Jump to content

பில்லேடனுக்கு சிலை வைக்க முடியாது; அதுபோல் திலீபனை நினைவேந்த முடியாது – கூறுகிறார் ஊடக அமைச்சர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

“தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரான திலீபனை நினைவு கூருவதற்கு அனுமதியளிக்க முடியாது.”

இவ்வாறு வெகுசன ஊடக அமைச்சர் ஹெஹெலிய ரம்புக்வெல இன்று (02) யாழ்ப்பாணத்தில் வைத்து தெரிவித்துள்ளார். மேலும்,

“பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவரை நினைவு கூருவது நிரந்தர சமாதானத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகையனால் அத்தகைய நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒசாமா பில்லேடன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்பதால் கொல்லப்பட்டிருக்கின்றார். அவருக்கு அமெரிக்காவில் சிலை வைக்க முடியாது. அது போலவே பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவராகவே திலீபனும் காணப்படுகின்றார். ஆகையினால் அவருக்கு சிலை வைக்கவோ நினைவு கூரவோ முடியாது.” – என்றார்.https://newuthayan.com/பில்லேடனுக்கு-சிலை-வைக்க/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹெஹெலிய ரம்புக்வெல.... கிறுக்குப் பயல். 
முன்பு அமைச்சராக  இருந்த போது, 
தனது மகனைப் பார்க்க... அவுஸ்திரேலியா சென்று, அங்கு தண்ணியடித்து... வெறியில்,
சாமம் இரண்டு மணிக்கு...  பல்கனியில் இருந்து, கீழே விழுந்து எலும்பு முறிந்து இருந்த ஆள்.
அதனைக்  கேள்விப் பட்ட மகிந்த,  இவரை சில காலம் ஒதுக்கி வைத்திருந்தார்.

பிறகு... இப்ப, யாழ்ப்பாணம் வந்து.. பனங்கள்ளை குடித்து விட்டு, 
உளறுவதை எல்லாம், நாம்.. கணக்கில் எடுக்கப் படாது.

Link to comment
Share on other sites

7 hours ago, தமிழ் சிறி said:

தனது மகனைப் பார்க்க... அவுஸ்திரேலியா சென்று, அங்கு தண்ணியடித்து... வெறியில்,
சாமம் இரண்டு மணிக்கு...  பல்கனியில் இருந்து, கீழே விழுந்து எலும்பு முறிந்து இருந்த ஆள்.

விழுந்து முறிந்தது மட்டுமல்ல தமிழ்  சிறி இவர் ஹோட்டலுக்கு எதிராக  நஷ்ட ஈடு கேட்டு வழக்குப்போட்டு காசும் எடுத்தவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, puthalvan said:

விழுந்து முறிந்தது மட்டுமல்ல தமிழ்  சிறி இவர் ஹோட்டலுக்கு எதிராக  நஷ்ட ஈடு கேட்டு வழக்குப்போட்டு காசும் எடுத்தவர்.

அட... இந்த விசயத்தை, இப்பதான் கேள்விப் படுகின்றேன்.
சிங்கள வெறிக்குட்டி... அமைச்சர்   எல்லாம், யாழ்ப்பாணத்துக்கு வந்து,
எமக்கு... "ரியூஷன்" எடுப்பதை பார்க்க... கடுப்பு வருகுது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

அட... இந்த விசயத்தை, இப்பதான் கேள்விப் படுகின்றேன்.
சிங்கள வெறிக்குட்டி... அமைச்சர்   எல்லாம், யாழ்ப்பாணத்துக்கு வந்து,
எமக்கு... "ரியூஷன்" எடுப்பதை பார்க்க... கடுப்பு வருகுது. 

அதுங்க பிழைப்பு அப்பிடி.  ஊளையிட்டு தங்கள் ஊழல்களை மறைக்கபாக்குதுகள்.கோத்தாவே கணக்கெடுக்க மாட்டார் உவரை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பிழம்பு said:

“தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரான திலீபனை நினைவு கூருவதற்கு அனுமதியளிக்க முடியாது.”

இவ்வாறு வெகுசன ஊடக அமைச்சர் ஹெஹெலிய ரம்புக்வெல இன்று (02) யாழ்ப்பாணத்தில் வைத்து தெரிவித்துள்ளார். மேலும்,

“பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவரை நினைவு கூருவது நிரந்தர சமாதானத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகையனால் அத்தகைய நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒசாமா பில்லேடன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்பதால் கொல்லப்பட்டிருக்கின்றார். அவருக்கு அமெரிக்காவில் சிலை வைக்க முடியாது. அது போலவே பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவராகவே திலீபனும் காணப்படுகின்றார். ஆகையினால் அவருக்கு சிலை வைக்கவோ நினைவு கூரவோ முடியாது.” – என்றார்.https://newuthayan.com/பில்லேடனுக்கு-சிலை-வைக்க/

இப்படிக் கதைப்பதை எப்படி யாழ்ப்பாண ஊடகவியலாளரகள் பார்த்துக்கொண்டு நின்றார்கள்?

எப்படிதைரியம் வந்தது சிங்களவனுக்கு?

ஓ.... சுமந்திரனே கதைத்துவிட்டு தைரியமாக உலாவமுடியுமென்றால் தனக்கு ஒரு மிரச்சனையும் வராது என்று எண்ணம்தான்

 

 

Link to comment
Share on other sites

6 hours ago, தமிழ் சிறி said:

அட... இந்த விசயத்தை, இப்பதான் கேள்விப் படுகின்றேன்.
சிங்கள வெறிக்குட்டி... அமைச்சர்   எல்லாம், யாழ்ப்பாணத்துக்கு வந்து,
எமக்கு... "ரியூஷன்" எடுப்பதை பார்க்க... கடுப்பு வருகுது. 

தமிழ் சிறி நான் அடுத்து சொல்லும் விஷயம் உங்களுக்கு இன்னும் கொஞ்சம் கடுப்பேத்தும்.  வழக்கு நடந்துகொண்டிருந்த அதேநேரம் தான் அமைச்சராக இருந்தவேளையில் நடந்த விபத்தாக காரணம் காட்டி இவர் ஜனாதிபதி நிதியில் இருந்து 20மில்லியன் ரூபா எடுத்தவர். இந்த விடயம் பின்னர் விசாரணையும் செய்யப்பட்டது. உண்மையில் இப்படி ப்பட்டவர்கள் தான் ஸ்ரீலங்காவுக்கு அமைச்சராக இருக்க தகுதியானவர்கள்!

இவருடைய மகன் இவரை வெண்டவர். ஒரு செய்தியின் படி பிரிட்டிஷ் விமான கதவை மலசலகூட கதவு என்று நினைத்து திறக்க முயன்றவர். அதுவும் 35,000 அடி உயரத்தில். அதோடு தந்தையார் கதவு ஓடைக்குளால் இன்னொரு அறையை பார்க்கவெளிக்கிட்டு தான் விழுந்ததாக இந்த கட்டுரையில் பிரஸ்தாபித்துள்ளனர். இதோ செய்தி: http://www.gbdigest.com/2013/08/breaking-news.html


மற்ற செய்தியின் மூலங்கள்.

https://www.timeslanka.com/2012/11/20/minister-rambukwella-takes-melbourne-hotel-to-court/

https://colombogazette.com/2016/06/14/fcid-grills-keheliya-on-funds-obtained-after-australia-accident/

Link to comment
Share on other sites

1 hour ago, ragaa said:

எப்படிதைரியம் வந்தது சிங்களவனுக்கு?

ஓ.... சுமந்திரனே கதைத்துவிட்டு தைரியமாக உலாவமுடியுமென்றால் தனக்கு ஒரு மிரச்சனையும் வராது என்று எண்ணம்தான்.

உங்களால் என்ன செய்ய முடியும்? யாழ் களத்தில் எழுத முடியும் - அவ்வளவுதான் உங்களால் முடிந்தது என்பது அவர்களுக்கும் தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திலீபனை நினைவுகூர அனுமதிக்க முடியாது என்றபோது இரு முகங்களில் தவழும் சந்தோசம்.

a30LSKix?format=jpg&name=small

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கற்பகதரு said:

உங்களால் என்ன செய்ய முடியும்? யாழ் களத்தில் எழுத முடியும் - அவ்வளவுதான் உங்களால் முடிந்தது என்பது அவர்களுக்கும் தெரியும்.

அப்ப கடைசியில் ஒப்புகொண்டாச்சு போல சிங்களவனும் சுமந்திரனும் ஒரெமாதிரிதான் நடக்கிறார்கள் என்று நன்றி கற்பகம்🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

திலீபனை நினைவுகூர அனுமதிக்க முடியாது என்றபோது இரு முகங்களில் தவழும் சந்தோசம்.

a30LSKix?format=jpg&name=small

கெஹெலியவுக்கு இருமருங்கிலும் அமர்ந்திருப்பது அங்கஜனும் வியாழேந்திரனும் தானே? அடிமைகளின் விசுவாசம் முகத்தில் அப்படியே பளிச்சென்று தெரிகிறது. 

Link to comment
Share on other sites

6 hours ago, ragaa said:

அப்ப கடைசியில் ஒப்புகொண்டாச்சு போல சிங்களவனும் சுமந்திரனும் ஒரெமாதிரிதான் நடக்கிறார்கள் என்று நன்றி கற்பகம்🙏

நீங்களும் அவர்கள் போல தானே நடக்கிறீர்கள்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, puthalvan said:

விழுந்து முறிந்தது மட்டுமல்ல தமிழ்  சிறி இவர் ஹோட்டலுக்கு எதிராக  நஷ்ட ஈடு கேட்டு வழக்குப்போட்டு காசும் எடுத்தவர்.

அவரில் பிழை என்றால் அந்த ஹொட்டல் எப்படி அவருக்கு காசு கொடுத்தது ? 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

அவரில் பிழை என்றால் அந்த ஹொட்டல் எப்படி அவருக்கு காசு கொடுத்தது ? 

 

இது Hotel இன்R esponsibilities என்கின்ற வரையறைக்குள் வரும் என்று நினைக்கிறேன்.🤔

எங்கே லாயர் வண்டு முருகனைக் காணோம். 

லாயர் வண்டு முருகன்.. வண்டு முருகன்... வண்டு முருகன்..... 

😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

அவரில் பிழை என்றால் அந்த ஹொட்டல் எப்படி அவருக்கு காசு கொடுத்தது ? 

 

சுத்துமாத்து தெரியாத தங்கச்சி.... 🙃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

இது Hotel இன்R esponsibilities என்கின்ற வரையறைக்குள் வரும் என்று நினைக்கிறேன்.🤔

எங்கே லாயர் வண்டு முருகனைக் காணோம். 

லாயர் வண்டு முருகன்.. வண்டு முருகன்... வண்டு முருகன்..... 

😜

நல்ல விசயங்களுக்கு அவர் வரார் எண்டு சொல்லுறதை விட அவர் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டார் 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதம் தூக்கியோரை தெற்கில் நினைவு கூற முடியமென்றால் ஏன், வடக்கில் முடியாது? மனோ

1970/80 களில் இலங்கை அரசுக்கும், இராணுவத்துக்கும் எதிராக ஆயுதம் தூக்கிய, ஜேவிபியின் தேசப்பிரேமி இயக்க போராளிகள் இன்று தெற்கில் பகிரங்கமாக நினைவுகூறப்படும் போது, அதே வரப்பிரசாதம் வடக்கில் தமிழருக்கு இல்லை? இதனால், இந்த அஈசாங்கம் இப்போது அடிக்கடி சொல்லும், “ஒரே நாடு-ஒரே சட்டம்” என்ற கொள்கை ஒரு கேலி-கூத்தாக தெரிகிறது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்பி, தனது டுவீடர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்குபவர்களை அரசாங்கம் தனது கணிப்பீட்டின்படி “பயங்கரவாதிகள்” என்கிறது. அப்படியானால், 1970ம் , 80ம் ஆண்டு களில் இலங்கை அரசுக்கும், ராணுவத்துக்கும் எதிராக ஆயுதம் தூக்கிய ஜேவிபியின் தேசப்பிரேமி இயக்க போராளிகள், “சிங்கள பயங்கரவாதிகள்கள்” ஆவர். இவர்கள் வருடாவருடம், தெற்கில் பகிரங்கமாக நினைவுகூறப்படுகிறார்கள்.

ஆனால், அதே வரப்பிரசாதம், தமிழர்களுக்கு இல்லை. “தமிழ் பயங்கரவாதிகளை” என்ற தமிழ் ஆயுததாரிகளை மட்டுமல்ல, பலவேளைகளில் மரணித்த சாதாரண மக்களையே பகிரங்கமாக நினைவு கூற, தமிழர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

இது இந்நாட்டில் நீண்ட நாளாக நடந்து வரும் ஒரு இரட்டை நிலைப்பாடு கொண்ட பாரபட்ச கொள்கை ஆகும். இதற்கு இடையில் இன்று இந்த அரசு, மேலும் ஒரு கொள்கையை பற்றி பேசி வருகிறது. அதுதான், “ஒரே நாடு-ஒரே சட்டம்” என்ற கொள்கை ஆகும். இது இந்நிலைமையை இன்னமும் கேலி-கூத்தாக மாற்றி உள்ளது.

அதாவது, மறைந்த தமது உறவுகளை தமிழர் நினைவு கூறுவது மறுக்கபடுவதும், அதே உரிமை சிங்களவருக்கு வழங்கப்படுவதும், இந்நாட்டில் அரசின் இரட்டை கொள்கையின் அடிப்படையில் கேலி கூத்தாக அமைகிறது. மறுபுறம் தமிழ் மக்களை பொறுத்தவரையில் இது பெரும் சோகமாக அமைகிறது.

இந்த இரட்டை கொள்கை உடன் முடிவுக்கு வரவேண்டும். இதுபற்றி தேசிய கலந்துரையாடல் நடைபெற வேண்டும். இதுபற்றி எவருடன் வேண்டுமென்றாலும், மூன்று மொழிகளிலும் பகிரங்க விவாதம் நடத்த நான் தயார்.

 

http://www.ilakku.org/ஆயுதம்-தூக்கியோரை-தெற்கி/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

திலீபனை நினைவுகூர அனுமதிக்க முடியாது என்றபோது இரு முகங்களில் தவழும் சந்தோசம்.

a30LSKix?format=jpg&name=small

வாக்குக் கேட்கும் போது புலிப்பாட்டு... வாக்கு வீழ்ந்த பின்.. சிங்களத்துதிபாடல்.

இவங்களுக்கு வாக்குப் போட்டவங்களுக்கு பிச்சையும் போடக் கூடாது.

பின்லாடன் சொந்த இனத்தின் விடுதலைக்காகப் போராடவில்லை.. அவர்களின் உரிமைக்காகப் போராடவில்லை.. அமெரிக்க ஏவலுக்காகப் பயங்கரவாதம் செய்தார்... எஜமானர்களாலேயே அழிந்தார்.. சிலை வைக்க யாரும் துணியவில்லை.

ஆனால் ஹிந்திய மக்களின் விடுதலைக்காகப் போராடிய பிரித்தானிய பார்வையில் பயங்கரவாதியான.. ஹாந்திக்கு... சிலை உண்டு.  தென்னாபிரிக்க கறுப்பின மக்களின் விடுதலைக்காகப் போராடிய மண்டேலாவுக்கு.. வெள்ளையின அரசின் பார்வையில் கொடிய பயங்கரவாதி.. சிலை உண்டு.

ஏன் சிங்கள அரச பயங்கரவாதத்தை எதிர்த்து இரண்டு பெரும் கிளர்ச்சிகளில் ஈடுபட்ட சிங்கள பெளத்த பேரினவாத அரசுகளுக்கு இன்று முட்டுக்கொடுக்கும்.. விமல் வீரவம்ச என்ற முன்னாள் பயங்கரவாதி வந்த ஜே வி பி கட்சியின் தலைவர் பயங்கரவாதி.. ரோகண விஜயவீரவுக்கும் சிலை உண்டு..

ஏன் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் சமூக உரிமைக்காக உண்ணா நோன்பிருந்து அதுவும் ஆயுதக் கையளிப்பின் பின்.. ஆயுதங்கள் மெளனிக்கப்பட்ட நிலையில்.. போராடி உயிர் நீத்த திலீபனுக்கு தமிழ் மக்கள்.. சிலை வைக்க முடியாது.

ஹாந்தி.. மண்டேலா.. ரோகண விஜயவீரவுக்கு மேலான தகுதி திலீபனுக்கு உண்டு.

அதனை குடிகாரன் சிங்கள பெளத்த பேரினவாத அரச பயங்கரவாதி.. ஹெகலிய ரம்புக்வலவுக்கு விளங்க வைக்க ஏன் அந்த வலதும் இடதும் முயலவில்லை..??! 

Link to comment
Share on other sites

14 hours ago, ரதி said:

அவரில் பிழை என்றால் அந்த ஹொட்டல் எப்படி அவருக்கு காசு கொடுத்தது ? 

ரதி, தனது அறையில் இருந்த பல்கனி கதவை திறந்து பல்கனிக்கு போனபொழுது கதவு பின்னால் மூடிக்கொண்டது. கதவில் one-way or exit லாக் (வெளியில் இருந்து திறக்கமுடியாது )என்பதால்  இவர் மறுபடியும் உள்செல்ல முடியவில்லை.எனவே இவர் தனது அறைய அடைய முயறசி செய்த்தபொழுது விபத்து நடைபெற்றது.

எனவே அந்த ஹோட்டல் இந்த கதவு விடயத்தில் தவறிழைத்து விட்டதாக தான் வழக்கு. சட்டத்தின் முன் அவர் போதையில் இருந்தார் என்பதோ அல்லது அவர் ஒரு இனொரு நாட்டில் அமைச்சர் என்பதோ அல்லது ஏன் வெளியில் வந்தார்  என்பதோ பெரிதாக தாக்கம் செலுத்தியிருக்கமாட்டாது. அவர் அமைச்சரோ, ஆட்டுக்குட்டியோ அந்த அந்த ஹோட்டல் அங்கு தங்குமவர்களின் பாதுகாப்பு விடயத்தில் குறைந்தளவு நடவடிக்கைளை எடுத்ததா (Hotel liability: Duty to exercise reasonable care for the safety and security of their patrons) என்பது தான் சட்டவாளர்களின் கேள்வி. வழக்கு முழுமையாக நீதிமன்றம் செல்லமுன் இருதரப்பு சட்டவாளர்களும் ஒரு நாஷ்ட ஈடு தொடையை ஒப்புக்கொண்டு விடயத்தை முடிவுக்கு கொண்டுவந்தாக தான் நான் அறிந்திருந்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, puthalvan said:

ரதி, தனது அறையில் இருந்த பல்கனி கதவை திறந்து பல்கனிக்கு போனபொழுது கதவு பின்னால் மூடிக்கொண்டது. கதவில் one-way or exit லாக் (வெளியில் இருந்து திறக்கமுடியாது )என்பதால்  இவர் மறுபடியும் உள்செல்ல முடியவில்லை.எனவே இவர் தனது அறைய அடைய முயறசி செய்த்தபொழுது விபத்து நடைபெற்றது.

எனவே அந்த ஹோட்டல் இந்த கதவு விடயத்தில் தவறிழைத்து விட்டதாக தான் வழக்கு. சட்டத்தின் முன் அவர் போதையில் இருந்தார் என்பதோ அல்லது அவர் ஒரு இனொரு நாட்டில் அமைச்சர் என்பதோ அல்லது ஏன் வெளியில் வந்தார்  என்பதோ பெரிதாக தாக்கம் செலுத்தியிருக்கமாட்டாது. அவர் அமைச்சரோ, ஆட்டுக்குட்டியோ அந்த அந்த ஹோட்டல் அங்கு தங்குமவர்களின் பாதுகாப்பு விடயத்தில் குறைந்தளவு நடவடிக்கைளை எடுத்ததா (Hotel liability: Duty to exercise reasonable care for the safety and security of their patrons) என்பது தான் சட்டவாளர்களின் கேள்வி. வழக்கு முழுமையாக நீதிமன்றம் செல்லமுன் இருதரப்பு சட்டவாளர்களும் ஒரு நாஷ்ட ஈடு தொடையை ஒப்புக்கொண்டு விடயத்தை முடிவுக்கு கொண்டுவந்தாக தான் நான் அறிந்திருந்தேன்.

நன்றி...நீங்கள் சொல்வதன் படி பார்த்தால் ஹொட்டல் மேலும் பிழை இருக்குது அல்லவா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Kapithan said:

இது Hotel இன்R esponsibilities என்கின்ற வரையறைக்குள் வரும் என்று நினைக்கிறேன்.🤔

எங்கே லாயர் வண்டு முருகனைக் காணோம். 

லாயர் வண்டு முருகன்.. வண்டு முருகன்... வண்டு முருகன்..... 

😜

பிந்திய தகவல்களின் படி லாயர் வண்டூஸ் கட்டாய விடுப்பில் இருப்பதால் இந்த வழக்கில் சமூகம் அளிக்க முடியாது இருகிறாதாம்🤣

பிகு: கீழே புதல்வன் மிக தெளிவாக விளக்கியுள்ளார்.

அமைச்சர் பெருமான் போதையில் இருந்தது அவர் விழுந்தமைக்கு ஒரு காரணியாக இருந்தாலும், முக்கிய காரணி கதவை திறக்க முடியாமல் போனதே. தவிரவும் ஒரு அறையில் தங்குபவர் தண்ணி அடிப்பார், அப்படியே பால்கனிக்கும் போவார் என்பதை ஹோட்டல் நிர்வாகம் எதிர்பார்த்திருக்க வேண்டும். ஒரு ஹோட்டல் ரூமை பாவிப்பவர் அந்த அறையை சாதாரணமாக பாவிக்கும் முறைதானே இது. ஆகவே விழுந்தமைக்கும்  ஹோட்டல் நிர்வாகத்தின் அலட்சியத்துக்கும் இடையே ஒரு நிகழ்வு-சங்கிலி ( causative link) உருவாகி இருக்கும். 

விழுந்தமைக்கு அமைச்சரின் செயல்பாடும் ஒரு கூட்டு காரணி எனில், இழப்பீடு அதற்கேற்ப குறைக்கப்படும் (comparative  negligence). 

Link to comment
Share on other sites

திலீபனின் போராட்டத்தை கொச்சைப்படுத்தவில்லை – இப்படி சொல்கிறார் வியாழேந்திரன்

திலீபனின் போராட்டம் ஒரு சமூகத்தின் விடுதலைக்கான போராட்டம் எனவும் அதற்கான கௌரவத்தை கொடுத்துக் கொண்டிருக்கின்றோம் என்றும் இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் தெரித்துள்ளார்.

அத்துடன், தியாகி திலீபனின் அகிம்சைவழிப் போராட்டத்தை தாங்கள் ஒருபோதும் கொச்சைப்படுத்தியதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு இன்று (04) மட்டக்களப்பு – புளியந்தீவில் நடைபெற்ற நிகழ்வை தொடர்ந்து இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்,

“நாங்கள் கடந்த காலங்களில்கூட திலீபனின் அகிம்சைவழிப் போராட்டத்தை கொச்சப்படுத்தியவர்கள் அல்ல. நாங்கள் அதனை மதித்திருக்கின்றோம். இந்த நாட்டிலே இருக்கின்ற தமிழ் மக்கள் ஏனைய சமூகத்துக்கு இணையாக தலைநிமிர்ந்து வாழவேண்டும், யாருக்கும் அடிமையாக இருக்கக் கூடாது என்ற தியாகி திலீபனின் கனவை நனவாக்க நாங்கள் இன்று அரசாங்கத்தோடு இணைந்திருந்து வேலை செய்து கொண்டிருக்கிறோம்.

சிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தியாகி திலீபனின் விடயத்தில் நாங்கள் அமைதியாக இருந்தோம் என்பதை குற்றமாகக் கருதுகின்றனர். நாங்கள் வடக்கு கிழக்கில் இடம்பெற்ற கடையடைப்பு போராட்டத்தை குழப்பவில்லை. மறுப்பும் தெரிவிக்கவில்லை” – என்றார்.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் தியாக தீபம் திலீபனை ஒசாமா பில்லேடனுடன் ஒப்பிட்டதுடன், நினைவேந்தலை அனுமதிக்க முடியாது என்று அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல பேசிய போது வியாழேந்திரனும் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

https://newuthayan.com/திலீபனின்-போராட்டத்தை-கொ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, செண்பகம் said:

யாருக்கும் அடிமையாக இருக்கக் கூடாது என்ற தியாகி திலீபனின் கனவை நனவாக்க நாங்கள் இன்று அரசாங்கத்தோடு இணைந்திருந்து வேலை செய்து கொண்டிருக்கிறோம்.

தியாகி திலீபனின் உணாவிரதத்தையே கொச்சைப் படுத்துகிறவனுடன் சேர்ந்து, அவரின் கனவை நனவாக்கப் போகிறாராம். சிரிப்பதா? அழுவதா? தெரிந்துதான் சொல்கிறாரா? அல்லது கேட்போர் அனைவரும்  முட்டாள்கள் என்று நினைத்து பேசுகிறாரா? ஹெகெலியாவின் பேச்சுக்கும் இவரின் விளக்கத்துக்கும் அதிக வித்தியாசமில்லை. இப்ப விளங்குகிறது, சிங்களவனின் கொக்கரிப்புக்கு பின்னால் இருந்து கொண்டு வினோத விளக்கமளிப்பவர்களை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பில்லேடனுக்கு சிலை வைக்க முடியாது; அதுபோல் திலீபனை நினைவேந்த முடியாது

ரிசாத்தின் தம்பியை விடுவிக்கலாம்...ரிசாத்தின் மீதும் பிழையில்லை என்றும் சொல்லலாம்...இது பசிலின் தியரி...இதை விளக்கும் ..**** இது

Link to comment
Share on other sites

10 hours ago, alvayan said:

 

ரிசாத்தின் தம்பியை விடுவிக்கலாம்...ரிசாத்தின் மீதும் பிழையில்லை என்றும் சொல்லலாம்...இது பசிலின் தியரி...இதை விளக்கும் ..**** இது

இதில் என்னவென்றால் கோத்தா வந்தால் தான் வன்னியை இவர்களிடம் இருந்து காப்பாற்றலாம் என்று முக நூல் முழுவதும் பதிவை போட்டவர்களை கண்டால் சிரிப்பாய் வருது.

On 3/10/2020 at 10:20, கற்பகதரு said:

உங்களால் என்ன செய்ய முடியும்? யாழ் களத்தில் எழுத முடியும் - அவ்வளவுதான் உங்களால் முடிந்தது என்பது அவர்களுக்கும் தெரியும்.

அதென்றால் உண்மை தான்.....புலிகளையும் போராட்டத்தையும் தனியாக நின்று ஒடுக்கிய வீரர்கள் தானே ........!!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
    • 17 APR, 2024 | 05:42 PM (நெவில் அன்தனி) ஓக்லஹோமா, ரமோனாவில் ஞாயிறன்று நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் லிதுவேனியாவின் மெய்வல்லுநர் மிக்கோலாஸ் அலெக்னா நம்பமுடியாத 74.35 மீட்டர் தூரத்துக்கு தட்டை எறிந்து தட்டெறிதலுக்கான முன்னைய  சாதனையை    முறியடித்தார். முன்னைய உலக சாதனை கிட்டத்தட்ட 38 வருடங்கள் நிலைத்திருந்தது. இயூஜினில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மிக்கோலாஸ் அலெக்னா, புடாபெஸ்டில் கடந்த வருடம் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அவர் ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் பழைமையான சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார். ஒக்லஹோமா, ரமோனாவில் நடைபெற்ற எறிதல் தொடர் உலக அழைப்பு போட்டியில் தனது 5ஆவது முயற்சியில் தட்டை 74.35 மீட்டர் தூரத்திற்கு எறிந்ததன் மூலம் உலக சாதனையை 21 வயதான மிக்கோலாஸ் அலெக்னா முறியடித்தார். முன்னாள் கிழக்கு ஜேர்மனி வீரர் ஜேர்ஜன் ஷூல்ட்ஸ் 1986ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் திகதி தட்டெறிதல் போட்டியில் நிலைநாட்டிய 74.08 மீட்டர் என்ற உலக சாதனையையே மிக்கோலாஸ் அலெக்னா கடந்த ஞாயிற்றுக்கிழமை முறியடித்தார். பேர்லின் 1936 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஜெசே ஓவென்ஸினால் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் நிலைநாட்டப்பட்ட 8.13 மீட்டர் என்ற உலக சாதனை 25 ஆண்டுகள் மற்றும் 79 நாட்களுக்கு நீடித்தது. ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் இது இரண்டாவது பழைமையான சாதனையாகும்.  எவ்வாறாயினும் பெண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் நிலைநாட்டப்பட்ட சாதனை ஒன்றே இன்றும் மிகவும் பழைமையான சாதனையாக இருந்துவருகிறது. செக்கோஸ்லவாக்கியாவைச் செர்ந்த ஜர்மிலா க்ராட்டோச்விலோவா என்பவரால் 1983ஆம் ஆண்டு பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தை 1:53.28 செக்கன்களில் நிறைவு செய்து நிலைநாட்டிய உலக சாதனையே மிகவும் பழைமை வாய்ந்த உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/181320
    • இரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் - அமெரிக்க அதிகாரிகள் தகவல் 19 ஏப்ரல் 2024, 03:01 GMT புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்பஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். இதனிடையே இஸ்பஹான் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக இரான் அரசுத் தொலைக்காட்சி கூறியுள்ளது. இரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB, "நம்பகமான ஆதாரங்களை" மேற்கோள் காட்டி, இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் "முற்றிலும் பாதுகாப்பானவை" என்று கூறியிருக்கிறது. அதே நேரத்தில், இஸ்ரேலிய ராணுவத்தை மேற்கோள் காட்டி வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்கள் எதுவும் தற்போது இல்லை மற்றும் இஸ்ரேலிய இராணுவம் "இந்த நேரத்தில்" கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அந்தச் செய்தி கூறுகிறது. ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 350 கிமீ தெற்கே நான்கு மணிநேர பயணத்தில் உள்ள இஸ்பஹானில் வெடிப்புகள் நடந்திருக்கின்றன.   பிபிசி பெர்சியன் சேவைக்கு கிடைத்த காணொளி இரானின் இஸ்பஹான் மாகாணத்தில் வசிப்பவர்கள் பல வீடியோக்களை அனுப்பியுள்ளதாக பிபிசி பெர்சியன் சேவை தெரிவித்துள்ளது. பிபிசி பெர்சியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், விமான எதிர்ப்பு அமைப்பின் சத்தம் கேட்கிறது. Instagram பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Instagram பதிவின் முடிவு எண்ணெய், தங்கம் விலை உயர்வு இஸ்ரேலிய ஏவுகணை இரானைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதை அடுத்து உலகளாவிய எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலைகள் உயர்ந்து பங்குகள் சரிந்தன. வெள்ளிக்கிழமை காலை ஆசிய வர்த்தகத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் 3% உயர்ந்து சுமார் 90 அமெரிக்க டாலர்களாக ஆக இருந்தது, அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் 2,400 டாலர்களுக்கு மேல் புதிய உச்சமாக வர்த்தகம் செய்யப்பட்டது. ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென் கொரியாவில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளும் தாக்குதல் செய்திக்குப் பிறகு சரிந்தன. கடந்த வார இறுதியில் இரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலின் எதிர்வினையை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இரானிய அமைச்சர் எச்சரிக்கை இஸ்ரேலிய தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார். "இஸ்ரேலின் எந்தவொரு பதிலடிக்கும் தனது நாட்டின் பதில் "உடனடியாகவும் அதிகபட்ச மட்டத்திலும்" இருக்கும்" என்று தற்போது வெளியாகியிருக்கும் செய்திகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் எச்சரித்தார். கடந்த சனிக்கிழமை இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப் போவதாக இஸ்ரேல் கூறி வந்ததது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட இஸ்ரேலின் நட்பு நாடுகள் இஸ்ரேல் பதிலடி தரக்கூடாது என்று வலியுறுத்தி வந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES இப்போதைய தாக்குதலுக்கு என்ன காரணம்? சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரானிய தூதரகக் கட்டடத்தின் மீது கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டது என்று இரான் கூறுகிறது. தூதரகத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது இரான் குற்றம்சாட்டுகிறது. இது தன் இறையாண்மையை மீறுவதாக இரான் கருதுகிறது. அத்தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. அந்தத் தாக்குதலில் இரானின் உயர்நிலைக் குடியரசுக் காவலர்களின் (Iran's elite Republican Guards - IRGC) வெளிநாட்டுக் கிளையான குத்ஸ் படையின் மூத்த தளபதியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். லெபனானின் ஷியா ஆயுதக் குழுவான ஹெஸ்பொலாவுக்கு ஆயுதம் வழங்க இரான் எடுத்துவரும் முன்னெடுப்புகளில் அவர் முக்கிய நபராக இருந்தார். இந்தத் தூதரகத் தாக்குதல், இரானிய இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்துவதாகப் பரவலாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதல்களை ஒத்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் சிரியாவில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் பல மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். உயர் ரக துல்லிய ஏவுகணைகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை IRGC சிரியா வழியாக ஹெஸ்பொலாவுக்கு அனுப்புகிறது. இஸ்ரேல் இதைத் தடுக்க முயற்சிக்கிறது. அதே போல் இரான் சிரியாவில் தனது ராணுவ இருப்பை வலுப்படுத்துவதையும் இஸ்ரேல் தடுக்க முயல்கிறது. https://www.bbc.com/tamil/articles/c254j8gykgvo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.