Jump to content

பில்லேடனுக்கு சிலை வைக்க முடியாது; அதுபோல் திலீபனை நினைவேந்த முடியாது – கூறுகிறார் ஊடக அமைச்சர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

“தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரான திலீபனை நினைவு கூருவதற்கு அனுமதியளிக்க முடியாது.”

இவ்வாறு வெகுசன ஊடக அமைச்சர் ஹெஹெலிய ரம்புக்வெல இன்று (02) யாழ்ப்பாணத்தில் வைத்து தெரிவித்துள்ளார். மேலும்,

“பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவரை நினைவு கூருவது நிரந்தர சமாதானத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகையனால் அத்தகைய நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒசாமா பில்லேடன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்பதால் கொல்லப்பட்டிருக்கின்றார். அவருக்கு அமெரிக்காவில் சிலை வைக்க முடியாது. அது போலவே பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவராகவே திலீபனும் காணப்படுகின்றார். ஆகையினால் அவருக்கு சிலை வைக்கவோ நினைவு கூரவோ முடியாது.” – என்றார்.https://newuthayan.com/பில்லேடனுக்கு-சிலை-வைக்க/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹெஹெலிய ரம்புக்வெல.... கிறுக்குப் பயல். 
முன்பு அமைச்சராக  இருந்த போது, 
தனது மகனைப் பார்க்க... அவுஸ்திரேலியா சென்று, அங்கு தண்ணியடித்து... வெறியில்,
சாமம் இரண்டு மணிக்கு...  பல்கனியில் இருந்து, கீழே விழுந்து எலும்பு முறிந்து இருந்த ஆள்.
அதனைக்  கேள்விப் பட்ட மகிந்த,  இவரை சில காலம் ஒதுக்கி வைத்திருந்தார்.

பிறகு... இப்ப, யாழ்ப்பாணம் வந்து.. பனங்கள்ளை குடித்து விட்டு, 
உளறுவதை எல்லாம், நாம்.. கணக்கில் எடுக்கப் படாது.

Link to comment
Share on other sites

7 hours ago, தமிழ் சிறி said:

தனது மகனைப் பார்க்க... அவுஸ்திரேலியா சென்று, அங்கு தண்ணியடித்து... வெறியில்,
சாமம் இரண்டு மணிக்கு...  பல்கனியில் இருந்து, கீழே விழுந்து எலும்பு முறிந்து இருந்த ஆள்.

விழுந்து முறிந்தது மட்டுமல்ல தமிழ்  சிறி இவர் ஹோட்டலுக்கு எதிராக  நஷ்ட ஈடு கேட்டு வழக்குப்போட்டு காசும் எடுத்தவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, puthalvan said:

விழுந்து முறிந்தது மட்டுமல்ல தமிழ்  சிறி இவர் ஹோட்டலுக்கு எதிராக  நஷ்ட ஈடு கேட்டு வழக்குப்போட்டு காசும் எடுத்தவர்.

அட... இந்த விசயத்தை, இப்பதான் கேள்விப் படுகின்றேன்.
சிங்கள வெறிக்குட்டி... அமைச்சர்   எல்லாம், யாழ்ப்பாணத்துக்கு வந்து,
எமக்கு... "ரியூஷன்" எடுப்பதை பார்க்க... கடுப்பு வருகுது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

அட... இந்த விசயத்தை, இப்பதான் கேள்விப் படுகின்றேன்.
சிங்கள வெறிக்குட்டி... அமைச்சர்   எல்லாம், யாழ்ப்பாணத்துக்கு வந்து,
எமக்கு... "ரியூஷன்" எடுப்பதை பார்க்க... கடுப்பு வருகுது. 

அதுங்க பிழைப்பு அப்பிடி.  ஊளையிட்டு தங்கள் ஊழல்களை மறைக்கபாக்குதுகள்.கோத்தாவே கணக்கெடுக்க மாட்டார் உவரை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பிழம்பு said:

“தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரான திலீபனை நினைவு கூருவதற்கு அனுமதியளிக்க முடியாது.”

இவ்வாறு வெகுசன ஊடக அமைச்சர் ஹெஹெலிய ரம்புக்வெல இன்று (02) யாழ்ப்பாணத்தில் வைத்து தெரிவித்துள்ளார். மேலும்,

“பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவரை நினைவு கூருவது நிரந்தர சமாதானத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகையனால் அத்தகைய நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒசாமா பில்லேடன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்பதால் கொல்லப்பட்டிருக்கின்றார். அவருக்கு அமெரிக்காவில் சிலை வைக்க முடியாது. அது போலவே பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவராகவே திலீபனும் காணப்படுகின்றார். ஆகையினால் அவருக்கு சிலை வைக்கவோ நினைவு கூரவோ முடியாது.” – என்றார்.https://newuthayan.com/பில்லேடனுக்கு-சிலை-வைக்க/

இப்படிக் கதைப்பதை எப்படி யாழ்ப்பாண ஊடகவியலாளரகள் பார்த்துக்கொண்டு நின்றார்கள்?

எப்படிதைரியம் வந்தது சிங்களவனுக்கு?

ஓ.... சுமந்திரனே கதைத்துவிட்டு தைரியமாக உலாவமுடியுமென்றால் தனக்கு ஒரு மிரச்சனையும் வராது என்று எண்ணம்தான்

 

 

Link to comment
Share on other sites

6 hours ago, தமிழ் சிறி said:

அட... இந்த விசயத்தை, இப்பதான் கேள்விப் படுகின்றேன்.
சிங்கள வெறிக்குட்டி... அமைச்சர்   எல்லாம், யாழ்ப்பாணத்துக்கு வந்து,
எமக்கு... "ரியூஷன்" எடுப்பதை பார்க்க... கடுப்பு வருகுது. 

தமிழ் சிறி நான் அடுத்து சொல்லும் விஷயம் உங்களுக்கு இன்னும் கொஞ்சம் கடுப்பேத்தும்.  வழக்கு நடந்துகொண்டிருந்த அதேநேரம் தான் அமைச்சராக இருந்தவேளையில் நடந்த விபத்தாக காரணம் காட்டி இவர் ஜனாதிபதி நிதியில் இருந்து 20மில்லியன் ரூபா எடுத்தவர். இந்த விடயம் பின்னர் விசாரணையும் செய்யப்பட்டது. உண்மையில் இப்படி ப்பட்டவர்கள் தான் ஸ்ரீலங்காவுக்கு அமைச்சராக இருக்க தகுதியானவர்கள்!

இவருடைய மகன் இவரை வெண்டவர். ஒரு செய்தியின் படி பிரிட்டிஷ் விமான கதவை மலசலகூட கதவு என்று நினைத்து திறக்க முயன்றவர். அதுவும் 35,000 அடி உயரத்தில். அதோடு தந்தையார் கதவு ஓடைக்குளால் இன்னொரு அறையை பார்க்கவெளிக்கிட்டு தான் விழுந்ததாக இந்த கட்டுரையில் பிரஸ்தாபித்துள்ளனர். இதோ செய்தி: http://www.gbdigest.com/2013/08/breaking-news.html


மற்ற செய்தியின் மூலங்கள்.

https://www.timeslanka.com/2012/11/20/minister-rambukwella-takes-melbourne-hotel-to-court/

https://colombogazette.com/2016/06/14/fcid-grills-keheliya-on-funds-obtained-after-australia-accident/

Link to comment
Share on other sites

1 hour ago, ragaa said:

எப்படிதைரியம் வந்தது சிங்களவனுக்கு?

ஓ.... சுமந்திரனே கதைத்துவிட்டு தைரியமாக உலாவமுடியுமென்றால் தனக்கு ஒரு மிரச்சனையும் வராது என்று எண்ணம்தான்.

உங்களால் என்ன செய்ய முடியும்? யாழ் களத்தில் எழுத முடியும் - அவ்வளவுதான் உங்களால் முடிந்தது என்பது அவர்களுக்கும் தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திலீபனை நினைவுகூர அனுமதிக்க முடியாது என்றபோது இரு முகங்களில் தவழும் சந்தோசம்.

a30LSKix?format=jpg&name=small

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கற்பகதரு said:

உங்களால் என்ன செய்ய முடியும்? யாழ் களத்தில் எழுத முடியும் - அவ்வளவுதான் உங்களால் முடிந்தது என்பது அவர்களுக்கும் தெரியும்.

அப்ப கடைசியில் ஒப்புகொண்டாச்சு போல சிங்களவனும் சுமந்திரனும் ஒரெமாதிரிதான் நடக்கிறார்கள் என்று நன்றி கற்பகம்🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

திலீபனை நினைவுகூர அனுமதிக்க முடியாது என்றபோது இரு முகங்களில் தவழும் சந்தோசம்.

a30LSKix?format=jpg&name=small

கெஹெலியவுக்கு இருமருங்கிலும் அமர்ந்திருப்பது அங்கஜனும் வியாழேந்திரனும் தானே? அடிமைகளின் விசுவாசம் முகத்தில் அப்படியே பளிச்சென்று தெரிகிறது. 

Link to comment
Share on other sites

6 hours ago, ragaa said:

அப்ப கடைசியில் ஒப்புகொண்டாச்சு போல சிங்களவனும் சுமந்திரனும் ஒரெமாதிரிதான் நடக்கிறார்கள் என்று நன்றி கற்பகம்🙏

நீங்களும் அவர்கள் போல தானே நடக்கிறீர்கள்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, puthalvan said:

விழுந்து முறிந்தது மட்டுமல்ல தமிழ்  சிறி இவர் ஹோட்டலுக்கு எதிராக  நஷ்ட ஈடு கேட்டு வழக்குப்போட்டு காசும் எடுத்தவர்.

அவரில் பிழை என்றால் அந்த ஹொட்டல் எப்படி அவருக்கு காசு கொடுத்தது ? 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

அவரில் பிழை என்றால் அந்த ஹொட்டல் எப்படி அவருக்கு காசு கொடுத்தது ? 

 

இது Hotel இன்R esponsibilities என்கின்ற வரையறைக்குள் வரும் என்று நினைக்கிறேன்.🤔

எங்கே லாயர் வண்டு முருகனைக் காணோம். 

லாயர் வண்டு முருகன்.. வண்டு முருகன்... வண்டு முருகன்..... 

😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

அவரில் பிழை என்றால் அந்த ஹொட்டல் எப்படி அவருக்கு காசு கொடுத்தது ? 

 

சுத்துமாத்து தெரியாத தங்கச்சி.... 🙃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

இது Hotel இன்R esponsibilities என்கின்ற வரையறைக்குள் வரும் என்று நினைக்கிறேன்.🤔

எங்கே லாயர் வண்டு முருகனைக் காணோம். 

லாயர் வண்டு முருகன்.. வண்டு முருகன்... வண்டு முருகன்..... 

😜

நல்ல விசயங்களுக்கு அவர் வரார் எண்டு சொல்லுறதை விட அவர் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டார் 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதம் தூக்கியோரை தெற்கில் நினைவு கூற முடியமென்றால் ஏன், வடக்கில் முடியாது? மனோ

1970/80 களில் இலங்கை அரசுக்கும், இராணுவத்துக்கும் எதிராக ஆயுதம் தூக்கிய, ஜேவிபியின் தேசப்பிரேமி இயக்க போராளிகள் இன்று தெற்கில் பகிரங்கமாக நினைவுகூறப்படும் போது, அதே வரப்பிரசாதம் வடக்கில் தமிழருக்கு இல்லை? இதனால், இந்த அஈசாங்கம் இப்போது அடிக்கடி சொல்லும், “ஒரே நாடு-ஒரே சட்டம்” என்ற கொள்கை ஒரு கேலி-கூத்தாக தெரிகிறது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்பி, தனது டுவீடர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்குபவர்களை அரசாங்கம் தனது கணிப்பீட்டின்படி “பயங்கரவாதிகள்” என்கிறது. அப்படியானால், 1970ம் , 80ம் ஆண்டு களில் இலங்கை அரசுக்கும், ராணுவத்துக்கும் எதிராக ஆயுதம் தூக்கிய ஜேவிபியின் தேசப்பிரேமி இயக்க போராளிகள், “சிங்கள பயங்கரவாதிகள்கள்” ஆவர். இவர்கள் வருடாவருடம், தெற்கில் பகிரங்கமாக நினைவுகூறப்படுகிறார்கள்.

ஆனால், அதே வரப்பிரசாதம், தமிழர்களுக்கு இல்லை. “தமிழ் பயங்கரவாதிகளை” என்ற தமிழ் ஆயுததாரிகளை மட்டுமல்ல, பலவேளைகளில் மரணித்த சாதாரண மக்களையே பகிரங்கமாக நினைவு கூற, தமிழர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

இது இந்நாட்டில் நீண்ட நாளாக நடந்து வரும் ஒரு இரட்டை நிலைப்பாடு கொண்ட பாரபட்ச கொள்கை ஆகும். இதற்கு இடையில் இன்று இந்த அரசு, மேலும் ஒரு கொள்கையை பற்றி பேசி வருகிறது. அதுதான், “ஒரே நாடு-ஒரே சட்டம்” என்ற கொள்கை ஆகும். இது இந்நிலைமையை இன்னமும் கேலி-கூத்தாக மாற்றி உள்ளது.

அதாவது, மறைந்த தமது உறவுகளை தமிழர் நினைவு கூறுவது மறுக்கபடுவதும், அதே உரிமை சிங்களவருக்கு வழங்கப்படுவதும், இந்நாட்டில் அரசின் இரட்டை கொள்கையின் அடிப்படையில் கேலி கூத்தாக அமைகிறது. மறுபுறம் தமிழ் மக்களை பொறுத்தவரையில் இது பெரும் சோகமாக அமைகிறது.

இந்த இரட்டை கொள்கை உடன் முடிவுக்கு வரவேண்டும். இதுபற்றி தேசிய கலந்துரையாடல் நடைபெற வேண்டும். இதுபற்றி எவருடன் வேண்டுமென்றாலும், மூன்று மொழிகளிலும் பகிரங்க விவாதம் நடத்த நான் தயார்.

 

http://www.ilakku.org/ஆயுதம்-தூக்கியோரை-தெற்கி/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

திலீபனை நினைவுகூர அனுமதிக்க முடியாது என்றபோது இரு முகங்களில் தவழும் சந்தோசம்.

a30LSKix?format=jpg&name=small

வாக்குக் கேட்கும் போது புலிப்பாட்டு... வாக்கு வீழ்ந்த பின்.. சிங்களத்துதிபாடல்.

இவங்களுக்கு வாக்குப் போட்டவங்களுக்கு பிச்சையும் போடக் கூடாது.

பின்லாடன் சொந்த இனத்தின் விடுதலைக்காகப் போராடவில்லை.. அவர்களின் உரிமைக்காகப் போராடவில்லை.. அமெரிக்க ஏவலுக்காகப் பயங்கரவாதம் செய்தார்... எஜமானர்களாலேயே அழிந்தார்.. சிலை வைக்க யாரும் துணியவில்லை.

ஆனால் ஹிந்திய மக்களின் விடுதலைக்காகப் போராடிய பிரித்தானிய பார்வையில் பயங்கரவாதியான.. ஹாந்திக்கு... சிலை உண்டு.  தென்னாபிரிக்க கறுப்பின மக்களின் விடுதலைக்காகப் போராடிய மண்டேலாவுக்கு.. வெள்ளையின அரசின் பார்வையில் கொடிய பயங்கரவாதி.. சிலை உண்டு.

ஏன் சிங்கள அரச பயங்கரவாதத்தை எதிர்த்து இரண்டு பெரும் கிளர்ச்சிகளில் ஈடுபட்ட சிங்கள பெளத்த பேரினவாத அரசுகளுக்கு இன்று முட்டுக்கொடுக்கும்.. விமல் வீரவம்ச என்ற முன்னாள் பயங்கரவாதி வந்த ஜே வி பி கட்சியின் தலைவர் பயங்கரவாதி.. ரோகண விஜயவீரவுக்கும் சிலை உண்டு..

ஏன் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் சமூக உரிமைக்காக உண்ணா நோன்பிருந்து அதுவும் ஆயுதக் கையளிப்பின் பின்.. ஆயுதங்கள் மெளனிக்கப்பட்ட நிலையில்.. போராடி உயிர் நீத்த திலீபனுக்கு தமிழ் மக்கள்.. சிலை வைக்க முடியாது.

ஹாந்தி.. மண்டேலா.. ரோகண விஜயவீரவுக்கு மேலான தகுதி திலீபனுக்கு உண்டு.

அதனை குடிகாரன் சிங்கள பெளத்த பேரினவாத அரச பயங்கரவாதி.. ஹெகலிய ரம்புக்வலவுக்கு விளங்க வைக்க ஏன் அந்த வலதும் இடதும் முயலவில்லை..??! 

Link to comment
Share on other sites

14 hours ago, ரதி said:

அவரில் பிழை என்றால் அந்த ஹொட்டல் எப்படி அவருக்கு காசு கொடுத்தது ? 

ரதி, தனது அறையில் இருந்த பல்கனி கதவை திறந்து பல்கனிக்கு போனபொழுது கதவு பின்னால் மூடிக்கொண்டது. கதவில் one-way or exit லாக் (வெளியில் இருந்து திறக்கமுடியாது )என்பதால்  இவர் மறுபடியும் உள்செல்ல முடியவில்லை.எனவே இவர் தனது அறைய அடைய முயறசி செய்த்தபொழுது விபத்து நடைபெற்றது.

எனவே அந்த ஹோட்டல் இந்த கதவு விடயத்தில் தவறிழைத்து விட்டதாக தான் வழக்கு. சட்டத்தின் முன் அவர் போதையில் இருந்தார் என்பதோ அல்லது அவர் ஒரு இனொரு நாட்டில் அமைச்சர் என்பதோ அல்லது ஏன் வெளியில் வந்தார்  என்பதோ பெரிதாக தாக்கம் செலுத்தியிருக்கமாட்டாது. அவர் அமைச்சரோ, ஆட்டுக்குட்டியோ அந்த அந்த ஹோட்டல் அங்கு தங்குமவர்களின் பாதுகாப்பு விடயத்தில் குறைந்தளவு நடவடிக்கைளை எடுத்ததா (Hotel liability: Duty to exercise reasonable care for the safety and security of their patrons) என்பது தான் சட்டவாளர்களின் கேள்வி. வழக்கு முழுமையாக நீதிமன்றம் செல்லமுன் இருதரப்பு சட்டவாளர்களும் ஒரு நாஷ்ட ஈடு தொடையை ஒப்புக்கொண்டு விடயத்தை முடிவுக்கு கொண்டுவந்தாக தான் நான் அறிந்திருந்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, puthalvan said:

ரதி, தனது அறையில் இருந்த பல்கனி கதவை திறந்து பல்கனிக்கு போனபொழுது கதவு பின்னால் மூடிக்கொண்டது. கதவில் one-way or exit லாக் (வெளியில் இருந்து திறக்கமுடியாது )என்பதால்  இவர் மறுபடியும் உள்செல்ல முடியவில்லை.எனவே இவர் தனது அறைய அடைய முயறசி செய்த்தபொழுது விபத்து நடைபெற்றது.

எனவே அந்த ஹோட்டல் இந்த கதவு விடயத்தில் தவறிழைத்து விட்டதாக தான் வழக்கு. சட்டத்தின் முன் அவர் போதையில் இருந்தார் என்பதோ அல்லது அவர் ஒரு இனொரு நாட்டில் அமைச்சர் என்பதோ அல்லது ஏன் வெளியில் வந்தார்  என்பதோ பெரிதாக தாக்கம் செலுத்தியிருக்கமாட்டாது. அவர் அமைச்சரோ, ஆட்டுக்குட்டியோ அந்த அந்த ஹோட்டல் அங்கு தங்குமவர்களின் பாதுகாப்பு விடயத்தில் குறைந்தளவு நடவடிக்கைளை எடுத்ததா (Hotel liability: Duty to exercise reasonable care for the safety and security of their patrons) என்பது தான் சட்டவாளர்களின் கேள்வி. வழக்கு முழுமையாக நீதிமன்றம் செல்லமுன் இருதரப்பு சட்டவாளர்களும் ஒரு நாஷ்ட ஈடு தொடையை ஒப்புக்கொண்டு விடயத்தை முடிவுக்கு கொண்டுவந்தாக தான் நான் அறிந்திருந்தேன்.

நன்றி...நீங்கள் சொல்வதன் படி பார்த்தால் ஹொட்டல் மேலும் பிழை இருக்குது அல்லவா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Kapithan said:

இது Hotel இன்R esponsibilities என்கின்ற வரையறைக்குள் வரும் என்று நினைக்கிறேன்.🤔

எங்கே லாயர் வண்டு முருகனைக் காணோம். 

லாயர் வண்டு முருகன்.. வண்டு முருகன்... வண்டு முருகன்..... 

😜

பிந்திய தகவல்களின் படி லாயர் வண்டூஸ் கட்டாய விடுப்பில் இருப்பதால் இந்த வழக்கில் சமூகம் அளிக்க முடியாது இருகிறாதாம்🤣

பிகு: கீழே புதல்வன் மிக தெளிவாக விளக்கியுள்ளார்.

அமைச்சர் பெருமான் போதையில் இருந்தது அவர் விழுந்தமைக்கு ஒரு காரணியாக இருந்தாலும், முக்கிய காரணி கதவை திறக்க முடியாமல் போனதே. தவிரவும் ஒரு அறையில் தங்குபவர் தண்ணி அடிப்பார், அப்படியே பால்கனிக்கும் போவார் என்பதை ஹோட்டல் நிர்வாகம் எதிர்பார்த்திருக்க வேண்டும். ஒரு ஹோட்டல் ரூமை பாவிப்பவர் அந்த அறையை சாதாரணமாக பாவிக்கும் முறைதானே இது. ஆகவே விழுந்தமைக்கும்  ஹோட்டல் நிர்வாகத்தின் அலட்சியத்துக்கும் இடையே ஒரு நிகழ்வு-சங்கிலி ( causative link) உருவாகி இருக்கும். 

விழுந்தமைக்கு அமைச்சரின் செயல்பாடும் ஒரு கூட்டு காரணி எனில், இழப்பீடு அதற்கேற்ப குறைக்கப்படும் (comparative  negligence). 

Link to comment
Share on other sites

திலீபனின் போராட்டத்தை கொச்சைப்படுத்தவில்லை – இப்படி சொல்கிறார் வியாழேந்திரன்

திலீபனின் போராட்டம் ஒரு சமூகத்தின் விடுதலைக்கான போராட்டம் எனவும் அதற்கான கௌரவத்தை கொடுத்துக் கொண்டிருக்கின்றோம் என்றும் இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் தெரித்துள்ளார்.

அத்துடன், தியாகி திலீபனின் அகிம்சைவழிப் போராட்டத்தை தாங்கள் ஒருபோதும் கொச்சைப்படுத்தியதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு இன்று (04) மட்டக்களப்பு – புளியந்தீவில் நடைபெற்ற நிகழ்வை தொடர்ந்து இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்,

“நாங்கள் கடந்த காலங்களில்கூட திலீபனின் அகிம்சைவழிப் போராட்டத்தை கொச்சப்படுத்தியவர்கள் அல்ல. நாங்கள் அதனை மதித்திருக்கின்றோம். இந்த நாட்டிலே இருக்கின்ற தமிழ் மக்கள் ஏனைய சமூகத்துக்கு இணையாக தலைநிமிர்ந்து வாழவேண்டும், யாருக்கும் அடிமையாக இருக்கக் கூடாது என்ற தியாகி திலீபனின் கனவை நனவாக்க நாங்கள் இன்று அரசாங்கத்தோடு இணைந்திருந்து வேலை செய்து கொண்டிருக்கிறோம்.

சிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தியாகி திலீபனின் விடயத்தில் நாங்கள் அமைதியாக இருந்தோம் என்பதை குற்றமாகக் கருதுகின்றனர். நாங்கள் வடக்கு கிழக்கில் இடம்பெற்ற கடையடைப்பு போராட்டத்தை குழப்பவில்லை. மறுப்பும் தெரிவிக்கவில்லை” – என்றார்.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் தியாக தீபம் திலீபனை ஒசாமா பில்லேடனுடன் ஒப்பிட்டதுடன், நினைவேந்தலை அனுமதிக்க முடியாது என்று அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல பேசிய போது வியாழேந்திரனும் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

https://newuthayan.com/திலீபனின்-போராட்டத்தை-கொ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, செண்பகம் said:

யாருக்கும் அடிமையாக இருக்கக் கூடாது என்ற தியாகி திலீபனின் கனவை நனவாக்க நாங்கள் இன்று அரசாங்கத்தோடு இணைந்திருந்து வேலை செய்து கொண்டிருக்கிறோம்.

தியாகி திலீபனின் உணாவிரதத்தையே கொச்சைப் படுத்துகிறவனுடன் சேர்ந்து, அவரின் கனவை நனவாக்கப் போகிறாராம். சிரிப்பதா? அழுவதா? தெரிந்துதான் சொல்கிறாரா? அல்லது கேட்போர் அனைவரும்  முட்டாள்கள் என்று நினைத்து பேசுகிறாரா? ஹெகெலியாவின் பேச்சுக்கும் இவரின் விளக்கத்துக்கும் அதிக வித்தியாசமில்லை. இப்ப விளங்குகிறது, சிங்களவனின் கொக்கரிப்புக்கு பின்னால் இருந்து கொண்டு வினோத விளக்கமளிப்பவர்களை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பில்லேடனுக்கு சிலை வைக்க முடியாது; அதுபோல் திலீபனை நினைவேந்த முடியாது

ரிசாத்தின் தம்பியை விடுவிக்கலாம்...ரிசாத்தின் மீதும் பிழையில்லை என்றும் சொல்லலாம்...இது பசிலின் தியரி...இதை விளக்கும் ..**** இது

Link to comment
Share on other sites

10 hours ago, alvayan said:

 

ரிசாத்தின் தம்பியை விடுவிக்கலாம்...ரிசாத்தின் மீதும் பிழையில்லை என்றும் சொல்லலாம்...இது பசிலின் தியரி...இதை விளக்கும் ..**** இது

இதில் என்னவென்றால் கோத்தா வந்தால் தான் வன்னியை இவர்களிடம் இருந்து காப்பாற்றலாம் என்று முக நூல் முழுவதும் பதிவை போட்டவர்களை கண்டால் சிரிப்பாய் வருது.

On 3/10/2020 at 10:20, கற்பகதரு said:

உங்களால் என்ன செய்ய முடியும்? யாழ் களத்தில் எழுத முடியும் - அவ்வளவுதான் உங்களால் முடிந்தது என்பது அவர்களுக்கும் தெரியும்.

அதென்றால் உண்மை தான்.....புலிகளையும் போராட்டத்தையும் தனியாக நின்று ஒடுக்கிய வீரர்கள் தானே ........!!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.