Jump to content

நோபல் பரிசுகள்: 2020


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

2020ஆண்டு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2020ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு விபரங்கள் இன்று முதல் அறிவிக்கப்படுகின்றது. இதற்கமைவாக  மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு 3பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகின்றது.

அதன்படி ஹார்வே ஜே.ஆல்டர், மைக்கேல் ஹாப்டன் மற்றும் சார்லஸ் எம்.ரைஸ் ஆகிய 3பேருக்கும் இந்த விருது பகிர்ந்தளிக்கப்படுகின்றது.

இவர்கள் மூவரும் இணைந்து ‘ஹெப்பரைற்றிஸ் சி வைரஸ்’ என்ற வைரசை கண்டறிந்தமைக்காக இவர்களுக்கு 2020இற்கான மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு வழங்கப்படுகின்றது.

ஹெப்பரைரிஸ் C ஈரலளர்சியை ஏற்படுத்தும் மூன்றாவது வகை வைரசு 1989 இல் ஹார்வியால் இனங்காணப்பட்ட போதும் மைக்கெல் ஹோட்டன் 1990 இல் அதன் உயிரியல் இரசாயன கூறுகளை இனங்கண்டு பரிசோதனை முறைகளை இனங்கண்டார், அதனை தொடர்ந்து சார்ள்ஸ் ரைஸ் ஹெப்பரைரிஸ் C வைரசு தனியாக ஈரல் அழற்சியை ஏற்படுத்த வல்லது என்பதை 1991 இல் உறுதிப் படுத்தினார்.

இக்கண்டுபிடிப்புகள் தொடர்ந்து ஹெப்பரைரிஸ் C வைரஸினால் ஏற்பட கூடிய தாக்கங்களை குறைக்கும் மருந்துகளையும் அந்நோயின் பரவளையும் தடுக்க உதவியமையை கருத்தில் கொண்டு 2020 இற்கான நோபல் பரிசு கிட்டத்தட்ட 20 ஆண்டுகளின் பின்னர் இவர்களுக்கு வழங்கப்படுவது குறிப்பிடதக்கது.

உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு, மருத்துவம், இயற்பியல், வேதியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.

இதில் அமைதிக்கான நோபல் பரிசு நோர்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு சுவீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் அறிவிக்கப்படும்.

இதற்கமைவாக இந்த ஆண்டிற்கான துறை சார்பாக நோபல் பரிசுகள் இன்று (05) முதல் அறிவிக்கப்படுகின்றது. அதன்படி மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றைய துறைகளுக்கான நோபல் பரிசு விபரங்கள் அடுத்தடுத்த தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.ilakku.org/2020ஆண்டு-மருத்துவத்துறைக்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2020 ம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு 2 பெண்களுக்கு கூட்டாக அறிவிப்பு

2020 ம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு 2 பெண்களுக்கு கூட்டாக அறிவிப்பு

 

ஸ்டாக்ஹோம்
 
இமானுவேல் சார்பென்டியர், ஜெனிஃபர் ஏ டவுட்னாஆகிய 2 பெண்களுக்கு  வேதியியலுக்கான நோபல் பரிசுகள் 2 கூட்டாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மரபணு சார்ந்த ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.இமானுவேல் சார்பென்டியர் - பிரான்ஸ் நாட்டவர் ஜெனிஃபர் ஏ டவுட்னா - அமெரிக்க நாட்டவர்
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

spacer.pngகருந்துளை குறித்து ஆராய்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு

கருந்துளைகள் பற்றிய ஆராய்வுக்காக மூன்று விஞ்ஞானிகளுக்கு 2020 ஆம் ஆண்டின் பெளதீகவியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

ரோஜர் பென்ரோஸ், ரெய்ன்ஹார்ட் ஜென்சல் மற்றும் ஆண்ட்ரியா கெஸ் ஆகியோரே இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வெற்றியாளர்களாக சுவீடனின் ஸ்டாக்ஹோமில் நடந்த செய்தி மாநாட்டில் அறிவிக்கப்பட்டனர்.

வெற்றியாளர்கள் 10 மில்லியன் குரோனர் (£864,200) பரிசுத் தொகையைப் பகிர்ந்து கொள்வார்கள்.

கருந்துளை என்பது, இவற்றின் எல்லைக்குட் செல்லும், ஒளி உட்பட்ட எதுவுமே வெளியேற முடியாத அளவு வலுவான ஈர்ப்புச் சத்தியைக் கொண்டுள்ள, அண்டவெளியின் ஒரு பகுதியாகும்.

https://www.virakesari.lk/article/91461

Link to comment
Share on other sites

  • நிழலி changed the title to நோபல் பரிசுகள்: 2020
  • கருத்துக்கள உறவுகள்

இலக்கியத்துக்கான நோபல் பரிசு அமெரிக்கப் பெண்ணுக்கு

2020 ஆம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு  அமெரிக்க கவிஞர் லூயிஸ் க்ளூக் கிற்கு இன்று வழங்கப்பட்டுள்ளது.

இலக்கிய நோபல் பரிசு பெற்ற லூயிஸ் க்ளூக் அமெரிக்க சமகால இலக்கியத்தில் மிக முக்கியமான கவிஞர்களில் ஒருவராக பாராட்டப்பட்டார். 

அவர் பன்னிரண்டு கவிதைத் தொகுப்புகளையும், கவிதைகள் குறித்த சில கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார்.

இந் நிலையில் அமைதிக்கான நோபல் பரிசு வெள்ளிக்கிழமையும் பொருளாதார அறிவியலுக்கான பரிசு திங்கட்கிழமையும் அறிவிக்கப்படும்.

https://www.virakesari.lk/article/91638

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நோபல் பரிசுக்கு ஐநா-வின் உலக உணவுத் திட்டம் தேர்வு

1-27-696x464.jpg

 

2020ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஐநா-வின் உலக உணவுத் திட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவம், இயற்பியல், வேதியியல் துறைகளைத் தொடர்ந்து, அமைதிக்கான நோபல் பரிசை நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நோபல் பரிசு குழு  அறிவித்தது. இதில், அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஐநா-வின் உலக உணவுத் திட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக பரிசுக் குழுவின் தலைவர் பெரிட் ரெய்ஸ்-ஆண்டர்சன் அறிவித்தார்.

உலகம் முழுவதும்  பட்டினியை எதிர்த்துப் போராடியதற்காகவும், போர், உள்நாட்டுப் போர் நடக்கும் இடங்களில் அமைதியான சூழல் நிலவ அளித்த பங்களிப்பு, போர், பிரச்சினைக்குரிய இடங்களில் பட்டினியை ஆயுதமாக பயன்படுத்துவதைத் தடுக்க 58 ஆண்டுகள் அயராத முயற்சிகள் மேற்கொண்டதால் இந்த அமைதிக்கான நோபல்பரிசு உலக உணவுத் திட்ட அமைப்பிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பரிசுக் குழுவின் தலைவர் பெரிட் ரெய்ஸ்-ஆண்டர்சன்  கூறுகையில்,“ போருக்கான ஆயுதமாக பசியை பயன்படுத்துவதைத் தடுக்க உலக உணவுத் திட்டம் பங்களிப்பை செய்துள்ளது.  வன்முறைகளுடன் கொரோனா பெருந்தொற்றும் ஏற்பட்டதால் ஏமன், காங்கோ, நைஜீரியா, தெற்கு சூடான், பர்கினோ பசோ ஆகிய நாடுகளில் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அவர்களுக்கு தேவையான உதவிகளை உலக உணவுத் திட்டம் வழங்கியது. உணவு பாதுகாப்பு வழங்குவது என்பது, வறுமையைத் தடுப்பதுடன், அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தும்.

உலக உணவு அமைப்புக்கு விருது வழங்குவதன் மூலம், பசியால் வாடும் கோடிக்கணக்கான மக்களின் பக்கம் உலகின் பார்வை திருப்ப வேண்டும்.” என்றார்.

UN World Food Programme wins 2020 Nobel Peace Prize, as hunger mounts | WFP awarded 2020 Nobel Peace Prize for its efforts to combat hunger | UN News

கடந்த 2019-ம் ஆண்டில் மட்டும்  உலக உணவு திட்டம் பட்டினியால் வாடிய 88 நாடுகளைச் சேர்ந்த 10 கோடி மக்களுக்கு உணவு வழங்கி பசியாற்றி, உணவுப் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது. உலகளவில் பட்டினியை ஒழிப்பது என்பது ஐ.நாவின் நிலையான வளர்ச்சி இலக்காக கடந்த 2015-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.

கொரோனா வைரஸின் பாதிப்பால் உலகளவில் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக யேமன், காங்கோ ஜனநாயகக் குடியரசு, நைஜீரியா, தெற்கு சூடான், புர்கினபாசோ ஆகிய நாடுகளில் பசியோடு சேர்ந்து உள்நாட்டுப் போர் வன்முறையும் சேர்ந்து கொண்டது. இந்த காலகட்டத்தில் கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டதால், ஏராளமான மக்கள் பட்டினி நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இந்த பெருந்தொற்று காலத்தில்  உலக உணவு திட்டம் தன்னுடைய முயற்சிகளைத் தீவிரப்படுத்தி, பட்டினியை போக்க முயன்றது. மருத்துவரீதியான தடுப்பூசி எங்களிடம் இருக்கும் நாள் வரை, குழப்பத்துக்கு சிறந்த தடுப்புமருந்து உணவுதான் என்று உலக உணவுத்திட்டம் குறிப்பிட்டிருந்தது.

கடந்த 1963-ம்ஆண்டு ஐநாவால் தொடங்கப்பட்ட  உலக உணவு திட்டம்,1965-ம் ஆண்டு முதல் முழுமையாகச் செயல்படத் தொடங்கியது. இந்த உலக உணவுத் திட்டத்துக்கு பல்வேறு நாடுகளின் அரசுகளின் பங்களிப்பும், தனிநபர்கள், நிறுவனங்களும் நன்கொடை அளித்து பங்களிப்பு செய்கின்றன.

சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 93 நாடுகளைச் சேர்ந்த 9.3 கோடி மக்களுக்கு உணவு வழங்கும் பணியை  இந்த அமைப்பு செய்து வருகிறது. இந்த உலக உணவுத் திட்டத்தின் தலைமை அலுவலகம் ரோம் நகரிலும், அலுவலகங்கள் உலகளவில் 80 நாடுகளிலும் செயல்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.ilakku.org/un-world-food-programme-wins-2020-nobel-peace-prize-as-hunger-mounts/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஓம்….இலங்கை டுயல் நேஷ்னாலிட்டி எடுத்தால் ஒரே செலவுடன் சமாளிக்கலாம். இல்லாட்டில் இந்த புதிய நடைமுறையின் கீழ் 9 மாதம் நிற்க இரு தடவையும், 6 மாதம் நிற்க ஒரு தரமும் வெளியே போய் வர வேண்டும் (ஒருதரம் சென்னை ரிட்டர்ண் மட்டும் £180). 
    • தலையைச் சுற்றி மூக்கைத் தொட்டாலும் இதனை எவ்வறு விளங்கிக் கொள்கிறீர்கள் ? Respondents were asked if they think Israel should respond to the Iranian attack on Saturday night, to which 52% answered that it is better not to respond to end the current round of conflict. In comparison,  48% answered that Israel should respond, even if it means that the price would be an extension of the current conflict.  செய்தியில் இஸ்ரெயில் தனது கூட்டு நாடுகளை மீறி ஈரான் மீது தாக்குவதை 74 வீதமானோர் விரும்பவில்லை என்று உள்ளது. இதற்கு கபிதான் பொதுமக்கள் போரை விரும்பவில்லை என்று கொள்கை விளக்கம் தந்துள்ளார். இஸ்ரெய்லிய மக்களில் அரைவாசிப் பேர் கூட்டு நாடுகள் தடுக்காவிட்டால் போரையே விரும்புகிறார்கள் என்பதுதான் சாரம்.
    • உக்கிரேன் ர‌ஷ்சியா பிர‌ச்ச‌னைக்கு பிற‌க்கு டென்மார்க் ஊட‌க‌ங்க‌ளும் எச்சைக் க‌ல‌ ஊட‌க‌ங்க‌ளாய் மாறி விட்டின‌ம் ந‌ண்பா......................உக்கிரேன் இஸ்ரேல் செய்வ‌து ச‌ரி என்று சொல்லுங்க‌ள் பார்த்தா ச‌ரியான‌ க‌டுப்பு வ‌ரும் ஆன‌ ப‌டியால் பார்ப்ப‌தை நிறுத்தி விட்டேன் போர் விதி மீற‌ல‌ இஸ்ரேல் செய்தும் அதை ச‌ரி என்று சொன்னால் இதை எப்ப‌டி ஏற்ப்ப‌து ந‌ண்பா.................... டென்மார்க் நாட்டின் அட‌க்குமுறை ப‌ற்றி யாழில் புது திரி திற‌ந்து உண்மை நில‌வ‌ர‌த்தை எழுத‌ போறேன் நேர‌ம் இருக்கும் போது வாசி ந‌ண்பா...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.