Jump to content

கலாநிதி கவிஞர் காரை. செ. சுந்தரம்பிள்ளை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
கலாநிதி கவிஞர் 
காரை. செ. சுந்தரம்பிள்ளை
20.05.1938~21.09.2005
 
வாழ்க்கைக் குறிப்பு:
 
ஈழத்தின் வடக்கே அழகிய தீவு காரைநகர்; அங்கு வரலாற்றுக் காலத்தில் மன்னர்கள் போர் புரிந்தார்களென்ற காரணப் பெயருடன் விளங்கும் பூமி, களபூமி எனும் இடம். அதுவே காரை செ. சுந்தரம்பிள்ளையின் பிறப்பிடம். அப்பூமியின் உரமே எப்போதும் தன் வாழ்வின் உரமெனக் கொண்டு வாழ்வோடு போராடிப் போராடி உயர்வு கண்டதே இவரின் வெற்றியாகும். கவிஞர் 1938 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 20 ஆம் திகதி செல்லர் - தங்கம் தம்பதியினருக்கு பிள்ளைகள் ஐவரில் மூன்றாவதாக வந்து பிறந்தார்.
 
காரைநகர் ஊரித் தமிழ்க் கலவன் பாடசாலையில் ஆரம்பக்கல்வி கற்றவர், தொடர்ந்து ஊர்காவற்றுறைப் புனித அந்தோனியார் கல்லூரியில் தனது கல்வியைத் தொடர்ந்தார். சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியில் உயர்தரக் கல்வியையும், கொழும்பு அக்குவேனஸ் பல்கலைக்கழகக் கல்லூரியில் பல்கலைக் கழகக் கல்வியையும் கற்று இளமாணிப் (பீ. ஏ.) பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.
 
1976 ஆம் ஆண்டு நாடகமும் அரங்கியலும் துறையில் பயிற்சி பெறுவதற்காக, கொழும்புப் பல்கலைக்கழகத்தில் இரு வருடங்கள் பயின்று நாடகத்துறையில் டிப்ளோமாப் பட்டம் பெற்றதுடன், கல்வியியல் துறையிலும் டிப்ளோமாப் பட்டத்தினைப் பெற்றுக் கொண்டார். இத்தகைய தகைமைகளைப் பெற்று மீண்டும் யாழ்ப்பாணம் வந்த இவர், அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் மறைந்த திரு. அமிர்தலிங்கம் அவர்களின் வேண்டுதலின் பேரில் தனது ஊர்ப் பாடசாலையான காரைநகர் இந்துக் கல்லூரியின் அதிபராகப் பதவியேற்றார்.
 
அதிபர் பணி தொடரும் வேளை பதவி உயர்வின் நிமித்தம் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்கு விரிவுரையாளராகவும், தொடர்ந்து தலவாக்கலை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை சென்று அக்கலாசாலையின் அதிபரானார். மீண்டும் சிரேஷ்ட விரிவுரையாளராகக் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் இணைந்து, 1998 ஆம் ஆண்டு ஓய்வு பெறும்வரை அங்கு அதிபராகக் கடமையாற்றினார். இக்காலப் பகுதியிலேயே யாழ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களின் நெறியாள்கையின் கீழ் கலாநிதிப் பட்டத்தினையும் பெற்றுக் கொண்டார். ஓய்வுபெற்ற பின்னரும் பலாலி ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையில் ஆங்கில மொழி மூலம் கல்வியியல், உளவியல் ஆகிய பாடங்களைக் கற்பித்தார். கலாசாலையில் கடமையாற்றும் போதே திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் உளவியலையும், யாழ் பல்கலைக்கழகத்தில் நாடகமும் அரங்கியலையும், யாழ்ப்பாணக் கல்லூரியில் இந்துநாகரிகத்தையும் போதிக்கும் இடைவரவு விரிவுரையாளராகப் பணியாற்றினார்.
 
பிற்காலப்பகுதியில் இந்தியாவிற்கு செல்லும் வேளைகளில் சென்னைப் பல்கலைக்கழகம், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம், மதுரை அமெரிக்கன் மிஷன் கல்லூரி, பாளையங்கோட்டை சென். சேவியர் கல்லூரி ஆகியவற்றில் கருத்தரங்குகளை மேற்கொண்டதுடன் நாட்டாரியல் பற்றிய ஆய்வுகளிலும் ஈடுபட்டார். அவற்றின் பயனாகவே இவரது இறுதி நூலான ‘ஈழத்து மலையகக் கூத்துக்கள்’ எனும் நூல் வெளிவந்தது. அதுமட்டுமன்றி ஜேர்மனி நாட்டிற்குச் சென்று, புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ் மாணவர்களின் தமிழ் மொழியை மேம்படுத்துவதற்குத் தயாரிக்கப்பட்ட 'வளர்நிலை' எனும் தமிழ்கல்வி நூலின் ஆசிரியர் குழுவிலும் இடம்பெற்றிருந்தார்.
 
வாழ்வு முழுமையும் கற்றலையும் தேடலையும் தன் வசப்படுத்திக் கொண்டதனால் தன்னையொரு மாணவனாக அடையாளப்படுத்தி வாழ்ந்தார். அதனால் எத்துறையிலும் கற்பிக்கும் ஆற்றலையும் பேசும் ஆற்றலையும் வளர்த்துக் கொண்டார். தமிழ் மொழி, ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் ஏதேனும் சந்தேகம் என்றால் அதற்குரிய நூலைத் தேடி எடுத்து வாசிக்கும் மட்டும் ஓய மாட்டார். பண்டிதர் வித்துவான் க. கி. நடராஜன், வித்துவான் பொன் முத்துக்குமாரன், வித்துவான் க. வேந்தனார், பண்டிதர் ஆ. பொன்னுத்துரை, தமிழ்த்தாத்தா கந்த முருகேசனார், ஆ. சபாரத்தினம் ஆகியோர் கற்பித்த தமிழ் பற்றி எப்போதும் பெருமை கொள்வார். எஸ். செல்லத்துரை, ஜோர்ஜ் மனுவேற்பிள்ளை, அன்ரன் யேசுதாசன், எம். எம். துரைசிங்கம் ஆகிய ஆசிரியர்களிடம் ஆங்கில இலக்கியமும் கற்றிருந்தார். கே. நாகரத்தினம், பிரம்மஸ்ரீ சீதாராமசாஸ்திரிகள், சீ. சீ. எஸ். ஆனந்தகுருகே ஆகியோரிடம் முறையாக சமஸ்கிருதம் கற்றதனால் உச்சரிப்புப் பிழையின்றி சுலோகங்களைச் சொல்லுகின்ற ஆற்றல் அவருக்குச் சாதகமாயிற்று. சண்டிலிப்பாய் நாகரத்தினம் ஆசிரியரிடம் பாளி மொழியையும் வண. மகாநாம தேரரிடம் சிங்கள மொழியையும் கற்றிருந்தார்.
 
தமிழ் மொழி மீதும் சைவ மதம் மீதும் மிகுந்த பற்றுடன் வாழ்ந்த இவர், 1968 ஆம் ஆண்டு தமிழாராட்சி மாநாட்டுக்குத் தமிழ்நாடு சென்று வந்தார். மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் போக முற்பட்டவேளை, அங்கு ஈழத்தமிழர் புறக்கணிக்கப்படுவது கேள்வியுற்றுத் தன்பயணத்தை நிறுத்திக்கொண்டார். தமிழரசுக் கட்சியின் முன்னணிப் பேச்சாளாராகத் திகழ்ந்த இவர் சிங்கள ஸ்ரீ அழிப்பில் பங்குபற்றிச் சிறைக்கும் சென்றவர். ஆவரங்காலில் நடைபெற்ற தமிழரசுக் கட்சி மாநாட்டில் நடைபெற்ற கவியரங்கில் “கேட்டது தமிழீழம் கிடைத்தது ஜப்பான் ஜீப்” எனக் கூற, இளைஞர் அணியொன்று தம் ஆதரவைக் கோசங்களாக்கி மேடை நோக்கி வந்தமை உணர்வுபூர்வ சம்பவமாகும். ஆனாலும் மொழி, மதம் இரண்டையும் நேசித்த போதும் அவற்றினை வெறியாகக் கொண்டவரில்லை; மனிதமே இவரது தலையாய பண்பு.
 
தமிழரசுக் கட்சி உறுப்பினரான இவர் அக்கட்சிக் கூட்டங்களுக்குச் சென்றுவரும் போது வட அல்வை க. முருகேசு ஆசிரியருடன் நெருக்கமான நட்புறவைக் கொண்டிருந்தமையால் அவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த தன் ஏக புதல்வி இந்திராவதியை 1964 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொடுத்தார். இத்தம்பதியர், இல்லற வாழ்வில் கௌசல்யா, மாதவி, பூங்குன்றன், திருப்பரங்குன்றன் ஆகிய நான்கு பிள்ளைகளைப் பேறாகப் பெற்றனர்.
 
ஆரம்ப காலங்களில் இவரது கவியாற்றல் கண்டு கனக செந்திநாதன் மேடைகளில் கவிபாடச் சந்தர்ப்பங்கள் அளித்திருந்தார். தொடர்ந்து அ. செ. முருகானந்தன், மதுரகவி நாகராசன் ஆகியோர் ஊக்குவித்தனர். அன்று வடஈழத்தின் மூலை முடுக்கெல்லாம் இவர் தம் கவிதைகள் அரங்கேறின. கவிதைகளைப் பண்டிதர் முதல் பாமரர் வரை ரசித்துக் கேட்கும் கவியரங்க மேடையை உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவராக இவரை ஈழத்து இலக்கியக்காரர் கூறுகின்றனர். நகைச்சுவையுணர்வுடைய இவர், பட்டிமன்ற மேடைகள், சமயச் சொற்பொழிவுகள், ஆய்வரங்குகள் போன்றவற்றிலும் பாராட்டுப்பெறும் பேச்சாளராக விளங்கினார். அத்துடன் தனியார் கல்வி நிறுவனங்களில் பிரபல்யமான இந்துநாகரிக ஆசிரியராகவும் அறியப்பட்டிருந்தார்.
 
நாடக ஆய்வாளனாக தன்னை இவர் இனங்காட்டிக்கொள்வதற்கு குடும்பச் சூழலும், இயல்பாக அமைந்த நடிப்பாற்றலும் காரணமாகின. இரணிய சம்ஹாரம் (நாட்டுக்கூத்து), Merchant of Venice (ஆங்கில நாடகம்), பராசக்தி (சமூகநாடகம்) என்பவற்றில் நடித்தும் இருக்கின்றார். பாடசாலை, பல்கலைக்கழகம் ஆகியவற்றில் நடிப்புப் பயிற்சியைப் பெற்றதுடன், பெரிய தகப்பன் அண்ணாவியார் ஆண்டிஐயா, ஆசிரியர் ஆ. முருகேசு, நடிகமணி வி. வி. வைரமுத்து ஆகியோருடன் நெருங்கிப் பழகி ஆட்ட நுணுக்கங்களையும், இசை நுணுக்கங்களையும் கற்றிருந்தார். ஆய்வுகளை மேற்கொள்ளுகின்றபோது தனக்கு ஆலோசனைகளை வழங்கி வழிநடத்திய பேராசிரியர் சு. வித்தியானந்தன், பேராசிரியர் கா. சிவத்தம்பி இருவரிடத்திலும் வாழ்நாள் முழுதும் அன்பும், மதிப்பும், நன்றியும் கொண்டவராக இருந்தார்.
 
இவரினால் பின்வரும் நாடகங்கள் இயக்கப்பட்டிருந்தன. அவையாவன, சமூகநாடகங்களாவன: தரகர் தம்பர், தம்பி படிக்கிறான், வாழ்வும் தாழ்வும், சினிமா மோகம், சித்திரமே சித்திரமே. இதிகாச புராண நாடகங்களாவன: பக்தநந்தனார், கர்ணன், சகுந்தலை, தமயந்தி, வில்லொடித்த விதுரன், சிற்பியின் காதல். ஆட்டநாட்டுக்கூத்துக்கள்: பாஞ்சாலி சபதம், மூவிராசாக்கள், முத்தா மாணிக்கமா, காமன்கூத்து. சிறுவர் நாடகங்களாவன: மூத்தோர்சொல் வார்த்தையமுதம், பாவம் நரியார்.
 
விருதுகள் தான் கலைஞனை வாழவைக்கும் என்பதில்லை. ஆனால் கிடைத்த விருதுகள் பதிவிற்குள்ளாவது காலத்தின் தேவையாகும். அவ்வகையில் இவர் பெற்ற பரிசில்கள் பின்வருமாறு:
 
பதுளை பாரதிகல்லூரி 1968 இல் நடத்திய அகில இலங்கை ரீதியான கவிதைப் போட்டியில் முதற்பரிசு, தங்கப்பதக்கம்.
 
யாழ் மாநகரசபை 1969 இல் நடத்திய கவிதைப்போட்டியில் முதற்பரிசு.
 
அகில இலங்கைத் தமிழரசுக் கட்சி 1969 இல் நடத்திய கவிதைப்போட்டியில் முதற்பரிசாகத் தங்கப்பதக்கம்.
 
‘சுதந்திரன்’ நடத்திய கவிதைப்போட்டியில் முதற்பரிசு.
 
தமிழ் காங்கிரஸ் நடத்திய கவிதைப் போட்டியில் சிறப்புப் பரிசு.
 
யாழ் மாநகர சபை 1982 இல் நடத்திய மன்றக் கீதத்திற்கான போட்டியில் முதற்பரிசும், விருதும்.
 
ஈழநாடு தினசரிப் பத்திரிகை 1970 இல் நடத்திய அகில இலங்கைக் காவியப் போட்டியில் ‘சங்கிலியம்’ முதற்பரிசு.
 
யாழ் பல்கலைக்கழகக் கலாநிதிப் பட்டத்திற்கு 1990 இல் சமர்ப்பித்த ஆய்வேடு சிறந்த ஆய்வு எனக் கருதிக் கிடைத்த தம்பிமுத்து கனகசுந்தரம்பிள்ளை நினைவு விருது.
 
இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசுபெற்ற நூல்கள்:
 
தேனாறு (1968), சங்கிலியம் (1970), ஈழத்து இசைநாடக வரலாறு (1990), இந்துநாகரிகத்திற் கலை (1994), நடிகமணி வி. வி. வைரமுத்துவின் வாழ்வும் அரங்கும் (1996).
 
வடக்குக் கிழக்கு மாகாண, சாகித்தியமண்டலப் பரிசுபெற்ற நூல்கள்:
 
இந்துநாகரிகத்திற் கலை (1994), நடிகமணி வி. வி. வைரமுத்துவின் வாழ்வும் அரங்கும் (1996).
 
மேலும் வடக்கு, கிழக்கு மாகாணக்கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சினால் 2000ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட தமிழ் இலக்கிய விழாவின்போது ஆளுநர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
 
யாழ்ப்பாண மாநகரசபையின் மன்றக்கீதத்தை எழுதியதற்காக இவருக்குக் கேடயமும், சான்றிதழும், பொற்கிழியும் வழங்கப்பட்டு அன்றைய மேயராகவிருந்த இராசா. விஸ்வநாதன் அவர்களால் பொன்னாடையும் போர்த்திக் கௌரவிக்கப்பட்டார். பொற்கிழியை எரிந்த யாழ் நூலகத்திற்கு அன்பளிப்புச் செய்தார். யாழ். மாநகர மன்றுக்கான கீதம் திறந்த போட்டியாக இடம்பெற்றுத் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இது தவிர யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையில் அமைந்துள்ள தாதியர் பயிற்சிக் கல்லூரிக் கீதமும், யாழ்பாணம் தேவரையாளி இந்துக் கல்லூரிக் கீதமும் இவரால் ஆக்கப்பட்டவை என்பதுவும் குறிப்பிடத்தக்க விடயங்களாகும்.
 
இவரது ஆக்கமுயற்சிகள் எப்போதும் பெறுமதிமிக்கவையே. அவையாவன:
 
1.   தேனாறு (1968)
2.   சங்கிலியம் (1970)
3.   தவம் (1971)
4.   ஈழத்து இசைநாடக வரலாறு (1990)
5.   பாதைமாறியபோது (1986)
6.   காவேரி (1993)
7.   இந்து நாகரிகத்திற் கலை (1994)
9.   வி.வி. வைரமுத்துவின் வாழ்வும் அரங்கும் (1996)
10.  சிங்களப் பாரம்பரிய அரங்கம் (1997)
11.  பூதத்தம்பி இசை நாடகம் (2000)
12.  வட இலங்கை நாட்டார் அரங்கு (2000)
13.  விவேக சிந்தாமணி - உரைநடை
14.  நாடகதீபம் - தொகுத்தது
15.  உளவியல் - பதிப்பித்தது
16.  கல்வியியல் - பதிப்பித்தது
17.  புள்ளிவிபரவியல் - பதிப்பித்தது
18.  ஈழத்து மலையகக் கூத்துக்கள்
இவர் தன் இல்லற வாழ்விலும் இலக்கிய வாழ்விலும் ‘எறித்த முழுநிலா’ ஆகத் தான் இருந்தார். ஏற்றத்தாழ்வுகள் பார்த்து யாரோடும் உறவு கொண்டாடியதில்லை. எந்த இடத்திலும் தன் ஆளுமையை அடையாளப்படுத்தியபடியே வாழ்ந்தார். சிறியனவற்றைச் சிந்திக்காமையே இவரது பலம்; உயர்ந்த சிந்தனைகளும், மென்மேலும் முன்னேற வேண்டுமென்ற ஆர்வ மிகுதியுமே எப்பொழுதும் காணப்பட்ட விடயங்கள். அவரது முயற்சியே அவரது வளர்ச்சி, தனது உயர்வுகளுக்கு எவரது உதவியையும் நல்கியவரல்ல.
 
உயர் பண்புள்ள நண்பர்களும், உறவுகளும் மாணாக்கர்களும் இவருடன் இரண்டறக் கலந்திருந்தமை என்றும் பலர் வியக்கும் விடயங்கள். அனைத்து வரங்களையும் பெற்ற பூரண மனிதனாக வாழ்ந்த காரை செ. சுந்தரம்பிள்ளை அவர்கள் 2005ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் இருபத்தோராம் நாள் தனது அறுபத்தேழாவது வயதில் இலண்டனில் காலமானார்.
 
    நவில்தொறும் நூனயம் போலும் பயில்தொறும் 
    பண்புடை யாளர் தொடர்பு 
      (அதிகாரம்: நட்பு குறள் எண்:783)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பதிவு நன்றி தோழரே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதிவிற்கு நன்றி வாத்தியார். இவரது இரு மகன்மாரும் சாரண இயக்கம் உட்பட பல சமூக சேவை அமைப்புகளில் இருந்தவர்கள். இளையமகனும் ஒரு எழுத்தாளர் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பெருந்தகையை  ஞாபகப்படுத்தி நினைவுகளை மீட்டதுக்கு நன்றி வாத்தியார்......!  🌹

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அகில இலங்கை கம்பன் விழாவை கவிஞரின் கவிதைகள் பல அலங்கரித்தன. சிறந்த ஒரு கவிஞர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரைப்பற்றி நிறைய எழுதவேண்டும்
இவரிடம் கற்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லையே என்று வருத்தம் உண்டு
இவருடைய வழித்தோன்றல்கள் இவரைப்பின்பற்றி இலக்கிய ஆர்வத்துடன் இருப்பதில் மகிழ்ச்சி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.