Jump to content

தேயிலைச் சாயம்’: பேசப்படாத மறுபக்கம்


Recommended Posts

தேயிலைச் சாயம்’: பேசப்படாத மறுபக்கம்

பா.நிரோஸ்

மலையகத் தமிழ் மக்களின் வாழ்க்கையை சிறந்த முறையில்  முன்னேற்றுவதற்காகவும் கொள்கை ரீதியான கலந்துரையாடலை உருவாக்கும்  நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டும் ‘தேயிலைச் சாயம்’ என்கிறப் புகைப்படக்  கண்காட்சி, கொழும்பு லயனல் வென்ட் கலையகத்தில், கடந்த வாரத்தின் இறுதியில்  நடைபெற்றது. 

மலையக மக்களின் வாழ்வியலை, புகைப்படங்களின் வாயிலாக சர்வதேசத்துக்கு  உணர்த்திய மிகச் சிறந்த ஓர் ஆவணப்படமாக இந்தக் கண்காட்சி அமைந்திருந்தது  என்றால் அது மிகையாகாது. 

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தினூடாக, ஊவா சக்தி நிறுவனவத்தால்  ஏற்பாடு செய்யப்பட்ட இப்புகைப்படக் கண்காட்சி, நுவரெலியா, பதுளை ஆகிய  மாவட்டங்களிலும் நடைபெற்றிருந்தது.

ஓகஸ்ட் 23ஆம் திகதி, தலவாக்கலை ஸ்ரீ கதிரேசன் மண்டபத்திலும் ஓகஸ்ட்  29ஆம் திகதி ஊவா ஹைலன்ஸ் தமிழ் மகா வித்தியாலயத்திலும் இக்கண்காட்சி  நடைபெற்றது. 

அதனைத் தொடர்ந்து, பதுளை சைமன் பீரிஷ் ஞாபகாரத்த மண்டபத்தில் செப்டெம்பர் 4ஆம், 5ஆம் திகதிகளில் நடைபெற்றிருந்தது. 

நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த இரு தோட்டங்களில், பதுளை மாவட்டத்தைச்  சேர்ந்த இரு தோட்டங்கள் என்பவற்றிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட இளைஞர்,  யுவதிகளுக்கு, கமெரா தொடர்பான முழுமையானப் பயிற்சி நெறிகள் வழங்கப்பட்டு,  புகைப்படத்துறையில் அவர்களது திறமையைப் பறைசாற்றும் வகையில், இப்புகைப்படக்  கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இதன்படி மொத்தமாக 40 இளைஞர், யுவதிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களால்  எடுக்கப்பட்டப் புகைப்படங்களே மேற்குறித்த கண்காட்சிகளில் காட்சிப்  படுத்தப்பட்டிருந்தன. மூன்று மாவட்டங்களிலும் நடைபெற்றக் கண்காட்சிகள்,  பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன. 

கொழும்பில் நடைபெற்றக் கண்காட்சியில், மலையக இளைஞர், யுவதிகள் 40  பேரினால் எடுக்கப்பட்ட 45 ஆயிரம் படங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 100  புகைப்படங்களே, இங்கு காட்சிப்படுத்தப்பட்டன என்று, இக்கண்காட்சியை  ஏற்பாடு செய்திருந்த ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.

இந்தப் புகைப்படக் கண்காட்சியை காலி, களுத்துறை, யாழ்ப்பாணம், வவுனியா  என நாடு முழுவதிலும் ஏற்பாடு செய்ய வேண்டுமெனவும், ஏனைய இன மக்களுக்கும்  மலையக மக்கள் படும் துயரங்களைக் கொண்டுச் சேர்க்க வேண்டுமெனவும்  இப்புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிடுவதற்காக வந்திருந்தவர்கள், கோரிக்கை  விடுத்து வருவதாகவும் தெரிவிக்கிறார்கள்.

பதுளை, நுவரெலியா மாவட்டங்களுக்குச் செல்லும் வீதியோரங்களில் இருக்கும்  கட்டடங்களைப் பார்த்துவிட்டு, மலையகம் அபிவிருத்தியடைந்து விட்டதாக சிலர்  தங்களையும் ஏமாற்றிக்கொண்டு ஏனையவர்களையும் ஏமாற்ற முயற்சிக்கிறார்கள். 

மேலும் இதில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தப் படங்கள் எடுக்கப்பட்டக்  காலம் தொடர்பிலும் பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர் என்றும் ஆனால் இந்தப்  படங்கள் அனைத்தும் 2019, 2020ஆம் ஆண்டுகளில் எடுக்கப்பட்டவைகள் என்பது  உண்மை.

மலையகத்திலிருந்து படித்து முன்னேறி தற்போது கொழும்பில் வாழும்  மலையகத்தின் புத்திஜீவிகள் சிலரும், இந்தப் புகைப்படங்கள் தொடர்பில்  விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். 

மலையகம் அபிவிருத்தி அடைந்துவிட்டது என்றால் எந்தப் படங்கள்  எங்கிருந்து வந்துள்ளன? அந்தந்தப் பிரதேசங்களில் வாழும் இளைஞர்களே இந்தப்  படங்களை எடுத்திருந்தார்கள் என, ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில்  பெரும்பான்மை சமூகங்களும் கவனஞ்செலுத்தி அவற்றுக்கு எதிராக குரல்  கொடுக்கும் நிலைமை ஒன்று மலையகத்தில் உருவாகி வருகிறது.

குறிப்பாக ஆயிரம் ரூபாய் சம்பள விவகாரத்தில், நாட்டிலுள்ள அனைத்துப்  பல்கலைக்கழகங்களின் மாணவர்களும், நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட மக்களும்  போராட்டங்களில் ஈடுபட்டிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

மலையகத்தில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை மலையகம்  அபிவிருத்தியடைந்துவிட்டதாகக் கூறுவது மலையக மக்களுக்குச் செய்யும்  துரோகமாகவே பார்க்கப்பட வேண்டும்.

“தேயிலைச் சாயம்” என்ற தலைப்பில் நடைபெற்ற மலையகம் சார்ந்தப் புகைப்படக்  கண்காட்சியில், மலையக அரசியல்வாதிகளின் சாயமும் வெளுத்திருக்கிறது  என்பதுதான் உண்மை. இக்கண்காட்சி தொடர்பில் பார்வையாளர்களின் கருத்துகள்  சில. 

மஹிந்த தேசப்பிரிய (சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்)

ஒவ்வொரு தேயிலை தோட்டத்தின் வளர்ச்சிக்குப் பின்பும் ஒவ்வொருவர்  உள்ளனர் எனக் கூறுவதுண்டு, அதனை உறுதிப்படுத்துவதாகவே, இங்கு  காட்சிப்படுத்தப்பட்டுள்ள படங்கள் அமைந்துள்ளன.

அனைவரினதும் நோக்கம் ஒற்றுமையான ஒரே தேசத்தைக் கட்டியெழுப்புவதாயின்,  மேற்படி புகைப்படங்களை நாடு முழுவதிலும் காட்சிப்படுத்த வேண்டியது  அவசியமாகும்.

மலையக தமிழ் மக்கள் அனுபவிக்கும் நெருக்கடிகள் தொடர்பாக சகலரையும்  தெளிவுப்படுத்த வேண்டும். இந்நிலைமையிலிருந்து மக்களை எவ்வாறு  மீட்டெடுப்பது, தேயிலைத் தொழிற்றுறையை எவ்வாறு வழி நடத்திச் செல்வது என்பது  ஆராயப்பட வேண்டும் என்றார். 

மலையகத்திலிருந்து மக்களுக்கு தரமான கல்வி, சுகாதார வசதிகள்  கிடைப்பதில்லை என்பதை நாட்டின் சகல பிரஜைகளுக்கும் காண்பிக்க வேண்டுமாயின்  இந்தக் கண்காட்சி நாடு முழுவதிலும் நடத்தப்பட வேண்டியது அவசியம் என்றார்.

அத்தோடு, மலையகத்திலுள்ள பாடசாலைகள், வைத்தியசாலைகளையும் இந்தப்  புகைப்படங்களில் காண்பித்திருக்கலாம். இவ்வாறான ஆலோசணைகளை கூறுவதை  மாத்திரமே தன்னால் செய்ய முடியும் என்றார். 

இந்தக் கண்காட்சி நாட்டிலுள்ள சகல நகரங்களுக்கும் கொண்டுச் செல்லப்பட  வேண்டும் என்றும் உதவிகள் கோரப்படும் பட்சத்தில் ஒத்துழைக்க தயாராக  இருப்பதாகவும் தெரிவித்தார். 

குறிப்பாக யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய மாவட்டங்களில் இந்தக் கண்காட்சியை  நடத்துவதற்குத் தேவையான ஒத்துழைப்புகளையும் வழங்குவதற்குத் தயாராக  இருக்கிறேன் என்றார். 

சின்னையா சிறிதேவி

(ஊவா ஹைலன்ஸ் கல்லூரியின் ஆசிரியர் - பண்டாரவளை) 

“நான் ஆசிரியராகப்  பணியாற்றுகிறேன். படங்களை எடுப்பதற்காக மாணவர்களை தெரிவுசெய்து தரும்படி  என்னிடம் கோரியிருந்தார்கள். புகைப்படத்துறையில் எனக்கிருந்த ஆர்வத்தால்  நானும் புகைப்படப்பிடிப்புத் தொடர்பில் இவர்களோடு இணைந்துப் பயிற்சி  நெறிகளை நிறைவு செய்துகொண்டேன்.

“எனது ஐந்து படங்கள் கொழும்பில் நடைபெற்றக் கண்காட்சியில்  காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மலையகத் தொழிலாளர்கள் குறிப்பாகப் பெண்  தொழிலாளர்களது மனித உரிமைகள் மீறல் தொடர்பில் நான் எடுத்த படமொன்று அதிக  வரவேற்பை பெற்றிருந்தது. 

மலையகத்தில் இருக்கும் பிரச்சினைகளை வெளியில் சொல்வதற்கு  வெட்கப்பட்டுக்கொண்டு இருந்தால் இன்னும் 200 அல்ல 2 ஆயிரம் வருடங்களுக்கும்  மலையகம் இப்படியே இருக்க வேண்டிய நிலையே ஏற்படும்.

எனவே, பிரச்சினைகளை பொதுவெளிக்குக் கொண்டுவர வேண்டும். குறிப்பாக இந்தப்  புகைப்படக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தப் படங்கள்  மிகைப்படுத்தப்பட்டப் படங்கள் அல்ல. இவை அனைத்தும் இந்த சமூகத்தின்  பேசப்படாத மறுப் பக்கத்தையே பேசியிருக்கின்றன என்றார்.

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தேயிலைச்-சாயம்-பேசப்படாத-மறுபக்கம்/91-256116

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.