Jump to content

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்


Recommended Posts

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

தமிழகத்தில் இளைஞர் ஒருவரை தனிமையில் அழைத்து சென்ற பெண்கள் அவரை, தூக்கிப் போட்டு மிதித்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், அதன் பின்னணி குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இருக்கும் சிப்காட்டில் ஜே.ஜே மில்ஸ் மற்றும் கார்மெண்ட்ஸ் என்ற பனியன் நிறுவனம் இயங்கி வருகிறது. இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனமான இங்கு அவினாசி அடுத்த சூளையை சேர்ந்த சிவக்குமார் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிறுவனத்தில், வெளியூரை சேர்ந்த ஏராளமான பெண் ஊழியர்கள்தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், சம்பவ தினத்தன்று, மேலாளர் சிவக்குமார், கார்மெண்ட்ஸின் கணனி ஊழியரான மதுரையை சேர்ந்த சங்கீதா மற்றும் அவரது தோழி ஆகியோருடன் பல்லடம் அடுத்த பச்சான்காட்டுப்பாளையம் காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு வைத்து சங்கீதாவும் அவரது தோழியும் சேர்ந்து மேலாளர் சிவக்குமார் மீது பெப்பர் ஸ்பிரே அடித்து அவர் நிலைகுலைந்த நேரத்தில் உதைத்து கைகால்களை கட்டிபோட்டு மிளகாய் பொடிதூவி அடித்து உதைத்துள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பல்லடம் பொலிசார், சிவக்குமார் மற்றும் அந்த இரண்டு பெண்களையும் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்துள்ளனர். விசாரணையில் சங்கீதா, கார்மென்ட்ஸில் வேலைபார்க்கும் தனக்கு பிடித்த பெண்களிடம் செல்போன் நம்பரை வாங்கிக் வைத்துக் கொள்ளும் இவன் , அவர்களை சேலை அணிந்து வரச்சொல்லி வாரந்தோறும் முறைவைத்து வெளியிடங்களுக்கு அழைத்துச்சென்று பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுவது வழக்கம்.

தனக்கு ஒத்துழைக்க மறுக்கும் பெண்களை வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்பி விடுவார் என்பதால் சில பெண்கள் தங்கள் குடும்ப வறுமையை நினைத்து இவன் மிரட்டலுக்கு அஞ்சி பாலியல் சீண்டல்களை வெளியில் சொல்ல இயலாமல் தவித்து வந்தனர். மற்ற பெண்களை போன்று தன்னிடமும், பாலியல் தொல்லை கொடுத்ததால், இனி இவன் எந்த பெண்ணிடமும் தவறாக நடக்க கூடாது என்பதற்காக, அவனை தனிமையில் அழைத்து சென்று, மிளகாய் பொடி அடித்து தூவி, கட்டிப் போட்டு உதைத்து, அதன் பின் பொலிசாருக்கு தெரிவித்ததாக கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார். ஆனால், சிவக்குமாரோ, பொலிசாரிடம், தான் அவர்களுக்கு வேலை கொடுக்கவில்லை என்ற ஆத்திரத்தில் தன்னை கடத்தி வந்து தாக்கியதாக தனது வழக்கறிஞரை வைத்து பொலிசாரிடம் கூறியுள்ளார். இதையடுத்து பொலிசார், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டால், தங்களிடம் புகார் செய்யாமல் நீங்களே எப்படி நேரடியாக தாக்குதல் நடத்தலாம் என்று இரு பெண்களின் மீதும், சிவக்குமாரை அடித்து உதைத்ததாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதன் பின், இரு பெண்களும் அளித்த புகாரின் பேரில் சிவக்குமார் மீதும் சாதாரண அடிதடி வழக்கு ஒன்றை பதிவு செய்த பொலிசார் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ள சங்கீதா, மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து, பல்லடம் காவல்துறையினர் பாலியல் தொல்லை கொடுத்த சிவகுமாருக்கு ஆதரவாக தங்களை மிரட்டி முதல் தகவல் அறிக்கையில் கையெழுத்து பெற்றதாக புகார் தெரிவித்துள்ளார். இதனால் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

https://www.ibctamil.com/india/80/151411?ref=imp-news

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.