Jump to content

பாபர் மசூதி இடிப்பு வழக்கு: கிரிமினல் விசாரணை பற்றிய 10 முக்கிய குறிப்புகள்


Recommended Posts

பாபர் மசூதி இடிப்பு வழக்கு: கிரிமினல் விசாரணை பற்றிய 10 முக்கிய குறிப்புகள்

அயோத்தி பாபர் மசூதியை மையமாகக் கொண்டு இரண்டு வழக்குகள் இருந்தன. ஒன்று சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான 'சிவில்' வழக்கு. இன்னொன்று மசூதியை இடிப்புக்கு காரணமானவர்கள் என்று குட்டற்றம்சாட்டப்பட்டுள்ளவர்கள் மீதான 'கிரிமினல்' வழக்கு.

சிவில் வழக்கில் ஏற்கனேவே இந்துக்கள் தரப்புக்கு சாதகமான தீர்ப்பு வந்து அங்கு ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. கிரிமினல் வழக்கில் விசாரனை நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.

இது தொடர்பான முக்கிய தகவல்கள் மற்றும் பிபிசியின் சிறப்பு செய்திகளின் இணைப்பை இந்தப் பக்கத்தில் நீங்கள் படிக்கலாம்.

அயோத்தியில் 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி, பாபர் மசூதி இடிப்பு தொடர்பான குற்றவியல் வழக்கில் லக்னெளவில் உள்ள சிபிஐ நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பு அளிக்கவுள்ளது.

சுமார் 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படவிருக்கிறது.

இந்த வழக்கில் முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி, அப்போதைய உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங், பாஜக மூத்த தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, வினய் கட்டியார், சக்ஷி மகாராஜ் உள்பட 32 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தின் லக்னெள நகரில் உள்ள உயர் நீதிமன்ற பழைய கட்டட வளாகத்தின் அறை எண் 18இல் இயங்கி வரும் சிபிஐ நீதிமன்றத்தில் இந்த வழக்கு கடந்த 28 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

மசூதி இடிக்கப்பட்ட வரலாறு மற்றும் அதில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முக்கிய இந்துத்துவத் தலைவர்கள் யார் என்பதை கீழே உள்ள இணைப்புகளில் படிக்கலாம்.

அந்த வழக்கின் விசாரணை மற்றும் அதன் முக்கிய அம்சங்கள் தொடர்பான 10 முக்கிய தகவல்களை இங்கே தொகுத்தளிக்கிறோம்.

சுரேந்திர குமார்

பட மூலாதாரம்,SANJEEV PANDE

 
படக்குறிப்பு,

சுரேந்திர குமார்

1) பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பை வழங்கவிருப்பவர் நீதிபதி சுரேந்திர குமார் யாதவ். தீர்ப்பு வழங்கப்படும் நாளில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று கடந்த 16ஆம் நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கின் தீர்ப்பை அளிக்க தொடக்கத்தில் ஆகஸ்ட் மாத இறுதிவரை உச்ச நீதிமன்றம் கெடு விதித்திருந்தது. அந்த கெடு பிறகு செப்டம்பர் 30ஆம் தேதி ஆக நீட்டிக்கப்பட்டது.

2) பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் எல்.கே. அத்வானி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங், வினய்கட்டியார், சாத்வி ரிதம்பரா, விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால், கிரிராஜ் கிரிராஜ் கிஷோர், விஷ்ணு ஹரி டால்மியா உள்ளிட்டோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

சிவசேனை தலைவர் பாலாசாஹெப் தாக்கரே விசாரணை காலத்திலேயே உயிரிழந்ததால் அவரது பெயர் குற்றப்பத்திரிகையில் இருந்து நீக்கப்பட்டது. இவர்களுக்கு எதிராக மொத்தம் 47 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவை ஒரே வழக்காக இணைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது.

3) பாபர் மசூதி இடிப்பு வழக்கின் கடைசி இறுதி வாதங்கள் செப்டம்பர் 1ஆம் தேதி நடந்தது. அதைத்தொடர்ந்து வழக்கின் தீர்ப்பை எழுத மூன்று வார அவகாசத்தை எடுத்துக் கொள்வதாக நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் கூறினார்.

இறுதி வாதங்களின்போது, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பயணம் செய்ய முடியாத நிலையில் உள்ளதாகக் கூறி காணொளி வாயிலாக நடந்த விசாரணையின்போது குற்றம்சாட்டப்பட்டோர் சார்பில் தெரிவிக்கப்பட்டது. குற்றம்சாட்டப்பவர்களில் ஒருவரான உமா பாரதி, தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு செப்டம்பர் 28ஆம் தேதி கண்டறியப்பட்டதாகக் கூறி தன்னை சுய தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பாபர் மசூதி இடிந்த கதை குறித்து தெரியுமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

4) இந்திய புலனாய்வுத்துறையான சிபிஐ இந்த வழக்கை விசாரித்தது. மொத்தம் 351 பேர் வழக்கில் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். சுமார் 600 ஆவணங்கள், வழக்கு தொடர்புடையவாகக் கூறி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

5) இந்த வழக்கின் ஆரம்ப காலங்களில் மொத்தம் 48 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால், இந்த 30 ஆண்டுகளில் விசாரணை காலத்திலேயே 16 பேர் உயிரிழந்து விட்டனர்.

6) சிபிஐ தரப்பு முக்கிய வாதமாக, குற்றம்சாட்டப்பட்ட தலைவர்கள், 16ஆம் நூற்றாண்டு பாபர் மசூதியை இடிப்பதற்காக கர சேவகர்களை தூண்டி சதி செய்தனர் என்பதாகும்.

இந்த வழக்கில் 2017ஆம் ஆண்டில் கல்யாண் சிங் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க முடியாத நிலைக்கு அவர் வகித்து வந்த மாநில ஆளுநர் பதவி தடையாக இருந்தது. கடந்த ஆண்டு அவரது பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், அவருக்கு எதிரான குற்றச்சாட்டை நீதிமன்றம் பதிவு செய்ய தடை நீங்கியது.

பாபர் மசூதி இடிந்த கதை குறித்து தெரியுமா?

பட மூலாதாரம்,PRAVEEN JAIN

 

7) வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள், தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க ஆதாரம் இல்லை என்று தொடர்ந்து வாதிட்டன. காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு சம்பவம் நடந்தபோது ஆட்சியில் இருந்ததால் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தங்களை இந்த வழக்கில் சிக்க வைத்ததாக அவர்கள் குற்றம்சாட்டினார்கள்.

😎 இந்த வழக்கில் தனது தரப்பு சாட்சியத்தை காணொளி காட்சி வாயிலாக பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர் எல்.கே. அத்வானி அளித்தார். அப்போது பாபர் மசூதியை இடிக்கும் சம்பவத்தில் எவ்வித குற்றச்சதியிலும் தான் ஈடுபடவில்லை என்று அவர் வாதிட்டார். இந்த வழக்கில் தனது பெயரை தேவையின்றி சிக்க வைத்துள்ளனர் என்றும் அரசியல் அழுத்தம் காரணமாக இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு சாட்சியங்கள் ஜோடிக்கப்பட்டதாக அத்வானி குற்றம்சாட்டினார்.

9) சம்பவம் நடந்த 1992, டிசம்பர் 6ஆம் தேதி, பாபர் மசூதி இருந்த பகுதியை அடைந்த கட்டுக்கடங்காத கர சேவகர்கள் கூட்டம், ராமர் பிறந்த இடமாக இருக்கும் பகுதியில் முதலாம் முகலாய மன்னர் பாபர் மசூதியை கட்டியதாகக் கூறி அதை இடித்தனர்.

10) பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், அயோத்தியில் சர்ச்சைக்குரிய பகுதி ராமருக்கே சொந்தம் என்று கூறியது. அதே சமயம் பாபர் மசூதி இடிக்கப்பட்ட செயலை சட்டவிரோதம் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி இடிக்கப்பட்ட மசூதிக்கு பதிலாக வேறு இடத்தில் மசூதியை கட்டிக் கொள்ள 5 ஏக்கர் நிலம் சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/india-54348232

Link to comment
Share on other sites

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு: தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிரம்

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு: தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிரம்

 

சென்னை, 

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி இடிக்கப்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பா.ஜ.க. மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்பட 49 பேர் மீது குற்றம் சாட்டி சி.பி.ஐ. போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.


17 பேர் இறந்து விட்டதால், மீதி 32 பேர் மீது உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. இறுதி தீர்ப்பு இந்த வழக்கில் இன்று (புதன்கிழமை) வழங்கப்படுகிறது.

இந்த தீர்ப்பையொட்டி நாடு முழுவதும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம் என்று கருதி, அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் டி.ஜி.பி. திரிபாதி இது தொடர்பான எச்சரிக்கை தகவலை அனுப்பி உள்ளார். சென்னையில் முக்கியமான இடங்களில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்படுவார்கள் என்றும், போலீஸ் ரோந்துப்பணி தீவிரப்படுத்தப்படும் என்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/09/30064212/Babri-demolition-case-verdict-today-Police-security.vpf

Link to comment
Share on other sites

பாபர் மசூதி இடிப்பு; பாஜக மூத்த தலைவர்கள் உட்பட அனைவரும் விடுதலை!

இந்தியா – அயோத்தி, பாபர் மசூதி 1992ல் இடிக்கப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாஜகவின் மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர், உபாரதி உட்பட 32 பேரையும் விடுதலை செய்து குற்றப் புலனாய்வு பிரிவு (சிபிஐ) சிறப்பு நீதிமன்றம் இன்று (30) சற்றுமுன் தீர்ப்பளித்துள்ளது.

“பாபர் மசூதி இடிப்பு முன்னரே திட்டமிடப்படவில்லை என்றும், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இல்லை என்றும்” நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய தீர்ப்பின்படி குற்றச்சாட்டப்பட்ட 48 பேரில் உயிருடன் இருக்கும் ஆளும் பாரதியா ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் மூவர் அடங்கலாக 32 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

https://newuthayan.com/பாபர்-மசூதி-இடிப்பு-பாஜக/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாபர் மசூதி இடிப்பு: விடுதலைக்கு நீதிமன்றம் சொன்ன காரணங்கள்!

spacer.png

 

28 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பாபர் மசூதி இடிப்பு வழக்கில் லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 30) தீர்ப்பு வழங்கியது. இவ்வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, கல்யாண் சிங் உள்ளிட்ட 32 பேர் மீது கிரிமினல் சதி, பகைமையை ஊக்குவித்தல், பேச்சின் மூலம் ஒரு செயலை செய்யத் தூண்டுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை சிபிஐ முன்வைத்தது.

இந்த நிலையில் பாபர் மசூதி இடிப்பு என்பது தன்னிச்சையாக நடைபெற்றது, அது முன்கூட்டியே திட்டமிடப்படவில்லை என்றும், அதன் பின்னால் எந்த கிரிமினல் சதியும் இல்லை எனவும் தனது 2000 பக்க தீர்ப்பில் குறிப்பிட்ட நீதிபதி சுரேந்திர குமார் யாதவ், “குவிமாடம் மீது ஏறியவர்கள், மசூதியை இடித்தவர்கள் சமூக விரோத சக்திகள். குற்றம் சாட்டப்பட்டவர்கள் அவர்களுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்பு வைத்திருந்தார்கள் என்பது கண்டறியப்படவில்லை. உண்மையில் குற்றம்சாட்டப் பட்டவர்கள் இடித்த கும்பலைத் தடுக்க முயன்றனர். அவர்களை இடிப்பதற்கு தூண்டவில்லை” என்று கூறியுள்ளார்.

 

அசோக் சிங்கால் மற்றும் பிற சங் பரிவார் தலைவர்கள் ராம் லல்லா சிலைகள் உள்ளே இருந்ததால் மசூதியை இடிப்பதிலிருந்து காப்பாற்றவே விரும்பியதாகவும் குறிப்பிட்ட நீதிபதி, “டிசம்பர் 6 ஆம் தேதி எதிர்பாராத நிகழ்வுகள் நடக்கக்கூடும் என்று உள்ளூர் உளவுத்துறை முன்கூட்டியே எச்சரித்திருக்கிறது. ஆனால், அது கவனிக்கப்படாமல் விடப்பட்டது” என்று கூறினார்.

பாபர் மசூதியை இடிப்பதற்கு முன்னதாக வினய் கட்டியாரின் வீட்டில் ஒரு கூட்டம் நடைபெற்றது, அங்கு கட்டமைப்பை இடிப்பதற்கான சதித்திட்டம் தீட்டப்பட்டது என்பது ஆதாரமற்றது எனக் குறிப்பிட்ட நீதிபதி, “கூட்டத்தின் வீடியோ ஆதாரமாக வழங்கப்பட்டது. எந்தவொரு சதித்திட்டமும் நடந்ததாக வீடியோ சான்றுகள் நிரூபிக்கவில்லை. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சிபிஐ அளித்த ஆடியோ, வீடியோ ஆகியவற்றின் நம்பகத்தன்மை நிரூபிக்கப்படவில்லை. வீடியோ கேசட்டுகள் சீல் வைக்கப்படவில்லை மற்றும் வீடியோக்கள் கூட தெளிவாக இல்லை. ஆடியோவில் இருக்கும் உரைகள் தெளிவாக கேட்கவில்லை” என்றும் குறிப்பிட்டார். குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கூறி 32 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார் நீதிபதி.

“இதுதொடர்பான புகைப்படங்களின் ஒரிஜினல் நெகட்டிவ்களை சமர்பிக்க சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், சிபிஐ நெகட்டிவை சமர்பிக்கவில்லை. மேலும் வீடியோ பதிவுகள் புனையப்பட்டு சிதைக்கப்பட்டன. 65 ஆதாரச் சட்டத்தின் விதிகளை சிபிஐ பின்பற்றவில்லை, அதனால்தான் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் விடுவிக்கப்பட்டனர் "என்று சாக்ஷி மகாராஜின் வழக்கறிஞர் பிரசாந்த் சிங் அடல் கூறினார்.

 

https://minnambalam.com/politics/2020/09/30/32/babri-mosque-demolition-case-all-acquitted-key-points-of-verdict

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

120539984_3414767171950713_6398156830320197306_n.jpg?_nc_cat=111&_nc_sid=8bfeb9&_nc_ohc=9jmG5WhiK-8AX8bTORs&_nc_ht=scontent-frx5-1.xx&oh=97568ffa49b4891c7a2e5b55dd68c200&oe=5F9C114A

 

120192371_3414777131949717_5112940021747349773_n.jpg?_nc_cat=108&_nc_sid=8bfeb9&_nc_ohc=iE6FkABr9ZkAX_AfoGK&_nc_ht=scontent-frt3-1.xx&oh=001a00a8b82fb8c5ea7ecc970de65957&oe=5F998785

 

 

120201977_3414916895269074_2170229134055453503_n.jpg?_nc_cat=110&_nc_sid=8bfeb9&_nc_ohc=bBYZbL7OOhEAX9Nxnit&_nc_ht=scontent-frx5-1.xx&oh=9adb153281a757a91cd81c11c0d5c9d2&oe=5F9B3100

அனைவரும் எதிர்பார்த்த, தீர்ப்பு தான்..!

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/10/2020 at 09:57, தமிழ் சிறி said:

 

 

120201977_3414916895269074_2170229134055453503_n.jpg?_nc_cat=110&_nc_sid=8bfeb9&_nc_ohc=bBYZbL7OOhEAX9Nxnit&_nc_ht=scontent-frx5-1.xx&oh=9adb153281a757a91cd81c11c0d5c9d2&oe=5F9B3100

அனைவரும் எதிர்பார்த்த, தீர்ப்பு தான்..!

tenor.gif நான் அடிச்ச மணி ஆருக்கு கேட்டுச்சோ இல்லியோ அவனுக்கு கேட்டுச்சு .. அடிச்சான் பாரு ஆளுனர்க்கான ஒப்பொயின்ற் மென்ற் ஓடற..☺️..😊

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.