Jump to content

பாபர் மசூதி இடிப்பு வழக்கு: கிரிமினல் விசாரணை பற்றிய 10 முக்கிய குறிப்புகள்


Recommended Posts

பாபர் மசூதி இடிப்பு வழக்கு: கிரிமினல் விசாரணை பற்றிய 10 முக்கிய குறிப்புகள்

அயோத்தி பாபர் மசூதியை மையமாகக் கொண்டு இரண்டு வழக்குகள் இருந்தன. ஒன்று சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான 'சிவில்' வழக்கு. இன்னொன்று மசூதியை இடிப்புக்கு காரணமானவர்கள் என்று குட்டற்றம்சாட்டப்பட்டுள்ளவர்கள் மீதான 'கிரிமினல்' வழக்கு.

சிவில் வழக்கில் ஏற்கனேவே இந்துக்கள் தரப்புக்கு சாதகமான தீர்ப்பு வந்து அங்கு ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. கிரிமினல் வழக்கில் விசாரனை நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.

இது தொடர்பான முக்கிய தகவல்கள் மற்றும் பிபிசியின் சிறப்பு செய்திகளின் இணைப்பை இந்தப் பக்கத்தில் நீங்கள் படிக்கலாம்.

அயோத்தியில் 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி, பாபர் மசூதி இடிப்பு தொடர்பான குற்றவியல் வழக்கில் லக்னெளவில் உள்ள சிபிஐ நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பு அளிக்கவுள்ளது.

சுமார் 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படவிருக்கிறது.

இந்த வழக்கில் முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி, அப்போதைய உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங், பாஜக மூத்த தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, வினய் கட்டியார், சக்ஷி மகாராஜ் உள்பட 32 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தின் லக்னெள நகரில் உள்ள உயர் நீதிமன்ற பழைய கட்டட வளாகத்தின் அறை எண் 18இல் இயங்கி வரும் சிபிஐ நீதிமன்றத்தில் இந்த வழக்கு கடந்த 28 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

மசூதி இடிக்கப்பட்ட வரலாறு மற்றும் அதில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முக்கிய இந்துத்துவத் தலைவர்கள் யார் என்பதை கீழே உள்ள இணைப்புகளில் படிக்கலாம்.

அந்த வழக்கின் விசாரணை மற்றும் அதன் முக்கிய அம்சங்கள் தொடர்பான 10 முக்கிய தகவல்களை இங்கே தொகுத்தளிக்கிறோம்.

சுரேந்திர குமார்

பட மூலாதாரம்,SANJEEV PANDE

 
படக்குறிப்பு,

சுரேந்திர குமார்

1) பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பை வழங்கவிருப்பவர் நீதிபதி சுரேந்திர குமார் யாதவ். தீர்ப்பு வழங்கப்படும் நாளில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று கடந்த 16ஆம் நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கின் தீர்ப்பை அளிக்க தொடக்கத்தில் ஆகஸ்ட் மாத இறுதிவரை உச்ச நீதிமன்றம் கெடு விதித்திருந்தது. அந்த கெடு பிறகு செப்டம்பர் 30ஆம் தேதி ஆக நீட்டிக்கப்பட்டது.

2) பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் எல்.கே. அத்வானி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங், வினய்கட்டியார், சாத்வி ரிதம்பரா, விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால், கிரிராஜ் கிரிராஜ் கிஷோர், விஷ்ணு ஹரி டால்மியா உள்ளிட்டோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

சிவசேனை தலைவர் பாலாசாஹெப் தாக்கரே விசாரணை காலத்திலேயே உயிரிழந்ததால் அவரது பெயர் குற்றப்பத்திரிகையில் இருந்து நீக்கப்பட்டது. இவர்களுக்கு எதிராக மொத்தம் 47 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவை ஒரே வழக்காக இணைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது.

3) பாபர் மசூதி இடிப்பு வழக்கின் கடைசி இறுதி வாதங்கள் செப்டம்பர் 1ஆம் தேதி நடந்தது. அதைத்தொடர்ந்து வழக்கின் தீர்ப்பை எழுத மூன்று வார அவகாசத்தை எடுத்துக் கொள்வதாக நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் கூறினார்.

இறுதி வாதங்களின்போது, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பயணம் செய்ய முடியாத நிலையில் உள்ளதாகக் கூறி காணொளி வாயிலாக நடந்த விசாரணையின்போது குற்றம்சாட்டப்பட்டோர் சார்பில் தெரிவிக்கப்பட்டது. குற்றம்சாட்டப்பவர்களில் ஒருவரான உமா பாரதி, தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு செப்டம்பர் 28ஆம் தேதி கண்டறியப்பட்டதாகக் கூறி தன்னை சுய தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பாபர் மசூதி இடிந்த கதை குறித்து தெரியுமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

4) இந்திய புலனாய்வுத்துறையான சிபிஐ இந்த வழக்கை விசாரித்தது. மொத்தம் 351 பேர் வழக்கில் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். சுமார் 600 ஆவணங்கள், வழக்கு தொடர்புடையவாகக் கூறி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

5) இந்த வழக்கின் ஆரம்ப காலங்களில் மொத்தம் 48 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால், இந்த 30 ஆண்டுகளில் விசாரணை காலத்திலேயே 16 பேர் உயிரிழந்து விட்டனர்.

6) சிபிஐ தரப்பு முக்கிய வாதமாக, குற்றம்சாட்டப்பட்ட தலைவர்கள், 16ஆம் நூற்றாண்டு பாபர் மசூதியை இடிப்பதற்காக கர சேவகர்களை தூண்டி சதி செய்தனர் என்பதாகும்.

இந்த வழக்கில் 2017ஆம் ஆண்டில் கல்யாண் சிங் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க முடியாத நிலைக்கு அவர் வகித்து வந்த மாநில ஆளுநர் பதவி தடையாக இருந்தது. கடந்த ஆண்டு அவரது பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், அவருக்கு எதிரான குற்றச்சாட்டை நீதிமன்றம் பதிவு செய்ய தடை நீங்கியது.

பாபர் மசூதி இடிந்த கதை குறித்து தெரியுமா?

பட மூலாதாரம்,PRAVEEN JAIN

 

7) வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள், தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க ஆதாரம் இல்லை என்று தொடர்ந்து வாதிட்டன. காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு சம்பவம் நடந்தபோது ஆட்சியில் இருந்ததால் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தங்களை இந்த வழக்கில் சிக்க வைத்ததாக அவர்கள் குற்றம்சாட்டினார்கள்.

😎 இந்த வழக்கில் தனது தரப்பு சாட்சியத்தை காணொளி காட்சி வாயிலாக பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர் எல்.கே. அத்வானி அளித்தார். அப்போது பாபர் மசூதியை இடிக்கும் சம்பவத்தில் எவ்வித குற்றச்சதியிலும் தான் ஈடுபடவில்லை என்று அவர் வாதிட்டார். இந்த வழக்கில் தனது பெயரை தேவையின்றி சிக்க வைத்துள்ளனர் என்றும் அரசியல் அழுத்தம் காரணமாக இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு சாட்சியங்கள் ஜோடிக்கப்பட்டதாக அத்வானி குற்றம்சாட்டினார்.

9) சம்பவம் நடந்த 1992, டிசம்பர் 6ஆம் தேதி, பாபர் மசூதி இருந்த பகுதியை அடைந்த கட்டுக்கடங்காத கர சேவகர்கள் கூட்டம், ராமர் பிறந்த இடமாக இருக்கும் பகுதியில் முதலாம் முகலாய மன்னர் பாபர் மசூதியை கட்டியதாகக் கூறி அதை இடித்தனர்.

10) பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், அயோத்தியில் சர்ச்சைக்குரிய பகுதி ராமருக்கே சொந்தம் என்று கூறியது. அதே சமயம் பாபர் மசூதி இடிக்கப்பட்ட செயலை சட்டவிரோதம் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி இடிக்கப்பட்ட மசூதிக்கு பதிலாக வேறு இடத்தில் மசூதியை கட்டிக் கொள்ள 5 ஏக்கர் நிலம் சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/india-54348232

Link to comment
Share on other sites

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு: தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிரம்

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு: தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிரம்

 

சென்னை, 

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி இடிக்கப்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பா.ஜ.க. மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்பட 49 பேர் மீது குற்றம் சாட்டி சி.பி.ஐ. போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.


17 பேர் இறந்து விட்டதால், மீதி 32 பேர் மீது உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. இறுதி தீர்ப்பு இந்த வழக்கில் இன்று (புதன்கிழமை) வழங்கப்படுகிறது.

இந்த தீர்ப்பையொட்டி நாடு முழுவதும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம் என்று கருதி, அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் டி.ஜி.பி. திரிபாதி இது தொடர்பான எச்சரிக்கை தகவலை அனுப்பி உள்ளார். சென்னையில் முக்கியமான இடங்களில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்படுவார்கள் என்றும், போலீஸ் ரோந்துப்பணி தீவிரப்படுத்தப்படும் என்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/09/30064212/Babri-demolition-case-verdict-today-Police-security.vpf

Link to comment
Share on other sites

பாபர் மசூதி இடிப்பு; பாஜக மூத்த தலைவர்கள் உட்பட அனைவரும் விடுதலை!

இந்தியா – அயோத்தி, பாபர் மசூதி 1992ல் இடிக்கப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாஜகவின் மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர், உபாரதி உட்பட 32 பேரையும் விடுதலை செய்து குற்றப் புலனாய்வு பிரிவு (சிபிஐ) சிறப்பு நீதிமன்றம் இன்று (30) சற்றுமுன் தீர்ப்பளித்துள்ளது.

“பாபர் மசூதி இடிப்பு முன்னரே திட்டமிடப்படவில்லை என்றும், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இல்லை என்றும்” நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய தீர்ப்பின்படி குற்றச்சாட்டப்பட்ட 48 பேரில் உயிருடன் இருக்கும் ஆளும் பாரதியா ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் மூவர் அடங்கலாக 32 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

https://newuthayan.com/பாபர்-மசூதி-இடிப்பு-பாஜக/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாபர் மசூதி இடிப்பு: விடுதலைக்கு நீதிமன்றம் சொன்ன காரணங்கள்!

spacer.png

 

28 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பாபர் மசூதி இடிப்பு வழக்கில் லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 30) தீர்ப்பு வழங்கியது. இவ்வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, கல்யாண் சிங் உள்ளிட்ட 32 பேர் மீது கிரிமினல் சதி, பகைமையை ஊக்குவித்தல், பேச்சின் மூலம் ஒரு செயலை செய்யத் தூண்டுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை சிபிஐ முன்வைத்தது.

இந்த நிலையில் பாபர் மசூதி இடிப்பு என்பது தன்னிச்சையாக நடைபெற்றது, அது முன்கூட்டியே திட்டமிடப்படவில்லை என்றும், அதன் பின்னால் எந்த கிரிமினல் சதியும் இல்லை எனவும் தனது 2000 பக்க தீர்ப்பில் குறிப்பிட்ட நீதிபதி சுரேந்திர குமார் யாதவ், “குவிமாடம் மீது ஏறியவர்கள், மசூதியை இடித்தவர்கள் சமூக விரோத சக்திகள். குற்றம் சாட்டப்பட்டவர்கள் அவர்களுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்பு வைத்திருந்தார்கள் என்பது கண்டறியப்படவில்லை. உண்மையில் குற்றம்சாட்டப் பட்டவர்கள் இடித்த கும்பலைத் தடுக்க முயன்றனர். அவர்களை இடிப்பதற்கு தூண்டவில்லை” என்று கூறியுள்ளார்.

 

அசோக் சிங்கால் மற்றும் பிற சங் பரிவார் தலைவர்கள் ராம் லல்லா சிலைகள் உள்ளே இருந்ததால் மசூதியை இடிப்பதிலிருந்து காப்பாற்றவே விரும்பியதாகவும் குறிப்பிட்ட நீதிபதி, “டிசம்பர் 6 ஆம் தேதி எதிர்பாராத நிகழ்வுகள் நடக்கக்கூடும் என்று உள்ளூர் உளவுத்துறை முன்கூட்டியே எச்சரித்திருக்கிறது. ஆனால், அது கவனிக்கப்படாமல் விடப்பட்டது” என்று கூறினார்.

பாபர் மசூதியை இடிப்பதற்கு முன்னதாக வினய் கட்டியாரின் வீட்டில் ஒரு கூட்டம் நடைபெற்றது, அங்கு கட்டமைப்பை இடிப்பதற்கான சதித்திட்டம் தீட்டப்பட்டது என்பது ஆதாரமற்றது எனக் குறிப்பிட்ட நீதிபதி, “கூட்டத்தின் வீடியோ ஆதாரமாக வழங்கப்பட்டது. எந்தவொரு சதித்திட்டமும் நடந்ததாக வீடியோ சான்றுகள் நிரூபிக்கவில்லை. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சிபிஐ அளித்த ஆடியோ, வீடியோ ஆகியவற்றின் நம்பகத்தன்மை நிரூபிக்கப்படவில்லை. வீடியோ கேசட்டுகள் சீல் வைக்கப்படவில்லை மற்றும் வீடியோக்கள் கூட தெளிவாக இல்லை. ஆடியோவில் இருக்கும் உரைகள் தெளிவாக கேட்கவில்லை” என்றும் குறிப்பிட்டார். குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கூறி 32 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார் நீதிபதி.

“இதுதொடர்பான புகைப்படங்களின் ஒரிஜினல் நெகட்டிவ்களை சமர்பிக்க சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், சிபிஐ நெகட்டிவை சமர்பிக்கவில்லை. மேலும் வீடியோ பதிவுகள் புனையப்பட்டு சிதைக்கப்பட்டன. 65 ஆதாரச் சட்டத்தின் விதிகளை சிபிஐ பின்பற்றவில்லை, அதனால்தான் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் விடுவிக்கப்பட்டனர் "என்று சாக்ஷி மகாராஜின் வழக்கறிஞர் பிரசாந்த் சிங் அடல் கூறினார்.

 

https://minnambalam.com/politics/2020/09/30/32/babri-mosque-demolition-case-all-acquitted-key-points-of-verdict

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

120539984_3414767171950713_6398156830320197306_n.jpg?_nc_cat=111&_nc_sid=8bfeb9&_nc_ohc=9jmG5WhiK-8AX8bTORs&_nc_ht=scontent-frx5-1.xx&oh=97568ffa49b4891c7a2e5b55dd68c200&oe=5F9C114A

 

120192371_3414777131949717_5112940021747349773_n.jpg?_nc_cat=108&_nc_sid=8bfeb9&_nc_ohc=iE6FkABr9ZkAX_AfoGK&_nc_ht=scontent-frt3-1.xx&oh=001a00a8b82fb8c5ea7ecc970de65957&oe=5F998785

 

 

120201977_3414916895269074_2170229134055453503_n.jpg?_nc_cat=110&_nc_sid=8bfeb9&_nc_ohc=bBYZbL7OOhEAX9Nxnit&_nc_ht=scontent-frx5-1.xx&oh=9adb153281a757a91cd81c11c0d5c9d2&oe=5F9B3100

அனைவரும் எதிர்பார்த்த, தீர்ப்பு தான்..!

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/10/2020 at 09:57, தமிழ் சிறி said:

 

 

120201977_3414916895269074_2170229134055453503_n.jpg?_nc_cat=110&_nc_sid=8bfeb9&_nc_ohc=bBYZbL7OOhEAX9Nxnit&_nc_ht=scontent-frx5-1.xx&oh=9adb153281a757a91cd81c11c0d5c9d2&oe=5F9B3100

அனைவரும் எதிர்பார்த்த, தீர்ப்பு தான்..!

tenor.gif நான் அடிச்ச மணி ஆருக்கு கேட்டுச்சோ இல்லியோ அவனுக்கு கேட்டுச்சு .. அடிச்சான் பாரு ஆளுனர்க்கான ஒப்பொயின்ற் மென்ற் ஓடற..☺️..😊

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.