Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

லெப். கேணல் நரேஸ்

 

 

Commander-Lieutenant-Colonel-Nares.jpg

தென்றலாக வீசிய புயல்:

கிளிநொச்சிக் கோட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் நரேஸ் / நாயகன்.

பூநகரிச் சமர்தான் புலிகள் இயக்கத்தின் பலத்தையும், அதன் போரிடும் சக்தியையும் எடுத்தியம்பியது. ஆனாலும், ‘புலிகளுக்கே உரித்தான சண்டை’ என்று, புலிகளின் போர்த் திறனைப் பறைசாற்றிய சண்டையென்று புலோப்பளைச் சமரைத்தான் சொல்ல வேண்டும்.

பட்டப்பகற் பொழுதில், கவசங்களற்ற வெட்டவெளிப் பிரதேசத்தில், மணலோடு மணலாகி மறைந்திருந்த புலிகள், கவசங்களுடனும் கனரக ஆயுதங்களுடனும் நகர்ந்த எதிரிகளுக்கு முன்னால், ஆக்ரோசமாக எழுந்த போது, உலகையே வியப்பிலாழ்த்திய அந்தச் சண்டை வெடித்தது.

டாங்கிகளும், பீரங்கிகளும், நவீன போர்க்கலங்களும் மனஉறுதிக்கு முன்னால் மண்டியிட்டன. சாவுக்கு அஞ்சாத துணிவுக்கு முன்னால், பகைவனின் படை துவம்சமாகிப் போனது. நுட்ப தந்திரோபாயமான போர் வியூகத்திற்குள் சிக்கி, சிங்களச் சேனை சிதைந்தழித்தது. டாங்கிகளும், கவச வண்டிகளும் நொருங்கின. ‘எக்கச்சக்கமான’ ஆயுதங்களை எதிரி பறிகொடுத்தான்.

வரலாறு காணாத படுதோல்வியைப் பரிசளித்து, புறப்பட்ட இடத்திற்கே பகைவனைத் திருப்பியனுப்பி வைத்தனர் புலிகள்.

யாழ். குடாநாட்டின் உயிருக்கு உயிர் கொடுத்த, யாழ்ப்பாண மக்களின் வாழ்வுக்கு வாழ்வளித்த அந்தச் சண்டைக் களத்தில்தான் வன்னி நிலத்தின் போர் மறவன், எங்கள் நரேஸ் வீழ்ந்தான்.

புலோப்பளையில் – பெருவெற்றியை பெற்றுத்தந்த, ஒரு சண்டை முனையை வழிநடாத்திக்கொண்டிருந்த போது நரேசுக்கு முன்னால் விழுந்த எதிரியின் பீரங்கிக் குண்டொன்று அந்த வீரத்தளபதியை எங்களமிடமிருந்து பிரித்துக் கொண்டது.

அவனோடு கூட இன்னும் 85 தோழர்கள், அந்த வெற்றிக்கு விறகானார்கள்.

அப்போது அவனுக்குப் பதினாறு வயது. புதுக்குடியிருப்பு மகாவித்தியாலயத்தில் படித்துக்கொண்டிருக்கும் போது பத்தாம் வகுப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு தாய்நாட்டிற்காக அவன் துப்பாக்கியைத் தூக்கினான்.

எட்டு வருடங்களுக்கு முன்னர்; ஒரு மாலைப்பொழுது மங்கிக்கொண்டிருந்தது. காலையிலேயே வந்துவிட்டதால், பொறுமையை அடக்க முடியாமல் அவன் காத்துக்கொண்டிருந்தான். “எப்படியாவது போய்விட வேண்டும்” கூட்டிச்செல்பவரைக் காணவேயில்லை.

புதுக்குடியிருப்பில் ஒதுக்குப்புறமாக இருக்கும் அந்த வீடுதான் புலிகள் இயக்கத்தின் தொடர்பு இடம்.

திடீரென படலையடியில் கேட்ட சத்தத்தில் “அவர்தானா……?” என ஆவலோடு எட்டிப்பார்த்தவன் அதிர்ந்து போனான். வந்து கொண்டிருந்தது இவனது அண்ணன். தன்னைக்கூட்டிச் செல்லத்தான் அவர் வருகின்றார் என்பதை ஊகிக்க அவனுக்கு நேரமெடுக்கவில்லை. இலேசாகப் பயம் பிடித்துக் கொண்டது. ஆனாலும் மனதுக்குள் பொருமினான். “தாங்களும் போகமாட்டினம், போற ஆட்களையும் விடமாட்டினம்” அப்படியே சொல்லித் திருப்பி அனுப்பி விட வேண்டும். நினைத்துக் கொண்டான். ஆனால், விசயம் தலைகரணமாக நடந்தபோது, அவனால் நம்பமுடியவில்லை. வந்த அண்ணனும் வீட்டின் ஒரு மூலையில் போய்க் குந்திக்கொண்டார். கண்கள் சந்தித்த போது, ஆளையாள் ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டார்கள். யாராவது ஒரு ஆள் வீட்டுக்குத் திரும்பியே ஆக வேண்டும் என்றது இயக்கம். “நீ சின்னப் பையன் தானே வயசு வரட்டும்.” என்று நரேசைத்தான் வீட்டுக்குப் போகச் சொன்னான் அண்ணன். தம்பி மறுத்து விட்டான்; “வீட்டுக்கு ஆள் வேணுமென்டால் நீயே போ” என்று அண்ணனுக்குச் சொன்னான். அண்ணன் மறுத்துவிட்டான். இருவருமே பிடிவாதமாக இருந்தார்கள். முடிவெடுக்க முடியாத சிக்கலில் முகாம் பொறுப்பாளர் மாட்டிக்கொண்டார்.

கடைசியில், வன்னியின் ‘ஜீவன்’ பயிற்சி முகாமின் முதலாவது அணியில், அண்ணனும் – தம்பியும் ஒன்றாகவேதான் பயிற்சி எடுத்து, முடித்து வெளியேறினார்கள்.

நரேசின் போராட்ட வாழ்வு இப்படித்தான் ஆரம்பித்தது.

துடிதுடிப்பாகத் துள்ளித்திரிந்த அந்தப் பொடியனை ஊரில் எல்லோரும் ‘குரு’ என்று தான் செல்லமாகக் கூப்பிடுவார்கள். 07.11.1969 அன்று, சிங்கராஜா – மேரிகமலீன் தம்பதிகளின் இரண்டாவது குழந்தையாக அவன் கண்திறந்தபோது, பெற்றவரும், பேரர்களும், சுற்றவரும் சேர்ந்து வைத்த ‘அருள்நாயகம்’ என்ற பெயர் பள்ளிக்கூட பதிவுக்கு மட்டும் செல்லுபடியானது. அந்தச் சின்னவன் குறும்புத்தனம் அதிகமானவனாக இருந்த போதும், பசுமையாகப் பழகும் பண்பும், இலகுவில் இரக்கப்பட்டுவிடும் சுபாவமும், கோபம் வந்தால்கூட எவரையும் அளவுக்கதிகமாகக் கோபித்துக் கொள்ளாத இயல்பும் அவனிடம் குடிகொண்டிருந்தன. கதைகளுக்கு அவ்வளவு இடம் கொடுக்காது, காரியங்களில் மட்டும் கண்ணான ஒரு குணாம்சமும், எதனையும் துருவித்துருவி ஆராய்ந்து விடயங்களை அறிய விழையும் ஆர்வமும் அவனிலிருந்த சிறப்பான தன்மைகள் எடுத்துக் கொண்ட எந்த முயற்சியையும், நிறைவெய்தும் வரை நிறுத்திக்கொள்ளாத உழைப்பாளி அவன். பிஞ்சுப் பருவத்திலேயே அறிவும், ஆற்றலும் அவனுக்குள் விதைபோட்டு வளரத் துவங்கியிருந்தன. அவனுக்குள் ஊறிப்புரையோடியிருந்த இத்தகைய உயர்ந்த தன்மைகள்தான் படிப்படியாகப் பரிணமித்து பிற்காலத்தில், சண்டைக் களங்களின் அதிபதியாகச் செயற்படக்கூடிய தகமைக்கும்; நிர்வாகப் பொறுப்பாளனாகப் பணியாற்றக்கூடிய தகுதிக்கும் அவனை வளர்த்துச் சென்றன என்று சொல்லலாம்.

இந்திய ஆக்கிரமிப்புப் பூதம் எங்கள் நிலமகள் மேனியில் கோரத் தாண்டவமாடிய ஆரம்ப நாட்களில் ஒன்று அது. புதுக்குடியிருப்பில், சிற்றூர்ப் பொறுப்பாளனாக, நரேஸ் அப்போது அரசியல் வேலை செய்துகொண்டிருந்தான். அடிக்கடி மேலால் பறந்து இலக்கற்றுச் சுட்டுக்கொண்டு திரிந்த இந்திய வல்லூறு ஒன்று, அன்றும் வந்து சுட்டுக்கொண்டுபோனது. இலக்கு வைத்துச் சுட்டதோ, இலக்கின்றித்தான் சுட்டுவிட்டுப் போனதோ தெரியவில்லை. ஆனால், அதன் ரவைச் சன்னங்கள், நரேசின் நாரியையும் உடைத்து, இடது காலையும் துளைத்துச் சென்றுவிட்டன. அருகிலேதான் வீடு. யாரோ ஓடிச்சென்று சொல்லிவிட பெற்றெடுத்த தாய் மனது ஓலமிட்டது. ஓடோடி வந்த அன்னை, ஊறிப்போகாமல் நிலத்தில் தேங்கிநின்ற குருதியில் விழுந்து, விம்மி வெடித்துக் கதறிக் கொண்டிருக்க, வைத்தியசாலைக் கட்டிலில் தனது காயத்துக்குக் கட்டுப்போடுவதை அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தான் மைந்தன்.

காயம் மாறி வந்தவன் கண்ணிவெடிக்கு இலக்குத்தேடினான். வைக்கக்கூடிய இடத்தையும் தேடினான். வசதியான இடம் அவனது சொந்த வீட்டிற்கு அருகில்தான் இருந்தது.

வேவு பார்த்து, நேரம் குறித்து, படை வண்டித் தொடரில் இத்தனையாவதுக்கு என இலக்கு வைத்து, கண்ணிவெடி புதைத்து, வயரிழுத்து, பற்றைக்குள் பதுங்கி அவன் அமத்தக் காத்திருந்தபோது காட்டிக் கொடுப்பவன் காரியம் பார்த்துவிட்டான். அந்த “நல்ல வேலையை” செய்தவன் நரேசின் வீட்டையும், குடும்பத்தையும் சேர்த்தே காட்டிக்கொடுத்தான்.

இந்தியர்கள் வளைத்துப் பாய்ந்தார்கள். இந்த விடுதலைப்புலி தப்பிவிட்டான். அம்மாவும் பிள்ளைகளும்கூடத் தப்பிவிட்டார்கள். ஆனால், அப்பா சிக்கிக்கொண்டு விட்டார்.

அவரது கையாலேயே தீ மூட்ட வைத்து, அனல் வாய்கள் அவர்களது குடிசையைத் தின்று தீர்த்துச் சாம்பாராக்கும் அக்கிரமத்தைக் கண்களாலும் காணவேண்டிய கொடுமைக்கு அப்பாவை உள்ளாக்கிய இந்தியர்கள், அவரை இழுத்துக் கொண்டு போனார்கள். அன்று கொண்டு போனவர்கள்தான் அதன் பிறகு அப்பா வரவில்லை; இன்றுவரை…. வரவேயில்லை.

அப்பா இனி வரவே மாட்டார் என்பது தெரிந்தபோது, அம்மா துவண்டு போனாள்.

அப்பாவைப் பறிகொடுத்த சோகம் பெரும் சுமையாய் அம்மாவை அழுத்திக் கொண்டது. அப்பா உயிரிழந்ததோடு, அம்மா உயிரிருந்தும் இல்லாதது போலாகிவிட்டார். கொஞ்ச காலத்திற்கு முன்னர்தான் ஆசைத்தங்கை கனிஸ்ராவை இயற்கையிடம் இழந்து போயிருந்தது அந்தக் குடும்பம். இது அடுத்த இடி. இந்த வேதனையின் தொடர் இத்தோடு முடிந்ததா? இல்லையே! அம்மாவின் ஆத்மாவைப் பிழிந்த கொடுந்துயர் நீளத்தானே செய்தது; இதன் பிறகு அவள் பாசத்தைக் கொட்டி வளர்த்த குழந்தைகள் இருவரை அம்மா அடுத்தடுத்து இழந்த துன்பம் நிகழ்ந்தது! லூர்து நாயகத்தையும், மரிஸ்ரலாவையும் கொடிய நோய்கள் பிரித்துக் கொண்டு போனபோது அம்மாவை நடைப்பிணமாக்கிய அந்தச் சோகத்தை! அம்மாவின் மனநிலைக்கு உருக்கொடுக்க வார்த்தைகள் கிடையா.

இந்தியப்படையின் இடைவிடாத நெருக்கடி; அம்மாவுக்கும் தம்பி தங்கைக்கும் ஆறுதல் சொல்லித் தேற்றிவிட்டு நரேஸ் தலைமறைவாகி விட்டான்.

இந்தியாவை எதிர்த்துப் புலிகள் நிகழ்த்திய ஆச்சரியமரமான வரலாற்றுப் போரில் அதன் பிறகு அவனது பணி அடர்ந்த காடுகளுக்குள் தொடர்ந்தது. “சூரியஒளி உட்புகாத வளங்களில் புலிகளைத் தேடுகிறோம்” என இந்தியர்கள் வர்ணித்த இடங்களிலெல்லாம், அவன் இந்தியர்களைத் தேடினான். எதிரிகளுக்காகக் காத்துக் கிடந்தான். அவர்களது அசைவுகளையெல்லாம் வேவு பார்த்தான். கேட்டுக் கேள்வியின்றிப் புகுந்தவர்களுக்குப் புலிகள் புதைகுழி தோண்டிய சண்டைகளில் அவனது துப்பாக்கி இலக்குத் தவறாமல் இயங்கியது.

குமுழமுனையில் ஒரு சண்டை இதே இடத்தில் வைத்து எங்கள் வீரர்கள் மீது இந்தியர்கள் பதுங்கியிருந்து தாக்கியதற்குப் பதிலடியாக அது நடாத்தப்பட்டது. அன்று, வீழ்ந்துபோன எங்கள் தோழன் ஒருவனின் தலையை இந்தியர்கள் அறுத்தெடுத்துப் போய்விட்டார்கள். ‘அவர்களுடைய பாணியில் அவர்களுக்குப் பதிலளிப்பேன்’ என்று சொல்லிச் சென்ற நரேஸ் சொன்னதைச் செய்தான்.

போர் புரிவதன் நவீன வழிமுறைகள் பற்றி, பிரபாகரனின் படைகளிடம் பாடம் கற்றுக்கொண்டு, இந்திய வல்லாதிக்கத்தின் பட்டாளங்கள் வெளியேறியபின் மீண்டும் போரோசை அதிர, ‘இரண்டாவது ஈழ யுத்தம்’ ஆரம்பித்தபோது, வன்னியின் சண்டைமுனைகளில் ஒரு முன்னணிச் சண்டைக்காரனாக நரேஸ் முழங்கத்துவங்கினான்.

இராணுவத்தினரைத் தாக்கி முகாம்களுக்குள் முடக்கிய புலிகள், படிப்படியாக முகாம்களைத் தாக்கி அழிக்கத் துவங்கிய போது, போர் புதிய பரிமாணத்தைப் பெற்றது.

கொக்காவில் படை முகாமை நிர்மூலமாக்கிய போது, ரவைகள், நரேசின் இடதுகாலில் துளையிட்டன. மாங்குளம் முகாமைத் தகர்த்தழித்த தாக்குதலின் போது, காயம் இடது கையில் பட்டது. முல்லைத்தீவு முகாம் முற்றுகைக்குள், முடக்கப்பட்டவர்களுக்கு முண்டு கொடுக்க, கடல்வழியாகத் தரையிறங்கி வந்தவர்களை எதிர்கொண்ட சண்டையில், இயந்திரத் துப்பாக்கியின் சன்னங்கள் இடுப்பை உடைத்துச் சென்றன.

இப்படியிருக்கையில் 1991 இன் முடிவுப்பகுதியில் அது ஒரு துயர நாள். படையினரின் பதுங்கித் தாக்குதல் ஒன்றில் எமது முல்லைத்தீவு மாவட்டச் சிறப்பத் தளபதி மேஜர் காந்தனை நாங்கள் இழந்துபோனோம். அதன் பிறகு, அவனின் இடத்திற்கு, ஆற்றலும், ஆளுமையும் கொண்ட நரேஸ், தளபதி பால்ராஜின் பரிந்துரையின் பேரால் நியமிக்கப்பட்டான்.

மக்களின் குடிசைக்குள்ளேதான் அந்த விடுதலைப்புலி குடியிருந்தான். அவர்களின் மேல் அளவுகடந்த பாசத்தைப் பொழிந்து நின்று, அவர்களது இன்பங்களிலும், துன்பங்களிலும் பங்காளியானான். முகாமில் கூடியிருக்கும் போது, “அந்த ஊர்ச்சனங்கள் சரியாகக் கஸ்டப்படுதுகள்” என எங்களுக்குள் கதைத்துக்கொள்வது அவனது காதில் விழுந்ததனால் அடுத்த நாள் கையிலுள்ளவற்றை எல்லாம் கொண்டுபோய் வைத்துக் கொண்டு அந்தக் கிராமத்தில் நரேஸ் நிற்பான். மக்களது குறைகளை நிவர்த்தி செய்ய, தன்னால் இயலுமானவரைக்கும் வழிசெய்து கொடுத்தான். மக்களை அணிதிரட்டித் துணைப்படையை உருவாக்கி, போர் அரங்குகளில் மெச்சத்தக்க விதமாகச் சேவையாற்ற வைத்தான். எதிரி நகரக்கூடும் என அரவம் தெரிந்த இடங்களிலெல்லாம், அந்தத் தளபதி ஊன் உறக்கமின்றிக் கிடந்தான். ஒவ்வொரு துப்பாக்கிக்கும் ‘நிலை’ காட்டினான். அல்லும் பகலும் ஓய்வின்றி நின்று, அரண்களுக்கு அமைவிடம் சொன்னான்.

அந்த நாட்களில் லெப்ரினன்ற் கேணல் நவநீதனின் உற்ற துணையோடு அவன் செய்து முடித்த பணிகள் ஏராளமானவை.

அன்றொருநாள், வற்றாப்பளை அம்மன் கோவிலில் கொடியேறி திருவிழா ஆரம்பித்திருந்தது. சிங்களப் படையிடம் அனுமதி வாங்கி, செஞ்சிலுவைச் சங்கத்திடம் அனுசரனை பெற்று, வன்னி நில மக்கள் கோலாகலமாகக் கொண்டாடிய அந்தப் பெருவிழா மீது, சிங்கள வெறியர்கள் பீரங்கிக் குண்டு பொழிந்து நாசப்படுத்திய கொடூரம் நடந்தது. செய்தியறிந்தபோது நரேஸ் கொதித்தான். அந்தத் துயரம் அவனது இதயத்தில் அம்புகளாய்த் தைத்தது. “பதிலடி கொடுத்தே தீருவேன்” அந்த மணித்துளியிலேயே சொல்லிவைத்தான். காயமடைந்தவர்களுக்கு உதவவென அவன் அவன் அனுப்பி வைத்த வாகனங்கள், கோவிலை நோக்கி விரைந்து கொண்டிருக்க, முல்லைத்தீவு முகாமின் கரையோரக் காவல் வியூகத்தை வேவுபார்க்க ஆட்களை ஒழுங்கு செய்துகொண்டிருந்தான் அந்தத் தளபதி.

இருள் விலகாத ஒரு அதிகாலையில் அந்தப் பதிலடித் தாக்குதல் நடந்தது. முன்னணி வீரர்களுள் ஒருவனாக நரேஸ் களத்திலிறங்கினான். பகைவனுக்கு அடி பிடரியில் விழுந்த, அதிசயமான தாக்குதல் அது. எப்படி அது சாத்தியமானது என்பதை, இன்றுவரை எதிரியால் ஊகிக்க முடியவில்லை. 25 சிங்களப் படையாட்களைக் கொன்று, ‘பிப்ரிகலிப’ரோடு ஆயுதங்களையும் எடுத்து வந்த அந்தத் தாக்குதலில் இழப்பேதுமில்லைப் புலிகளுக்கு. ‘புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் சிங்களப் படை அகலக்கால் வைத்தால், அது மிக ஆபத்தாகவே முடியும் என்பதையே இத்தாக்குதல் உணர்த்துகிறது” என்று சொன்னது பி.பி.சி.

முல்லைத்தீவு பழைய இராணுவ முகாமுக்கு அருகிலிருந்த மினி முகாமைத் தாக்கி, 9 படையினரின் உடல்களையும், ஆயுதங்களையும் எடுத்து வந்த சண்டை, கடற்கரையோர ரோந்து அணியொன்றினைத் தாக்கி 6 படையினரைக் கொன்று ஆயுதங்களைக் கைப்பற்றிய சண்டை. முல்லைத்தீவிலிருந்து அலம்பில் நோக்கி நகர்ந்த படையினரை எதிர்கொண்டு, ஓய்வு உறக்கமின்றி பதினொரு நாட்கள் மோதிய தொடர்ச் சண்டை என, அந்த வீரனின் சாதனை வரிசை நீளமானது.

இப்போது, கிளிநொச்சிக் கோட்டச் சிறப்புத் தளபதியாகப் பணி. எவருக்குத் தெரியும் இதுதான் நாங்கள் அவனோடு வாழப்போகும் கடைசி வருடம் என்று? அந்த மக்களின் உயர்வுக்காக, அந்தப் பிரதேசத்தின் மேம்பாட்டிற்காக அவனது நாட்கள் உரமாகின. ஏற்கெனவே பட்ட வெடிகளினால் இயற்கை அமைப்பு மாறிப் போன இடது காலுடன், ஆனையிறவுப் படைத்தளத்தின் தென்பகுதி அரண்களைச் சுற்றிச் சுற்றி நடந்து தாக்குதலுக்கு வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்த பொழுதுகளிலும் – சமூக மேம்பாட்டுப் பணிகளில் நேரமொதுக்கி ஈடுபட்டான். துவங்கப்பட்ட வேலைத்திட்டங்களுக்குத் தடங்கல்கள் வந்தபோது, நீக்கி நிவர்த்தி செய்தான். உதவிகேட்டு வந்தவர்கள் கைநீட்டி, நின்றபோது, கைகொடுத்தான். “செய்து தருவேன்” எனக் கொடுத்த வாக்குறுதிகளை, தலைமேல் வைத்து செய்து முடித்தான். ஒவ்வொரு கிராமத்துக்குள்ளும், அந்தத் தளபதி, மக்களின் குறை துடைக்க நடந்தான். பாடசாலைக்குச் செல்லாத பள்ளிச் சிறுவர்களுக்கு, படிப்பின் முக்கியத்துவத்தைப் பரிவோடு எடுத்துரைத்தான். குப்பையாகத் திரிந்த பையன்களைக் கூப்பிட்டு அணைத்து, துப்புரவைப்பற்றிச் சொல்லிக் கொடுத்தான். நகம்வெட்டி, தலைக்கு எண்ணை தேய்த்து, சுத்தமாய் இருக்கச் சொல்லி அனுப்பி வைத்தான்.

காஞ்சிபுரம் கிராமத்தில், இராணுவத்தின் மிதிவெடியில் காலை இழந்த ஒரு ஏழைச் சிறுவன், பள்ளிக்கூடம் செல்லாமல் முடங்கிக் கிடக்கும் நிலை அறிந்த போது, நரேஸ் துடித்துப் போனான். செயற்கைக்கால் செய்து அனுப்பி வைத்துவிட்டு, பொருத்திக்கொண்டு பையன் படிக்கப்போவதை, மகிழ்வோடு பார்த்துச் சிரித்து நின்றது அந்த உள்ளம்.

நாயகன்!

தமிழல்லாத பெயர்களை மாற்றச் சொன்ன போது, வன்னி மாநிலத்தின் அந்த நாயகனுக்கு, ஆசையோடு நாங்கள் இட்ட பெயர் அதுதான். எவ்வளவு அற்புதமாக அந்தப் பெயர் அவனுக்குப் பொருந்தியிருந்தது.

தாய்பிள்ளை ஆகி இருந்து எங்களை நல்வழிப்படுத்தினானே, தவறிழைக்கும் போதெல்லாம் சின்னக் குழந்தைக்குப்போல பாசத்தைக் கொட்டியல்வலா சொல்லித் திருத்தினான்… எங்கே போய்விட்டான்?

காலையிலிருந்து இருளும்வரை, உணவு உடையிலிருந்து உறங்கும் வரை எங்கள் ஒவ்வொரு அசைவுகளிலும் கண்ணுக்கு இமையாக இருந்தானே…. ஏன் இப்படித் திடீரென இல்லாமல் போனான்?

தலைவனின் சிந்தனைக்கெல்லாம் செயல் வடிவம் கொடுத்து வென்று, தளபதி தீபனின் தோளுக்குத் தோள் கொடுத்து நின்று, வன்னி மண்ணுக்குப் பெயரையும் புகழையும், பெருமையையும் சேர்த்துத் தந்தானே…. இனி வரவேமாட்டானா?

கறுத்த மேனி, கவர்ந்திழுக்கும் வசீகரம், வட்ட முகத்தில் பளிச்சிடும் சிரிப்பு. உருளும் விழிகளால் கதைபேசி, எங்கள் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட அந்த நாயகனை, இனி நாங்கள் பார்க்கவே முடியாதா?

அந்த நாள் 28.08.1993.

நம்ப முடியாமலல்லவா இருந்தது!………

இடியென மோதி, எங்கள் நெஞ்சங்களைப் பிளந்து சென்ற அந்தச் செய்தி பொய்யாகிப் போகாதா என்று நாங்கள் ஏங்கினோமே.

கிளாலிக்கு எதிரி படையெடுக்கப் போகிறானாம் என்றபோது, விழி சிவந்தல்லவா நின்றான்! “எங்கள் மக்கள் பாதை வழியே எதிரி வந்து தடுத்து நிற்பதா?” என்று பொங்கினானே. போருக்குப் புறப்படும்போது கூட, “வென்றுவருவேன்” என்று தானே சொல்லிவிட்டுச் சென்றான்!…….. வெற்றியைத் தந்துவிட்டு வராமலே பொய்விட்டானே……

யாழ். குடாநாட்டின் உயிரிற்கு உயிர் கொடுத்த, யாழ்ப்பாண மக்களின் வாழ்வுக்கு வாழ்வளித்த புலோப்பளைச் சமரில், வன்னி நிலத்தின் அந்தப் போர்த் தளபதி, எங்கள் நரேஸ் வீழ்ந்து போனான்!

எதிரி ஏவிவிட்ட பீரங்கிக் குண்டொன்று எங்களிடமிருந்து அவனைப் பிரித்துக் கொள்ளும் அந்தக் கணப்பொழுதை ‘ஒளிவீச்சு’ எங்களுக்குக் காட்டியது.

நெஞ்சு தவிக்க நாங்கள் பார்த்தோம். தென்றலாக வீசிய அந்தப் புயல் ஓய்ந்து போனது!

நன்றி: விடுதலைப்புலிகள் இதழ் (பங்குனி, 1994).

 

https://thesakkatru.com/commander-lieutenant-colonel-nares/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கம்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.