Jump to content

ஹத்ராஸ் கூட்டுப்பாலியல் சம்பவம்: எலும்பு உடைக்கப்பட்டு நாக்கு அறுக்கப்பட்ட பெண் மரணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
  • தில்நவாஸ் பாஷா
  • பிபிசி செய்தியாளர்

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் 19 வயது பட்டியலின பெண்ணை நான்கு பேர் கூட்டுப்பாலியல் செய்து கடுமையாகத் தாக்கிய சம்பவத்தில் 14 நாட்களாக உயிருக்குப் போராடியவர் செவ்வாய்க்கிழமை காலையில் உயிரிழந்தார்.

டெல்லி சஃப்தர்ஜங் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில், சேர்க்கப்பட்ட அவரது இறப்பை அவரது உடன் பிறந்த சகோதரர் பிபிசியிடம் உறுதிப்படுத்தினார்.

கடந்த திங்கட்கிழமை அலிகார் முஸ்லிம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருந்து அந்த பெண் டெல்லி சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

என்ன நடந்தது?

கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி, வயல்வெளியில் புல் வெட்ட தனது தாய் மற்றும் சகோதரருடன் அந்த பெண் சென்றிருந்தார். அப்போது உயர் ஜாதியைச் சேர்ந்த நான்கு பேர் அந்த பெண்ணை பலவந்தப்படுத்தி கூட்டுப்பாலியல் செய்து பிறகு கடுமையாகத் தாக்கியதில் பலத்த காயங்களுடன் அவர் சுயநினைவை இழந்ததாக கூறப்படுகிறது.

உயிரிழந்த பெண்ணின் சகோதரர் பிபிசியிடம் பேசும்போது, செப்டம்பர் 14ஆம் தேதி எனது சகோதரி, தாய், மூத்த சகோதரர் புல் வெட்ட சென்றோம். பிறகு சகோரர் கைநிறைய புல்லுடன் திரும்பினார். எனது தாயார் முன்பகுதியில் புல் வெட்டச்சென்றார். அப்போது அங்கு நான்கு பேரும் எனது சகோதரியை கூட்டுப்பாலியல் வல்லுறவு செய்தனர் என்று தெரிவித்தார்.

சுயநினைவிழந்த நிலையில், அருகே உள்ள உள்ளூர் சமுதாய மருத்துவ நிலையத்துக்கு அந்த பெண்னை அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். பிறகு அங்கிருந்து அவர் அலிகர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். கடந்த 13 நாட்களாக வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பிறகு திங்கட்கிழமை அவர் டெல்லி சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த நிலையில், அவரது உயிர் செவ்வாய்க்கிழமை காலை பிரிந்தது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பெண்

பட மூலாதாரம், Getty Images

 

தனது சகோதரிக்கு நேர்ந்த துயரத்தை பகிர்ந்து கொண்ட அவரது சகோதரர், "எனது சகோதரியின் முதுகெலும்பு உடைந்திருந்தது. அவரது நாக்கு வெட்டப்பட்டிருந்தது. அவரது கையை அசைக்கக்கூட முடியவில்லை. செய்கை மூலம் வலியைத் தாங்கிக் கொண்டு அவர் பேச முற்பட்டார்" என்று தெரிவித்தார்.

உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்த இந்த சம்பவம் தொடர்பான தகவல்கள், சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. நடந்த சம்பவத்தை உத்தர பிரதேச மாநிலத்தின் எதிர்கட்சிகளான பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதி கட்சி கடுமையாக கண்டித்துள்ளன.

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு நீதி கிடைக்கவும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை கிடைக்கவும் அரசு உரிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி வலியுறுத்தினார்.

மற்றொரு முன்னாள் முதல்வரான அகிலேஷ் யாதவ், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது அரசு உணர்வற்று இருப்பதையே இதுபோன்ற சம்பவங்கள் காட்டுவதாக அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

கடந்த வார இறுதியில் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டுக்கு உத்தர பிரதேச மாநிலத்தில் பட்டியலின சமூகத்தினருக்காக குரல் கொடுக்கும் செயல்பாட்டாளரும் ஆஸாத் சமாஜ் கட்சி தலைவருமான சந்திரசேகர் ஆஸாத் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். நடந்த சம்பவத்தை கண்டித்து தேசிய அளவிலான போராட்டத்துக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.ஹத்ராஸ் கூட்டுப்பாலியல் சம்பவம், பட்டியலின பெண்களும் சிறுமிகளும் நடைமுறையில் எவ்வாறு தாக்கப்படுகிறார்கள் என்ற யதார்தத்தை புரிய வைக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கவிதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், இதுபோன்ற சம்பவங்களில் உள்ள புள்ளிகளை இணைத்தால், தலித்துகள், தலித் பெண்களுக்கு எதிரான கட்டமைப்பு ரீதியிலான வன்முறைகளின் பெரிய விஷயம் புரியும். இதை மட்டும் விதிவிலக்கான கொடூர வழக்காக தனித்துப் பார்க்காமல் மிகப்பெரிய பார்வையுடன் இந்த விஷயத்தை அணுகவும் என அவர் கூறியுள்ளார்.

ஹத்ராஸ் காவல்துறை கண்காணிப்பாளர் விக்ராந்த் வீரிடம் பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம் தொடர்பாக பிபிசி பேசியது. "குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். விரைவாக நீதிமன்றத்தில் விசாரணை நடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் அனைத்து உதவிகளையும் செய்ய மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.

காவல்துறை அலட்சியமாக செயல்பட்டதா?

ஹத்ராஸ் சம்பவத்தில் தொடக்கத்திலேயே புகார் தெரிவிக்கப்பட்டபோதும் அதை பெரிதாக யாரும் எடுத்துக் கொள்ளவில்லை என்று உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினர் பிபிசியிடம் தெரிவித்தனர். சம்பவத்துக்கு பிந்தைய 10 நாட்களில் கூட குற்றம்சாட்டப்பட்டவர்கள் கைது செய்ப்படவில்லை என்றும் அவர்கள் முறையிட்டனர்.

சர்க்கிள் அதிகாரியிடம் எனது சகோதரி வாக்குமூலம் அளித்த பிறகே கூட்டுப்பாலியல் வல்லுறவு பிரிவுகள் கூடுதலாக சேர்க்கப்பட்டன என்று கூறிய அவர், தொடக்கத்தில் கொலை முயற்சி சட்டப்பிரிவுகளின்கீழ் மட்டும் புகாரைப் பதிவு செய்து ஒருவரை மட்டுமே குற்றம்சாட்டப்பட்டவராக காவல்துறையினர் சேர்த்தனர் என்று உயிரிழந்த பெண்ணின் சகோதரர் கூறினார்.

இது குறித்து காவல்துறை கண்காணிப்பாளரிடம் பிபிசி கேட்டபோது, தொடக்கத்தில் சம்பந்தப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர்தான் புகார் கூறினர். விசாரணையின் தொடர்ச்சியாக அந்த பெண்ணின் வாக்குமூலம் பெறப்பட்ட பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

 
 

கூட்டுப்பாலியல் தொடர்பான விவரம் மருத்துவ அறிக்கையில் முன்பே உறுதிப்படுத்தப்பட்டது குறித்து அவரிடம் பிபிசி சுட்டிக்காட்டியபோது, அந்த விவரங்களை இப்போதைய நிலையில் பகிர்ந்து கொள்ள முடியாது என்று காவல்துறை கண்காணிப்பாளர் கூறினார்.

முதுகெலும்பு உடைக்கப்பட்டு, நாக்கு அறுபட்ட நிலையில் சுயநினைவை இழந்த ஹத்ராஸ் பெண்ணின் சம்பவம், எட்டு ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் ஓடும் பேருந்தில் கூட்டுப்பாலியல் வல்லுறவு கொடுமைக்கு உள்ளான துணை மருத்துவ மாணவிக்கு நேர்ந்த கொடுமையை நினைவூட்டுவதாக பலரும் டிவிட்டர் பக்கத்தில் இடுகைகளை பகிர்ந்துள்ளனர்.

நிர்பயா சம்பவத்தை நினைவூட்டும் வழக்கு

டெல்லி சம்பவத்தில் உயிரிழந்த அந்த 23 வயது பெண் "நிர்பயா" வழக்கில் குற்றவாளிகள் நால்வருக்கு கடந்த மார்ச் மாதம் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஒருவர் விசாரணை காலத்திலேயே உயிரிழந்து விட்டார். மற்றொரு நபர், சம்பவம் நடந்த நாளில் சிறார் என கூறியதால், அவரை சிறார் கூர்நோக்கு இல்லத்தில் வைக்க உத்தரவிட்ட நீதிமன்றம் தண்டனை காலம் முடிந்ததும் அவரை விடுதலை செய்தது. அவரது இருப்பிடம், பாதுகாப்பு காரணங்களுக்காக ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது.

அந்த சம்பவத்துக்குப் பிறகு, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், கூட்டுப்பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கும் சட்டம், இந்திய நாடாளுமன்றத்தில் 2018ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், சட்டம் இயற்றப்பட்ட பிறகும், தொடர்ந்து பல இடங்களில் ஹத்ராஸ் சம்பவங்கள் போல பல கொடுமைகள் தொடர்ந்து நடக்கின்றன.

https://www.bbc.com/tamil/india-54341469

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளரில் அதிக பெண் கடவுளைக் கொண்ட நாடு இந்தியா

😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Kapithan said:

கடவுளரில் அதிக பெண் கடவுளைக் கொண்ட நாடு இந்தியா

😏

பெண் கடவுளர்களும் மாறி மாறி கற்பழித்த கதையையும் 
யானைக்கும் பூனைக்கும் பிறந்தார்கள் என்ற கதையும் 
அவருடைய மனைவியுடன் இவர் ஓடினார் என்ற கதையையும் 
மதமாகவே வைத்திருந்தால் நாடு இவாறுதான் இருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Maruthankerny said:

பெண் கடவுளர்களும் மாறி மாறி கற்பழித்த கதையையும் 
யானைக்கும் பூனைக்கும் பிறந்தார்கள் என்ற கதையும் 
அவருடைய மனைவியுடன் இவர் ஓடினார் என்ற கதையையும் 
மதமாகவே வைத்திருந்தால் நாடு இவாறுதான் இருக்கும். 

ஐயா வெடியைக் கொழுத்தி எறிந்துவிட்டீர்கள். 😜

நான் இந்த இடத்திலிருந்து தலைதெறிக்க ஓடிக்கொண்டிருக்கிறேன் 🏃🚴 escape ..... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

ஐயா வெடியைக் கொழுத்தி எறிந்துவிட்டீர்கள். 😜

நான் இந்த இடத்திலிருந்து தலைதெறிக்க ஓடிக்கொண்டிருக்கிறேன் 🏃🚴 escape ..... 

பயம் வேண்டாம். இது யாழ் களம். உங்கள் மீது எறிவது பூவா கல்லா என்பது - நீங்கள் யார் என்பதை பொறுத்தே தீர்மானிக்கப்படும். என்ன கருத்தை சொன்னீர்கள் என்பதை வைத்தல்ல😀.

சொன்னது அன்புக்குரிய மருதர் என்பதால் இந்த திரி நமத்து போகும்.

இதையே துல்பென் சொல்லி இருந்தால்...கிழிஞ்சுடும் லம்பாடி லுங்கி 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

பயம் வேண்டாம். இது யாழ் களம். உங்கள் மீது எறிவது பூவா கல்லா என்பது - நீங்கள் யார் என்பதை பொறுத்தே தீர்மானிக்கப்படும். என்ன கருத்தை சொன்னீர்கள் என்பதை வைத்தல்ல

நூறுவீதம் உண்மை.

இந்து மதத்தின் மீது பற்று இருந்தால் இந்து கடவுள்களில் நம்பிக்கை இருந்தால் பொங்கி அல்லவா இருப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

கடவுளரில் அதிக பெண் கடவுளைக் கொண்ட நாடு இந்தியா

😏

4 hours ago, Maruthankerny said:

பெண் கடவுளர்களும் மாறி மாறி கற்பழித்த கதையையும் 
யானைக்கும் பூனைக்கும் பிறந்தார்கள் என்ற கதையும் 
அவருடைய மனைவியுடன் இவர் ஓடினார் என்ற கதையையும் 
மதமாகவே வைத்திருந்தால் நாடு இவாறுதான் இருக்கும். 

 

கடவுளும் மதமும் என்பதற்கப்பால் சீமான் போன்ற அரசியல்வாதிகள் இந்தியாவிற்கு தேவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

பயம் வேண்டாம். இது யாழ் களம். உங்கள் மீது எறிவது பூவா கல்லா என்பது - நீங்கள் யார் என்பதை பொறுத்தே தீர்மானிக்கப்படும். என்ன கருத்தை சொன்னீர்கள் என்பதை வைத்தல்ல😀.

சொன்னது அன்புக்குரிய மருதர் என்பதால் இந்த திரி நமத்து போகும்.

இதையே துல்பென் சொல்லி இருந்தால்...கிழிஞ்சுடும் லம்பாடி லுங்கி 🤣

இப்ப என்ன உங்களுக்கு அவர்கள் என்னை கல்லால் அடிக்கோணும் 
அதை நீங்கள் பார்க்கோணும்? 
அதுதானே?

முஸ்லிம்களையும் தமிழர்களையும் எவ்வாறு பிரிடிஷ் கீனி மீனி கிழக்கில் 
பிரித்து அடிபட விட்டது என்று இப்போதான் வாசிக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Maruthankerny said:

இப்ப என்ன உங்களுக்கு அவர்கள் என்னை கல்லால் அடிக்கோணும் 
அதை நீங்கள் பார்க்கோணும்? 
அதுதானே?

முஸ்லிம்களையும் தமிழர்களையும் எவ்வாறு பிரிடிஷ் கீனி மீனி கிழக்கில் 
பிரித்து அடிபட விட்டது என்று இப்போதான் வாசிக்கிறேன்.

என்னையா இப்படி கேட்டிடியள் மருதர். யாரும் உங்களை அடிக்கவே மாட்டார்கள். 

இந்து மதம் என்ன, ஒரு சாரார் என அடையாளப்படுத்த பட்டவர்கள், புலிகளை விமர்சித்தாலும் கூட இங்கே கண்டுகாமல் விடப்பட்டதை நான் கண்டுள்ளேன்.

ஆனால் நான் தப்பி ஒரு வார்த்தை விட்டாலே திரி ரணகளமாகி விடும்🤣

இதை உங்களுக்கு கல்லெறி விழ வேண்டும் என்பதற்க்காய் எழுதவில்லை. 

அப்படி விழாது என்பதும் தெரியும்.

ஆனால் இதுதான் யாழ் களத்தின் “தர்மம்” அதை எழுதாமல் விட முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

என்னையா இப்படி கேட்டிடியள் மருதர். யாரும் உங்களை அடிக்கவே மாட்டார்கள். 

இந்து மதம் என்ன, ஒரு சாரார் என அடையாளப்படுத்த பட்டவர்கள், புலிகளை விமர்சித்தாலும் கூட இங்கே கண்டுகாமல் விடப்பட்டதை நான் கண்டுள்ளேன்.

ஆனால் நான் தப்பி ஒரு வார்த்தை விட்டாலே திரி ரணகளமாகி விடும்🤣

இதை உங்களுக்கு கல்லெறி விழ வேண்டும் என்பதற்க்காய் எழுதவில்லை. 

அப்படி விழாது என்பதும் தெரியும்.

ஆனால் இதுதான் யாழ் களத்தின் “தர்மம்” அதை எழுதாமல் விட முடியவில்லை.

இதை ஏற்றுக்கொள்ள முடியாது 
சுற்றி நின்று கல்லெறி விழ விழ நடுவில் நின்று நான் எழுதி  இருக்கிறேன் 

நியானி வந்து திரியை பூட்டி எல்லோரையும் 
ஒடுங்கடா என்று கலைத்த 
சம்பவமே நிறைய இருக்கிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Maruthankerny said:

இதை ஏற்றுக்கொள்ள முடியாது 
சுற்றி நின்று கல்லெறி விழ விழ நடுவில் நின்று நான் எழுதி  இருக்கிறேன் 

நியானி வந்து திரியை பூட்டி எல்லோரையும் 
ஒடுங்கடா என்று கலைத்த 
சம்பவமே நிறைய இருக்கிறது 

மன்னிகவும். நான் வராத காலங்களில் இது நடந்திருக்க வேண்டும். 

சரி விடுங்கள். இந்த திரியில் கலவரம் வராதவரை ஓகேதான்😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, goshan_che said:

என்னையா இப்படி கேட்டிடியள் மருதர். யாரும் உங்களை அடிக்கவே மாட்டார்கள். 

இந்து மதம் என்ன, ஒரு சாரார் என அடையாளப்படுத்த பட்டவர்கள், புலிகளை விமர்சித்தாலும் கூட இங்கே கண்டுகாமல் விடப்பட்டதை நான் கண்டுள்ளேன்.

ஆனால் நான் தப்பி ஒரு வார்த்தை விட்டாலே திரி ரணகளமாகி விடும்🤣

இதை உங்களுக்கு கல்லெறி விழ வேண்டும் என்பதற்க்காய் எழுதவில்லை. 

அப்படி விழாது என்பதும் தெரியும்.

ஆனால் இதுதான் யாழ் களத்தின் “தர்மம்” அதை எழுதாமல் விட முடியவில்லை.

யாழ்களம் மீதான உங்கள் புரிதல் மெச்சத்தக்கது.வாவ்....🤣

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

120197863_3412884135472350_5043571176770031012_n.jpg?_nc_cat=109&_nc_sid=730e14&_nc_ohc=wuaTkEsb_mwAX9koZko&_nc_ht=scontent-frt3-1.xx&oh=fb92e7a075f8c200c02d292bdb905136&oe=5F99CA8A

இதுவும்... இந்தியாவில், நடந்துள்ளது. 😮

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.