Jump to content

இலங்கையில் பசு வதைக்கு தடை - அமைச்சரவை அனுமதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

தமிழ்சிறியர் உந்த ஆனைப்பந்தி இலுப்பையடி சந்தி, கணவாய் கந்தையர்.... கணவாயும்.... ரொட்டியும்.... மொக்கன் கடை  ரொட்டியும்.... பீவ்ப் ரோஸ்டும்.... மாதிரி வருமே எண்டுவார்.

பழைய ஆட்களிடம் கேட்டால்.... கொட்டடி நாகலிங்கம் போசனசாலை, கஸ்தூரியார் வீதி சிங்கப்பூர் போசனசாலை.... அந்த மாதிரி எண்டுவினம். உந்த நாகலிங்கம் போசனசாலையில, ஊத்தை நாலுமுழம், மடிச்சு கட்டி இருப்பினம்.... மேல ஒண்டும் இராதாம்.... எப்பன் குழப்பு ஊத்தண்ண, எண்டால், உள்ள போய் மண்சட்டியோடை வந்து கடந்து போய்.... வெளியாலை.... வெத்திலை எச்சிலை துப்பிப்போட்டு வந்து ஊத்துவீனமாம்...

  

🤣  யாழில நான் சாப்பிட்ட நல்ல கடையள் கேகேஎஸ் ரோட்டில காவேரி. சுன்னாகத்தில கே கே எஸ் ரோட்டிலும் ஸ்டேசன் ரோட்டிலும் ரெண்டு நானாமாரிண்ட கடை. பிறகு நெல்லியடில ஒரு கடை மேல் மாடியோட பெயர் மறந்து போச்சு.

ஆனால் கொத்தெண்டால் அது காத்தான் குடிலதான்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

🤣  யாழில நான் சாப்பிட்ட நல்ல கடையள் கேகேஎஸ் ரோட்டில காவேரி. சுன்னாகத்தில கே கே எஸ் ரோட்டிலும் ஸ்டேசன் ரோட்டிலும் ரெண்டு நானாமாரிண்ட கடை. பிறகு நெல்லியடில ஒரு கடை மேல் மாடியோட பெயர் மறந்து போச்சு.

ஆனால் கொத்தெண்டால் அது காத்தான் குடிலதான்.

 

அங்கை தானே ஏதோ குளுசை கலந்தது எண்டு சி மார் குழம்பினவையள்? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

🤣  யாழில நான் சாப்பிட்ட நல்ல கடையள் கேகேஎஸ் ரோட்டில காவேரி. சுன்னாகத்தில கே கே எஸ் ரோட்டிலும் ஸ்டேசன் ரோட்டிலும் ரெண்டு நானாமாரிண்ட கடை. பிறகு நெல்லியடில ஒரு கடை மேல் மாடியோட பெயர் மறந்து போச்சு.

ஆனால் கொத்தெண்டால் அது காத்தான் குடிலதான்.

 

சாப்பிட முதல் அந்த கடைகளில் ஒன்னுக்கு போக போவது போல் போய்  கிச்சன் அறையை நோட்டம்  பார்த்தபின் சாப்பிடவே மனம் வராது பேசாமல் கோலாவை வாங்கி குடித்துவிட்டு போக சொல்லும் முக்கியமாய் நனமாரின் கடைகள் அசுத்தத்தின் சிகரமாய் இருக்கும் 90 களில்  நாணமாரின்  கடைகளில் ஏன் முஸ்லீம் மக்கள் குடும்பமாய் வந்து சாப்பிடுவதில்லை என்ற கேள்விக்கு இன்றுவரை பதில் இல்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் கணக்க  வேண்டாம் வெம்பிளி பக்கம் உள்ள உணவகங்களில் மட்டின் டெவில் எடுத்து பாருங்க வித்தியாசமாய் இருக்கும் டேஸ்ட் வித்தியாசமாக இருக்கும் கேட்டால் அவுஸ்டேலியன் மட்டன் என்பினம் .🤣

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

அங்கை தானே ஏதோ குளுசை கலந்தது எண்டு சி மார் குழம்பினவையள்? 🤔

உது ஞானசார வகையறாக்களின் பேய்கதை. இப்ப கோத்தா மகிந்த வந்த பிறகு உந்த தூள், பவுடர் கதை எல்லாம் துண்டற இல்லை கண்டியளோ.

உலகத்தில எத்தனை மல்டி பில்லியன் வருமானம் வரும் தொழில் உந்த கருத்தடை மருந்து வியாபாரம். நானாமார் இவ்வளவு சிம்பிளா குளிசை அடிகிறெண்டா உந்த அஸ்ரா செனிக்கா, கிளஸ்கோ ஸ்மித் கிளைன் எல்லாம் பேசாம காத்தான்குடில எல்லே போய் ரிசேச் கம்பஸ் துறந்திருப்பாங்கள்🤪

46 minutes ago, பெருமாள் said:

சாப்பிட முதல் அந்த கடைகளில் ஒன்னுக்கு போக போவது போல் போய்  கிச்சன் அறையை நோட்டம்  பார்த்தபின் சாப்பிடவே மனம் வராது பேசாமல் கோலாவை வாங்கி குடித்துவிட்டு போக சொல்லும் முக்கியமாய் நனமாரின் கடைகள் அசுத்தத்தின் சிகரமாய் இருக்கும் 90 களில்  நாணமாரின்  கடைகளில் ஏன் முஸ்லீம் மக்கள் குடும்பமாய் வந்து சாப்பிடுவதில்லை என்ற கேள்விக்கு இன்றுவரை பதில் இல்லை .

ஓம். ஆனால் ஊரில எல்லா இடமும் உதுதானே கதை. Out of sight out of mind எண்டு அடிக்க வேண்டியதுதான். 

ஆனால் ஒரு நாளும் இதுவரை food poisoning வந்தது கிடையாது.

உந்த லண்டனில பெரிய ரெஸ்டீரண்டில சாப்பிட்டு - ஆஸ்பத்திரி போகாத குறை 🤣

வெம்பிளி பக்கம் மனிசன் சாப்பிடுவானே🤣

ஆனால் ரெய்னேர்ஸ் லேன் சிங்களவன்ற நண்டு கடை அந்த மாரி. நாதம் அங்கதான் அடிகடி, ஜொனி வோக்கருக்கு சைட் டிஸ் எடுகிறவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, பெருமாள் said:

ஏன் கணக்க  வேண்டாம் வெம்பிளி பக்கம் உள்ள உணவகங்களில் மட்டின் டெவில் எடுத்து பாருங்க வித்தியாசமாய் இருக்கும் டேஸ்ட் வித்தியாசமாக இருக்கும் கேட்டால் அவுஸ்டேலியன் மட்டன் என்பினம் .🤣

 

பெருமாள்,

உங்க முந்தி பதிந்திருக்கிறேன். ஒருமுறை நண்பர் ஒருவருடன், மெஸ்சுக்கு சமைக்க, மட்டன் வாங்க பாக்கீதுரையர் கடைக்கு போய், கொழுப்பு வேணாம் வெட்டி எறி எண்ட, அவன் பாவி, எறியாமல்.... ஒரு பெட்டில போடுறான். எட்டிப் பார்த்தால், பெட்டிக்குள்ள.... ஒரு 2, 3 கிலோ இருக்கும்....

ஏனப்பா, எறியாமல்.... உதுக்குள்ள போடுறாய் எண்ட..... இந்த கறி ரெஸ்டாரனில்லை, மட்டன் கறி சாப்பிட்டு இருக்கிறியா எண்ட.... சிலநேரம்... என்னவிசயம் என்று கேட்க...

நல்ல ருசியா.... எண்ணெய் தன்மையா....?

இதுதான் விசயம்.... உத கொண்டு போய்.... உருக்கி.... ஊத்தி.... கறியை கொண்டு வந்து வைப்பாங்கள்..... ஒரு 6 மாதம் அடிச்சா..... ஹார்ட் கழட்டி எறியவேண்டியது தான் என்றார்.

அதன் பிறகு, ரெஸ்டூரண்ட் போனால், நோ மட்டன்.

1 hour ago, பெருமாள் said:

சாப்பிட முதல் அந்த கடைகளில் ஒன்னுக்கு போக போவது போல் போய்  கிச்சன் அறையை நோட்டம்  பார்த்தபின் சாப்பிடவே மனம் வராது பேசாமல் கோலாவை வாங்கி குடித்துவிட்டு போக சொல்லும் முக்கியமாய் நனமாரின் கடைகள் அசுத்தத்தின் சிகரமாய் இருக்கும் 90 களில்  நாணமாரின்  கடைகளில் ஏன் முஸ்லீம் மக்கள் குடும்பமாய் வந்து சாப்பிடுவதில்லை என்ற கேள்விக்கு இன்றுவரை பதில் இல்லை .

இண்டைக்கு கறி இண்டஸ்ட்ரியே சுருளுது எண்டால் காரணம் இவர்களது சுத்துமாத்து தான்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஆனால் ரெய்னேர்ஸ் லேன் சிங்களவன்ற நண்டு கடை அந்த மாரி. நாதம் அங்கதான் அடிகடி, ஜொனி வோக்கருக்கு சைட் டிஸ் எடுகிறவர்.

ம். க்...க்கும் .... கொப்பிழக்க கூடாது...

நாதர்.... ஜொனி வால்கரை கண்ணெடுத்தும் பாரன்...

ஜொனியிண்ட தங்கச்சி ஜென் வால்கெர் தான் இப்ப என்னை வைச்சிருக்கிறா...

ரச போசன.... நல்லம் தான். நேரத்துக்கு போய்..... ஒரு பிரண்டோட,  மூலையில இருந்து.... தண்ணியும் அடித்து புபேயும் எடுத்தம்.... நல்ல டீல்.... 

எனக்கு பக்கத்தில குடுமியர்.... ஈஸ்டர்ன் பயர் பிடிக்கும். நெத்தலிப்பிட்டும்.... ரொட்டியும் மலேசியன் சம்பலும் எண்ட விருப்பம்.

எனக்கு சிங்கள சாப்பாடு எண்டால்... சட்பறி ஹில் பப் முந்தி பிடிக்கும்.... இப்ப இது பரவாயில்லை.

ரெய்னர்ஸ் லேன் பிஸ்சா ஹட் பக்கத்தில் பூட் கோர்னெர், சனி, ஞாயிறு லம்ப்ரைஸ் போடுவார்கள். நல்லா இருக்கும்.

ஹாரோ வீல்ஸ்டோன் ஸ்டேஷனுக்கு முன்னால, டேஸ்ட் ஒப் ஆசியா எண்டு எங்கண்ட நானா கடை. அவர் கட்டினது ஈரான் பக்கம். ஆனா நானா தான் சமையல்.

சபன் எண்டு அவயட (இலங்கை முஸ்லீம்) சாப்பாடு ஓடர் பண்ணி பாருங்ககோ. 7 முதல் 8 பேர் சாப்பிடலாம்.... நல்லா இருக்கும். 

முந்தி ஈஸ்ட் ஹாம் பக்கம், காதரின் ரோட்டில உதயா ரெஸ்டூரண்ட் எண்டு சேட்டன் மாரிண்ட கடை இருந்தது.... அங்க ஒரு மீன் பொழிச்சதும், ரொட்டியும், றால் பிரையும் அடித்தால்.... அந்த மாதிரி.

பிறகு அந்த கடையை ஒரு சிங்களவர் எடுத்து, நாத்தி.... இப்ப வேற மலையாளிகள் எடுத்து பழைய லெவெலிலை செய்யினமாம். போகவில்லை....   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

வெம்பிளி பக்கம் மனிசன் சாப்பிடுவானே🤣

நான் ஒருக்கால் வெம்பிளியிலை சாப்பிடு மூண்டு நாள் காணாமலே போயிட்டன்.
நல்லகாலம் இரண்டு கிழமை லீவிலை வந்தபடியாலை தப்பீட்டன்.இனிமேல் பைப் தண்ணியை குடிச்சாலும் பரவாயில்லை வெளியிலை போய் சாப்பிடுறேல்லை எண்டு முடிவெடுத்துட்டன் 🙃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Nathamuni said:

ம். க்...க்கும் .... கொப்பிழக்க கூடாது...

நாதர்.... ஜொனி வால்கரை கண்ணெடுத்தும் பாரன்...

ஜொனியிண்ட தங்கச்சி ஜென் வால்கெர் தான் இப்ப என்னை வைச்சிருக்கிறா...

ரச போசன.... நல்லம் தான். நேரத்துக்கு போய்..... ஒரு பிரண்டோட,  மூலையில இருந்து.... தண்ணியும் அடித்து புபேயும் எடுத்தம்.... நல்ல டீல்.... 

எனக்கு பக்கத்தில குடுமியர்.... ஈஸ்டர்ன் பயர் பிடிக்கும். நெத்தலிப்பிட்டும்.... ரொட்டியும் மலேசியன் சம்பலும் எண்ட விருப்பம்.

எனக்கு சிங்கள சாப்பாடு எண்டால்... சட்பறி ஹில் பப் முந்தி பிடிக்கும்.... இப்ப இது பரவாயில்லை.

ரெய்னர்ஸ் லேன் பிஸ்சா ஹட் பக்கத்தில் பூட் கோர்னெர், சனி, ஞாயிறு லம்ப்ரைஸ் போடுவார்கள். நல்லா இருக்கும்.

ஹாரோ வீல்ஸ்டோன் ஸ்டேஷனுக்கு முன்னால, டேஸ்ட் ஒப் ஆசியா எண்டு எங்கண்ட நானா கடை. அவர் கட்டினது ஈரான் பக்கம். ஆனா நானா தான் சமையல்.

சபன் எண்டு அவயட (இலங்கை முஸ்லீம்) சாப்பாடு ஓடர் பண்ணி பாருங்ககோ. 7 முதல் 8 பேர் சாப்பிடலாம்.... நல்லா இருக்கும். 

முந்தி ஈஸ்ட் ஹாம் பக்கம், காதரின் ரோட்டில உதயா ரெஸ்டூரண்ட் எண்டு சேட்டன் மாரிண்ட கடை இருந்தது.... அங்க ஒரு மீன் பொழிச்சதும், ரொட்டியும், றால் பிரையும் அடித்தால்.... அந்த மாதிரி.

பிறகு அந்த கடையை ஒரு சிங்களவர் எடுத்து, நாத்தி.... இப்ப வேற மலையாளிகள் எடுத்து பழைய லெவெலிலை செய்யினமாம். போகவில்லை....   

நாதம்,

அந்த நண்டு கடைய விட்டுட்டியள். Fat Crab சரவண பவனுக்கு பக்கத்தில. கொஞ்சம் விலை ஆனால் நல்ல உறைப்பா இருக்கும். றாலும்தான். 

டேஸ்ட் ஓப் ஏசியா ஓனர் உண்மையிலேயே தங்கமான மனுசன். உதவி செய்யும் மனபான்மை. சாப்பாடும் நல்லம்தான்.

நான் வருடத்தில் ரெண்டு தரமாவது உண்மையாகவே எனது நண்பர்களோட கூடி இருந்து பெருநாள் “சவன்” சாப்பிடுவதால் - எனக்கு அவர்களின் சவன் பெரிதாக தெரியவில்லை.

முந்தி ஹெண்டன்ல பிரின்ஸ் ஒப் சிலோன் இருந்தது. ஐரோபாவிலேயே முதல் சிறி லங்கன் ரெஸ்டுரண்ட் என்பார்கள். கொத்து பரவாயில்லை. இப்ப மூடீடாங்கள்.

 

.

15 minutes ago, குமாரசாமி said:

நான் ஒருக்கால் வெம்பிளியிலை சாப்பிடு மூண்டு நாள் காணாமலே போயிட்டன்.
நல்லகாலம் இரண்டு கிழமை லீவிலை வந்தபடியாலை தப்பீட்டன்.இனிமேல் பைப் தண்ணியை குடிச்சாலும் பரவாயில்லை வெளியிலை போய் சாப்பிடுறேல்லை எண்டு முடிவெடுத்துட்டன் 🙃

அண்ணை வெளிகிட முதல் திண்ணைல கேட்டா எங்க கைய நனைக்கலாம், எங்க நனைக்க கூடாது எண்டு சொல்லி இருப்பன் எல்லே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

அண்ணை வெளிகிட முதல் திண்ணைல கேட்டா எங்க கைய நனைக்கலாம், எங்க நனைக்க கூடாது எண்டு சொல்லி இருப்பன் எல்லே.

இல்லை...சோலி வேண்டாம் காய்ஞ்ச பாண் எண்டாலும் நான் சமாளிக்கிறன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

Fat Crab சரவண பவனுக்கு பக்கத்தில. கொஞ்சம் விலை ஆனால் நல்ல உறைப்பா இருக்கும். றாலும்தான். 

ஆ... ஒரு நாளும் போகேல்ல... போய் பார்ப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

இல்லை...சோலி வேண்டாம் காய்ஞ்ச பாண் எண்டாலும் நான் சமாளிக்கிறன்...

தெளிவா இருக்கிறியள் 🤣

6 minutes ago, Nathamuni said:

ஆ... ஒரு நாளும் போகேல்ல... போய் பார்ப்போம்.

கு. சா அண்ணை அளவுக்கு நீங்கள் விபரம் இல்லை 🤣

நானும் போய் ஒரு வருசம் இருக்கும். சின்ன கடை. நான் டேக் எவேதான். ஒரு பொலிதீன் பையில கட்டி தருவாங்கள்.

Ministry of Crab ஸ்டைல்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

இல்லை...சோலி வேண்டாம் காய்ஞ்ச பாண் எண்டாலும் நான் சமாளிக்கிறன்...

உங்க முக்கியமான விசயம் என்ன எண்டா... இந்த பங்களாதேஷ் ஆக்கள் தான் 85% சாப்பிட்டு கடையலை வச்சிருக்கினம்.

தங்கட சமையல் விண்ணர்களுக்கு விசா வேணும் எண்டு வாங்கி கண காலமா பேக்காட்டிக் கொண்டிருந்தவயல்...

டேவிட் காமாரன் எண்ட ஒருத்தர் வந்து.... உள்ளாலை... விசாரித்து பார்த்தால்.... வருறவை ஒருத்தரும் அங்கை அதுகளை சமைச்சோ, சாப்பிடுறதோ இல்லை.... சமையல் விண்ணர் எண்டு விசா எடுத்து வந்து, பிறகு இங்க  தான் சமையலே செய்ய பழகினம் எண்டு தெரிய வந்துது.

அந்தாள், 1.5 மில்லியன் பவுனை போட்டு, ஒரு ட்ரைனிங் சென்டரை துறந்து,  இனி விசா கிடையாது, உங்கண்ட ஆக்கள் கன பேர் வேலை இல்லை எண்டு பெனிபிட் எடுத்துக் கொண்டு இருக்கினம்.... அவயலை இங்க அனுப்பி, அரசாங்க செலவிலை இலவசமா கறி ட்ரைனிங் எடுப்பிச்சு, வேலையை கொடுங்கோ எண்டு சொல்லிப்போட்டார்.

சென்டர் பூட்டியாச்சு.... ஒருத்தரும் போகேல்ல எண்டு...

இப்ப அரசாங்கம்.... நோ விசா பாலிஸி. 

இப்ப அவையிண்ட சுத்துமாத்து கதை முடிஞ்சார்.... இனி எங்கண்ட ஆக்கள் தான் மார்க்கெட்டை பிடிக்க வேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நிழலி said:

அப்ப இனி கொழும்புக்கு போனால் தெஹிவளையில் இருக்கும் ஹோட்டல் டி இம்பாலாவின் மாட்டு இறைச்சிக் கொத்து வாங்கி சாப்பிட முடியாதா?

ஊருக்கு போனால் மாமி எப்படியும் எங்காவது வாங்கி தானே சமைத்து வைப்பார் என்பதால் ரெசிப்பி தேவையில்லை

நான் வான்கோழி முட்டையையே வாங்கி பொரித்துப் பார்த்தவன். மில்ரன் நகருக்கு அருகில் இருந்த ostrich farm இல் வாங்கி பொரித்துப் பார்த்தனான் (நூற்றுக்கணக்கான வான்கோழிகள் இருந்தன..இப்ப அதை நிரந்தரமாக மூடி விட்டார்கள்)

வந்த புதிதில் தீக்கோழி முட்டை இங்கு வாங்கி பொரித்தனான் ஒரு முட்டை பத்து பேருக்கு காணும் 😂

The ostrich legend | நெருப்புக்கோழி புராணம் | Dinakaran

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

இப்ப அவையிண்ட சுத்துமாத்து கதை முடிஞ்சார்.... இனி எங்கண்ட ஆக்கள் தான் மார்க்கெட்டை பிடிக்க வேணும்.

எங்கட கூட்டம் மற்ற துறைகளில் விண்ணர்களா இருந்தாலும் இந்த சாப்பாட்டு கடை விடயத்தில் படுமோசம் சொல்லி வைத்தது போல் வெஸ்டேர்ன் இரவு மரக்கறி மார்க்கட்டில் வித்து மீதமாகும் பன்னிகளுக்கு போடும் மரக்கறி வகைகளை வாங்க பதுங்கி பதுங்கி நிப்பினம் இப்படி எது மலிவோ அதை தேடி வாங்கி சாப்பாடு எனும் பெயரில் கட்டி அடிப்பினம் பிறகு விலைபோகாமல் ஒரு பவுனுக்கு நாலு ரோல்  எண்டு போட்டு அதையும் குளிர் பெட்டியில் முடியும்மட்டும் நாலு ஐந்து நாளைக்கு வைத்து  விப்பினம் வாங்கி சாப்பிடுறவனுக்கும் உபத்திரவம் தாங்களும் நட்டப்பட்டு ஏன் இப்படி என்று தெரியவில்லை .

அதை விட்டு நல்லதாய் செய்து ஒரு பவுன் என்று வித்தாலும் தரமாய் இருந்தால் வெளிமார்கட் இலகுவாக அவர்கள் கையில் சிறிய லாபம் தரமான பொருள் அதிக விற்பனையால் லாப வருமானம் நிரந்தரம் அதைவிட்டு  அதிக உடனடி லாபத்துக்கு ஆசைப்பட்டு தரமற்ற பொருள் விற்பனை சரிவை நோக்கி பயணித்து வியாபாரம் மூடு விழாவில்  போய் நிற்கும் . 

இந்த கொரனோ வரமுதல் சம்பல் எக்ஸ்பிரஸ் என்று சவுத் கரோவில் ரெஸ்டோரண்ட் உள்ளே போனால் சிங்கள சனம் கூட்டமாய் இருந்து சாப்பிடுதுகள் மதிய நேரம் இருக்க இடமில்லாமல் இருந்தது அநேக டேபிள்கள் சொறிலங்கன் பியர் ஸ்டவுட் இருந்தன சாப்பாடு ஓரளவுக்கு ஓகே   அசைவ உணவு வீட்டை விட்டு வெளியில் வந்தால் பெரும்பாலும் தவிர்த்து விடுவேன் அதனால் நம்மை பொறுத்தவரை சரவணபவன் தாளி விலை கூட அவர்களிடம் என்றாலும் நல்ல டேஸ்ட் .

லண்டனில் ஒரு ரெஸ்டாரன் ஆட்களுக்கும் டீ  போட ஒழுங்கா தெரியாது டீ என்றால் பிரான்ஸ் லா சப்பல் கணேசா தான் இயூரோப்புக்குள் எந்த நாட்டுக்கு போனாலும் லாசப்பல் தேநீர் இல்லாமல் கார் நகராது ஊர் போல் சுடு தண்ணி சிலிண்டரும் வைத்து அடித்து ஆத்தி தருவார்கள் .

இங்கு தேநீர் என்றால் வெறுப்புடன் ஒரு பார்வை பார்ப்பார்கள் நடக்காமல் சிலோ மோஷனில் போவது போல் போய் கேத்திலை தட்டி பிளாஷ்டிக் கப்பில் மலிந்த தேயிலை பையை போட்டு சுடுதண்ணியை விட்டு பாலையும் சீனியையும் போட்டு கரண்டியால் கலக்கி விட்டு டொக் எண்டு டேபிளில் வைத்து விட்டு போவார்கள் பொறுமையிழந்து இன்னொரு கப் வேண்டி நாங்கள்தான் அடிச்சு ஆத்தனும் அதுக்குள்ள சூடு இறங்கிவிடும் பிரிட்ச் பச்சை பாலின் வேலை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, நிழலி said:

நான் வான்கோழி முட்டையையே வாங்கி பொரித்துப் பார்த்தவன். மில்ரன் நகருக்கு அருகில் இருந்த ostrich farm இல் வாங்கி பொரித்துப் பார்த்தனான் (நூற்றுக்கணக்கான வான்கோழிகள் இருந்தன..இப்ப அதை நிரந்தரமாக மூடி விட்டார்கள்)

ஏன் மூடினார்கள் என்று தெரியுமா.ஏன் என்றால் வான் கோழி இப்ப ஊரில் நல்ல மதிப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, பெருமாள் said:

எங்கட கூட்டம் மற்ற துறைகளில் விண்ணர்களா இருந்தாலும் இந்த சாப்பாட்டு கடை விடயத்தில் படுமோசம் சொல்லி வைத்தது போல் வெஸ்டேர்ன் இரவு மரக்கறி மார்க்கட்டில் வித்து மீதமாகும் பன்னிகளுக்கு போடும் மரக்கறி வகைகளை வாங்க பதுங்கி பதுங்கி நிப்பினம் இப்படி எது மலிவோ அதை தேடி வாங்கி சாப்பாடு எனும் பெயரில் கட்டி அடிப்பினம் பிறகு விலைபோகாமல் ஒரு பவுனுக்கு நாலு ரோல்  எண்டு போட்டு அதையும் குளிர் பெட்டியில் முடியும்மட்டும் நாலு ஐந்து நாளைக்கு வைத்து  விப்பினம் வாங்கி சாப்பிடுறவனுக்கும் உபத்திரவம் தாங்களும் நட்டப்பட்டு ஏன் இப்படி என்று தெரியவில்லை .

அதை விட்டு நல்லதாய் செய்து ஒரு பவுன் என்று வித்தாலும் தரமாய் இருந்தால் வெளிமார்கட் இலகுவாக அவர்கள் கையில் சிறிய லாபம் தரமான பொருள் அதிக விற்பனையால் லாப வருமானம் நிரந்தரம் அதைவிட்டு  அதிக உடனடி லாபத்துக்கு ஆசைப்பட்டு தரமற்ற பொருள் விற்பனை சரிவை நோக்கி பயணித்து வியாபாரம் மூடு விழாவில்  போய் நிற்கும் . 

இந்த கொரனோ வரமுதல் சம்பல் எக்ஸ்பிரஸ் என்று சவுத் கரோவில் ரெஸ்டோரண்ட் உள்ளே போனால் சிங்கள சனம் கூட்டமாய் இருந்து சாப்பிடுதுகள் மதிய நேரம் இருக்க இடமில்லாமல் இருந்தது அநேக டேபிள்கள் சொறிலங்கன் பியர் ஸ்டவுட் இருந்தன சாப்பாடு ஓரளவுக்கு ஓகே   அசைவ உணவு வீட்டை விட்டு வெளியில் வந்தால் பெரும்பாலும் தவிர்த்து விடுவேன் அதனால் நம்மை பொறுத்தவரை சரவணபவன் தாளி விலை கூட அவர்களிடம் என்றாலும் நல்ல டேஸ்ட் .

லண்டனில் ஒரு ரெஸ்டாரன் ஆட்களுக்கும் டீ  போட ஒழுங்கா தெரியாது டீ என்றால் பிரான்ஸ் லா சப்பல் கணேசா தான் இயூரோப்புக்குள் எந்த நாட்டுக்கு போனாலும் லாசப்பல் தேநீர் இல்லாமல் கார் நகராது ஊர் போல் சுடு தண்ணி சிலிண்டரும் வைத்து அடித்து ஆத்தி தருவார்கள் .

இங்கு தேநீர் என்றால் வெறுப்புடன் ஒரு பார்வை பார்ப்பார்கள் நடக்காமல் சிலோ மோஷனில் போவது போல் போய் கேத்திலை தட்டி பிளாஷ்டிக் கப்பில் மலிந்த தேயிலை பையை போட்டு சுடுதண்ணியை விட்டு பாலையும் சீனியையும் போட்டு கரண்டியால் கலக்கி விட்டு டொக் எண்டு டேபிளில் வைத்து விட்டு போவார்கள் பொறுமையிழந்து இன்னொரு கப் வேண்டி நாங்கள்தான் அடிச்சு ஆத்தனும் அதுக்குள்ள சூடு இறங்கிவிடும் பிரிட்ச் பச்சை பாலின் வேலை .

பெருமாள், சவுத் விம்பிள்டன் வோச் மீ யிலை சாப்பிடேலையோ? முந்தி அந்த மாதிரி இப்ப கொஞ்சம் தரம் குறைவெண்டாலும் சாப்பிடலாம். மிக்ஸ் டெவல் அந்த மாதிரி இப்பவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, வாதவூரான் said:

பெருமாள், சவுத் விம்பிள்டன் வோச் மீ யிலை சாப்பிடேலையோ? முந்தி அந்த மாதிரி இப்ப கொஞ்சம் தரம் குறைவெண்டாலும் சாப்பிடலாம். மிக்ஸ் டெவல் அந்த மாதிரி இப்பவும்

முன்பு இருந்த ஓனர் தரத்துக்கு முன்னுரிமை கொடுப்பவர் ஐரோப்பிய நண்பர்கள் வந்தால்  லண்டன் சுற்றி முடிய கட்டாயம் இரவு சாப்பாடு அங்குதான் . அவர்களின் நிகழ்ச்சி நிரலில் கட்டாயம் இருக்கும் . போதாக்குறைக்கு புதிதாய் வருபவர்களுக்கும் சொல்லி விடுவார்கள் அந்த ரெஸ்டாரண்டை  பற்றி .

கொரனோ க்கு முதல் அங்கு போன போது  நெத்தலி பொரியல் அவர்களின் ஸ்பெஷல் கருவேப்பிலையை காணவில்லை விசாரித்தபோது விலை கூடிப்போய் விட்டது அதனால் தாங்கள் கருவேப்பிலை ஒரு சாப்பாட்டுக்கும் பாவிப்பது இல்லையாம்  30 வயதுகளில்  இருப்பவர் ஓனர் அனுபவமிண்மை காரணமாக இருக்கலாம் .மிக்ஸ் டெவில் 12க்கு போட்டு மலிந்த  சாமானை போடுவதை விட 20 பவுனுக்கு விலை கூட்டி றால் போன்றவற்றை தாரளமாக போட்டு விற்பது புத்திசாலித்தனம் .ஏனென்றால் அந்த உணவகத்துக்கு செல்பவர்கள் அவர்களின் சுவைக்கு அடிமையானவர்கள் .

இப்பவும் பரவாயில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

எங்கட கூட்டம் மற்ற துறைகளில் விண்ணர்களா இருந்தாலும் இந்த சாப்பாட்டு கடை விடயத்தில் படுமோசம் சொல்லி வைத்தது போல் வெஸ்டேர்ன் இரவு மரக்கறி மார்க்கட்டில் வித்து மீதமாகும் பன்னிகளுக்கு போடும் மரக்கறி வகைகளை வாங்க பதுங்கி பதுங்கி நிப்பினம் இப்படி எது மலிவோ அதை தேடி வாங்கி சாப்பாடு எனும் பெயரில் கட்டி அடிப்பினம் பிறகு விலைபோகாமல் ஒரு பவுனுக்கு நாலு ரோல்  எண்டு போட்டு அதையும் குளிர் பெட்டியில் முடியும்மட்டும் நாலு ஐந்து நாளைக்கு வைத்து  விப்பினம் வாங்கி சாப்பிடுறவனுக்கும் உபத்திரவம் தாங்களும் நட்டப்பட்டு ஏன் இப்படி என்று தெரியவில்லை .

அதை விட்டு நல்லதாய் செய்து ஒரு பவுன் என்று வித்தாலும் தரமாய் இருந்தால் வெளிமார்கட் இலகுவாக அவர்கள் கையில் சிறிய லாபம் தரமான பொருள் அதிக விற்பனையால் லாப வருமானம் நிரந்தரம் அதைவிட்டு  அதிக உடனடி லாபத்துக்கு ஆசைப்பட்டு தரமற்ற பொருள் விற்பனை சரிவை நோக்கி பயணித்து வியாபாரம் மூடு விழாவில்  போய் நிற்கும் . 

இந்த கொரனோ வரமுதல் சம்பல் எக்ஸ்பிரஸ் என்று சவுத் கரோவில் ரெஸ்டோரண்ட் உள்ளே போனால் சிங்கள சனம் கூட்டமாய் இருந்து சாப்பிடுதுகள் மதிய நேரம் இருக்க இடமில்லாமல் இருந்தது அநேக டேபிள்கள் சொறிலங்கன் பியர் ஸ்டவுட் இருந்தன சாப்பாடு ஓரளவுக்கு ஓகே   அசைவ உணவு வீட்டை விட்டு வெளியில் வந்தால் பெரும்பாலும் தவிர்த்து விடுவேன் அதனால் நம்மை பொறுத்தவரை சரவணபவன் தாளி விலை கூட அவர்களிடம் என்றாலும் நல்ல டேஸ்ட் .

லண்டனில் ஒரு ரெஸ்டாரன் ஆட்களுக்கும் டீ  போட ஒழுங்கா தெரியாது டீ என்றால் பிரான்ஸ் லா சப்பல் கணேசா தான் இயூரோப்புக்குள் எந்த நாட்டுக்கு போனாலும் லாசப்பல் தேநீர் இல்லாமல் கார் நகராது ஊர் போல் சுடு தண்ணி சிலிண்டரும் வைத்து அடித்து ஆத்தி தருவார்கள் .

இங்கு தேநீர் என்றால் வெறுப்புடன் ஒரு பார்வை பார்ப்பார்கள் நடக்காமல் சிலோ மோஷனில் போவது போல் போய் கேத்திலை தட்டி பிளாஷ்டிக் கப்பில் மலிந்த தேயிலை பையை போட்டு சுடுதண்ணியை விட்டு பாலையும் சீனியையும் போட்டு கரண்டியால் கலக்கி விட்டு டொக் எண்டு டேபிளில் வைத்து விட்டு போவார்கள் பொறுமையிழந்து இன்னொரு கப் வேண்டி நாங்கள்தான் அடிச்சு ஆத்தனும் அதுக்குள்ள சூடு இறங்கிவிடும் பிரிட்ச் பச்சை பாலின் வேலை .

 

1 hour ago, வாதவூரான் said:

பெருமாள், சவுத் விம்பிள்டன் வோச் மீ யிலை சாப்பிடேலையோ? முந்தி அந்த மாதிரி இப்ப கொஞ்சம் தரம் குறைவெண்டாலும் சாப்பிடலாம். மிக்ஸ் டெவல் அந்த மாதிரி இப்பவும்

பிரச்சனை என்னவெண்டால், எங்கட ஆக்கள், குண்டு சட்டிக்குள்ள குதிரை ஓட நிக்கினம்.... பெரிய சந்தையை விட்டுப்போட்டு.... எங்கட தமிழர்களையே டார்கெட் பண்ணி, வடையும், ரோலும் யாவாரம் செய்தால் சரி வருமே?

ரோல்ஸ் விக்க தொடஙகேக்க ஒன்று 75 பென்ஸ். இப்ப மூன்று ஒரு பவுன். காரணம் போட்டி.

ரெய்னர்ஸ் லேன் பக்கமா சென்னை சில்க் கடை.... ஒரு மைல் தூரத்தில் கிளை. இரண்டு கடையும் காயுது. சரி உந்த கிளை தேவை எண்டால், லண்டன்ல வேற பக்கமா போடிருக்கலாமே.... அநேகமா, மூனா.... இரண்டு இடத்துக்கும் ஓடி, ஓடி யாவாரம் பார்க்க வசதி எண்டு நினைச்சிருக்கலாம். 🤦‍♂️

இவர்கள் கணக்காளர்களை யாவாரம் தொடங்க முதலே சந்திப்பதில்லை. எல்லாம் முடிந்த பிறகு.... போஸ்டமோட்டம் செய்வது போல, சந்திப்பார்கள்.... 

கணக்கியல் துறையில் அடிப்படைக் கல்வி..... பக்கத்து கடையினை எடுத்தால், வாடிக்கையாளர்கள் அதிகரிக்க மாட்டார்கள்.... உள்ளவர்கள் தான்....வருவார்கள். ஆனால் செலவு தான் அதிகரிக்கும்.... அது முதல்கடையினையும் சேர்த்து கவுக்கும்.

பக்கத்துக்கடை வருது.... அதனையும் வாங்கி, குத்தகைக்கு எடுத்து, பெரிசாக்கலாம் எண்டு இருக்கிறன் எண்டு சொல்லும் பெரும் வித்தக யாவரிகள் இருக்கினம். 

இன்று, டெஸ்கோ, சயின்ஸபரி சிறிய கடைகளை திறந்து வைத்ததால், அவர்களது பெரிய கடைகளே வியாபாரம் வீழ்ந்து உள்ளன. இதனால் வாய்ட்ரோஸ், அஷ்டா முழித்துக் கொண்டு சிறிய கடைகளை திறப்பதில்லை என்று முடிவு செய்து விட்டன.

இது cannibalism என்பார்கள். தனது சொந்த யவராத்தினை....கிளைகளை திறந்து செலவை அதிகரித்து, பிரித்துக் கொள்வது.

இந்தியன் ரெஸ்டூரண்ட் கறியலிலும் பார்க்க, மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர் pre-prepared take away curry நல்லா இருக்குது எண்டு UK பேப்பர்ல வருகுது. அது இலங்கை கறி என்றும் சொல்கின்றன என்று யாராவது எமது ரெஸ்டூரண்ட் காரர்கள் கவனித்ததாக தெரியவில்லை.

நம்மவர்களின் சிக்கல், தம்மை படிப்பித்துக் கொள்வதில்லை. கேட்டு தெரிந்து கொள்வதும் இல்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம்   ஆனால் படம். இலக்கம்  சின்னம்   கட்சி பெயர்   என்பன  வெவ்வேறு  .....இதில் ஒருவர் நன்கு அறியப்பட்டவர்.    அவருக்கு அவ்வளவு பதிப்பு இல்லை.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • இந்தியாவின் விருப்பத்தின்படி யுத்த நிறுத்ததிற்கு இணங்குங்கள் அல்லது இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் - போராளிகளை எச்சரித்த ப சிதம்பரம் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கான யோசனைகளை பரிசீலிக்க  ஏற்றுக்கொள்வதென்று முடிவெடுத்தனர்.  ஆனால், இந்தியாவின் வெளியுறவுத்துறை அதனுடன் மட்டுமே நின்றுவிடவில்லை. எம்.ஜி.ஆர் உடன் தொடர்புகொண்டு, அவர் பங்கிற்கும் போராளித் தலைவர்கள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தது. ஆகவே, போராளித் தலைவர்களுடன் பேசுவதற்காக தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், 1983 ஆம் ஆண்டு ஆடி இனக்கொலை குறித்து ஐ.நா வில் இந்திரா பேசும்போது உடனிருந்தவருமான பண்ருட்டி ராமச்சந்திரனை எம்.ஜி.ஆர் அனுப்பிவைத்தார். போராளித் தலைவர்களுடன் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்," சமாதானத்திற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.    ரஜீவுடன் சிதம்பரம்  பின்னர், இந்திய உள்நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ப சிதம்பரத்தைப் போராளித் தலைவர்களுடன் பேசுவதற்கு ரஜீவ் காந்தி அனுப்பி வைத்தார். சிதம்பரத்துடனான போராளித் தலைவர்களின் கூட்டத்தினை ரோ ஒழுங்குசெய்திருந்தது. சென்னையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புலிகள் சார்பாக பிரபாகரன், பாலசிங்கம் ஆகியோரும், டெலோ சார்பில் சிறீசபாரட்ணம், மதி ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் பத்மநாபா, வரதராஜப்பெருமாள், ரமேஷ் ஆகியோரும், ஈரோஸ் சார்பில் பாலக்குமார், சங்கர் ராஜி மற்றும் முகிலன் ஆகியோரும் கலந்துகொண்டனர். போராளித் தலைவர்களுடன் பேசிய சிதம்பரம், தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வொன்றினைக் காண்பதில் ரஜீவ் காந்தி உறுதியாக இருப்பதாகக் கூறினார். தமிழர்கள் தமது நலன்களைக் காத்துக்கொள்ள ரஜீவ் காந்தி மீது நம்பிக்கை வைக்கலாம் என்றும் அவர் கூறினார். போராளிகளுடன் நேரடியாகப் பேசுவதற்கு ஜெயவர்த்தனவை சம்மதிக்க வைத்திருக்கிறார் ரஜீவ் என்றும், இதன் மூலம் போராளிகளுக்கு அங்கீகாரமும், மதிப்பும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் சிதம்பரம் மேலும் கூறினார். ஆகவே, இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதற்கு போராளித் தலைவர்கள் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். பேச்சுக்கள் ஆரம்பிப்பதற்கு யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தியா யுத்த நிறுத்தத்திற்கான யோசனையினை முன்வைத்திருக்கிறது, ஆகவே போராளி அமைப்புக்கள் அனைத்தும் அதனை ஏற்றுக்கொண்டு ஒழுக வேண்டும் என்று சிதம்பரம் கூறினார். பின்னர் போராளித் தலைவர்களை நோக்கி அச்சுருத்தும் தொனியில் இப்படிக் கூறினார் சிதம்பரம், " யுத்த நிறுத்தத்திற்கு நீங்கள் சம்மதித்தால் நீங்கள் தொடர்ந்தும் இந்தியாவில் இருக்கலாம், இல்லையென்றால், இப்போதே வெளியேறி விடவேண்டும்". சிதம்பரத்தின் எச்சரிக்கையினைக் கேட்ட போராளித் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். பிரபாகரன் பாலசிங்கத்தை நோக்கித் தனது முகத்தினைத் திருப்ப, பாலசிங்கம் சிதம்பரத்தைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார், " நாம் இதுகுறித்து எமக்குள் பேசி முடிவெடுக்க வேண்டும். அப்படிக் கலந்தாலோசித்த பின்னர் எமது முடிவினை உங்களுக்கு நாம் அறியத் தருவோம்".  "நீங்கள் எடுக்கப்போகும் முடிவு நல்ல முடிவாக இருக்கட்டும்" என்று கூறிவிட்டு எழுந்து சென்றார் சிதம்பரம். சிதம்பரத்தினுடனான சந்திப்பினையடுத்து உடனடியாக போராளித் தலைவர்கள் தமக்குள் சந்திப்பொன்றினை நடத்தினர். அச்சந்திப்பில் எவரும் எதிர்பாராத வகையில் பத்மநாபா, "நாம் யுத்த நிறுத்தத்தை முற்றாக ஏற்றுக்கொள்கிறோம்" என்று அறிவிக்கவும், பிரபாகரனும், சிறீசபாரட்ணமும் அதிர்ந்து போனார்கள். அங்கு பேசிய பாலசிங்கம், "எமது இறுதிச் சந்திப்பில் கூட்டாக நாம் முடிவெடுக்க இணங்கிவிட்டு, இப்போது உங்கள் பாட்டில் வேறு எதனையோ கூறுகிறீர்களே?" என்று கேட்டார். பத்மாநாபா பேசுவதற்கு முன் அவர் சார்பாக சங்கர் ராஜி பாலசிங்கத்திற்குப் பதிலளித்தார். "நாங்களும் அதேபோன்றதொரு முடிவினையே எடுத்திருக்கிறோம். எம்மை அனைத்தையும் மூடிக் கட்டிக்கொண்டு வெளியேறுமாறு கூறுகிறார்கள். இலங்கைக்குச் சென்று நாம் என்ன செய்வது?" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கேட்டார் சங்கர் ராஜி. அப்படிக் கேட்கும்போது கேவலமான வார்த்தைப் பிரயோகத்தையும் சங்கர் ராஜி மேற்கொண்டார். பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தின் முன்னாள்த் தலைவர் யாசீர் அரபாத்துடன் ஈரோஸின் சங்கர் ராஜீ சங்கர் ராஜியின் வார்த்தைத் துஷ்பிரயோகத்தினையடுத்து கோபமடைந்த பாலசிங்கம் அதனைக் கடிந்துகொள்ள, இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இத்தர்க்கங்களின்போது பாலசிங்கம் ரோ பற்றியும் குறிப்பிட்டார். இது அன்று நடைபெற்ற வாக்குவாதத்தினை மேலும் தீவிரமாக்கியது. வாக்குவாதத்தினை நிறுத்த பிரபாகரன் முயன்றார், "அண்ணை, தயவுசெய்து நிப்பாட்டுங்கோ" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கூறினார். "அண்ணை சார்பாக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நாங்கள் இங்கே தர்க்கிக்க வரவில்லை. முன்னணி யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக முடிவெடுத்தால், நானும் அதனை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதனை உடனடியாக நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. நாம் அப்படிச் செய்தால் எம்மை எவரும் மதிக்கப்போவதில்லை. ஒரு தாய் தனது பிள்ளையை அதட்டி சோறூட்டும் வரையில் அப்பிள்ளை உட்கொள்வதில்லை. சிறிதுகாலத்திற்கு யுத்தநிறுத்ததை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறிவிட்டு இறுதியாக ஏற்றுக்கொள்ளலாம்" என்று அவர் கூறினார். பின்னர் யுத்த நிறுத்தத்தை எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான தனது காரணங்களை முன்வைத்தார் பிரபாகரன்,  1. யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்குப் பாதகமாக அமையலாம். யுத்த நிறுத்தத்தை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவின் அனுதாபத்தினையும், ஆதரவையும் இழக்க வேண்டி வரும். அப்படி நடக்கும் பட்சத்தில் ஜெயவர்த்தனவே வெற்றி பெறுவார். நாம் அதனை அனுமதிக்க முடியாது.  2. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் சர்வதேசத்தின் ஆதரவினை இழக்கும்.  3. போராளிகள் பயங்கரவாதத்தின் மீது காதல் கொண்டவர்கள் என்கிற அவப்பெயர் ஏற்படுத்தப்படும். அதன்பின்னர் சர்வதேசம் எம்மை சுதந்திர விடுதலைப் போராளிகள் என்று பார்ப்பதை நிறுத்திவிடும்.  4. தன்னையொரு சமாதான விரும்பி என்று சர்வதேசத்திற்குக் காட்ட முயலும் ஜெயவர்த்தன தனது முயற்சியில் வெற்றி பெறுவார். யுத்த நிறுத்ததினை ஏற்றுக்கொள்வதற்கான இன்னொரு காரணத்தையும் பிரபாகரன் முன்வைத்தார். அதுவரை காலமும், "பொடியள் சண்டை பிடிப்பார்கள், கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடும்" என்று தமிழ் மக்கள் கருதிவந்த நிலையினை மாற்றுவதற்கான சந்தர்ப்பமாகவும் இதனைப் பாவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதேவிதமான கருத்தினையே அக்காலத்தில் டிக் ஷிட்டும் தொண்டைமானும் என்னிடம் கூறியிருந்தார்கள். போராளி அமைப்புக்கள் போரிடட்டும், அனுபவம் நிறைந்த கூட்டணியின் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடட்டும் என்று அவர்கள் கூறினார்கள். டிக் ஷிட் என்னிடம் பேசும்போது, " அரசியல் அமைப்பில் பாவிக்கப்படும் சூட்சுமம் நிறைந்த, சிக்கலான, சட்ட ரீதியான வார்த்தைப் பிரயோகங்களை புரிந்துகொண்டு பேசும் அறிவோ, திறமையோ போராளிகளிடம் இருக்கப்போவதில்லை" என்று கூறினார். பிரபாகரன் மேலும் பேசும்போது, தமிழர்களை வீழ்த்த ஜெயவர்த்தன வைத்த சமாதானப் பொறியிலேயே அவரை வீழ்த்த வேண்டும் என்று கூறினார். ஆகவே, யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதற்கு சில நிபந்தனைகளை நாம் முன்வைக்க வேண்டும் என்று அவர் கூறினார். தாம் முன்வைக்கும் நிபந்தனைகள், தான் வைத்த பொறியிலேயே ஜெயாரை வீழ்த்துவதாக அமையவேண்டும் என்றும் அவர் கூறினார். "யுத்த நிறுத்தக் காலத்தில் இராணுவம் முகாம்களை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையினை முதலில் நாம் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, நாம் எமது போராளிகளை ஒவ்வொரு முகாமைச் சுற்றியும் நிலைவைக்க வேண்டும். சிலவேளை யுத்த நிறுத்தம் முறிவடைந்தால், இராணுவத்தினர் தமது முகாம்களுக்குள் இருந்து வெளியே வருவதை இதன்மூலம் நாம் தடுத்துவிடலாம்"   என்கிற  பிரபாகரனின் யோசனையினை ஏனைய தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். பிரபாகரனின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை நான் 1985 வைகாசியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது கண்டேன். யாழ்ப்பாணக் கோட்டைக்கும், நாவட்குழி முகாமிற்கும் நான் சென்றேன். கிட்டுவே நடவடிக்கைகளுப் பொறுப்பாகவிருந்தார். நான்கு போராளி அமைப்புக்களைச் சேர்ந்த போராளிகள் முகாம்களைச் சூழ காவலிருப்பதை நான் கண்டேன். "இராணுவத்தினர் வெளியே வந்தால், அவர்களை சிதறடிப்போம்" என்று அவர்கள் கூறினார்கள்.   போராளிகளால் சூழப்பட்டிருந்த இந்த முகாம்களுக்கு உலங்குவானூர்திகளூடாக உணவுப்பொருட்களும் ஏனைய பொருட்களும் கொண்டுவந்து இறக்கப்படுவதை நான் கண்டேன். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருக்கும் ஏனைய முகாம்களின் நிலையும் இதுதான் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது.  அதன்பின்னர் யுத்தநிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதற்காக தாம் முன்வைக்கவிருக்கும் நிபந்தனைகள் குறித்துப் போராளித் தலைவர்கள் கலந்தாலோசித்தார்கள். ஆறு விடயங்கள் குறித்து அவர்கள் பேசினார்கள். 1. இராணுவம் தமது முகாம்களுக்குப் பின்வாங்கிச் செல்ல வேண்டும். 2. வாகனப் போக்குவரத்தின் மேல் இருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும். 3. அவசரகாலச் சட்டமும், ஊரடங்கு உத்தரவும் மீளப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். 4. கடற்கண்காணிப்பும், தடைசெய்யப்பட்ட வலயங்களும் அகற்றப்பட வேண்டும். 5. அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும். 6. அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். தமது கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள்ப்படுமிடத்து, தாம் 12 வார கால யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதாக இந்தியாவிடம் போராளித் தலைவர்கள் அறிவித்தனர். மேலும், இந்த 12 வார காலத்திற்குள் தமிழர்களுக்கு தான் லொடுக்கப்போவதாகக் கூறும் தீர்வினை இலங்கையரசாங்கம் போராளிகளின் பரிசீலினைக்காக முன்வைக்க வேண்டும் என்றும் கோரினர். அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு தமக்குத் திருப்தி தராத பட்சத்து, தாம் பேச்சுக்களில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவிப்பது என்று அவர்கள் முடிவெடுத்தனர். மேலும், யுத்த நிறுத்தத்தினை மேலும் நீடிப்பதில்லையென்றும், 12 வாரகால யுத்த நிறுத்தம் முடிவிற்கு வரும்வேளை தமிழ் மக்களின் விடுதலைக்கான தமது போராட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதென்றும் அவர்கள் முடிவெடுத்தனர். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தமது ஒருமித்த முடிவினை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சிடம் அறிவித்தனர். இதனையடுத்து, பாலசிங்கத்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட சந்திரசேகரன், தனது கடுமையான அதிருப்தியினைத் தெரிவித்தார். ஆனால், இந்த விடயம் செய்தி ஊடகங்களுக்குக் கசிந்ததோடு, பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இதேவேளை, யுத்த நிறுத்தத்திற்கான இந்தியாவின் ஆலோசனைகளையும், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான கால அட்டவணையினையும் கொழும்பிற்குத் தெரிவிப்பதற்காக பண்டாரி கொழும்பு நோக்கிப் பயணமானார். 
    • வாக்கு இயந்திரத்தைப் பற்றி சீமான் மட்டுமல்ல வேறுபல ஆய்வாளர்களும் பத்திரிகையாளர்களும் தான் எப்போதிருந்தோ சொல்கிறார்கள். அமெரிக்காவான அமெரிக்காவிலேயே பேப்பரில் புள்ளடியிட்டு ஸ்கானரில் போட்டு சரி என்றபின் தான் அந்த இடத்தை விட்டு விலகுவோம். இந்தியாவிலுள்ள வாக்கு இயந்திரத்தில் அரசு வெல்லக் கூடாது என்பவர்களின் அடையாளங்களை தெளிவில்லாமல் வைக்கிறது நீங்கள் அழுத்தும் வாக்கு யாருக்குப் போகுது என்றே தெரியாது. பல இடங்களில் தொழில் நுட்ப பிரச்சனை என்கிறார்கள். இப்படி பல்வேறு பிரச்சனைகள் உள்ளதாக சொல்கிறார்கள்.
    • மனசை தளரவிட வேண்டாம் என அவருக்கு சொல்லவும்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.