Jump to content

நானும் கொரோனாவும் ஒரு கொண்டாட்டமும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நானும் கொரோனாவும் ஒரு கொண்டாட்டமும்

மகளின் திருமணம்

2019 நவம்பரில் பதிவுத்திருமணம் நடைபெற்றது

2020 செப்ரெம்பரில் திருமணவிழா

என்ற நிலைப்பாட்டில் இருந்தபோது மார்ச்சில் கொரோனா வந்திட்டுது

என்ன செய்யலாம் என்ற யோசனையில் இருந்த போது கொரோனாவின் முதல் அலை குறைந்து வருவதால் ஆனி ஆடியில் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் வந்தது .

திருமண விழாக்கள் செய்யலாம் ஆனால் 150 விருந்தினருடன் என்ற கட்டுப்பாட்டுத் தளர்வில் எல்லாமே சடுதியாக நடந்தேறியது

இரண்டு வாரங்களில் எல்லா ஏற்பாடுகளும் செய்து மிகவும் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களுமாக 80 விருந்தாளிகளை அழைக்க இரு வீட்டாரும் முடிவு செய்து அழைப்பும் விடுத்தாயிற்று .

ஆவணி நடுவிற்குப்பின்னர் நல்ல நாள் இருக்கு எண்டு அய்யரும் சம்மதம் தந்திட்டார்

இருந்தாலும் இது கத்தோலிக்க முறைப்படியான திருமணம் . தேவாலயத்தில் குருவை மூன்று நாலு முறை பாத்து கதைத்து இரு வாரங்களில் அவரும் அந்தத் தேதிக்கு ஓகே பண்ணீட்டார்

 

கத்தொலிக்க திருமணத்தில் அய்யருக்கு என்ன வேலை என்று கேட்கக்கூடாது

எங்கள் சனம் எங்கை போனாலும் இந்தச் சாத்திர சம்பிரதாயத்தைக் கைவிடாயினம் பாருங்கோ

மாப்பிளைக்கும் பெண்ணிற்கும் திருமண நாளுக்கு முதல் நாள் வரை வேலை திடீரென்று லீவு கிடைக்கவில்லை .இது திருமணத்திற்கு முதல் நாட்கள் ஆரம்பமாகும் கூத்துக்களைக் கட்டுப்படுத்த உதவியது. மகிழ்ச்சி.

எழுத்து நடந்தபோது ஏற்பட்ட சில குளறுபடிகளை மனதில் வைத்து

இந்தமுறை எல்லாம் சரியாக நடக்கவேண்டும் என்பதே முன்நின்றது .

கொரோனா குறைவதால் அதைப்பற்றிப் பெரிதாக்க கணக்கில் எடுக்கவில்லை

இருந்தாலும் இந்த இரண்டாவது அலை என்ற ஒரு மனப்பீதி ஒரு மூலையில் இருந்தது.

மண்டபம் ஓகே சாப்பாடும் ஓகே

இங்கே கேட்டரிங் செய்பவர்கள் தமிழர்கள் அதிகமாக இருந்தாலும் ஒருவரே பிரபல்யம் ,

எழுத்துக்கும் அவரிடம் சாப்பாடு எடுத்தபடியால் பிரச்னை இருக்கவில்லை.

 

திருமணத்திற்கு நான்கு நாட்கள் இருக்கும்போது கொரோனா இரண்டாவது முறை தலையை நீட்ட ஆரம்பித்துவிட்டது

பழைய கட்டுப்பாடுகள் திரும்பி வரலாம் குடும்பக் கொண்டாட்டங்கள் தடை ..அது-- இது-- எனப் பலரும் பலவிதமாகக் கதைத்துக் கொண்டிருந்தார்கள் .

ஆனாலும் இங்கே அரசாங்க அறிவிப்புக்களை மட்டுமே கவனத்தில் எடுத்து நாட்களும் நகர்ந்தன.

கொரோனாவை காரணமாக்கி திருமணம் தடைப்படுவதை யாரும் விரும்பவில்லை அது சகுனப்பிழையாம் எண்ட கதைகளும் வந்து சென்றன .

 

நடப்பது எல்லாம் நல்லதே என்ற பாணியில் அதை அப்படியே விட்டுவிடாமல் முதல் நாள் ஒரு முடிவு எடுக்கப்பட்டது

தேவாலயத்தினுள் சகலரும் முகமூடி அணிய வேண்டும் இருக்கையைத்தவிர...

யாரும் இருந்த இடத்தைவிட்டு தெரிந்தவர்களைக் கண்டவுடன் இடமாற்றம் செய்யக்கூடாது...

ஒரே குடும்ப உறுப்பினர்கள் மாத்திரம் ஒரே இருக்கையில் அருகருகே இருக்க வேண்டும்...

மற்றவர்கள் ஒரு இருக்கையில் இடைவெளிவிட்டு இருவரோ மூவரோ மட்டுமே இருக்கவேண்டும்.....

தேவாலயத்திற்குள் அனுமதிக்கப்பட்ட புகைப்படப்பிடிப்பாளரும்

காணொளிப்பதிவாளரும் மட்டுமே தங்களுக்கேற்றவாறு இடம்மாறலாம்.....

யாரும் மணமக்களை நெருங்கிப் புகைப்படம் மற்றும் காணொளி பிடிக்க முடியாது....

தாலி கட்டி தேவாலய சம்பிரதாயங்கள் முடிந்தவுடன் முகமூடியுடன்

விரைவாக ஆனாலும் அமைதியாக இடைவெளிவிட்டு விருந்தினர்கள் வெளியேற வேண்டும்............

வெளியே கத்தோலிக்க முறைப்படி புறா வேறை பறக்கவிடவும் ஏற்பாடு செய்யப்பட்டது....

அப்போது கூட யாரும் நெருங்கி நிற்காமல் இருக்க வேண்டும்

விரைவாக அதை முடிக்க வேண்டும்.........

 

இப்படி சுகாதார சேவைகள் நிறுவனம் அறிவித்த ஒழுங்குமுறைகளைக்

கட்டாயம் கடைப்பிடிக்க வைக்கவேண்டும் அது தான் அந்தத்திட்டம்

வரும் விருந்தினர்களிடம் நேரடியாகக் கூறுவது ஒரு அசௌகரியமான நிலையை ஏற்படுத்தும் என்று யோசித்ததால் அது முடியவில்லை .

ங்கள் மக்கள் அதற்கு எத்தனை வியாக்கியானம் வைப்பார்கள் என்பது உங்களுக்கே தெரியும் .

அதைவிட எங்கள் மக்கள் கட்டுப்பாடுகளை மதிப்பவர்களாக இருந்தாலும்

அவர்கள் பலநேரங்களில் அவர்கள் இருக்கும் நிலைமையை மறந்துவிடுவார்கள் அடிக்கடி அவர்களுக்கு நினைவூட்டல் செய்யவேண்டும் அல்லது ஒரு பயத்தை உருவாக்கவேண்டும்

என்ன செய்யலாம் என்று யோசித்தபோது ஒரு பொறி தட்டியது .

பந்தடியில் அறிமுகமான ஒருவன் அந்த நகரத்திலேயே காவல்த்துறையில் அதிகாரியாக வேலை செய்கின்றான் .

அவனிடம் ஏதாவது உதவி கேட்கலாம் என யோசித்தபோது

குடும்ப விழாக்களில் அதிகாரிகளாக இருந்தாலும் உத்தியோகத்தைப் பாவிக்கமாட்டார்கள்.

அப்படிச் செய்வதும் பிழையானது அவருடைய வேலைக்கு ஆபத்து... என்ன செய்யலாம்

 

இரண்டாவது மகளிடம் இதைக்கூற அவர் சொன்னார் இது தானா பிரச்சனை

அதற்கு நான் பொறுப்பு நீங்கள் மற்ற அலுவல்களைப்பாருங்கள் என்றாள்

 

திருமண நாள்

தேவாலயத்திற்குச் சென்றபோது எல்லோருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது .

மணப்பெண்ணைத் தந்தை ஆலயத்திற்குள் கைப்பிடித்து அழைத்து வர

எல்லோரும் திரும்பி அந்த அழகை ரசிப்பது வழமை தானே

ஆனால் இங்கோ எல்லோரும் ஆளுக்கொரு கைத்தொலைபேசியுடன்

கைகளை நீட்டி அவர்கள் நடந்துவரும் பாதையை மறிக்கும் அளவிற்கு வந்துவிட்டார்கள்.

 

அப்போது எங்கிருந்து வந்தார்களோ தெரியவில்லை

ஒரு பத்து வெள்ளை இனப்பெண்கள் அத்தனைபேரும்

சாரணர்கள் அணிவது போன்ற ஒரே சீருடையில் இருந்தார்கள்

எல்லோரும் உங்கள் உங்கள் இருக்கையில் அமருங்கள்

இது சாதாரணமான திருமண விழா அல்ல

இக்கட்டான சூழ்நிலையில் நாம் இருக்கின்றோம்

எல்லோரும் விதிமுறைகளைக் கடைப்பிடியுங்கள்

என்ற கோஷங்கள் எழுதிய பதாதைகள் அவர்கள் கைகளில் உயர்ந்து தெரிந்தது

விருந்தினர்கள் அனைவரும் அப்போதுதான் வழமைக்குத் திரும்பினார்கள்

 

தனது உதைபந்தாட்டக்குழுவில் விளையாடும் பிள்ளைகளை அழைத்து வந்து ஒரே சீருடை அணிவித்து அவர்களை சுகாதார சேவைகளுக்கான கண்காணிப்பாளர்கள் என மகள் அறிவித்துவிட்டார்

அவர்களும் தேவாலயத்திலிருந்து மண்டபம் வரை எங்களைக் கவனித்துக் காத்து நின்றார்கள்

கண்ணியமான முறையில் சில இடங்களில் தளர்வுடனும் சில இடங்களில் மிக்க கண்டிப்பாகவும் அன்புடனும் அவர்கள் நடந்துகொண்டதும் மிக ஆச்சரியமாக இருந்தது

அந்த பத்து தேவதைகளுக்கும் நன்றிகள்

திருமணவிழா இனிதாக நிறைவேறியது

அப்படியும் இரு வாரங்கள் கடக்கும்வரை ஒரு திரிலாகத்தான் இருந்தது .

 

யாவும் கற்பனையல்ல😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய திருமண  வாழ்த்துகள் உங்கள் மூத்த மகளுக்கு .  உங்கள் இரெண்டாவது மகள் மிகு சமயோசிதம் உள்ளவர். திருமணம் என்றாலே எங்கே என்ன பிழை வருமோ  என பீதியாய்தான்  இருக்கும். உங்களுக்கு முடிந்த பின் 2 கிழமைக்கு  கொரோனா  பீதி வேறு, எக்ஸ்ட்ராவா🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.
எமது இன்றைய  இளம் சமுதாயம் பண்பாடு/கலாச்சாரம் தவறாமல் மாறுபட்டு யோசிக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 மணமக்களுக்கு பெற்றோருக்கும் வாழ்த்துக்கள் . இந்தக் கால இளசுகள் நல்ல சிமாட்  . அவர்களுக்கானதை (பணம்) கொடுத்து விட வேண்டும்   தாங்களே முன்னென்று நடத்தி விடுவார்கள்.  தலைமைத்துவம் , நடத்தும் திறன் நன்றாகவே இருக்கிறது.   அம்மா ,அப்பா நெருங்கிய உறவுகள் ஹை ..ஆக போய்  உட்க்கா ரலாம் . ஒரு சைடு சப்போர்ட் உம (பக்கத்துணை ) அவ்வப்போது கொடுத்தல் சரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய திருமண வாழ்த்துக்கள்.
அத்துடன் திருமணம் இனிதாக நடக்க உறுதுணையாக இருந்த வீராங்கனை மகளுக்கும் பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள் வாழ்த்து அட்டை அனுப்பு | Send Advance  Marriage Wishes Greeting Card

இனிய... திருமண வாழ்த்துக்கள். 💐
இக்கட்டான... சூழலில், திருமணத்தை இனிதே நடத்தி முடித்த.. 
இளைய மகளுக்கு... பாராட்டுக்கள்.  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மணமக்களுக்கு இனிய திருமண வாழ்த்துகள் வாத்தியார். ஏற்கனவே தீர்மானிக்கப்பட் ட திருமணங்கள் இங்கும் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியிலேயே நடந்தேறியிருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்💐💐💐

கொரோனா நெருக்கடிக்குள் கொண்டாட்டங்கள் வைப்பது மிகவும் கடினமானது. நம்மவர்கள் பலர் கொரோனா தம்மைத் தீண்டாது என்று நம்புகின்றார்கள் அல்லது விளக்கமற்றவர்களாக இருக்கின்றார்கள்.
 

ஒழுங்கைக் கடைப்பிடிக்க சமயோசிதமாகச் செயற்பட்ட இளைய மகளுக்குப் பாராட்டுக்கள்👏👏👏

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மணமக்களுக்கு இனிய திருமண வாழ்த்துகள் வாத்தியார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Voir d'autres Gifs de cette catégorie Vous pouvez retrouver tout ces Gifs  sur les sites(recommandé): Sur Google+: pa… | Dessin de roses, Gif fleurs,  Fleurs animées

இனிய திருமண நல் வாழ்த்துக்கள்.......!   💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய திருமண வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, goshan_che said:

இனிய திருமண  வாழ்த்துகள் உங்கள் மூத்த மகளுக்கு .  உங்கள் இரெண்டாவது மகள் மிகு சமயோசிதம் உள்ளவர். திருமணம் என்றாலே எங்கே என்ன பிழை வருமோ  என பீதியாய்தான்  இருக்கும். உங்களுக்கு முடிந்த பின் 2 கிழமைக்கு  கொரோனா  பீதி வேறு, எக்ஸ்ட்ராவா🤣

 நன்றி கோசன்

கொரோனா பீதியைவிட..........
எதோ ஒரு விதத்தில் தப்பி வந்தது மகிழ்சசி தான்  
நான் இங்கே எல்லோருக்கும் கூறுவது   குடும்பம் என்றாலும்
இடைவெளியைக் கடைப்பிடிக்கவேண்டும் என்பதுதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, வாத்தியார் said:

 நன்றி கோசன்

கொரோனா பீதியைவிட..........
எதோ ஒரு விதத்தில் தப்பி வந்தது மகிழ்சசி தான்  
நான் இங்கே எல்லோருக்கும் கூறுவது   குடும்பம் என்றாலும்
இடைவெளியைக் கடைப்பிடிக்கவேண்டும் என்பதுதான்

மிகவும் உண்மை. இதனால் சிலர் நம்மை கோவிக்கவும் கூடும். ஆனால் ஒன்றும் செய்ய முடியாது. உயிர் முக்கியம் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் இரு மகள்களுக்கும் வாழ்த்துக்கள். அந்த 10 பெண்களுக்கும் தான். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, வாத்தியார் said:

நானும் கொரோனாவும் ஒரு கொண்டாட்டமும்

மகளின் திருமணம்

2019 நவம்பரில் பதிவுத்திருமணம் நடைபெற்றது

2020 செப்ரெம்பரில் திருமணவிழா

என்ற நிலைப்பாட்டில் இருந்தபோது மார்ச்சில் கொரோனா வந்திட்டுது

என்ன செய்யலாம் என்ற யோசனையில் இருந்த போது கொரோனாவின் முதல் அலை குறைந்து வருவதால் ஆனி ஆடியில் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் வந்தது .

திருமண விழாக்கள் செய்யலாம் ஆனால் 150 விருந்தினருடன் என்ற கட்டுப்பாட்டுத் தளர்வில் எல்லாமே சடுதியாக நடந்தேறியது

இரண்டு வாரங்களில் எல்லா ஏற்பாடுகளும் செய்து மிகவும் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களுமாக 80 விருந்தாளிகளை அழைக்க இரு வீட்டாரும் முடிவு செய்து அழைப்பும் விடுத்தாயிற்று .

ஆவணி நடுவிற்குப்பின்னர் நல்ல நாள் இருக்கு எண்டு அய்யரும் சம்மதம் தந்திட்டார்

இருந்தாலும் இது கத்தோலிக்க முறைப்படியான திருமணம் . தேவாலயத்தில் குருவை மூன்று நாலு முறை பாத்து கதைத்து இரு வாரங்களில் அவரும் அந்தத் தேதிக்கு ஓகே பண்ணீட்டார்

 

கத்தொலிக்க திருமணத்தில் அய்யருக்கு என்ன வேலை என்று கேட்கக்கூடாது

எங்கள் சனம் எங்கை போனாலும் இந்தச் சாத்திர சம்பிரதாயத்தைக் கைவிடாயினம் பாருங்கோ

மாப்பிளைக்கும் பெண்ணிற்கும் திருமண நாளுக்கு முதல் நாள் வரை வேலை திடீரென்று லீவு கிடைக்கவில்லை .இது திருமணத்திற்கு முதல் நாட்கள் ஆரம்பமாகும் கூத்துக்களைக் கட்டுப்படுத்த உதவியது. மகிழ்ச்சி.

எழுத்து நடந்தபோது ஏற்பட்ட சில குளறுபடிகளை மனதில் வைத்து

இந்தமுறை எல்லாம் சரியாக நடக்கவேண்டும் என்பதே முன்நின்றது .

கொரோனா குறைவதால் அதைப்பற்றிப் பெரிதாக்க கணக்கில் எடுக்கவில்லை

இருந்தாலும் இந்த இரண்டாவது அலை என்ற ஒரு மனப்பீதி ஒரு மூலையில் இருந்தது.

மண்டபம் ஓகே சாப்பாடும் ஓகே

இங்கே கேட்டரிங் செய்பவர்கள் தமிழர்கள் அதிகமாக இருந்தாலும் ஒருவரே பிரபல்யம் ,

எழுத்துக்கும் அவரிடம் சாப்பாடு எடுத்தபடியால் பிரச்னை இருக்கவில்லை.

 

திருமணத்திற்கு நான்கு நாட்கள் இருக்கும்போது கொரோனா இரண்டாவது முறை தலையை நீட்ட ஆரம்பித்துவிட்டது

பழைய கட்டுப்பாடுகள் திரும்பி வரலாம் குடும்பக் கொண்டாட்டங்கள் தடை ..அது-- இது-- எனப் பலரும் பலவிதமாகக் கதைத்துக் கொண்டிருந்தார்கள் .

ஆனாலும் இங்கே அரசாங்க அறிவிப்புக்களை மட்டுமே கவனத்தில் எடுத்து நாட்களும் நகர்ந்தன.

கொரோனாவை காரணமாக்கி திருமணம் தடைப்படுவதை யாரும் விரும்பவில்லை அது சகுனப்பிழையாம் எண்ட கதைகளும் வந்து சென்றன .

 

நடப்பது எல்லாம் நல்லதே என்ற பாணியில் அதை அப்படியே விட்டுவிடாமல் முதல் நாள் ஒரு முடிவு எடுக்கப்பட்டது

தேவாலயத்தினுள் சகலரும் முகமூடி அணிய வேண்டும் இருக்கையைத்தவிர...

யாரும் இருந்த இடத்தைவிட்டு தெரிந்தவர்களைக் கண்டவுடன் இடமாற்றம் செய்யக்கூடாது...

ஒரே குடும்ப உறுப்பினர்கள் மாத்திரம் ஒரே இருக்கையில் அருகருகே இருக்க வேண்டும்...

மற்றவர்கள் ஒரு இருக்கையில் இடைவெளிவிட்டு இருவரோ மூவரோ மட்டுமே இருக்கவேண்டும்.....

தேவாலயத்திற்குள் அனுமதிக்கப்பட்ட புகைப்படப்பிடிப்பாளரும்

காணொளிப்பதிவாளரும் மட்டுமே தங்களுக்கேற்றவாறு இடம்மாறலாம்.....

யாரும் மணமக்களை நெருங்கிப் புகைப்படம் மற்றும் காணொளி பிடிக்க முடியாது....

தாலி கட்டி தேவாலய சம்பிரதாயங்கள் முடிந்தவுடன் முகமூடியுடன்

விரைவாக ஆனாலும் அமைதியாக இடைவெளிவிட்டு விருந்தினர்கள் வெளியேற வேண்டும்............

வெளியே கத்தோலிக்க முறைப்படி புறா வேறை பறக்கவிடவும் ஏற்பாடு செய்யப்பட்டது....

அப்போது கூட யாரும் நெருங்கி நிற்காமல் இருக்க வேண்டும்

விரைவாக அதை முடிக்க வேண்டும்.........

 

இப்படி சுகாதார சேவைகள் நிறுவனம் அறிவித்த ஒழுங்குமுறைகளைக்

கட்டாயம் கடைப்பிடிக்க வைக்கவேண்டும் அது தான் அந்தத்திட்டம்

வரும் விருந்தினர்களிடம் நேரடியாகக் கூறுவது ஒரு அசௌகரியமான நிலையை ஏற்படுத்தும் என்று யோசித்ததால் அது முடியவில்லை .

ங்கள் மக்கள் அதற்கு எத்தனை வியாக்கியானம் வைப்பார்கள் என்பது உங்களுக்கே தெரியும் .

அதைவிட எங்கள் மக்கள் கட்டுப்பாடுகளை மதிப்பவர்களாக இருந்தாலும்

அவர்கள் பலநேரங்களில் அவர்கள் இருக்கும் நிலைமையை மறந்துவிடுவார்கள் அடிக்கடி அவர்களுக்கு நினைவூட்டல் செய்யவேண்டும் அல்லது ஒரு பயத்தை உருவாக்கவேண்டும்

என்ன செய்யலாம் என்று யோசித்தபோது ஒரு பொறி தட்டியது .

பந்தடியில் அறிமுகமான ஒருவன் அந்த நகரத்திலேயே காவல்த்துறையில் அதிகாரியாக வேலை செய்கின்றான் .

அவனிடம் ஏதாவது உதவி கேட்கலாம் என யோசித்தபோது

குடும்ப விழாக்களில் அதிகாரிகளாக இருந்தாலும் உத்தியோகத்தைப் பாவிக்கமாட்டார்கள்.

அப்படிச் செய்வதும் பிழையானது அவருடைய வேலைக்கு ஆபத்து... என்ன செய்யலாம்

 

இரண்டாவது மகளிடம் இதைக்கூற அவர் சொன்னார் இது தானா பிரச்சனை

அதற்கு நான் பொறுப்பு நீங்கள் மற்ற அலுவல்களைப்பாருங்கள் என்றாள்

 

திருமண நாள்

தேவாலயத்திற்குச் சென்றபோது எல்லோருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது .

மணப்பெண்ணைத் தந்தை ஆலயத்திற்குள் கைப்பிடித்து அழைத்து வர

எல்லோரும் திரும்பி அந்த அழகை ரசிப்பது வழமை தானே

ஆனால் இங்கோ எல்லோரும் ஆளுக்கொரு கைத்தொலைபேசியுடன்

கைகளை நீட்டி அவர்கள் நடந்துவரும் பாதையை மறிக்கும் அளவிற்கு வந்துவிட்டார்கள்.

 

அப்போது எங்கிருந்து வந்தார்களோ தெரியவில்லை

ஒரு பத்து வெள்ளை இனப்பெண்கள் அத்தனைபேரும்

சாரணர்கள் அணிவது போன்ற ஒரே சீருடையில் இருந்தார்கள்

எல்லோரும் உங்கள் உங்கள் இருக்கையில் அமருங்கள்

இது சாதாரணமான திருமண விழா அல்ல

இக்கட்டான சூழ்நிலையில் நாம் இருக்கின்றோம்

எல்லோரும் விதிமுறைகளைக் கடைப்பிடியுங்கள்

என்ற கோஷங்கள் எழுதிய பதாதைகள் அவர்கள் கைகளில் உயர்ந்து தெரிந்தது

விருந்தினர்கள் அனைவரும் அப்போதுதான் வழமைக்குத் திரும்பினார்கள்

 

தனது உதைபந்தாட்டக்குழுவில் விளையாடும் பிள்ளைகளை அழைத்து வந்து ஒரே சீருடை அணிவித்து அவர்களை சுகாதார சேவைகளுக்கான கண்காணிப்பாளர்கள் என மகள் அறிவித்துவிட்டார்

அவர்களும் தேவாலயத்திலிருந்து மண்டபம் வரை எங்களைக் கவனித்துக் காத்து நின்றார்கள்

கண்ணியமான முறையில் சில இடங்களில் தளர்வுடனும் சில இடங்களில் மிக்க கண்டிப்பாகவும் அன்புடனும் அவர்கள் நடந்துகொண்டதும் மிக ஆச்சரியமாக இருந்தது

அந்த பத்து தேவதைகளுக்கும் நன்றிகள்

திருமணவிழா இனிதாக நிறைவேறியது

அப்படியும் இரு வாரங்கள் கடக்கும்வரை ஒரு திரிலாகத்தான் இருந்தது .

 

யாவும் கற்பனையல்ல😄

தம்பதியினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ...உங்கட மகள் டொக்டர் அல்லவா?....இங்கேயா திருமணம் நடந்தது?

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, குமாரசாமி said:

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.
எமது இன்றைய  இளம் சமுதாயம் பண்பாடு/கலாச்சாரம் தவறாமல் மாறுபட்டு யோசிக்கின்றார்கள்.

உண்மைதான் கு சா அண்ணை
மேலைத்தேச முறையில் இருந்தாலும் எமது இரண்டாவது தலைமுறை எப்போதும் எங்களை பின்தொடர்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது
 நன்றி அண்ணை 

23 hours ago, நிலாமதி said:

 மணமக்களுக்கு பெற்றோருக்கும் வாழ்த்துக்கள் . இந்தக் கால இளசுகள் நல்ல சிமாட்  . அவர்களுக்கானதை (பணம்) கொடுத்து விட வேண்டும்   தாங்களே முன்னென்று நடத்தி விடுவார்கள்.  தலைமைத்துவம் , நடத்தும் திறன் நன்றாகவே இருக்கிறது.   அம்மா ,அப்பா நெருங்கிய உறவுகள் ஹை ..ஆக போய்  உட்க்கா ரலாம் . ஒரு சைடு சப்போர்ட் உம (பக்கத்துணை ) அவ்வப்போது கொடுத்தல் சரி.

நன்றி அக்கா
இந்தத் திருமண நிகழ்வைத் தொகுத்து நிகழ்ச்சி நிரலைத் தயாரித்து எல்லோருடைய பாராட்டுக்களையும் பெற்றவர் எனது மூன்றாவது மகள் தான் 👌

22 hours ago, ஈழப்பிரியன் said:

இனிய திருமண வாழ்த்துக்கள்.
அத்துடன் திருமணம் இனிதாக நடக்க உறுதுணையாக இருந்த வீராங்கனை மகளுக்கும் பாராட்டுக்கள்.

மிக்க நன்றி அண்ணா
உங்களைப்போன்றவர்களின் ஆசி அவர்களின்   வாழ்க்கையை நன்னெறிப்படுத்தும்

Link to comment
Share on other sites

மணமக்களுக்கு இனிய திருமண நல் வாழ்த்துக்கள்!! வாழ்க பல்லாண்டு!!!

அத்துடன் இளைய மகளின் புத்திகூர்மைக்கும் பாராட்டுகள்!!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/9/2020 at 05:25, தமிழ் சிறி said:

மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள் வாழ்த்து அட்டை அனுப்பு | Send Advance  Marriage Wishes Greeting Card

இனிய... திருமண வாழ்த்துக்கள். 💐
இக்கட்டான... சூழலில், திருமணத்தை இனிதே நடத்தி முடித்த.. 
இளைய மகளுக்கு... பாராட்டுக்கள்.  👍

நன்றி தமிழ் சிறி அண்ணா
உங்களையும் பாஞ்ச் அண்ணாவையும்
திருமணத்திற்கு அழைப்பதாக ஒரு எண்ணம் இருந்தது.

இந்தக் கொரோனாவால் முடியவில்லை
தப்பாக நினைக்க வேண்டாம்
சந்தர்ப்பங்கள் இன்னும் வரும்
அப்போது எல்லோரும் சந்திக்கலாம்

On 29/9/2020 at 06:11, உடையார் said:

இனிய திருமண வாழ்த்துக்கள்

உங்கள் வாழ்த்திற்கு நன்றி உடையார்
நீங்கள்  எனக்கு நெருக்கமானவர் என்று  எனது உள்ளுணர்வு சொல்கின்றது
ஆனாலும் யாரென்று தெரியவில்லை
பிழையாகவும் இருக்கலாம்
தப்பாக நினைக்க வேண்டாம்
எதோ எழுதவேண்டும் என்று தோன்றியது
எழுதிவிட்டேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/9/2020 at 06:22, வல்வை சகாறா said:

மணமக்களுக்கு இனிய திருமண வாழ்த்துகள் வாத்தியார். ஏற்கனவே தீர்மானிக்கப்பட் ட திருமணங்கள் இங்கும் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியிலேயே நடந்தேறியிருக்கிறது.

உண்மைதான் சகோதரி
இல்லாத ராசி நட்சத்திரம் எல்லாம் பார்த்து நாள்  வைக்கும்
எம்மவர் இருக்கும் கொரோனாவைக் கணக்கில் எடுப்பது குறைவாக இருக்கின்றது
மிக்க நன்றி

On 29/9/2020 at 07:45, கிருபன் said:

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்💐💐💐

கொரோனா நெருக்கடிக்குள் கொண்டாட்டங்கள் வைப்பது மிகவும் கடினமானது. நம்மவர்கள் பலர் கொரோனா தம்மைத் தீண்டாது என்று நம்புகின்றார்கள் அல்லது விளக்கமற்றவர்களாக இருக்கின்றார்கள்.
 

ஒழுங்கைக் கடைப்பிடிக்க சமயோசிதமாகச் செயற்பட்ட இளைய மகளுக்குப் பாராட்டுக்கள்👏👏👏

 

இந்தப்பயம் இல்லாததும்    அதீத நம்பிக்கையும் தேவையில்லாத கொண்டாட்டமும் தான் அண்மையில் இங்கே நம்மவர்கள் மத்தியில்
கொரோனா தொற்று ஏற்படக்காரணமாக இருந்தது.

அதைவிட எங்கேயோ ஏற்பட்ட பரவலை வேறு எங்கோ ஏற்பட்டதாக ஒரு வதந்தியை உருவாக்கி ஒரு காணொளியும் உலாவுகின்றது .
இங்கே தான் நம்ம தமிழன் நிற்கின்றான்😄

On 29/9/2020 at 07:45, கிருபன் said:

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்💐💐💐

 

 

நன்றி கிருபன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/9/2020 at 09:47, சுவைப்பிரியன் said:

மணமக்களுக்கு இனிய திருமண வாழ்த்துகள் வாத்தியார்.


நன்றி  சுவைப்பிரியன்

On 29/9/2020 at 11:42, வாதவூரான் said:

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்

நன்றி வாதவூரான்

On 29/9/2020 at 12:13, suvy said:

Voir d'autres Gifs de cette catégorie Vous pouvez retrouver tout ces Gifs  sur les sites(recommandé): Sur Google+: pa… | Dessin de roses, Gif fleurs,  Fleurs animées

இனிய திருமண நல் வாழ்த்துக்கள்.......!   💐

நன்றி சுவி

On 29/9/2020 at 12:34, theeya said:

இனிய திருமண வாழ்த்துக்கள்!

 

On 29/9/2020 at 12:13, suvy said:

Voir d'autres Gifs de cette catégorie Vous pouvez retrouver tout ces Gifs  sur les sites(recommandé): Sur Google+: pa… | Dessin de roses, Gif fleurs,  Fleurs animées

இனிய திருமண நல் வாழ்த்துக்கள்.......!   💐

நன்றி சுவி அண்ணா🤭

On 29/9/2020 at 12:34, theeya said:

இனிய திருமண வாழ்த்துக்கள்!

நன்றி தீயா

On 29/9/2020 at 20:54, முதல்வன் said:

உங்கள் இரு மகள்களுக்கும் வாழ்த்துக்கள். அந்த 10 பெண்களுக்கும் தான். 🤣

அவர்களுக்கு ஒரு பரிசாக விளையாட்டிற்கான சீருடைகள்  வாங்கித்தருவதாக உறுதியளித்துள்ளேன்

மற்றும் அடுத்தமுறை   அவர்களை மைதானத்தில் நடுவராகச் சந்திக்கும் சந்தர்ப்பத்தில்  சிவப்பு அட்டையை வீட்டிலேயே வைத்துவிட்டுச் செல்லலாம் 😅 
நன்றி புதல்வன்
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து 
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.