Jump to content

தமிழர்கள் அரசமைப்பை , அரசை மதித்து நேர் வழியில் நடந்தால் தீர்வும் தானாக வந்து சேரும்.! - ராஜபக்ச அரசு அறிவுரை.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் அரசை மதித்து - அரசமைப்பை மதித்து நேர் வழியில் நடந்தால் தீர்வும் தானாக வந்து சேரும்.! - ராஜபக்ச அரசு அறிவுரை.!

Screenshot-2020-10-04-11-22-31-281-com-a

இலங்கை மூவினத்தவர்களுக்கும் சொந்தமான நாடு. இங்கு தமிழர்கள் அரசை மதித்து - அரசமைப்பை மதித்து நேர் வழியில் நடந்தால் அவர்களுக்கான அரசியல் தீர்வும் தானாகவே கிடைக்கும்."

- இவ்வாறு சபை முதல்வரும் வெளிவிவகார அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"நாட்டின் அரசமைப்பை மதித்து - அரசை மதித்துத் தமிழர்கள் நேர் வழியில் நடந்திருந்தால் ஆயுதப் போராட்டம் என்ற ஒன்று நடந்திருக்க வாய்ப்பே இருந்திருக்காது. பல இழப்புகளையும் தமிழர்கள் சந்திக்க வேண்டி வந்திருக்கமாட்டாது.

நாம் எமது படை வீரர்களின் தியாகத்தால் ஆயுதப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தோம். தமிழர்கள் நிம்மதியாக வாழும் நிலையை ஏற்படுத்தினோம். ஆனால், அவர்கள் திரும்பவும் பழைய நிலைக்கே செல்ல முற்படுகின்றார்கள்.

ஆயுதப் போராட்டக் காலத்தில் உயிரிழந்த பயங்கரவாதிகளான விடுதலைப்புலிகளை நினைவு கூர அனுமதி கேட்டு வடக்கு, கிழக்கில் ஹர்த்தாலைத் தமிழர்கள் அனுஷ்டித்துள்ளார்கள், போதாக்குறைக்கு இந்து ஆலயம் முன்பும் அவர்கள் உண்ணாவிரதமும் இருந்துள்ளார்கள்.

அரசையும் சிங்கள மக்களையும் கடும் சீற்றமடையைச் செய்யும் வகையில் தமது நடவடிக்கைகளைத் தமிழர்கள் தொடர்ந்தும்  முன்னெடுக்கின்றார்கள். நாட்டைப் பிளவுபடுத்தும்  நோக்கில் அரசியல் தீர்வு  ஒன்று வேண்டும் என ஒற்றைக்காலில் அவர்கள் நிற்கின்றார்கள். தமிழர்கள் அரசை மதித்து - அரசமைப்பை மதித்து நேர் வழியில் நடந்தால் அவர்களுக்கான அரசியல் தீர்வும் தானாகவே கிடைக்கும்.

ஆனால், அந்தத் தீர்வு ஒற்றையாட்சித் தீர்வாகவே இருக்கும். அதையும் அவர்கள் வேண்டாம் என உதறி எழுந்தால் எம்மால் ஒன்றும் செய்ய முடியாது.

அவ்வாறு நடந்தால் தமிழர்கள் செவ்வாய்க் கிரகம் சென்றுதான் தமக்கான தீர்வைக் கேட்க வேண்டி வரும்" - என்றார்

http://aruvi.com/article/tam/2020/10/04/17498/

Link to comment
Share on other sites

நாயை நடுக்கடலில் விட்டாலும் அது நக்கித்தான் தண்ணீர் குடிக்கும். இந்தாளுக்கு அமைச்சர்பதவி அதுவும் வெளிவிவகார அமைச்சுப்பதவி கொடுத்தாலும் அது தன்குணத்திலிருந்து மாறாதுபோலுள்ளது.🤔

Link to comment
Share on other sites

9 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தமிழர்கள் அரசை மதித்து - அரசமைப்பை மதித்து நேர் வழியில் நடந்தால் தீர்வும் தானாக வந்து சேரும்.! - ராஜபக்ச அரசு அறிவுரை.!

Screenshot-2020-10-04-11-22-31-281-com-a

இலங்கை மூவினத்தவர்களுக்கும் சொந்தமான நாடு. இங்கு தமிழர்கள் அரசை மதித்து - அரசமைப்பை மதித்து நேர் வழியில் நடந்தால் அவர்களுக்கான அரசியல் தீர்வும் தானாகவே கிடைக்கும்."

- இவ்வாறு சபை முதல்வரும் வெளிவிவகார அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"நாட்டின் அரசமைப்பை மதித்து - அரசை மதித்துத் தமிழர்கள் நேர் வழியில் நடந்திருந்தால் ஆயுதப் போராட்டம் என்ற ஒன்று நடந்திருக்க வாய்ப்பே இருந்திருக்காது. பல இழப்புகளையும் தமிழர்கள் சந்திக்க வேண்டி வந்திருக்கமாட்டாது.

நாம் எமது படை வீரர்களின் தியாகத்தால் ஆயுதப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தோம். தமிழர்கள் நிம்மதியாக வாழும் நிலையை ஏற்படுத்தினோம். ஆனால், அவர்கள் திரும்பவும் பழைய நிலைக்கே செல்ல முற்படுகின்றார்கள்.

ஆயுதப் போராட்டக் காலத்தில் உயிரிழந்த பயங்கரவாதிகளான விடுதலைப்புலிகளை நினைவு கூர அனுமதி கேட்டு வடக்கு, கிழக்கில் ஹர்த்தாலைத் தமிழர்கள் அனுஷ்டித்துள்ளார்கள், போதாக்குறைக்கு இந்து ஆலயம் முன்பும் அவர்கள் உண்ணாவிரதமும் இருந்துள்ளார்கள்.

அரசையும் சிங்கள மக்களையும் கடும் சீற்றமடையைச் செய்யும் வகையில் தமது நடவடிக்கைகளைத் தமிழர்கள் தொடர்ந்தும்  முன்னெடுக்கின்றார்கள். நாட்டைப் பிளவுபடுத்தும்  நோக்கில் அரசியல் தீர்வு  ஒன்று வேண்டும் என ஒற்றைக்காலில் அவர்கள் நிற்கின்றார்கள். தமிழர்கள் அரசை மதித்து - அரசமைப்பை மதித்து நேர் வழியில் நடந்தால் அவர்களுக்கான அரசியல் தீர்வும் தானாகவே கிடைக்கும்.

ஆனால், அந்தத் தீர்வு ஒற்றையாட்சித் தீர்வாகவே இருக்கும். அதையும் அவர்கள் வேண்டாம் என உதறி எழுந்தால் எம்மால் ஒன்றும் செய்ய முடியாது.

அவ்வாறு நடந்தால் தமிழர்கள் செவ்வாய்க் கிரகம் சென்றுதான் தமக்கான தீர்வைக் கேட்க வேண்டி வரும்" - என்றார்

http://aruvi.com/article/tam/2020/10/04/17498/

முதலில் சிங்கள அரசுகள் தமிழர்களை மதித்து இலங்கைப் பிரசைகளாக நடத்தட்டும். அதன் பின் பார்க்கலாம் தமிழர்களுக்கென இன்னொரு அரசோ நாடோ தேவையா என்பதை.

Link to comment
Share on other sites

10 hours ago, Paanch said:

நாயை நடுக்கடலில் விட்டாலும் அது நக்கித்தான் தண்ணீர் குடிக்கும். இந்தாளுக்கு அமைச்சர்பதவி அதுவும் வெளிவிவகார அமைச்சுப்பதவி கொடுத்தாலும் அது தன்குணத்திலிருந்து மாறாதுபோலுள்ளது.🤔

மற்ற அமைச்சர்கள் சிறப்பானவர்கள், இவர்தான் பொருத்தமற்றவர் என்றவறாக அல்லவா எழுதியிருக்கிறீர்கள்? இது உண்மைதானா?

3 hours ago, Ellam Theringjavar said:

முதலில் சிங்கள அரசுகள் தமிழர்களை மதித்து இலங்கைப் பிரசைகளாக நடத்தட்டும். அதன் பின் பார்க்கலாம் தமிழர்களுக்கென இன்னொரு அரசோ நாடோ தேவையா என்பதை.

இனித்தானா “தமிழர்களுக்கென இன்னொரு அரசோ நாடோ தேவையா என்பதை“ பார்க்கப்போகிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
On 4/10/2020 at 14:49, கற்பகதரு said:

மற்ற அமைச்சர்கள் சிறப்பானவர்கள், இவர்தான் பொருத்தமற்றவர் என்றவறாக அல்லவா எழுதியிருக்கிறீர்கள்? இது உண்மைதானா?

இனித்தானா “தமிழர்களுக்கென இன்னொரு அரசோ நாடோ தேவையா என்பதை“ பார்க்கப்போகிறீர்கள்?

பதிவிலேயே பதில் இருக்கிறது. அரசு எல்லா மக்களையும் மதித்து நடத்தினால் பின் ஏன் தனிநாடு தனியரசு என்ற எண்ணம் வரும். வராது.

ரோகண விசயவீர முழு நாட்டையும் ஆளப்பார்த்தார். வந்த வேகத்திலேயே தொலைந்து போனார். ஏன் அவருக்கு ஆசையிருந்தது. தேவையிருக்கவில்லை.

தமிழர்கள் வடக்கு கிழக்கு மட்டும் கேட்டார்கள். ஆசையல்ல. தேவையிருந்தது.

இன்னுமொருதரம், ஆளும் வர்க்கம் சரியாய் இருப்பின் மக்களுக்கு பிரிக்கவேண்டும் எண்ணம் வராது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Ellam Theringjavar said:

பதிவிலேயே பதில் இருக்கிறது. அரசு எல்லா மக்களையும் மதித்து நடத்தினால் பின் ஏன் தனிநாடு தனியரசு என்ற எண்ணம் வரும். வராது.

ரோகண விசயவீர முழு நாட்டையும் ஆளப்பார்த்தார். வந்த வேகத்திலேயே தொலைந்து போனார். ஏன் அவருக்கு ஆசையிருந்தது. தேவையிருக்கவில்லை.

தமிழர்கள் வடக்கு கிழக்கு மட்டும் கேட்டார்கள். ஆசையல்ல. தேவையிருந்தது.

இன்னுமொருதரம், ஆளும் வர்க்கம் சரியாய் இருப்பின் மக்களுக்கு பிரிக்கவேண்டும் எண்ணம் வராது.

 

கனடாவில்  கியூபக்மக்கள்  சிறந்த  உதாரணம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/10/2020 at 16:57, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஆயுதப் போராட்டக் காலத்தில் உயிரிழந்த பயங்கரவாதிகளான விடுதலைப்புலிகளை நினைவு கூர அனுமதி கேட்டு வடக்கு, கிழக்கில் ஹர்த்தாலைத் தமிழர்கள் அனுஷ்டித்துள்ளார்கள், போதாக்குறைக்கு இந்து ஆலயம் முன்பும் அவர்கள் உண்ணாவிரதமும் இருந்துள்ளார்கள்.

இதற்கு சிங்களமக்களும் அரசும் ஏன் சீற்றமடைய வேண்டும் என்று தெரியலியே.

On 4/10/2020 at 16:57, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இலங்கை மூவினத்தவர்களுக்கும் சொந்தமான நாடு

நீங்களும் உங்கள் சட்டமும் அன்றும் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை  இன்றும் இல்லை. எதற்காக ஆயுதம் ஏந்தினார்கள் என்கிற உண்மையை ஏற்றுக்கொள்ளாமல் ஏதேதோ பேசுகிறீர்கள். அதனாற்தான் இந்தப் பிரச்சனை தொடர்கிறது, நீங்கள் யாரை விலை பேசினாலும், வளைத்துப்போட்டாலும்  பிரச்சனை  தீராது. 

On 4/10/2020 at 16:57, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தமிழர்கள் நிம்மதியாக வாழும் நிலையை ஏற்படுத்தினோம்.

அப்படி ஏதும் மாற்றம் நிகழவில்லை. இல்லாத ஒன்றை இருப்பதாக நீங்கள் காட்ட முயற்சிக்கிறீர்கள் உங்களிடம் சோரம் போனவர்களூடாக. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.