Jump to content

சர்க்கரை நோய் ஒரு வியாதியா ? | Dr. Arunkumar | Diabetes – Is it a disease?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சர்க்கரை வியாதியை பற்றி பதியும் காணொளிகளுக்கு... நன்றி ஏராளன். :)
என்னுடன் வேலை செய்யும்... ரஷ்ய நாட்டை சேர்ந்தவர், 
சிறு வயதிலிருந்தே... எந்த விதமான இனிப்பு பொருட்களும்  சாப்பிடாதவர்,
அவருக்கு... சர்க்கரை வியாதி வந்துள்ளது என்றால்,
இது,  ஒரு பரம்பரை... வருத்தமாக இருக்கலாம் என்று கருதலாமா

 

🚦 எழுத்துப் பிழை... திருத்தப் பட்டது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இது,  ஒரு பரம்பரை... வருத்தமாக இருக்கலாம் என்று கருதலாமா

அண்ணா,

இதை பற்றிய போதிய தெளிவு இன்னும் இல்லை என்பதே உண்மை. 

எமது உடலில் உள்ள பான்கிரியஸ் (கணையம்) எனும் ஓர் சுரப்பி. இன்சுலீனை சுரக்கிறது. இன்சுலீனே எமது ரத்த சர்க்கரை அளவை கூடாமல் பாதுகாக்கிறது.

இந்த நோய் type 1, type 2 என இருவகைபடும்.

பிறப்பில் இருந்தே இன்சுலின் சுரக்காவிடில் டைப்1. இன்சுலீன் எடுப்பதை விட்டால் வேறு வழியில்லை.

உடல் பருமன், உழைப்பு இன்மை, போன்ற வாழ்கை முறை, மற்றும் உணவு பழகங்களால் ஒரு குறித்த வயதுக்கு பின் வருவது டைப்2.

சில காலம் வரை இதை உடல் பயிச்சி, மருந்து, ஆக கூடினால் இன்சுலீன் மூலம் கட்டுப்படுத்தலாம் ஆனால் மாற்ற remission) முடியாது என்றே கருதபட்டது. ஆனால் கடந்த 3 வருடங்களில் நியூகாசல் பல்கலையில் ஒரு ஆராய்ச்சி, அதை தொடர்ந்து பல case studies மூலம், குறித்தவகையில் விரதம் (டயடிங்) இருந்து, பருமனை குறைத்து - மருந்தே தேவையில்லாதபடி ஆக்கலாம் என நிறுவ பட்டுள்ளது.

யூகே லேபர் பார்டியின் முன்னாள் பிரதி தலைவர் டாம் வாட்சன், இந்த முறையில் இப்போ மருந்தே எடுக்காமல் இருக்கும் அளவுக்கு தேறி விட்டார். ஆனால் தொடர் உணவு கட்டுபாடு, பயிற்சி அவசியம்.

ஆனால் இதுவரை நம்பபட்டதை விட இப்போ type 1.5 என்று ஒரு வகையும் இருக்க கூடும் என ஆராய்சியாளர்கள் நம்புகிறார்கள்.

Autoimmune conditions என்று கேள்விபட்டிருப்பீர்கள். எமது உடலின் நோயெதிர்ப்பு மண்டலமே, தேவையில்லாமல் வேலை செய்து, நோய் கிருமிகள், பிற பொருள் எதிரிகளை தாக்குவது போல எமது உடலின் பகுதிகளையே தாக்குவது.

Lupes, Reynaurd இப்படி ஒரு நீண்ட லிஸ்டே இருக்கிறது இந்தமாதிரியான நோய்கள். இந்த நோய்கள் பெரும்பாலும் பரம்பரையாக வரக்கூடியன. எப்போதும் அல்ல.

இப்படி ஒரு ஓட்டோ இமூன் ரெஸ்போன்ஸ் தாக்கத்தாலும் பன்கிறியாஸ் பாதிக்கப்பட்டு அதனால் சலரோகம் வரலாம் என இப்போ ஊகிக்க படுகிறது.

இந்த ஓட்டோ இமுன் தாக்கம் பிறப்பில் வந்தால் டைப்1 டயபிடீஸ்.

சில காலத்தில்(12-40 வயது) வந்தால் டைப் 1.5 டயபிடீஸ்.

இல்லாமல் வாழ்கை முறையால் வந்தால் டைப் 2. 

இது ஒரு எடுகோள் மட்டுமே இப்போதைக்கு.

ஆகவே இது பரம்பரையாகவும் வரலாம், அப்படி இல்லாமலும் வரலாம் என நினைக்கிறேன்.

ஆனால் நிச்சயம் மரபணு பரம்பலலுக்கும் டயபடீசுக்கும் ஒரு தொடர்புண்டு.

ஆபிரிக்க, தெற்காசிய மனிதர்களில் டயபிடீஸ் வருவது ஒப்பீட்டளவில் அதிகம்.

வாசித்த அறிவு மட்டுமே, குறைகள் இருந்தால் சுட்டிக்காட்டவும்.

பகிர்வுக்கு நன்றி ஏராளன்.

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.diabetes.co.uk/type15-diabetes.html

டைப் 1.5 டயபடீஸ் பற்றிய கட்டுரை மேலே.

டயபடீஸ் உண்மையில் 5 வேறுபட்ட நோய்/நிலை(condition) ஆக இருக்க கூடும் என்கிறது கீழே உள்ள கட்டுரை.

https://www.nhs.uk/news/diabetes/are-there-actually-5-types-diabetes/
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, goshan_che said:

----Autoimmune conditions என்று கேள்விபட்டிருப்பீர்கள். எமது உடலின் நோயெதிர்ப்பு மண்டலமே, தேவையில்லாமல் வேலை செய்து, நோய் கிருமிகள், பிற பொருள் எதிரிகளை தாக்குவது போல எமது உடலின் பகுதிகளையே தாக்குவது.

Lupes, Reynaurd இப்படி ஒரு நீண்ட லிஸ்டே இருக்கிறது இந்தமாதிரியான நோய்கள். இந்த நோய்கள் பெரும்பாலும் பரம்பரையாக வரக்கூடியன. எப்போதும் அல்ல.---

நல்லதொரு, கருத்துப் பகிர்விற்கு.. நன்றி கோசான். 👍

மருத்துவ உலகம், எவ்வளவோ முன்னேறி இருந்தும்..
மனித உடல்... இன்னும், புரியாத மர்மமாகவே உள்ளது, என்று... 
நில்மினி... ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தது நினைவிற்கு வருகின்றது.

நான் குறிப்பிட்ட... ரஷ்ய நாட்டை சேர்ந்தவருக்கு,
மாணவப் பருவத்திலேயே...  (இப்போ அவருக்கு 55 வயது) சர்க்கரை நோய் வந்த படியால்....
டயபிடீஸ். டைப் 1.5 என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனி,இனிப்பு  சாப்பிட்டால் மட்டும் வராது ...காபோகைதரேட் உணவு அளவுக்கு அதிகமாய் சாப்பிடுதல் ,அற்ககோல் குடிபானங்களிலும் சீனி இருக்கும் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

நல்லதொரு, கருத்துப் பகிர்விற்கு.. நன்றி கோசான். 👍

மருத்துவ உலகம், எவ்வளவோ முன்னேறி இருந்தும்..
மனித உடல்... இன்னும், புரியாத மர்மமாகவே உள்ளது, என்று... 
நில்மினி... ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தது நினைவிற்கு வருகின்றது.

நான் குறிப்பிட்ட... ரஷ்ய நாட்டை சேர்ந்தவருக்கு,
மாணவப் பருவத்திலேயே...  (இப்போ அவருக்கு 55 வயது) சர்க்கரை நோய் வந்த படியால்....
டயபிடீஸ். டைப் 1.5 என நினைக்கின்றேன்.

உண்மைதான். மனிதன் ஆராயும் விடயங்களிலே கடினமானது அவனது உடல்தான்.

சிலநேரம் டைப்1 ஆக இருக்கலாம். 15 வயதில்தான் கண்டு பிடித்தும் இருக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

சீனி,இனிப்பு  சாப்பிட்டால் மட்டும் வராது ...காபோகைதரேட் உணவு அளவுக்கு அதிகமாய் சாப்பிடுதல் ,அற்ககோல் குடிபானங்களிலும் சீனி இருக்கும் 
 

இதில் இன்னொரு விடயமும் உள்ளது.

Glycemic index என்பார்கள். ஒரு உணவில் இருக்கும் சீனி எவ்வளவு விரைவாக குளுகோசாக உடைந்து எம் ரத்தத்தில் சேருகிறதோ அந்தளவுக்கு கிளைசீமிக் இண்டெக்ஸ் கூடவாயிருக்கும்.

கிளைசீமிக் இண்டெகஸ் குறைந்த உணவுகளை சாப்பிடும் போது விரைவாக ரத்ததில் சுகர் கூடாது. ஆகவே மருந்து வேலை செய்து, இன்சுலீனை சுரந்து சாப்பிட உணவின் ரத்த குளுகோசை அளவாக கட்டுப்படுத்தும்.

கிளைசீமிக் உணவு கூடிய உணவு விரைவாக ரத்த குளுகோசை கூட்டும். மருந்து வேலை செய்து, இன்சுலீன் சுரந்து சுகரை கட்டுப்படுத்த நேரமாகும், முடியாமலும் போகலாம்.

கூகிளில் தேடினால் கிளைசீமிக் இண்டெக்ஸ் குறைந்த உணவு எவை எனக் காணலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

மருத்துவ உலகம், எவ்வளவோ முன்னேறி இருந்தும்..
மனித உடல்... இன்னும், புரியாத மர்மமாகவே உள்ளது, என்று... 
நில்மினி... ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தது நினைவிற்கு வருகின்றது.

சிறித்தம்பி! மனிதனுக்கு ஒரு வரையறுக்கப்பட்ட சக்தியும் எல்லையும் உண்டு. அதை மீறி எதுவுமே செய்ய முடியாது. 

கோரோனாவை பாருங்கள் இன மத நாடு எந்த பேதமும் இல்லாமல் சகலரும் சமம் என போதிக்கின்றது.

Free Photo | Silhouette of woman praying with god

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

சிறித்தம்பி! மனிதனுக்கு ஒரு வரையறுக்கப்பட்ட சக்தியும் எல்லையும் உண்டு. அதை மீறி எதுவுமே செய்ய முடியாது. 

கோரோனாவை பாருங்கள் இன மத நாடு எந்த பேதமும் இல்லாமல் சகலரும் சமம் என போதிக்கின்றது.

Bild

உண்மை, குமாரசாமி அண்ணா.
உங்களது பதிவில் இருந்த, இந்தப் படம்... நல்ல உதாரணம் அண்ணா.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விரத முறை என்றால் என்ன? What is Intermittent fasting – பயன்கள் என்ன?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விரத முறை - Intermittent fasting plans – எப்படி எடுப்பது

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விரதம் இருந்தால் அல்சர் வருமா? மற்றும் பல கேள்வி பதில்கள்

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நித‌ர்ச‌ன‌ உண்மை ப‌ற‌க்கும் ப‌டை இல்லை தூங்கிம் ப‌டை...................இந்த‌ தேர்த‌ல் ஜ‌ன‌நாய‌க‌ முறைப்ப‌டி ந‌ட‌ந்த‌ தேர்த‌ல் மாதிரி தெரிய‌ வில்லை சென்னையில் போட்டியிட்ட‌ நாம் த‌மிழ‌ர் வேட்பாள‌ர் ஈவிம் மிசிலில்  மைக் சின்ன‌த்தை ஒரு ஜ‌யா அம‌த்த‌ மைக் சின்ன‌ம் வேலை செய்ய‌ வில்லை இவ‌ர்க‌ள் அதை த‌ட்டி கேட்க்க‌ ப‌தில் இல்லை  கைது செய்து பிற‌க்கு விடுவித்த‌ன‌ர்.................எம்பி தேர்த‌லில் நிக்கும் வேட்பாள‌ர் அவ‌ரின் தொகுதியில் மைக் சின்ன‌த்துக்கு ஓட்டு விழ‌ வில்லை என்றால் அது தேர்த‌ல் ஆணைய‌த்தின் பிழை............................விவ‌சாயி சின்ன‌ விடைய‌த்தில் ம‌ற்றும் வைக்கோவுக்கு திருமாள‌வ‌னுக்கு ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ம்  அனைத்தும் உண்மை புல‌வ‌ர் அண்ணா....................அந்த‌ ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சி த‌மிழ் நாட்டில் ஏதாவ‌து ஒரு தொகுதியில் பிர‌ச்சார‌ம் செய்த‌தை பார்த்திங்க‌ளா ஒரு ஊட‌க‌த்திலும் காண‌ வில்லை..................எல்லாம் போலி நாட‌க‌ம்................................
    • 09.59 இற்குப் போடடியில் குதித்து விட்டேன்.வேலை முடிந்து வந்து அவசரமாகப் பதிந்த படியால் சில தவறுகளும் ஏற்பட்டிருக்கலாம்.
    • பொதுவாக கிராமப்புறங்களில் அதிக வாக்கு சதவுதமும் நகர்ப்புறங்களில் குறைந்த சதவீதமும் வாகக்குப்பதிவு இருக்கும். கிராம்புற அப்பாவிப் பொதுமக்கள் அரசியல்வாதிகள் சொல்லும் வாக்குறுதிகளை நம்பி வாக்குப் போடுவார்கள். அவர்களின் வாக்குச் சாவடிகள் அவர்களின்  வசிப்பிடங்களுக்கு அருகிலேயே இருக்கும். சென்னையில் இருப்பவர்கள் வாக்குச் செலுத்துவதை பெரிய அளவில் விரும்புவதில்லை. இந்த முறை வழமைக்கு மாறாக சென்னையில் வாக்கு சதவுpதம் அதிகரித்திருப்பது. மாற்றத்தை விரும்பி அவர்கள் கோபத்தில் வாக்களித்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இது ஆளும்வர்க்கங்களுக்கு எதிரானதாகவே பார்க்க வேண்டும்.
    • எங்கை பள்ளிக்கூடம் போனால்த் தானே? 😎 சொல் புத்தியுமில்லை....கேள் புத்தியுமில்லை... 🤣 சும்மா வாள்...வாள் தான் 😂 இப்ப நீங்கள் சொல்லீட்டள் எல்லே..... 
    • ஏதோ தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயற்படுவது மாதிரி இருக்கிறது உங்கள் கருத்து. 1 வீதம் கூட இல்லாத வாசனுக்கு சைக்கிள் சின்னம் அதேபோல் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் இருப்பதால் இந்தச் சலுகை. வைகோவுக்கு 1 தொகுதியில்  நிற்பதால் பம்பரச் சின்னம் ஒதுக்க மறுத்த தேர்தல் ஆணையம் கூறிய காரணம் குறைந்தது 2 தொகுதியில் நிற்க வேணும் என்று. அதே நேரம் 2 தொகுதியில் நின்ற விடுதலைச்சிறுத்தைகளுக்கு பானைச்சின்னததை ஒதுக்க மறுத்து பல கெடுபிடிகளின் பின்னரே அவர்களுக்கு அந்தச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. சாதாரண பொதுமக்களை மறித்துச் சோதனையிடும் தேர்தல் பறக்கும்படை  பெரிய கட்சிகள் காசு கொடுக்கும் போது கண்டும் காணாமல் விடுவதுதான் தேர்தல் ஆணையத்தின் யோக்கியதை.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.