Jump to content

அம்பாறையில் ஹர்த்தாலுக்கு ஆதரவில்லை – பாதுகாப்பும் பலமாக இருந்தது!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுக்கும் அரசுக்கு எதிராக வட,கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் நிலையில், அம்பாறை மாவட்டத்தில் மாத்திரம் ஆதரவு வழங்காத மக்கள் தமது அன்றாட செயற்பாடுகள் வழமை போன்று முன்னெடுத்துள்ளனர்.

இதன்படி கல்முனை, சவளக்கடை, சம்மாந்துறை, மத்தியமுகாம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உணவகங்கள், புடவைக்கடைகள் மற்றும் வீதியோர வியாபாரங்கள் வழமை போன்று இயங்கியது.

இதன்போது பொதுமக்கள் வழமை போன்று பொருட் கொள்வனவில் ஈடுபட்டு வந்தததை அவதானிக்க முடிந்தது. இம்மாவட்டத்தின் பெரிய நீலாவணை, ஓந்தாச்சிமடம், காரைதீவு, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, நிந்தவூர், அட்டப்பளம், சம்மாந்துறை மாவடிப்பள்ளி, சவளக்கடை, மத்திய முகாம் ஆகிய பிரதேசங்களில் மக்களின் நடமாட்டம் வழமை போல் காணப்பட்டது.

அத்தோடு பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களுக்குச் சென்று பொலிஸாருடன் இணைந்து கடற்படையினரும், இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டனர்.

அத்துடன் கல்முனை பொது சந்தை உட்பட அதனை சூழவுள்ள பாதையோரங்களில் மரக்கறி வியாபாரம் நடைபெற்றது. சப்பர் மாக்கட்கள், பாடசாலைகள், பாமசிகள், வங்கிகள், எரிபொருள் நிலையங்கள் வழமை போன்று இயங்கின.

இதேவேளை சில இடங்களில் பொது மக்களின் வருகை இன்மையால் வியாபார நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் ஹர்த்தால் பிசுபிசுத்தது

வ.சக்தி, வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான், எம்.எம்.அஹமட் அனாம், கனகராசா சரவணன், ஆர்.ஜெயஸ்ரீராம், பாறுக் ஷிஹான், வி.சுகிர்தகுமார், எப்.முபாரக்

தமிழ்த் தேசிய கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து, வடக்கு, கிழக்கு முழுவதிலும் இன்று (28) ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு விடுத்திருந்த கோரிக்கைக்கமைய, கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பில் மாத்திரம், கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டு, ஒத்துழைப்பு வழங்கப்பட்டிருந்தது.

இருப்பினும், உள்ளுர் மற்றும் வெளியூர்களுக்கான போக்குவரத்துச்  சேவைகள் இடம்பெற்றன.

உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாகி திலீபனின் நினைவு தினத்தை அனுஸ்டிக்க அரசாங்கம் அனுமதி மறுத்தமையைக் கண்டித்து முன்னெடுக்கப்பட்ட இந்த ஹர்த்தால், கிழக்கின் அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் முழுமையாக முன்னெடுக்கப்படாத நிலைமையே காணப்பட்டது.

தமிழ் மக்களின் இனத்துவ அடையாளம், நில உரிமை, சமய மற்றும் கலாசார உரிமைகள் தீவிரமாக மறுக்கப்பட்டு வரும் நிலையில், மரணித்த எமது உறவுகளை நினைவுகூரல் உரிமையை வலியுறுத்தியும் இதன் மறுதலிப்பு தீவிரமாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுவதற்கு எதிராகவும், தமிழ் இனம் தனது ஆட்சேபனையை வெளிக்காட்டும் முகமாக, இந்த ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், இந்த அழைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கோறளைப்பற்று பிரதேச மக்களால், இன்று  வாழைச்சேனை பொலிஸ் நிலையச் சந்தியில் போராட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/கழககல-ஹரததல-பசபசததத/73-256050

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு காண்பிக்கப்படும் அனைத்து இடங்களும் முஸ்லிம் பிரதேசங்கள் ஆனால் உணர்வில் ஒன்றுதான்  அது மாவீரர்களுக்காக ஆனால் கூட்டமைப்பினரின் குரளி வித்தைகளுக்காக அல்ல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இங்கு காண்பிக்கப்படும் அனைத்து இடங்களும் முஸ்லிம் பிரதேசங்கள் ஆனால் உணர்வில் ஒன்றுதான்  அது மாவீரர்களுக்காக ஆனால் கூட்டமைப்பினரின் குரளி வித்தைகளுக்காக அல்ல

மகிழ்ச்சி 
இந்த விபச்சார ஊடங்கள் இதை முதலில் எழுதவேண்டும் 
யார் கடைபிடிக்கவில்லை என்பதை முதலில் எழுதவேண்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image

நினைவேந்தல் உரிமையை மறுதலிக்கும் சிறிலங்கா அரசின் ஜனநாயல விரோத போக்கை கண்டித்து இன்று நடக்கும் கடையடைப்பில் முஸ்லிம் சகோதர்களும் தோழமையுடன் இணைவு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Maruthankerny said:

Image

நினைவேந்தல் உரிமையை மறுதலிக்கும் சிறிலங்கா அரசின் ஜனநாயல விரோத போக்கை கண்டித்து இன்று நடக்கும் கடையடைப்பில் முஸ்லிம் சகோதர்களும் தோழமையுடன் இணைவு

அம்பாறையில் பல எல்லா முஸ்லீம்களும் கடை திறந்து இருந்தார்கள் அது போக ஆதரவு என பிரசுரம் வெளியிட்ட ஆசிரியர்கள் சங்கம் பெரும்பாலானோர் பாடசாலைக்கு வருகை தந்திருந்தார்கள் 

இ ந்தப்படம் மட்டுந்கரில் உள்ள பஜார் கடை தமிழர் பகுதியென்பதால் அடைத்துள்ளார்கள் மாறாக அவர்கள் இடமென்றால் கடைகள் திறந்துதான் இருக்கும் உதாரணம் காத்தான் குடி  ஏறாவூர் ஓட்டமாவடி அம்பாறை , முஸ்லிம் பிரதேசங்கள் அனைத்தும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/9/2020 at 17:20, தனிக்காட்டு ராஜா said:

இங்கு காண்பிக்கப்படும் அனைத்து இடங்களும் முஸ்லிம் பிரதேசங்கள் ஆனால் உணர்வில் ஒன்றுதான்  அது மாவீரர்களுக்காக ஆனால் கூட்டமைப்பினரின் குரளி வித்தைகளுக்காக அல்ல

உண்மைதான் தனி.

அம்பாறையில் கல்முனையும், அம்பாறையும்தான் நகரங்கள் என்பதும் அவை இரெண்டும் எமது கையில் இல்லை என்பதும் இவர்களுக்கு தெரியாதா?

திருகோணமலையில் கூட இதுதான் நிலைமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, goshan_che said:

உண்மைதான் தனி.

அம்பாறையில் கல்முனையும், அம்பாறையும்தான் நகரங்கள் என்பதும் அவை இரெண்டும் எமது கையில் இல்லை என்பதும் இவர்களுக்கு தெரியாதா?

திருகோணமலையில் கூட இதுதான் நிலைமை.

அதேதான் செய்திகளுக்காக எதையும் எழுதுவார்கள் இங்கிருந்து 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாராவது தினமுரசில் அற்புதன் எழுதிய இந்த தொடரை வாசிக்காமல் விட்டிருந்தால் இந.த தொடரை நிச்சயமாக பார்க்க வேண்டும்.ஏனெனில் புலிகளுக்கு நேர் எதிரான அணியிலிருந்த ஒருவரால்த் தான் இது எழுதப்பட்டது. நான் இந்த பத்திரிகையை தொடர்ந்து வாங்கிய போது பலரும் மறைமுகமாக ஈபிடிபிக்கு ஆதரவளிப்பதாக கூறினார்கள். நிறைய பேருக்கு ஆரம்பகாலத்தில் போராட்டத்துக்கு வித்துப் போட்டவர்களையும் வித்துடலானவர்களையும் இன்னமும் தெரியாமல் இருக்கிறார்கள்.
    • தென்னாபிரிக்காவில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக சென்ற அந்த பேருந்து செல்லும் வழியில் மாமட்லகலா என்ற இடத்தில் வேகத்தக் கட்டுப்படுத்த முடியாமல் அங்குள்ள பாலத்தில் மோதி தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு இருந்து 165 அடி பள்ளத்தில் விழுந்தது. அங்குள்ள பாறையில் விழுந்த வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் பேருந்தில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிலிருந்தவர்களில் நல்வாய்ப்பாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானதில், அதில் இருந்த பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிப்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரது உடல்கள் பேருந்தின் அடிப்புறத்தில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தென்னாபிரிக்காவை உலுக்கியுள்ள இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி சிரில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297513
    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
    • ஓம். உணர்வு இல்லவே இல்லை என சொல்லவில்லை.  ஆனால் சதவீதம் வீழ்ந்துள்ளது என நினைக்கிறேன். மிக தெளிவான பார்வை. ஊருக்கு போகா விடிலும் உங்களுக்கு யதார்த்தம் அழகாக புரிகிறது. ஓம். ஆனால் இது அரசியலால் இல்லை. நன்றி உணர்வு. பாசம். நினைவுகூரல். சில மாவீரர் குடும்பங்களிடம் உரையாடிய அனுபவத்தில் சொல்கிறேன்.
    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன். நான் போன சமயம் சுத்தமாக இருந்தது. சிலவேளை முதல் நாள் துப்பரவு செய்தனரோ தெரியவில்லை🤣. கொழும்பில் இது முன்பே வழமை. யாழில் இந்த போக்கு புதிது. நாம் இருக்கும் போது சேவை என இருந்த்ஃ துறை இப்போ சேர்விஸ் என ஆகி வருகிறது. ஆனால் நாடெங்கும் இதுவே நிலை என எழுதியுள்ளேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.