Jump to content

அற்புதமான சுவையில் திரும்ப திரும்ப சாப்பிட சொல்லும் ஈழத்து மீன் குழம்பு


nige

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, suvy said:

அவங்கள் பக்குவமாய் செய்துதரும் கறியை ரசித்து ருசித்து சாப்பிடத் தெரிந்தால் போதும். அதுக்காக மீன் இனமெல்லாம் தெரிய வேணும் என்று அவசியமில்லை கோஷான்....... கார் ஓடுறதுக்கு காருக்குள் இருக்கும் பார்ட்ஸ் எல்லாம் தெரியவேணும் என்ற அவசியமா என்ன......!  😁

அதுதானே. எல்லாரும் சமைக்க வெளிகிட்டா ? சாப்பிடவும் ஆக்கள் வேணும்தானே🤣

Link to comment
Share on other sites

  • Replies 59
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, உடையார் said:

இந்த பாறை மீன் சமைத்து சாப்பிடனீர்களா? அடுத்த முறை சந்தைக்கு போகும் போது தேடிப்பார்க்கனும் 

 

இவை பார்க்கவே தெரிகிறது ஓர் வகையான reef (rock) சூழலில் வாழும் ஆழ் கடல் மீன்கள் என்று. 

ஏனெனில், துகள் போன்ற செதிலமைப்பு; கலவாய் மீனில் இருப்பது போல. 

அவர் இவற்றை பாரை இனம் என்கிறார், நான் நினைக்கிறன் அந்த மீனின்  முக அமைப்பை வைத்து என்று நினைக்கிறன். 

ஆனால், அவற்றின் உடல் அமைப்பு பாரை போல அகன்று இல்லாமல், உருளைத் தன்மையாக இருக்கிறது.   

அதன் தசை வெள்ளை தன்மையான rose நிறமாக உள்ளது, reef அல்லது rock fish இன் பிரதான தன்மை. 

மற்றது, பாரை இனத்தின் மிக முக்கியமான வால் பகுதியில் இருக்கும் முள் போன்ற செதில்  புடைப்பு சிறியது .

மிக முக்கியமாக , பாரை இனத்தின்  கரும் சிவப்பு மண்நிறத்திலான, தடித்த, அகன்ற  இரத்த ஓட்ட பாதை இல்லை.

எனவே இதை பாரை இனம் என்று நான் நினைக்கவில்லை.    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kadancha said:

இவை பார்க்கவே தெரிகிறது ஓர் வகையான reef (rock) சூழலில் வாழும் ஆழ் கடல் மீன்கள் என்று. 

ஏனெனில், துகள் போன்ற செதிலமைப்பு; கலவாய் மீனில் இருப்பது போல. 

அவர் இவற்றை பாரை இனம் என்கிறார், நான் நினைக்கிறன் அந்த மீனின்  முக அமைப்பை வைத்து என்று நினைக்கிறன். 

ஆனால், அவற்றின் உடல் அமைப்பு பாரை போல அகன்று இல்லாமல், உருளைத் தன்மையாக இருக்கிறது.   

அதன் தசை வெள்ளை தன்மையான rose நிறமாக உள்ளது, reef அல்லது rock fish இன் பிரதான தன்மை. 

மற்றது, பாரை இனத்தின் மிக முக்கியமான வால் பகுதியில் இருக்கும் முள் போன்ற செதில்  புடைப்பு சிறியது .

மிக முக்கியமாக , பாரை இனத்தின்  கரும் சிவப்பு மண்நிறத்திலான, தடித்த, அகன்ற  இரத்த ஓட்ட பாதை இல்லை.

எனவே இதை பாரை இனம் என்று நான் நினைக்கவில்லை.    

Kadancha நன்றி அறிய தந்ததிற்கு

எப்படி இவ்வளவு விபரங்களை நுனி விரலில் வைத்திருக்கின்றீகள்🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

இவை பார்க்கவே தெரிகிறது ஓர் வகையான reef (rock) சூழலில் வாழும் ஆழ் கடல் மீன்கள் என்று. 

ஏனெனில், துகள் போன்ற செதிலமைப்பு; கலவாய் மீனில் இருப்பது போல. 

அவர் இவற்றை பாரை இனம் என்கிறார், நான் நினைக்கிறன் அந்த மீனின்  முக அமைப்பை வைத்து என்று நினைக்கிறன். 

ஆனால், அவற்றின் உடல் அமைப்பு பாரை போல அகன்று இல்லாமல், உருளைத் தன்மையாக இருக்கிறது.   

அதன் தசை வெள்ளை தன்மையான rose நிறமாக உள்ளது, reef அல்லது rock fish இன் பிரதான தன்மை. 

மற்றது, பாரை இனத்தின் மிக முக்கியமான வால் பகுதியில் இருக்கும் முள் போன்ற செதில்  புடைப்பு சிறியது .

மிக முக்கியமாக , பாரை இனத்தின்  கரும் சிவப்பு மண்நிறத்திலான, தடித்த, அகன்ற  இரத்த ஓட்ட பாதை இல்லை.

எனவே இதை பாரை இனம் என்று நான் நினைக்கவில்லை.    

உடையார் போலவே எனக்கும் பிரமிப்பாகவே இருக்கிறது. முந்திய பதிவிலும் பல தகவல்களை பதிந்தீர்கள். 

கடற் சூழலியல் சார் துறையில் நிபுணத்துவமா? அல்லது இயற்கையான தேடலின் பயனா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

ஆனால், அவற்றின் உடல் அமைப்பு பாரை போல அகன்று இல்லாமல், உருளைத் தன்மையாக இருக்கிறது. 

கும்பிளாவாக இருக்குமோ?

Link to comment
Share on other sites

18 hours ago, உடையார் said:

இந்த பாறை மீன் சமைத்து சாப்பிடனீர்களா? அடுத்த முறை சந்தைக்கு போகும் போது தேடிப்பார்க்கனும் 

 

இது என்ன மீன். அறக்குளாவா.

16 hours ago, Kadancha said:

இவை பார்க்கவே தெரிகிறது ஓர் வகையான reef (rock) சூழலில் வாழும் ஆழ் கடல் மீன்கள் என்று. 

ஏனெனில், துகள் போன்ற செதிலமைப்பு; கலவாய் மீனில் இருப்பது போல. 

அவர் இவற்றை பாரை இனம் என்கிறார், நான் நினைக்கிறன் அந்த மீனின்  முக அமைப்பை வைத்து என்று நினைக்கிறன். 

ஆனால், அவற்றின் உடல் அமைப்பு பாரை போல அகன்று இல்லாமல், உருளைத் தன்மையாக இருக்கிறது.   

அதன் தசை வெள்ளை தன்மையான rose நிறமாக உள்ளது, reef அல்லது rock fish இன் பிரதான தன்மை. 

மற்றது, பாரை இனத்தின் மிக முக்கியமான வால் பகுதியில் இருக்கும் முள் போன்ற செதில்  புடைப்பு சிறியது .

மிக முக்கியமாக , பாரை இனத்தின்  கரும் சிவப்பு மண்நிறத்திலான, தடித்த, அகன்ற  இரத்த ஓட்ட பாதை இல்லை.

எனவே இதை பாரை இனம் என்று நான் நினைக்கவில்லை.    

மிகச் சிறப்பான தகவல்கள். அம்மா இதுதான் பார மீன் என்று சொல்லி என்ன நம்ப வைத்திட்டா,நானும் அப்படியே நம்பீற்றன். இதை நான் அம்மாக்கு வாசித்து காட்டின்னான். விளக்கத்திற்கு நன்றி ...

Link to comment
Share on other sites

On 30/9/2020 at 03:20, suvy said:

மீன் குழம்புக்கு நல்ல வாசனையையும் சுவையையும் தருவது நீங்கள் கடைசியில் இடித்துபோட்ட  நற்சீரகத் தூள்தான் .....! பகிர்வுக்கு நன்றி சகோதரி.......!  🐠

உண்மைதான் suvi. நன்றி

On 29/9/2020 at 22:03, Kapithan said:

இந்த மீன் கறியில் உள்ள பிரதன குறைபாடு ........இந்த மீன் இலங்கைக் கடற்பர்ப்பிற்குரியது அல்ல.

ஆனால் இந்த மீன் சுவையானது என்பது 100%மும் உண்மை.

அதெல்லாம் தெரியாது. இங்கு இலங்கை மீன் எல்லாம் பெரிதாக கிடைப்பதில்லை. ஏதோ கிடைப்பதை சாப்பிட வேண்டியதுதான் ....கருத்திற்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/10/2020 at 12:30, ஈழப்பிரியன் said:

கும்பிளாவாக இருக்குமோ?

கும்பிளா கூட்டமாக இருப்பது, அதனால் பிடிபட்டால் நூற்று அல்லது ஆயிரக் கணக்கில் பிடிபடும்.

மற்றது, கும்பிளா செதில் இல்லாதது, வெள்ளி போன்ற மினுமினுப்பு, கறுப்பு ஆயின் வரி வரியாக.

இவை ஒன்று, இரண்டு ஆக பிடிபடும் என்பது, ஓர் territorial (தமது இடம்) என்று இருப்பதும் அதை பாதுகாப்பதும், அநேகமான rock அல்லது reef மீன்களின் தன்மை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கல் எதோ ஓர் பதிவில் US என்று வாசித்த நினைவு

பசிபிக் இற்கு அண்மையாக இருந்தால், எமக்கு பழக்கப்பட்ட மீன்கள் இல்ல விட்டாலும், நல்ல மீன்கள் கிடைக்கும்.

எந்த மீனும், தசை வெள்ளை அல்லது rose கலந்த வெள்ளை என்றால் பொதுவாக வெடுக்கு இராது அல்லது குறைவு. 

உங்களுக்கு வெடுக்கு என்று இருந்தால், தோலை நீக்கி பொரித்து பாருங்கள். 

பொரியல் என்றால் எல்லோருக்கும் அநேகமாக விருப்பம் தானே.  

பின்பு குழம்பில் இறங்கலாம்.

On 3/10/2020 at 04:09, nige said:

அதெல்லாம் தெரியாது. இங்கு இலங்கை மீன் எல்லாம் பெரிதாக கிடைப்பதில்லை. ஏதோ கிடைப்பதை சாப்பிட வேண்டியதுதான்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/10/2020 at 12:26, goshan_che said:

கடற் சூழலியல் சார் துறையில் நிபுணத்துவமா? அல்லது இயற்கையான தேடலின் பயனா?

 

On 2/10/2020 at 11:15, உடையார் said:

எப்படி இவ்வளவு விபரங்களை நுனி விரலில் வைத்திருக்கின்றீகள்

 

பொதுவாக தேடல் அக்கறை உண்டு.

ஆனால், மீனை பொறுத்தவரை (வளர்ப்பும், உணவுக்காக தயார் படுத்துவதும் ) மிக இளமையில் தொடங்கி  விட்டேன்.   

வளர்ப்பு 7-8 வயதில். இப்பொது வளர்ப்பை விட்டு விட்டேன்.

மீன் உணவாக தயார் படுத்துவது தொடங்கியது 11-12 இல். ஏனெனில், எந்த அம்மாவுக்கு அடிக்கடி நரம்பை முறுக்கும் கை  உளைவு வரும் போது, சமையலுக்கு ஆயத்தப்படுத்துவது நான்.

சந்தையில் பேரம் பேசி வாங்குவதில் இருந்து,  அரிவாள் கொண்டு வெட்டி, கறிக்காக கூட்டுவது, பின் அம்மாவின்,ஆச்சியின்  மேற் பார்வையில்  சமைப்பது. எனது ஆச்சி இவை ஒவ்வொன்றையும் பழக்கினார்.

இவை எனக்கு எல்லாம் பிடித்தும் இருந்தது. என்னுடைய சகோதரங்களுக்கு கண்ணிலும் காட்ட முடியாததாக இருந்தது. 

எந்த மீனாயினும் (அல்லது அறிமுகமில்லாத உணவு)  அதன் தோற்றுவாய், வாழ்க்கை வட்டம், வாழும்  சூழல் போன்றவற்றை அறிவதில் ஆர்வம்.     

மற்றது, பல விதமான மீன்களை உணவாக எடுப்பது. 

ஒரு முறை Billings gate இல், மீன் விற்றபவருக்கும் தெரியவில்லை போலும், golden snapper என்று சொல்லி மீனை விற்றார், விலையை  எழுதி வைத்ததிலும் குறைத்து. அது திரளி இனம் தான் என்று பார்க்கவே தெரிந்தது, ஆ னால் அது வரை காணவில்லை. gold fish இன் வயிற்றுப் பகுதியில் உள்ள தங்க மினு மினுப்பே  அந்த மீன் முழுவதும். பலர் அந்த கடையில் நின்றாலும், ஒருவரும் வாங்கவில்லை (அதன் தோற்றத்தினால் போலும்), நான் வாங்கினேன்.  வீடு வந்து செந்திலை நீக்கினால், தோலும் தங்க இளம் மஞ்சள் மினுமினுப்பு. சமைத்த  பின்பும் தோலும் தங்கத்தை புடம் போடும் போதுள்ள மினுமினுப்பு. அந்த மீனின், தோலும் சுவை சொல்லி மாளாது. மீண்டும் அவரிடம் சென்றேன், அவர் சொன்னார் தமக்கும் அதற்கு பிறகு அது கிடைக்கவில்லை என்று.

ஆனால், அது உண்மையான golden snapper இல் இருந்து வேறுபட்டது. அதை தேடுகிறேன், இது வரை காணவில்லை.        

இங்கு salmon பற்றி வந்த போதும் (அத்துடன் seaweed உம்), அதை பற்றி தெரிந்ததை சொல்லி இருந்தேன்.  

வேறு வரும் பொது அறிந்தால் சொல்கிறேன்.
 

 

Link to comment
Share on other sites

22 minutes ago, Kadancha said:

 

 

பொதுவாக தேடல் அக்கறை உண்டு.

ஆனால், மீனை பொறுத்தவரை (வளர்ப்பும், உணவுக்காக தயார் படுத்துவதும் ) மிக இளமையில் தொடங்கி  விட்டேன்.   

வளர்ப்பு 7-8 வயதில். இப்பொது வளர்ப்பை விட்டு விட்டேன்.

மீன் உணவாக தயார் படுத்துவது தொடங்கியது 11-12 இல். ஏனெனில், எந்த அம்மாவுக்கு அடிக்கடி நரம்பை முறுக்கும் கை  உளைவு வரும் போது, சமையலுக்கு ஆயத்தப்படுத்துவது நான்.

சந்தையில் பேரம் பேசி வாங்குவதில் இருந்து,  அரிவாள் கொண்டு வெட்டி, கறிக்காக கூட்டுவது, பின் அம்மாவின்,ஆச்சியின்  மேற் பார்வையில்  சமைப்பது. எனது ஆச்சி இவை ஒவ்வொன்றையும் பழக்கினார்.

இவை எனக்கு எல்லாம் பிடித்தும் இருந்தது. என்னுடைய சகோதரங்களுக்கு கண்ணிலும் காட்ட முடியாததாக இருந்தது. 

எந்த மீனாயினும் (அல்லது அறிமுகமில்லாத உணவு)  அதன் தோற்றுவாய், வாழ்க்கை வட்டம், வாழும்  சூழல் போன்றவற்றை அறிவதில் ஆர்வம்.     

மற்றது, பல விதமான மீன்களை உணவாக எடுப்பது. 

ஒரு முறை Billings gate இல், மீன் விற்றபவருக்கும் தெரியவில்லை போலும், golden snapper என்று சொல்லி மீனை விற்றார், விலையை  எழுதி வைத்ததிலும் குறைத்து. அது திரளி இனம் தான் என்று பார்க்கவே தெரிந்தது, ஆ னால் அது வரை காணவில்லை. gold fish இன் வயிற்றுப் பகுதியில் உள்ள தங்க மினு மினுப்பே  அந்த மீன் முழுவதும். பலர் அந்த கடையில் நின்றாலும், ஒருவரும் வாங்கவில்லை (அதன் தோற்றத்தினால் போலும்), நான் வாங்கினேன்.  வீடு வந்து செந்திலை நீக்கினால், தோலும் தங்க இளம் மஞ்சள் மினுமினுப்பு. சமைத்த  பின்பும் தோலும் தங்கத்தை புடம் போடும் போதுள்ள மினுமினுப்பு. அந்த மீனின், தோலும் சுவை சொல்லி மாளாது. மீண்டும் அவரிடம் சென்றேன், அவர் சொன்னார் தமக்கும் அதற்கு பிறகு அது கிடைக்கவில்லை என்று.

ஆனால், அது உண்மையான golden snapper இல் இருந்து வேறுபட்டது. அதை தேடுகிறேன், இது வரை காணவில்லை.        

இங்கு salmon பற்றி வந்த போதும் (அத்துடன் seaweed உம்), அதை பற்றி தெரிந்ததை சொல்லி இருந்தேன்.  

வேறு வரும் பொது அறிந்தால் சொல்கிறேன்.
 

 

wow நான் உங்கள் ரசிகை ஆகிவிட்டேன். நல்ல தகவல்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே முறை கிடைத்த கண்ணாடி பாறை மீன்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kadancha said:

 

 

பொதுவாக தேடல் அக்கறை உண்டு.

ஆனால், மீனை பொறுத்தவரை (வளர்ப்பும், உணவுக்காக தயார் படுத்துவதும் ) மிக இளமையில் தொடங்கி  விட்டேன்.   

வளர்ப்பு 7-8 வயதில். இப்பொது வளர்ப்பை விட்டு விட்டேன்.

மீன் உணவாக தயார் படுத்துவது தொடங்கியது 11-12 இல். ஏனெனில், எந்த அம்மாவுக்கு அடிக்கடி நரம்பை முறுக்கும் கை  உளைவு வரும் போது, சமையலுக்கு ஆயத்தப்படுத்துவது நான்.

சந்தையில் பேரம் பேசி வாங்குவதில் இருந்து,  அரிவாள் கொண்டு வெட்டி, கறிக்காக கூட்டுவது, பின் அம்மாவின்,ஆச்சியின்  மேற் பார்வையில்  சமைப்பது. எனது ஆச்சி இவை ஒவ்வொன்றையும் பழக்கினார்.

இவை எனக்கு எல்லாம் பிடித்தும் இருந்தது. என்னுடைய சகோதரங்களுக்கு கண்ணிலும் காட்ட முடியாததாக இருந்தது. 

எந்த மீனாயினும் (அல்லது அறிமுகமில்லாத உணவு)  அதன் தோற்றுவாய், வாழ்க்கை வட்டம், வாழும்  சூழல் போன்றவற்றை அறிவதில் ஆர்வம்.     

மற்றது, பல விதமான மீன்களை உணவாக எடுப்பது. 

ஒரு முறை Billings gate இல், மீன் விற்றபவருக்கும் தெரியவில்லை போலும், golden snapper என்று சொல்லி மீனை விற்றார், விலையை  எழுதி வைத்ததிலும் குறைத்து. அது திரளி இனம் தான் என்று பார்க்கவே தெரிந்தது, ஆ னால் அது வரை காணவில்லை. gold fish இன் வயிற்றுப் பகுதியில் உள்ள தங்க மினு மினுப்பே  அந்த மீன் முழுவதும். பலர் அந்த கடையில் நின்றாலும், ஒருவரும் வாங்கவில்லை (அதன் தோற்றத்தினால் போலும்), நான் வாங்கினேன்.  வீடு வந்து செந்திலை நீக்கினால், தோலும் தங்க இளம் மஞ்சள் மினுமினுப்பு. சமைத்த  பின்பும் தோலும் தங்கத்தை புடம் போடும் போதுள்ள மினுமினுப்பு. அந்த மீனின், தோலும் சுவை சொல்லி மாளாது. மீண்டும் அவரிடம் சென்றேன், அவர் சொன்னார் தமக்கும் அதற்கு பிறகு அது கிடைக்கவில்லை என்று.

ஆனால், அது உண்மையான golden snapper இல் இருந்து வேறுபட்டது. அதை தேடுகிறேன், இது வரை காணவில்லை.        

இங்கு salmon பற்றி வந்த போதும் (அத்துடன் seaweed உம்), அதை பற்றி தெரிந்ததை சொல்லி இருந்தேன்.  

வேறு வரும் பொது அறிந்தால் சொல்கிறேன்.
 

 

உங்கள் தேடலின் வீச்சு பிரமிக்க வைக்கிறது.

நாம் சாப்பிடும் சாப்பாட்டின் பின்னான தகவல்களை அறியும் பழக்கம் எனக்கு மிக அண்மையில்தான் ஏற்பட்டது.

பலகாலமாக, சுவையா? புதிய வகை உணவா என்பதை தாண்டி சிந்திப்பதே இல்லை.

பிலிங்கேட்ஸ் போவது எனக்கும் பிடிக்கும். முன்பெல்லாம் வட,மேற்கு லண்டனில் பக்கெட்டில் அடைக்காத மீன் வாங்க காள்ஸ்டன் மட்டுமே. அதைவிட கொஞ்சம் வெள்ளனவாக எழுந்தால் பிலிங்கேட்சில் போய் புதியதாக, மலிவாக வாங்கலாம்.

என்ன வரும் போது பையில் துளை ஏற்பட்டு வாகனத்தில் மணம் வராமல் பார்க்க வேண்டும் 🤣.

முந்தி விற்போர் எல்லாருமே ஆங்கிலேயர் - இப்போ மூன்று நாலு தமிழ் ஆக்களும் கடை போட்டுள்ளார்கள்.

நீங்கள் சாப்பிட்ட பொன் மீன் மிக அரிய ஒன்றாக இருக்க வேண்டும். 

கடலில் உள்ளே வாழும் பல species ஐ நாம் இன்னமும் அடையாளப்படுத்தவே இல்லையாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாராவது திலாப்பியா மீனில் குழம்பு வைத்து உள்ளீர்களா?...எப்படி இருக்கும்?

 

Link to comment
Share on other sites

 

இன்று உங்கள் செய்முறையை பார்த்து கும்பளா மீனில்  நான் சமைத்தது. 

2SLdMP.md.jpg

சின்ன வெங்காயமும் நாட்டு உள்ளியும் (சீன உள்ளி அல்ல) போட்டு சமைத்தேன். மனிசி வேலையால வர முதல் சமைச்சு முடிக்க வேண்டும் என்று கட கடவென்று சமைத்த உணவு.

1. எண்ணெய்க்கு அவகாடோ எண்ணை பாவித்தேன்
2. தாளிக்கும் போது பெரும் சீரகம் போட மறந்து விட்டேன்
3. வீட்டில் இருந்த கருங்கல் உரலை தேடி களைத்து மர உரலில் தான் மிளகு சின்ன சீரகம் இடித்தது.
4. தக்காளியை மிக்சரில் போட்டு அரைக்கும் போது பசையாக வராமல் கொஞ்சம் தண்ணியாக வந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ரதி said:

யாராவது திலாப்பியா மீனில் குழம்பு வைத்து உள்ளீர்களா?...எப்படி இருக்கும்?

 

  திலாப்பியா எண்டால் ஊர் ஜப்பான் மீனோ?

Fresh tilapia.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

  திலாப்பியா எண்டால் ஊர் ஜப்பான் மீனோ?

Fresh tilapia.jpg

 எனக்குத் தெரியாது அண்ணா ...நான் தமிழ் கடையில் தோல் இல்லாத திலாப்பியா மீனை பார்த்தேன் ...ஒரு நாளும் முந்தி சமைத்ததில்லை 

 

Link to comment
Share on other sites

16 minutes ago, ரதி said:

யாராவது திலாப்பியா மீனில் குழம்பு வைத்து உள்ளீர்களா?...எப்படி இருக்கும்?

 

நாங்கள் குழம்பு வைப்பதில்லை. oven னில் வைத்து bake பண்ணி இரவு உணவாக அதை மட்டும் சாப்பிடுவதுண்டு. அனேகமான திலாப்பியா மீன்கள் Farm மீன் என்பதால் மாசத்தில் ஒரு அல்லது இரு முறை தான் bake செய்வது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நிழலி said:

நாங்கள் குழம்பு வைப்பதில்லை. oven னில் வைத்து bake பண்ணி இரவு உணவாக அதை மட்டும் சாப்பிடுவதுண்டு. அனேகமான திலாப்பியா மீன்கள் Farm மீன் என்பதால் மாசத்தில் ஒரு அல்லது இரு முறை தான் bake செய்வது.

நன்றி ...அதென்ன Farm மீன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

  திலாப்பியா எண்டால் ஊர் ஜப்பான் மீனோ?

Fresh tilapia.jpg

 

8 minutes ago, ரதி said:

நன்றி ...அதென்ன Farm மீன்?

திலாப்பியா இலங்கையில் நன்னீர் மீன் பிடியை பெருப்பிக்கும் வகையில் ஜப்பானில் இருந்து தருவித்து இலங்கை நன்னீர் நிலைகளில் விடப்பட்டது என எங்கோ வாசித்த நினைவு. 

Link to comment
Share on other sites

14 minutes ago, ரதி said:

நன்றி ...அதென்ன Farm மீன்?

நன்னீர் மீன் பண்ணையில் வளர்க்கப்படும் மீன்கள். ஒரு கொத்தாக வளர்ப்பதால், ஒரு மீனுக்கு வருத்தம் / தொற்று நோய் வந்தால் எல்லா மீன்களுக்கும் வந்து இறந்து விடும் என்பதால் அதிகளவு Antibiotics கொடுக்கப்பட்டு வளர்க்கபடும் மீன்கள் இவை. இந்த அன்ரி பயோடிக் எங்கள் உடலாலும் மீனில் இருந்து உறிஞ்சப்படும் அபாயம் உள்ளதால், அதிகமாக உண்ணக் கூடாது என்பர். வியட்னாம், தாய்லாந்து போன்ற நாடுகளில் அதிகளவு Antibiotics பாவிப்பதால் இவ் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை கனடா போன்ற நாடுகள் கட்டுப்படுத்தி வருகின்றன.


இது திலாப்பியாவுக்கு மட்டுமல்ல சமன் மீன் (Salmon) இற்கும் பொருந்தும். நான் Wild caught என்று குறிப்பிட்டு இருக்கும் சமன் மீனைத் தான் வாங்குவது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

 

திலாப்பியா இலங்கையில் நன்னீர் மீன் பிடியை பெருப்பிக்கும் வகையில் ஜப்பானில் இருந்து தருவித்து இலங்கை நன்னீர் நிலைகளில் விடப்பட்டது என எங்கோ வாசித்த நினைவு. 

ஓ ...நன்றி ...ஒருத்தரும் அந்த மீனில் கறி சமைப்பதில்லையா?...சமைத்தாலும் பச்சை தண்ணியாய் இருக்குமோ ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

ஓ ...நன்றி ...ஒருத்தரும் அந்த மீனில் கறி சமைப்பதில்லையா?...சமைத்தாலும் பச்சை தண்ணியாய் இருக்குமோ ?

ஊரிலை நாங்கள் உந்த மீனை சாப்பிடுறேல்லை...அதிலையும் நன்னீர் மீன் வாயிலையும் வைக்கிறேல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரதி said:

ஓ ...நன்றி ...ஒருத்தரும் அந்த மீனில் கறி சமைப்பதில்லையா?...சமைத்தாலும் பச்சை தண்ணியாய் இருக்குமோ ?

ஓம் சமைப்பதில்லை என நினைக்கிறேன்.

Salmon மீனும் இவ்வாறு உவர் மற்றும் நன்னீர் மீன்பிடி farm களில் வளரும் மீன் தான். அதிலும் குழம்பு வைப்பதில்லை. அவுனில் பேக் செய்வார்கள்.

குழந்தைகளுக்கு சொதி வைப்பார்கள்.

நிழலி சொல்வதை பார்த்தால் அப்படி ஒரு மீன் போலவே படுகிறது.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.