Jump to content

டிரைவ் இன் கலியாணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

டிரைவ் இன் கலியாணம்

கொரோனா அடங்கீட்டுது. பிறகென்ன, ஒரு கலியாணத்தினை நடத்தி முடித்திடுவம் எண்டு ஒரு இந்தியன் கலியாணத்துக்கு பெரிய எடுப்பில் ஒழுங்கு பண்ணியாச்சு.

அக்டோபர் முதல் வார இறுதியில் கலியாணம்.

அடக் கடவுளே.... கொரோனா திருப்பியும் வருதாம். கூட்டம் கூட கூடாது, எண்டு பிரிட்டிஷ் அரசு சொல்லி விட்டது.

பின்ன எப்படி கலியாணம் செய்வது?

சரி, இந்து மதப்படி தேதி மாத்துறது சரி இல்லை.

கலியாணம் ஒழுங்கு செய்த கம்பெனிக்கும், பண இழப்பு.

சரி, மாத்தி யோசி...

டிரைவ் இன் கலியாணம்.

ஒரு கோலில் கலியாணம். மாப்பிளை, பொம்பிளை, இருபகுதியிலும் ஆக்கள், அய்யர், கேமரா காரர் எண்டு அரசாங்கம் சொன்ன அளவில் நடக்குது.

Cars gathered in front of a large screen showing a wedding.

வெளியே பெரிய ஸ்கிரீன் வைத்து இருக்கிறது. அழைக்கப்பட்ட அனைவரும் காரில் வந்து, அதுலேயே இருந்து ஸ்கிரீன் பார்த்து, வாழ்த்துகின்றனர்.

அவர்கள், இணையத்தில், முதலில் தெரிவு செய்த உணவு, குடி பானம், மாஸ்க் போட்ட ஈவென்ட் கம்பெனி காரர்களால் விநியோகிக்கப்படுகின்றது.

A man passes a bag of snacks through a car window.

கலியாணம் சட்டத்தினை மீறாத வகையில், அரச அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடந்து முடிந்தது.

Roma Popat and Vinal Patel after their wedding ceremony.

இன்று பிரிட்டிஷ் பிரதமர், இது நல்ல ஐடியா என்று வேறு புகழ்ந்திருக்கிறார்.

இனி இப்படி தான் கலியாணங்களோ?

முக்கியமான விசயம்.... (நல்ல கதை... சும்மாவே கூப்பிட்டது)

மொய்யும், ஆசீர்வாதமும் வாங்க.... மாப்பிளை, பொம்பிளை வெளியிலை வந்து ஊஞ்சலிலை இருக்க, காரிலேயே, லயினிலை வந்து, கொடுத்து விட்டு போயிருக்கினம்.... 

Roma Popat and Vinal Patel on the back of a golf buggy in front of a large screen.

https://bbc.co.uk/news/uk-england-essex-54435275

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலத்துக்கேற்ற  கலியாணம் . கார் பாக்கிங் பிரச்சினையாய் இருக்காதோ ? காருக்குள்ள தானே நல்ல உடுபிடவையும் தேவையில்லை .drive  through   இல் சாப்பாடு 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

அவர்கள், இணையத்தில், முதலில் தெரிவு செய்த உணவு, குடி பானம், மாஸ்க் போட்ட ஈவென்ட் கம்பெனி காரர்களால் விநியோகிக்கப்படுகின்றது.

வெளியே 50 பொலிசை நிற்பாட்டி வைத்தால் ஒவ்வொரு காரும் வரவர மதுபோதையில் வாகனம் ஓட்டினார்கள் என்று வழக்கு பதிவு செய்யலாம். எங்கே பிரக்கிராசியர்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொய் வாங்க போட்ட யோசனை... நன்றாக உள்ளது. 👍🏼 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரும் போகலாம் தானே... நாத போனனீரா


காருக்குள்ள தானே, மேக்கப்பும், நல்ல உடுப்புகளும் தேவையில்லை, 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, உடையார் said:

யாரும் போகலாம் தானே... நாத போனனீரா


காருக்குள்ள தானே, மேக்கப்பும், நல்ல உடுப்புகளும் தேவையில்லை, 😂

அறுபது மைல்.... மொய் வைக்காமல்... வரேலாதெண்டு.... போகேல்ல...😛

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை பெண்டுகள் உப்படியான வைபங்களுக்கு போவதே தங்கள் நகை மற்றும் உடுப்புகளை காட்டத்தானே.குடுக்கிற மொய்க்கு இதுவும் இலலை என்டால்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் நல்ல யோசனைதான்......போனமாம் காரில் இருந்தபடியே வாழ்த்தினமாம் உண்டு களித்தமாம் மொய் அளித்தமாம் வந்தமாம் என்று இருக்கோணும் .......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Nathamuni said:

டிரைவ் இன் கலியாணம்

கொரோனா அடங்கீட்டுது. பிறகென்ன, ஒரு கலியாணத்தினை நடத்தி முடித்திடுவம் எண்டு ஒரு இந்தியன் கலியாணத்துக்கு பெரிய எடுப்பில் ஒழுங்கு பண்ணியாச்சு.

அக்டோபர் முதல் வார இறுதியில் கலியாணம்.

அடக் கடவுளே.... கொரோனா திருப்பியும் வருதாம். கூட்டம் கூட கூடாது, எண்டு பிரிட்டிஷ் அரசு சொல்லி விட்டது.

பின்ன எப்படி கலியாணம் செய்வது?

சரி, இந்து மதப்படி தேதி மாத்துறது சரி இல்லை.

கலியாணம் ஒழுங்கு செய்த கம்பெனிக்கும், பண இழப்பு.

சரி, மாத்தி யோசி...

டிரைவ் இன் கலியாணம்.

ஒரு கோலில் கலியாணம். மாப்பிளை, பொம்பிளை, இருபகுதியிலும் ஆக்கள், அய்யர், கேமரா காரர் எண்டு அரசாங்கம் சொன்ன அளவில் நடக்குது.

Cars gathered in front of a large screen showing a wedding.

வெளியே பெரிய ஸ்கிரீன் வைத்து இருக்கிறது. அழைக்கப்பட்ட அனைவரும் காரில் வந்து, அதுலேயே இருந்து ஸ்கிரீன் பார்த்து, வாழ்த்துகின்றனர்.

அவர்கள், இணையத்தில், முதலில் தெரிவு செய்த உணவு, குடி பானம், மாஸ்க் போட்ட ஈவென்ட் கம்பெனி காரர்களால் விநியோகிக்கப்படுகின்றது.

A man passes a bag of snacks through a car window.

கலியாணம் சட்டத்தினை மீறாத வகையில், அரச அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடந்து முடிந்தது.

Roma Popat and Vinal Patel after their wedding ceremony.

இன்று பிரிட்டிஷ் பிரதமர், இது நல்ல ஐடியா என்று வேறு புகழ்ந்திருக்கிறார்.

இனி இப்படி தான் கலியாணங்களோ?

முக்கியமான விசயம்.... (நல்ல கதை... சும்மாவே கூப்பிட்டது)

மொய்யும், ஆசீர்வாதமும் வாங்க.... மாப்பிளை, பொம்பிளை வெளியிலை வந்து ஊஞ்சலிலை இருக்க, காரிலேயே, லயினிலை வந்து, கொடுத்து விட்டு போயிருக்கினம்.... 

Roma Popat and Vinal Patel on the back of a golf buggy in front of a large screen.

https://bbc.co.uk/news/uk-england-essex-54435275

 

நல்ல ஐடியா.......ஹோல் செலவில்லை....கண்ட கண்ட அலைச்சல் இல்லை..😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

வெளியே 50 பொலிசை நிற்பாட்டி வைத்தால் ஒவ்வொரு காரும் வரவர மதுபோதையில் வாகனம் ஓட்டினார்கள் என்று வழக்கு பதிவு செய்யலாம். எங்கே பிரக்கிராசியர்?

வில்லன் வேறை எங்கையுமில்லை.......நடு வீட்டுக்குள்ளையே பிடிச்சுவைச்ச பிள்ளையார் மாதிரி  இஞ்சைதான் இருக்காங்க....😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்
இதில் இருந்து தெரிவது என்னவென்றால்
நினைத்தால் ஒரு காரியத்தை எப்படியும் செய்து முடிக்கலாம்

மணமக்களின் கட் அவுட்டை ஒரு இடத்தில் வைத்துவிட்டு அங்கேயே போட்டோவும் எடுத்திருக்கலாம்
இதை முதலில் யோசித்திருந்தால் எனக்கு போட்டோ எடுக்கவில்லை
என்ற குறை  வந்திருக்காது😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

memees.php?w=240&img=Z291bmRhbWFuaS9nb3V

நல்ல திட்டம் எட்டனா கொடுத்து போட்டு குடும்பமே தின்ன முடியாதலோ..👍

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
    • இதைவிட முக்கியமானது புலனாய்வுப் பிரிவுகளின் அச்சுறுத்தல் என எண்ணுகிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.