Jump to content

ஐ.எஸ். குறித்து எச்சரித்தும் நல்லாட்சி அரசு கண்டுகொள்ளவில்லை – விஜயதாச


Recommended Posts

ஐ.எஸ். குறித்து எச்சரித்தும் நல்லாட்சி அரசு கண்டுகொள்ளவில்லை – விஜயதாச

http://athavannews.com/wp-content/uploads/2020/09/Wijeyadasa.jpg

ஐ.எஸ். அமைப்பில் இலங்கையர்களின் ஈடுபாடு குறித்து தான் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட தகவல்கள் தொடர்பாக நல்லாட்சி அரசாங்கம் கவனம் செலுத்தியிருந்தால், பயங்கரவாத தாக்குதல்கள் தடுத்திருக்கலாம் என விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியம் வழங்கியிருந்த அவர், குறித்த தாக்குதலை தடுப்பது மட்டுமன்றி ஐக்கிய தேசிய கட்சியின் அழிவு மற்றும் அதிகார இழப்பு ஆகியனவற்றை தவிர்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் விஜயதாச ராஜபக்ஷவை குறுக்கு விசாரணை செய்ய விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து இவ்விருவரும் கடந்த 28 ஆம் திகதி ஆணைக்குழுவில் ஆஜராக அழைப்பாணை விடுக்கப்பட்டது.

இதற்கு முன்னர் இடம்பெற்ற விசாரணைகளின்போது ஆணைக்குழு முன்னிலையில் விஜயதாச ராஜபக்ஷ, பயங்கரவாதிகளுடன் தொடர்புபட்டவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை சமர்பித்திருந்தார்.

குறித்த பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் பெயரும் உள்ளடக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள விஜயதாச ராஜபக்ஷ எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலி ஆகியோரின் பெயரும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறினார்.

ஐ.எஸ். அமைப்பில் இலங்கையர்களின் ஈடுபாடு குறித்து 2016 நவம்பர் 18 ஆம் திகதி தான் ஆற்றிய உரையினை மறுத்ததன் மூலம் முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் ரஹ்மான் ஆகியோர் பயங்கரவாதத்தை நியாயப்படுத்தினர் என விஜயதாச ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த நேரம் அரசாங்கம் த்னது அறிக்கை குறித்து கவனம் செலுத்தியிருந்தால் ஈஸ்டர் தாக்குதல்கள், ஐக்கிய தேசிய கட்சியின் அழிவு மற்றும் அதிகாரம் இழப்பு ஆகியனவற்றை தவிர்த்திருக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

http://athavannews.com/ஐ-எஸ்-குறித்து-எச்சரித்த/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.