Jump to content

சர்ச்சைக்குரிய கொள்கலன்களை மீண்டும் பிரித்தானியாவுக்கு அனுப்பிய இலங்கை


Recommended Posts

சர்ச்சைக்குரிய கொள்கலன்களை மீண்டும் பிரித்தானியாவுக்கு அனுப்பிய இலங்கை

 

சர்ச்சைக்குரிய வெளிநாட்டுக் கழிவுகள் அடங்கிய கொள்கலன்களை மீண்டும் இங்கிலாந்திற்கே அனுப்பப்பட்டதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அது தொடர்பில் கருத்து தெரிவித்த சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன,

சட்ட மா அதிபரின் ஆலோசனைகளுக்கு அமையவே அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.

2017ம் ஆண்டு பிரிட்டனிலிருந்து இலங்கைக்கு ஒரு தொகை கொள்கலன்களில் கழிவுகள் கொண்டுவரப்பட்டிருந்தன.

மொத்தம் 21 கொள்கலன்கள் சனிக்கிழமையன்று இலங்கையிலிருந்து அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தரப்பு தெரிவிக்கின்றன.

இதேவேளை கடந்த ஜனவரி மாதம், சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளின் 42 கப்பல் கொள்கலன்களை மலேசியா இங்கிலாந்துக்கு திருப்பி அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/151306

பிரிட்டனில் இருந்து இலங்கை வந்த நச்சுக் கழிவுகள்: 21 கன்டெய்னர்களில் மறு ஏற்றுமதி

 

 

Sri Lankans demand UK take back rotting waste

பிரிட்டனில் இருந்து மறுசுழற்சி செய்யப்பட்ட கழிவுகள் எனும் பெயரில் வந்த நச்சுத்தன்மை வாய்ந்த பொருட்கள் அடங்கிய 21 கன்டெய்னர்களை திருப்பி அனுப்பி இருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

2017ஆம் ஆண்டு தனியார் நிறுவனம் ஒன்றால் பிரிட்டனில் இருந்து, கொழும்பு துறைமுகத்துக்கு இறக்குமதி செய்யப்பட்ட 263 கன்டெய்னர்களில் மருத்துவக் கழிவுகள், பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் உள்ளிட்டவை இருப்பது கண்டறியப்பட்டது.

ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மட்டுமே அந்த கன்டெய்னர்களில் இருந்திருக்க வேண்டும்.

அவற்றில் சிறிய அளவு மட்டுமே பிரிட்டனுக்கும் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டிருந்தன.

பெரும்பாலான கன்டெய்னர்கள் இலங்கையிலுள்ள கிடங்குகளில் வைக்கப்பட்டிருந்தன.

2018ம் ஆண்டு, உயிராபத்தை விளைவிக்கும் அந்த அந்த நச்சுப் பொருட்கள் இருந்த கன்டெய்னர்களை அதிகாரிகள் கைப்பற்றிய பின்பு இலங்கை அரசால் சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டது.

அதன்படி நேற்று சனிக்கிழமை அவ்வாறு இருபத்தியோரு கண்டவர்கள் பிரிட்டனுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நச்சுத்தன்மை வாய்ந்த பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டது சர்வதேச மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின், கழிவுப் பொருட்கள் ஏற்றுமதி விதிகளை மீறியது என்று இலங்கை சுங்கத் துறையின் ஊடகப் பேச்சாளர் சுனில் ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக கழிவுப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப் படுவதை தடுக்க தாங்களும் உறுதி பூண்டுள்ளதாக இங்கிலாந்து சுற்றுச்சூழல் முகமை தெரிவித்துள்ளது.

முறையான விசாரணையை தொடங்கும் நோக்கில் இலங்கை அதிகாரிகளிடம் மேலதிக தகவல்களை கேட்டுள்ளதாக அந்த முகமையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த மாதம் ஜனவரியில் பிரிட்டனிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 42 கன்டெய்னர்களில் இருந்த பிளாஸ்டிக்கை மலேசியா பிரிட்டனுக்கே திருப்பி அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/sri-lanka-54318294

Link to comment
Share on other sites

ஸ்ரீலங்காவுக்கு பாராட்டு தெரிவித்துள்ள எரிக்சொல்ஹெய்ம்

ஸ்ரீலங்காவுக்கு சட்டவிரோதமாக அனுப்பி வைக்கப்பட்ட 21 கழிவுப்பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை மீண்டும் பிரிட்டனுக்கு திருப்பி அனுப்பிய செயற்பாடு தொடர்பில் நோர்வேயின் முன்னாள் இராஜதந்திரி எரிக் சொல்ஹெய்ம், ஸ்ரீலங்காவுக்கு தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.

கழிவுப்பொருள் கொள்கலன்கள் இலங்கையிலிருந்து மீண்டும் ஐக்கிய இராச்சியத்திற்கு அனுப்பப்பட்டமை தொடர்பில் சர்வதேச ஆங்கில ஊடகமொன்றில் வெளியான செய்தியை மேற்கோள்காட்டி எரிக் சொல்ஹெய்ம் தனது டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு பதிவொன்றைச் செய்திருக்கிறார்.

இலங்கைக்கு சட்டவிரோதமாக அனுப்பி வைக்கப்பட்ட கொள்கலன்களில் அபாயகரமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவை மீண்டும் ஐக்கிய இராச்சியத்திற்கே திருப்பி அனுப்பப்பட்டிருக்கின்றன. அமெரிக்காவும் ஐரோப்பாவும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கு கழிவுப்பொருட்களை அனுப்பிவைப்பதை உடனடியாக நிறுத்தவேண்டிய தருணம் இதுவாகும் என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஐக்கிய இராச்சியத்திலிருந்து 263 கழிவுப்பொருள் கொள்கலன்கள் சட்டவிரோதமாக இலங்கைக்கு அனுப்பப்பட்டன. அவற்றில் 21 கொள்கலன்களே இவ்வாறு மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டிருப்பதாக சுங்கத்திணைக்களம் அறிவித்திருக்கிறது.

 

எஞ்சிய 242 கொள்கலன்கள் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் சுங்கத்திணைக்களம் தெரிவித்திருக்கிறது. அவற்றில் 112 கொள்கலன்கள் கொழும்புத்துறைமுகத்திலும் 130 கொள்கலன்கள் கட்டுநாயக்கவிலும் வைக்கப்பட்டுள்ளன.

 

https://www.ibctamil.com/srilanka/80/151358?ref=home-imp-parsely

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.