Jump to content

கலாநிதி கவிஞர் காரை. செ. சுந்தரம்பிள்ளை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
கலாநிதி கவிஞர் 
காரை. செ. சுந்தரம்பிள்ளை
20.05.1938~21.09.2005
 
வாழ்க்கைக் குறிப்பு:
 
ஈழத்தின் வடக்கே அழகிய தீவு காரைநகர்; அங்கு வரலாற்றுக் காலத்தில் மன்னர்கள் போர் புரிந்தார்களென்ற காரணப் பெயருடன் விளங்கும் பூமி, களபூமி எனும் இடம். அதுவே காரை செ. சுந்தரம்பிள்ளையின் பிறப்பிடம். அப்பூமியின் உரமே எப்போதும் தன் வாழ்வின் உரமெனக் கொண்டு வாழ்வோடு போராடிப் போராடி உயர்வு கண்டதே இவரின் வெற்றியாகும். கவிஞர் 1938 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 20 ஆம் திகதி செல்லர் - தங்கம் தம்பதியினருக்கு பிள்ளைகள் ஐவரில் மூன்றாவதாக வந்து பிறந்தார்.
 
காரைநகர் ஊரித் தமிழ்க் கலவன் பாடசாலையில் ஆரம்பக்கல்வி கற்றவர், தொடர்ந்து ஊர்காவற்றுறைப் புனித அந்தோனியார் கல்லூரியில் தனது கல்வியைத் தொடர்ந்தார். சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியில் உயர்தரக் கல்வியையும், கொழும்பு அக்குவேனஸ் பல்கலைக்கழகக் கல்லூரியில் பல்கலைக் கழகக் கல்வியையும் கற்று இளமாணிப் (பீ. ஏ.) பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.
 
1976 ஆம் ஆண்டு நாடகமும் அரங்கியலும் துறையில் பயிற்சி பெறுவதற்காக, கொழும்புப் பல்கலைக்கழகத்தில் இரு வருடங்கள் பயின்று நாடகத்துறையில் டிப்ளோமாப் பட்டம் பெற்றதுடன், கல்வியியல் துறையிலும் டிப்ளோமாப் பட்டத்தினைப் பெற்றுக் கொண்டார். இத்தகைய தகைமைகளைப் பெற்று மீண்டும் யாழ்ப்பாணம் வந்த இவர், அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் மறைந்த திரு. அமிர்தலிங்கம் அவர்களின் வேண்டுதலின் பேரில் தனது ஊர்ப் பாடசாலையான காரைநகர் இந்துக் கல்லூரியின் அதிபராகப் பதவியேற்றார்.
 
அதிபர் பணி தொடரும் வேளை பதவி உயர்வின் நிமித்தம் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்கு விரிவுரையாளராகவும், தொடர்ந்து தலவாக்கலை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை சென்று அக்கலாசாலையின் அதிபரானார். மீண்டும் சிரேஷ்ட விரிவுரையாளராகக் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் இணைந்து, 1998 ஆம் ஆண்டு ஓய்வு பெறும்வரை அங்கு அதிபராகக் கடமையாற்றினார். இக்காலப் பகுதியிலேயே யாழ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களின் நெறியாள்கையின் கீழ் கலாநிதிப் பட்டத்தினையும் பெற்றுக் கொண்டார். ஓய்வுபெற்ற பின்னரும் பலாலி ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையில் ஆங்கில மொழி மூலம் கல்வியியல், உளவியல் ஆகிய பாடங்களைக் கற்பித்தார். கலாசாலையில் கடமையாற்றும் போதே திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் உளவியலையும், யாழ் பல்கலைக்கழகத்தில் நாடகமும் அரங்கியலையும், யாழ்ப்பாணக் கல்லூரியில் இந்துநாகரிகத்தையும் போதிக்கும் இடைவரவு விரிவுரையாளராகப் பணியாற்றினார்.
 
பிற்காலப்பகுதியில் இந்தியாவிற்கு செல்லும் வேளைகளில் சென்னைப் பல்கலைக்கழகம், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம், மதுரை அமெரிக்கன் மிஷன் கல்லூரி, பாளையங்கோட்டை சென். சேவியர் கல்லூரி ஆகியவற்றில் கருத்தரங்குகளை மேற்கொண்டதுடன் நாட்டாரியல் பற்றிய ஆய்வுகளிலும் ஈடுபட்டார். அவற்றின் பயனாகவே இவரது இறுதி நூலான ‘ஈழத்து மலையகக் கூத்துக்கள்’ எனும் நூல் வெளிவந்தது. அதுமட்டுமன்றி ஜேர்மனி நாட்டிற்குச் சென்று, புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ் மாணவர்களின் தமிழ் மொழியை மேம்படுத்துவதற்குத் தயாரிக்கப்பட்ட 'வளர்நிலை' எனும் தமிழ்கல்வி நூலின் ஆசிரியர் குழுவிலும் இடம்பெற்றிருந்தார்.
 
வாழ்வு முழுமையும் கற்றலையும் தேடலையும் தன் வசப்படுத்திக் கொண்டதனால் தன்னையொரு மாணவனாக அடையாளப்படுத்தி வாழ்ந்தார். அதனால் எத்துறையிலும் கற்பிக்கும் ஆற்றலையும் பேசும் ஆற்றலையும் வளர்த்துக் கொண்டார். தமிழ் மொழி, ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் ஏதேனும் சந்தேகம் என்றால் அதற்குரிய நூலைத் தேடி எடுத்து வாசிக்கும் மட்டும் ஓய மாட்டார். பண்டிதர் வித்துவான் க. கி. நடராஜன், வித்துவான் பொன் முத்துக்குமாரன், வித்துவான் க. வேந்தனார், பண்டிதர் ஆ. பொன்னுத்துரை, தமிழ்த்தாத்தா கந்த முருகேசனார், ஆ. சபாரத்தினம் ஆகியோர் கற்பித்த தமிழ் பற்றி எப்போதும் பெருமை கொள்வார். எஸ். செல்லத்துரை, ஜோர்ஜ் மனுவேற்பிள்ளை, அன்ரன் யேசுதாசன், எம். எம். துரைசிங்கம் ஆகிய ஆசிரியர்களிடம் ஆங்கில இலக்கியமும் கற்றிருந்தார். கே. நாகரத்தினம், பிரம்மஸ்ரீ சீதாராமசாஸ்திரிகள், சீ. சீ. எஸ். ஆனந்தகுருகே ஆகியோரிடம் முறையாக சமஸ்கிருதம் கற்றதனால் உச்சரிப்புப் பிழையின்றி சுலோகங்களைச் சொல்லுகின்ற ஆற்றல் அவருக்குச் சாதகமாயிற்று. சண்டிலிப்பாய் நாகரத்தினம் ஆசிரியரிடம் பாளி மொழியையும் வண. மகாநாம தேரரிடம் சிங்கள மொழியையும் கற்றிருந்தார்.
 
தமிழ் மொழி மீதும் சைவ மதம் மீதும் மிகுந்த பற்றுடன் வாழ்ந்த இவர், 1968 ஆம் ஆண்டு தமிழாராட்சி மாநாட்டுக்குத் தமிழ்நாடு சென்று வந்தார். மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் போக முற்பட்டவேளை, அங்கு ஈழத்தமிழர் புறக்கணிக்கப்படுவது கேள்வியுற்றுத் தன்பயணத்தை நிறுத்திக்கொண்டார். தமிழரசுக் கட்சியின் முன்னணிப் பேச்சாளாராகத் திகழ்ந்த இவர் சிங்கள ஸ்ரீ அழிப்பில் பங்குபற்றிச் சிறைக்கும் சென்றவர். ஆவரங்காலில் நடைபெற்ற தமிழரசுக் கட்சி மாநாட்டில் நடைபெற்ற கவியரங்கில் “கேட்டது தமிழீழம் கிடைத்தது ஜப்பான் ஜீப்” எனக் கூற, இளைஞர் அணியொன்று தம் ஆதரவைக் கோசங்களாக்கி மேடை நோக்கி வந்தமை உணர்வுபூர்வ சம்பவமாகும். ஆனாலும் மொழி, மதம் இரண்டையும் நேசித்த போதும் அவற்றினை வெறியாகக் கொண்டவரில்லை; மனிதமே இவரது தலையாய பண்பு.
 
தமிழரசுக் கட்சி உறுப்பினரான இவர் அக்கட்சிக் கூட்டங்களுக்குச் சென்றுவரும் போது வட அல்வை க. முருகேசு ஆசிரியருடன் நெருக்கமான நட்புறவைக் கொண்டிருந்தமையால் அவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த தன் ஏக புதல்வி இந்திராவதியை 1964 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொடுத்தார். இத்தம்பதியர், இல்லற வாழ்வில் கௌசல்யா, மாதவி, பூங்குன்றன், திருப்பரங்குன்றன் ஆகிய நான்கு பிள்ளைகளைப் பேறாகப் பெற்றனர்.
 
ஆரம்ப காலங்களில் இவரது கவியாற்றல் கண்டு கனக செந்திநாதன் மேடைகளில் கவிபாடச் சந்தர்ப்பங்கள் அளித்திருந்தார். தொடர்ந்து அ. செ. முருகானந்தன், மதுரகவி நாகராசன் ஆகியோர் ஊக்குவித்தனர். அன்று வடஈழத்தின் மூலை முடுக்கெல்லாம் இவர் தம் கவிதைகள் அரங்கேறின. கவிதைகளைப் பண்டிதர் முதல் பாமரர் வரை ரசித்துக் கேட்கும் கவியரங்க மேடையை உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவராக இவரை ஈழத்து இலக்கியக்காரர் கூறுகின்றனர். நகைச்சுவையுணர்வுடைய இவர், பட்டிமன்ற மேடைகள், சமயச் சொற்பொழிவுகள், ஆய்வரங்குகள் போன்றவற்றிலும் பாராட்டுப்பெறும் பேச்சாளராக விளங்கினார். அத்துடன் தனியார் கல்வி நிறுவனங்களில் பிரபல்யமான இந்துநாகரிக ஆசிரியராகவும் அறியப்பட்டிருந்தார்.
 
நாடக ஆய்வாளனாக தன்னை இவர் இனங்காட்டிக்கொள்வதற்கு குடும்பச் சூழலும், இயல்பாக அமைந்த நடிப்பாற்றலும் காரணமாகின. இரணிய சம்ஹாரம் (நாட்டுக்கூத்து), Merchant of Venice (ஆங்கில நாடகம்), பராசக்தி (சமூகநாடகம்) என்பவற்றில் நடித்தும் இருக்கின்றார். பாடசாலை, பல்கலைக்கழகம் ஆகியவற்றில் நடிப்புப் பயிற்சியைப் பெற்றதுடன், பெரிய தகப்பன் அண்ணாவியார் ஆண்டிஐயா, ஆசிரியர் ஆ. முருகேசு, நடிகமணி வி. வி. வைரமுத்து ஆகியோருடன் நெருங்கிப் பழகி ஆட்ட நுணுக்கங்களையும், இசை நுணுக்கங்களையும் கற்றிருந்தார். ஆய்வுகளை மேற்கொள்ளுகின்றபோது தனக்கு ஆலோசனைகளை வழங்கி வழிநடத்திய பேராசிரியர் சு. வித்தியானந்தன், பேராசிரியர் கா. சிவத்தம்பி இருவரிடத்திலும் வாழ்நாள் முழுதும் அன்பும், மதிப்பும், நன்றியும் கொண்டவராக இருந்தார்.
 
இவரினால் பின்வரும் நாடகங்கள் இயக்கப்பட்டிருந்தன. அவையாவன, சமூகநாடகங்களாவன: தரகர் தம்பர், தம்பி படிக்கிறான், வாழ்வும் தாழ்வும், சினிமா மோகம், சித்திரமே சித்திரமே. இதிகாச புராண நாடகங்களாவன: பக்தநந்தனார், கர்ணன், சகுந்தலை, தமயந்தி, வில்லொடித்த விதுரன், சிற்பியின் காதல். ஆட்டநாட்டுக்கூத்துக்கள்: பாஞ்சாலி சபதம், மூவிராசாக்கள், முத்தா மாணிக்கமா, காமன்கூத்து. சிறுவர் நாடகங்களாவன: மூத்தோர்சொல் வார்த்தையமுதம், பாவம் நரியார்.
 
விருதுகள் தான் கலைஞனை வாழவைக்கும் என்பதில்லை. ஆனால் கிடைத்த விருதுகள் பதிவிற்குள்ளாவது காலத்தின் தேவையாகும். அவ்வகையில் இவர் பெற்ற பரிசில்கள் பின்வருமாறு:
 
பதுளை பாரதிகல்லூரி 1968 இல் நடத்திய அகில இலங்கை ரீதியான கவிதைப் போட்டியில் முதற்பரிசு, தங்கப்பதக்கம்.
 
யாழ் மாநகரசபை 1969 இல் நடத்திய கவிதைப்போட்டியில் முதற்பரிசு.
 
அகில இலங்கைத் தமிழரசுக் கட்சி 1969 இல் நடத்திய கவிதைப்போட்டியில் முதற்பரிசாகத் தங்கப்பதக்கம்.
 
‘சுதந்திரன்’ நடத்திய கவிதைப்போட்டியில் முதற்பரிசு.
 
தமிழ் காங்கிரஸ் நடத்திய கவிதைப் போட்டியில் சிறப்புப் பரிசு.
 
யாழ் மாநகர சபை 1982 இல் நடத்திய மன்றக் கீதத்திற்கான போட்டியில் முதற்பரிசும், விருதும்.
 
ஈழநாடு தினசரிப் பத்திரிகை 1970 இல் நடத்திய அகில இலங்கைக் காவியப் போட்டியில் ‘சங்கிலியம்’ முதற்பரிசு.
 
யாழ் பல்கலைக்கழகக் கலாநிதிப் பட்டத்திற்கு 1990 இல் சமர்ப்பித்த ஆய்வேடு சிறந்த ஆய்வு எனக் கருதிக் கிடைத்த தம்பிமுத்து கனகசுந்தரம்பிள்ளை நினைவு விருது.
 
இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசுபெற்ற நூல்கள்:
 
தேனாறு (1968), சங்கிலியம் (1970), ஈழத்து இசைநாடக வரலாறு (1990), இந்துநாகரிகத்திற் கலை (1994), நடிகமணி வி. வி. வைரமுத்துவின் வாழ்வும் அரங்கும் (1996).
 
வடக்குக் கிழக்கு மாகாண, சாகித்தியமண்டலப் பரிசுபெற்ற நூல்கள்:
 
இந்துநாகரிகத்திற் கலை (1994), நடிகமணி வி. வி. வைரமுத்துவின் வாழ்வும் அரங்கும் (1996).
 
மேலும் வடக்கு, கிழக்கு மாகாணக்கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சினால் 2000ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட தமிழ் இலக்கிய விழாவின்போது ஆளுநர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
 
யாழ்ப்பாண மாநகரசபையின் மன்றக்கீதத்தை எழுதியதற்காக இவருக்குக் கேடயமும், சான்றிதழும், பொற்கிழியும் வழங்கப்பட்டு அன்றைய மேயராகவிருந்த இராசா. விஸ்வநாதன் அவர்களால் பொன்னாடையும் போர்த்திக் கௌரவிக்கப்பட்டார். பொற்கிழியை எரிந்த யாழ் நூலகத்திற்கு அன்பளிப்புச் செய்தார். யாழ். மாநகர மன்றுக்கான கீதம் திறந்த போட்டியாக இடம்பெற்றுத் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இது தவிர யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையில் அமைந்துள்ள தாதியர் பயிற்சிக் கல்லூரிக் கீதமும், யாழ்பாணம் தேவரையாளி இந்துக் கல்லூரிக் கீதமும் இவரால் ஆக்கப்பட்டவை என்பதுவும் குறிப்பிடத்தக்க விடயங்களாகும்.
 
இவரது ஆக்கமுயற்சிகள் எப்போதும் பெறுமதிமிக்கவையே. அவையாவன:
 
1.   தேனாறு (1968)
2.   சங்கிலியம் (1970)
3.   தவம் (1971)
4.   ஈழத்து இசைநாடக வரலாறு (1990)
5.   பாதைமாறியபோது (1986)
6.   காவேரி (1993)
7.   இந்து நாகரிகத்திற் கலை (1994)
9.   வி.வி. வைரமுத்துவின் வாழ்வும் அரங்கும் (1996)
10.  சிங்களப் பாரம்பரிய அரங்கம் (1997)
11.  பூதத்தம்பி இசை நாடகம் (2000)
12.  வட இலங்கை நாட்டார் அரங்கு (2000)
13.  விவேக சிந்தாமணி - உரைநடை
14.  நாடகதீபம் - தொகுத்தது
15.  உளவியல் - பதிப்பித்தது
16.  கல்வியியல் - பதிப்பித்தது
17.  புள்ளிவிபரவியல் - பதிப்பித்தது
18.  ஈழத்து மலையகக் கூத்துக்கள்
இவர் தன் இல்லற வாழ்விலும் இலக்கிய வாழ்விலும் ‘எறித்த முழுநிலா’ ஆகத் தான் இருந்தார். ஏற்றத்தாழ்வுகள் பார்த்து யாரோடும் உறவு கொண்டாடியதில்லை. எந்த இடத்திலும் தன் ஆளுமையை அடையாளப்படுத்தியபடியே வாழ்ந்தார். சிறியனவற்றைச் சிந்திக்காமையே இவரது பலம்; உயர்ந்த சிந்தனைகளும், மென்மேலும் முன்னேற வேண்டுமென்ற ஆர்வ மிகுதியுமே எப்பொழுதும் காணப்பட்ட விடயங்கள். அவரது முயற்சியே அவரது வளர்ச்சி, தனது உயர்வுகளுக்கு எவரது உதவியையும் நல்கியவரல்ல.
 
உயர் பண்புள்ள நண்பர்களும், உறவுகளும் மாணாக்கர்களும் இவருடன் இரண்டறக் கலந்திருந்தமை என்றும் பலர் வியக்கும் விடயங்கள். அனைத்து வரங்களையும் பெற்ற பூரண மனிதனாக வாழ்ந்த காரை செ. சுந்தரம்பிள்ளை அவர்கள் 2005ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் இருபத்தோராம் நாள் தனது அறுபத்தேழாவது வயதில் இலண்டனில் காலமானார்.
 
    நவில்தொறும் நூனயம் போலும் பயில்தொறும் 
    பண்புடை யாளர் தொடர்பு 
      (அதிகாரம்: நட்பு குறள் எண்:783)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பதிவு நன்றி தோழரே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதிவிற்கு நன்றி வாத்தியார். இவரது இரு மகன்மாரும் சாரண இயக்கம் உட்பட பல சமூக சேவை அமைப்புகளில் இருந்தவர்கள். இளையமகனும் ஒரு எழுத்தாளர் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பெருந்தகையை  ஞாபகப்படுத்தி நினைவுகளை மீட்டதுக்கு நன்றி வாத்தியார்......!  🌹

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அகில இலங்கை கம்பன் விழாவை கவிஞரின் கவிதைகள் பல அலங்கரித்தன. சிறந்த ஒரு கவிஞர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரைப்பற்றி நிறைய எழுதவேண்டும்
இவரிடம் கற்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லையே என்று வருத்தம் உண்டு
இவருடைய வழித்தோன்றல்கள் இவரைப்பின்பற்றி இலக்கிய ஆர்வத்துடன் இருப்பதில் மகிழ்ச்சி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முள்ளிவாய்க்கால் அழிவிற்கு நன்றி சொல்லி பொன்னாடை போர்த்திய நிகழ்வுகளுக்கு ஊமையாக இருந்தோர் சீமான் விடயத்தில் கதறுவது ஏன்?  தமிழை விட திராவிடம் வலிமையானது என்றா?
    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.