Jump to content

டாக்டர் வசூல் ராணியை வாழ்துவோம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நில்மினி அக்காவின் பதிவுகளை நானும் படிப்பதுண்டு. ஆரோக்கியமாக இருக்க உதவும் பதிவுகள் பலவற்றை எழுதி அசத்தியிருக்கின்றார்.  

கோழி இறைச்சி வெட்டும்போது நான் கோழியைத்தானே வெட்டுகின்றேன், நில்மினி அக்கா மனிசரையே வெட்டேக்கை இதென்ன பெரிய விசயம் என்று சடக்கென்று வெட்டி முடித்துவிடுவேன்😆

Link to comment
Share on other sites

  • Replies 67
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியை திறந்தவர் எதற்கோ உங்களுக்கு ஐஸ் வைக்கிறார் ...கவனம் நில்மினி🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, ரதி said:

இந்த திரியை திறந்தவர் எதற்கோ உங்களுக்கு ஐஸ் வைக்கிறார் ...கவனம் நில்மினி🙂

😂 வேறு ஒன்றும் இல்லை. அமெரிக்கா போகும் சமயம் தப்பி தவறி ஏதாவது நடந்து, ஒரு பையில் போட்டு நில்மினியிடம் ஒப்படத்தாலும், தெரிந்த ஆள் என்றால் மொட்டை கத்தியை நன்றாக தீட்டியபின் பாவிப்பா என்கிற ஒரு முன் ஜாக்கிரதை எண்ணம்தான்😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nilmini said:

வணக்கம் குசா அண்ணா "நேரமும் இல்லை. விம்பங்களும் சரியில்லை அதாலை மனநிலையும் மாறீடும்"  எண்டு குறிப்பிட்டிரிக்கிறீர்கள். நேரமிண்மை புரிகிறது.  விம்பங்களும் சரியில்லை என்பது சரியாக புரியவில்லை. ஏன் அதனால் மனநிலையும் மாறுது? முடிந்தால் அறியத்தரவும்.  

"நில்மினி உண்மையில் ஒரு இரும்பு பெண்மணி"  வாழ்க்கையை முறையாக அணுகி சந்தோசமாக வாழ்வோம் என்று நினைப்பவர்களுக்கு சிலவேளை இரும்பிலும் பார்க்க ஏதாவது கடினமான பொருளாக மாறிவிடுவோமோ என்று தோன்றும் அண்ணா . இந்த உலகம் அப்படி இருக்கு.  

வணக்கம் சகோதரி!
நான் விம்பங்கள் என்று சொன்னது யாழ்கருத்துக்கள முகப்பில் இருக்கும் படங்களைத்தான்.
கருத்துக்களத்தை திறந்தவுடன் முதல் தெரியும் படங்கள். எதற்காக கேவலம் கெட்ட படங்களையும் வடிவேலுவின் படங்களையும் கருத்தோடு சம்பந்தமில்லாமல் எதற்காக இணைக்கின்றார்கள் என்றே தெரியவில்லை.ஏதோ அதி உத்தம ஆசான்களாக  தங்களை காட்டிக்கொள்பவர்கள் ஒரு வரவேற்பு எப்படி இருக்க வேண்டும் என்பதை தெரியாமல் இருப்பது  சம்பந்தப்பட்டவர்களின் உள்மன வெளிப்பாடு என்றே கருத வேண்டியுள்ளது.

அவர்கள் தங்கள் வக்கிரங்களை தீர்க்க பல திரிகள் உள்ளது. இருந்தும்  கண்ணியமற்ற வேலைகளை செய்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்களும் & வாழ்த்துக்களும்..💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

வணக்கம் சகோதரி!
நான் விம்பங்கள் என்று சொன்னது யாழ்கருத்துக்கள முகப்பில் இருக்கும் படங்களைத்தான்.
கருத்துக்களத்தை திறந்தவுடன் முதல் தெரியும் படங்கள். எதற்காக கேவலம் கெட்ட படங்களையும் வடிவேலுவின் படங்களையும் கருத்தோடு சம்பந்தமில்லாமல் எதற்காக இணைக்கின்றார்கள் என்றே தெரியவில்லை.ஏதோ அதி உத்தம ஆசான்களாக  தங்களை காட்டிக்கொள்பவர்கள் ஒரு வரவேற்பு எப்படி இருக்க வேண்டும் என்பதை தெரியாமல் இருப்பது  சம்பந்தப்பட்டவர்களின் உள்மன வெளிப்பாடு என்றே கருத வேண்டியுள்ளது.

அவர்கள் தங்கள் வக்கிரங்களை தீர்க்க பல திரிகள் உள்ளது. இருந்தும்  கண்ணியமற்ற வேலைகளை செய்கிறார்கள்.

அதிகப்பிரசங்கித்தனமானவர்களை நாம் தினமும் பார்த்துக்கொண்டு தானே வருகிறோம். அவற்றையெல்லாம் அப்பப்பவே மறந்து விடுங்கள். 
தினமும் வேலை இடங்களிலும் , உறவுக்கூட்டங்கள் மத்தியிலும் நடக்கும் வேலைகளை பார்க்கும்போது தலை சுற்றும். கதையையும் குறைத்து மனதயும் ஒருமைப்படுத்தினால் பிரச்சனை குறைவு. 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/10/2020 at 05:08, உடையார் said:

நன்றிகளும், பாராட்டுகளும் & வாழ்த்துகளும் நில்மினி🙏

இன்னும் உங்கள் சேவை பலரை சென்றடைய ஆண்டவன் அருள்புரிவாராக🙏

பேதி கொடுத்தை மறக்க மாட்டேன்😪

மிகவும் நன்றி உடையார். என்ன இதுக்கே பேதி குடுத்த மாதிரி கதைக்கிறியள் ? யாயினி கேட்டதக்கிணங்க இனித்தானே வெளியிடப்போறேன்😂 சிறி வேற கண்கள் திறந்தபடி ஒண்டு ரெண்டு படம் போடும்படி கேட்டார் (உங்களுக்காக) 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, கிருபன் said:

நில்மினி அக்காவின் பதிவுகளை நானும் படிப்பதுண்டு. ஆரோக்கியமாக இருக்க உதவும் பதிவுகள் பலவற்றை எழுதி அசத்தியிருக்கின்றார்.  

கோழி இறைச்சி வெட்டும்போது நான் கோழியைத்தானே வெட்டுகின்றேன், நில்மினி அக்கா மனிசரையே வெட்டேக்கை இதென்ன பெரிய விசயம் என்று சடக்கென்று வெட்டி முடித்துவிடுவேன்😆

மனுசரையே வெட்டும்போது கோழியெல்லாம் சிம்பிள் என்ன கிருபன்? 😂உண்மையில் மகன்மாருக்கு கோழி சமைக்கும்போது எனக்கு நான் வெட்டும் மனிதர்களின் உடல்களே நினைவுக்கு வரும்🙄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/10/2020 at 06:18, உடையார் said:

நீங்கள் முந்திவிட்டீர்கள் நில்மினியை வாழ்த்தியலில்👍, அவரின் சேவை பலருக்கு தேவை. நில்மினிதான் எனுக்கும் ஒரு நல்ல இல்லத்தை கை காட்டினார். அவரால் பலர் நன்மை பெறுகின்றார்கள். 

இனி கொஞ்ச நேரத்தில் படுக்க போவதால் சிலதை கதைக்க விரும்பவில்லை😷😬 

காக்க காக்க கனக வேல் காக்க 🙏

"காக்க காக்க கனக வேல் காக்க "  🤣  இரவு படுக்க போகமும் இதை வாசித்து சிரித்துவிட்டுதான் படுத்தேன் உடையார். இன்னும் சிரிப்பு அடங்கவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nilmini said:

மிகவும் நன்றி உடையார். என்ன இதுக்கே பேதி குடுத்த மாதிரி கதைக்கிறியள் ? யாயினி கேட்டதக்கிணங்க இனித்தானே வெளியிடப்போறேன்😂 சிறி வேற கண்கள் திறந்தபடி ஒண்டு ரெண்டு படம் போடும்படி கேட்டார் (உங்களுக்காக) 🤔

அந்தளவு பார்க்கும் தைரியம் நாமகில்லை ஆள விடுங்க, அடிக்கடி இப்படி பயமுறுத்திறதே வேலைய போச்சு😬

 

11 hours ago, nilmini said:

"காக்க காக்க கனக வேல் காக்க "  🤣  இரவு படுக்க போகமும் இதை வாசித்து சிரித்துவிட்டுதான் படுத்தேன் உடையார். இன்னும் சிரிப்பு அடங்கவில்லை. 

பூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்கு வேதனை, சிரியுங்கோ சிரியுங்கோ எங்களுக்கும் ஒரு காலம் வரும் அப்ப உங்களை பார்த்து கொள்கிறோம் 😂

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் நில்மினி அக்கா!! உங்கள் சேவைமனமும், அயராத உழைப்பும், மற்றவர்களில் மேலுள்ள அக்கறையும், எம் மண்ணின் பற்றும் அதைவிட பெருமையில்லா குணமும்  பிரமிக்கவைக்கின்றது.

உங்களை பார்த்து நிறைய கற்றுக்கொள்ளவும் இருக்கின்றது. உங்களுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!!! 💐👏

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, nilmini said:

மனுசரையே வெட்டும்போது கோழியெல்லாம் சிம்பிள் என்ன ? 😂உண்மையில் மகன்மாருக்கு கோழி சமைக்கும்போது எனக்கு நான் வெட்டும் மனிதர்களின் உடல்களே நினைவுக்கு வரும்🙄

உங்களுக்கு துடிக்கத்துடிக்க வெட்டுற கொத்துற மனப்பக்குவம் வந்திருக்கும் எண்டு நினைக்கிறன் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டாகடர்  நில்மினி யாழ் கள உறவுகளுக்கு கிடைத்தது ஒரு பெரும் பரிசு போல . . கேள்விகளுக்கெல்லாம் சளைக்காமல் பதில் தருவார் . இடையிடையே சாப்பாட்டு ராமன்  புகை பிடி காரனின் ஈரல்  என வேடிக்கையும் கலந்து தருவார் . எங்கேயிருந்தாலும் யாழ்க்களத்துடன் தொடர்பில் இருங்கள் என்நன்றிகளும் பாராட்டுக்களும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நில்மினி அக்கா. உங்கள் பணி மென்மேலும் வளர வேண்டும் என்று வாழ்த்துகிறேன். 

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் நில்மினி. யாழ் இணையத்தின் மூலம் கிடைத்த உங்களின் அறிமுகம் எங்களுக்கு பெருமிதம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நில்மினி அக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள  உறவுக்குகளுக்கு மீன்றும் நன்றி: ராசவன்னியன் அவர்கள், புரட்சிகர தமிழ்தேசியன், வாதவூரான்,முதல்வன், ஜெகதா துரை , கொழும்பான் எல்லோருக்கும் மிகவும் நன்றி. 
தமிழினி: என்னை இவ்வளவு தூரம் பாராட்டியதுக்கு மிகவும் நன்றி. எதயாவது உருப்படியாக  செய்து மற்றவர்களுக்கும் எமக்கு தெரிந்ததை பகிர்ந்து, எம்மை விட கஸ்டமான நிலையில் உள்ளவர்கள் குறிப்பாக சிறுவர்களுக்கு எனக்கு முடிந்ததை செய்து வந்தால் இறுதியில் வாழ்ந்த வாழ்க்கையில் ஒரு அர்த்தமாவது இருக்கும். வந்தோம் இருந்தோம் போனோம் என்றில்லாமல் நாம் எல்லோருமே அதற்கு ஒரு படி மேல் போக வேணும். 
நிலாமதி: என்னைப்போலவே உங்களுக்கும் இயற்கையிலேயே நகைச்சுவை உணர்வு இருப்பது தெரிகிறது. உங்கள் பாராட்டுக்கு மிகவும் நன்றி. ஈரலை குடித்து கெடுத்து, நுரையீரலை புகைத்து கெடுத்து, குடலை சாப்பிட்டு கெடுப்பவர்கள் அதிகம். கடந்த ஒரு வருடமாக வெட்டி கொத்திய உடல்களை எல்லாம் வேலை முடிந்து, செத்த வீடு வைத்து funerla home க்கு அனுப்பியாச்சு. இப்ப திரும்பவும் எனக்கென்று ரெண்டு உடல்கள் (ஆண் , பெண், மாணவர்களுக்கு 5 பேருக்கு ஒரு உடல் ) தந்திருக்கிறார்கள். செய்வாய் கிழமை கற்பூரம் கொளுத்தி பூசையை துடங்க வேண்டியதுதான். முதலாவது வேலை அம்பட்டன் வேலையில்  துடங்கி தோல் எல்லாம் வெட்டவேணும். அப்படியே தொடரும். புதன் கிழமை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு முதல் வகுப்பு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கும் நானும் ஒரு வாழ்த்தை டாக்டர் நில்மினி அம்மாவுக்கு சொல்லி வைப்பம்...இல்லாட்டில் கொஞ்ச  பேர் எரிச்சல் என்று சொல்லுவினம்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரதி said:

எதுக்கும் நானும் ஒரு வாழ்த்தை டாக்டர் நில்மினி அம்மாவுக்கு சொல்லி வைப்பம்...இல்லாட்டில் கொஞ்ச  பேர் எரிச்சல் என்று சொல்லுவினம்.
 

உங்களை யார் என்ன ஏது என்று தெரியாமலேயே உங்கள் ஆளுமையை ஓரளவு விளங்கி வச்சிருக்கிறன் என்று நினைக்கிறன் ரதி 🤔 என்றபடியால் இந்த திரியில் வந்து வாழ்த்தினாலும் வாழ்த்தாவிட்டாலும் மனதளவில் பாராட்டுவீர்கள்  என்று  எனக்கு தெரியும். பாராட்டுக்கு நன்றி:295_rose: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/10/2020 at 22:14, குமாரசாமி said:

உங்களுக்கு துடிக்கத்துடிக்க வெட்டுற கொத்துற மனப்பக்குவம் வந்திருக்கும் எண்டு நினைக்கிறன் 😁

எனக்கும் சின்ன வயிதில் அந்த பயமிருக்கவில்லை, இப்ப நினைத்தாலும் நடுங்குகின்றது

 

16 hours ago, ரதி said:

எதுக்கும் நானும் ஒரு வாழ்த்தை டாக்டர் நில்மினி அம்மாவுக்கு சொல்லி வைப்பம்...இல்லாட்டில் கொஞ்ச  பேர் எரிச்சல் என்று சொல்லுவினம்.
 

இதுவரை உங்களுக்கு எது சரியோ அப்படியே கருத்துக்களை பதிவிட்டீர்கள், இன்று இப்படி மற்றவர்களுக்காக பதிவிட்டீருக்கின்றீர்கள், ரதி ரதியாக இருக்க வேண்டும்👍 அது ஒரு கெத்து ரதிக்கு

ரதி யாரும் அப்படி நினைக்கமாட்டார்கள், உங்களை தெரிந்த அனைவரும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் மருத்துவ சகோதரி நில்மினி.
இவர் எழுதும் மருத்துவத்துறை தாண்டி ஆழமான ஆன்மீக தேடலையும் கொண்டவர் என்பது ஒரு சிறப்பம்சம்.
உங்களின் உடல் , உள ஆரோக்கியத்திற்கு இறைவனை வேண்டுகிறேன். தொடர்ந்து எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ரதி said:

எதுக்கும் நானும் ஒரு வாழ்த்தை டாக்டர் நில்மினி அம்மாவுக்கு சொல்லி வைப்பம்...இல்லாட்டில் கொஞ்ச  பேர் எரிச்சல் என்று சொல்லுவினம்.
 

உங்களுடன் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள் இரதி.

தகுதியான ஒருவரைப் பாராட்டுவதற்கு எனக்கு முதலில் தகுதி வேண்டுமே... 🤔

எதற்கும் அவருக்கு எனது வாழ்த்தைத் தெரிவிப்போம். (பின்னுக்கு உதவும்)😂

நில்மினி அக்காவுக்கு எனது உளமார்ந்த பாராட்டுக்கள் உரித்தாகுக. 💐💐

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.