Jump to content

கொரோனா தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும் ? - உலக சுகாதார அமைப்பு புதிய தகவல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும் ? - உலக சுகாதார அமைப்பு புதிய தகவல்

 

ஜெனீவா, 

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. கொரோனா பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் ஆகியுள்ள போதிலும் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் விழி பிதுங்கி நிற்கின்றன. 

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு போன்ற கட்டுபாடுகளை பல்வேறு நாடுகள் விதித்த போதிலும் தொற்று பாதிப்பை முழுமையாக கட்டுப்படுத்த  முடியவில்லை. பொருளாதாரம் பாதிக்கப்படுவதாக ஊரடங்கு விதித்த நாடுகளும் பின்னர் கட்டுப்பாடுகளை விலக்கிக் கொண்டன. இதனால், தடுப்பூசி எப்போது கிடைக்கும் என பெரும் எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் உள்ளது. 

தடுப்பூசி கண்டுபிடிக்கும் மும்முரமாக நடந்து வருகிறது. மருத்துவ பரிசோதனையின் இறுதி கட்டங்களில் உள்ள தடுப்பூசிகள் எப்போது பொது பயன்பாட்டுக்கு கிடைக்கும் என்பதே பல நாடுகளின் ஏக்கமாக உள்ளது. இந்த நிலையில், இந்நிலையில், கொரோனா தடுப்பூசி எப்போது என்ற கேள்விக்கு உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனாம் பதிலளித்துள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் கூறியதாவது:-

கொரோனா தடுப்பூசி தயாரான உடன் அவை அனைவருக்கும் சமமான விகிதத்தில் விநியோகம் செய்ய  உலக நாடுகளின் தலைவர்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி நிச்சயம் தேவைப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி தயாராகிவிடும் என்பதில் மிகுந்த நம்பிக்கை உள்ளது” என்றார்.

https://www.dailythanthi.com/News/World/2020/10/07082731/WHO-Head-Says-There-Is-Hope-Covid19-Vaccine-May-Be.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா தடுப்பூசியை சேமிக்க குளிரூட்டும் வசதி அதிகம் தேவை நிபுணர்கள் கருத்து

 

சில கொரோனா தடுப்பூசிகள், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் புழக்கத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை எதிர்பார்த்து, இந்தியாவுக்கு 40 கோடி முதல் 50 கோடி ‘டோஸ்’ தடுப்பூசி கிடைக்கும் என்றும், அடுத்த ஆண்டு ஜூலை மாதத்துக்குள் 25 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும் என்றும் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.


அதே சமயத்தில், தடுப்பூசியை பாதுகாப்பாக சேமித்து வைக்க குளிரூட்டும் வசதிகளை அதிகரிக்க வேண்டும் என்று நிபுணர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.

பெரும் சவால்

இதுகுறித்து டெல்லியில் உள்ள தேசிய தடுப்பூசி நிறுவனத்தின் இயக்குனர் சத்யஜித்ரே கூறியதாவது:-

இப்போது தயாராகி வரும் சில தடுப்பூசிகளை பாதுகாப்பாக வைத்திருக்க அதிகமான குளிரூட்டும் வசதிகள் தேவைப்படும். இதை அமல்படுத்துவது இந்தியாவுக்கு பெரும் சவால்தான்.

இந்த தடுப்பூசிகளை மிகக்குறைவான வெப்பநிலையில் பராமரிக்க வேண்டும். அதிக அளவிலான தடுப்பூசிகளுக்கு இந்த வெப்பநிலையை பராமரிப்பது இயலாத காரியம். தடுப்பூசிகள், சந்தைக்கு வரும்போதுதான் உண்மையான பிரச்சினைகள் உருவெடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வீரியம் போய்விடும்

பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிலையத்தின் பேராசிரியர் ராகவன் வரதராஜன் கூறியதாவது:-

மற்ற மருந்துகளை போலின்றி, கொரோனா தடுப்பூசிகளை 2 டிகிரி முதல்8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்குள் வைத்திருக்க வேண்டும். ஏராளமான தடுப்பூசிகளை இதே வெப்பநிலைக்குள் வைத்திருப்பது சிரமம்தான்.

அதிக வெப்பநிலையில் வைத்திருந்தால், தடுப்பூசியின் வீரியம் போய்விடும். மறுபடியும் குளிரூட்டினாலும் பலன் இருக்காது. ஆகவே, தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பு, குளிரூட்டும் வசதிகளை அதிகரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

2 டிகிரி செல்சியஸ்

இந்திய தேசிய குளிரூட்டும் மைய தலைமை செயல் அதிகாரி பவனேஷ் கோலி கூறியதாவது:-

கொரோனா தடுப்பூசிகளை 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்குள் வைத்திருக்க வேண்டும். அவற்றை வினியோகிக்கும் முன்பு, போக்குவரத்தின்போதும், சேமித்து வைத்திருக்கும்போதும் இந்த வெப்பநிலையே நீடிக்க வேண்டும்.

இந்தியாவில் தற்போது 27 ஆயிரம் குளிரூட்டும் மையங்கள் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/10/09040819/The-refrigeration-facility-is-much-needed-to-store.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.