Jump to content

லெப். கேணல் விசு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

லெப். கேணல் விசு

 

 

Commander-Lieutenant-Colonel-Visu-Arumai.jpg

 

வாழ்வினைக் கரைத்து வீரம் விதைத்தவன்:

புலனாய்வுத்துறை தாக்குதல் படையணித் தளபதி
லெப். கேணல் விசு / அருமை
கனகராசா குலேந்திரன்
மல்லாகம், யாழ்ப்பாணம்.

1987 ஆம் ஆண்டு, இலங்கை – இந்திய ஒப்பந்தம்இ இந்தியப்படை வருகை என பல வரலாற்றுச் சம்பவங்களைக் கொண்ட ஆண்டு. இருப்பைப் பாதுகாத்தல், தலைமையைப் பாதுகாத்தல், கட்டமைப்பைப் பாதுகாத்தல், வளங்களைப் பாதுகாத்தல் அதேநேரம் எதிரியுடன் சண்டையிடல். சுருங்கக் கூறின் ‘கண்ணையும் பாதுகாக்க வேண்டும், இமையையும் பாதுகாக்க வேண்டும்’ அதேநேரம் பார்க்கவும் வேண்டும்.

‘கல்மடு’, ‘இராமநாதபுரம்’; கிளிநொச்சி மாவட்டத்தின் சிறு ஊர்கள் அவை. காட்டுப்புறங்களை ஒரு பகுதியாகவும், நீர்த்தேக்கங்கள், மக்கள் குடியிருப்புக்களை மறுபகுதியாகவும் உள்ளடக்கிய புதிய வரவு அற்ற அம்மக்களின் வாழ்க்கைக்கான ‘ஆதாரம்’ நிறைந்த அந்தக் கிராமங்கள். புலிகளின் வரவினால் புளங்காகிதம் அடைந்தன. புலிகளை “எங்கட பொடியள்” என ஒருபகுதி மக்களும், “பெரிசு” என இன்னொரு பகுதி மக்களும் உரிமையுடன் அழைத்தனர். விசுவுக்கு அந்த ஊர் மக்கள் வைத்த பெயர் ‘சின்ன விசு’.

புலிகளின் அசைவுகளை எப்படியோ இந்தியப் படையினர் மோப்பம் பிடித்துவிடுவர். இருப்பினும் இந்தியப் படையினருக்கு ‘தண்ணி காட்டிவிட்டு’ காட்டுக்குள் உள்ள தமது அணிகளுக்கு உணவுப் பொருட்களையும், வேறு தேவையான பொருட்களையும் எடுத்துச் செல்லும் ஒருசில போராளிகளுள் விசுவும் ஒருவன்.

ஒரு தொகுதிப் பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டுமெனில் இந்தியப்படையினருடன் பல சண்டைகள் பிடித்தே செல்ல வேண்டியிருக்கும். சிலவேளை பல சண்டைகளுக்குப் பிறகு அப்பொருட்களை இழக்க வேண்டியும் இருக்கும். அதற்கும் மேலாக பல உயிர்களை விலையாகக் கொடுக்கவும் நேரிடும்.

இப்படித்தான் ஒருநாள் நெத்தலியாற்றுக் கரையிலிருந்து அறுபதுபேர் கொண்ட பெண்கள் அணி ஒன்றிற்கு உணவுப் பொருட்கள் தீரும் நிலையில் உள்ளது என விசுவுக்குத் தகவல் வந்தது. இராமநாதபுரத்திலுள்ள ஆதரவாளர் ஒருவரின் மாட்டு வண்டியைப் பெற்றுக் கொண்டு ஜேம்சுடனும் இன்னொரு போராளியுடனும் சேர்ந்து உணவுப் பொருட்களை வண்டியில் ஏற்றிக் காட்டுவழியே நீண்ட தூரம் பயணித்து, பெண் போராளிகளின் தளத்தை அண்மித்த போது, இந்தியப் படையினர் அம்முகாமைத் தாக்க காட்டுக்குள் இறங்கிவிட்டனர் என அறிந்த பெண் போராளிகள் தமது தளத்தினை கைவிட்டுச் சென்றிருந்தனர். அத்தளத்தினுள் பிரவேசித்தவர்களுக்கு விடயம் விளங்கிவிட்டது. கிணற்றடிவரை சென்ற விசுவுக்கு, மரம் செடிகளின் முறிவு ஒலியும், குரங்குகளின் கத்தல் ஒலியும் நிகழப்போகின்ற அனர்த்தத்தை உணர்த்தி நின்றன. நிலைமையை விளங்கிக் கொண்டு சுதாகரித்துக் கொண்ட விசு “ஜேம்ஸ் வாற ஜூனியஸ் பொடியள் பசியோட வருவாங்கள். உடன் எடுத்துவந்த பொருட்களை இறக்கி சமைக்கத் தொடங்குங்கோ”. விசுவின் பேச்சிலிருந்த மறைபொருளைத் தெளிவாக விளங்கிக் கொண்ட ஜேம்ஸ் வண்டிலை நோக்கி நடக்கத் தொடங்கினான். பின் மூவரும் வண்டிலை வந்தடைந்தனர். இவர்களின் நகர்வினைக் கண்காணித்துக் கொண்டிருந்த இந்தியப் படையினர் வண்டிலுக்குப் பின்னால் பின்தொடரத் தொடங்கினர். இதனை மூவரும் நன்கறிந்தனர். பல துன்பங்களுக்கு மத்தியில் எடுத்து வந்த இவ் உணவுப் பொருட்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற விருப்பு அவர்களுக்கு; “எங்களைப் பின்தொடருறாங்கள் மச்சான், கடைசிவரைக்கும் இப்ப எங்களைச் சுடமாட்டாங்கள். எங்கட தளத்தை அறிவதுதான் அவங்களின்ரை நோக்கம்” விசு கூறியபோது, “வண்டிலை விட்டிட்டு இறங்கித் தப்பி ஓடுவம்” ஜேம்ஸ் கூறினான். மற்றப் போராளியும் அதற்கு ஆமோதிக்க வண்டில் நிறுத்தப்பட்டது. இந்தியப் படையினரின் துப்பாக்கிகள் ‘சடசட’க்கத் தொடங்கின. துப்பாக்கியால் சுட்டபடியே அவர்கள் மூவரும் இறங்கி ஒரு பக்கமாக ஓடினர். இடையில் விசு காட்டுக்குள் பாதை மாறிவிட்டான். ஜேம்சும் மற்றப்போராளியும் தொட்டியடியில் ஏறியபோது விசுவைக் காணவில்லை. இரண்டு நாட்களின் பின்னர் முல்லைத்தீவுக் காட்டுப்புறத்தில் உள்ள சிறு ஊர் ஒன்றில் தனியாக விசு ஏறினான். பின் அவர்கள் ஒன்று சேர்ந்தபோது “உங்களை நம்ப ஏலாது மச்சான். என்ர G – 3 துப்பாக்கியைத்தான் நம்பவேணும்” எனத் தனது துப்பாக்கியை முத்தமிட்டபடியே கூறினான் விசு. “சும்மா இரு மச்சான் மாடுகளை அவிட்டுவிட்டவங்கள் மாடு போற திசையை நோக்கிப் பின்னாலேயே போய் எங்களுக்கு மாடும் வண்டிலும் தந்தவங்களைப் பிடிச்சிட்டாங்களாம். இனி சனம் என்னத்தைத் தந்தாலும் மாடுகளை மட்டும் தராது” ஜேம்ஸ் கூறினான். “அதுக்கென்ன மணிகளுக்குப் பதிலாக இனி சயனைட்டைக் கட்டிவிடுவம்” விசு கூறியபோது அந்த இடம் சிரிப்பொலியால் நிறைந்திருந்தது.

இன்னும் ஒரு நாள், 1988ம் ஆண்டு வைகாசி மாதம் பழைய கண்டி வீதியினை இணைக்கும் கொக்காவில் சந்தியில் இந்தியப் படையினர் பதுங்கித் தாக்கியதில் புலிவீரன் ஒருவனுக்கு கால் முறிந்துவிட்டது. வீதிவழியே ‘அம்புலன்ஸ்’ வண்டியில் எடுத்துச் செல்ல முடியுமா என்ன? இல்லையே. காட்டுவழியேதான் பாதை முறிக்க வேண்டும். கால் முறிந்தவனுக்கு உடனடிச் சிகிச்சையளிப்பதாயின் வட்டக்கச்சி செல்ல வேண்டும். போகும் வழியில் இன்னொருவனுக்குக்கூட இன்னொரு இடத்தில் ‘கால் முறியலாம்’. எப்படியும் போய்ச் சேர்ந்தாலும் மருத்துவரை அழைத்து வருவதென்பது கடினமான காரியம். ஒவ்வொரு உள்ளூர் மருத்துவரையும் இந்தியப்படையினர் தமது கண்காணிப்பில் வைத்திருந்தனர்.

தோள் கொடுத்தவனை, சிலவேளை உயிர் தந்தவனை, தப்பியோட வழியிருந்தும் நண்பனுக்காகச் சண்டையிட்டவனை, உணவு தனக்குக் கிடைக்கும் வேளை நண்பனுக்காக ஒருபிடி சோற்றை காற்சட்டைப் பையினுள் வைத்து எடுத்து வருபவனை, அந்தப் புலிவீரனை விட்டுச் செல்ல முடியுமா என்ன? “மச்சான் இவனுடன் நான் நிக்கிறன். நீங்கள் போய் ‘டொக்ரர்’ யாரையாவது கூட்டிக்கொண்டு வாங்கோ” என விசு கூறியபோது அவனின் G – 3 துப்பாக்கியையும், அவனையும் நம்பி காயப்பட்ட போராளியை அவனுடன் விட்டுவிட்டுச் சக தோழர்கள் காட்டுவழியே நகர்ந்தனர்.

யாரோ பாதகன் எதிரிக்குக் காட்டிக் கொடுத்துவிட்டான். அன்று அந்த ஊர் முழுவதும் சுற்றி வளைக்கப்பட்டது… விசுவும், காயப்பட்ட போராளியும் சிறு பற்றையொன்றினுள் சருகுகளால் தம்மை உருமறைத்த படியே அன்று முழுவதும் கிடந்தனர். இந்தியப் படையினரின் ‘அந்த மணம்’ மூக்கை அரித்தது. ‘பீடிப்புகை’ உணவு, நீர் இன்றியிருந்த வயிற்றைக் குமட்டியது. “அண்ணை என்னாலை இனியும் வேதனையைத் தாங்கிக் கொண்டிருக்க ஏலாமல் கிடக்கு”. விசுவின் காதோரம் காயப்பட்ட போராளி கூறியபோது, விசு அவனின் ‘சயனைட்’ குப்பியை வேண்டித் தன்னுடன் வைத்துக் கொண்டான். “என்ர G -3 யில இருக்கிற ரவைகள் முடிஞ்சபிறகு நீ வேணுமெண்டா குப்பியைக் கடி”. விசு கூறினான்.

இந்தியப் படையின் கண்களில் அவர்கள் அகப்படாமல் போகவே தமது சுற்றிவளைப்பைக் கைவிட்டு இரவே இந்தியப் படையினர் தளம் திரும்பிவிட்டனர். இரவானதால் நிலமை அறிவதில் சிக்கல்கள் எழவே, காலையானதும் மருத்துவருடன் வந்த சகபோராளிகளுக்கு முழுநாளும் அவர்கள் பட்ட வேதனைகளை அவர்களின் கண்கள் சொல்லி நின்றன.

இக்காலப்பகுதியில் விசுவுடன் தளத்தில் நின்ற ஜேம்ஸ் அவர்கள் நினைவு கூறுகையில், “கடலில் நீந்தக் கற்றுக்கொண்டிருக்கும் போது ஒரு படகு எமக்கு அருகால் வந்துகொண்டிருக்குமானால் எமக்கு எவ்வளவு பாதுகாப்பு உணர்வு ஏற்படுமோ அப்படியோர் உணர்வு, விசு எம்முடன் கூடவந்தால் ஏற்படும்… நாங்கள் எல்லோரும் நல்லாச் சண்டை பிடிப்பம். ஆனால் எங்களுக்கு எப்ப வாய்க்குள் சயனைட் குப்பியை வைக்கலாம் என்ற எண்ணம்தான் அலைகளாய் மனதில் ஓடிக்கொண்டிருக்கும். ஆனால் விவேகத்துடனும், கூடுதலான சகிப்புத் தன்மையுடனும் தன்னையும் துப்பாக்கியையும் நம்பி, ‘வெல்வதற்காகவே சண்டையிடுகின்றோம்’ என்ற உணர்வுடன் சண்டையிட்டுக்கொண்டிருப்பார் விசு” என்றார் மெல்லிய சிரிப்புடன்.

அந்த ஊர்களில் புலிகள் அணியின் வரவு என்பதும், நடவடிக்கைகள் என்பவையும் புதியவர்கள் பலரை போராளிகளாகப் புலிகள் அமைப்பில் இணைத்தன. ஓர் இடத்தில் குறைந்தது ஐந்து நாட்கள் இருந்தாலே இந்தியப்படைகள் மோப்பம் பிடித்துவிடுவர்.

இருந்தும் முப்பது புதியவர்களுக்கு அடிப்படைப் பயிற்சிகள் கொடுத்துப் போராளிகளாக்கும் பொறுப்பு விசுவிடம் வழங்கப்பட்டது. ஆயுதப்பயிற்சி, அரசியல் கல்வி, அடிப்படைத்தேவைகள் எல்லாமே விசுவின் கைகளில்தான்.

புதியவர்களுக்கு பயிற்சி முடியும் காலம் நெருங்கிக் கொண்டிருந்தது. “காட்டுக்குள்ள மீண்டும் இந்தியப் படைகள் இறங்கப் போறாங்களாம்” விரைவாகச் செய்தி ஒன்று கிடைத்தது. “ஒரு தளத்தினை அமைப்பதென்பது அவ்வளவு இலகுவான பணியா? இல்லையே. கிணற்றில் இருந்து மண்சுமந்த நோவே முள்ளந்தண்டிலிருந்து இன்னமும் போகவில்லை. காட்டுக்குள் பொருட்களைச் சுமந்தெடுத்த சுமைகள் சுகமானதல்ல… எப்படியும் எதிரியின் நகர்வைத் தடுக்க வேண்டும். அல்லது எதிரி எம்மை அண்மிப்பதையாவது தெரிந்துகொள்ள வேண்டும்…” சிந்தித்த விசுவுக்கு மணலாற்றுக் காட்டிலிருந்து வந்த ‘ஜொனி’ மிதிவெடிகள் நினைவுக்குவர 1988 ஆவணி 26 அன்று புதிய போராளிகள் சிலரை அழைத்து, “மிதிவெடிகளை எடுத்துக் கொண்டு வாங்கோ” என்று கூறியவன் தன் புதிய போராளி அணியுடன் ‘எதிரி வரலாம்’ என எதிர்பார்த்த காட்டின் பாதைகளினூடே குறிப்பிட்ட தூரம்வரை நடந்திருந்தான். “உங்களுக்குப் பயிற்சியாகவும் இருக்கட்டும். அதேநேரம் எதிரிக்கு நீங்கள் வைக்கின்ற முதற் பொறியாகவும் இருக்கட்டும்” என புதிய போராளிகளிடம் கூறிய விசு, மிதிவெடி வைக்கப்பட்டுக் கொண்டிருந்தவனை அருகில் நின்று அவதானித்துக் கொண்டிருந்தான். மிதிவெடி ஒன்றினைப் புதைத்த சிவம் அதனை உருமறைத்துவிட்டு எழுந்தபோது மரவேர் ஒன்றில் கால் இடறுப்பட தான் மறைத்து வைத்த மிதிவெடியின் மேலேயே தவறுதலாக விழ… “நான் ஓர் ஆபத்தான நண்பன்” என்பதை மிதிவெடி சொல்லியது. மிதிவெடியின் மேல் சிவம் விழப்போகிறான் எனத் தெரிந்தும் சிவத்தைப் பிடிக்கப்போன விசுவின் வலக்கை முழங்கைக்குச் சற்றுக்கீழ் துண்டாடப்பட்டது. இடக்கையில் விரல்கள் அனைத்தும் சிதறின. உடல் முழுவதும் காயங்கள். சிவம் சாவுடன் போராடிக்கொண்டிருக்க காயமின்றித் தப்பிய ஒருவன் தளத்துக்கு ஓடிச்சென்று தோழர்களுடன் திரும்பி வந்துகொண்டிருந்த போது தன் தோழர்களைப் பார்த்து ‘கைகளிரண்டும் இல்லை மச்சான்’, கைகளிரண்டும் இல்லை மச்சான்’, என அரை மயக்கத்துடன் கூறத் தொடங்கினான். முகத்தில் வேதனையைக் காட்டிக் கொள்ளவில்லை. மனதில் வேதனைகள் இல்லாதிருக்குமா என்ன?

நாற்பது கிலோமீற்றர் தூரத்திலிருக்கும் வடமராட்சிக் கரையோர எல்லையை நோக்கி காயப்பட்ட தம் சகதோழர்களுடன் கல்மடுவிலிருந்து புலிகள் அணி ஒன்று புறப்பட்டது. மெல்லிய உடற்கட்டையுடைய விசுவைச் சுமந்தவாறே போராளி ஒருவன் வேகமாக முன்னே நடந்து கொண்டிருந்தான்.

‘தமிழ்நாடு’… அறுவைச் சிகிச்சைகள் முடிவடைந்து கைகளுக்குப் போடப்பட்டிருந்த கட்டுக்களை அவிழ்க்கும் நாளும் வந்தது.

விரல்கள் இல்லாத இடக்கையின் பெருவிரலுக்கும், மோதிர விரலுக்கும் இடையே காணப்படும் பகுதியை வெட்டி விரல்போன்ற ஒன்றை மருத்துவர் உருவாக்கியிருந்தார். “டொக்ரர் எனக்கொரு விரல் எப்படியும் உருவாக்கித்தர வேண்டும்” என அவன் மருத்துவரிடம் கேட்டது வீண் போகவில்லை.

1989 இன் நடுப்பகுதியில் அந்தப் பனை மரத்தின் ஓலைகள் மீண்டும் அவனுக்குத் தெரிந்தன. பிரிந்து சென்ற அனைத்தோடும் மீண்டும் சேரும் நாள் “நான் எவ்வளவோ நாட்டுக்காகச் செய்ய வேண்டிக்கிடக்கு” தனக்கென உருவாக்கிய விரலை மீண்டுமொரு தடவை பார்க்கிறான். அந்தப் பனை மரங்கள் முழுமையாகத் தெரிந்தன. கரைசேர்ந்த படகிலிருந்து “தூக்கவா விசு அண்ணை” போராளி ஒருவன் கேட்க “என்னால் முடியும் மச்சான்” என்று கூறிவிட்டுக் கரையேறினான். அந்தப் பனைமரமும், ஓயாத அந்தக் கடலின் அலைகளும் தங்களுடன் அவனையும் தொடர்படுத்திப் பார்த்திருக்கும்.

மீண்டும் வன்னியில் விசு 3.7 எனும் குறியீட்டுப் பெயருடைய தளத்தில் போராளி அணி ஒன்றிற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டான். இங்கு அவன் துப்பாக்கி எடுத்துக் குறிபார்த்து தன் இலக்கை வீழ்த்தியபோது மருத்துவருக்கு மீண்டுமொருமுறை நன்றி கூறியிருப்பான்.

1990 இல் போராட்டத்தின் பட்டறிவு புலிகளின் புலனாய்வுச் செயற்பாட்டை நிறுவனப்படுத்த வேண்டிய தேவையினை தலைவர் அவர்களுக்கு ஏற்படுத்தியபோது அதற்காகத் தேர்வு செய்யப்பட்ட அணியில் விசுவும் இருந்தான்.

1990 யூன், இரண்டாவது ஈழப்போர் தொடங்கியதும் யாழ் – வன்னிக்கான தரைத்தொடர்பை சிங்களப்படையினர் ஆனையிறவில் துண்டித்தனர். கொம்படிப் பாதையே வன்னிக்கான தொடர்பானபோது, புலனாய்வுத்துறைப் போராளிகளின் போக்குவரத்து வேலைகளினையும், பொருள் மாற்றும் வேலையினையும் விசுவே பொறுபெடுத்திருந்தான். இக்காலப்பகுதியில் புலனாய்வு வேலை ஒன்றினை பொறுப்பெடுக்கும்படி புலனாய்வுப் பொறுப்பாளர் அவர்கள் கேட்டபோது, “நான் சண்டைக்கெண்டாப் போறன் அம்மான். எனக்குப் புலனாய்வு வேலை சரிவருதில்லை”. விசுவின் இம்மனநிலை பற்றி புலனாய்வுப் பொறுப்பாளர் கூறியபோது, “விசுவுக்கு புலனாய்வு அறிவு என்பது இயற்கையாகவே இருந்தது. தன்நம்பிக்கை என்பது அதைவிடப் பெரிதாக இருந்தது. ஆனால், அவன் ஏன் புலனாய்வு வேலைகளில் அதிக நாட்டம் கொள்ளவில்லை? இது எனக்குப் புரியாத புதிராகவே இருக்கிறது. எமது விடுதலைப் போரை நாம் வெல்ல வேண்டும் என்றால் புலனாய்வுச் செயற்பாடு எவ்வளவு முக்கியமானது என்பதை அவன் உணர்ந்திருக்க வேண்டும். ஆனாலும் சண்டைக்கான துறையில் அவன் இருந்ததால் அவன் முடிவு சரியானதுதான்”. ஏன்றார்.

விசுவின் மனநிலையறிந்த பொறுப்பாளர் விசுவுக்கு சண்டைக் களத்துடன் தொடர்புடைய பணியைக் கொடுக்கத் தொடங்கினார்.

1993 நவம்பர் 11 இல் பூநகரி தரைப்படை மற்றும் கடற்படைக் கூட்டுத்தளங்கள் மீது ‘தவளைப் பாய்ச்சல்’ நடவடிக்கையைப் புலிகள் மேற்கொள்ளத் தீர்மானித்த போது வழங்கல் பணியை மேற்கொள்ளும் நடவடிக்கைப் பகுதி ஒன்றிற்கு விசு பொறுப்பாக நியமிக்கப்பட்டான்.

அன்று நீரேரியைக் கிழித்தவாறே அவனின் படகு விரைந்து வந்துகொண்டிருந்தது… திடீரென வானில் தோன்றிய எதிரியின் ‘புக்காரா’ வானூர்தி ஒன்று படகை நோக்கி வேகமாய்க் குத்திப் பதிந்தது. “டேய் அடிக்கப் போறான்ரா” எல்லோரும் நீருள் பாய்ந்து நீந்தத் தொடங்கினர். படகு நீருள் அமிழ்ந்து கொண்டிருந்தது. இல்லாத கைகளுடன் விசு கரையேறுவதற்காய் நம்பிக்கையுடன் போராடிக் கொண்டிருந்தான். அவனின் ‘கோல் கொமாண்டோ’ நீரினுள் அவனை விட்டுப் பிரிந்து கொண்டிருந்தது. கப்டன் வண்ணன் நீரோட்டத்துடன் போராடித் தோற்றுக் கொண்டிருந்தான். விசு வருவானா? என்பதைவிட ‘அட விசுவுக்கு நீந்தக் கைகள் இல்லையே’ என ஏங்கிய உள்ளங்களே அதிகம். “இதயம் வெடித்து மீன்களே அக்கடலேரியில் மிதந்து கொண்டிருந்த போதும், அந்திசாயும் நேரம் அவன் வந்து கரையேறினான்.

பின் இன்னுமோர் புதிய பணி அவனுக்குக் கொடுக்கப்பட்டது. “வணிகம்” ஐம்பது வீதம் பணம் இலாபம், ஐம்பது வீதம் புலனாய்வு இலாபம். அவன் தன் போராட்ட வாழ்வில் கண்டிராத புதிய பணி.

சாரம், அரைக்கைசேட், அரும்பிய தாடி அவனை வணிகனாகக் காட்டிக் கொண்டிருக்க, ஒட்டிய உடலும், வெட்டிய கைகளும் அவனைப் போராளியாகவே காட்டிக் கொண்டிருந்தன.

இக்காலப்பகுதியில் விசுவுடன் பணியாற்றிய பணியாளர் ஒருவர் நினைவு கூறுகையில், “இந்த மனிசனிட்ட ஒரு குணமிருக்கு, அவரின் தனிப்பட்ட தேவைகளுக்காக எந்த உதவியை நாம் செய்து கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ளமாட்டார். ஒருநாள் நான் மலசலகூடத்துக்கு தண்ணீர் அள்ளிவைத்தேன். அத்தண்ணீரைக் கீழே உற்றிய அவர் சற்றுக் கோபத்துடன், “உங்களுக்குத் தருகிற ஊதியத்துக்கு இயக்கத்துக்கு வேலை செய்யுங்கோ, எனக்குக் கைகள் இருக்கின்றன. நீங்கள்தான் கைகள் இல்லை என்பதை அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொண்டு இருக்கிறியள்” அதுக்குப்பிறகு நான் எந்தப் பணிகளும் செய்து கொடுக்கிறதில்லை. அப்படி ஏதாவது செய்யத் தொடங்கினாலே ‘பாணி’ ஒட்டப்போகுது என அறுக்கவும் தொடங்கிவிடுவார்” என்றார்.

இக்காலப்பகுதியில் கிளாலி நீரேரியில் தன் ஆயுதமான ‘கோல்கொமாண்டோ’வை இழந்த துயர் விசுவை வாட்டிக் கொண்டிருக்க போகுமிடங்கள் எல்லாம் கோல்கொமாண்டோ ஒன்றினைப் பொருத்தி எடுப்பதற்காக அதன் உதிரிப்பாகங்களைத் தேடிப்பெற்றுக் கொண்டான். “அண்ணை, உங்களுக்குக் கைகளும் இல்லை பிறகேன் ஆயுதம்” கேட்கக்கூடாத கேள்வியை போராளி ஒருவன் கேட்டுவிட்டான். “டேய் என்னதான் இருந்தாலும் சண்டையிட்டுத்தான் நாங்கள் நாட்டைப் பிடிக்க வேண்டும்… நாட்டைப் பிடித்த பிறகும் துவக்குத் தேவைப்படும்”. ‘வலிமையே வாழும்’ என்ற பொதுவிதி விசுவின் உணர்வுகளுடன் பிரதிபலித்தது.

யூன் 05 விளக்குவைத்தகுளம் நோக்கிய சிங்களப்படைகளின் ஜெயசிக்குறு தாக்குதலில் மேஜர் குட்டி வீரச்சாவு அடைய, பின்கள வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த விசுவுக்கு புலனாய்வுப் பொறுப்பாளரிடமிருந்து செய்தி வந்திருந்தது. “புலனாய்வுத்துறைப் படையணியைப் பொறுப்பெடுக்கவும்”.

அணிப் பொறுப்பினை எடுக்கும் போது விசுவின் முன்னே எதிரியின் பாரிய நகர்வினைத் தடுக்கும் பொறுப்புடன் இன்னுமொரு பாரிய பொறுப்புமிருந்தது.

புலனாய்வை மட்டுமே பட்டறிவாகக் கொண்ட போராளிகள். ‘துணிவு’ மட்டுமே அவர்களுக்கான தகுதியாய் இருந்தது. ஏனைய அணிகள் தொடர்ச்சியாக சண்டைக் களங்களில் நின்றமையால் கூடுதலான சண்டை அனுபவம் கொண்ட போராளிகளைக் கொண்டிருந்தன.

எனவே, தன் அணிக்கும் உறுதியான ஓர் அடித்தளத்தை இட்டு சண்டைக்களங்களில் காத்திரமான பங்கைக் கொடுக்கவேண்டிய மற்றுமோர் முக்கிய பொறுப்பினையும் அவன் நன்கு விளங்கியிருந்தான். சிறந்த படையணிக்கு அடித்தளமிடுவதற்கான ஒவ்வொரு சிறு விடயங்களையும் தலைவர் அவர்கள் கூறுவதுபோல் தன்னிலிருந்தே ஆரம்பித்தான்.

விசுவின் கைகளுக்கிடையேயும் ஒரு மண்வெட்டி இருக்கும். அந்த மண்வெட்டியும் தன்னால் முடிந்ததைச் செய்து கொண்டிருக்கும்.

ஒரு இரவு. வேவுக்காரன் பின்னால் வந்து அடிக்க எத்தனித்தபோது முதலில் தன் துப்பாக்கியை இயக்கிச் சண்டையிட்ட அந்தப் போராளி, “தம்பி உன்ர கோல்சரை கட்டிக்கொண்டு படு”. அடிக்கடி விசு கூறுவதை நினைவுபடுத்திக் கொள்கிறான்.

“அண்ணா, எங்களுக்கு ஒரு சண்டையும் கொழுவுது இல்லை”. காவலரணில் நிற்கும் போராளி ஒருவன் கேட்டான். “ஆமி என்ன வேவு பார்க்காமலேயே சண்டைக்கு வாறான்? நீங்கள் பலமாக இருந்தால் அவன் எப்படி வருவான்”. தனக்குள்ளும் அந்தக் கேள்வி இருப்பதை மறைத்தபடியே இயல்பாகக் கூறுவான். “டேய் விசுவண்ணைக்கு காய்ச்சல்” காவலரணுக்குப் பொறுப்பான போராளி கூறுவான். “தம்பி இரண்டு பேரையும் பின்னுக்கு அனுப்பிவிட்டு அதை டம்மிப் பொயின்ற் ஆக்கு”. “அதால ஆமி உடைச்சா?” “டேய், ஆமி உடச்சா நாங்கள் மூடி அடிப்பமடா” விசு கூறுவான். “அண்ணை இவன் மாறி எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்தில சேர்ந்திட்டான்”. ஒரு போராளி குத்தலாய்ச் சொல்ல, “மச்சான் சின்னச் சத்தம் கேட்டாலும் என்ன என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கோ” கூறியவாறே விசு மறுகாவலரணுக்குச் செல்வான்.

“கனகாலத்துக்குப்பிறகு ஊருக்குள்ள வந்திருக்கிறம்”. பின்னால் இருந்த அறிவிடம் விசு கூறினான். வீதியில் கண்ட தெரிந்தவர் அவனை மறித்து, “என்ன விசு கண்கள் எல்லாம் உள்ள போயிட்டுது” “எங்கட கண்கள் உள்ள போனதால்தான் ஆமியும் உள்ளவராமல் இருக்கிறான்” அதில் நிறைந்திருந்த ஆயிரம் கருத்துக்களை அந்தப் பொதுமகனால் அந்தக் கணத்தில் விளங்கிக்கொள்ள முடியவில்லை.

ஊருக்குள்ள வந்த அவன் அன்று மாலையே தன் வாழ்விடத்திற்குத் திரும்பி விடுவான். தன் பிள்ளைகளுக்கென கச்சான் கூட வாங்கிச் செல்ல அவன் கையில் பணம் இருக்காது. அன்று அந்தப் பழைய உந்துருளிக்குக் காற்றுப் போனது. ரியூப்புக்கு ஒட்டுப் போட பணம் வேண்டும் என்ன செய்வது? அவன் தோற்றத்தைப் பார்த்தே அவன் யார் என விளங்கிக்கொண்ட அந்த ஒட்டுவேலை ஐயா அவனிடம் பணம் கேட்கவுமில்லை.

“விசு அண்ணை வந்திட்டார்” தொலைத்தொடர்பு சாதனங்களினூடாக போராளிகள் கதைத்துக் கொள்வார்கள். அவர்களுக்கும் இனம்புரியாத தெம்பு ஏற்படும்.

1997 டிசம்பர் 03 மன்னகுளப் பகுதியினூடாக எதிரி நகர்வதற்கான சாத்தியத்தை அடுத்து விசுவின் அணிகள் மன்னகுளப் பகுதிக்கு மாற்றப்பட்டன.

வீதியின் வலது பக்கத்திலிருந்து குளத்தின் அணைக்கட்டை ஒரு பக்கம் பாதுகாப்பு வேலியாக்கி அதில் ஓர் அணியையும், வீதியின் இடப்பக்கமாக (கனகராயன்குளப் பகுதி) இன்னொரு அணியையும் விசு பிரித்து விட்டிருந்தான். வீதிக்குக் குறுக்காக மாலதி படையணி நிலை கொண்டிருந்தது. அடுத்த நாள் 1997 டிசம்பர் 04, சூரியன் மேலெழுந்து கொண்டிருந்த நேரம் மன்னகுள வீதியை ஊடறுத்த சிங்களத்தின் அதி சிறப்பு கொமாண்டோ அணியினர் வீதிக்கு அருகாக ஒரு கிலோமீற்றர்வரை முன்னேறி இருந்தனர். “எங்களுடைய முதற்கட்டப் பணி முடிவடைந்துவிட்டது. கண்டி வீதியில் ஏறப்போகின்றோம்” சிங்களத் தளபதி ஒருவன் தன் கட்டளைப் பீடத்திற்கு அறிவித்துக் கொண்டிருந்தான்.

எதிரி ஊடுருவிய பிரதேசத்தினுள் ஒரு காவலரண் மட்டும் பிடிபடாமல் இருந்தது. அக்காவலரணில் இருந்த மேஜர் நீலாம்பரி தனியாக நின்று எதிரியுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தாள். “சாண்டிலியன், நான் விசு கதைக்கிறன். உடைத்த காவலரண்களை மீண்டும் பிடித்து மற்ற அணிகளோட லிங் பண்ணுங்கோ…”

“ஒரு காவலரண் ஆமியிட்ட பிடிபடாமல் இருக்கு. அதில எங்கட பிள்ளை ஒன்று தனியாக நின்று சண்டை பிடித்துக் கொண்டிருக்கு. ரவையைப் பார்த்து அடியுங்கடா” முன்னே சென்று கொண்டிருந்த அணிகளுக்கு விசு கட்டளையிட்டுக் கொண்டிருந்தான்.

“மறுபுறத்தில், ஆப்பிழுத்த குரங்கின் கதையாய் வந்த இடம் சொல்லவே வழிதெரியாதிருந்த சிங்களத்தின் 53ஆவது படையணி கொமாண்டோக்களுக்கு அமெரிக்காவின் “கிரீன்பரே” படையணி கொடுத்த பயிற்சிகள் புலிகளின் தாக்குதலின் முன்னே கைகொடுக்கவில்லை. ஒரு கல் வீட்டின் உள்ளேயே சுற்றிச்சுற்றி ஓடிக்கொண்டிருந்த கொமாண்டோக்களுக்கு அந்தக் கல்வீடே கல்லறையானது. “உதவிக்கு படைகள் அனுப்புகிறோம்” என சிங்களத் தளபதிகளிடமிருந்து பதில் வந்ததே தவிர படைகள் வரவேயில்லை.

எங்கிருந்தோ வந்த குண்டின் சிதறல்கள் விசுவின் தோள்மூட்டிலும் காலிலும் காயத்தை ஏற்படுத்தின. உதவித் தளபதி அறிவின் குரல் வோக்கியில் கேட்கத் தொடங்கியது. உதவிக்கு வந்த சக அணிகளுடன் இணைந்து எதிரியால் பிடிக்கப்பட்ட காவலரண்கள் அனைத்தும் மீளவும் கைப்பற்றப்பட்டன. ஒன்பது மணிநேர சண்டையின் முடிவில் தனது நாநூறு அதிசிறப்புக் கொமாண்டோக்களை சிங்களத்தின் 53ஆவது படையணி இழந்திருந்தது. அந்த நாள் சிங்களத் தளபதி சிறிலால் வீரசூரியாவுக்கு மட்டுமல்ல, சிங்களத்தின் புகழ்பூத்த 53ஆவது படையணிக்கு என்றுமே மறக்கமுடியாத நாள்.

“அறிவண்ணை விளக்குவைத்தகுளத்தில் G.P.M.Gயை எதிரியிடம் பறிகொடுத்த அவமானத்தை எங்கட இரத்தத்தால் கழுவியிருக்கிறம்”. மருத்துவமனையில் வைத்து அறிவிடம் விசு இப்படித்தான் கூறினான்.

மீண்டும் படைவேலி வாழ்க்கை. மழையும் தன்வீச்சைக் கடுமையாக்கி இருந்தது. “பதுங்குகுழி வெட்டினா நனையத்தான் வேண்டும். அது வியர்வையாலா? மழையாலா? என்பதைக் காலநிலைதான் தீர்மானிக்க வேண்டும்” தெப்பலாய்த் தோய்ந்திருந்த போராளி ஒருவன் கூறிக்கொண்டிருந்தான். சின்ன வயதில் தலைக்கு பௌடர் போட்டு அதற்கும் ஈரம் காய்ந்திருக்காது என எண்ணி சாம்பிராணிப் புகை போடும் எங்கள் அம்மாக்களின் அந்தப் பிள்ளைகள் தலைதுடைக்க சிறு துண்டுகூட இல்லாமல் தாய்நாட்டிற்காக நனைந்து கொண்டிருந்தார்கள். விசுவும் காய்வான், நனைவான். தலை துடைக்க சிறு துண்டல்ல கைகள் இன்றியும் சிரமப்படுவான்.

தொடர்ச்சியாகக் கஞ்சி அல்லது கத்தரிக்காயும் சோறும் தான் உணவாக வந்து கொண்டிருக்கும். “மச்சான், எலும்பெல்லாம் தெரியுது. காயப்பட்டாலும் எக்ஸ்ரே எடுக்க செலவு மிச்சம்தான்” என்றவாறே, “ஏதாவது அயிற்றம் போடுவம்” விசு கூறுவான். ஏதாவது மிருகங்களை வேட்டையாடுவதற்காக இருவர் புறப்படுவார்கள். சிலநேரம் மான் வரும் சிலநேரம் “அண்ணை, சுட்டம் ஓடிற்றுது” என்ற பதில் வரும்.

“டேய் அது மானடா, அதுக்கு நாலுகாலடா, சுட்டுப் படாட்டா அது ஓடும் தானடா”. எங்கும் சிரிப்பொலி எழும்.

கொம்பனி மேலாளர் என்ற நிலையிலிருந்து மாங்குளப் பகுதிக்கான முழுமையான பொறுப்பாளராகக் கட்டளைப் பீடத்தினால் அவன் நியமிக்கப்பட்டான்.

ஒருசில மறிப்பு வேலியை மட்டும் பாதுகாக்கக் கட்டளையிட்டுக் கொண்டிருந்தவனுக்கு பல கிலோ மீற்றர்கள் மறிப்பு வேலியை எதிரி உடைக்காமல் பாதுகாக்கக் கட்டளையிட வேண்டிய முக்கிய பொறுப்பு…… அவன் ஒரு பொதுவான பொறுப்பாளனாக மாறியிருந்தான்.

1998 யூன் 05, அன்றிரவு ‘எல்’ வடிவில் ஒலுமடுப் பக்கமாகத் திரும்பும் புலனாய்வுத்துறைப் படையணி பாதுகாத்த மறிப்பு வேலியில் அமைக்கப்பட்டிருந்த போலிக் காவலரணின் உள்ளே (டம்மிப் பொயின்ற்) எதிரிப்படையின் வேவுகாரர் வந்து சென்ற தடயங்கள் தெரிந்தன. விடயம் உடனடியாக விசுவுக்கு தெரியப்படுத்தப்பட்டது. “கவனமாக இருங்கோ, அதுக்குள்ளால எப்படியும் நுழையப் பார்ப்பான்”

1998 யூன் 06; பட்டப்பகல் பொழுதில்… அலட்சியமாக இருக்கும் அந்த ஒரு நிமிடமே எதிரி உன்னைத் தேடிவரும் நேரமாக இருக்கலாம். தலைவர் அவர்கள் கூறியதை பட்டறிவில் அன்று புரிந்துகொண்டார்கள். வளைவாகச் சென்ற நகர்வு அகழிக்கு மையத்தில் அந்தப் போலிக் காவலரண் அமைந்திருந்தது. எதிரிக்கு வாய்ப்பாக போய்விட்டது.

குறிப்பிட்ட தூரம் வரை சென்று வளைவுப் பகுதியில் நின்று துப்பாக்கியை நீட்டினால் எதிரியின் துப்பாக்கி சடசடக்கத் தொடங்கிவிடும். எதிரி கடுமையாக நின்று போரிட்டுக் கொண்டிருந்தான். அறிவுக்கு விசுவிடம் இருந்து கட்டளைகள் வந்து கொண்டிருந்தன. களநிலைமை போராளிகளுக்குச் சாதகமாக மாறியது. பகல் பொழுதில் புலிகளின் துப்பாக்கிக் குறியில் இருந்து தப்பியோடுவதே எதிரிக்குக் கடினமான பணியாக இருந்தது.

ஜெயசிக்குறு எதிர்ச்சமர் வரலாற்றில் அந்த முப்பது நிமிடச் சண்டையும் முக்கிய இடத்தைப் பெற்றது.

ஜெயசிக்குறுப் படைகள் 1998 பெப்ரவரி 04க்குள் கண்டிவீதியைப் பிடித்து யாழ்ப்பாணத்தில் உள்ள சிங்களப் படைகளுக்கான விநியோகத்தை ஏற்படுத்திவிடுவர் என்ற பதில் பாதுகாப்பு அமைச்சரின் காலக்கெடுவை ஏழு மாதங்கள் கடந்திருந்தன. மாங்குள நகரினைக்கூட கைப்பற்ற முடியாமல் சிங்களப் படைகள் திணறிக் கொண்டிருந்தன.

சிங்களப் படைகள் போய்ச்சேர வேண்டிய கிளிநொச்சி நகரினை மீண்டும் கைப்பற்ற நாள் குறித்தபோது, அதற்கான பயிற்சிகளில் விசுவின் அணியும் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. கிளிநொச்சிப் படைத்தளம் ஏறக்குறைய 20 கிலோமீற்றர் சுற்றுவட்டத்தினைக் கொண்டிருந்தது. கண்டி வீதியைத் தன்னகத்தே உள்ளடக்கி முப்பது மீற்றருக்கு ஒரு காவலரண், நகர்வு அகழிகள், முட்கம்பி வேலிகள், பதுங்கு குழிகள் எனப் பதினாறுக்கும் மேற்பட்ட மினிமுகாம்களையும் தன்னகத்தே கொண்டு சிங்களத்தின் புகழ்பூத்த 54அவது படையணியின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த பெரும் படைத்தளமாக அது விளங்கியது.

இந்தப் படைத்தளத்தை அழிக்க வேண்டுமாயின் படைத்தளத்தின் விநியோக வழியை அடைக்க வேண்டும். விநியோக வழியை அடைக்க வேண்டுமாயின் பரந்தன் பகுதியில் கண்டி வீதியைத் துண்டாட வேண்டும்.

கண்டி வீதியைத் துண்டாடும் பணியை பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் தலைமையிலான அணிகள் பொறுப்பெடுத்திருந்தன. அவரின் அணிகளைக் கண்டி வீதிக்கு அனுப்ப பாதை உடைத்துக் கொடுக்க வேண்டும். பாதை உடைத்தெடுத்து அகட்டிக் கொடுக்கும் பணி விசு தலைமையிலான புலனாய்வுத்துறைப் படையணிக்கு வழங்கப்பட்டிருந்தது.

‘ஓயாத அலைகள் – 02’ 1998 செப்ரெம்பர் 27, அதிகாலை 1.20, டோபிடோ வெடிக்க, முட்கம்பி வேலி துண்டாடப்படுகிறது. முட்கம்பி வேலிகளை அகற்றி உள்ளே புகுந்த அணிகளில் ஒரு அணி விசு தலைமையில் வலப்பக்கமாகவும் (டிப்போ வீதிப்பக்கம்) இன்னுமோர் அணி அறிவு தலைமையில் இடப்பக்கமாகவும் (பரந்தன் பகுதி) பிரிந்து சென்று பத்தே நிமிடங்களில் தடைகள் உடைக்கப்பட்டு பின் இடம் வலமாக ஒரு கிலோமீற்றர் தூரமான படைவேலிகள் உடைக்கப்பட்டுப் பாதை கொடுக்கப்பட கண்டி வீதியைத் துண்டாடும் அணி தனது வேலையைச் சரிவரச் செய்தது.

நாலு திசைகளிலிருந்தும் புலி அணிகளின் பாச்சலாலும், எறிகணை வீச்சாலும் படைத்தளம் சிதைந்து கொண்டிருந்தது. வெட்டையான இடங்களினூடாக முன்னேறிய விசுவின் அணி உருத்திரபுர வீதியின் அருகே இருந்த அந்த மாடிவீட்டின் பக்கத்து காவலரணையும் கைப்பற்றி இருந்தது.

நேரம் பகல் 1.30 மணி. முதல் நாள் இரவு முழுவதும் விழித்திருந்து சண்டையிட்டகளைப்பு ஒவ்வொரு போராளியின் முகத்திலும் தெரிந்தது. விசு காவலரண் ஒன்றிற்குள் இருந்தான். எதிரியின் துப்பாக்கி ரவைகள் காவலரணில் பட்டுத் தெறித்துக் கொண்டிருந்தன. காவலரணின் ஓட்டையினூடே, உள்ளே ரவை ஒன்று பட்டுத் தெறித்து விசுவின் மார்பினைத் துளைத்து நின்றது.

அந்த நிமிடம் நடக்கப்போவதை விசு உணர்ந்தான். தன் கோல்கொமாண்டோ துப்பாக்கியை அருகில் நின்ற போராளியிடம் கொடுத்தான். “தம்பி பிடிச்ச இடங்கள திருப்பி அவன் பிடிக்க விடாதீங்கோ, நிலைமையை அறிவுக்குத் தெரியப்படுத்துங்கோ” அவன் கூறிக்கொண்டிருந்த போதே மெல்லமெல்ல அவன் உடல் இயக்கம் அந்தப் படைத்தள அழிப்பின் வெற்றிச் செய்தியை கேட்காமலேயே நின்று விட்டது.

என்ன திடீர் முடிவு என நினைக்கிறீர்களா? என்ன செய்வது, அவன் வாழ்விலும் தொடரிசைக் குறிக்குப் பதிலாய் முற்றுப்புள்ளி விழுந்துவிட்டது.

விளக்குவைத்த குளத்தில் அணியைப் பொறுப்பெடுத்த போது தன் முன்னே இருந்த இரண்டு பொறுப்புக்களையும் செய்துமுடித்த நிறைவு அவன் முகத்தில் தெரிந்தது.

பதினைந்து வருடங்கள் விடுதலைக்காக உழைத்த அந்தத் தீக்குச்சி வெளிச்சத்தை ஏற்றிவிட்டு மறைந்துவிட்டது. அவன் பெயரால் அவன் போன்றவர்களுக்கு புலனாய்வுத்துறையில் ஓர் அறிவுக்கூடம் எழுந்து நிற்கின்றது. வன்னி மண்ணில் ஆலங்குளம் துயிலுமில்லம் பிள்ளையென அவனைச் சுமந்து நிற்கின்றது. உங்கள் சுவாசக் காற்றையே இனிவரும் சந்ததியும் சுவாசிக்கப் போவதால் கால நதியில் உங்கள் வரலாறே தமிழன் வரலாறாய் என்றும் நிலைக்கும்.

“தோழனே சாவுக்குள் நின்று
உழைப்பவர்களுக்கு சாவின் பின்னும்
நிச்சயமாவது இலக்கின்
வெற்றி மட்டுமே”.

நினைவுப்பகிர்வு – சி.மாதுளா
விடுதலைப்புலிகள் இதழ் (கார்த்திகை, 2002).

 

https://thesakkatru.com/commander-lieutenant-colonel-visu-arumai/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கம்.

Link to comment
Share on other sites

  • 11 months later...


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.