Jump to content

இலங்கையில் பசு வதைக்கு தடை - அமைச்சரவை அனுமதி


Recommended Posts

இலங்கையில் பசு வதைக்கு தடை - அமைச்சரவை அனுமதி

இலங்கையில் பசு வதைக்கு தடை - அமைச்சரவை அனுமதி

 

இன்று (29) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது இலங்கையில் பசு வதையை தடை செய்வது தொடர்பான தீர்மானம் அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பில் வௌியிடப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

விவசாயத்தை அடிப்படையாக கொண்ட பொருளாதாரம் நிலவும் நாடு என்ற ரீதியில் இலங்கை கிராம மக்களின் ஜீவனோபாய அபிவிருத்திக்காக கால்நடை வளத்தின் மூலம் கிடைக்கும் பங்களிப்பு பாரியதாகும்.

பசு வதை அதிகரித்ததன் காரணமாக பாரம்பரிய விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொழுது தேவையான கால்நடை வளம் போதுமானது இல்லை என்பதும், இறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்காக வெளிநாட்டுக்கு செல்லும் பெரும் தொகையிலான அந்நிய செலாவணியை கட்டுப்படுத்தி கிராம மக்களின் ஜீவனோபாயத்தை மேம்படுத்தக்கூடிய வகையில் உள்ளூர் பசும் பால் தொழிற்துறையை மேம்படுத்துவதற்கு போதுமான பசுக்கள் இல்லாமையால் இந்த தொழிற்துறையின் வளர்ச்சிக்கு தடை ஏற்பட்டுள்ளது என்று பல்வேறு தரப்பினரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலைமையை கவனத்திற் கொண்டு பிரதமரினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரையை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

• பசு வதை தொடர்பில் தற்பொழுது நாட்டிற்குள் நடைமுறையில் உள்ள 1958 ஆம் ஆண்டு இலக்கம் 29 இன் கீழான கால்நடை சட்டம், 1893 ஆம் ஆண்டு இலக்கம் 9 இன் கீழான அல்லது கொலை கட்டளைச்சட்டம் மற்றும் சம்பந்தப்பட்ட (Joint Act) ஏனைய சட்டம் மற்றும் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களினால் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு முடியாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளுதல்.

• பசு இறைச்சியை பயன்படுத்தும் பொது மக்களுக்கு தேவையான இறைச்சியை இறக்குமதி செய்தல் மற்றும் நிவாரண விலைக்கு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

• விவசாய பணிகளுக்காக பயனுள்ள வகையில் பயன்படுத்த முடியாத வயதான நிலைமைக்கு உள்ளாகும் பசுக்கள் தொடர்பில் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

• இந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கு உட்பட்டதாக உடனடியாக நடைமுறைபடுத்தும் வகையில் நாட்டில் பசு வதையை தடை செய்தல்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாட்டுக்கு.... குறி வைப்பதும், தடை செய்யப் பட்டுள்ளதா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1) இலங்கைக்கு வெளியில் (அண்மையில்) உள்ள தீவில் கொல்களம் அமைத்தல்

2) மாட்டிறைச்சியை வினியோகம் செய்வதற்கு சிங்களவருக்கு அனுமதி(திட்டமிட்டு , சீராக)

3) மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்வதற்குரிய வகையில் இறைச்சிக்கான மாடு வளர்ப்பை ஊக்குவித்தல்

சொல்லப்படாதது; முசிலிம்களின் கையில் இருக்கும் இவ்வணிகத்தை முற்றாக இல்லாமலாக்குதல். (அப்படியானால் அவர்கள் என்ன செய்வார்கள் ? வேறு வணிக முயற்சிகளுக்கு மாறுவார்கள் 😜)

கொசிறுத் தகவல்; காத்தான் குடியில் மட்டும் ஒவ்வொரு வெள்ளிக் கிளமைகளிலும் 150 ற்குக் குறையாத மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படுகின்றன.

பெளத்தர்களுக்கு, கொல்லப்படுவதற்காக வைத்திருக்கும் மாடுகளை காப்பாற்றுதல் புண்ணியமான செயல். (மனுசரைக் கொல்லலாமா என்று கேட்டால் ஆம் என்பதுதான் பதில். கொல்லலாம், வல்லுறவு செய்யலாம், காணாமல் ஆக்கலாம், மற்றும் இன்னோரன்ன........ 😀)

 அவ்வாறான மாடுகளைக் (குறிப்பாக பசுக்களை) அதன் விலையைக் கொடுத்து மீட்டு வந்து விகாரைகளுக்கு தானமாக வழங்குவார்கள். 

*** எருமைகளைப்பற்றி(மனிதர் அல்ல 😜) இங்கே குறிப்பிடவில்லை என்பதைக் கவனிக்கவும்.

Link to comment
Share on other sites

மாட்டிறைச்சி , பால் போதா விட்டால் மாடுகளை அல்லவா    இறக்குமதி செய்ய வேண்டும்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

மாட்டுக்கு.... குறி வைப்பதும், தடை செய்யப் பட்டுள்ளதா? 

உண்மையில் அறுப்பதை விட இதுதான் கொடுமை. சின்னனில் பார்த்து அழுதிருக்கிறேன்.

இன்னொரு விசயம் கடலாமை வெட்டுவது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, goshan_che said:

உண்மையில் அறுப்பதை விட இதுதான் கொடுமை. சின்னனில் பார்த்து அழுதிருக்கிறேன்.

இன்னொரு விசயம் கடலாமை வெட்டுவது. 

கடலாமை குழந்திப் பிள்ளை பொல. ☹️ ஆனால் இறைச்சி நல்ல சுவை 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

கடலாமை குழந்திப் பிள்ளை பொல. ☹️ ஆனால் இறைச்சி நல்ல சுவை 😂

நிழலி கண்டால் ரெசிப்பி கேட்பார்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தடையால் பௌத்தர்களுக்கு புண்ணியம் கிடைக்கக் கூடும் (புண்ணியத்தை எந்த மீற்றரால் அளப்பது?). ஆனால், தெளிவாக அளக்கக் கூடிய தீமைகள் சில உண்டு:

1. கள்ளமாக அரச சுகாதார சேவையின் கண்காணிப்பின்றி வெட்டப் படும் மாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இது எவ்வளவு சீரியசானது? கொழும்பு வெலிக்கடை சிறைக்கருகில் இருக்கும் முனிசிபல் மாடு வெட்டும் இடத்தில் பரிசோதனைகளில் பங்கு பற்றிய அனுபவத்தின் அடிப்படையில், மனிதனுக்கு தொற்றக் கூடிய காச நோய் கிருமி முதல் வயிற்றுப் போக்குத் தரும் புழுக்கள் வரை கண்காணிப்பின்றி மக்களைச் சென்றடையும். இவை தொற்றும் மக்கள் புண்ணியம் செய்தவர்களாக இருக்க மாட்டார்கள்!

2. வயதான பசுக்களை விகாரையில் விடுவர். பிக்குகள் புண்ணாக்கெல்லாம் வைக்க மாட்டார்கள். வயதான மாடு கொஞ்சம் கொஞ்சமாக வேதனை அனுபவித்துச் சாகும். எனவே இந்த மாடுகளுக்கும் புண்ணியத்தில் பங்கிருக்காது!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நிழலி கண்டால் ரெசிப்பி கேட்பார்🤣

அவர் வித்தியாசமான ஆள் மீன் செதில் வறை போல் ஆமை ஒட்டு சூப் ரெசிப்பிதான் தேடுவார் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பெருமாள் said:

அவர் வித்தியாசமான ஆள் மீன் செதில் வறை போல் ஆமை ஒட்டு சூப் ரெசிப்பிதான் தேடுவார் .

இப்ப மடகாஸ்கர் லுமூர் பொரியல் தேடி திரியிறார்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நிழலி கண்டால் ரெசிப்பி கேட்பார்🤣

ஆமை முட்டைப் பொரியல், அவித்த முட்டை ரெசிப்பி கைவசம் இருக்கு 😂

Link to comment
Share on other sites

 

5 hours ago, nunavilan said:

இன்று (29) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது இலங்கையில் பசு வதையை தடை செய்வது தொடர்பான தீர்மானம் அறிவிக்கப்பட்டது.

 

1 hour ago, Justin said:

பசுக்களை விகாரையில் விடுவர்.

அப்போ பசு வதைக்குத்தான் தடை. நாம்பனுகளுக்குத் தடையில்லை! நாம்பன்களை விரும்பியபடி வெட்டிக் கொன்று மாட்டிறைச்சி உண்ணலாம். நாம்பனுகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும், பசுக்கள் நாம்பனைத்தேடிக் கத்தினால் அவைகளையும் விகாரையில் விடலாமா???   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Paanch said:

 

 

அப்போ பசு வதைக்குத்தான் தடை. நாம்பனுகளுக்குத் தடையில்லை! நாம்பன்களை விரும்பியபடி வெட்டிக் கொன்று மாட்டிறைச்சி உண்ணலாம். நாம்பனுகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும், பசுக்கள் நாம்பனைத்தேடிக் கத்தினால் அவைகளையும் விகாரையில் விடலாமா???   

சட்டத்தை முழுமையாக நான் வாசிக்கவில்லை. ஆனால் பசு என்பதை cow என்று எடுத்தால் நீங்கள் சொல்வது மாதிரித் தான் இருக்கும். மேலும், அம்பேவல போன்ற பாரிய பண்ணைகளில் (இவர்கள் ஹைலண்ட் பால்மா பாங்காளிகள்) பசுக்களைத் தான் தேர்ந்தெடுத்து வளர்ப்பர். நாம்பன் கன்றுகள் சிறு வயதிலேயே veal எனப்படும் விலைகூடிய வெள்ளை இறைச்சிக்காக கொல்லப் பட்டு விடும். இதை இந்தச் சட்டத்தால் தடுக்க முயன்றால் கொம்பனியைப் பூட்டி விட்டுப் போக வேண்டியது தான்! 

Link to comment
Share on other sites

 

14 minutes ago, Justin said:

ஆனால் பசு என்பதை cow என்று எடுத்தால் நீங்கள் சொல்வது மாதிரித் தான் இருக்கும்.

புரியாத மொழியொன்று உலகம் அழியப்போவதற்கான அடையாளங்களில் ஒன்றாக உலகில் பிரபலமாகும் என்று பண்டிட் சேதுராமன் அவர்கள் எழுதியுள்ளதைப் படித்துள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

மாட்டுக்கு.... குறி வைப்பதும், தடை செய்யப் பட்டுள்ளதா? 

அதைப்பற்றி ஒரு மாடும் சொல்லல🤣🤣

Link to comment
Share on other sites

அப்ப இனி கொழும்புக்கு போனால் தெஹிவளையில் இருக்கும் ஹோட்டல் டி இம்பாலாவின் மாட்டு இறைச்சிக் கொத்து வாங்கி சாப்பிட முடியாதா?

3 hours ago, goshan_che said:

நிழலி கண்டால் ரெசிப்பி கேட்பார்🤣

ஊருக்கு போனால் மாமி எப்படியும் எங்காவது வாங்கி தானே சமைத்து வைப்பார் என்பதால் ரெசிப்பி தேவையில்லை

1 hour ago, Kapithan said:

ஆமை முட்டைப் பொரியல், அவித்த முட்டை ரெசிப்பி கைவசம் இருக்கு 😂

நான் வான்கோழி முட்டையையே வாங்கி பொரித்துப் பார்த்தவன். மில்ரன் நகருக்கு அருகில் இருந்த ostrich farm இல் வாங்கி பொரித்துப் பார்த்தனான் (நூற்றுக்கணக்கான வான்கோழிகள் இருந்தன..இப்ப அதை நிரந்தரமாக மூடி விட்டார்கள்)

Link to comment
Share on other sites

6 minutes ago, நிழலி said:

அப்ப இனி கொழும்புக்கு போனால் தெஹிவளையில் இருக்கும் ஹோட்டல் டி இம்பாலாவின் மாட்டு இறைச்சிக் கொத்து வாங்கி சாப்பிட முடியாதா?

எருமை இறைச்சி இன்னும் சுவையானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, நிழலி said:

அப்ப இனி கொழும்புக்கு போனால் தெஹிவளையில் இருக்கும் ஹோட்டல் டி இம்பாலாவின் மாட்டு இறைச்சிக் கொத்து வாங்கி சாப்பிட முடியாதா?

ஊருக்கு போனால் மாமி எப்படியும் எங்காவது வாங்கி தானே சமைத்து வைப்பார் என்பதால் ரெசிப்பி தேவையில்லை

நான் வான்கோழி முட்டையையே வாங்கி பொரித்துப் பார்த்தவன். மில்ரன் நகருக்கு அருகில் இருந்த ostrich farm இல் வாங்கி பொரித்துப் பார்த்தனான் (நூற்றுக்கணக்கான வான்கோழிகள் இருந்தன..இப்ப அதை நிரந்தரமாக மூடி விட்டார்கள்)

இம்பாலாவை விட திறமான கொத்து, ஹில் ஸ்டிரீட்டில் கொஞ்சம் மேல ஏற இடது கைபக்கம் இருக்கும் கடையில் கிடைக்கும். நானாதான்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, goshan_che said:

இம்பாலாவை விட திறமான கொத்து, ஹில் ஸ்டிரீட்டில் கொஞ்சம் மேல ஏற இடது கைபக்கம் இருக்கும் கடையில் கிடைக்கும். நானாதான்.

 

😂

எப்படி பிறரின் உணர்வுகளை முன்கூட்டியே அறிகிறீர்கள் 😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

😂

எப்படி பிறரின் உணர்வுகளை முன்கூட்டியே அறிகிறீர்கள் 😂😂

ஒரே குட்டையில் ஊறிய....ரத்தினங்கள்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

மாட்டுக்கு.... குறி வைப்பதும், தடை செய்யப் பட்டுள்ளதா? 

மொக்கன் கடை ரொட்டியும், பீஃப் ரோஸ்ட் என்னவாகப்போகுது? 😳

4 hours ago, goshan_che said:

இன்னொரு விசயம் கடலாமை வெட்டுவது. 

அட.... நம்ம தலைவர்.... ஒருங்கிணைப்பாளருக்கு போட்டது .... பறிக்குளை  கை வைக்கப்படாது கண்டியளே...😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இம்பாலாவை விட திறமான கொத்து, ஹில் ஸ்டிரீட்டில் கொஞ்சம் மேல ஏற இடது கைபக்கம் இருக்கும் கடையில் கிடைக்கும். நானாதான்.

 

சும்மா சொன்னா எப்படி.... விலாவாரியா.... விலாசம் சொன்னா தானே... பிடிச்சு போகலாம்....

நான் உந்த மினிஸ்ட்ரி ஒப்  கிராப் போய்.... அவையள்... இந்தியன் டூரிஸ்ட் எண்டு.... விளக்க.... நான் சிங்களத்தில.... வடக்கு பக்கம் ஓய் எண்ட .... அவர் அவிய.... டிப்ஸ் வைக்கேக்க.... வடக்கு தான்... ஆனால் லண்டன் எண்ட.... கூத்துதான் போங்கோ....

*******************

எனக்கு இதன் நோக்கம் புரிகிறது.....

இங்குள்ளது போல, அரச அங்கீகாரம் பெற்ற slughter house போன்ற இடங்களில் மட்டுமே அனுமதிக்கப்போகின்றனர்.

கொழும்பில், இஸ்லாமிய பண்டிகைக்காலங்களில், இந்த மாடுகளை வீட்டினுள் வைத்து அறுப்பார்கள், தலை, தோல்களை அடுத்தநாள், வீதியில் விட்டெரிந்திருப்பார்கள் . 

இன்றும் கூட, ஆடுகளை உணவகங்களின் பின்னால், ரகசியமாக வெட்டுவார்கள். சமையல், சாப்பாடு போக, வெட்டும் இறைச்சி வாங்க, தனியே இந்த உணவகங்களின் பின்னே கூட்டம் ஞாயிறு அன்று மொய்க்கும்.

வெட்டிய கழிவுகளை, வீதியில் எறிந்து விடுவார்கள். மிகவும் அசுத்தமாக இருக்கும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

அதைப்பற்றி ஒரு மாடும் சொல்லல🤣🤣

நான் மேலே சொல்லி இருக்கனே மொனே🤣

 

5 hours ago, goshan_che said:

உண்மையில் அறுப்பதை விட இதுதான் கொடுமை. சின்னனில் பார்த்து அழுதிருக்கிறேன்.

இன்னொரு விசயம் கடலாமை வெட்டுவது. 

 

19 minutes ago, Nathamuni said:

 அட.... நம்ம தலைவர்.... ஒருங்கிணைப்பாளருக்கு போட்டது .... பறிக்குளை  கை வைக்கப்படாது கண்டியளே...😜

உத பற்றி நான் பெரிசா கதைக்கேல்ல. ஆனா கடலாமை வெட்டுவதை 90 க்கு பிறகு புலிகள் தடை செய்த நியாபகம். 2008 சண்டை நேரம் நாச்சிகுடாவால பெட்ரோல் வாறதே கஸ்டம். கடலில் போய் ஆமை பிடிச்சொண்டு நிக்க சான்ஸ் குறைவு. 

சிங்கனுக்கு சருகாமையதான் வறுத்து கொடுத்ததோ தெரியா 🤣

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Nathamuni said:

சும்மா சொன்னா எப்படி.... விலாவாரியா.... விலாசம் சொன்னா தானே... பிடிச்சு போகலாம்....

நான் உந்த மினிஸ்ட்ரி ஒப்  கிராப் போய்.... அவையள்... இந்தியன் டூரிஸ்ட் எண்டு.... விளக்க.... நான் சிங்களத்தில.... வடக்கு பக்கம் ஓய் எண்ட .... அவர் அவிய.... டிப்ஸ் வைக்கேக்க.... வடக்கு தான்... ஆனால் லண்டன் எண்ட.... கூத்துதான் போங்கோ....

பெயர் நியாபகம் வருதில்ல. கொஞ்ச தூரம்தான் மலை வரமுதல் வந்திடும்.  எனது அனுபவம் இந்த பொஷ் கடையள விட ரோட்டு கடைகள்தான் சுவை அதிகம்.

கொள்ளுபிட்டிய பிளவுஸ் (மும்தாஜ் மஹால் முன்பாக) சும் ஓகே. 

பிரியாணிக்கு தேர்ஸ்டன் கொலிஜுக்கு முன்னால் இருக்கும் ரஹீமாஸ். அடு பத் என கேட்டால், அரை பிளேட் குஸ்கா இலவசம். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, goshan_che said:

பெயர் நியாபகம் வருதில்ல. கொஞ்ச தூரம்தான் மலை வரமுதல் வந்திடும்.  எனது அனுபவம் இந்த பொஷ் கடையள விட ரோட்டு கடைகள்தான் சுவை அதிகம்.

கொள்ளுபிட்டிய பிளவுஸ் (மும்தாஜ் மஹால் முன்பாக) சும் ஓகே. 

பிரியாணிக்கு தேர்ஸ்டன் கொலிஜுக்கு முன்னால் இருக்கும் ரஹீமாஸ். அடு பத் என கேட்டால், அரை பிளேட் குஸ்கா இலவசம். 

 

தமிழ்சிறியர் உந்த ஆனைப்பந்தி இலுப்பையடி சந்தி, கணவாய் கந்தையர்.... கணவாயும்.... ரொட்டியும்.... மொக்கன் கடை  ரொட்டியும்.... பீவ்ப் ரோஸ்டும்.... மாதிரி வருமே எண்டுவார்.

பழைய ஆட்களிடம் கேட்டால்.... கொட்டடி நாகலிங்கம் போசனசாலை, கஸ்தூரியார் வீதி சிங்கப்பூர் போசனசாலை.... அந்த மாதிரி எண்டுவினம். உந்த நாகலிங்கம் போசனசாலையில, ஊத்தை நாலுமுழம், மடிச்சு கட்டி இருப்பினம்.... மேல ஒண்டும் இராதாம்.... எப்பன் குழப்பு ஊத்தண்ண, எண்டால், உள்ள போய் மண்சட்டியோடை வந்து கடந்து போய்.... வெளியாலை.... வெத்திலை எச்சிலை துப்பிப்போட்டு வந்து ஊத்துவீனமாம்...

  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.