Jump to content

ஜேர்மன் வாழ் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் கொரோனா!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Justin said:

இந்த கொரனாவுக்கு எதிர்ப்பாற்றல் வளர்த்தல் என்று நீங்கள் சொல்வது  நோய்க்கான எதிர்ப்புச் சக்தியா?

கொரனாவைரசுக்கு herd immunity எனும் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிப் பாதுகாப்பு அளிப்பதாக ஆய்வுகள் காட்டவில்லை. எட்டுப் பேருக்கு  தொற்று வந்தால், அதில் ஒருவருக்குத் தான் நோயில் இருந்து காக்கும் வலிமை கொண்ட பிறபொருளெதிரிகள் (antibodies)  உருவாகும் என்று சீனாவில் நடந்த ஆய்வில் கண்டறிந்தார்கள். தடுப்பூசி வேறாகச் செயல்படுவதால் அது பாதுகாப்பை வழங்கும்! ஆனால், கொரனா பரவ அனுமதித்தால் எதிர்ப்பாற்றல் பரவும் என்பது மிகவும் தவறான தகவல், மக்கள் இதை நம்பினால் தொற்றுகளும் மரணங்களும் அதிகரிக்கும்! 

அவதானமாக எதையும் செய்வதே இப்போதைக்கு ஒரே வழி.

தவிரவும் இதுவரை சிலருக்கு தொற்று மீளவும் வந்துள்ளது.

நான் வாசித்து அறிந்தவரையில் பொதுவாக பெரிய விளைவை தரும் சார்ஸ், சின்னம்மை போன்ற தொற்றுக்கள் - 2 வருடமாவது antibodies உடலில் இருக்குமாம். ஆனால் சாதாரண தடிமலை தொடர்ந்து வரும் antibodies ஓரிரு மாதங்களில் அழிந்து விடுமாம். 

ஆனால் இந்த வைரஸ் பாரிய தாக்கத்தை தருவதாக இருந்தாலும் - பலருக்கு நோய் வந்த 2 கிழமையின் பின்னும் antibodies நெகட்டிவ் வருகிறதாம்.

ஆகவே herd immunity சாத்தியமாக தெரியவில்லை.

தடுப்பூசியினால் வரும் பாதுகாப்பும் 6 மாதம் - 1 வருடம்தான் என கதைக்கிறார்கள்.

ஆனால் தடுப்பூசி ஏற்றினால் பக்க விளைவு மரணம் இல்லை என்பதால் - அனைவருக்கும் ஒரே காலத்தில் தடுபூசி ஏற்றி ஒவ்வொரு நாடாக பாதிப்பை குறைக்க முடியும் என நினைக்கிறேன்.

இதுவரை மனி குலம் சந்தித்த தொற்றில் இருந்து இந்த வகையில் இது மாறுபாடானது.

ஆகவேதான் இதில் “மனிதரின் கைகள்” இருக்க கூடும் என நான் சந்தேகிக்கிறேன்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

பள்ளிகளை திறப்பது அனாவசியமற்ற வேலை இப்பபோதைய சூழலில் 
இது பொருளாதாரத்துக்கு எந்த பலனையும் கொடுக்க போவதில்லை .. வளர்ச்சி அடைந்த நாடுகள் 
ஒன்லைன் வடிவத்துக்கு மாறி இருக்கலாம். 

இப்போதும் அரசுகள் சரியான பரிந்துரைகளை கடைபிடிக்கிறார்கள் இல்லை 
மூன்று கிழமைகள் முழுதான பூட்டு பூட்டினால் இதை தடுக்க முடியும் 
மக்களின் பங்களிப்பு மிக மிக அவசியம். 

திறந்து பூட்டி திறந்து பூட்டி சிலுக்கு ஸ்மிதா பாடல்காட்ச்சிபோல் 
மக்களின் உயிரோடு விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள் . 

பொருளாதாரத்திற்கும் பாடசாலை திறப்பிற்கும் நேரடியான சம்பந்தம் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் கோவிட் 19 தொடர்பான அச்சத்தை களைய இந்த உத்தியை மேற்கொண்டிருக்கலாம். அச்ச உணர்வு மிகையாகி செல்லும்போது அன்றாட வாழ்வு பாதிப்படைகிறது. அங்குதான் பொருளாதாரம் பயணிக்கிறது. கனடாவைப் பொருத்தவரை காலநிலை என்பது மிகச்சோதனையானது. தற்சமயம் ப்ளூ எனப்படும் காய்ச்சல் பரவும் நேரம். ஒவ்வொரு வருடமும் குளிர்காலம் ஆரம்பிக்கும்போதும், முடியும்போதும் இந்தத் தாக்கத்தால் அநேகர் பாதிக்கப்படுவார்கள். அதற்கு தடுப்பூசி போடுவதும் செப்ரெம்பர் கடைசி, ஒக்டோபரில் இங்கு நடைமுறையாகும் விடயம். தற்போது தடுப்பூசி பற்றி எத்தகவலும் இல்லை. அத்தோடு இங்கு குடும்ப வைத்தியர்கள் எல்லோரும் தமது அலுவலகங்களைப் பூட்டி வைத்துக்கொண்டு தொலைபேசி வாயிலாகவே உரையாடுகிறார்கள். வைத்தியத் தேவைக்கு பெரும் அவதி ஏற்பட்டுள்ளது. சாதாரண வழமையான வருத்தங்களுக்கும் காட்ட முடியாத சூழல். ஆனால் பல் வைத்தியர்கள் அலுவலகங்களைத் திறந்து சிகிச்சை அளிக்கிறார்கள்.(காரணம் பற்சிகிச்சைக்கு நோயாளிகளே பணம் செலுத்த வேண்டும்) குடும்ப வைத்தியர்கள் அப்படியல்ல அரசாங்கமே அவர்களுக்கான சம்பளத்தைக் கொடுக்கிறது) குடும்ப வைத்தியர்களிடம் போக முடியாதவர்கள் நேரடியாக அவசரச் சிகிச்சைப்பகுதிக்கு சென்று தனிமைப்படுத்தப்பட்டு 4,5 நாட்கள் அப்பிரிவில் மறிக்கப்பட்டு கோவிட் 19 இருக்கிறதா என்று சோதனை செய்தே திருப்பி அனுப்பப் படுகிறார்கள். அரசாங்கம் கொடுக்கும் உதவிப்பணத்தை சந்தர்ப்பம் கிடைத்ததால் நிறையவே சுத்துமாத்து செய்து பிழைப்பவர்கள் இங்கு ஏராளம். ஏன் என்னுடைய பதிவு செய்யப்பட்;ட தொழிலைக் காட்டி 40 ஆயிரம் டொலர்களை எடுக்க வழி சொல்லித்தந்தவர்களும் உண்டு. உண்மையிலேயே பாதிக்கப்படுபவர்களுக்கு சேரவேண்டியதை பலரும் தவறான வழியில் உபயோகிப்பதால் எதிர்வரும் காலத்தில் ஒட்டு மொத்தமாக எல்லோருமே பாதிக்கப்படப்போகின்றோம். இவை இப்படியே இருக்கட்டும்.

இயல்பு வாழ்க்கைக்கு மக்களைத் திருப்பினாலே அரசாங்கம் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். அடிப்படையில் மாணவர்கள் பாடசாலைகளை இயங்க வைப்பதன் மூலம் மற்றவர்களையும் பணிகளுக்கு வரும்படி நிர்ப்பந்திக்கலாம். உரிய வைத்திய காரணி உள்ளவர்களைத் தவிர்த்து மற்றவர்கள் பணியாற்றலாம் என்று அவர்கள் நினைத்திருக்கக்கூடும் அல்லவா ,)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Justin said:

இந்த கொரனாவுக்கு எதிர்ப்பாற்றல் வளர்த்தல் என்று நீங்கள் சொல்வது  நோய்க்கான எதிர்ப்புச் சக்தியா?

கொரனாவைரசுக்கு herd immunity எனும் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிப் பாதுகாப்பு அளிப்பதாக ஆய்வுகள் காட்டவில்லை. எட்டுப் பேருக்கு  தொற்று வந்தால், அதில் ஒருவருக்குத் தான் நோயில் இருந்து காக்கும் வலிமை கொண்ட பிறபொருளெதிரிகள் (antibodies)  உருவாகும் என்று சீனாவில் நடந்த ஆய்வில் கண்டறிந்தார்கள். தடுப்பூசி வேறாகச் செயல்படுவதால் அது பாதுகாப்பை வழங்கும்! ஆனால், கொரனா பரவ அனுமதித்தால் எதிர்ப்பாற்றல் பரவும் என்பது மிகவும் தவறான தகவல், மக்கள் இதை நம்பினால் தொற்றுகளும் மரணங்களும் அதிகரிக்கும்! 

அவதானமாக எதையும் செய்வதே இப்போதைக்கு ஒரே வழி.

யஸ்ரின்

எதிர்ப்பு சக்தி உருவாகாது என்று விஞ்ஞானம் நிரூபித்துக் கொண்டிருக்கிறது. இந்த நோயிற்காக நீண்ட கால செயற்பாடின்மை மனபிறழ்வுகளை உருவாக்குகிறதே. இதுவரை இங்கு கோடைகாலம் இருந்ததால் வெளியே நடமாட்டம் குறைந்திருந்தாலும் வீட்டின் பின்புறம் அல்லது பல்கனி என்று வெளிக்காற்றைச் சுவாசித்தோம் இனி அத்தனையும் முடக்கப்பட்டு கூடுகளுக்குள்  சிறைப்படுத்தப்பட்ட பறவைகள்போல வாழ வேண்டிய கட்டாயம். இப்போதே பல முதியவர்களுக்கு மன அழுத்தம் இனிவரும் காலங்களில் இளைய சமூகமும் இந்த மன அழுத்தத்திற்கு உள்வாங்கப்படப்போகிறது. கோவிட் 19 வெளியே தெரியும் நோயாக இருக்க மன அழுத்தம் அதை விடக்கடினமாக எல்லோரையும் தாக்கப்போகிறது. ஒரு வேளை அத்தகைய சூழலைத் தவிர்க்க இத்தகைய விடயங்களை மேற்கொண்டிருப்பார்களோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, goshan_che said:

தவிரவும் இதுவரை சிலருக்கு தொற்று மீளவும் வந்துள்ளது.

நான் வாசித்து அறிந்தவரையில் பொதுவாக பெரிய விளைவை தரும் சார்ஸ், சின்னம்மை போன்ற தொற்றுக்கள் - 2 வருடமாவது antibodies உடலில் இருக்குமாம். ஆனால் சாதாரண தடிமலை தொடர்ந்து வரும் antibodies ஓரிரு மாதங்களில் அழிந்து விடுமாம். 

ஆனால் இந்த வைரஸ் பாரிய தாக்கத்தை தருவதாக இருந்தாலும் - பலருக்கு நோய் வந்த 2 கிழமையின் பின்னும் antibodies நெகட்டிவ் வருகிறதாம்.

ஆகவே herd immunity சாத்தியமாக தெரியவில்லை.

தடுப்பூசியினால் வரும் பாதுகாப்பும் 6 மாதம் - 1 வருடம்தான் என கதைக்கிறார்கள்.

ஆனால் தடுப்பூசி ஏற்றினால் பக்க விளைவு மரணம் இல்லை என்பதால் - அனைவருக்கும் ஒரே காலத்தில் தடுபூசி ஏற்றி ஒவ்வொரு நாடாக பாதிப்பை குறைக்க முடியும் என நினைக்கிறேன்.

இதுவரை மனி குலம் சந்தித்த தொற்றில் இருந்து இந்த வகையில் இது மாறுபாடானது.

ஆகவேதான் இதில் “மனிதரின் கைகள்” இருக்க கூடும் என நான் சந்தேகிக்கிறேன்.

 

 

சில விடயங்கள் உண்மை: தற்போதைய  வைரசுக்கு நோய்த்தீவிரத்தைப் பொறுத்தவரை நெருக்கமானதாக 2003 இல் வந்த சார்ஸ் வைரஸும், 2012 இல் வந்த மேர்ஸ் வைரசும் இருக்கின்றன. ஆனால், இரண்டிற்கும் உருவான நிர்ப்பீடன எதிர்ப்பு 2 வருடங்கள் வரை உடலில் தங்கியது. இதுவும், வேகமாகப் பரவாமையும் காரணமாக உயிரிழப்பு மிகக் குறைவு சார்சிலும் மேர்சிலும். 

உங்கள் மனிதனின் கண்டுபிடிப்பா கோவிட் என்ற சந்தேகத்திற்கு இப்போதைக்கு positive ஆன ஆதாரங்கள் இல்லை, சந்தேகங்களும் தகவல்களில் இருக்கும் இடைவெளிகளும் காரணமாக இப்போது என் முடிவு: இது இயற்கையாக விலங்கினத்தில் இருந்து மனிதனுக்கு பாய்ந்து விட்ட வைரசு என்பதே: 

1. இந்த வைரசை உடலுக்கு வெளியே திசுக்களில் வளர்த்தெடுப்பது கடினமாக இருக்கிறது. ஆபிரிக்க பச்சைக் குரங்கின் Vero6 என்ற திசுவில் மட்டுமே இது நன்கு வளர்கிறது. ஆனால், ஆபிரிக்க பச்சைக் குரங்கினத்தில் இந்த வைரசு இயற்கையாகக் காணப்படவில்லை.

2. மலாயன் பொங்கொலின் என்ற சீனாவுக்குள் அதிகம் கடத்தி வரப்படும் ஒரு விலங்கில் இந்த வைரசுக்கு மிக நெருக்கமான  அமைப்புடைய வைரசு இருப்பதாக க் கண்டறிந்துள்ளனர். வேறு விலங்குகளில் இதை விட நெருக்கமான கொரனா வைரசுகள் இல்லை.

3. இறுதிக் காரணம் மூலக்கூற்று அமைப்பு  சார்ந்தது, இதை விளக்க தமிழில் எனக்குக் கடினம், ஆயினும் முயல்கிறேன்: வைரசு ஒரு விலங்குகள்/மனிதரிடையே பல காலம் பரவி சுற்றித் திரியும் போது தன்னைக் காத்துக் கொள்ள சில மாச்சத்து மூலக் கூறுகளால் தன்னை மறைத்துக் கொள்ளும் (masking). இத்தகைய மாற்றம் பல வருடங்களாக ஒரு விலங்கினத்தில் வைரசு சுற்றித்திரிவதால் மட்டுமே ஏற்படக் கூடிய மாற்றம். இத்தகைய மாற்றம் இந்த நவீன கொரனாவைரசில் இருக்கிறது. உண்மையில் இந்த மாற்றம் தான் எங்கள் உடல் வைரசின் Achilles heel ஐ இனங்காண முடியாமல் தடுக்கிறது. இந்த glycosylation என்ற மாற்றத்தை செயற்கையாக ஆய்வு கூடத்தில் உருவாக்குவது  அசாத்தியம் என்றல்ல, ஆனால் மிகவும் சவாலான ஒரு வேலை.

இதுவே இப்போதைக்கு என் முடிவின் காரணங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Justin said:

சில விடயங்கள் உண்மை: தற்போதைய  வைரசுக்கு நோய்த்தீவிரத்தைப் பொறுத்தவரை நெருக்கமானதாக 2003 இல் வந்த சார்ஸ் வைரஸும், 2012 இல் வந்த மேர்ஸ் வைரசும் இருக்கின்றன. ஆனால், இரண்டிற்கும் உருவான நிர்ப்பீடன எதிர்ப்பு 2 வருடங்கள் வரை உடலில் தங்கியது. இதுவும், வேகமாகப் பரவாமையும் காரணமாக உயிரிழப்பு மிகக் குறைவு சார்சிலும் மேர்சிலும். 

உங்கள் மனிதனின் கண்டுபிடிப்பா கோவிட் என்ற சந்தேகத்திற்கு இப்போதைக்கு positive ஆன ஆதாரங்கள் இல்லை, சந்தேகங்களும் தகவல்களில் இருக்கும் இடைவெளிகளும் காரணமாக இப்போது என் முடிவு: இது இயற்கையாக விலங்கினத்தில் இருந்து மனிதனுக்கு பாய்ந்து விட்ட வைரசு என்பதே: 

1. இந்த வைரசை உடலுக்கு வெளியே திசுக்களில் வளர்த்தெடுப்பது கடினமாக இருக்கிறது. ஆபிரிக்க பச்சைக் குரங்கின் Vero6 என்ற திசுவில் மட்டுமே இது நன்கு வளர்கிறது. ஆனால், ஆபிரிக்க பச்சைக் குரங்கினத்தில் இந்த வைரசு இயற்கையாகக் காணப்படவில்லை.

2. மலாயன் பொங்கொலின் என்ற சீனாவுக்குள் அதிகம் கடத்தி வரப்படும் ஒரு விலங்கில் இந்த வைரசுக்கு மிக நெருக்கமான  அமைப்புடைய வைரசு இருப்பதாக க் கண்டறிந்துள்ளனர். வேறு விலங்குகளில் இதை விட நெருக்கமான கொரனா வைரசுகள் இல்லை.

3. இறுதிக் காரணம் மூலக்கூற்று அமைப்பு  சார்ந்தது, இதை விளக்க தமிழில் எனக்குக் கடினம், ஆயினும் முயல்கிறேன்: வைரசு ஒரு விலங்குகள்/மனிதரிடையே பல காலம் பரவி சுற்றித் திரியும் போது தன்னைக் காத்துக் கொள்ள சில மாச்சத்து மூலக் கூறுகளால் தன்னை மறைத்துக் கொள்ளும் (masking). இத்தகைய மாற்றம் பல வருடங்களாக ஒரு விலங்கினத்தில் வைரசு சுற்றித்திரிவதால் மட்டுமே ஏற்படக் கூடிய மாற்றம். இத்தகைய மாற்றம் இந்த நவீன கொரனாவைரசில் இருக்கிறது. உண்மையில் இந்த மாற்றம் தான் எங்கள் உடல் வைரசின் Achilles heel ஐ இனங்காண முடியாமல் தடுக்கிறது. இந்த glycosylation என்ற மாற்றத்தை செயற்கையாக ஆய்வு கூடத்தில் உருவாக்குவது  அசாத்தியம் என்றல்ல, ஆனால் மிகவும் சவாலான ஒரு வேலை.

இதுவே இப்போதைக்கு என் முடிவின் காரணங்கள்.

தெளிவான விளக்கத்துக்கு  நன்றி.


உங்கள் மூன்று காரணங்களும் அதன் படி உங்கள் முடிவும்  புரிந்து கொள்ள முடிகிறது.
தவிரவும் நான் தான் மனிதர் உருவாக்கியது என்ற எடுகோளை வைக்கிறேன் ஆகவே நான்தன இதை ஐயம் திரிபற நிறுவ வேண்டும்.

ஆனால் இந்த கோணத்தில் சிந்தித்து  பார்திர்களா?

எடுகோள்

இதுவரை நாம்  அறியாத ஒரு உயிரியல் கல உருவாக்க முறையை சீனா அறிந்து விட்டது. அதனால் 

1. நம்மால் மனித உடலுக்கு வெளியே உருவாக்க முடியாததை அவர்கள் இலகுவாக உருவாக்குகிறர்கள் 
2. இந்த வைரசு labல் உருவாக்கியதால்தான் வேறு விலங்கில் இது இல்லை 
3. ஏனையை இயற்கையான வைரசுகள்  போலன்றி இந்த வைரஸின் அஷிலிசின் குதியை கண்டு பிடிக்க கடினமாக இருப்பதும் - இது மனிதர்களால் டிசைன் பண்ண பட்டதால்தான்.

எனது கருத்தின் "விழுந்த பக்கத்தில் குறி சுடும்" தன்மை எனக்கு  புரிகிறது 😀


மேலும் என் முழு தியறியுமே எனது நிறுவ படாத எடுகோளிலேயே தங்கி உள்ளது.

ஆனால் குறைந்த பட்ஷம்  ஒரு healthy scepticismற்கு  இடமிருப்பதாகவே படுகிறது. or may be my imagination is running riot🤪.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வல்வை சகாறா said:

யஸ்ரின்

எதிர்ப்பு சக்தி உருவாகாது என்று விஞ்ஞானம் நிரூபித்துக் கொண்டிருக்கிறது. இந்த நோயிற்காக நீண்ட கால செயற்பாடின்மை மனபிறழ்வுகளை உருவாக்குகிறதே. இதுவரை இங்கு கோடைகாலம் இருந்ததால் வெளியே நடமாட்டம் குறைந்திருந்தாலும் வீட்டின் பின்புறம் அல்லது பல்கனி என்று வெளிக்காற்றைச் சுவாசித்தோம் இனி அத்தனையும் முடக்கப்பட்டு கூடுகளுக்குள்  சிறைப்படுத்தப்பட்ட பறவைகள்போல வாழ வேண்டிய கட்டாயம். இப்போதே பல முதியவர்களுக்கு மன அழுத்தம் இனிவரும் காலங்களில் இளைய சமூகமும் இந்த மன அழுத்தத்திற்கு உள்வாங்கப்படப்போகிறது. கோவிட் 19 வெளியே தெரியும் நோயாக இருக்க மன அழுத்தம் அதை விடக்கடினமாக எல்லோரையும் தாக்கப்போகிறது. ஒரு வேளை அத்தகைய சூழலைத் தவிர்க்க இத்தகைய விடயங்களை மேற்கொண்டிருப்பார்களோ?

 

1 hour ago, வல்வை சகாறா said:

பொருளாதாரத்திற்கும் பாடசாலை திறப்பிற்கும் நேரடியான சம்பந்தம் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் கோவிட் 19 தொடர்பான அச்சத்தை களைய இந்த உத்தியை மேற்கொண்டிருக்கலாம். அச்ச உணர்வு மிகையாகி செல்லும்போது அன்றாட வாழ்வு பாதிப்படைகிறது. அங்குதான் பொருளாதாரம் பயணிக்கிறது. கனடாவைப் பொருத்தவரை காலநிலை என்பது மிகச்சோதனையானது. தற்சமயம் ப்ளூ எனப்படும் காய்ச்சல் பரவும் நேரம். ஒவ்வொரு வருடமும் குளிர்காலம் ஆரம்பிக்கும்போதும், முடியும்போதும் இந்தத் தாக்கத்தால் அநேகர் பாதிக்கப்படுவார்கள். அதற்கு தடுப்பூசி போடுவதும் செப்ரெம்பர் கடைசி, ஒக்டோபரில் இங்கு நடைமுறையாகும் விடயம். தற்போது தடுப்பூசி பற்றி எத்தகவலும் இல்லை. அத்தோடு இங்கு குடும்ப வைத்தியர்கள் எல்லோரும் தமது அலுவலகங்களைப் பூட்டி வைத்துக்கொண்டு தொலைபேசி வாயிலாகவே உரையாடுகிறார்கள். வைத்தியத் தேவைக்கு பெரும் அவதி ஏற்பட்டுள்ளது. சாதாரண வழமையான வருத்தங்களுக்கும் காட்ட முடியாத சூழல். ஆனால் பல் வைத்தியர்கள் அலுவலகங்களைத் திறந்து சிகிச்சை அளிக்கிறார்கள்.(காரணம் பற்சிகிச்சைக்கு நோயாளிகளே பணம் செலுத்த வேண்டும்) குடும்ப வைத்தியர்கள் அப்படியல்ல அரசாங்கமே அவர்களுக்கான சம்பளத்தைக் கொடுக்கிறது) குடும்ப வைத்தியர்களிடம் போக முடியாதவர்கள் நேரடியாக அவசரச் சிகிச்சைப்பகுதிக்கு சென்று தனிமைப்படுத்தப்பட்டு 4,5 நாட்கள் அப்பிரிவில் மறிக்கப்பட்டு கோவிட் 19 இருக்கிறதா என்று சோதனை செய்தே திருப்பி அனுப்பப் படுகிறார்கள். அரசாங்கம் கொடுக்கும் உதவிப்பணத்தை சந்தர்ப்பம் கிடைத்ததால் நிறையவே சுத்துமாத்து செய்து பிழைப்பவர்கள் இங்கு ஏராளம். ஏன் என்னுடைய பதிவு செய்யப்பட்;ட தொழிலைக் காட்டி 40 ஆயிரம் டொலர்களை எடுக்க வழி சொல்லித்தந்தவர்களும் உண்டு. உண்மையிலேயே பாதிக்கப்படுபவர்களுக்கு சேரவேண்டியதை பலரும் தவறான வழியில் உபயோகிப்பதால் எதிர்வரும் காலத்தில் ஒட்டு மொத்தமாக எல்லோருமே பாதிக்கப்படப்போகின்றோம். இவை இப்படியே இருக்கட்டும்.

இயல்பு வாழ்க்கைக்கு மக்களைத் திருப்பினாலே அரசாங்கம் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். அடிப்படையில் மாணவர்கள் பாடசாலைகளை இயங்க வைப்பதன் மூலம் மற்றவர்களையும் பணிகளுக்கு வரும்படி நிர்ப்பந்திக்கலாம். உரிய வைத்திய காரணி உள்ளவர்களைத் தவிர்த்து மற்றவர்கள் பணியாற்றலாம் என்று அவர்கள் நினைத்திருக்கக்கூடும் அல்லவா ,)

அக்கா,

உங்கே எப்படியோ தெரியாது ஆனால் இங்கே 16 வயதுக்கு கீழே உள்ள பிள்ளைகளை தனியே வீட்டில் விட முடியாது, சட்டபடி. ஆகவே பள்ளியை மூடினால்- ஒரு பெற்றாராவது வேலை செய்ய முடியாது (வீட்டில் இருந்தும்) ஆகவே இது பொருளாதாரத்தை பாதிக்கும்.

உங்கள் மன அழுத்தம் சம்பந்தமான கேள்வி நியாயமானதே. பல cancer screening உம் தள்ளி போகிறது.

இவற்றுகெல்லாம் ஒரே தீர்வு நாடுகள் தம்மை தாமே தனிமை படுத்துவதே.

Goods and services ஐ மட்டும் முன்பு போல பரிமாறியபடி, மனித பிரயாணங்களை  தடுப்பதே ஒரே வழி.

ஈயு, அமெரிக்கா, கனடாவில் உள் நாட்டில் இருக்கும் குழப்ப நிலை, இலங்கை, தைவான், நியுசிலாந்து, சிங்கபூரில் இல்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிகு: பிள்ளைகளை பார்த்தபடி வீட்டில் இருந்த வேலை செய்ய ஒரு தடையும் இல்லை, ஆனால் பலர் முடியாது என சொல்லுவீனம் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Maruthankerny said:

இதில் எனக்கு மாற்று கருத்து உண்டு 
உலக சுகாதார சேவை சீனாவுக்கு வெளியில் கொரோனா வர போகிறது என்றவுடன் 
எல்லா நாட்டுக்கும் 10 வீத பொருளாதார நஷ்ட்டத்தை ஏற்றுக்கொண்டு எல்ல்லாவ்ற்றையும் மூடி 
இதை முதலில் சீனாவில் வைத்தே கட்டுப்படுத்த ஆலோசனை கூறியது. 

ஆனால் 10 வீத பொருளாதார வீழ்ச்சிக்கு யாரும் ஒத்துக்கொள்ளவில்லை 
ஆனால்  இன்று அண்ணளவாக 35 வீதம் பொருளாதார வீழ்ச்சியும் பல ஆயிரக்கணக்கான 
மரணத்துக்கும் பல திறமையான மருத்துவர்கள் உட்பட முகம் கொடுத்து இருக்கிறார்கள்.

பள்ளிகளை திறப்பது அனாவசியமற்ற வேலை இப்பபோதைய சூழலில் 
இது பொருளாதாரத்துக்கு எந்த பலனையும் கொடுக்க போவதில்லை .. வளர்ச்சி அடைந்த நாடுகள் 
ஒன்லைன் வடிவத்துக்கு மாறி இருக்கலாம். 

இப்போதும் அரசுகள் சரியான பரிந்துரைகளை கடைபிடிக்கிறார்கள் இல்லை 
மூன்று கிழமைகள் முழுதான பூட்டு பூட்டினால் இதை தடுக்க முடியும் 
மக்களின் பங்களிப்பு மிக மிக அவசியம். 

திறந்து பூட்டி திறந்து பூட்டி சிலுக்கு ஸ்மிதா பாடல்காட்ச்சிபோல் 
மக்களின் உயிரோடு விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள் . 

வழமையாக நான் ஏதாச்சும் எழுதினால் அது ஏதோ மட்டமான.ஒரு கருத்தாகவே கணிப்பிடப்படுவது வழமை..னக்கு எதிராக யாராச்சும் எழுதினால் பச்சை குத்த பத்துப் பேர் இருப்பார்கள்.அந்தவகையில் நான் என்ன சொல்ல வாறேன் என்பதையாவது புரிந்துள்ளீர்கள் நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, goshan_che said:

மொக்குச் சனங்கள், அதை வென்ற மொக்கு அரசாங்கம்.

இவங்கள் எப்படி உலகை வென்றார்கள் என்பதுதான் தெரியவில்லை. 🤣

ஓவர் டு யூ பாஞ்ச், சிறி, கு சா அண்ணைமார் 🤣

எல்லாம் ஒகே, தல ... 

மொக்கு அரசு... உலகத்தை எப்படி கட்டி ஆண்டார்கள் எண்டு தெரியவில்லை எண்ட கடைசி வரிகள் தான் நொட் ஒகே, ஐசே...

முதலில.... உந்த இலவச, ஆனால் நல்ல மருத்துவ கவனிப்பால், கிழடு கட்டயல் எல்லாம் 80 தாண்டி கனகாலம்.... இப்ப 90 தாண்டி... 100 போடுதுகள்.

இவையளுக்கு பராமரிப்புக்கு கொடுக்கிறதுக்கு, வரி கட்டுறது, நானும், நீரும் தான் கண்டீரே.

எண்ட சிநேகிதனின் அம்மா.... வந்து சில வருசம் தான்... மூத்த மகனிண்ட வீடு பெரிசு.... மருமகளோட ஏன் இருப்பான் எண்டு.... .. உங்க ஒரு வரியும் கொடுக்கவில்லை..... ஆனால்.... கவுன்சில் வீடு.. கிழமை கொடுப்பனவு..... ஆள் சும்மா ராணி அம்மாவுக்கு பாஷன் சொல்லிக் கொடுப்பா போலை.

அங்க.... இடுப்பில் கட்டிய பழைய சேலை.... இங்க டவுசர்.... டாப்... பண்ணி பாருங்கோவன்... லேடீஸ் பார்ட்டி, பாட்டுப்போட்டி... அவயலுக்கில நாடகம்.... டோட்டல் பிரீடோம்.. சிங்கள அரசாங்கம் உதில எதைத்தான் செய்ய காசு வைச்சிருக்கு?

இன்னோருத்தர் வந்து கொஞ்ச வருசத்திலை அறளை பெயர்ந்து.... கேர் ஹோமிலை.... கவுன்சில் கவனிக்குது.... கவுன்சிலுக்கு வரி கட்டுறது, நானும், நீரும் தான் கண்டீரே. அவருக்கு கிழமைக்கு £1,500... செலவு.... என்னாலை.... உது கொடுக்க வக்கில்லை எண்டு சொல்லிப்போட்டார் ஸ்பொன்சரிலை கூப்பிட மகன்.

NHS க்கு இவையளை பராமரிப்பதே பெரிய செலவு. தனி வீட்டில போரிங்... பொழுது போகுதில்லை எண்டு, குத்துது, குடையுது எண்டு ஆஸ்பத்திரிக்கு போய், கட்டிலிலை இருந்து, ஓசி சாப்பாடையும் அடிச்சுக்கொண்டு இருக்கிற ஆட்களை கேள்விப்பட்டிருக்கிறியளே.

ஆஸ்பத்திரி செலவை, bed occupancy days வைத்துதான் கணிப்பார்கள். இவர்கள் WBO (waste bed occupiers) என்பார்கள், ஆஸ்பத்திரி கணக்காளர்கள்.  

உந்த கொரோனவால.... அநேகமா, (நான் வாசித்தது சரி எண்டால்) 10,000 முதல், 23,000 வரை இந்த கிழடு கட்டயல் போயிருக்கினமாம்.

கண கவுன்சில் அதிகாரிகள், பட்ஜெட் நிமிருது எண்டு நிம்மதியா இருக்கினம்.... முக்கியமா எங்கண்ட கவுன்சில் பைனான்சில் தலைமை கணக்கு வேலை செய்யும் நம்ம அக்காவிடம், மெய்யே எண்டு கேட்க, மூடிய உதட்டில், சுட்டி விரலை வைத்து, 'சூ' என்று சிரித்தார். 🤫

இப்ப சொல்லுங்கோ இவர்கள் உலகத்தை எப்படி ஆண்டார்கள் என்று விளங்குதோ, இல்லையோ எண்டு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Nathamuni said:

எல்லாம் ஒகே, தல ... 

மொக்கு அரசு... உலகத்தை எப்படி கட்டி ஆண்டார்கள் எண்டு தெரியவில்லை எண்ட கடைசி வரிகள் தான் நொட் ஒகே, ஐசே...

முதலில.... உந்த இலவச, ஆனால் நல்ல மருத்துவ கவனிப்பால், கிழடு கட்டயல் எல்லாம் 80 தாண்டி கனகாலம்.... இப்ப 90 தாண்டி... 100 போடுதுகள்.

இவையளுக்கு பராமரிப்புக்கு கொடுக்கிறதுக்கு, வரி கட்டுறது, நானும், நீரும் தான் கண்டீரே.

எண்ட சிநேகிதனின் அம்மா.... வந்து சில வருசம் தான்... மூத்த மகனிண்ட வீடு பெரிசு.... மருமகளோட ஏன் இருப்பான் எண்டு.... .. உங்க ஒரு வரியும் கொடுக்கவில்லை..... ஆனால்.... கவுன்சில் வீடு.. கிழமை கொடுப்பனவு..... ஆள் சும்மா ராணி அம்மாவுக்கு பாஷன் சொல்லிக் கொடுப்பா போலை.

அங்க.... இடுப்பில் கட்டிய பழைய சேலை.... இங்க டவுசர்.... டாப்... பண்ணி பாருங்கோவன்... லேடீஸ் பார்ட்டி, பாட்டுப்போட்டி... அவயலுக்கில நாடகம்.... டோட்டல் பிரீடோம்.. சிங்கள அரசாங்கம் உதில எதைத்தான் செய்ய காசு வைச்சிருக்கு?

இன்னோருத்தர் வந்து கொஞ்ச வருசத்திலை அறளை பெயர்ந்து.... கேர் ஹோமிலை.... கவுன்சில் கவனிக்குது.... கவுன்சிலுக்கு வரி கட்டுறது, நானும், நீரும் தான் கண்டீரே. அவருக்கு கிழமைக்கு £1,500... செலவு.... என்னாலை.... உது கொடுக்க வக்கில்லை எண்டு சொல்லிப்போட்டார் ஸ்பொன்சரிலை கூப்பிட மகன்.

NHS க்கு இவையளை பராமரிப்பதே பெரிய செலவு. தனி வீட்டில போரிங்... பொழுது போகுதில்லை எண்டு, குத்துது, குடையுது எண்டு ஆஸ்பத்திரிக்கு போய், கட்டிலிலை இருந்து, ஓசி சாப்பாடையும் அடிச்சுக்கொண்டு இருக்கிற ஆட்களை கேள்விப்பட்டிருக்கிறியளே.

ஆஸ்பத்திரி செலவை, bed occupancy days வைத்துதான் கணிப்பார்கள். இவர்கள் WBO (waste bed occupiers) என்பார்கள், ஆஸ்பத்திரி கணக்காளர்கள்.  

உந்த கொரோனவால.... அநேகமா, (நான் வாசித்தது சரி எண்டால்) 10,000 முதல், 23,000 வரை இந்த கிழடு கட்டயல் போயிருக்கினமாம்.

கண கவுன்சில் அதிகாரிகள், பட்ஜெட் நிமிருது எண்டு நிம்மதியா இருக்கினம்.... முக்கியமா எங்கண்ட கவுன்சில் பைனான்சில் தலைமை கணக்கு வேலை செய்யும் நம்ம அக்காவிடம், மெய்யே எண்டு கேட்க, மூடிய உதட்டில், சுட்டி விரலை வைத்து, 'சூ' என்று சிரித்தார். 🤫

இப்ப சொல்லுங்கோ இவர்கள் உலகத்தை எப்படி ஆண்டார்கள் என்று விளங்குதோ, இல்லையோ எண்டு..

உண்மைதான்...நானும் இந்த கோணத்தில் சிந்தித்தேன். 

ஆனால் மொக்கு அரசு (state) இல்லை. மொக்கு அரசாங்கம் (govt.) - ஏனென்றால் இதனால் வரும் savings பயன் தர நாள் எடுக்கும். ஆனால் பொருளாதாரத்தில் விழும் அடி - கையோட கம்மாரிசு. 

அத்தோட பிரெக்சிற் விழைவு வேற. இனி கெண்ட் போகவே லொறிகாரார் பெமிற் எடுக்கொணுமாம்.

10 மணிக்கு பப் பூட்டல். இதர கட்டுப்பாடுகள் சகலதையும் போர்டரை பூட்டி இருந்தா தவிர்திருக்கலாம்.

இந்த கடுப்பெல்லாம் இந்த அரசாங்கத்தின் மீதுதான் திரும்பும்.

அடுத்த தேர்தலுக்கு பிறகு வரும் அரசாங்கம் உந்த savings ஐ அறுவடை செய்யும்.

மக்களும் மொக்குகள்தான் - கொலிடே போய், தொற்று வந்து பொருளாதாரம் படுத்தால், இவர்களுக்கும்தான் வேலை போகும், வீட்டு விலை குறையும். ஆனால் instant gratification தான் முக்கியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

உண்மைதான்...நானும் இந்த கோணத்தில் சிந்தித்தேன். 

ஆனால் மொக்கு அரசு (state) இல்லை. மொக்கு அரசாங்கம் (govt.) - ஏனென்றால் இதனால் வரும் savings பயன் தர நாள் எடுக்கும். ஆனால் பொருளாதாரத்தில் விழும் அடி - கையோட கம்மாரிசு. 

அத்தோட பிரெக்சிற் விழைவு வேற. இனி கெண்ட் போகவே லொறிகாரார் பெமிற் எடுக்கொணுமாம்.

10 மணிக்கு பப் பூட்டல். இதர கட்டுப்பாடுகள் சகலதையும் போர்டரை பூட்டி இருந்தா தவிர்திருக்கலாம்.

இந்த கடுப்பெல்லாம் இந்த அரசாங்கத்தின் மீதுதான் திரும்பும்.

அடுத்த தேர்தலுக்கு பிறகு வரும் அரசாங்கம் உந்த savings ஐ அறுவடை செய்யும்.

மக்களும் மொக்குகள்தான் - கொலிடே போய், தொற்று வந்து பொருளாதாரம் படுத்தால், இவர்களுக்கும்தான் வேலை போகும், வீட்டு விலை குறையும். ஆனால் instant gratification தான் முக்கியம்.

பொரீஸரோ, ரிசியோ பொக்கட்டாலையே போடப்போகினம்.....

வரி வரிசையாக ஏறப்போகுது.....

வற் வரி இப்ப இருபது இனி இருபத்தைந்து ஆகலாம்.

கோப்பரேற் வரி,

தனிநபர் வருமானவரி,

சொத்துவரி,

எரிபொருள் வரி,

வீட்டு காஸ் வரி இப்ப ஜந்து.....இனி பத்தாகலாம்

ஆவன வரி - சராசரியா ஜந்து வீதம் கூடலாம்

ஆவன பெறுமதி உயர்வு வரி கூடலாம்

சிகரட், தண்ணி வரி கூடலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Nathamuni said:

பொரீஸரோ, ரிசியோ பொக்கட்டாலையே போடப்போகினம்.....

வரி வரிசையாக ஏறப்போகுது.....

வற் வரி இப்ப இருபது இனி இருபத்தைந்து ஆகலாம்.

கோப்பரேற் வரி,

தனிநபர் வருமானவரி,

சொத்துவரி,

எரிபொருள் வரி,

வீட்டு காஸ் வரி இப்ப ஜந்து.....இனி பத்தாகலாம்

ஆவன வரி - சராசரியா ஜந்து வீதம் கூடலாம்

ஆவன பெறுமதி உயர்வு வரி கூடலாம்

சிகரட், தண்ணி வரி கூடலாம்

😩😡🤦‍♂️

வெளிகிடடி விசுவமடுவுக்கு 🤣

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோசானும் நாதமும் கதைக்கிறதைப் பார்த்தால் இருவரும் முதுமையடையாத மாக்கண்டேயர் ஜீன் ஏதும் வைச்சிருப்பீனம் போல கிடக்கு!😎
(அல்லது பழையகால வைக்கிங்குகள் செய்தது போல, முதுமை வந்ததும் மலையில இருந்து குதித்து நேராக "ஒடின்" கடவுளிடம் போற பிளானோ தெரியேல்ல!)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Justin said:

கோசானும் நாதமும் கதைக்கிறதைப் பார்த்தால் இருவரும் முதுமையடையாத மாக்கண்டேயர் ஜீன் ஏதும் வைச்சிருப்பீனம் போல கிடக்கு!😎
(அல்லது பழையகால வைக்கிங்குகள் செய்தது போல, முதுமை வந்ததும் மலையில இருந்து குதித்து நேராக "ஒடின்" கடவுளிடம் போற பிளானோ தெரியேல்ல!)

நாங்கள் பிரிட்டிஸ்காரர் கண்டியளே.....

நாங்கள் எங்களுக்கு பிடுங்குப்பட்டாலும்..... நீஙகள், கனடாக்காரர், ஆஸ்திரேலியாக்காகரர், சீறீலங்கன்ஸ், இந்தியன்ஸ் எழுதிப்பதியிறத..... ஒண்டரைக் கணணால தான் வாசிக்க தொடங்குவம்.....

என்ன இருந்தாலும்..... எங்கண்ட பழைய கொலணியலில இருக்கிற ஆக்கள் எண்டு ஒரு..... பார்வையெண்டு சொல்லுங்கோவன். 😜
 

சும்மா பகிடிக்கு 😁...உங்கள் கருத்தை ரசித்தேன். நாம சும்மா பம்பலா அப்பப்ப கதைக்கிறது தானே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

நாங்கள் பிரிட்டிஸ்காரர் கண்டியளே.....

நாங்கள் எங்களுக்கு பிடுங்குப்பட்டாலும்..... நீஙகள், கனடாக்காரர், ஆஸ்திரேலியாக்காகரர், சீறீலங்கன்ஸ், இந்தியன்ஸ் எழுதிப்பதியிறத..... ஒண்டரைக் கணணால தான் வாசிக்க தொடங்குவம்.....

என்ன இருந்தாலும்..... எங்கண்ட பழைய கொலணியலில இருக்கிற ஆக்கள் எண்டு ஒரு..... பார்வையெண்டு சொல்லுங்கோவன். 😜

சீரியசாக சொல்லவில்லை, ஆனால் என் அபிப்பிராயம்: circle of life

நாங்கள் சொந்தக் காலில் நிற்க ஆரம்பிக்கும் வரை அரசு மற்றவர்களிடம் வரி வாங்கி எங்களுக்கு படிப்பும், மருத்துவமும் தருகிறது. நாம் உழைக்கும் போது அடுத்த சந்ததிக்கும் முன்னர் எங்களுக்கு வரி கட்டிய முந்தைய தலைமுறைக்கும் வசதிகள் கொடுக்கிறது. பிறகு நாங்கள் வயதாகி உழைக்க இயலாமல் போகும் போது எங்கள் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் கட்டும் வரி எங்களுக்கு செலவிடப் படும்! இது welfare நாடுகளின் சிறப்பான திட்டம் என நினைக்கிறேன். இதில் துஷ்பிரயோகம் இருக்கும், நீங்கள் சுட்டிக் காட்டியிருப்பது போல. கனடா தன் சமூக நலன் திட்டங்களை வரையறை செய்தது போல செய்தால் புதிய குடியேறிகள் துஷ்பிரயோகம் செய்வதைக் குறைக்கலாம். 

எனவே, வாழ்க்கை என்ற கணக்கு லெட்ஜரில் வரவும் செலவும் சமன் செய்யும் என்று தான் நான் கருதுகிறேன்!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

சீரியசாக சொல்லவில்லை, ஆனால் என் அபிப்பிராயம்: circle of life

நாங்கள் சொந்தக் காலில் நிற்க ஆரம்பிக்கும் வரை அரசு மற்றவர்களிடம் வரி வாங்கி எங்களுக்கு படிப்பும், மருத்துவமும் தருகிறது. நாம் உழைக்கும் போது அடுத்த சந்ததிக்கும் முன்னர் எங்களுக்கு வரி கட்டிய முந்தைய தலைமுறைக்கும் வசதிகள் கொடுக்கிறது. பிறகு நாங்கள் வயதாகி உழைக்க இயலாமல் போகும் போது எங்கள் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் கட்டும் வரி எங்களுக்கு செலவிடப் படும்! இது welfare நாடுகளின் சிறப்பான திட்டம் என நினைக்கிறேன். இதில் துஷ்பிரயோகம் இருக்கும், நீங்கள் சுட்டிக் காட்டியிருப்பது போல. கனடா தன் சமூக நலன் திட்டங்களை வரையறை செய்தது போல செய்தால் புதிய குடியேறிகள் துஷ்பிரயோகம் செய்வதைக் குறைக்கலாம். 

எனவே, வாழ்க்கை என்ற கணக்கு லெட்ஜரில் வரவும் செலவும் சமன் செய்யும் என்று தான் நான் கருதுகிறேன்!  

நீங்கள் சொல்வதில் எவ்வித பிழையும் இல்லை..... நமக்கும் வயதாகும் போது கொடுத்தது (வரி) காத்து நிக்கும்.

இதுவே ஊருக்கு திரும்பி போக விரும்புபவர்களை தயங்க வைக்கிறது.

இந்தியாவில்.... பணம் இல்லாவிடில் பாடை தான். பாடகர் பாலா குடும்பமே திணறிவிட்டது.

இங்கே, மருத்துவ அநுமதி நேர்முகத்தேர்வில், இலவச மருத்துவத்தால் வந்த பிரச்சணைகளில் ஒன்றாக நீண்டகாலம் வாழும் வயதானவர்கள் குறித்து சொல்லி, அது குறித்து விளக்கம் கேட்பார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

எல்லாம் ஒகே, தல ... 

மொக்கு அரசு... உலகத்தை எப்படி கட்டி ஆண்டார்கள் எண்டு தெரியவில்லை எண்ட கடைசி வரிகள் தான் நொட் ஒகே, ஐசே...

முதலில.... உந்த இலவச, ஆனால் நல்ல மருத்துவ கவனிப்பால், கிழடு கட்டயல் எல்லாம் 80 தாண்டி கனகாலம்.... இப்ப 90 தாண்டி... 100 போடுதுகள்.

இவையளுக்கு பராமரிப்புக்கு கொடுக்கிறதுக்கு, வரி கட்டுறது, நானும், நீரும் தான் கண்டீரே.

எண்ட சிநேகிதனின் அம்மா.... வந்து சில வருசம் தான்... மூத்த மகனிண்ட வீடு பெரிசு.... மருமகளோட ஏன் இருப்பான் எண்டு.... .. உங்க ஒரு வரியும் கொடுக்கவில்லை..... ஆனால்.... கவுன்சில் வீடு.. கிழமை கொடுப்பனவு..... ஆள் சும்மா ராணி அம்மாவுக்கு பாஷன் சொல்லிக் கொடுப்பா போலை.

அங்க.... இடுப்பில் கட்டிய பழைய சேலை.... இங்க டவுசர்.... டாப்... பண்ணி பாருங்கோவன்... லேடீஸ் பார்ட்டி, பாட்டுப்போட்டி... அவயலுக்கில நாடகம்.... டோட்டல் பிரீடோம்.. சிங்கள அரசாங்கம் உதில எதைத்தான் செய்ய காசு வைச்சிருக்கு?

இன்னோருத்தர் வந்து கொஞ்ச வருசத்திலை அறளை பெயர்ந்து.... கேர் ஹோமிலை.... கவுன்சில் கவனிக்குது.... கவுன்சிலுக்கு வரி கட்டுறது, நானும், நீரும் தான் கண்டீரே. அவருக்கு கிழமைக்கு £1,500... செலவு.... என்னாலை.... உது கொடுக்க வக்கில்லை எண்டு சொல்லிப்போட்டார் ஸ்பொன்சரிலை கூப்பிட மகன்.

NHS க்கு இவையளை பராமரிப்பதே பெரிய செலவு. தனி வீட்டில போரிங்... பொழுது போகுதில்லை எண்டு, குத்துது, குடையுது எண்டு ஆஸ்பத்திரிக்கு போய், கட்டிலிலை இருந்து, ஓசி சாப்பாடையும் அடிச்சுக்கொண்டு இருக்கிற ஆட்களை கேள்விப்பட்டிருக்கிறியளே.

ஆஸ்பத்திரி செலவை, bed occupancy days வைத்துதான் கணிப்பார்கள். இவர்கள் WBO (waste bed occupiers) என்பார்கள், ஆஸ்பத்திரி கணக்காளர்கள்.  

உந்த கொரோனவால.... அநேகமா, (நான் வாசித்தது சரி எண்டால்) 10,000 முதல், 23,000 வரை இந்த கிழடு கட்டயல் போயிருக்கினமாம்.

கண கவுன்சில் அதிகாரிகள், பட்ஜெட் நிமிருது எண்டு நிம்மதியா இருக்கினம்.... முக்கியமா எங்கண்ட கவுன்சில் பைனான்சில் தலைமை கணக்கு வேலை செய்யும் நம்ம அக்காவிடம், மெய்யே எண்டு கேட்க, மூடிய உதட்டில், சுட்டி விரலை வைத்து, 'சூ' என்று சிரித்தார். 🤫

இப்ப சொல்லுங்கோ இவர்கள் உலகத்தை எப்படி ஆண்டார்கள் என்று விளங்குதோ, இல்லையோ எண்டு..

வயோதிபர்களை பராமரிக்கும் வேலைவாய்ப்பு எத்தனை பேருக்கு வேலை கொடுக்கிறது 
அவர்கள் எவ்வளவு வரி கட்டுகிறார்கள்?

அவர்களுக்கான மருந்துகளை செய்யும் மெடிக்கல் கொம்பனிகள் எவ்வளவு வரி கட்டுகிறார்கள்.

இது எல்லாம் வெறுமனே எமது வரி பணத்தில் வாழுகிறார்கள் என்ற கணக்கில் மட்டுமே வராது.
இதுவே இவருடைய தாயார் இலங்கையில் இருந்து நோய்வாய் பட்டால் .... ஒரு கதைக்கு வைத்துக்கொள்ளுங்கள்  தயார் அங்கிருக்கும் அப்போலோவில் அட்மிட் ஆனால் 
இவர் ஒரு  10 ஆயிரம் பவுன்சை லண்டனுக்கு வெளியில் அனுப்பும்போது அது இங்கிலாந்தின் ஏற்றுமதி இறக்குமதி டெபிசிடில் நஷடம் கொள்கிறது.

அவர் ஆடம்பரமாக வாழுவதுதான் உங்களுக்கு லாபம் 
காரணம் அவர்க்கு கொடுக்கும் பணத்தை உள்நாட்டு பொருளாதாரம் வாழுவத்துக்கு 
உந்து சக்தியாக இருக்கிறார்.

மற்ற சாமி போக்கு இருப்பவர்கள் பணத்தை சேமித்து இலங்கைக்கு அனுப்பினால் 
அது உங்கள் முதலுக்கு கொஞ்சம் மோசமானதாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

நீங்கள் சொல்வதில் எவ்வித பிழையும் இல்லை..... நமக்கும் வயதாகும் போது கொடுத்தது (வரி) காத்து நிக்கும்.

இதுவே ஊருக்கு திரும்பி போக விரும்புபவர்களை தயங்க வைக்கிறது.

இந்தியாவில்.... பணம் இல்லாவிடில் பாடை தான். பாடகர் பாலா குடும்பமே திணறிவிட்டது.

இங்கே, மருத்துவ அநுமதி நேர்முகத்தேர்வில், இலவச மருத்துவத்தால் வந்த பிரச்சணைகளில் ஒன்றாக நீண்டகாலம் வாழும் வயதானவர்கள் குறித்து சொல்லி, அது குறித்து விளக்கம் கேட்பார்கள்.

 

Welfare நாடுகளில் இருப்பது போன்ற சமூக பாதுகாப்பு இல்லாத அமெரிக்காவில் வாழ்ந்தால் இந்த நலன் திட்டங்களின் அருமை நன்கு விளங்கும். ஸ்கண்டினேவிய நாடுகளையும், ஜேர்மனியையும் பார்த்தால் அவர்கள் பணத்தை விட மனித வளத்தை பெறுமதியானதாகப் பார்க்கிறார்கள், அதன் பலன்களை நீண்ட கால நோக்கில் அறுவடையும் செய்கிறார்கள். நல்ல சுகதேகியாக கவலைகள் இன்றி ஒருவன் 40 வருடம் உழைத்தால் அவன் கட்டும் வரிகளும் செய்யும் செலவுகளுமே (consumer spending) நாட்டிற்கு பெரிய இலாபம் தரும். இந்த சிம்பிள் கணக்கை புரிந்து கொள்ளாத நிலை தான் அமெரிக்கா பங்குச்சந்தை இலாபத்திலேயெ தன் அண்டர்வேரைக் கொழுவிக் காத்திருக்கும் நிலைக்குக் காரணம்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் தனியாக வாழுவதால் 
ஹௌசிங் மார்க்கெட்டுக்கு (Housing Marketing) துணையாக இருக்கிறார் 

ரெண்டல் ப்ரோபெர்டியேசில் (Rental Properties) உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் தருகிறார் 
நாங்கள்தான் அதை எமக்கு சாதகமாக பயன்படுத்த வேண்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில் இப்போது மக்களை அவசியம் இல்லாமல் வெளியே திரிய வேண்டாம் என்கிறார்கள். கடைகளுக்கு கூட அவசியம் என்றால் மட்டுமே...
எதிர்வரும் பாடசாலை விடுமுறைகளுக்கு வெளியூர்/வெளிநாடுகளுக்கு செல்வதை தவிர்க்கும் படி அறிவுறுத்துகின்றனர். அதேபோல் நத்தார் புதுவருட விடுமுறைகளையும் முடிந்தளவு வெளியிடங்களுக்கு செல்வதை  குறைக்கும் படியும் ஆலோசனை சொல்கிறார்கள்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்ரின் அண்ணா,

நானும் நாதம் போலதான் welfare state இன் முழு ஆதரவாளன். ஆனால் சுத்துமாத்தை செய்யும் போது கடுப்பாகும். அதுவும் இப்படி செய்தால் நாங்கள் வயசாகும் காலத்தில் எல்லாத்தையும் புடுங்கி விடுவார்கள் என்ற சுயநலமும்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, goshan_che said:

அதிசயம் ஆனால் உண்மை. எனக்கும் மருதருக்கும் கருத்து ஒற்றுமை!!!🤣

சரியான தடுப்பூசி கிடைக்கும் வரை 10-15% பொருளாதாரத்தை பலியிட்டு, நியூசிலாந்து செய்ததை போல செய்திருந்தால் உள்ளூர் பொருளாதாரமாவது தப்பி இருக்கும்.

இப்போ 100% பொருளாதாரமும் ஆட்டம் காணுகிறது.

யூகேயில் யூலை மாதம் தொற்று குறைந்த கையோடு அரசே வெளிநாட்டு ஹொலிடேக்களை ஊக்குவிக்கும் விதத்தில் நடந்தது. 

மக்களும் செம்மறிகள் போல ஒரு வருடம் கொலிடே போகாட்டில் ஏதோ சாமி குற்றம் போல அள்ளுபட்டு ஸ்பெயின், பிரான்ஸ் எண்டு போனது.

போய் வந்த கோஸ்டி கொரோனாவோட வந்து நல்லா பரப்பி விட்டது.

மொக்குச் சனங்கள், அதை வென்ற மொக்கு அரசாங்கம்.

இவங்கள் எப்படி உலகை வென்றார்கள் என்பதுதான் தெரியவில்லை. 🤣

ஓவர் டு யூ பாஞ்ச், சிறி, கு சா அண்ணைமார் 🤣

உணவகங்களில் 50 வீத  கழிவு என்ற  நாடகமும் நடந்ததே??

சனம்  அள்ளுப்பட்டு  ஓடித்திரிஞ்சுதே???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

உணவகங்களில் 50 வீத  கழிவு என்ற  நாடகமும் நடந்ததே??

சனம்  அள்ளுப்பட்டு  ஓடித்திரிஞ்சுதே???

ஓம். சில சனம் கலியாண வீட்டு சாப்பாட்டை கூட இந்த முறையில் முடித்து கொண்டார்கள் 🤦‍♂️

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
    • சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின் நிரந்தர விசா 18 APR, 2024 | 05:05 PM   பொன்டியின் வணிகவளாகத்தில் கத்திக்குத்திற்கு இலக்காகிய பாக்கிஸ்தானை சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நிரந்தர விசாவை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் பிரஜைக்கு அவுஸ்திரேலியா அவ்வாறான நிரந்தரவிசாவை வழங்கியுள்ள நிலையிலேயே அன்டனி அல்பெனிஸ்இதனை தெரிவித்துள்ளார். பொன்டி வணிகவளாக தாக்குதலின் போது துணிச்சலை வெளியிட்டவர்கள்அனைவரும் இருளின் மத்தியில் வெளிச்சமாக திகழ்ந்தவர்கள் என தெரிவித்துள்ள அன்டனி அல்பெனிஸ் அவர்கள் அவுஸ்திரேலியாவின் பாராட்டுகளை பெறவேண்டியவர்கள் என தெரிவித்துள்ளார். முகமட் டாஹாவிற்கு நிரந்தர வதிவிடத்தை அல்லது விசா நீடிப்பை வழங்குவது குறித்து  அரசாங்கம் சிந்திக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181371
    • 🤣 ஒரு வேளை @பையன்26 கால இயந்திரத்தில் அடிக்கடி முன்னுக்கும் பின்னுக்கும் போய் வருவதால் கன்பியூஸ் ஆகி விட்டாரோ?
    • பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார் Published By: VISHNU    19 APR, 2024 | 06:46 PM   மறைந்த முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார். வெள்ளிக்கிழமை (19) முற்பகல் அவரது பூதவுடல் வைக்கப்பட்டுள்ள மத்துகம யடதொலவத்தையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகளுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் உடன் சென்றிருந்தனர். https://www.virakesari.lk/article/181481
    • இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஜோ பைடனின் பேச்சை மீறியதால் சிக்கலில் பெஞ்சமின் நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரெமி போவன் பதவி, பிபிசி சர்வதேச ஆசிரியர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் செய்தி தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக இரான் அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்ஃபஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். சில நாட்கள் முன்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பெரும் அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தார். கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி காஸாவில் உள்ள ‘உலக மத்திய சமையலறையில்’ (வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்) பணிபுரியும் ஏழு மனிதநேய உதவிப் பணியாளர்கள், இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வால் இஸ்ரேல் மீது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிருப்தி அடைந்தார். மேலும், நட்பு நாடாக இருப்பினும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பொறுமை இழக்கச் செய்தது. அதே நாளில், சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள இரானிய தூதரக வளாகத்தை இஸ்ரேல் தாக்கியது. அந்தத் தாக்குதலில் ஒரு மூத்த ராணுவ ஜெனரல் மற்றும் ஆறு அதிகாரிகளுக்கு மேல் கொல்லப்பட்டனர். தூதரகங்கள் மீதான தாக்குதல்களைத் தடை செய்யும் சட்ட மரபுகள் செயல்பாட்டில் இருப்பினும், அதை மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ‘இரான் விதிகளை மீறி தூதரக கட்டடத்தை ராணுவ புறக்காவல் நிலையமாக மாற்றியதால்தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது’ என இஸ்ரேல் தரப்பில் ஏற்றுக்கொள்ள முடியாத காரணம் சொல்லப்பட்டது. அந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இரான் உறுதிபூண்டது. அதற்கு முன்னரும் மூத்த ராணுவ தளபதிகள் மீதான தாக்குதல் நடத்தப்பட்டபோது ‘பதிலடி கொடுக்கப்படும்’ என்று வார்த்தைகளில் மட்டுமே இரான் தெரிவித்தது. ஆனால், அவை செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   அமெரிக்கா ஆவேசம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்கா தனக்கு வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தி இஸ்ரேல் காஸாவில் பேரழிவுத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனமான ‘வோர்ல்டு சென்ட்ரல் கிச்சனில்’ பணிபுரியும் குழுவை இஸ்ரேல் தாக்கியது. மனிதநேய உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட சீற்றத்தால் இரானுக்கு வெளியே, டமாஸ்கஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பெரிதாகக் கண்டு கொள்ளப்படவில்லை. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எழுதிய ஆவேசமான அறிக்கை ஒன்றை வெள்ளை மாளிகை வெளியிட்டது. அவர் ‘சீற்றம்டைந்தார், மனமுடைந்து விட்டார்’. இப்படி நடப்பது முதல்முறை அல்ல. உதவிப் பணியாளர்கள் மற்றும் பாலத்தீன குடிமக்களைப் பாதுகாக்க இஸ்ரேல் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை, என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இஸ்ரேல் பிரதமருடன் ஒரு காட்டமான தொலைபேசி உரையாடலில், பைடன், பெரும் சலுகைகளைக் கோரினார். காஸாவுக்கு பெருமளவு மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும் என்றார். வடக்கு காஸாவில் உணவின்றிப் பட்டினியால் இறக்கும் குழந்தைகள் வசிக்கும் பகுதியில் இருந்து ஒரு மணிநேரத்திற்கும் குறைவான தூரத்தில் இஸ்ரேல் அதிகமான எல்லைக் கடப்புகளைத் திறக்க வேண்டும் என்றார். அஷ்டோதில் உள்ள கொள்கலன் துறைமுகத்தையும் திறக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்தச் சூழல் மாறும் என பிரதமர் நெதன்யாகு பைடனுக்கு உறுதியளித்தார். அது வெறும் சமாளிப்பு மட்டுமே.   இருபுறமும் அழுத்தத்தில் இருந்த நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES வெள்ளை மாளிகையின் சீற்றத்தை எதிர்கொள்ளும் அதே வேளையில் நெதன்யாகு, மற்றொருபுறம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் தன்னை ஆதரித்து தனது கூட்டணியை அதிகாரத்தில் வைத்திருக்கும் தீவிர தேசியவாதிகளின் அழுத்தத்திற்கும் ஆளாகியுள்ளார். காஸாவில் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை மட்டும் அவர்கள் எதிர்க்கவில்லை. காஸாவில் இந்தப் போர் யூதர்களை மீண்டும் குடியமர்த்துவதற்கான விலைமதிப்பற்ற வாய்ப்பை இஸ்ரேலுக்கு வழங்கியிருப்பதாக அவர்கள் திடமாக நம்புகிறார்கள். கடந்த 2005ஆம் ஆண்டில் இஸ்ரேலில் இருந்து ஒருதலைப்பட்சமாக அங்குள்ள யூதர்களின் குடியிருப்புகள் அரசால் காலி செய்யப்பட்டு இடித்துத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த வார இறுதியில், அமெரிக்கா இஸ்ரேல் மீதான அழுத்தத்தை அதிகரித்தது. வியாழன் அன்று, அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். காஸாவை ஆறு மாதமாக இஸ்ரேல் முற்றுகையிட்டு வைத்திருந்தது, அப்பகுதியில் உலகிலேயே மிக மோசமான உணவு நெருக்கடி சூழலை உருவாக்கியது என்பது இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்கும் எதிரி நாடுகளுக்கும் தெளிவாகவே தெரிந்திருக்கும். மற்றொருபுறம், ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா அதைப் பயன்படுத்த இஸ்ரேலுக்கு நிபந்தனைகளை விதிக்கும் என்ற யூகமும் இருந்தது.   அமெரிக்காவின் மனநிலை பட மூலாதாரம்,UGC கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 13) காலை, இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்துவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, தி’ நியூயார்க் டைம்ஸ்’ ஊடகம் பெரும் சீற்றத்தை எதிரொலித்து ஒரு தலையங்கம் வெளியிட்டது. குறிப்பாக அமெரிக்க காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் மத்தியில் இந்தச் சீற்றம் காணப்பட்டது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதில் இடைநிறுத்தம் செய்யக் கோரியும் பெஞ்சமின் நெதன்யாகுவை தாக்கியும் அத்தலையங்கம் அமைந்திருந்தது. “இஸ்ரேலுக்கான ராணுவ உதவி நிபந்தனையற்றதாக இருக்கக்கூடாது,” என்ற தலைப்பின் கீழ், அப்பத்திரிகையின் ஆசிரியர் குழு, அமெரிக்கா உடனான ‘நம்பிக்கையின் பிணைப்பை’ உடைத்ததற்காக நெதன்யாகுவையும் அவரது அரசின் கீழ் செயல்படுபவர்களையும் கடுமையாகச் சாடியுள்ளது. “இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதும் நாட்டை தற்காத்துக் கொள்ள நினைப்பதும் சரிதான். ஆனால் அதற்காக அதிபர் பைடன் ‘நெதன்யாகு இரட்டை முகத்துடன் மேற்கொள்ளும் தந்திரமான அரசியல் விளையாட்டுகளை அனுமதிக்க வேண்டும்’ என்பது அர்த்தம் இல்லை,” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.   இரானின் தாக்குதல், நெதன்யாகுவுக்கு கிடைத்த வாய்ப்பு படக்குறிப்பு,இஸ்ரேல் மீது இரான் ஏவிய ஏவுகணைகள் அதன்பின் இரான் இஸ்ரேல் மீது முதல் நேரடித் தாக்குதலை நடத்தியது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது. ஆனால், தற்போது அதற்கு பதிலடி கொடுக்க வேண்டாம் என்று அமெரிக்கா கூறியதை மீறி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல். ராணுவ ஒத்துழைப்பின் குறிப்பிடத்தக்க ஒருங்கிணைந்த செயல்பாடாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பிற மேற்கத்திய நட்பு நாடுகள் இரானால் ஏவப்பட்ட 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்துவதற்கு இஸ்ரேலுக்கு உதவின. காஸாவில் நடக்கும் இஸ்ரேலின் தாக்குதல்களைக் கடுமையாக விமர்சித்தவர் ஜோர்டான் நாட்டின் மன்னர் அப்துல்லா. ஆனால் இஸ்ரேலுக்கு ஆபத்து வந்தபோது, ஜோர்டானின் விமானப்படை பாதுகாப்பு நடவடிக்கையில் இணைந்தது, இஸ்ரேலை நோக்கி வந்த ஏவுகணைகளை வீழ்த்தியது. இஸ்ரேலுக்கு வழங்கப்படும் ராணுவ உதவிக்கு நிபந்தனைகள் விதிக்கும் சூழல் மாறி ஒற்றுமையின் உறுதியான வெளிப்பாடு அப்போது பிரதிபலித்தது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு புதிய அரசியல் வாய்ப்பை வழங்கியுள்ளது. குறைந்தப்பட்சம் ஓரிரு நாட்களுக்கு தலைப்புச் செய்திகளில் காஸாவின் பெயர் அடிபடாது.   மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாடு என்ன? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இரானின் ஏவுகணைகளை இடைமறித்த இஸ்ரேலின் அயர்ன் டோம் அதேநேரம் பிரதமர் நெதன்யாகு மீதான அழுத்தம் அதிகரித்துவிட்டது. இஸ்ரேலின் அடுத்த நகர்வுகள் அந்த அழுத்தத்தை இரட்டிப்பாக்கும். அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பதை அதிபர் பைடன் மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். இரானின் தாக்குதலை முறியடித்த வெற்றியை மட்டும் இஸ்ரேல் எடுத்துக்கொள்ள வேண்டும், ‘ஆனால் திருப்பி அடிக்கக்கூடாது’ என்றார். இந்த நிலையில்தான் இரான் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் ஆதரவு என்பது ‘இரும்புக் கவசம்’ போன்றது என்பதை பைடன் மீண்டும் நினைவுபடுத்தினார். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி அன்று நடத்தப்பட்ட ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு அவரது நிலையான கொள்கை வெளிப்பட்டது. காஸாவில் பேரழிவையும் கொடிய விளைவுகளையும் ஏற்படுத்தப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அமெரிக்காதான் வழங்கியது என்ற போதிலும் அதிபர் பைடனும் அவரது நிர்வாகமும் மத்திய கிழக்கில் நடக்கும் போரை நிறுத்தக் கடுமையாக உழைத்துள்ளனர். அக்டோபரில் இருந்து ஆயுதங்கள் மற்றும் பிற நாடுகள் அளித்த ஆதரவையும் இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது. ஜோ பைடனின் எச்சரிக்கைகளையும் கோபத்தையும் புறக்கணித்து அவரின் அவநம்பிக்கைக்கு ஆளானது. இரானுக்கு எதிராகச் செயல்பட, இஸ்ரேலுக்கு முன்னெப்போதும் இல்லாத ராணுவ ஒத்துழைப்பை சில ஆதரவு நாடுகள் வழங்கின. இதன்மூலம் இஸ்ரேல் மீண்டும் ஒருமுறை ஜோ பைடனின் ‘பதிலடி கொடுக்க வேண்டாம்’ என்ற அறிவுரையைப் புறக்கணித்தது. ஜோ பைடனை போலவே பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் ஆகியோர் இரான் தாக்குதலுக்கு எதிராகப் போர் விமானங்களை அனுப்பினர். இருவரும் இரானை கண்டித்தனர். மேலும் இஸ்ரேலிடம் பதில் தாக்குதல் செய்ய வேண்டாம் என்பதை வலியுறுத்தினர். அவர்கள் இஸ்ரேலில் நீண்ட கால நம்பிக்கைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக யோசிக்கத் தொடங்கிவிட்டனர். இஸ்ரேல்-இரான் பகை இஸ்ரேல் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு சீற்றத்துடன் பதிலடி கொடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் ஆழமாக நம்புகிறது. மேலும், இரான் இஸ்ரேலின் மிகவும் ஆபத்தான எதிரி என்றும் யூத அரசை அழிப்பதில் இரான் குறியாக உள்ளது என்றும் பெஞ்சமின் நெதன்யாகு நம்புகிறார். அவரது ஆட்சியில் பலமுறை இந்த நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக இஸ்ரேல் மக்கள் பலர் இதே கருத்தை முன்வைக்கின்றனர். கடந்த 1979இல் இரானில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் இஸ்ரேலுடன் பல வருடப் பகை நீடித்தது. அதன் பிறகு இப்போது இரான் முதன்முறையாக இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதல் தொடுத்துள்ளது. நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கும் மறைமுகப் போர் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தற்போதைய தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்னதாகவே, பதில் தாக்குதல் நடத்தப்படுமா என்பது கேள்வி அல்ல, எப்போது, எப்படி நடத்தப்படும் என்பதுதான் கேள்வி என்று இஸ்ரேல் கூறியது. தீவிரமான போர்ச்சூழல் உருவாகாமல், எப்படி பதில் தாக்குதல் நடத்துவது என்று இஸ்ரேலின் போர்க்குழு அமைச்சரவை விவாதித்து வந்தது. இரான் தீவரமான போர்ச்சூழலை விரும்பவில்லை என்று சொன்னாலும், அதற்கேற்ப பதிலளிக்கும். எந்தவொரு அனுமானமும் இன்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இரு தரப்பினரும் ஏற்கெனவே மற்றவரின் நோக்கங்களைத் தவறாக மதிப்பிட்டுள்ளனர் என்பதே நிதர்சனம். பெஞ்சமின் நெதன்யாகுவும் அவரது அரசாங்கமும் மீண்டும் ஒருமுறை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற நாடுகளின் விருப்பங்களைப் புறக்கணிப்பதில் குறியாக உள்ளனர். இஸ்ரேலின் தீவிர தேசியவாதக் கூட்டாளிகள், இரான் மீது கொடூரத் தாக்குதல் நடத்தக் கோரினர். அவர்களில் ஒரு தரப்பினர் இஸ்ரேல் ‘வெறியுடன் செயல்பட வேண்டும்’ என்றனர்.   காஸாவில் தொடரும் மனிதாபிமானப் பேரழிவு படக்குறிப்பு,அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். இவையனைத்திற்கும் மத்தியில் காஸாவில் மனித உரிமை மீறல் மற்றும் பேரழிவு தொடர்கிறது. காஸா மீண்டும் சர்வதேச கவனம் பெறும். இஸ்ரேலின் ராணுவம் காஸாவில் இன்னமும் பொதுமக்களைக் கொன்று வருகிறது. மற்றொருபுறம் மேற்குக் கரையில் பாலத்தீனர்களுக்கும் யூத குடியேற்றவாசிகளுக்கும் இடையே மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. ஹெஸ்பொல்லாவுடன் இஸ்ரேலுக்கு மீண்டும் எல்லைப் போர் தீவிரமடையலாம். இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இன்னும் கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என இரான் உறுதியளித்துள்ளது. அதன் ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரியான ஹொசைன் பாகேரி, இஸ்ரேல் மீதான தாக்குதல் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது, ஆனால் இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் ‘மிகப் பெரிய’ பதிலடியை திருப்பிக் கொடுப்போம் எனக் கூறியிருக்கிறார். இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்தினால் உதவ மாட்டோம் என அமெரிக்கா உறுதிபடத் தெரிவித்துள்ளது. ஆனால் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான ‘இரும்புக் கவசமாகச்’ செயல்பட்ட ஜோ பைடன் அரசு இஸ்ரேலிய தாக்குதலுக்கு இரான் பதிலடி கொடுத்தால், ஆதரவாக நிற்காது என்பதை நம்புவது கடினம். இந்தச் சூழ்நிலை மத்திய கிழக்குப் பகுதியில் தீவிரமான போர்ச் சூழலையும் சர்வதேச நெருக்கடியையும் ஏற்படுத்தும். https://www.bbc.com/tamil/articles/cd19j8p3n4vo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.