சுவாரசியமான ஒரு திகில் படம் தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கிறது..
ஒருவர் பாதியில் எழுந்து வெளியில் வந்து அவசரமாக வீட்டுக்குப் புறப்படுகிறார் அவரை பார்த்து திரையங்கின் மேலாளர் கேட்கிறார்.....!
"ஏன் சார், படம்பிடிக்கலையா ..?
இல்லை பார்க்க ரெம்ப பயமா இருக்கா.. சார்..? "
"அப்படி எதுவும் இல்லை சார்..படம் நல்லா தான் இருக்கு....,
அப்பே....ஏன்சார் பாதிப்படத்துல எழுந்து போரிங்க... யாராவது பக்கத்துசீட்டு ஆட்கள் பிறச்சனை... பன்னாங்களா..?
அப்படி எல்லாம் எதுவும் இல்லை சார், ஆனா சுவாரசியமா....படத்த பார்த்துட்டு இருக்கும் போது....எனக்குப் பின்னாடி இருந்து ஒரு குரல்.."யோவ்.... தள்ளி உக்காருய்யா உன்தலை எனக்கு படம்பாக்க முடியாம மறைக்குதுன்னு... கோபமா அதட்டிசொன்னாங்க அதான்....."
"அட.... என்ன சார் இதுக்கா கோபப்பட்டுட்டு போரிங்க...சரி நீங்களும் கொஞ்சம் சமாளிச்சு உக்காந்திருக்கலாமில்ல.... நம்ம பின்னாடி உக்காந்திருக்கிறவங்களுக்கு நம்ம தலை மறச்சுதுன்னா.. நாம கொஞ்சம் தள்ளி உக்கார வேண்டியது நீயாயம் தானே......சார்?"
"அட என்ன சார்....நீங்களும் கொஞ்சம் கூட புரியாமல் பேசுறிங்களே நான் உக்காந்திருந்ததே கடைசி வரிசை இருக்கையில தான்.....சார்....!!"
என்னது.......?
Recommended Posts