச்சியாக வேறெங்கும் இல்லாத அளவுக்கு மக்கள் பாதுகாப்புக்காக நிறைய பணம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் பொருளாதாரம் கிடுகிடுவென்று கீழ்நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்நோயை எதிர்கொள்ளும் திராணியை உருவாக்கவில்லை என்றால் அடுத்த வருடம் அரச உதவிப்பணமும் நிறுத்தப்படும்போது மக்கம் மிகவும் நெருக்கடியைச் சந்திப்பார்கள். இப்போதே விலைவாசி ஏற்றம் விழிபிதுங்க வைக்கிறது. பல நிறுவனங்கள் வங்குரோத்து நிலைக்கு சென்று விட்டன. அன்றாட வாழ்க்கை முறை முடக்கத்தால் பலர் வருமானம் இழந்த நிலையில் தொழிலகங்களை இழுத்து மூடிவிட்டார்கள். இயல்பு நிலைக்கு அன்றாட வாழ்வு திரும்பாவிட்டாலும் ஓரளவுக்காவது இவற்றை திருப்ப எத்தனிக்கிறார்கள். என் வீட்டுக்கு முன்னால் இருக்கும் குடும்பம் வேலைக்குச் செல்வதில்லை, பாடசாலை போவதில்லை ஆனால் அவர்களுக்கு கோவிட் -19 எப்படி வந்தது என்று அவர்களுக்கு விளக்கமில்லை வீட்டுக்குள் மூடிக்கொண்டு இருந்தாலும் இந்தப்பிரச்சனை தீராது. எதிர்ப்பாற்றலை நாம்தான் வளர்த்துக் கொள்ள வேண்டும்.  இதற்காகத்தான் பாடசாலைகள் திறக்கப்படுகின்றன. பாடசாலைகள் யாரையும் வரும்படி வற்புறுத்தவில்லை. ஒன்லைனில் கற்கக்கூடிய வசதியையும் வழஙகுகிறார்கள். எதிர்ப்பாற்றலை வளர்க்கும் எண்ணம் உள்ளவர்கள் அங்கு செல்கிறார்கள். அவ்வளவே

இந்த கொரனாவுக்கு எதிர்ப்பாற்றல் வளர்த்தல் என்று நீங்கள் சொல்வது  நோய்க்கான எதிர்ப்புச் சக்தியா?

கொரனாவைரசுக்கு herd immunity எனும் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிப் பாதுகாப்பு அளிப்பதாக ஆய்வுகள் காட்டவில்லை. எட்டுப் பேருக்கு  தொற்று வந்தால், அதில் ஒருவருக்குத் தான் நோயில் இருந்து காக்கும் வலிமை கொண்ட பிறபொருளெதிரிகள் (antibodies)  உருவாகும் என்று சீனாவில் நடந்த ஆய்வில் கண்டறிந்தார்கள். தடுப்பூசி வேறாகச் செயல்படுவதால் அது பாதுகாப்பை வழங்கும்! ஆனால், கொரனா பரவ அனுமதித்தால் எதிர்ப்பாற்றல் பரவும் என்பது மிகவும் தவறான தகவல், மக்கள் இதை நம்பினால் தொற்றுகளும் மரணங்களும் அதிகரிக்கும்! 

அவதானமாக எதையும் செய்வதே இப்போதைக்கு ஒரே வழி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.