Jump to content

ஒற்றையாட்சியின் சட்டங்களை நியாயப்படுத்தி அரசியல் நடத்தும் தமிழ்க் கட்சிகள்


Recommended Posts

ஒற்றையாட்சியின் சட்டங்களை நியாயப்படுத்தி அரசியல் நடத்தும் தமிழ்க் கட்சிகள்

2009ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் தமிழ்க் கட்சிகள் அல்லது தமிழ் அரசியல் பிரதிநிதிகள் அச்சாப்பிள்ளை அரசியலில் ஈடுபட்டு வருவதையே காண முடிகின்றது. அதாவது இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்கு அமைவாகச் செயற்பட்டுச் சிங்கள ஆட்சியாளர்களின் மனங்களையும் நோகடிக்காமல், அதேவேளை தமிழ்த் தேசிய அரசியலையும் தீவிரமாகப் பேசிக் கொண்டு சொத்துச் சுகங்களையும் அனுபவித்துக் கொண்டு தம்மைத் தியாகிகளாகவும் வெளிப்படுத்த முற்படுகின்றனர். ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்காக உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்த தியாகி திலீபன் நினைவேந்தல் நிகழ்வுக்கு இலங்கை ஒற்றையாட்சி அரசின் யாழ் நீதவான் நீதிமன்றம் மேலும் 14 நாட்களுக்குத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாகக் கண்டனம் வெளியிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. (கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்களுக்கும் அந்தக் கடிதத்தின் பிரதி அனுப்பி வைக்கப்பட்டதாகத் தகவல்) நினைவேந்தல் நிகழ்வு நடத்துவதைத் தடுக்க முடியாதென்பதும், அடிப்படை மனித உரிமை மீறல் எனவும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மனித உணர்வுகளைத் தடுக்க முடியாதென்ற தொனியில் அந்தக் கடிதத்தின் உள்ளடக்கம் அமைந்துள்ளது. அதேவேளை, தடையுத்தரவு தொடர்பாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை சிறப்பு அறிக்கையொன்றை வெளியிட முற்பட்டபோது சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்த்தன தடைவித்தார்.

திலீபன் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் தடையுத்தரவு விதித்துள்ளதால் அந்த விவகாரம் தொடர்பாக நரடாளுமன்றத்தில் சிறப்பு அறிக்கை வெளியிட முடியாதென அரசாங்கத்தின் பிரதம கொறடா அமைச்சர் தினேஸ் குணவர்த்தன கூறினார். அதனை ஏற்றுக் கொண்ட சபாநாயகர் சிறப்பு அறிக்கை வெளியிடுவதற்குத் தடை விதித்தார்.

ஆனால் அதனை ஏற்க மறுத்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இலங்கை அரசியலமைப்பில் நாடாளுமன்றத்திற்குரிய நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழ் சரத்துகளை மேற்கோள் காண்பித்து அவசர நிலமையின்போது கட்சித் தலைவர் ஒருவர் சிறப்புரையாற்ற முடியுமெனச் சுட்டிக்காட்டினார்.

அதனை தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனும் நியாயப்படுத்தி சபாநாயகர் தடை விதித்தமை தொடர்பான தனது கண்டனத்தைப் பதிவு செய்தார். சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களும் ஜே.வி.பி உறுப்பினர்களும் ஆதரவாகக் குரல் கொடுத்தனர்.

ஆனால் தியாகி திலீபன் தொடர்பாகவோ அல்லது ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலைப் பயணம் குறித்தோ சிங்கள உறப்பினர்கள் எதுவுமே கூறவில்லை. மாறாகக் கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் அவசர நிலமையில் சிறப்பு அறிக்கை வெளியிடுவதற்கு கஜேந்திரகுமாருக்கு இருக்கின்ற நாடளுமன்ற நிலையியல் கட்டளைச் சட்டத்தின் கீழான சிறப்புரிமைக்கு ஆதரவாக மாத்திரமே குரல் கொடுத்தனர்.

அதாவது உறுப்பினர் ஒருவருக்குரிய சிறப்புரிமை குறித்து இலங்கையின் ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்ற நிலையியல் கட்டளைச் சட்டங்களுக்கு அமைவான உரிமை பற்றியே அவர்கள் வாதிட்டு நியாயப்படுத்தினர்.

திலீபன் நினைவேந்தல் தொடர்பாகவும் திலீபன் நடத்திய போராட்டத்துக்கு ஆதரவாகவும் குரல் கொடுக்கும் நிலையில், அல்லது அந்தப் போராட்டம் நியாயமானது என்பதையோ கஜேந்திரகுமாருக்காக ஆதரவுக் குரல் கொடுத்த சிங்கள உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பது வரலாற்று ரீதியான உண்மை. ஆனால் சுமந்திரன் ஆதரவாகப் பேசினர் என்பது அவருடைய மனச்சாட்சியாகக் கூட இருக்கலாம்.

எவ்வாறாயினும் இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத்தில் அதுவும் ஒற்றையாட்சியை மேலும் மேலும் உறுதிப்படுத்த முற்படும் இந்த நாடாளுமன்றத்தில், அதன் அரசியல் யாப்பு விதிகளை மேற்கோள் காண்பித்து ஈழத் தமிழர்களின் உரிமைகளைப் பெற்றுவிட முடியும் என்ற நம்பிக்கையிலா தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேர்தலில் போட்டியிட்டது என்ற கேள்விகள் எழாமலில்லை.

ஏனெனில் முன்னணியைப் பொறுத்தவரை அதுவும் கஜேந்திரகுமார், செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் மீது கொள்கைசார் நம்பிக்கை ஒன்று அநேகமான மக்களிடம் இருந்தது; இருக்கிறது. ஆகவே நாடாளுமன்றத்தில் சிறப்பு அறிக்கை வெளியிட சபாநாயகர் மறுப்புத் தெரிவித்ததுமே, பதிலுக்கு அரசியலமைப்பு விதிகளை மேற்கோள்காட்டிப் பேசியது போன்று ஏன் சபையில் எதிர்ப்புச் செயற்பாடுகளில் ஈடுபடவில்லை என்ற கேள்விகளும் மறுபுறத்தில் எழுகின்றன.

உதாரணமாக நேற்று முன்தினம் புதன்கிழமை 20ஆவது திருத்தச் சட்ட நகல் வரைபைச் சமர்ப்பிப்பதற்கு எதிராகத் தமது ஆசனங்களில் இருந்து எழுந்து சபை நடுவாகச் சபாநாயகர் ஆசனத்துக்கு முன்பாக வந்து நின்று சுலோக அட்டைகளையும் கைகளில் ஏந்தியவாறு எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர்.

சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் அவ்வாறு போராட்டம் நடத்தியபோது அரசாங்கத்தரப்பு குழப்பத்திற்கு மத்தியிலும் குறித்த நகல் வரைபை அரசாங்கம் சமர்பித்தமை என்பது வேறு. ஆனால் தமது எதிர்ப்பை சஜித் அணி வரலாற்றில் பதிவு செய்துள்ளது. அதன் மூலம் உலகத்துக்கு ராஜபக்ச அரசாங்கத்தின் ஜனநாயக மறுப்பையும் வெளிப்படுத்தியு்ள்ளது.

ஆகவே குறைந்த பட்சம் அவ்வாறான எதிர்ப்புச் செயற்பாட்டைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தீலிபன் நினைவேந்தல் தடை விவகாரத்தில் ஏன் நாடாளுமன்றத்திற்குள் வெளி்ப்படுத்தவில்லை? இரண்டு உறுப்பினர்கள்தான் என்றாலும் கூட சபைக்கு நடுவாக வந்து நின்று எதிர்ப்புக் குரல் எழுப்பியிருந்தால், தமிழரசுக் கட்சி உறுப்பினர்களும் அந்த எதிர்ப்புச் செயற்பாட்டில் ஈடுபட்டிருக்க வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டிருக்கும்.

ஆகவே குறைந்தது 12 தமிழ் உறுப்பினர்கள் சபைக்கு நடுவாக நின்று திலீபன் விவகாரம் தொடர்பாக எதிர்ப்பை வெளியிட்டிருந்தால், சபாநாயகர் என்ன செய்திருப்பார்? சிங்கள உறுப்பினர்களால் என்ன செய்திருக்க முடிந்திருக்கும்?

கஜேந்திரகுமாருக்குச் சிறப்புரை நிகழ்த்த இடமளிக்கவில்லை என்று குரல் கொடுத்த சஜித் அணி மற்றும் ஜே.வி.பி உறுப்பினர்கள் சபைக்கு நடுவாக வந்து நின்று போராட்டத்தில் இணைய வாய்ப்பில்லை என்பது வெளிப்படை. ஆகவே அவர்களின் அந்தக் கபட நாடகத்தையும், நீலிக் கண்ணீரையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வெளிப்படுத்தியிருக்கலாமல்லவா? அந்தச் சந்தர்ப்பத்தை ஏன் நழுவ விட்டார்கள்?

சிங்கள ஆட்சியாளர்களின் ஏமாற்றுத் தந்திரங்களை வெளிப்படுத்தி எழுபது ஆண்டுகளாக ஆளும் கட்சியாகவும் எதிர்க் கட்சியாகவும் மாறி மாறிப் பதவி வகித்து இப்படித்தான் ஏமாற்றினார்கள் என்பதை முன்னணி வெளிப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருந்தது. ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றம் என்று தெரிந்தும் தேர்தலில் போட்டியிட்டமைக்கான நோக்கங்களில் இதுவும் ஒன்றுதானே?

ஆகவே அப்படியொரு எதிர்ப்புச் செயற்பாட்டில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏன் ஈடுபடவில்லை? 2004ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்திருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன். பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் சமாதானப் பேச்சுக்களின்போது இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொண்ட விடயங்களை நடைமுறைப்படுத்தவில்லை என்பதைக் கண்டித்து அவ்வப்போது சபை நடுவாக வந்து எதிர்ப்புக் கோசங்களை எழுப்பிச் சபை நடவடிக்கைகளையே செயலிழக்கச் செய்திருந்தார்கள் என்பது வரலாறு.

இவர்கள் மூவரும் சபைக்கு நடுவாகச் சென்று போராட்டத்தில் ஈடுபடுகிறார்களே என்று நினைத்து விரும்பியோ விரும்பாமலோ கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்களும் சபைக்கு நடுவாக வந்து நின்று கூலிக்கு மாரடிப்பது போன்று அன்று கோசம் எழுப்பியிருந்தார்கள். அப்படித் தமிழரசுக் கட்சியை இறங்கி வர வைத்தமை கூட கஜேந்திரகுமார். கஜேந்திரன் ஆகியோருக்கு அன்று பெரு வெற்றியாகவே இருந்தது.

ஆகவே அப்போது அப்படியெல்லம் எதிர்ப்புச் செயற்பாட்டில் ஈடுபட முடிந்ததென்றால், இன்று ஏன் தீலிபன் விவகாரத்தில் சபைக்குள் போராட முடியாமல் போனது என்ற கேள்வி எழுவதில் நியாயம் உண்டு. ஏனெனில் தமிழரசுக் கட்சிக்கு மாற்றாகவே இவர்கள் அவதானிக்கப்பட்டனர்.

கஜேந்திரகுமார், செல்வராஜா கஜேந்திரன் ஆகிய இருவரும் அப்படிச் சபைக்குள் செயற்பட்டிருந்தால் கஜேந்திரகுமார் பேசியபோது ஆதரவாகக் கருத்து வெளியிட்டிருந்த சுமந்திரனும் தமிழரசுக் கட்சியின் ஏனைய உறுப்பினர்களும் அவர்களோடு இணைந்து சபைக்குள் போராடியிருப்பார்களா இல்லையா என்பதைக் கூடப் பரீட்சித்துப் பார்த்திருக்கலாம்.
ஆகவே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தமிழரசுக் கட்சி முன்னர் நடத்திய அரசியலைப் போன்றதொரு அச்சாப்பிள்ளை அரசியலைத் தான் நடத்துகின்றது என்ற கருத்துக்கள் எழுவதைத் தவிர்க்க முடியாது. இந்த அச்சாப்பிள்ளை அரசியலை எதிர்பார்த்து இவர்களுக்கு வாக்களித்த மக்கள் நாடாளுமன்றத்திற்கு அனுப்பவுமில்லை.

இதேவேளை, தமிழரசுக் கட்சி, விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகள் நீதிமன்றத் தடை உத்தரவை மீறி செல்வச்சந்திதியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளன. இது வரவேற்கக் கூடியதுதான்.

ஆனால் இவர்களிடம் சில கேள்விகள் உண்டு– யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் தூதரகத்துக்கு முன்பாக திலீபன் நினைவேந்தல் நிகழ்வை ஏன் நடத்த முடியாது? இந்திய- இலங்கை அரசுகளிடம் அரசியல் விடுதலை கோரியே திலீபன் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார் என்பது வரலாறு. ஆகவே அவ்வாறான போராட்டத்துக்கு ஏன் இவர்கள் தயாராகவில்லை?

ஏன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இப்படியொரு போராட்டத்தை நடத்த முற்படவில்லை அல்லது விரும்பவில்லை? இந்தியத் தூதரகம் நடத்துகின்ற விருந்துபசாரத்துக்குச் செல்ல முடியுமென்றால் ஏன் அந்தத் தூதரகத்துக்கு முன்பாகப் போராட்டம் நடத்த முடியவில்லை?

கொழும்பு காலிமுகத்திடலில் உண்ணாவிரதம் நடத்தினால் நிச்சயமாக இலங்கைப் பொலிஸார் கைது செய்து சிறையில் அடைப்பார்கள் என்று தெரியும். ஆகவே அவ்வாறு தெரிந்தும் போராட்டம் ஒன்றை நடத்தி ஏன் சிறைக்குச் செல்ல விரும்பவில்லை? அடுத்தடுத்து உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினால் பொலிஸார் கைது செய்து அடைப்பார்கள் ஆகவே சிறைச்சாலைகள் நிறையும். ஆகவே அவ்வாறு சிறைச்சாலைகள் நிறையக் கூடிய போராட்டம் ஒன்றை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகள் ஏன் நடத்தவில்லை?

வெறுமனே தேர்தல் அரசியல் மட்டும்தான் என்பதே இங்கு வெளிச்சமாகிறது. அதற்காகவே தமிழ்த் தேசியம் பேசப்படுகின்றது என்ற உண்மைகள் தற்போது மக்களுக்கும் புரிய ஆரம்பித்துவிட்டன. கொழும்பை மையமாகக் கொண்ட சிங்கள அதிகார வர்க்கத்தைத் திருப்திப்படுத்திக் கொண்டு தேர்தல் அரசியல் மூலமான நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தையும் அதன் வசதிகள், சலுகைகள் போன்ற வரப்பிரசாதங்களை மாத்திரம் பெற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் செயன்முறைகள் மாத்திரமே தமிழ்ப் பிரதிநிதிகள் என்று சொல்லப்படுவோரிடம் தற்போது விஞ்சிக் காணப்படுகின்றன.

பூகோள அரசியல் சூழலுக்கு ஏற்ப ஜனநாயக வழியாலான அகிம்சைப் போராட்டங்களை நடத்த எவரும் தடை விதிக்க முடியாது. அந்தப் போராட்டங்களை சட்டங்களால் கூடத் தடுக்க முடியாது. வேண்டுமானால்
சிறைச்சாலைக்குள் இருந்து போராட்டம் நடத்துவதை பயங்கரவாதமாக இலங்கை அரசாங்கம் சித்தரிக்கலாம். ஆனால் சர்வதேச நாடுகளினால் அவ்வாறு கூற முடியாது. தென் ஆபிரிக்கக் கறுப்பின மக்களின் அரசியல் விடுதலைக்காகச் சிறையில் இருந்து போராடியவர் நெல்சன் மண்டேல என்பது உலகம் அறிந்த உண்மை.

அது போன்றதொரு அரசியல் போராட்ட முறையை தமிழ் அரசியல் பிரதிநிதிகள் 2009ஆம் ஆண்டு மே மாத்திற்குப் பின்னரான சூழலில் வெளிப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் சாதாரண கட்சி அரசியல் முறைக்குள் அகப்பட்டது மாத்திரமல்லாது, தேர்தல் அரசியல் முறையினாலேயே அரசியல் விடுதலையைப் பெறலாம் அல்லது இலங்கை நீதித்துறையின் மூலம், இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பின் சட்டங்களின் மூலம் அரசியல் விடுதலையைப் பெற முடியும் என்ற தவறான அணுகுமுறையை தமிழரசுக் கட்சி கற்பித்தது கற்பித்தும் வருகின்றது.

அதனை அப்போதும் இப்போதும் கண்டித்து மக்கள் மத்தியில் தீவிர பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், தற்போது அந்த அரசியல் செயன்முறைகளிலேயே தஞ்சமடையத் தயாராகிறது. அதனையே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தியிருந்தார். இந்த அரசியலைத் தான் முன்னணி செய்யும் என்றால், தமிழரசுக் கட்சியுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகப் பயணிப்பது மேலானது. இறுதியாகத் தொக்கி நிற்கும் சில விடயங்களுக்குப் பதில் தாருங்கள்–

அதாவது 2004ஆம் ஆண்டில் இருந்து 2009ஆம் ஆண்டு வரை கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வாராஜா கஜேந்திரன் ஆகிய இருவரும் இலங்கை நாடாளுமன்றத்தில் நடத்திய எதிர்ப்பு்ச் செயற்பாடுகள், விவாதங்களையே நடத்தவிடாமல் சபை நடவடிக்கைகளைச் செயலிழக்கச் செய்திருந்தன.

அந்தப் போராட்டங்கள் தமிழ்த் தேசிய அரசியலில் அப்போது பெரிதாகப் பேசப்பட்டது. தமிழ்த்தேசிய அச்சு ஊடகங்களும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதியிருந்தன. 2006ஆம் ஆண்டு மாவீரர் நாள் அன்று நாடாளுமன்ற சபா மண்டப வாசலில் செல்வராஜா கஜேந்திரன் தீபம் ஏற்றினார்.

அதனால் விரும்பியோ விரும்பாமலோ சம்பந்தன் உள்ளிட்ட ஏனைய கூட்டமைப்பு உறுப்பினர்களும் அந்த இடத்திற்கு ஓடி வந்து அதில் பங்குபற்ற வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டிருந்தது. ஆனால் அவ்வாறு ஏற்றப்பட்ட தீபங்களை நாடாளுமன்றப் பொலிஸார் பின்னர் தட்டி விழுத்தியமை வேறு. அப்படித் தட்டி விழுத்தியதைக் கூட வெற்றியாகவே அன்று தமிழ் அச்சு ஊடகங்கள் சித்தரித்திருந்தன.

ஆகவே திலீபன் நினைவேந்தல் நிகழ்வுக்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவு குறித்து நாடாளுமன்றத்தில் சிறப்புரையாற்ற அனுமதிக்கவில்லையென்றால், 2004ஆம் தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரை நாடாளுமன்றத்தில் நடத்திய எதிர்ப்புச் செயற்பாடுகள் ஏன் ஞாபகத்துக்கு வரவில்லை? எனவே அச்சாப்பிள்ள அரசியலுக்கு எவரும் சலைத்தவர்கள் அல்ல என்பதற்கு முன்னணியும் உதாரணமாவிட்டதே என்று யாரும் கவலைப்பட்டால் அந்த கவலையை இனிமேல் யாராலும் சமாதானப்படுத்த முடியாது.

எழுபது ஆண்டுகால அரசியல் போராட்டத்தை வெறுமனே ஒவ்வொரு நினைவேந்தல் நிகழ்வுகளின்போது மாத்திரம் கண்ணீர் விட்டழுவதும் அதனை மனித உணர்வுகளோடு மாத்திரம் ஒப்பிட்டுப் பேசுவதுமே தமிழ்த் தேசிய அரசியலாகத் தற்போது மாறி வருகின்றது. தமிழ்த் தேசியக் கட்சிகள் அவ்வாறுதான் வியாக்கியாணம் சொல்ல முற்படுகின்றன. அதற்குள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் அமுங்கிவிட்டதா என்ற கேள்விகளிலும் சந்தேகங்களிலும் உண்மை இல்லாமலில்லை.

கூர்மை செய்தித் தளம்

 

http://thinakkural.lk/article/73386

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின் நிரந்தர விசா 18 APR, 2024 | 05:05 PM   பொன்டியின் வணிகவளாகத்தில் கத்திக்குத்திற்கு இலக்காகிய பாக்கிஸ்தானை சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நிரந்தர விசாவை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் பிரஜைக்கு அவுஸ்திரேலியா அவ்வாறான நிரந்தரவிசாவை வழங்கியுள்ள நிலையிலேயே அன்டனி அல்பெனிஸ்இதனை தெரிவித்துள்ளார். பொன்டி வணிகவளாக தாக்குதலின் போது துணிச்சலை வெளியிட்டவர்கள்அனைவரும் இருளின் மத்தியில் வெளிச்சமாக திகழ்ந்தவர்கள் என தெரிவித்துள்ள அன்டனி அல்பெனிஸ் அவர்கள் அவுஸ்திரேலியாவின் பாராட்டுகளை பெறவேண்டியவர்கள் என தெரிவித்துள்ளார். முகமட் டாஹாவிற்கு நிரந்தர வதிவிடத்தை அல்லது விசா நீடிப்பை வழங்குவது குறித்து  அரசாங்கம் சிந்திக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181371
    • 🤣 ஒரு வேளை @பையன்26 கால இயந்திரத்தில் அடிக்கடி முன்னுக்கும் பின்னுக்கும் போய் வருவதால் கன்பியூஸ் ஆகி விட்டாரோ?
    • பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார் Published By: VISHNU    19 APR, 2024 | 06:46 PM   மறைந்த முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார். வெள்ளிக்கிழமை (19) முற்பகல் அவரது பூதவுடல் வைக்கப்பட்டுள்ள மத்துகம யடதொலவத்தையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகளுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் உடன் சென்றிருந்தனர். https://www.virakesari.lk/article/181481
    • இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஜோ பைடனின் பேச்சை மீறியதால் சிக்கலில் பெஞ்சமின் நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரெமி போவன் பதவி, பிபிசி சர்வதேச ஆசிரியர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் செய்தி தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக இரான் அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்ஃபஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். சில நாட்கள் முன்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பெரும் அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தார். கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி காஸாவில் உள்ள ‘உலக மத்திய சமையலறையில்’ (வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்) பணிபுரியும் ஏழு மனிதநேய உதவிப் பணியாளர்கள், இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வால் இஸ்ரேல் மீது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிருப்தி அடைந்தார். மேலும், நட்பு நாடாக இருப்பினும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பொறுமை இழக்கச் செய்தது. அதே நாளில், சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள இரானிய தூதரக வளாகத்தை இஸ்ரேல் தாக்கியது. அந்தத் தாக்குதலில் ஒரு மூத்த ராணுவ ஜெனரல் மற்றும் ஆறு அதிகாரிகளுக்கு மேல் கொல்லப்பட்டனர். தூதரகங்கள் மீதான தாக்குதல்களைத் தடை செய்யும் சட்ட மரபுகள் செயல்பாட்டில் இருப்பினும், அதை மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ‘இரான் விதிகளை மீறி தூதரக கட்டடத்தை ராணுவ புறக்காவல் நிலையமாக மாற்றியதால்தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது’ என இஸ்ரேல் தரப்பில் ஏற்றுக்கொள்ள முடியாத காரணம் சொல்லப்பட்டது. அந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இரான் உறுதிபூண்டது. அதற்கு முன்னரும் மூத்த ராணுவ தளபதிகள் மீதான தாக்குதல் நடத்தப்பட்டபோது ‘பதிலடி கொடுக்கப்படும்’ என்று வார்த்தைகளில் மட்டுமே இரான் தெரிவித்தது. ஆனால், அவை செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   அமெரிக்கா ஆவேசம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்கா தனக்கு வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தி இஸ்ரேல் காஸாவில் பேரழிவுத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனமான ‘வோர்ல்டு சென்ட்ரல் கிச்சனில்’ பணிபுரியும் குழுவை இஸ்ரேல் தாக்கியது. மனிதநேய உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட சீற்றத்தால் இரானுக்கு வெளியே, டமாஸ்கஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பெரிதாகக் கண்டு கொள்ளப்படவில்லை. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எழுதிய ஆவேசமான அறிக்கை ஒன்றை வெள்ளை மாளிகை வெளியிட்டது. அவர் ‘சீற்றம்டைந்தார், மனமுடைந்து விட்டார்’. இப்படி நடப்பது முதல்முறை அல்ல. உதவிப் பணியாளர்கள் மற்றும் பாலத்தீன குடிமக்களைப் பாதுகாக்க இஸ்ரேல் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை, என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இஸ்ரேல் பிரதமருடன் ஒரு காட்டமான தொலைபேசி உரையாடலில், பைடன், பெரும் சலுகைகளைக் கோரினார். காஸாவுக்கு பெருமளவு மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும் என்றார். வடக்கு காஸாவில் உணவின்றிப் பட்டினியால் இறக்கும் குழந்தைகள் வசிக்கும் பகுதியில் இருந்து ஒரு மணிநேரத்திற்கும் குறைவான தூரத்தில் இஸ்ரேல் அதிகமான எல்லைக் கடப்புகளைத் திறக்க வேண்டும் என்றார். அஷ்டோதில் உள்ள கொள்கலன் துறைமுகத்தையும் திறக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்தச் சூழல் மாறும் என பிரதமர் நெதன்யாகு பைடனுக்கு உறுதியளித்தார். அது வெறும் சமாளிப்பு மட்டுமே.   இருபுறமும் அழுத்தத்தில் இருந்த நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES வெள்ளை மாளிகையின் சீற்றத்தை எதிர்கொள்ளும் அதே வேளையில் நெதன்யாகு, மற்றொருபுறம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் தன்னை ஆதரித்து தனது கூட்டணியை அதிகாரத்தில் வைத்திருக்கும் தீவிர தேசியவாதிகளின் அழுத்தத்திற்கும் ஆளாகியுள்ளார். காஸாவில் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை மட்டும் அவர்கள் எதிர்க்கவில்லை. காஸாவில் இந்தப் போர் யூதர்களை மீண்டும் குடியமர்த்துவதற்கான விலைமதிப்பற்ற வாய்ப்பை இஸ்ரேலுக்கு வழங்கியிருப்பதாக அவர்கள் திடமாக நம்புகிறார்கள். கடந்த 2005ஆம் ஆண்டில் இஸ்ரேலில் இருந்து ஒருதலைப்பட்சமாக அங்குள்ள யூதர்களின் குடியிருப்புகள் அரசால் காலி செய்யப்பட்டு இடித்துத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த வார இறுதியில், அமெரிக்கா இஸ்ரேல் மீதான அழுத்தத்தை அதிகரித்தது. வியாழன் அன்று, அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். காஸாவை ஆறு மாதமாக இஸ்ரேல் முற்றுகையிட்டு வைத்திருந்தது, அப்பகுதியில் உலகிலேயே மிக மோசமான உணவு நெருக்கடி சூழலை உருவாக்கியது என்பது இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்கும் எதிரி நாடுகளுக்கும் தெளிவாகவே தெரிந்திருக்கும். மற்றொருபுறம், ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா அதைப் பயன்படுத்த இஸ்ரேலுக்கு நிபந்தனைகளை விதிக்கும் என்ற யூகமும் இருந்தது.   அமெரிக்காவின் மனநிலை பட மூலாதாரம்,UGC கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 13) காலை, இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்துவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, தி’ நியூயார்க் டைம்ஸ்’ ஊடகம் பெரும் சீற்றத்தை எதிரொலித்து ஒரு தலையங்கம் வெளியிட்டது. குறிப்பாக அமெரிக்க காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் மத்தியில் இந்தச் சீற்றம் காணப்பட்டது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதில் இடைநிறுத்தம் செய்யக் கோரியும் பெஞ்சமின் நெதன்யாகுவை தாக்கியும் அத்தலையங்கம் அமைந்திருந்தது. “இஸ்ரேலுக்கான ராணுவ உதவி நிபந்தனையற்றதாக இருக்கக்கூடாது,” என்ற தலைப்பின் கீழ், அப்பத்திரிகையின் ஆசிரியர் குழு, அமெரிக்கா உடனான ‘நம்பிக்கையின் பிணைப்பை’ உடைத்ததற்காக நெதன்யாகுவையும் அவரது அரசின் கீழ் செயல்படுபவர்களையும் கடுமையாகச் சாடியுள்ளது. “இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதும் நாட்டை தற்காத்துக் கொள்ள நினைப்பதும் சரிதான். ஆனால் அதற்காக அதிபர் பைடன் ‘நெதன்யாகு இரட்டை முகத்துடன் மேற்கொள்ளும் தந்திரமான அரசியல் விளையாட்டுகளை அனுமதிக்க வேண்டும்’ என்பது அர்த்தம் இல்லை,” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.   இரானின் தாக்குதல், நெதன்யாகுவுக்கு கிடைத்த வாய்ப்பு படக்குறிப்பு,இஸ்ரேல் மீது இரான் ஏவிய ஏவுகணைகள் அதன்பின் இரான் இஸ்ரேல் மீது முதல் நேரடித் தாக்குதலை நடத்தியது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது. ஆனால், தற்போது அதற்கு பதிலடி கொடுக்க வேண்டாம் என்று அமெரிக்கா கூறியதை மீறி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல். ராணுவ ஒத்துழைப்பின் குறிப்பிடத்தக்க ஒருங்கிணைந்த செயல்பாடாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பிற மேற்கத்திய நட்பு நாடுகள் இரானால் ஏவப்பட்ட 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்துவதற்கு இஸ்ரேலுக்கு உதவின. காஸாவில் நடக்கும் இஸ்ரேலின் தாக்குதல்களைக் கடுமையாக விமர்சித்தவர் ஜோர்டான் நாட்டின் மன்னர் அப்துல்லா. ஆனால் இஸ்ரேலுக்கு ஆபத்து வந்தபோது, ஜோர்டானின் விமானப்படை பாதுகாப்பு நடவடிக்கையில் இணைந்தது, இஸ்ரேலை நோக்கி வந்த ஏவுகணைகளை வீழ்த்தியது. இஸ்ரேலுக்கு வழங்கப்படும் ராணுவ உதவிக்கு நிபந்தனைகள் விதிக்கும் சூழல் மாறி ஒற்றுமையின் உறுதியான வெளிப்பாடு அப்போது பிரதிபலித்தது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு புதிய அரசியல் வாய்ப்பை வழங்கியுள்ளது. குறைந்தப்பட்சம் ஓரிரு நாட்களுக்கு தலைப்புச் செய்திகளில் காஸாவின் பெயர் அடிபடாது.   மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாடு என்ன? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இரானின் ஏவுகணைகளை இடைமறித்த இஸ்ரேலின் அயர்ன் டோம் அதேநேரம் பிரதமர் நெதன்யாகு மீதான அழுத்தம் அதிகரித்துவிட்டது. இஸ்ரேலின் அடுத்த நகர்வுகள் அந்த அழுத்தத்தை இரட்டிப்பாக்கும். அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பதை அதிபர் பைடன் மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். இரானின் தாக்குதலை முறியடித்த வெற்றியை மட்டும் இஸ்ரேல் எடுத்துக்கொள்ள வேண்டும், ‘ஆனால் திருப்பி அடிக்கக்கூடாது’ என்றார். இந்த நிலையில்தான் இரான் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் ஆதரவு என்பது ‘இரும்புக் கவசம்’ போன்றது என்பதை பைடன் மீண்டும் நினைவுபடுத்தினார். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி அன்று நடத்தப்பட்ட ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு அவரது நிலையான கொள்கை வெளிப்பட்டது. காஸாவில் பேரழிவையும் கொடிய விளைவுகளையும் ஏற்படுத்தப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அமெரிக்காதான் வழங்கியது என்ற போதிலும் அதிபர் பைடனும் அவரது நிர்வாகமும் மத்திய கிழக்கில் நடக்கும் போரை நிறுத்தக் கடுமையாக உழைத்துள்ளனர். அக்டோபரில் இருந்து ஆயுதங்கள் மற்றும் பிற நாடுகள் அளித்த ஆதரவையும் இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது. ஜோ பைடனின் எச்சரிக்கைகளையும் கோபத்தையும் புறக்கணித்து அவரின் அவநம்பிக்கைக்கு ஆளானது. இரானுக்கு எதிராகச் செயல்பட, இஸ்ரேலுக்கு முன்னெப்போதும் இல்லாத ராணுவ ஒத்துழைப்பை சில ஆதரவு நாடுகள் வழங்கின. இதன்மூலம் இஸ்ரேல் மீண்டும் ஒருமுறை ஜோ பைடனின் ‘பதிலடி கொடுக்க வேண்டாம்’ என்ற அறிவுரையைப் புறக்கணித்தது. ஜோ பைடனை போலவே பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் ஆகியோர் இரான் தாக்குதலுக்கு எதிராகப் போர் விமானங்களை அனுப்பினர். இருவரும் இரானை கண்டித்தனர். மேலும் இஸ்ரேலிடம் பதில் தாக்குதல் செய்ய வேண்டாம் என்பதை வலியுறுத்தினர். அவர்கள் இஸ்ரேலில் நீண்ட கால நம்பிக்கைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக யோசிக்கத் தொடங்கிவிட்டனர். இஸ்ரேல்-இரான் பகை இஸ்ரேல் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு சீற்றத்துடன் பதிலடி கொடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் ஆழமாக நம்புகிறது. மேலும், இரான் இஸ்ரேலின் மிகவும் ஆபத்தான எதிரி என்றும் யூத அரசை அழிப்பதில் இரான் குறியாக உள்ளது என்றும் பெஞ்சமின் நெதன்யாகு நம்புகிறார். அவரது ஆட்சியில் பலமுறை இந்த நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக இஸ்ரேல் மக்கள் பலர் இதே கருத்தை முன்வைக்கின்றனர். கடந்த 1979இல் இரானில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் இஸ்ரேலுடன் பல வருடப் பகை நீடித்தது. அதன் பிறகு இப்போது இரான் முதன்முறையாக இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதல் தொடுத்துள்ளது. நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கும் மறைமுகப் போர் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தற்போதைய தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்னதாகவே, பதில் தாக்குதல் நடத்தப்படுமா என்பது கேள்வி அல்ல, எப்போது, எப்படி நடத்தப்படும் என்பதுதான் கேள்வி என்று இஸ்ரேல் கூறியது. தீவிரமான போர்ச்சூழல் உருவாகாமல், எப்படி பதில் தாக்குதல் நடத்துவது என்று இஸ்ரேலின் போர்க்குழு அமைச்சரவை விவாதித்து வந்தது. இரான் தீவரமான போர்ச்சூழலை விரும்பவில்லை என்று சொன்னாலும், அதற்கேற்ப பதிலளிக்கும். எந்தவொரு அனுமானமும் இன்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இரு தரப்பினரும் ஏற்கெனவே மற்றவரின் நோக்கங்களைத் தவறாக மதிப்பிட்டுள்ளனர் என்பதே நிதர்சனம். பெஞ்சமின் நெதன்யாகுவும் அவரது அரசாங்கமும் மீண்டும் ஒருமுறை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற நாடுகளின் விருப்பங்களைப் புறக்கணிப்பதில் குறியாக உள்ளனர். இஸ்ரேலின் தீவிர தேசியவாதக் கூட்டாளிகள், இரான் மீது கொடூரத் தாக்குதல் நடத்தக் கோரினர். அவர்களில் ஒரு தரப்பினர் இஸ்ரேல் ‘வெறியுடன் செயல்பட வேண்டும்’ என்றனர்.   காஸாவில் தொடரும் மனிதாபிமானப் பேரழிவு படக்குறிப்பு,அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். இவையனைத்திற்கும் மத்தியில் காஸாவில் மனித உரிமை மீறல் மற்றும் பேரழிவு தொடர்கிறது. காஸா மீண்டும் சர்வதேச கவனம் பெறும். இஸ்ரேலின் ராணுவம் காஸாவில் இன்னமும் பொதுமக்களைக் கொன்று வருகிறது. மற்றொருபுறம் மேற்குக் கரையில் பாலத்தீனர்களுக்கும் யூத குடியேற்றவாசிகளுக்கும் இடையே மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. ஹெஸ்பொல்லாவுடன் இஸ்ரேலுக்கு மீண்டும் எல்லைப் போர் தீவிரமடையலாம். இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இன்னும் கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என இரான் உறுதியளித்துள்ளது. அதன் ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரியான ஹொசைன் பாகேரி, இஸ்ரேல் மீதான தாக்குதல் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது, ஆனால் இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் ‘மிகப் பெரிய’ பதிலடியை திருப்பிக் கொடுப்போம் எனக் கூறியிருக்கிறார். இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்தினால் உதவ மாட்டோம் என அமெரிக்கா உறுதிபடத் தெரிவித்துள்ளது. ஆனால் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான ‘இரும்புக் கவசமாகச்’ செயல்பட்ட ஜோ பைடன் அரசு இஸ்ரேலிய தாக்குதலுக்கு இரான் பதிலடி கொடுத்தால், ஆதரவாக நிற்காது என்பதை நம்புவது கடினம். இந்தச் சூழ்நிலை மத்திய கிழக்குப் பகுதியில் தீவிரமான போர்ச் சூழலையும் சர்வதேச நெருக்கடியையும் ஏற்படுத்தும். https://www.bbc.com/tamil/articles/cd19j8p3n4vo
    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.