Jump to content

காலநிலை மாற்றம் - 2050


Recommended Posts

காலநிலை மாற்றம் - 2050

ஜனகன் முத்துக்குமார்

ஐக்கிய இராச்சியத்தின் தலைநகர் இலண்டனைத் தளமாகக் கொண்ட பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம், நாடுகளையும் பிராந்தியங்களையும் அச்சுறுத்தக்கூடியதும் உலகளவில் சமூக-பொருளாதார ஸ்திரத்தன்மையை பாதிக்கக்கூடிய சுற்றுச்சூழல் ஆபத்துகள் பற்றிய ஒரு ஆழமான பார்வையுடன் ஒரு அறிக்கையை கடந் தவாரம் வெளியிட்டிருந்தது. அவ் அறிக்கையின்படி, 2050 ஆம் ஆண்டில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்களின் வாழ்வாதாரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகக்கூடும். இது காலநிலை மாற்றங்கள், “சூறாவளி, வெள்ளம், நீர் பற்றாக்குறை மற்றும் உணவு” ஆகியவற்றின் விளைவாக இருப்பதுடன் இதன் காரணமாக பல குடியிருப்பு பகுதிகள் இனி வாழக்கூடியதான நிலையில் இருக்காது என்றும் கருத்து தெரிவித்திருந்தது.

குறித்த அறிக்கையின் மதிப்பீடுகளில், காலநிலை மாற்றங்கள் குறைந்தது இரண்டு வழிகளில் வெகுஜன மக்களின் இயக்கத்தை பாதிப்பதாக தெரிவித்திருந்தது. முதலாவதாக, இயற்கை பேரழிவுகளின் தாக்கம் செலுத்தும் தாக்கங்கள்; இரண்டு, உணவுப் பாதுகாப்புத் துறையில் ஸ்திரமின்மை- குறிப்பாக, மக்களுக்கு நீர் மற்றும் உணவை அணுகுவதில் ஏற்படப்போகும் கட்டுப்பாடுகள் என்பனவாகும். ஆதலால், இதன் விளைவுகள், பிராந்தியங்களில் உள்ள மக்கள்தொகையின் கட்டமைப்பில் உடனடி தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், அதன் காரணமாக, இவை அரசியல் ஆட்சிகளுக்கான - குறிப்பாக, உள்நாட்டுத் தேர்தல் மற்றும் ஆட்சியமைப்பு தொடர்பாக மக்கள் தீர்மானம் மேற்கொள்வதில் உறுதியான செல்வாக்கை செலுத்தும் என்பதையும் அனுமானிக்க முடியும்.

இதற்கு பிரதானமான கரணம், ஒவ்வொரு பிராந்தியங்களிலும் வளர்ந்து வரும் மக்கள்தொகை கொண்ட அபிவிருத்தி அடையாத/அடைந்து வருகின்ற நாடுகள் "அரசியல் ஸ்திரமின்மை மற்றும் வன்முறையில்" மூழ்கும் அபாயத்தை இந்நிலை தோற்றுவிக்கும் அதேவேளையில், முக்கியமாக அபிவிருத்தி அடைந்தமற்றும் சில அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் வேலை செய்யக்கூடிய குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையில் குறைவு என்பது பொருளாதார வளர்ச்சியின் விகிதங்களில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இது தவிர, எல்லை தாண்டிய இடம்பெயர்வு அரசியல் செயல்முறைகளில் மிக முக்கியமான காரணியாக மாறும். குறிப்பாக, ஆபிரிக்காவில் அடுத்த 20-30 ஆண்டுகளில் அதிகபட்ச மக்கள் தொகை வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகின்ற இந்நிலையானது, குறித்த பிராந்தியத்தையும் தாண்டி, ஒரு எதிர்மறையான சூழ்நிலையில், இது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உலகளாவிய இடம்பெயர்வுக்கான ஒரு புதிய அலையைத் தூண்டும் என்பதுடன், பிராந்தியத்தின் விவகாரங்களில் இது வெளிநாட்டு சக்திகளின் அப்பட்டமான தலையீட்டையும் அதிகரிக்கும்.

 

மேலும், காலநிலை மாற்ற அகதிகளின் எண்ணிக்கையில் வியத்தகு அதிகரிப்புக்கு இன்னொரு காரணமாக உலகப் பெருங்கடலின் மட்டத்தின் அதிகரிப்பு ஒரு சர்வதேசப் பிரச்சனையாக உருவெடுக்கும். மேற்குறிப்பிட்ட அறிக்கையின் அடிப்படையில், சீனா, பங்களாதேஷ், இந்தியா, வியட்நாம், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் கடலோரப் பகுதிகள் அடுத்த 30 ஆண்டுகளில் குறிப்பிட்ட ஆபத்தை சமாளிக்க தயாராதல் அவசியமானதாகும். 2100 வாக்கில் உலகப் பெருங்கடலில் நீர் நிலைகள் இப்போதுள்ளதை விடவும் இரண்டு மீற்றருக்கும் அதிகமாக உயரக்கூடும் என்று அறிக்கையில் வழங்கப்பட்ட மதிப்பீடுகள் கூறுகின்றன. இதன் விளைவாக, குறைந்தது 200 மில்லியன் மக்கள் வசிக்கும் பிரதேசங்கள் வெள்ள அபாயத்தை எதிர்கொள்ளும். இவற்றின் ஒரு தொடக்கப்புள்ளியாகவே, இப்பத்தியாளர் பூகோளவியல் அடிப்படையில் உயரமாக உள்ள பிராந்தியங்களான ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா ஆகியவற்றின் அகதிகளுக்கான கொள்கையில் 2016 க்கு பின்னரான காலப்பகுதியில் ஏற்பட்ட மாற்றங்களை பார்க்கின்றார்.

1. குடியேற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் ஒப்பந்தத்தை (2018) பல ஐரோப்பிய நாடுகள் ஆதரிக்க மறுக்கின்ற நிலைமை கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய ஒன்றாகும். 2013க்குப் பிறகு ஐரோப்பிய கண்டத்துக்கு வந்த இரண்டு மில்லியனுக்கும் அதிகமான அகதிகள் ஐரோப்பாவின் முன்னணி நாடுகளின் அரசியல் நிலைமைகளில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தனர். குறிப்பாக, சிறுபான்மையினருக்கான உரிமை, அவர்களுக்கான வேலைவாய்ப்பு தொடர்பில் பல விடயங்கள்எப்போதும் இல்லாத அளவு ஒரு பேசுபொருளாகி இருந்தது. மேலும், அவ் அரசியல் நிலைமைகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் தற்போதைய வடிவத்தை கேள்விக்குட்படுத்தியும் இருந்தது. இதன் விளைவாக, பெரும்பாலான ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இடம்பெயர்வு சட்டங்களை ஒழுங்குபடுத்துவதில் குறிப்பாக தங்கள் இறையாண்மையை மீட்டெடுப்பதற்காக ஐரோப்பிய ஒன்றிய தலைமையுடன் அரசியல் போரில் ஈடுபடும் அளவுக்கு சென்றிருந்தது.

 

2. ஐக்கிய அமெரிக்காவைப் பொறுத்தவரை, குடியேற்ற பிரச்சினைகள் 2016 க்கு பின்னரான அரசியலில் என்றில்லாத அளவு முக்கியம் பெற்றுள்ளது. குறிப்பாக, அவை இம்முறை ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின் நிகழ்ச்சி நிரலில் கூட ஒரு முக்கிய புள்ளியாக மாறியுள்ளது. இருப்பினும், முந்தைய ஆண்டுகளைப் போலவே, அகதிகள் தொடர்பிலான விடையங்கள் வெறுமனே உணர்ச்சிகளை தோற்றுவித்த அதேநேரம், ஒரு சீரான மற்றும் விரிவான தீர்வை உருவாக்குவதற்கான முயற்சிகளை முறியடித்துள்ளது. தற்போது, ஆயிரக்கணக்கான உயர் தகுதி வாய்ந்த புலம்பெயர்ந்தோரை ஐக்கிய அமெரிக்கா இழந்து வரும் கடுமையான குடியேற்றக் கொள்கைக்காக அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தை ஜனநாயகக் கட்சியினர் விமர்சிக்கின்ற போதிலும் - அவர்கள் கனடாவை உதாரணமாக சுட்டிக்காட்டும் போதிலும், கனடாவில் அகதி அந்தஸ்து பெறுவது என்பதும் அவ்வளவு சுலபமானதல்ல என்பதே உண்மை நிலையாகும்.

அடிப்படையில், காலநிலை அகதிகள் தொடர்பில் உண்மையான கொள்கைகளை வகுக்க அபிவிருத்தி அடைந்த நாடுகள் தொடர்ச்சியாகவே விரும்பவில்லை. ஆயினும், குறித்த விடயம் தொடர்பில் அசமந்த போக்குடன் தொடர்ச்சியாக அபிவிருத்தி அடைந்த நாடுகள் செயற்படுதல் எதிர்காலத்தில் ஒரு தவிர்க்க முடியாத நிலைக்கு அவர்களின் பொருளாதார மற்றும் பாதுக்காப்பு ஸ்திரத்தன்மையை கேள்விக்குட்படுத்தும் என்பது ஒருபுறமிருக்க, மறுபுறம், அந்நிலை பூகோள அரசியல் நிலைகளில் மேற்கூறியது போல மிகவும் ஆழமான தாக்கத்தை செலுத்தப்போகின்றது என்பதே தற்காலத்தில் ஆழ்ந்து அவதானிக்கவேண்டிய ஒன்றாகும்.

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/காலநிலை-மாற்றம்-2050/91-256041

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.