Jump to content

திலீபனுக்காக இணைந்த தமிழ்க் கட்சிகள்- ஐக்கியம் தொடரும் வாய்ப்பு உள்ளதா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திலீபனுக்காக இணைந்த தமிழ்க் கட்சிகள்- ஐக்கியம் தொடரும் வாய்ப்பு உள்ளதா?

திலீபனின் நினைவேந்தல் நிகழ்ச்சிகளுக்கு கோத்தபாய ராஜபக்ஷ அரசாங்கம் விதித்த தடையை தமிழ் கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்தி இருக்கின்றது. அனைத்துக் கட்சிகளும் இணைந்து திலீபனின் நினைவேந்தலில் அதுவும் – அரசாங்கத்தின் தடைகளை தகர்த்துக் கொண்டு வந்து பங்கு கொண்டது தமிழ் மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கின்றது.

தமிழ் அரசியல் பரப்பில் அண்மைக் காலத்தில் ஏற்பட்ட முக்கியமான ஒரு திருப்பமாக இதனை கருத முடியும். தமிழ் தேசிய அரசியலை முன்னெடுக்கும் இந்த கட்சிகள் அனைத்தும் ஏற்கனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து செயற்பட்ட கட்சிகள் என்பதும் கவனிக்கத்தக்கது. பின்னர் கூட்டமைப்புக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளால் பிரிந்து சென்றிருந்த அந்தக் கட்சிகள் தற்போது ஓர் அணியில் இருந்து திலீபனை நினைவு கூர்ந்துள்ளார்கள்.

திலீபனை நினைவு கூர்வதற்கு தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்ற கோரிக்கையை முதலில் முன்வைத்தவர் மாவை. சேனாதிராஜா என்பதே கவனிக்கத்தக்கது. பொதுத்தேர்தலில் படுதோல்வி அடைந்த மாவை. சேனாதிராஜா தன்னுடைய எதிர்கால அரசியலை கட்டி அமைப்பதற்கு இதனை பயன்படுத்திக் கொள்வார் என்பது உண்மைதான். மாகாண சபைகளுக்கான தேர்தலும் மிக விரைவில் நடைபெறவுள்ள நிலைமையில், மக்கள் மத்தியில் வீழ்ச்சியடைந்திருக்கும் தன்னுடைய செல்வாக்கை உயர்த்திக்கொள்ள வேண்டிய ஒரு தேவை மாவைக்கு ஏற்பட்டிருக்கின்றது.

பொதுத் தேர்தலின்போது தமிழ் கட்சிகள் அனைத்தும் பிளவுபட்டு தனித்தனியாக போட்டியிட்டு வாக்குகளை சிதறடித்த பின்னணியில், தென்னிலங்கைக் கட்சிகள் தமிழ் பகுதிகளில் தமது செல்வாக்கை நிலைநிறுத்த முற்பட்டிருந்ததைக் காண முடிந்தது. இந்த சந்தர்ப்பத்தில்தான் தேசியம் பேசும் தமிழ் கட்சிகள் ஒரே அணியில் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்பதை பலரும் வலியுறுத்தி இருந்தார்கள்.

அரசின் திட்டம் என்ன?

திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை விதிப்பது என்ற அரசாங்கத்தின் தீர்மானம் ஒரு ஆரம்பம் என்று தான் கூற வேண்டும். அதனைத் தொடர்ந்து வரப்போகும் மாவீரர் நிகழ்வுகள் உட்பட பல்வேறு நிகழ்வுகளுக்கும் தடை போடுவதற்கு அரசாங்கம் முயற்சி செய்வதற்கான ஒரு ஆரம்ப கட்ட செயற்பாடாகவே இது உள்ளது. மாவீரர்களை நினைவு கூருவதன் மூலம் தமிழ் தேசியம் பாதுகாக்கப்பட்டு அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லப்படும் என்பது கோத்தாபய ராஜபக்ஷ அரசின் கருத்து. அதனால்தான் இவர்கள் இவ்விடயத்தில் உறுதியாக நின்றார்கள்.

நீதிமன்றங்கள் மூலமாக தடை விதிக்கப்பட்டு இருந்தாலும் கூட குறிப்பிட்ட பகுதிகளில் இருக்கக்கூடிய பொலிஸ் நிலையங்களே இந்தத் தடைகளை ஏற்படுத்துவதற்கான மனுக்களை தாக்கல் செய்திருந்தன என்பது கவனிக்கத்தக்கது. அதாவது இது வெறுமனே நீதிமன்றச் செயற்பாடு அல்ல. அரசாங்கத்தின் நிகழ்ச்சிநிரலுக்கு உட்பட்டதாகவே காவல்துறையினர் செய்யப்பட்டிருக்கிறார்கள். நீதிமன்றம் அவ்வாறு செய்யப்படும் என்பது அனைவருக்கும் தெரியும். அதிகாரத்திலிருப்பவர்களின் விருப்பங்களுக்கு ஏற்ற வகையில் செயல்படுவது தான் நீதிமன்றங்களின் செயற்பாடாக இலங்கையில் இருக்கின்றது.

ஒற்றுமை முயற்சி

தமிழ் கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னெடுக்கப்பட்டு தோல்வி அடைந்தது என்பது அனைவருக்கும் நினைவிருக்கலாம். யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சியின் போது அனைத்து தமிழ் கட்சிகளும் அதில் பங்கு கொண்டிருந்தனர் என்பதும், பின்னர் அந்த முயற்சியில் இருந்து அவர்கள் வெளியேறி தனித்தனியான நிலைப்பாடுகள் எடுத்தார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. குறிப்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சஜித் பிரேமதாசவை ஆதரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்தது. ஏனைய சில கட்சிகள் மௌனமாக இருந்தன.

ஜனாதிபதித் தேர்தலின்போது தமிழ் தேசியக் கட்சிகளின் பேரம் பேசும் பலத்தை அதிகரிக்க முடியும் என்ற இலக்குடன் செயற்பட்ட பல்கலைக்கழக மாணவர் சமூகம், அது தோல்வியடைந்த பின்னர் தமது முயற்சிகளை நிறுத்திக் கொண்டது. இந்த தமிழ் கட்சிகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வருவது சாத்தியமற்றது என்பதை உணர்ந்துகொண்ட நிலைமையிலேயே தனது முயற்சியை அவர்கள் கைவிட்டார்கள்.

ஆனால் இப்போது மாவை சேனாதிராஜா, பொதுத் தேர்தல் தோல்வியின் பின்னர் தன்னுடைய செல்வாக்கை நிலைநிறுத்திக் கொள்வதற்கு கிடைத்த ஒரு சந்தர்ப்பமாக இதனைப் பயன்படுத்தியுள்ளார்.

இந்த இடத்தில் இன்னொரு விடயமும் கவனிக்கத்தக்கது. கூட்டமைப்பின் பேச்சாளராக இருக்கும் சுமந்திரன் இந்த முயற்சிகளில் இருந்து முற்றுமுழுதாக ஓரங்கட்டப்பட்டு இருந்தார்.

தோல்வியின் பின் எழுச்சி

1970 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் இரண்டு தமிழ்த் தலைவர்களாகக் கருதப்பட்ட அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் படுதோல்வி அடைந்திருந்தார்கள். அமிர்தலிங்கம் அப்போது தமிழரசு கட்சியிலும், சிவசிதம்பரம் தமிழ் காங்கிரஸ் கட்சியிலும் முக்கிய பதவிகளில் இருந்தார்கள். 70களுக்குப் பின்னர் ஏற்பட்ட தீவிர தமிழ் தேசியவாத போக்கும் அவர்கள் தோல்விக்கு ஒரு காரணமாக இருந்தது. தமது செல்வாக்கை இளைஞர்கள் மத்தியில் வெளிப்படுத்திக் கொள்வதற்காக ஒரு தீவிரமான போக்கில் செயல்பட வேண்டியவர்களாக அவர்கள் இருந்தார்கள். அதேபோன்ற ஒரு நிலைமையில் தான் இப்போது மாவை. சேனாதிராஜா இருக்கின்றார்.

தமிழ் தேசியத்தை முன்னெடுக்கும் கட்சிகளைப் பொறுத்தவரையில் ஐக்கியம் என்பதைவிட தங்களுடைய தனித்துவத்தைப் பேணிக் கொள்வதும், அதன் மூலமாக மக்கள் செல்வாக்கை வலுப்படுத்திக் கொள்வதும் தான் அவருடைய இலக்காக இருக்கிறது. அதனால் தான் கடந்த காலங்களில் ஒற்றுமை முயற்சிகள் தோல்வியடைந்தன.

புலிகள் ஏற்படுத்திய ஒற்றுமை

2000ஆம் ஆண்டில் விடுதலைப்புலிகள் மிகவும் பலமான ஒரு நிலைமையில் இருந்தனர். இருந்தபோதுதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்க முடிந்தது. சிதறிப்போய் பல்வேறு கோணங்களில் செயற்பட்ட கட்சிகளை இணைத்து ஒரு பலமான அரசியல் அமைப்பாக அதனை அவர்களால் உருவாக்க முடிந்தது.  2004ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் 22 ஆசனங்களில் பெறக்கூடியதாக இருந்தமைக்கும் அதுதான் காரணம். எதிர்வரும் காலங்களில் அவ்வாறு பாரிய வெற்றி ஒன்றை பெற்றுக் கொள்ளக் கூடிய நிலைமையில் எந்த ஒரு தமிழ் கட்சியும் இல்லை. அவற்றை ஐக்கியப்படுத்தக் கூடிய நிலைமையில் விடுதலைப்புலிகள் போன்ற பலமான அமைப்பும் இல்லை.

இந்தப் பின்னணியில் திலீபனை முன்னிறுத்தி தமிழ் தேசியக் கட்சிகளிடையே இணக்கப்பாடு இப்போது ஏற்பட்டிருக்கின்றது என்ற போதிலும் கூட இது எந்தளவு காலத்திற்கு நீடிக்கும் என்பது கேள்விக்குறிதான். இந்த ஐக்கியம் திலீபனுடைய நினைவேந்தலுடன் முடிவடைந்து விடுமா அல்லது பொதுவான விடயங்களிலும் தொடருமா என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கின்றது.

தேர்தல் அரசியல் என்பதற்கு அப்பால் தமிழ் மக்களுக்கு பெருமளவு பிரச்சினைகள் உள்ளன. குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை. அரசியல் கைதிகள் பிரச்சினை, காணி விடுவிப்பு, இராணுவ பிரசன்னத்தை குறைப்பது, போர்க் குற்றங்களுக்கு பொறுப்புக் கூறுவது போன்ற பல்வேறு நெருக்கடிகள் தமிழ் மக்கள் முன்பாக தீர்க்கப்படாதவையாக இன்னும் உள்ளது. இதனைவிட அரசியல் தீர்வு என்பது கேள்விக்குறியாகவே இருக்கப்போகின்றது.

இந்தப் பின்னணியில் திலீபனை முன்னிறுத்தி ஒன்றிணைந்த தமிழ் கட்சிகள் பொதுவான கோரிக்கைகளை வென்றெடுப்பதில், பொதுவான வேலைத்திட்டம் ஒன்றின் அடிப்படையில் செயற்பட வேண்டும் வேண்டும் என்பதுதான் தமிழ் மக்களுடைய விருப்பம். இந்தளவு பிரச்சினைகள் தமிழ் மக்கள் முன்பாக இருக்கும் நிலையில் தமது தனித்துவத்தைப் பாதுகாப்பது என்ற நிலையில், மக்களின் நலன்களை மறந்து செயற்படக்கூடாது என்பதை தேசியத்தை முன்னிறுத்திச் செயற்படும் தமிழ்க் கட்சிகள் உணரவேண்டும்.

-அகிலன்-

 

http://www.ilakku.org/tamil-parties-unites-for-thileepan-is-this-unity-continues/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தப்பி கிப்பி பிழைத்து வந்தால் அவர்களுக்கு சிறிலங்காவில் கதாநாயக வரவேற்பு வழங்கி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற வைத்தவிடுவார்கள் சிங்கள மக்கள்...அமெரிக்கா ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராடிய சிங்கள லே (ரத்தம்)என கோசத்தை முன் வைப்பார்கள்
    • ஈரான் ரோனின் பெருமதி ஆயிரம் டொல‌ர் ர‌ஸ்சியா ஈரானிட‌ம் வாங்கும் போது இந்த‌ விலைக்கு தான் வாங்கினார்க‌ள்.....................ஈரான் ரோன்க‌ளில் ப‌ல‌ வ‌கை ரோன்க‌ள் இருக்கு 1800 கிலோ மீட்ட‌ர் தூர‌ம் போகும் அளவுக்கு கூட‌ ரோன்க‌ள் இருக்கு.....................இந்த‌ ரோன்க‌ளின் வேக‌ம் மிக‌ குறைவு......................நாச‌கார‌ ரோன்க‌ளை ஈரான் இன்னும் பய‌ன் ப‌டுத்த வில்லை...................அதை ப‌ய‌ன் ப‌டுத்தினால் அழிவுக‌ள் வேறு மாதிரி இருந்து இருக்கும் ........................2010க‌ளில் இஸ்ரேல் ஜ‌டோம்மை க‌ண்டு பிடிக்காம‌ இருந்து இருக்க‌னும் பாதி இஸ்ரேல் போன‌ வ‌ருட‌மே அழிந்து இருக்கும்....................ஹ‌மாஸ் ஒரு நாளில் எத்த‌னை ஆயிர‌ம் ராக்கேட்டை இஸ்ரேல் மீது  ஏவினார்க‌ள்............................   இர‌ண்டு நாளுக்கு முத‌ல் ஈரான் ஏவிய  ரோன்க‌ளின் விலை 3ல‌ச்ச‌ம் டொல‌ருக்கு கீழ‌ என்று நினைக்கிறேன்  ஈரான் ரோன்க‌ளை  தாக்கி அழிக்க‌ 3.3மில்லிய‌ன் அமெரிக்க‌ன் டொல‌ர் என்ப‌து அதிக‌ தொகை................நூற்றுக்கு 90வித‌ ரோன‌ அழிச்சிட்டின‌ம் 10 வித‌ம் இஸ்ரேல் நாட்டின் மீது வெடிச்சு இருக்கு அது புதிய‌ கானொளியில் பார்த்தேன் .................த‌ங்க‌ட‌ விமான‌ நிலைய‌த்துக்கு ஒன்றும் ந‌ட‌க்க‌ வில்லை என்று இஸ்ரேல் சொன்ன‌து பொய் இதை நான் இர‌ண்டு நாளுக்கு முத‌ல் எழுத‌ கோஷான் அவ‌ரின் பாணியில் என்னை ந‌க்க‌ல் அடித்தார்............ இப்ப‌ நீங்க‌ள் எழுதின‌து புரிந்து இருக்கும் பணரீதியா யாருக்கு அதிக‌ இழ‌ப்பு என்று......................................
    • அதுதான் எனக்கும் விளங்கவில்லை. அதுவும் ஆதவன் இதை தூக்கி, தூக்கி அல்லவா அடித்திருக்க வேண்டும். சுபாஷ் கவனத்துக்கு - லைக்காவில் நல்ல சம்பளத்தில் PR Director வேலை இருந்தால் - நான் தயார்🤣. தமிழ் யுடியூப் - அவர்கள் எங்கே சுயமாக செய்தி சேகரிக்கிறார்கள்- ஹைகோர்ட்டுக்கு எப்படி போவது என்பதே தெரிந்திருக்காது. எவனாவது செய்திபோடுவான் - அதை பற்றி ஒரு பத்து நிமிடம் விட்டத்தை பார்த்து யோசித்து விட்டு, பின் வாங்குகிறார்கள், பாண் வாங்குகிறார்கள் என கமெரா முன் வந்து வாயால் வடை மட்டும் சுடுவார்கள். முன்பு நிலாந்தன், அரூஸ், ரிசி, திருநாவுகரசர் பேப்பரிலும், ரமேஷ் வவுனியன், நிராஜ் டேவிட் ரேடியோவிலும் சுட்ட அதே வடைதான். இப்போ யூடியூப்பில். இவர்கள் புலம்பெயர் தமிழர் இயலுமை பற்றி  சுட்ட வடைகளை அவர்கள் நம்ப, அவர்கள் பற்றி இவர்கள் சுட்ட வடையை புலம்பெயர் தமிழர் நம்ப - இப்படி உருவான ஒரு மாய வலை - 2000 பின்னான அழிவுக்கு பெரும் காரணமானது. அத்தனை அழிவுக்கு பின்னும் இவர்கள் வடை வியாபார மட்டும் நிற்கவே இல்லை. வடைகளை வாங்க வாடிக்கையாளர் இருக்கும் போது, யூடியூப் காசும் தரும் போது - அவர்கள் ஏன் விடப்போகிறார்கள். நான் இப்போ யூடியூப்பில் தமிழ் வீடியோ என்றால் - மீன் வெட்டும் வீடியோத்தான். ஒரு சாம்பிள். நான் ஸ்பீட் செல்வம்னா ரசிகன். ஆனாலும் உங்க அளவுக்கு Artificial intelligence   இல்லை Sir.
    • இன்றைய கால கட்டங்களிலும் இப்படியான நம்பிக்கையில் ஆசிரியர்கள் இருப்பது மிகவும் கவலையளிக்கும் விடயம் ..
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.