Jump to content

கவிதை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்


"கவிதை' என்றால் என்ன ?
 பாட்டென்பார்! செய்யுளென்பார்!
 "கவி'யாலே ஆனதுதான்
 தமிழ்மொழி என்பார்!
 
 "கவிதை' என்னும் சொல்லை எடு;
 "தை'யை ஓரமாய் நீக்கி வை
 "கவி' மழையில் நீ நனைவாய்;
 கவிஞன் ஆவாய்!
 
 முதல் எழுத்து "க'வை  நீக்கிப் பார்த்தால்
 முளை விட்டுத் துளிர்க்கின்ற "விதை'

கிடைக்கும்,அங்கே விதவிதமாய்
 சொல் விதைகள் குவியல் ஆகும்!
 

"கவி' என்னும் எழுத்திரண்டை நீக்கிப் பார்த்தால்
 ஓரெழுத்தில் "தை' மாதம் பிறப்பெடுக்கும்!
 அந்தத் தை பிறந்தால் அனைவருக்கும்

 புது வழி ஒன்று பிறந்திருக்கும்
 
 "வி' என்னும் எழுத்ததனை விரட்டி விட்டால்-நீ
 விரும்புகின்ற "கதை' ஒன்று விரிந்தெழும்பும்!
 விரிந்தெழுந்த "கதை'தனைக் கேட்டுக் கொண்டே
 விரித்த பாயில்   நிம்மதியாய்  கண்ணயர்வோம்!

படித்து சுவைத்தவை
 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையின் சொற்சிலம்பம் அருமை.......!   👍

 

Link to comment
Share on other sites

அணுவைப் பிரிக்கும் வல்லமை கண்டு விஞ்ஞானிகளை வியந்தோம். தமிழையும் அணுவணுவாகப் பிரிக்கும் எங்கள் கள உறவு நிலாமதியின் பதிவு கண்டு மதி மயங்கினோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்விற்கு நன்றி சகோதரி..👍

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.