Jump to content

ஹர்த்தாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாழைச்சேனையில் ஆர்ப்பாட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

பிரதேச வாதம் இல்லை. சலுகைகளுக்கும்,  சுயநலத்திற்கும் சாய்பவர்கள். அதை மறைக்க கையாளும் சொல் அது. எதிரி நம்மை  பிரித்து லாபமடைய பாவிக்கும் ஆயுதங்களில் இதுவும் ஒன்று. அதையே பிரட்டி பாவித்து தம்மை மறைத்துக்கொள்கிறார்கள். எஜமானர்கள் என்ன செய்கிறார்கள்?  தர்மத்தை போதிக்க வேண்டியவர்கள், குடி  மக்களை இனபேதம் இன்றி  சமமாக நடத்த வேண்டியவர்கள் எங்கும் எதிலும் கக்குவது இனவாதம். நாங்களும் இந்நாட்டின் மூத்த குடிகளே, என்று தத்துவார்த்தமாகவிளக்குபவருக்கு, தாம் தமது ஆதாரத்தை காட்டி நிரூபிப்பதை விடுத்து, இனவாதி என்று மாற்றி சித்தரிக்கவில்லையா? அவர்களின் தொண்டர்களும், அடிமைகளும் அதைத்தானே பிரதிபலிப்பார்கள். இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சினால்,  அவர்கள் சொல்வது சரி என்றாகிவிடும். எஜமானரின் ஆயுதம் இனவாதம், அவர் தொண்டரின் வாதம் பிரதேசவாதம்.

வேதனை என்னவென்றால், இதுபற்றி எதுவுமே எழுதவேண்டாம் என்றுவிட்டு, இப்போது நானே எழுதிக்கொண்டிருக்கிறேன். 

மாவீரர்களின் தியாகங்கள் மக்களின் மனதில் இருந்தால்ப் போதும், வெளியில் காட்டப்படத் தேவையில்லை என்று சொல்வதும் ஒருவகையில் பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரலுடன் ஒத்துப்போகிறது. அதுபோல, மக்களா கேட்டர்கள் என்று கேட்பதோ, பிசுபிசுத்துப் போய்விட்டது என்று சொல்வதோ, இதன் பின்னால் நின்று ஹர்த்தாலை நடத்துபவர்கள் யாரென்று கேள்விகேட்பதோ தமிழர் நலன்சார்ந்து எழுப்பப்படும் கேள்விகள் அல்லவென்பது தெளிவு.

சிலவேளைகளில் சிந்திக்கும்பொழுது, மிக அண்மைக்காலம்வரை இவ்வாறான மக்கள் போராட்டங்களுக்கும், நினைவேந்தல்களுக்கும் உண்மையாகவே ஆதரவு வழங்கிய எம்மில் சிலர் இன்று அவற்றினைப் புறக்கணிக்கும் முகமாகவும், கேள்விகேட்கும் முகமாகவும் செயற்படுவது அவர்கள் இன்று வரிந்திருக்கும் புதிய அரசியல் பாதையின் காரணத்தினால்த்தானோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. 

மொத்த இனத்தினதும் விடுதலைக்காக தமதுயிரை வழங்கிய மாவீரர்களுக்கான நினைவேந்தல்களை முன்னெடுப்பது ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தினைச் சார்ந்தவர்கள் என்பதற்காகவே எம்மில் சிலர் அந்த நிகழ்வினை எதிர்க்க நினைப்பதும், இழிவாகப் பேசுவதும், மக்களுக்கு இவை தேவையற்றவை என்று சொல்வதும், மாவீரர்களுக்கான நினைவேந்தலினை இன்றிருக்கும் முன்னாள்ப் போராளிகள் என்னும் சிலரை மேற்கோள் காட்டி "தேவையற்றவை" என்று நிறுவ முயல்வதும் வேதனையே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுயநலம் பெருகி, சலுகைகளுக்கு மக்கள் விலை போய்க்கொண்டிருக்கிறார்கள் என்பதே யதார்த்தம். அதற்கு பல்வேறு காரணங்களையும், குற்றச்சாட்டுகளையும் முன் வைக்கிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ரஞ்சித் said:

இதை நீங்கள் நம்பி ஏற்றுக்கொள்கிறீர்களா? 

இதில் என்ன சந்தேகம்? திலீபன் ஒரு பயங்கரவாதி, ஆகவே அவரது நினைவுநாளை அனுஷ்ட்டிப்பது பயங்கரவாதிகளை ஆதரிப்பது போன்றது என்று சொல்லி, நினைவுநாளை நடத்த விடாமல் தடுத்த சிங்களப் பேரினவாத அரசுதான் இதைக் கையில் எடுத்தது. இதற்கெதிராக மக்கள் போராடுவது தவறென்று சொல்கிறீர்களா? 

 

ஒரு போராளியை மேற்கோள் காட்டி உங்கள் கருத்தினை முன்வைக்கிறீர்கள்? ஏன், உங்கள் கருத்திற்கு "போராளி" என்பவர் மூலம் வலுச்சேர்க்கவா? மக்கள் போராடவே கூடாதெனும் மனோநிலையை ஏற்படுத்த நினைக்கிறீர்கள். அதுசரி, ஹர்த்தால் அனுஷ்ட்டிப்பது எப்படி அவரது வாழ்க்கையினைப் பாதிக்கும் என்று அவர் நினைக்கிறார்? 

ஏன் மறுக்கணும்    திலிபன் ஞாபக நாளுக்கு உண்ணாவிரதம் அறிவித்தவர்கள் , ஹர்த்தால் அறிவித்தவர்கள் ஏன் ஓர் நாள் மட்டும் அறிவிக்க வேண்டும் தீர்வு அதாவது நினைவு நாளை அனுஸ்டிக்க தீர்வு வரும் வரை  அவர்கள்  உண்ணாவிரதம் இருந்திருக்க வேண்டும்  ஒரு கிழமையோ அதற்கு மேலயோ இருந்து பெற்றுக்கொடுக்கலாம் தானே மக்களை ஏன் குழப்பமடைய செய்ய வேண்டும்  2009 மே மாதத்திற்கு பிறகு புலிகளை சார்ந்த அனைத்து நினைவுகளுக்கும் மகிந்த ராஜபக்ச அரசு தடை விதித்திருந்தது 
2015 ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை யாரும் திலிபன் ஞாபக நாளைப்பற்றி பெரிதாக பேசவில்லை ஆனால் தடை இல்லை ஆனால் ஆயிரக்கணக்கான மக்களை அந்த நினைவு நாளில் காணக்கூடியதாகவும் இல்லை  ஆனால் மக்கள் மறந்ததாக அர்த்தமும் இல்லை திலிபனை.

டக்ளஸ் புலிகளை அன்றிலிருந்து வெறுத்து வருகிறார் அவர் பேச்சு அவர் திலிபனை பற்றி  பேசியது அவர் அரசியல் இருப்புக்கும் சிங்கள மக்களை குளிர்விப்பதற்குமாக இருக்கலாம் . ஆனால் எந்த சிங்கள அரசியல் வாதிகளும் திலிபனை அவதூறாக பேசியதில்லை .

போராளியை பற்றி நான் பேசக்காரணம் வலு சேர்க்கவல்ல அவர்களை வலு இழக்காமல் செய்வட்கற்கு முன்னாள் போராளிகள் பல ர் தற்கொலை இறப்பு என செய்திகள் படிச்சு இருப்பியள்  இருப்பவர்களை நிம்மதியாக இருக்கும் காலத்திலாவது விடுங்கள் ஒரு நாள் இழப்பால் ஒன்றும் ஆகப்போவதில்லை என நீங்கள் சொல்லலாம்  ஆனால் தினக்கூலி வேலை செய்பவர்களுக்கு அது பொருந்தாது மக்கள் போராட்டம் நடத்தாலாம் ஆனால் அந்த போராட்டத்திற்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்பது எனது நிலை கிடைக்காத ஒர் தீர்வுக்கு கர்த்தால் ஆர்ப்பாட்டம் பண்ணுவது வீண் தானே என்பதை நான் சொல்ல முனைகிறேம் 

 

 

16 hours ago, ரஞ்சித் said:

வேதனை என்னவென்றால், இதுபற்றி எதுவுமே எழுதவேண்டாம் என்றுவிட்டு, இப்போது நானே எழுதிக்கொண்டிருக்கிறேன். 

மாவீரர்களின் தியாகங்கள் மக்களின் மனதில் இருந்தால்ப் போதும், வெளியில் காட்டப்படத் தேவையில்லை என்று சொல்வதும் ஒருவகையில் பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரலுடன் ஒத்துப்போகிறது. அதுபோல, மக்களா கேட்டர்கள் என்று கேட்பதோ, பிசுபிசுத்துப் போய்விட்டது என்று சொல்வதோ, இதன் பின்னால் நின்று ஹர்த்தாலை நடத்துபவர்கள் யாரென்று கேள்விகேட்பதோ தமிழர் நலன்சார்ந்து எழுப்பப்படும் கேள்விகள் அல்லவென்பது தெளிவு.

சிலவேளைகளில் சிந்திக்கும்பொழுது, மிக அண்மைக்காலம்வரை இவ்வாறான மக்கள் போராட்டங்களுக்கும், நினைவேந்தல்களுக்கும் உண்மையாகவே ஆதரவு வழங்கிய எம்மில் சிலர் இன்று அவற்றினைப் புறக்கணிக்கும் முகமாகவும், கேள்விகேட்கும் முகமாகவும் செயற்படுவது அவர்கள் இன்று வரிந்திருக்கும் புதிய அரசியல் பாதையின் காரணத்தினால்த்தானோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. 

மொத்த இனத்தினதும் விடுதலைக்காக தமதுயிரை வழங்கிய மாவீரர்களுக்கான நினைவேந்தல்களை முன்னெடுப்பது ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தினைச் சார்ந்தவர்கள் என்பதற்காகவே எம்மில் சிலர் அந்த நிகழ்வினை எதிர்க்க நினைப்பதும், இழிவாகப் பேசுவதும், மக்களுக்கு இவை தேவையற்றவை என்று சொல்வதும், மாவீரர்களுக்கான நினைவேந்தலினை இன்றிருக்கும் முன்னாள்ப் போராளிகள் என்னும் சிலரை மேற்கோள் காட்டி "தேவையற்றவை" என்று நிறுவ முயல்வதும் வேதனையே. 

இன்னும் நல்லாட்ட்சி அரசாங்கம் என நினைத்திருக்கும் உங்களை ஒன்றும் செய்ய இயலாது  என சிம்பிளா சொல்லலாம் ரகுநாதன் தற்போதய நிலை வேறு என்பதை புரிந்து கொள்ளும் வரைக்கும் நீங்கள்  அந்த நிலையில் தான் இருப்பீர்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, விசுகு said:

இங்கு அரசியல்  பேசவரவில்லை சகோ

கர்த்தால்  செய்யுங்கோ என்றும்  கேட்கவில்லை

செய்யக்கூடாது என்று ஆர்ப்பாட்டம்  செய்வது எதற்காக??

நீங்கள் குறிப்பிடும் தமிழ் அரசியல்வாதிகளை விட இது வடிகட்டிய சுயநலம்

இன்று அரசியல் சூதாட்டம் களைகட்டி இருக்கிறது மக்களை குழப்பும் நடவடைக்கையில் பலர் ஒன்றை செய்துவிட்டு வேறெங்கோ கமிசன் போல அரசியலில் இடம் தேட நினைக்கிறார்கள் 

கிழக்கில் கர்த்தால் நடந்ததும் உன்மை நாலு பேர் செய்திக்காகவும் அரசியலுக்காகவும் ஆர்ப்பாட்டம் நடத்தியதும் உண்மை 

21 hours ago, goshan_che said:

இதில் ஒரு லொஜிக் இருக்கிறது. வாழைச்சேனை மட்டத்தில் ஒரு சின்ன பகவதி இதை நடத்தியும் இருக்கலாம்.

அப்படித்தான் கேள்விப்பட்டன் அரசியலில் முன்நிற்க என்று சொன்னமாதிரி இருந்திச்சு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, satan said:

பிரதேச வாதம் இல்லை. சலுகைகளுக்கும்,  சுயநலத்திற்கும் சாய்பவர்கள். அதை மறைக்க கையாளும் சொல் அது. எதிரி நம்மை  பிரித்து லாபமடைய பாவிக்கும் ஆயுதங்களில் இதுவும் ஒன்று. அதையே பிரட்டி பாவித்து தம்மை மறைத்துக்கொள்கிறார்கள். எஜமானர்கள் என்ன செய்கிறார்கள்?  தர்மத்தை போதிக்க வேண்டியவர்கள், குடி  மக்களை இனபேதம் இன்றி  சமமாக நடத்த வேண்டியவர்கள் எங்கும் எதிலும் கக்குவது இனவாதம். நாங்களும் இந்நாட்டின் மூத்த குடிகளே, என்று தத்துவார்த்தமாகவிளக்குபவருக்கு, தாம் தமது ஆதாரத்தை காட்டி நிரூபிப்பதை விடுத்து, இனவாதி என்று மாற்றி சித்தரிக்கவில்லையா? அவர்களின் தொண்டர்களும், அடிமைகளும் அதைத்தானே பிரதிபலிப்பார்கள். இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சினால்,  அவர்கள் சொல்வது சரி என்றாகிவிடும். எஜமானரின் ஆயுதம் இனவாதம், அவர் தொண்டரின் வாதம் பிரதேசவாதம்.

நாங்கள் என்றும் பிரதேச வாதம் என சொல்லவில்லை அடிக்கடி இந்த சொல்லை பாவிப்பவர்களுக்கு தெரியும் யார் இந்த பிரதேச வாதிகள் என அளவானவர்கள் அப்படியே தூக்கி  போடலாம் தொப்பியை 
நீங்கள் அஞ்சாமல் இருக்கலாம் நாங்கள் இங்கு அஞ்சித்தான் வாழ வேண்டும்  அவர்கள் எஸ் டி எவ் பாதுக்காப்புடன் இருந்தும் அரசுடன் ஒட்டி இருந்தும் கதை சொல்லும் போது மட்டும் வேத வாக்கு என எண்ணிக்கொண்டு இருங்கள் 

நீங்கள் நம்பினால் நம்புங்கள் இங்கு கருத்து எழுதினால் எனக்கு கோடிக்கணக்கில் பணம் கிடைக்கிறது நம்புறீங்களா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/9/2020 at 03:08, தனிக்காட்டு ராஜா said:

ஓர் போராளிய சந்திச்சன் அதே கர்த்தால் நாளன்று எனக்கும் தேத்தண்ணி குடிக்க கடை இல்லை அதனால் அவரை சந்திக்க நேர்ந்தது உயிர் பிழச்சி இருக்கிறவனையும் வாழ விடமாட்டார்கள் போல் இருக்கிறது என்று சொன்னார்

5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஏன் ஓர் நாள் மட்டும் அறிவிக்க வேண்டும் தீர்வு அதாவது நினைவு நாளை அனுஸ்டிக்க தீர்வு வரும் வரை  அவர்கள்  உண்ணாவிரதம் இருந்திருக்க வேண்டும்

யாரும் யாரையும்  ஆயுதமுனையில் வற்புறுத்தி, பயமுறுத்தி ஹர்த்தாலுக்கு வாருங்கள் என்று  அழைக்கவில்லை. ஒரு நாளுக்கே உங்களிடம் முறையிட்டவர்கள், தீர்வு வரும்வரை உண்ணாவிரதம் இருந்தால் பிழைப்பு என்னாவது? திலீபனைபோல் எல்லோரும் உண்ணாவிரதம் இருந்து இறந்தால் அதற்கும் ஒரு விளக்கம் கொடுக்க இலகுவாக இருக்கும். அரசாங்கத்தின் சர்வாதிகாரப்போக்கை கண்டித்து தமது எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்கள். அவர்கள் எது செய்தாலும் வாயை மூடிக்கொண்டு தலை ஆட்டவேண்டும் என்று நினைக்கிறீர்களா?  

"அதிலும் காலையில் மூக்கு முட்ட சாப்பிட்டு விட்டு தான் சிலர் போயிருப்பார்கள்..."
 

சிலரின் அனுபவம் பேசுதோ????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/9/2020 at 19:12, ரஞ்சித் said:

ஆர் அந்தப் புரட்சியாளர்கள் அண்ணை?
 

வேற யார அந்த காலத்து தாடிக்கார அண்ணமார்,தோழர்மார் இப்ப புலம்பெயர்ந்து முதலாளித்துவ நாடுகளில் பெண்ஸ்கார் ஓடிக்கொண்டு  சோசலிசம் பேசுறவையள்.....அவையள் போற போக்கில் மாவோவின் அவதாரம் கோத்தா என்று சொன்னாலும் சொல்லுவினம் போல இருக்கு....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/10/2020 at 04:03, satan said:

யாரும் யாரையும்  ஆயுதமுனையில் வற்புறுத்தி, பயமுறுத்தி ஹர்த்தாலுக்கு வாருங்கள் என்று  அழைக்கவில்லை. ஒரு நாளுக்கே உங்களிடம் முறையிட்டவர்கள், தீர்வு வரும்வரை உண்ணாவிரதம் இருந்தால் பிழைப்பு என்னாவது? திலீபனைபோல் எல்லோரும் உண்ணாவிரதம் இருந்து இறந்தால் அதற்கும் ஒரு விளக்கம் கொடுக்க இலகுவாக இருக்கும். அரசாங்கத்தின் சர்வாதிகாரப்போக்கை கண்டித்து தமது எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்கள். அவர்கள் எது செய்தாலும் வாயை மூடிக்கொண்டு தலை ஆட்டவேண்டும் என்று நினைக்கிறீர்களா?  

"அதிலும் காலையில் மூக்கு முட்ட சாப்பிட்டு விட்டு தான் சிலர் போயிருப்பார்கள்..."
 

சிலரின் அனுபவம் பேசுதோ????

மக்கள் இப்படி சொல்லவில்லை மக்கள் பிரதிநிதி சொல்லிட்டார் ஐயா சுமந்து 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.